Jump to content

விஜய் டிவியில் டிடி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா?


Recommended Posts

விஜய் டிவியில் டிடி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

dhivya%20dharshini.jpg

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், அண்மையில் விஜய் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் கோபிநாத், திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை சொதப்பியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திவ்யதர்ஷினியை நீக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்ததாகவும், இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிடி, அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், டிடிக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை என்றும், டிடி கர்ப்பமாக இருப்பதால்தான் அவர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=48348

Link to comment
Share on other sites

கனடா மற்றும் ஏனைய நாடுகளை சேர்ந்த சுப்பர் சிங்கர் பாடகர்களும், பாடகிகளும் கூட காரணங்கள் எதுவும் சொல்லாமல் நிகழ்ச்சியால் நீக்கப்பட்டுள்ளார்கள்.(இலண்டனை சேர்ந்த ஒருவரை தவிர), ஈழதமிழர்களை விஜய் தொலைக்காட்சி வேண்டுமென்றே ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிடி அதிக கதை கூடிய பெண் தானே. அதற்காக வேலையை விட்டே எடுக்க வேண்டும் என்று சொல்ல இல்லை..டிடியும் கொஞ்சம் இடம்,பொருள் ,ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பதை மறந்து விடுவார்.


கனேடிய,ஐரோப்பிய பாடகர்களையும்  விரைவில் நிறுத்திக் கொள்வார்கள் என்பது ஜெசிக்காவிற்கு விழுந்த வாக்குகளிலிருந்து புரிந்து கொள்ளப்பட்டது..நிறைய உண்மைகள் அங்கே மறைக்கப்படுகிறது என்பதும் யாவரும் அறிந்தது தானே..இப்படியே விட்டால் ஈழத்தமிழர்கள் படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற எண்ணப்பாடாகக் கூட இருக்கலாம்..அது மட்டுமல்ல பிரதான நடுவர்களாக ஒரு குறிப்பிட்ட சிலரே  இருக்கிறார்கள்.அவர்களை முதலில் நீக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் .கனடா ,ஜெர்மன் உறவுகள் இரண்டாம் கட்டம் தாண்டி போய்கொண்டிருக்கின்றார்கள் .எங்கிருந்து யாழுக்கு இப்படியான செய்திகள் வருகின்றதோ தெரியாது .

டி டி பற்றி சொல்லதேவையில்லை ,டி டி பற்றிய இந்த செய்தியும் அவர்களின் ஒரு வியாபர யுத்தி  என்றே நம்புகின்றேன் .அவர் திரும்ப விஜே டிவிக்கு வருவார் பொறுத்திருந்து பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,

நீங்கள் சொல்வது வியாபாரரீதியில் தவறானது. விஐய் TV யில் எந்தளவுக்கு நேரடி ஒளிபரப்பை பார்கிறார்களோ, அதிலும் பார்க்க அதிகளவில் யூரியூப்பில் மக்கள் பார்கிறார்கள்.

விளம்பர வருமானம் அதிகமாக வருவதால், தங்களது காப்பிரைட்டை உறுதிப்படுத்தி, வேறுயாரும் தமது நிகழ்வுகளை பதிவேற்றம் செய்யாமல் பார்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த வருமானம் குறித்த விளக்கம் இல்லாததால், யார், யாரோ, பதிவு எற்ற, அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பார்வையாளர் சிதறியதால், விளம்பர வருமானமும் இருக்கவில்லை.

சீமானின் பேச்சுகள் இடையே கூட விளம்பரங்கள் அதிகளவில் எட்டிப் பார்க்கையில், விஜய் எவ்வளவு காசு பார்க்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தவகையில், கனடா, லண்டன் காரர்களின் பங்குபற்றுதலும் பார்வையாளரும் வருமான ரீதியில் அவர்களுக்கு முக்கியம்.

யூரியூப் விளம்பர வருமானம், பார்ப்பவர்கள் அதிகரித்தால், தங்கச்சுரங்கம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா முழுகாம இருக்கிறா எண்டு நான் நினைக்கிறன் .....  happy0199.gif

Link to comment
Share on other sites

விஜய் டிவியில இருக்கீங்களா? இல்லையா?... சொல்லுங்க டிடி சொல்லுங்க...
 
l வாய் ஓயாத பேச்சு... அரைமணி நேர நிகழ்ச்சியில் 20 நிமிடம் தானே பேசி சிறப்பு விருந்தினரை பத்து நிமிடம் பேச வைக்கும் பெருமைக்குரிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இதை நாங்க சொல்லலை. ஓரு காதல் கண்மணி பேட்டியின் போது பங்கேற்ற மணிரத்னம், வைரமுத்து ஆகியோரும் இதையே டிடியிடம் நேரடியாக சொன்னார்கள். விஜய் டிவியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடியை கடந்த மே மாதம் முதலே டிவி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை.
 
விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை சொதப்பலாக தொகுத்து வழங்கியதால் கல்தா கொடுக்கப்பட்டு விட்டதாகவும், இல்லை இல்லை அவர் தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதைவிட முக்கியமாக டிடி கர்ப்பமாக இருப்பதால் சில காலம் ஓய்வில் இருப்பதாகவும் செய்தி வெளியானது. என்னதான் செய்கிறார் டிடி என்பதற்காக அவரை கடந்த வாரம் தொடர்பு கொண்டோம்
 
டிடி: ஹலோ யார் பேசறீங்க?
 
நாம்: டிடி எப்படி இருக்கீங்க? டிவில ஆளை பார்க்க முடியலையே?
 
டிடி: எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. அதான் ரெஸ்ட்ல இருக்கேன்.
 
நாம்: சின்னதா பேட்டி இப்போ எடுத்துக்கலாமா?
 
டிடி: இப்போதைக்கு எதுவும் சொல்றதுக்கு இல்லை... நானே கூப்பிடுறேனே... பை...
 
இது போன வாரம்..... இந்த வாரம் டிடியின் ராஜினாமா செய்தி வெளியான பின்னர் நாம் மீண்டும் டிடியை தொடர்பு கொண்டோம்.
 
டிடி: நான் வெளியில இருக்கேன்... இப்போதைக்கு பேச முடியாது அப்புறம் கூப்பிடவா?
 
நாம்: உங்களைப் பற்றி ஒரு செய்தி வந்திருக்கே... விஜய் டிவியில இருந்து நீங்க ரிசைன் பண்ணிட்டதா? ... ( நாம் முடிக்கவேயில்லை)
 
டிடி: அப்படியா?... நான் அதை படிக்கவேயில்லையே.... படிச்சிட்டு சொல்றேனே... அப்புறம் கூப்பிடறேன்... பை.
 
என்று கூறி இணைப்பை துண்டித்த டிடி இதுவரைக்கும் கூப்பிடவேயில்லை. டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் கடைதிறப்பு, விளம்பரங்களில் டிடி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
 
டிடி தற்போது வெளியூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜினாமா செய்து விட்டதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி என்று டிடி கூறியுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. நீங்க விஜய் டிவியில வருவீங்களா மாட்டீங்களா? சொல்லுங்க டிடி சொல்லுங்க.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijay-tv-vj-dhivyadarshini-quit-or-not-anchor-post-229573.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரீ வி லண்டனை சேர்ந்த ஒருவருக்கு

விற்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது

ஆ..

வெளியில சொல்லிப் போட்டங்களா?

ஒருத்தருக்கும் மூச்சு விடக் கூடாது என்று சொல்லி இருந்தேனே...:o

Link to comment
Share on other sites

தொடரும் குழப்பம்... டிடியை தக்க வைக்க மெனக்கெடுகிறது விஜய் டிவி?
 
 
  சென்னை: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற நிலையை மாற்றி டிடி என்றால் திவ்யதர்ஷினி என்று மக்களின் மனதில் பதியவைத்த பெருமை இவரையே சேரும். விஜய் டிவி என்றாலே திவ்யதர்ஷினி தான் பிரபலமான தொகுப்பாளர் என்று மக்களின் மனதில் பதிய வைத்து, தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.
 
 
இவர் நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர்ந்து நிகழ்ச்சியை, கலகலப்பாக இவர் நடத்திச் சென்றதில் விஜய் டிவியின் டிஆர்பி எகிறியது. 
 
இவ்வளவு நல்ல தொகுப்பாளரை சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவியில் காண முடியவில்லை, பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டாலும் குழப்பமான பதிலையே தருகின்றார் டிடி. விஜய் டிவியில் கேள்வி கேட்டாலும் எந்த ஒரு பதிலையும் சொல்வதில்லை, இதனால் விஜய் டிவியில் டிடி இருக்கிறாரா இல்லையா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
 
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் விஜய் டிவியில் டிடி இருப்பது போல காட்டிக் கொள்கிறது விஜய் டிவி. நேற்று இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் டிடி தொகுத்து வழங்கிய பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அவர் இங்குதான் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறது விஜய் டிவி.
 
இதற்கிடையில் டிடியின் காலில் ஆக்ஸிடென்ட் ஏற்பட்டு இருக்கிறது, அதனால் அவர் ஓய்வில் இருக்கிறார் என்று ஒரு தகவலும், டிடி தரப்பில் இருந்து கசிந்துள்ளது. இரண்டு தரப்பினருமே தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர், விரைவில் உண்மை வெளியாகிறதா என்று பார்க்கலாம்.

Read more at: http://tamil.filmibeat.com/television/vijay-television-anchor-divyadharshini-working-or-not-035385.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சந்திரமுகி படபிடிப்பிலை சிம்ரன் இடையிலை விட்டுட்டு போனத்துக்கும் உந்த மீடியாக்கள் கோணல் மாணலாய்த்தான் எழுதித்தள்ளினது.....
கடைசியிலை என்ன நடந்த்தது?????? சிம்ரனுக்கும் குவா..குவா :)

Link to comment
Share on other sites

 

ஆ..

வெளியில சொல்லிப் போட்டங்களா?

ஒருத்தருக்கும் மூச்சு விடக் கூடாது என்று சொல்லி இருந்தேனே...:o

அட அது நீங்கள்தானா ?

அப்போ கோடிக்கணக்காக பவுண்ஸ்

கையில புரளுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரமுகி படபிடிப்பிலை சிம்ரன் இடையிலை விட்டுட்டு போனத்துக்கும் உந்த மீடியாக்கள் கோணல் மாணலாய்த்தான் எழுதித்தள்ளினது.....
கடைசியிலை என்ன நடந்த்தது?????? சிம்ரனுக்கும் குவா..குவா :)

பழைய...  முக்கிய, செய்திகளை எல்லாம்.... 
விரல் நுனியில் வைத்திருக்கும், கு.சா. அண்ணரின் ஞாபக சக்தியை மெச்சுகின்றோம்.:rolleyes::lol:

Link to comment
Share on other sites

சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் .கனடா ,ஜெர்மன் உறவுகள் இரண்டாம் கட்டம் தாண்டி போய்கொண்டிருக்கின்றார்கள் .எங்கிருந்து யாழுக்கு இப்படியான செய்திகள் வருகின்றதோ தெரியாது .

டி டி பற்றி சொல்லதேவையில்லை ,டி டி பற்றிய இந்த செய்தியும் அவர்களின் ஒரு வியாபர யுத்தி  என்றே நம்புகின்றேன் .அவர் திரும்ப விஜே டிவிக்கு வருவார் பொறுத்திருந்து பாருங்கள் .

 

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து - Cineulagam

சமீப காலமாக பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் திவ்யதர்ஷினியை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது, இவர் பணியாற்றிய தொலைக்காட்சி இவரின் நிகழ்ச்சி நடத்தும் முறை பிடிக்காமல் நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.

மேலும், அதெல்லாம் இல்லை இவர் கர்ப்பமாக இருக்கின்றார் எனவும் கூறிவந்த நிலையில், இதற்கெல்லாம் தற்போது ஒரு முற்று புள்ளி வைத்துள்ளார் டிடி.

இவர் மீண்டும் அதே தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வாய்ப்பு வழங்கிய தொலைக்காட்சி உரிமையாளருக்கு நன்றி என டுவிட்டரில் கூறியுள்ளார்.

http://www.cineulagam.com/tamil/news-tamil/celebrities/117184/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அது நீங்கள்தானா ?

அப்போ கோடிக்கணக்காக பவுண்ஸ்

கையில புரளுமே.

 

கையில 5 சேம் 10 சேம் தான் பிரளுது. மிச்சமெல்லாம் சுவிஸ் பாங்கில.:)

நம்ம அக்கௌன்ட் நிரம்பி வழிஞ்சு, அடுத்த அக்கௌன்ட்கும் பாயுதாம்.:unsure:

ஆறு மாதத்துக்கு ஒருக்கா போய், செக்கை கொடுத்து காசை எடுத்து, எண்ணிப் போட்டு, திருப்பி போட்டு விட்டு வருவேன். அவயலை நம்ப ஏலாது தானே.:o

அந்த நேரம் தான் கையில காசு பிரளும். :rolleyes:

Link to comment
Share on other sites

வாவ் வாவ் வாவ்..........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிடியின், குரல் கீச்சுக் குரலாகவும், அவசரக் குடுக்கையாகவும், மூச்சு விடாமல் பேசுவதால்... இவரின் பேச்சு எனக்குப் பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே டிடியை பார்த்தே போறடிக்குது. டிடி போய் இன்னும் இளம் ஆக்கள் வாற நேரம் இப்ப. டிடி போகமாட்டன் என்றாலும் அடிச்சு விரட்டி விடுங்க பிளீஸ். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்குறிப்பு: நாங்க விஜய் ரி வி.. டிடி ரகசிகர்கள்.. விசிறிகள் கிடையாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே டிடியை பார்த்தே போறடிக்குது. டிடி போய் இன்னும் இளம் ஆக்கள் வாற நேரம் இப்ப. டிடி போகமாட்டன் என்றாலும் அடிச்சு விரட்டி விடுங்க பிளீஸ். :lol:

அண்ணை.... டிடிக்கு அதிக வயசில்லை. பார்த்து  ரசிக்கிற வயசு தான்.
குரல் தான்.... நமக்கு, காதுக்குள்ளை, "சில்வண்டு" கத்தினமாதிரி இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிடிக்கு கல்யாணம் ஆகிடிச்சு. எனி ரசிக்கிறது தப்பு. அதனால கெட் அவுட் சொல்லிடனும். நடிகைகளுக்கு கல்யாணம் ஆனால் என்ன சட்டமோ அதுதான் அங்கருக்கும். :lol:

Link to comment
Share on other sites

 

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து - Cineulagam

சமீப காலமாக பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் திவ்யதர்ஷினியை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது, இவர் பணியாற்றிய தொலைக்காட்சி இவரின் நிகழ்ச்சி நடத்தும் முறை பிடிக்காமல் நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.

மேலும், அதெல்லாம் இல்லை இவர் கர்ப்பமாக இருக்கின்றார் எனவும் கூறிவந்த நிலையில், இதற்கெல்லாம் தற்போது ஒரு முற்று புள்ளி வைத்துள்ளார் டிடி.

இவர் மீண்டும் அதே தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வாய்ப்பு வழங்கிய தொலைக்காட்சி உரிமையாளருக்கு நன்றி என டுவிட்டரில் கூறியுள்ளார்.

http://www.cineulagam.com/tamil/news-tamil/celebrities/117184/ 

அரசியலிலேயே முன் கூட்டி நடக்கப்போவதை அறியும் எமக்கு உதெல்லாம் ஜுஜுப்பி 

Link to comment
Share on other sites

அரசியலிலேயே முன் கூட்டி நடக்கப்போவதை அறியும் எமக்கு உதெல்லாம் ஜுஜுப்பி 

ஆகா கிளம்பிட்டாங்கையா, இந்தவளத்தால திசையை திருப்பி விடுவமெண்டா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.