Jump to content

ஐடி துறையைத் தேர்வு செய்யலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐடி துறையைத் தேர்வு செய்யலாமா?

பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களின் முதல் சாய்ஸ்... ஐ.டி. துறை தான். ஆனால், இன்று, ஐ.டி. நிறுவனங்களில் லே ஆஃப், ஐ.டி. ஃபீல்டில் பிரஷர் அதிகம், வேலை கிடைத்தாலும் நிரந்தரமில்லை என்று பல பிரச்னைகள் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், ஐ.டி. கலாச்சாரம் என்று ஒரு தனி இனம் உருவாகி இருக்கிறது. ஏ.சி. அறை வேலை, ஆடம்பர வாழ்க்கை, கார், சொந்த ஃபிளாட், மால்களில் சினிமா மற்றும் ஷாப்பிங், வாரந்தோறும் பிக்னிக், வெளிநாட்டு புராஜெக்ட் பிளஸ் டூர், நாகரீக நட்பு வட்டம் என்று பளபள மாயை காட்டுகிறது.

karthika%20saran.jpgஅப்படி என்னதான் நடக்கிறது ஐ.டி. துறையில்...? விரிவாகச் சொல்கிறார் கல்வி ஆர்வலர் கிர்த்திகாதரன்.

‘‘கூகிள், அமேஸான் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏன் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து கேம்பஸில் ‘ஃப்ரெஷர்’களை எடுக்கிறார்கள்? அனுபவம் வாய்ந்த எத்தனையோ ஆயிரக்கணக்கான ஐ.டி. மக்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் எம்.எஸ். முடித்துவிட்டு வேலைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பிறகு ஏன் நம் பொறியியல் கல்லூரிகளில் ஆளெடுக்கின்றன நிறுவனங்கள்? அதேசமயம், திருநெல்வேலியில் இருக்கும் சாதாரண கல்லூரி கூட பெரிய நிறுவனத்துக்கு ஆள் அனுப்புகிறது. ஆனால் ‘பெரிய’ கல்லூரியில் படித்து பக்காவாக ஜி.பி.ஏ. வைத்திருந்தும், சிலருக்கு வேலை கிடைக்காமல் போகிறது.

இப்படி வெளியில் இருக்கும் நமக்கு ஆயிரம் கேள்விகள். ஏன், ஐ.டி. நிறுவனத்தில் இருக்கும் பலருக்கே கூட விடை தெரிவதில்லை. 10 வருடங்கள் கழித்து திடீரென்று லே ஆஃப் ஆகும்போது, ‘ஏன்? எதற்கு? நல்லாதானே வேலை செய்தோம்?’ என்று தோன்றும். எங்கு தவறு நடந்திருக்கிறது என்று யோசிப்பதற்குள் கார் கடன், வீட்டுக் கடன் என்று சுமைகள், ஆடம்பர வாழ்க்கை செலவுகளின் அழுத்தம், திரும்ப மீள முடியாத சுழலில்  சிக்கியிருப்போம்.

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் துறைகளில் இன்றும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் தகுதி வாய்ந்தவர்களை தேடுவதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கின்றனர். இங்கோ, மாணவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் இந்தப் பிரச்னை உண்டு. என்றாலும் ஐ.டி. துறையில் இந்த இடைவெளி அதிகமாகவே இருக்கிறது.

அப்படி என்றால் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில், கணினியில் ஆர்வம் இருக்கும்பட்சத்திலேயே அந்தக் கோர்ஸை தேர்வு செய்ய வேண்டும். இணைய ஆர்வம் என்பது வேறு, தொழில்நுட்பத்தில் ஆர்வம் என்பது வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். கோர்ஸில் சேர்ந்ததும், மனப்பாடம் செய்து மார்க் வாங்க நினைக்கக் கூடாது. நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களை, ‘புத்தகப் புழுவாக, வெளியுலகத்துக்குத் தகுந்தவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாதவராக இருப்பார்களோ?’ என்று இண்டர்வியூ செய்பவர்கள் சந்தேகத்தோடு அணுகுவார்கள். அதற்காக மதிப்பெண் தேவையில்லையா என்று கேட்கக் கூடாது. மதிப்பெண் தேவை. ஆனால், அது மட்டுமே தகுதிக் காரணி இல்லை. பெங்களூரு, மும்பை, டெல்லி மாணவர்கள், சென்னை மாணவர்களை பின்னுக்குத் தள்ளுவது இந்த விஷயத்தில்தான். அவர்கள் மதிப்பெண்களுக்கு படித்தாலும், துறை சார்ந்த எல்லா விஷயங்களையும் சுயமாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பொறியியலில் இரண்டு வகை இருக்கிறது. டெக்னிக்கல் எனப்படும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி தொடர்புடைய துறைகள். வெளிநாட்டில் எம்.எஸ். படிப்புகள் பல ஆராய்ச்சி தொடர்புடையதாகவே இருக்கும். முக்கியமாக பயோ டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் ஆராய்ச்சி பக்கம் மாணவர்கள் செல்கின்றனர். பயோ டெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்புகளை விட ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் வாய்ப்புகளே அதிகம். அதே சமயம் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு டெக்னிக்கல் அறிவு தேவை. எனவே, எந்த வழியில் செல்கிறோம் என்பது மிக முக்கியமானது.

இந்தக் காலத்தில் எல்லா மாணவர்களிடமும் லேப்டாப் இருக்கிறது. ஆனால், கேம்பசில் ஐ.டி., சி.எஸ். படித்த பல மாணவர்கள் ஒரு புரோகிராம் கூட எழுதத் தெரியாமல் இருக்கிறார்கள். ஒரளவுக்கு டெக்னிக்கல் விஷயம் தெரிந்தால் போதும்... கேம்பசில்  எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ், ஆங்கில அறிவு எல்லாம் மிகப்பெரிய நிறுவனத்துக்குத் தேவை. ஆனால், சிறிய ஐ.டி. நிறுவனங்கள் புரோகிராம் நன்றாக தெரிந்து, சொந்தமாக புராஜெக்ட் செய்திருந்தால், அரியர்ஸைக் கூட சில சமயங்களில் கவனிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தங்கள் வேலைக்குத் தகுதியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதேபோல, ஒரு மாணவர் ஆங்கில அறிவில் பிலோ ஆவரேஜாக இருந்தாலும், நெட்வொர்க்கிங்கில் அசத்துகிறார் என்றால், அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே விஷயங்கள் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

engineering.jpg

மாணவர்கள் மெருகேற வேண்டிய மூன்று விஷயங்கள்!

எதுவும் கற்றுகொள்ளாமல் வேலையில் சேரும் மாணவர்கள் நிறுவனங்கள் தயவில்தான் இருக்கவேண்டும். அவர்களாக கொடுப்பதுதான் சம்பளம். அதே சமயத்தில் முன்பே கற்றுக்கொண்டு நம் புரஃபைல் பலமாக இருக்கும்போது, நம் கையில் நம் வேலை இருக்கும். அதற்கு மூன்று விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

முதலாவது, புரோகிராம் நன்றாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இங்கு மட்டும் இல்லை... அமெரிக்காவில் கூட புரோகிராமிங்-க்கு நல்ல மதிப்பு இருக்கிறது. கேம்பஸ் செல்லும் தேர்வாளர்களுக்கு, பல மாணவர்கள், ‘நான்கு வருடம் இவர்கள் என்னதான் படித்தார்கள்?’ என்ற சளிப்பைத் தருகிறார்கள். அந்தளவுக்கு, 70% ஐ.டி. மாணவர்களுக்கு புரோகிராமிங்கை முழுமையாக எழுதத் தெரிவதில்லை. தவிர, தங்களை நேர்த்தியாக வெளிப்படுத்திக்கொள்ளவும் தெரியவில்லை. 

மடியில் லேப்டாப், கையில் ஸ்மார்ட் ஃபோன், 3 ஜி நெட்வொர்க் வைத்துக்கொண்டு... நான்கு வருடம் படித்துவிட்டு ஒரு புரோகிராமிங் கூட செய்யத் தெரியவில்லையென்றால் என்ன செய்வது? எனவே, முதல் விஷயமாக ஒரு புரோகிராமிங் லாங்வேஜில் திறமை பெற்றிருக்க வேண்டும். அதில் எப்போதும் தேவை உண்டு. சோஷியல், மொபைல் துறைகளை விட குறிப்பாக அனலடிகள் மற்றும் ஈ-காமர்ஸ் எனப்படும் விற்பனைத் துறைகளில்  புரோகிராமருக்கு நல்ல வேலை கிடைக்கும். 

பழைய ஜாவா அல்லது சி என்று இல்லாமல் புதிதாக உள்ள பைதான், சி, ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ரூபி போன்றவைகளை கற்றுக்கொள்ளலாம். வெறும் மொழியாக கற்றுக்கொள்ளாமல் அதனை செம்மையாக கோட் செய்ய அல்காரிதம்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதனால், மெமரியை சரியான முறையில் பயன்படுத்தவும், கம்ப்யூட்டிங் சீராகச் செய்யவும் உதவும். பெரிய அளவில் பரிமாற்றம் நடக்கும்போது இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதுபோன்று நன்றாக தேர்ச்சி பெற்று இருப்பவர்களுக்கு ஸ்டார்ட் அப் மற்றும் இ காமர்ஸ் நிறுவனங்கள் 6 முதல் 12 லட்சம் வரை சம்பளம் கொடுத்து எடுத்துக்கொள்கிறார்கள்.

இரண்டாவது, கோடிங்கில் போட்டி வைக்கும் இணையப் பக்கத்தில் பயிற்சி பெற வேண்டும். அங்கு ஃபேஸ்புக் போல ஒரு புரொஃபைல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள முடியும். நிறைய விஷயங்கள் புரிபடும். அடுத்து ஹாகிங் (hack)  போட்டிகள், பயிற்சிகள் எல்லாம் இருக்கும். அதில் நமக்கு ரேங்கிங் கூட உண்டு. அதுவும் நமது புரொஃபைலுக்கு வலு சேர்க்கும். code chef, hake earth போன்ற இணையதளங்கள் இருக்கின்றன. தற்பொழுது பள்ளி மாணவர்கள் கூட பயிற்சி பெறுகிறார்கள்.

ஆன்லைன் டெஸ்டிங் வளர்ந்து வருவதால் மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் போன்றவை உலகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் உக்ரைன் மற்றும் புனேயில் இருந்து நேரடியாக மாணவர்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். சம்பளம், நூறு ஆயிரம் டாலர்கள் முதல் நூற்று ஐம்பது ஆயிரம் டாலர்கள் வரை.

மூன்றாவதாக, கணினியைப் பாடமாக படிக்கும் மாணவர்கள் சொந்தமாக ப்ளாக் வைத்துக் கொள்வது நல்லது. அதில் தீசிஸ் போல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுத ஆரம்பிக்க வேண்டும். அப்போதே நிறைய கற்றுக்கொள்ளவும் ஆரம்பிப்போம். இதெல்லாம் ஒரு மாணவரின் தகுதிக்கான மதிப்பு கூட்டல்கள்.

workers.jpg

புராஜெக்டில் சுயம் அவசியம்! 

கேம்பஸில் தேர்வாளர்கள் ‘சிறப்பாக என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், பல மாணவர்களும் புராஜெக்ட்டை காட்டுவார்கள். பெரும்பாலும் அதை நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. வேறு சில விஷயங்களில் கலந்துக் கொண்டதாக மாணவர் தகவலில் இருக்கும். பார்த்தால் பத்து பேரோடு செய்து இருப்பார். பாதிக்கும் மேல் விஷயம் தெரிந்து இருக்காது. இதெல்லாம் தெரியும் என்று வெறும் லிஸ்ட் போடக் கற்றுக்கொள்ளக் கூடாது. நம் அறிவை மேம்படுத்த மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மாணவர்கள் புராஜெக்ட் கூட சொந்தமாகச் செய்வதில்லை. பல கல்லூரிகளில் பேராசிரியர்கள், ‘புதிதாக வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு அவர்கள் லிஸ்ட்டில் இருக்கும் குறிப்பிட்ட புராஜெக்டை செய்யச் சொல்லி வலியுறுத்துவார்கள். இந்த மாதிரி நேரத்தில் மாணவர்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும். சொந்த ஐடியா புராஜெக்ட் மிக அவசியம்.

மாணவர்களுக்கு என்று தனியே சிந்திக்கும் திறன் அவசியம். முக்கியமாக ஐ.டி. துறையில் கண்டிப்பாக தேவை. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உள்ள மாணவர்களே வெற்றி பயணத்தில் மேலே செல்ல முடியும்.

எல்லா தளங்களிலும் முயற்சி அவசியம்!

இ-காமர்ஸ், ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தினம், தினம் ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்கள் களத்தில் குதிப்பதால், எக்கச்சக்க வேலை வாய்ப்புகள் உள்ள துறை இது. சிலர் சில துறைகளில் உள்ளே போனால் ஐ.டி.யில் வாய்ப்பு இருக்காது என்று ஒதுக்குவார்கள். எடுத்துக்காட்டாக, பாங்கிங் பகுதி என்றால், அதில் கணினி அறிவு பற்றிய அதிக விஷயங்கள் இல்லாவிடினும் பாங்கிங் பற்றி தேர்ச்சி அடைய முடியும். எல்லா இடங்களிலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பார்க்க வேண்டும். அப்படியே ஒதுக்கக் கூடாது.

முக்கால்வாசி மாணவர்கள் நான்கு வருடங்களில் பெரிதாக எதுவும் கற்றுக்கொள்வதில்லை. எனவே 21 வயதில் ஐ.டி. துறையில் நுழையும்போது நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எந்த இடத்துக்கும் பயணப்படத் தயாராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் வேலைபார்க்கப் போகும் துறை இது. முதல் ஐந்து வருடங்களை சோதனை முயற்சிகளுக்கு விடலாம். எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து கற்றுக் கொள்வது நல்லது.

அதற்காக அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டு இருந்தால் மதிப்பு இருக்காது. அதேசமயத்தில் ஒரே இடத்தில் இருந்தாலும் கற்றுக்கொள்ள வாய்ய்பு இருக்காது. அப்படி ஒரே இடத்தில் இருந்தால் வேலைக்கான தரத்தில் உயர்ந்து இருக்க வேண்டும். சிறு நிறுவனமோ, பெரிய நிறுவனமோ, கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வெளியே வந்து கற்றுக்கொண்டு வேலை செய்வது நல்லது. ஐந்து வருடங்கள் சோதனை முயற்சியாக எல்லாம் செய்தால் மார்கெட், துறை எல்லாம் புரிபட்டு நமக்கான இடத்தில் அமர்ந்து விடலாம்.

அப்படி பல வாசல்களில் ஒரு வாசல் உதாரணமாக, ஆப்பிள் மிளிஷி. அதில் ஆப் (App) செய்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே இரண்டு லட்சம் கிடைக்கும். மேலே செல்ல, செல்ல நல்ல வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதற்கு ஆப்பிள் ஃபோன் மற்றும் நூறு டாலர் முதலீடு வேண்டும். ஆனால், ஓபன் சோர்ஸ் எனப்படும் பல்வேறு தளங்களில் முதலீடு தேவைப்படாது. இப்படி நிறைய முயற்சி செய்து பார்க்கலாம். User Experience Design.UXD என்பது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை விட இன்னும் அதிக டெக்னிக்கல் துறை. இது தொழில்நுட்ப முடிவில் உபயோகிப்பாளரை கவர வேண்டும். ஐ-ஃபோன் போல இதற்கு சாப்ட்வேர்கள் தயாரிக்க வேண்டும். இதற்கும் தேவை இருக்கிறது.

டேட்டா சயன்டிஸ்ட் வாய்ப்புகளைப் பார்ப்போம். கணக்கு மற்றும் புள்ளியியலில் அதுவும் டாக்டரேட் வரை வாங்கியவர்களுக்கு அனாலிடிக்ஸ்-ல் நிறைய சாதிக்க இயலும். ஆனால் ஸி மற்றும் பைதான் மொழி தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நிறையத் தேவையும் இருக்கிறது. புள்ளியியல் டேட்டா மாதிரிகள் நன்றாகத் தயாரிக்கத் தெரிந்தால், 5 முதல் 6 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். வேறு எதுவுமே தேர்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஜாவா, சி யை ஒழுங்காக படித்து சொந்தமாக சில புராஜெக்டுகள் செய்து இருப்பதாக காட்டினால் கூட போதுமானது. அதற்கு இரண்டு முதல் நான்கு லட்சம் வரையே சம்பளமாக கிடைக்கும்.

அடுத்து ஓபன் சோர்ஸ். இது இலவசமாகக் கிடைப்பதால் மாணவர்கள் இணையம் மூலமாக வீட்டில் இருந்தோ, கல்லூரி லேபில் இருந்தோ தேர்ச்சி பெற முடியும். BIG DATA டெக்னாலஜி எனப்படும் ஹடூப் கூட இணையம் வழியாகக் கற்றுக் கொள்ள முடியும். எப்போதும் போல SAP BI படித்தவர்களுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. ஆனால், இது இலவசம் இல்லை என்பதால் மாணவர்கள் உள்ளே நுழைவது கடினமாக இருக்கிறது. தவிர, விலை அதிகமும் கூட.

மொத்தத்தில், மாணவர்கள் சர்வீஸ் நிறுவனங்களை விட, தயாரிப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதைத் தவிர சிறு நிறுவனங்களில் நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் மெக்கானிக்கல், சிவில் என்று இல்லாமல் பயோ படித்த மாணவர்களைக் கூட எடுக்கிறார்கள். எதற்காக? 

‘எங்களுக்குத் நிறைய தேவை இருக்கிறது. அதை ஈடுகட்ட வேறு துறை மாணவர்களை எடுக்கிறோம். அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுத்து சேர்த்துக் கொள்வோம். ஆனால், எந்தத் துறையாக இருந்தாலும் கல்லூரியில் எங்களுக்குத் தேவையான விஷயங்களோடு மாணவர்கள் இருப்பதில்லை. எனவே, எந்தத் துறையாக இருந்தாலும் நாங்கள் பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் காமன்சென்ஸ் எனப்படும் செயல்படும் அறிவு இருந்தால் போதும்... தேர்வு செய்துவிடுவோம்’ என்கிறார்கள்.

ஐ.டி. துறையிலும் கூட, தற்போது வேலைவாய்ப்பு இல்லை, டவுன் ஆகி இருக்கிறது என்பதை விட தகுதியானவர்கள் இல்லை என்பதே விஷயம். லே ஆஃப் என்பதெல்லாம் மிகச்சிறியதாக எங்கோ நடக்கும் விஷயங்கள். தகுதியையும், திறமையும் வளர்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு எங்கும் பிரச்னை இல்லை.

மாணவர்கள் டூ பட்டதாரிகள் டூ பணியாளர்கள்!

பொறியியல் பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் ஃப்ரெஷராகச் சேரும்பொழுது ஜாவா புரோகிராமிங் செய்ய ஆரம்பிப்பார்கள். நான்கு வருடம், சீனியர் போஸ்ட் கொடுப்பார்கள். ஆனால், அதேயே தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்கள். வளர்ச்சி தேவை. சரியான சமயத்தில் மாறுவதும் அவசியம். அதே சமயத்தில் கம்பெனி மாறிக் கொண்டே இருப்பதும் தவறு.

சில கம்பெனிகள் பெரிய கல்லூரிகளில் கொத்து, கொத்தாக மாணவர்களை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இன்னொரு பக்கம் அதே நிறுவனத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேறிக்கொண்டு இருப்பார்கள். ஏன் என்று நிறுவனம் பற்றிய ரிவியூ பார்த்தால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆனால், வேலை அழுத்தம் அதிகம் என்று சொல்லி இருப்பார்கள். பட்டதாரிகள் ஆரம்பக் கட்டத்தில் கூட உழைக்கத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஐ.டி. என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு ஏற்றார் போல தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம். ஐ.டி. படித்துவிட்டு புராஜெக்ட் இல்லாமல் பெஞ்சில் அமர்வது, லே ஆஃப் ஆவது, கேம்பஸில் தேர்வாகாமல் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

எனவே, மாணவர்கள் எந்தத் துறையாக இருந்தாலும் தங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலமே சிறந்து விளங்க முடியும். கல்லூரி, ஆசிரியர்கள், துறைத்தேர்வு எல்லாம் ஓரளவுக்குத்தான். தற்போது கணினி பயன்பாடு எல்லா துறைகளிலும் நிறைந்துவிட்டதால், இன்னும் சில வருடங்களுக்கு ஐ.டி. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஜேஜே தான்!’’ - பாசிட்டிவ் செய்தி சொல்லி கை குலுக்கினார் கிர்த்திகாதரன்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.