Jump to content

அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய வரவுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய வரவுகள்!

medical%20student200.jpgகாலம் மாற, மாற அறிவியல் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. அந்த வரிசையில் புதியதாக வந்துள்ள சில கண்டுபிடிப்புகளை இங்கே பார்க்கலாம்...

பயோ ஸ்டாம்ப்:

மருத்துவத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக தற்போது புதிதாக வந்துள்ள ஒரு கருவி பயோ ஸ்டாம்ப். இக்கருவியை ஸ்டாம்ப் போல நமது உடலில் ஒட்டிக்கொண்டால் நம் உடல்நிலையைப் பற்றி இக்கருவி திரையில் காண்பிக்கும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், மூளை தொடர்பான நோய்களுக்கு எளிய முறையில் மருத்துவம் பார்க்க இக்கருவி உதவும்.

E-Fan வானூர்தி:

E-fan%20flight.jpgபெட்ரோலில் ஓடிக்கொண்டிருந்த கார், டூவீலர்கள் தற்போது மின்சாரத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அறிவியல் வளர்ந்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக மின்சாரத்தில் ஓடும் விமானமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம். 19 அடி நீளம் உள்ள, 2 பேர் பயணிக்க கூடிய அளவில், ஒரு குட்டி விமானத்தை தயாரித்துள்ளது.

மின்சாரத்தால் இயங்கக் கூடிய இந்த விமானத்திற்கு E-Fan விமானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் விதமாக இதில், லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய சுமார் 120 மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒருமுறை இந்த மின்கலங்களை முழுவதுமாக மின்னேற்றினால், ஒரு மணிநேரம் விமானம் பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறும். அதிநவீன தொழில்நுட்பத்தால் ஆன இந்த விமான சோதனை ஓட்டம் தென்மேற்கு பிரான்சில் உள்ள போடியாஸ் விமான நிலையம் அருகே நடந்தது. அப்போது இந்த விமானம் சுமார் ஒரு மணிநேரம் பறந்து சாதனை படைத்தது. தற்போது E-Fan வரிசையில் E-Fan 2.0 மற்றும் E-Fan 4.0 என்ற 2 வகையான விமானங்களை ஏர்பஸ் (Airbus) நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

skully%20helmet.jpgஸ்மார்ட் ஹெல்மெட்:

இனிமேல் வழி தெரியாத ஊருக்கும் ஹெல்மெட் அணிந்திருந்தால் எளிதாக செல்லலாம். ஏனெனில் தற்போது வந்துவிட்டது ஸ்மார்ட் ஹெல்மெட். ஸ்குல்லி என்ற ஹெல்மெட் நிறுவனம் ஜி.பி.எஸ். கருவி, கேமரா ஆகியவை பொருத்தப்பட்ட புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஹெல்மெட்டின் கண்ணாடியில் உள்ள திரையில் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்துவிட்டால் எவ்வளவு தொலைவு எது எளிமையான வழி என்பதை காட்டும்.

செல்போன் கதிர்வீச்சு:

செல்போனின் மூலம் இனி கதிர்வீச்சுத் தொல்லை நமக்கில்லை:
செல்போனில் பேசினால் கதிர்வீச்சு பாதிப்பு, ரேடியேசன் (Radiation) தொல்லை அதிகம் என்ற உண்மையை பலர் கூறியோ அல்லது எங்கேனும் படித்து கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இனிமேல் நமக்கு அந்த தொல்லை இருக்காது. அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைகழக ஆய்வாளர் 'சிஷைஷென்' என்பவர் இந்த நுட்பத்தை உருவாக்கி உள்ளார். இது செல்போன் கோபுரம், மற்ற செல்போன் அழைப்புகள், சொந்த அழைப்புகள் எல்லாவற்றிலும் இருந்தும் சுற்றுப்புரத்தில் கசியும் ரேடியோ கதிர்களை உள் இழுத்து சார்ஜ் ஆகிக் கொள்கிறது. இதனால், பேட்டரியின் ஆயுள் 30 சதவீதம் அதிகமாகிறது. ஆனால், இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

cellphone01.jpgஸ்மார்ட் வளையல்:

பாக்கெட்டிலோ, கைப்பையிலோ (Hand bag) செல்போனை சைலண்ட் மோடில் (Silent Mode) போட்டு வைத்திருக்கும் போது ஏதாவது ஒரு முக்கிய அழைப்பு வந்து, அதை நாம் எடுக்க முடியாமல் சில நேரங்களில் பல பிரச்னைகள் வரலாம். இதற்கு ஒரு தீர்வு போல தற்போது புதிதாக வந்துள்ள கண்டுபிடிப்பே ஸ்மார்ட் வளையம். உங்கள் போனிற்கு அழைப்பு வரும் போது இந்த ஸ்மார்ட் வளையம் உங்களுக்கு அதிர்வைத் தரும் அல்லது சமிக்ஞைக் காட்டும். இது தோற்றத்தில் கையில் அணியும் ஆபரணம் போலிருப்பதால் இதை எங்கும் அணிந்து கொண்டு செல்லலாம்.

நுண்ணுயிர் தொழில்நுட்ப கற்கள் மூலம் கான்கிரீட்:

நாம் வீடுகளின் சுவர்களில் விரிசல் விட்டு பார்த்திருப்போம். பல வீடுகளில் விரிசல் பெரிதாகி இடியும் நிலையில் கூட உள்ளன. இப்படி பல கட்டிடங்கள், வீடுகள் நம் கண்களில் தென்படுகின்றன. ஆனால், இனிமேல் அவை அப்படி இருக்காது. ஏனெனில் நுண்ணுயிர் தொழில்நுட்பத்தால் உருவாக்கிய கற்கள் மூலம் கான்கிரீட் போடும் முறை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கற்கள் நுண்ணுயிர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, சுவற்றில் விரிசல் விழுந்தால், நுண்ணுயிர்களின் பெருக்கத்தால் விழுந்த விரிசல் தானாகவே மூடிக்கொள்ளும்.

-கோகுல் கவுதம்

நன்றி விகடன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.