Jump to content

முள்ளி வாய்க்கால் நினைவாக.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Evening-Tamil-News-Paper_1538813115.jpg

 

இன்றோடு.....!

 

இன்னுமொரு ஆண்டு .

எமைக் கடந்து செல்கின்றது!,

 

முள்ளி வாய்க்காலின்,

வெள்ளைக் கடற்கரையில்,

துளை போடும் சிறு நண்டுகள்,

இடை நடுவில்.....,

துளையிடுதலை நிறுத்துகின்றன!

 

ஏதோ...!

அவற்றின் கால்களுக்குத்,

தடை போடுகின்றன!

 

வேறென்ன...?

இடை நடுவில் எமைப் பிரிந்த,

எங்கள் சொந்தங்களின்,

எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்!

 

உழுது விதைக்கப் பட்ட,

பாளையங்கோட்டையின் நினைவில்,

மனம் புதையுண்டு போகின்றது!

 

அன்றைய...,

பாஞ்சாலங் குறிச்சியின்,

குறு நிலத்து மன்னர்கள்,

இன்றைய ராஜதந்திரிகளாய்,

எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்!

 

பதின்மூன்று..பதினாலு.,

பத்தொன்பது என்று,

தீர்வுத் திட்டங்களின்,

வரிசை நீள்கின்றது!

 

எல்லோரும்....!

இணைந்து வாழும் தேசத்தில்,

எனக்கென்ன குறையிருக்கின்றது,

என்ற கேள்விகளும் தொடர்கின்றன!

 

புத்தனுக்கு விடுதலையளித்த,

போதி மரத்தின் கிளையொன்று,

தங்க வேலியினுள்ளே.

பத்திரமாகப்....,

பொத்தி வைக்கப்பட்டுள்ளது!

 

எனக்கென்ன சுதந்திரமா இல்லை?

 

இறுதியாகப் போன போதும்,

எல்லா இராணுவத்தினரது பார்வையும்,

என் மீதே நிலை குத்தியபடி....!

 

மேலாடையிழந்த,

இளம் பெண்ணொருத்தியின்,

மன நிலையில் நான்..!

 

எனக்கு மட்டும் புரிகின்றது,

இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்வில் எதையும மறக்கவிரும்புவதில்லை

சிலவற்றை அனுபவங்களாக

பாடங்களாக

தூண்களாக

 

வாழ்வில் மறக்க நினைக்கும் ஒரே ஒரு விடயம் முள்ளி வாய்க்கால்

ஆனால் முடியாததும் அதுவே...

 

நன்றியண்ணா.

கவிதைக்கு

எம்மைத்தவிர யார் பாடுவார் எம் வலியை..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஒரு முள்ளாக குத்தி இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை தாங்கி வந்த புங்கையூரனின் கவிதையை படிக்கும் பொழுது முள்குத்திய இடத்தில் ஏற்படும் வலி.. இந்த வலி நிரந்தரமானது. எம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் இந்த நினைவுகளும் வலிகளும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியாது. நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்வில் எதையும மறக்கவிரும்புவதில்லை

சிலவற்றை அனுபவங்களாக

பாடங்களாக

தூண்களாக

 

வாழ்வில் மறக்க நினைக்கும் ஒரே ஒரு விடயம் முள்ளி வாய்க்கால்

ஆனால் முடியாததும் அதுவே...

 

நன்றியண்ணா.

கவிதைக்கு

எம்மைத்தவிர யார் பாடுவார் எம் வலியை..???

 

உலகத்து நாடுகளின்,

ஊது குழல் ஓசை வழி நடந்து,

ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டு...,

நிராதரவாக்கப் பட்ட இனம்!

 

எட்டிப் பிடிக்கும் தூரத்தில்,

உணவுகள் புதைந்திருந்தும்,

பட்டினியின் வலி தாங்காது,

வடலிப் பனை பிழந்து..,

பசியாறிய இனம்!

 

மான்கள் நீரருந்த...,

மீன்கள் அவற்றின் முகம் பார்க்கும்,

வளம் கொழிக்கும் வன்னி மண்ணில்.

வலிகள் ஏந்தி அழிந்த இனம்!

 

எப்படி மறக்க முடியும், விசுகர்?

 

வருகைக்கும் கருத்துக்கும், நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

முள்ளி வாய்க்காலின்,

வெள்ளைக் கடற்கரையில்,

துளை போடும் சிறு நண்டுகள்,

இடை நடுவில்.....,

துளையிடுதலை நிறுத்துகின்றன!

 

ஏதோ...!

அவற்றின் கால்களுக்குத்,

தடை போடுகின்றன!

 

வேறென்ன...?

இடை நடுவில் எமைப் பிரிந்த,

எங்கள் சொந்தங்களின்,

எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்!

------

இறுதியாகப் போன போதும்,

எல்லா இராணுவத்தினரது பார்வையும்,

என் மீதே நிலை குத்தியபடி....!

 

மேலாடையிழந்த,

இளம் பெண்ணொருத்தியின்,

மன நிலையில் நான்..!

 

எனக்கு மட்டும் புரிகின்றது,

இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று!

 

இந்த உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை முள்ளிவாய்க்கால் சோகம், மறக்க முடியாதது.

கைக்கு எட்டும் வரை, எமது போராட்டத்தை நடாத்திய தமிழன்.....

எமது இனத்து  எட்டப்பர்களாலும், உலக வல்லரசுகளாலும் தோற்கடிக்கப் பட்ட ஆத்திரத்தை, இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவுக் கவிதைக்கு, நன்றி புங்கையூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஒரு முள்ளாக குத்தி இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை தாங்கி வந்த புங்கையூரனின் கவிதையை படிக்கும் பொழுது முள்குத்திய இடத்தில் ஏற்படும் வலி.. இந்த வலி நிரந்தரமானது. எம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் இந்த நினைவுகளும் வலிகளும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியாது. நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

உண்மை தான்.. காவலூர் கண்மணி!

 

முள்ளி வாய்க்கால், விட்டுச்சென்ற கோர நினைவுகளை மறப்பது என்பது இயலாது என்பது தான் எனது கருத்தும் கூட!

 

எனினும் கால வெள்ளம்.. அனைத்தையும் கழுவிச் செல்கின்றது என்பது.. இங்கு கருத்துப் பகிர்ந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தே புரிந்து கொள்ள முடிகின்றது!

 

ஒரு வேளை...மறதி என்பது.. மனிதர்களுக்கு இறைவனால் அழிக்கப்பட்ட வரப்பிரசாதமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது! :o

 

 

வருகைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்.. காவலூர் கண்மணி!

 

முள்ளி வாய்க்கால், விட்டுச்சென்ற கோர நினைவுகளை மறப்பது என்பது இயலாது என்பது தான் எனது கருத்தும் கூட!

 

எனினும் கால வெள்ளம்.. அனைத்தையும் கழுவிச் செல்கின்றது என்பது.. இங்கு கருத்துப் பகிர்ந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தே புரிந்து கொள்ள முடிகின்றது!

 

ஒரு வேளை...மறதி என்பது.. மனிதர்களுக்கு இறைவனால் அழிக்கப்பட்ட வரப்பிரசாதமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது! :o

 

 

கவலைப் படாதீர்கள் புங்கை.

கிரிக்கெட் சீசனில், இப்படியான திரிகளுக்கு வாசகர்களின் வருகை குறைந்தே இருக்கும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் சீசனில், இப்படியான திரிகளுக்கு வாசகர்களின் வருகை குறைந்தே இருக்கும். :icon_mrgreen:

 

:wub::o

 

தாய் தந்தை மறைந்தாலே காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கையில் இவையும் அடித்துச் செல்லப்படும்..

இந்திய சுதந்திர வரலாற்றில் பெரிதாக பேசப்படும் ஜாலியன் வாலபாக் படுகொலையை அக்கால பெருசுகள் உணர்வு கொப்பளிக்க பேசுவதை கேட்டிருக்கிறேன்..ஆனால் நாங்கள் ஏட்டில் மட்டுமே படித்ததால் அவ்வளவு தாக்கம் இல்லை.

அதே போல் முள்ளிவாய்க்கால் துயரமும் இத்தலைமுறையால் அதிகம் பேசப்பட்டு அடுத்துவரும் இளசுகள் ஏட்டளவில் மட்டுமே படிக்கப்போவதால், அது ஒரு துயர நிகழ்வு என்ற பேச்சோடு நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.. (No offense) :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், ஆறுதலான கருத்துக்கும் நன்றி, தமிழ் சிறி, ராஜவன்னியன்!

 

இன்றைய நாள்....எமது ஈழத்தமிழனின் வரலாற்றில்... என்றுமே மறக்க முடியாத நாள்!

 

விடிகாலைப் பொழுதில், சேவல் என்றுமே கூவ மறந்ததில்லை! அதன் குரல் ஓசையிழந்த பின்னும் கூட.... வெறும் காற்றையாவது வெளியில் துப்புகின்றது!

 

நினைவேந்தல் நாள் வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் எழும் போதே.....
மனமெல்லாம் ஒரு வித சோகமாக, எதையோ... பறி கொடுத்த மாதிரி உள்ளது.
6 வருடம் கடந்தும், மனதை விட்டு நீங்காத சோகம்... முள்ளிவாய்க்கால்.

Link to comment
Share on other sites

நான் இருக்கும்வரை என் நெஞ்சை சுட்டெரிக்கும் கொடூர நெருப்பு முள்ளிவாய்க்கால். இறந்தபின்பும் என் சாம்பல் தகிக்குமோ தெரியவில்லை. காலம் எதனையும் குளிர்வித்துவிடும் என்பது அனுபவம். ஈழச் சரித்திரம்பற்றி சிறு பகுதியொன்றை முன்பு படித்த ஞாபகம்... ஒரு காலத்தில் சிங்களம் முழு இலங்கையையும் கைப்பற்றி இருந்ததாகவும் அந்நேரத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்டதாகவும் படித்தேன். அக்காலத்தின் சனத்தொகையைக் கணிக்கிக்கும்போது இலட்சம் என்பது இன்றைய கோடிக்குச் சமமாகும். சம்பவம் ஏட்டில் குளிர்ந்துவிட்டது. ராசவன்னியர் கூறியதுபோல்... காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கையில் இவையும் அடித்துச் செல்லப்படும். இயற்கை மாறாதது.
 
Link to comment
Share on other sites

Evening-Tamil-News-Paper_1538813115.jpg

 

இன்றோடு.....!

 

இன்னுமொரு ஆண்டு .

எமைக் கடந்து செல்கின்றது!,

 

முள்ளி வாய்க்காலின்,

வெள்ளைக் கடற்கரையில்,

துளை போடும் சிறு நண்டுகள்,

இடை நடுவில்.....,

துளையிடுதலை நிறுத்துகின்றன!

 

ஏதோ...!

அவற்றின் கால்களுக்குத்,

தடை போடுகின்றன!

 

வேறென்ன...?

இடை நடுவில் எமைப் பிரிந்த,

எங்கள் சொந்தங்களின்,

எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்!

 

உழுது விதைக்கப் பட்ட,

பாளையங்கோட்டையின் நினைவில்,

மனம் புதையுண்டு போகின்றது!

 

அன்றைய...,

பாஞ்சாலங் குறிச்சியின்,

குறு நிலத்து மன்னர்கள்,

இன்றைய ராஜதந்திரிகளாய்,

எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்!

 

பதின்மூன்று..பதினாலு.,

பத்தொன்பது என்று,

தீர்வுத் திட்டங்களின்,

வரிசை நீள்கின்றது!

 

எல்லோரும்....!

இணைந்து வாழும் தேசத்தில்,

எனக்கென்ன குறையிருக்கின்றது,

என்ற கேள்விகளும் தொடர்கின்றன!

 

புத்தனுக்கு விடுதலையளித்த,

போதி மரத்தின் கிளையொன்று,

தங்க வேலியினுள்ளே.

பத்திரமாகப்....,

பொத்தி வைக்கப்பட்டுள்ளது!

 

எனக்கென்ன சுதந்திரமா இல்லை?

 

இறுதியாகப் போன போதும்,

எல்லா இராணுவத்தினரது பார்வையும்,

என் மீதே நிலை குத்தியபடி....!

 

மேலாடையிழந்த,

இளம் பெண்ணொருத்தியின்,

மன நிலையில் நான்..!

 

எனக்கு மட்டும் புரிகின்றது,

இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று!

 

Link to comment
Share on other sites

பதின்மூன்று..பதினாலு.,

பத்தொன்பது என்று,

தீர்வுத் திட்டங்களின்,

வரிசை நீள்கின்றது!

 

 

உண்மைதான். திட்டங்கள் என்ற பெயரால் ஏமாற்றப்படும் நாடகங்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அநீதியை பொறுக்க முடியாமல் மக்கள் எழுந்து

கொண்டு போராட்டங்களை நடத்த முற்படும் வேளைகளிலெல்லாம் சில கறுப்பு ஆடுகள் புகுந்து கெடுத்துவிடும் கொடுமையும் அல்லவா தொடர்கின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.