Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

  • Replies 209
  • Created
  • Last Reply

இப்போதெல்லாம் யாழில் ஒரு நல்ல புதிய வகை ட்ரெண்ட் விளம்பரத்தில் புகுத்தப்படுகின்றது. பல விடயங்களையும் மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விளம்பரங்கள் பல இருக்கின்றன. பல இடங்களில் மது, புகைத்தல், போதை பொருட்களுக்கு எதிரான வசனங்களும் இடம்பெறுகின்றன.
நல்ல விடயம்தான் என்று நினைத்ததோடு நின்றுவிட்டேன். படம் எடுக்கவுமில்லை, இங்கு பகிரவும் இல்லை. 

இங்கு யாழில் நவீனன் இணைத்த ஒரு செய்தியைப் பார்த்ததும்தான் இவற்றையும் இங்கு பதிய விரும்பினேன். இனிமேல் எனது கண்களில் படும் இவ்வாறான விளம்பரங்களையும் பதிவேன் - நன்றி நவீனன்.


நல்லவற்றை வரவேற்போம்.

 

IMG_0496.jpg

IMG_0497.jpg

IMG_0499.jpg

IMG_0507.jpg

IMG_0508.jpg


 

 

Link to comment
Share on other sites

சொக்கன் கடை.

கைலாச பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள சொக்கன் கடையை தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்க முடியாது. தலைமுறைகளாக தொடரும் இக்கடை இப்பவும் சொக்கனின் மகனால் நடத்தப்படுகின்றது என்று அறிந்தேன். உள்ளே போய் பாத்தபோது சொக்கன் படமாக சுவரில் தொங்கினார். வேட்டியும் + ஒரு மொத்த பெல்ட்டும் + வேர்வையுடன் ஒரு வெறும்மேலுடனும் அதே உருவத்தில் இன்னொருவர். உள்ளே எந்த வித்தியாசமுமில்லை.

தலைமுறைகள் வாழ்கின்றன (எமது நினைவுகளும்தான்) - வாழ்த்துக்கள்.

IMG_0502.jpg

IMG_0501.jpg

Link to comment
Share on other sites

சுகவீனமுற்ற நண்பன்

 

IMG_0459.jpg

 

இலங்கைக்கு வந்தநாள்முதல் யாழ்ப்பாணத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட லைசென்ஸுக்கு நேர்மையாக அலையாத இடமில்லை. என்னிடம் அடையாள அட்டை இல்லாதபடியால் அது சாத்தியமற்று போனது. களவாக எடுக்க முடியும் (அடையாள அட்டையும் லைசென்சும்) ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லாததால் முடியவில்லை. எனக்கு எதுக்கு மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் நோர்வேயில் என்றிருந்தது தப்பாகி விட்டது.

சைக்கிளில் எவ்வளவுதான் சுத்த முடியும். மோட்டார் சைக்கிள் கனவு கனவாகவே இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளிற்கு லைசென்ஸ் தேவை இல்லை, இன்சூரன்ஸ் தேவை இல்லை, வீதி வரி இல்லை, ஹெல்மட்டும் தேவை இல்லையாம் எண்டு.. 4.5 மணி நேரம் சார்ஜ் பண்ணினால் 50 - 55 கி.மீ ஓடுமாம், அதிக வேகம் 34 கி.மீ/மணி. ஆஹா என்று 82,800 ரூபாயை கொடுத்து சிங்கனை எனது அரண்மனைக்கு கொண்டு வந்தேன். 

சிங்கனும் ஜீவனும் சுத்தாத இடமே இல்லை. ஆனாலும் நண்பன் உடல் முடியாமல் போன ஞாயிறு (11/09/2016) படுத்துவிட்டான். நண்பனைக் காட்ட யாழ்ப்பாணத்தில் வைத்தியரும் இல்லையாம். ஒரு கிழமையா படுத்த படுக்கைதான்.

எண்ட பழைய சைக்கிள் ஞாபகம் வர, போய்ப் பாத்தால்  - போடா பன்னி எண்டு சொல்வது மாதிரியே இரண்டு சில்லிலையும் காத்த வெளியே விட்டிட்டு  ரிம்மில இருந்து சிரிக்குது. என்ன இருந்தாலும் பழைய நண்பன்தானே எண்டுட்டு, கூட்டிக் கொண்டே 10 ரூபாவுக்கு காத்து அடிச்சிற்று சுத்தினான்.

இண்டைக்கு கொழும்பில் இருந்து புது நண்பனை காப்பாத்த வைத்தியர் வந்திட்டாராம். அழைத்துக் கொண்டே அனுமதித்து விட்டு வந்திருக்கின்றேன். இதுவரை என்ன வருத்தம் என்று தெரியாதாம். 

எப்ப வீட்டை திரும்பிவருவானோ என்று மனம் அல்லாடுது.

ஒரு சந்தேகம் - எனது பழைய நண்பனின் சாபமா இருக்குமோ? 

IMG_0523.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், காண பதிவுகள் பார்க்கத் தவறி விட்டிட்டேன் ....! நல்லாயிருக்கு ...., உங்களின் கமெண்ட்ஸ்களும் சூப்பர் ...!!  tw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

ஜீவன், காண பதிவுகள் பார்க்கத் தவறி விட்டிட்டேன் ....! நல்லாயிருக்கு ...., உங்களின் கமெண்ட்ஸ்களும் சூப்பர் ...!!  tw_blush:

ஆதரவுக்கு நன்றி சுவி

Link to comment
Share on other sites

Quote

 

எப்ப வீட்டை திரும்பிவருவானோ என்று மனம் அல்லாடுது.

ஒரு சந்தேகம் - எனது பழைய நண்பனின் சாபமா இருக்குமோ? 

 

 

13912380_1626965920926928_6565628077059711225_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0459.jpg

இவரின்... பூர்வீகம் எது... ஜீவன் சிவா.
சீனா என்றால், அடிக்கடி சுகயீனம் வரப் பார்க்கும். இப்படியானவற்றுக்கு... இந்திய பொருட்கள் தாக்குப் பிடிக்கும் என்பது எனது அபிப்பிராயம். அத்துடன்.... பராமரிப்பு சேவை நிலையங்களும் அதிகம் காணப்படும் என எண்ணுகின்றேன்.
உங்கள் நண்பன், விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

இவரின்... பூர்வீகம் எது... ஜீவன் சிவா.

சீனாவின் பக்கத்து வீடு + சொந்தக்காரன் . வட கொரியா 

ஆனாலும் சிங்கன் சுகமாய் வீடு வந்து சேர்ந்திட்டார்.

Link to comment
Share on other sites

பண்ணை .....

என்னடா இவன் பண்ணையை சுத்தி சுத்தி திரியிறானே என்று யோசிக்க வேண்டாம். யாழ்ப்பாணத்தில் எனக்கு பிடித்த இடம் பண்ணைப்பாலம்தான். பின்னேரங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு போவேன் கேமராவுடன் அல்லது மீன்பிடி உபகரணங்களுடன்.

 

இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து  பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது வலதுபுறம் உள்ளது. இதில் ஒரு தேவாலயம் மட்டுமே உள்ளது போல் தெரிகின்றது. இதற்கு படகு மூலம் மட்டும்தான் போகலாமா அல்லது பின் புறத்தில் வேறு பாதை உண்டா?

யாருக்காவது தெரியுமா இந்த தீவின் பெயர்?

IMG_0603.jpg

 

நேற்றைய சூரிய அஸ்த்தமனமும் இன்றைய சில க்ளிக்குகளும்.

IMG_0588.jpg

IMG_0596.jpg

IMG_0600.jpg

IMG_0608.jpg

IMG_0612.jpg

IMG_0626.jpg

IMG_0630.jpg

IMG_0628.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மண்டைதீவைச் சொல்லுகின்றீர்களா....., அங்கு ஒரு வானொலி கூட்டுத்தாபனமும் இருந்தது ....! tw_blush:

கீழே அலையாத்திக் காடுகள் . இதுபோன்ற காடு சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்சியில் போனது ....!

Link to comment
Share on other sites

47 minutes ago, suvy said:

நீங்கள் மண்டைதீவைச் சொல்லுகின்றீர்களா....., அங்கு ஒரு வானொலி கூட்டுத்தாபனமும் இருந்தது ....! tw_blush:

கீழே அலையாத்திக் காடுகள் . இதுபோன்ற காடு சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்சியில் போனது ....!

இல்லை மண்டைதீவு யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது இடது பக்கம் வரும். இது வலது பக்கம் உள்ள ஒரு சிறுதீவு. முதலாவது படம் + கீழேயும் உள்ளது.

IMG_0637.jpg

58 minutes ago, suvy said:

கீழே அலையாத்திக் காடுகள் .

IMG_0628.jpg

mangrove இனத்தை சேர்ந்த தாவரத்திற்கு தமிழில் என்ன பெயர் என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உடைத்தேன். யாரிடமாவது கேட்கணும் என்றும் யோசித்தேன்.

நன்றி சுவி

Link to comment
Share on other sites

இந்தத் தீவு கிட்டத்தட்ட இந்த இடத்தில்தான் உள்ளது.

Untitled.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

பண்ணை .....

என்னடா இவன் பண்ணையை சுத்தி சுத்தி திரியிறானே என்று யோசிக்க வேண்டாம். யாழ்ப்பாணத்தில் எனக்கு பிடித்த இடம் பண்ணைப்பாலம்தான். பின்னேரங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு போவேன் கேமராவுடன் அல்லது மீன்பிடி உபகரணங்களுடன்.

இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து  பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது வலதுபுறம் உள்ளது. இதில் ஒரு தேவாலயம் மட்டுமே உள்ளது போல் தெரிகின்றது. இதற்கு படகு மூலம் மட்டும்தான் போகலாமா அல்லது பின் புறத்தில் வேறு பாதை உண்டா?

யாருக்காவது தெரியுமா இந்த தீவின் பெயர்?

நேற்றைய சூரிய அஸ்த்தமனமும் இன்றைய சில க்ளிக்குகளும்.

IMG_0628.jpg

பண்ணைப்பக்கம்

அராலிக்கும் ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இருக்கும் தீவு என நினைக்கின்றேன்..

இங்கு போகமுடியும்....

இங்கு யாரோ போய் வந்து எழுதியதாக ஞாபகம்..

Link to comment
Share on other sites

10 minutes ago, விசுகு said:

அராலிக்கும் ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இருக்கும் தீவு என நினைக்கின்றேன்..

இங்கு போகமுடியும்....

 

இதுதான் அந்த தீவு.

2531.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0628.jpg

புராதன காலங்களில் இப்படியான கண்டல்,அலையாத்தி காடுகள் தான் மக்களை சுனாமி எனும் பேரழிவு அலைகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்..:rolleyes:

படங்களுக்கும் விபரங்களுக்கும் நன்றி ஜீவன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

பண்ணை .....

இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து  பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது வலதுபுறம் உள்ளது. இதில் ஒரு தேவாலயம் மட்டுமே உள்ளது போல் தெரிகின்றது. இதற்கு படகு மூலம் மட்டும்தான் போகலாமா அல்லது பின் புறத்தில் வேறு பாதை உண்டா?

யாருக்காவது தெரியுமா இந்த தீவின் பெயர்?

IMG_0603.jpg

சிறிய வயதில்.... பண்ணைப் பாலத்திலிருந்து, இந்தத் தீவை தூர நின்று அவதானித்துள்ளேன். ஒரு நாளும் கிட்டப் போய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.  இதனை "காக்கை தீவு" என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். 

எதற்கும்... ஜீவன் பண்ணைப் பாலத்தில் மின் பிடித்துக் கொண்டிருக்கும்... மீனவர்களிடம் கேட்டு, அதன் வரலாற்றறை எமக்கும் கூறினால் உதவியாக இருக்கும். அத்துடன் அங்கு தெரியும்... தேவாலயம் எத்தனையாம் ஆண்டு கட்டப்  பட்டது என்றும் கேளுங்கள். கிட்டப் போய் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்து.... உங்கள் கமெராவில் அங்குள்ள சூழ் நிலையை படம் பிடித்தால்... இன்னும் மகிழ்ச்சி.

இப்போதும்... பண்ணைப் பால முகப்பில், மீன் சந்தை உள்ளதா?
படங்கள் எல்லாம்... மிகவும் அழகு. எம்மை பழைய நினைவுகளை,  மீட்க வைத்தது. 

Link to comment
Share on other sites

15 hours ago, suvy said:

கீழே அலையாத்திக் காடுகள்

 

9 hours ago, குமாரசாமி said:

புராதன காலங்களில் இப்படியான கண்டல்,அலையாத்தி காடுகள்

எவ்வளவு அழகான பெயர் - அலையாத்தி 
எவ்வளவு அர்த்தம் - அலைகளை, அதன் வீரியத்தை குறைக்கும் மரம்.

இதுக்கு பிறகும் எவனாவது  நான் தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்ல வெட்கப்படுவான் என்றால் அவன் குரங்காகவே இன்னும் இருக்கின்றான் என்றுதான் அர்த்தம்.

3 hours ago, தமிழ் சிறி said:

இதனை "காக்கை தீவு" என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். 

காக்கைதீவு சரியென்றே நினைக்கின்றேன்.இனி சனிக்கிழமைதான் அந்த பக்கம் போக முடியும் என்று நினைக்கின்றேன். முடிந்தால் யாராவது வள்ளக்காரரை காக்கா பிடித்து காக்கைதீவுக்கு போகத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ...இல்லை ...இல்லை  தமிழ்சிறி , காக்கைதீவாகப்பட்டது ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை போகும் வழியில் கல்லுண்டாய்க்கு முன்  உள்ளது . அங்கு கடல் அட்டைகள் எடுத்துக் காய போட்டு வைத்திருப்பார்கள் ....!

ஜீவன் , காக்கைதீவில் காக்கா இல்லை நாவாந்துறை கடிநாய்கள் , பொம்மைவெளி விசர்நாய்கள்தான் திரியும் ...! உங்கட சிங்கனும் ரொம்ப சிறியது கவனமப்பு....! tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

இல்லை ...இல்லை ...இல்லை  தமிழ்சிறி , காக்கைதீவாகப்பட்டது ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை போகும் வழியில் கல்லுண்டாய்க்கு முன்  உள்ளது . அங்கு கடல் அட்டைகள் எடுத்துக் காய போட்டு வைத்திருப்பார்கள் ....!

சுவி அப்ப இந்த காக்கைதீவு என்பது ஒரு தீவே இல்லையா.  குடாநாட்டின் ஒரு கரையோரமா?

Untitled.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஜீவன் சிவா said:

சுவி அப்ப இந்த காக்கைதீவு என்பது ஒரு தீவே இல்லையா.  குடாநாட்டின் ஒரு கரையோரமா?

Untitled.png

அது இப்ப குப்பைகளின் தீவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

சுவி அப்ப இந்த காக்கைதீவு என்பது ஒரு தீவே இல்லையா.  குடாநாட்டின் ஒரு கரையோரமா?

Untitled.png

ஆமாம் ... மைசூர்பருப்பு போலத்தான் இதுவும் ....! tw_blush:

முன்பு 1960 க்கு முதல் என நினைக்கின்றேன் , வேலணை, புங்குடுதீவு எல்லாம் கடலால் ஊடறுத்த சிறு தீவுகள்தான் . நயினாதீவுக்கு போவதென்றால்  மூன்று தரம் சிறிய படகில்  போய்த்தான் போகவேண்டும் . பிறகு அவையெல்லாம் வீதிகளால் இணைத்தாயிற்று ....!  இன்னும் ஒரு பாலம் கழுதை பிட்டியில் இருந்தோ அல்லது குறிகாட்டுவானில் இருந்தோ நயினைக்குப் போட்டால் நீங்கள் சிங்கனில் சிங் எண்டு போய் சங் எண்டு வரலாம் ....!tw_blush:

Link to comment
Share on other sites

22 hours ago, விசுகு said:

பண்ணைப்பக்கம்

அராலிக்கும் ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இருக்கும் தீவு என நினைக்கின்றேன்..

இங்கு போகமுடியும்....

 

11 hours ago, தமிழ் சிறி said:

இதனை "காக்கை தீவு" என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். 

 

7 hours ago, suvy said:

இல்லை ...இல்லை ...இல்லை  தமிழ்சிறி , காக்கைதீவாகப்பட்டது

புச்சையடி தீவு

இந்த தீவின் பெயர் புச்சையடி தீவு. ஆனாலும் மக்கள் இதனை புச்சைதீவு என்றே அழைக்கிறார்கள். இந்த தீவிற்கு மீனவர்கள் நடந்தே போகிறார்கள். அதற்கு அவர்களிற்கு ஆழம் குறைந்த பகுதியின் அமைப்பு தெரிந்திருக்கின்றது. ஒவ்வொரு ஞாயிறிலும் தேவாலயத்தில் பூசை நடைபெறும். அதற்காக நாவாந்துறை சந்தையடியில் இருந்து வள்ளங்கள் போகுமாம். பங்குனி மாதத்தில் திருவிழா விமர்சையாக நடைபெறுமாம். என்னையும் இந்த ஞாயிறு கூட்டிப் போவதற்கு வாக்களித்திருந்தார் ஒரு 65 வயது மதிக்கத்தக்க நண்பர். நானும் சரி வருகின்றேன் என்றுவிட்டு வந்து விட்டேன். இப்போதுதான் சிலர் வந்து ஒரு முக்கியமானவரின் அந்தியேட்டிக்கு அழைப்பு கொடுத்து விட்டு போகிறார்கள்.

இன்னொரு ஞாயிறு வராமலா போகும்?

IMG_0649.jpg

பண்ணைப்பாலத்தின் மண்டைதீவு சந்தியில் இருந்து இன்று பகல் எடுக்கப்பட்ட படம்தான் மேலே உள்ளது.

3 hours ago, suvy said:

கழுதை பிட்டியில் இருந்தோ அல்லது குறிகாட்டுவானில் இருந்தோ நயினைக்குப் போட்டால் நீங்கள் சிங்கனில் சிங் எண்டு போய் சங் எண்டு வரலாம் ....!tw_blush:

போகலாம் திரும்பி வரமுடியாது. சிங்கனின் ரேஞ்சு 50 - 55 கி மி தான்.

11 hours ago, தமிழ் சிறி said:

இப்போதும்... பண்ணைப் பால முகப்பில், மீன் சந்தை உள்ளதா?

இல்லை அதனை எப்பவோ முத்தவெளி பஸ் நிலையத்துக்கு முன்னால் மாற்றிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

மாதகல் : சில சந்தோசங்கள் பல கடுப்புகள்.
(இப்படங்கள் ஆகஸ்ட் முதற் கிழமை எடுத்தவை)

IMG_0104.jpg

IMG_0117.jpg

IMG_0118.jpg

IMG_0120.jpg

IMG_0121.jpg

IMG_0124.jpg

IMG_0128.jpg

IMG_0134.jpg

IMG_0141.jpg

IMG_0144.jpg

IMG_0145.jpg

IMG_0146.jpg

IMG_0148.jpg

IMG_0163.jpg

IMG_0166.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.