Jump to content

உன்னால் முடியும்


Recommended Posts

  • Replies 71
  • Created
  • Last Reply

உன்னால் முடியும்: கற்றுக் கொள்வதில் தயக்கம் கூடாது

தங்கமலை, ஹை டெக் லேபிள்ஸ், சென்னை. | படம்: எல். சீனிவாசன்
தங்கமலை, ஹை டெக் லேபிள்ஸ், சென்னை. | படம்: எல். சீனிவாசன்

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தங்கமலை, பிரிண்டிங், டிசைனிங் நிறுவனத்தில் தொழி லாளியாக இருந்தவர், கல்வித் தகுதி +2 தான். ஆனால் இன்று லேபிளிங் துறையில் சென்னையில் முக்கிய தொழில்முனைவோர். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு எப்போதுமே தயக்கம் காட்டக்கூடாது இதுதான் என் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்று கூறும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

சென்னைதான் சொந்த ஊர், பனிரெண்டாவதுக்கு மேல் படிக்கவில்லை. ஒரு ஆர்வத்தில்தான் பிரிண்டிங் நிறுவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கால கட்டங்களில் கம்ப்யூட்டர் டிசைனிங் எல்லாம் கிடையாது.

பிரிண்டிங்கில் ஒரு டிசைன் கொண்டு வர வேண்டும் என்றால் படங்களை வெட்டி ஒட்டி மேனுவலாக மேற்கொள்ளும் பிரிண்டிங் முறைதான். நான் வேலை செய்தது சற்று பெரிய நிறுவனம் என்பதால் அவ்வப்போது தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அந்த வகையில்தான் நான் கம்ப்யூட்டரை கற்றுக் கொண்டேன்.

அந்த நிறுவனத்தின் பல பிரிண்டிங் வேலைகளில் அடுத்த கட்டமான லேபிள் பிரிண்டிங் வேலைகளுக்கு என்னை மாற்றினார்கள். அதில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றினேன். பிறகு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் லேபிளிங் வேலைக்காக ஆட்கள் தேவை என்று என்னையும், எனது நண்பர்கள் இருவரையும் அழைத்தனர்.

அங்கு மூன்று ஆண்டுகள் அவர்களது பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தோம். திரும்ப சென்னை வந்தபோது இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை தெளிவாக அறிந்திருந்தோம்.

குறிப்பாக அனைத்து துறைகளுக்குமான பிரிண்டிங் லேபிள்கள் இங்கு தேவையாக இருக்கிறது. ஆட்டோமொபைல், மருந்து, டெக்ஸ்டைல் என அனைத்து துறைகளுக்கும் லேபிளிங் முறைகள் வளரத்தொடங்கிய நேரத்தில் இந்த தொழிலை மேற்கொள்ள எனது நண்பர்கள் இருவருடன் இணைந்து இறங்கினேன். இந்த தொழிலை தொடங்க முதலில் வேலைபார்த்த நிறுவனத்தின் லேபிளிங் துறையின் மேலாளர் எங்களுக்கு பல வகைகளிலும் உதவிகள் செய்தார்.

ஆரம்பத்தில் பல நிறுவனங்களுக்கு சென்று எங்கள் தயாரிப்புகளை விளக்குவோம். லேபிள் செய்வதால் வேலைப்பளு குறையும், சிஸ்டமேட்டிக்காக வேலைகள் நடக்கும் என்பதை எடுத்துச் சொல்லித்தான் ஆர்டர்கள் பிடிப்போம். வேறு நிறுவனங்களில் செய்த வேலைகளைச் சொல்லுங்கள் ஆர்டர் தருகிறோம் என்பார்கள். முதலில் சின்ன சின்ன ஆர்டர்களிலிருந்துதான் தொடங்கினோம்.

கடந்த 10 ஆண்டுகளில் லேபிளிங் முறை மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது. லேபிளிங் தொழில்நுட்பத்தில் முன்பு லேபிள் ஒட்டுவது மட்டும்தான் இருந்தது. பிறகு பார்கோட் வந்தது, லேபிளையும், பார்கோடையும் தனித்தனியாக ஒட்டுவார்கள்.

இப்போது லேபிளிலேயே பார்கோட் வந்துவிட்டது. அடுத்த கட்டமாக கியூஆர் கோட் வந்துகொண்டிருக்கிறது. தவிர ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி முறைகளும் வந்துவிட்டன. ஜவுளி கடையில் பில் போடாமல் துணியை எடுத்துச் சென்றால் பீப் சவுண்ட் வருவதுகூட இந்த துறை சார்ந்த வளர்ச்சிதான். ஒரு பொருளுக்கு லேபிள் ஒட்டிவிட்டோம் என்றால் அந்த பொருளின் அனைத்து தகவல்களும் அப்டேட்டாக இருக்கும். பணியாளர்களின் நேரமும், உழைப்பும் மிச்சமாகும். இப்போது கிட்டத்தட்ட அனைத்து பெரிய வர்த்தக நிறுவனங்களிலும் இது புழக்கத்துக்கு வந்துவிட்டது.

இவை எல்லாவற்றையும் எல்லா காலகட்டங்களிலும் முன்னின்று கற்றுக் கொண்டேன். இந்த துறை சார்ந்து எந்த வேலைகளையும் புதிதாக கற்றுக்கொள்ள தயங்கியதே இல்லை. இதுதான் என்னை வளர்த்தது என்று நம்புகிறேன். நிறுவனம் நன்றாக வளர்ந்த பிறகு எனது நண்பர்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து செல்ல, தற்போது நான் மட்டும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறேன். தற்போது பதினைந்து நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறேன். தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சியாக சாப்ட்வேர் நிறுவனங்களுக்குகூட லேபிள் முறைகளை கொண்டு சென்றுள்ளோம்.

இந்த துறையின் ஒவ்வொரு அடுத்த கட்ட தொழில்நுட்ப நகர்வுகளையும் கற்றுக்கொள்வதில் ஆர்வமாகவே இருந்திருக்கிறேன். சாதாரண கடைநிலை தொழிலாளியாக தொடங்கிய வாழ்க்கை இது. இன்று ஆன்லைன் மூலம் பிசினஸ் தேடி வருகிறது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனது அனுபவம் என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகத்தான் இருந்துள்ளது. அதுதான் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்றார். தப்பிப் பிழைப்பது பிழைத்துக் கொள்ளும் என்கிற தத்துவத்தை எளிதாகவே புரிய வைக்கிறார் இவர்.

சாதாரண கடைநிலை தொழிலாளியாக தொடங்கிய வாழ்க்கை இது. இன்று ஆன்லைன் மூலம் பிசினஸ் தேடி வருகிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனது அனுபவம் என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகத்தான் இருந்துள்ளது. அதுதான் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-கற்றுக்-கொள்வதில்-தயக்கம்-கூடாது/article8778852.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: தெரிந்த தொழிலில் சாமர்த்தியம் வேண்டும்

um_2928352f.jpg
 

சென்னை கொடுங்கையூரில் வசிக் கிறார் நந்தினி. பி.காம் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர். அந்த நிறுவனம் நான் ஓவன் பொருட் கள் வர்த்தகத்தில் இருந்தது. வட மாநில உற்பத்தியாளர்களிடம் அந்த பொருட்களை வாங்கி சென்னையில் மார்கெட்டிங் செய்து வந்துள்ளது. அந்த பொருட்களை இங்கேயே தயாரித்தால் என்ன என்று அவர் யோசித்ததன் விளைவு இன்று தனியாக தொழிலில் இறங்கி சாதித்துள்ளார். ஸ்பா மற்றும் சலூன்களில் பயன்படுத்தும் நாப்கின், காலணி உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

சென்னைதான் பூர்வீகம், திருவல்லிக்கேணியில் வசித்து வந்தோம். டிகிரி முடித்துவிட்டு சில நிறுவனங்களில் அக்கவுண்டன்டாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஐசிஐசிஐ வங்கியின் கடனுதவி ஏஜென்சியிலும் சில ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். திருமணத்துக்கு பிறகு எனது கணவர் வீடு அமைந்திருக்கும் கொடுங்கையூரில் செட்டிலானேன். இங்கு வந்ததும் ஒரு வர்த்தக நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நிறுவனம் மும்பை டெல்லி போன்ற நகரங்களிலிருந்து நான் ஓவன் துணியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி இங்கு மார்க்கெட்டிங் செய்து வந்தது. அதன் வரவு செலவுகளுக்காக பல நிறுவனங்களுடனும் நான் தான் பேசுவேன்.

அந்த பொருட்களின் கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்குமான வித்தியாசம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்து வாங்கி இங்கு மார்க்கெட்டிங் செய்வதற்கே இவ்வளவு லாபம் என்றால், அதை இங்கேயே தயாரித்து விற்பனை செய்தால் என்ன என யோசித்தேன். அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணிகளில் இருந்த என் தோழி நந்தினியும் இந்த யோசனைக்கு ஊக்கம் கொடுத்தார்.

நானும், நந்தினியும் மேலும் இரண்டு பெண்களுமாக அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டோம். ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு 35 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பித்தோம். முதன் முதலில் ஒரே ஒரு தையல் இயந்திரம்தான் வாங்கினோம். நான் கணக்கு மற்றும் தொடர்புகளை பார்த்துக் கொள்வது, மற்றொருவர் மார்க்கெட்டிங், இரண்டு பேர் தயாரிப்பு வேலைகள் என பம்பரமாக இயங்கினோம்.

ஸ்பா, சலூன்கள், மருத்துவமனைகள், ஸ்டார் ஹோட்டல்கள் இவர்கள் தான் எங்களது தயாரிப்புகளுக்கு முக்கிய வாடிக்கையாளர்கள். இவர்கள் ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருக்கும் சப்ளையர்களை விட விலை குறைவாக கொடுத்து புதிய ஆர்டர்களைப் பிடித்தோம். அப்படி விலை குறைவாக கொடுத்தாலும் எங்களுக்கு லாபம் இருந்தது என்பதால்தான் அப்படி செய்தோம். புதிய ஆர்டர்கள் கிடைக்க கிடைக்க உற்பத்தி அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்தது. இதற்கு கூடுதல் முதலீடு தேவைப்பட்டது. இந்த சமயத்தில் என் தொழில் பார்ட்னர்களில் இரண்டு பெண்கள் வெளியேறிவிட்டனர். இதனால் நாங்கள் இரண்டு பேர் மட்டும் முதலீட்டை அதிகரிக்க முடியாத நிலையில் சென்னையில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் வரம் கேபிடல் மூலம் ரூ.2 லட்சம் கடனுதவி கிடைத்தது.

இந்த தொகையைக் கொண்டு மேலும் இரண்டு தையல் இயந்திரங்கள் வாங்கி னோம். தவிர கொஞ்சம் பெரிய இடத்துக்கும் வாடகைக்கு வந்தோம். தொழிலை தொடங் கிய சில மாதங்களிலேயே நாங்கள் இந்த முயற்சிகளை எடுத்தோம். அதற்கடுத்து எங்களது தேவைகளுக்கு மேலும் நான்கு இயந்திரங்களை வாங்கி தொழிலை விரிவாக்கினோம் சென்னையின் இந்த பொருட்களை தயாரிக்க இரண்டு மூன்று பேர்தான் உள்ளனர் என்பதால் அடுத்த கட்டமாக தானியங்கி இயந்திரங்களோடு தொழிலை விரிவாக்க திட்டமிட்டு வரு கிறேன். தவிர மூலப் பொருளான நான் ஓவன் துணி தயாரிப்பில் ஒரு சில உற்பத்தி யாளர்களே உள்ளனர். அதை தயாரிக்கும் திட்டமும் உள்ளது. தற்போது பத்து பேர் வேலை பார்க்கின்றனர். என் கணவரும் இப்போது மார்க்கெட்டிங் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

பெண்கள் தங்களுக்கு என்ன தெரியும் என்று முடங்கிக் கொண்டிருப்பதைவிட தெரிந்த தொழிலில் சாமர்த்தியமாக முன்னேற வேண்டும். உங்களால் குடும்பம் உயருகிறது என்றால் எல்லோரும் உங்களுடன்தான் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-தெரிந்த-தொழிலில்-சாமர்த்தியம்-வேண்டும்/article8834372.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: கல்லூரி வேலையை விட்டு களத்துக்கு...

வி.செரியன், ஒமேகா எக்கோடெக் புராடக்ட்ஸ், கோயம்புத்தூர்.
வி.செரியன், ஒமேகா எக்கோடெக் புராடக்ட்ஸ், கோயம்புத்தூர்.

கோவையில் வசித்து வருகிறார் செரியன். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர். பொள்ளாச்சியில் விவசாய பண்ணையும், கோவை சரவணம்பட்டியில் தொழில் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ‘தொழில் நிறுவனம் என்று சொல்வதை விட, எனது கனவு என்று சொல்லுங்கள்’ என்று குறிப்பிடுகிறார். நுண்ணுயிர் தொழில்நுட்பத்தின் மூலம் கழிவு மேலாண்மை முறையில் இயற்கை உரங்கள் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

கோட்டயத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விவசாயக் குடும்பம் என்பதால் அது சார்ந்த வேலைகளும் எனக்கு அத்துபடி. தவிர நான் படித்ததும் உயிரித் தொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) பட்டம்தான். எனவே அதை சார்ந்த முயற்சிகளையும் விவசாயத்தில் மேற்கொள்ள ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் அப்போதைய சூழ்நிலை காரணமாக கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது.

அப்போது எனது நண்பர்கள் சிலர் பொள்ளாச்சி பக்கம் இருந்தனர். அவர்களை சந்திக்க அடிக்கடி செல்வேன். தவிர செல்லும்போதெல்லாம் பொள்ளாச்சி அருகில் சில தரிசு நிலங்கள் விலைக்கு கிடைக்க அதை வாங்கினேன். அப்போது அந்த தரிசு நிலங்கள் உடனடியாக பயிர் செய்ய முடியாத நிலைமையில்தான் இருந்தது. ஏனென்றால் அந்த மண்ணின் தரம் அப்படி. எனக்கு பயோ டெக்னாலஜி குறித்த அனுபவமும், ஆர்வமும் இருந்ததால் நுண்ணுயிர்கள் மூலம் அந்த மண்ணின் தரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டேன். அப்போது பொள்ளாச்சி பக்கம் தேங்காய் மட்டைகளில் இருந்து கயிறுக்கு நார் எடுத்த பிறகு கிடைக்கும் கழிவை குப்பைக்குத்தான் போடுவார்கள். எதற்கும் பயன்படுத்தாமல் குப்பைகளோடு சேர்ந்து எரித்து விடுவார்கள். இப்போதுதான் ‘பித்’ என்கிற வகையில் அது மதிப்புக் கூட்டப்பட்டு விற்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அது குப்பைதான். அவற்றை தென்னை விவசாயிகளிடமிருந்து வாங்கி வந்து நிலங்களில் பரப்பி அதற்கு சில நுண்ணுயிர்கள் மூலம் செறிவூட்டினேன்.

அதன் பிறகு எனது நிலங்கள் பயிர் செய்வதற்கு ஏற்றதாக மாறியது. அந்த நிலங்களில் நான் பயிர் செய்யத்தொடங்கியதும், அக்கம் பக்கம் உள்ள நிலத்துக்காரர்களும் என் தொழில்நுட்பத்தைப் பார்த்து என்னை அணுகத் தொடங்கினர். அவர்களுடன் குழுவாகச் சேர்ந்து முயற்சிகளை மேற்கொண்டதில் இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த முடிந்தது.

இந்த நிலையில் எனது விவசாய ஆர்வம் காரணமாகவும், நுண்ணுயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் காரணமாகவும் கல்லூரி வேலையை விட முடிவு செய்தேன். வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. வேண்டாத வேலை என்றனர். ஆனால் நான் வேலையை விடுவதில் முடிவாக இருந்தேன். அதற்கு பிறகு கோவை வேளாண்மைக் பல்கலைக் கழகத்தில் இயற்கை கழிவுகள் மேலாண்மையில் ஆராய்ச்சி படிப்புக்குச் சேர்ந்தேன்.

எனது நிலத்தின் நுண்ணுயிர் ஊட்டங்களுக்கு எடுத்த முயற்சிகளை வைத்து, அதிலிருந்து இயற்கை உரங்கள் தயாரித்து அவற்றை விற்பனை செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டேன். அது வியாபார ரீதியாக வெற்றிபெற்றது. அதற்கான ஏற்றுமதி வாய்ப்புகள் வந்தது. மேலும் நிலத்தில் விளைவதை விற்பனை செய்யவும் விவசாயிகள் குழுவாக சேர்ந்து இயங்கத் தொடங்கினோம். இதற்காக தனி நிறுவனமாகவும் பதிவு செய்தோம்.

இதற்கிடையே கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்த எனது நண்பர் தமிழ்ச்செல்வனோடு சேர்ந்து வேறு சில இயற்கை நுண்ணுயிர் உரங்களைத் தயாரிக்கவும் இறங்கினோம். எனது இந்த முயற்சிகள் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கோவைக்கே குடும்பத்துடன் வந்துவிட்டேன்.

கழிவு மேலாண்மை என்கிற தொழில்நுட்பம் இப்போதுதான் பரவலாக கவனம் பெற்று வருகிறது. இதன் மூலம் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும். கோழி இறைச்சி கழிவைக்கூட நாற்றம் இல்லாமல் மக்க வைத்து தரமான உரத்தை தயாரிக்க முடியும்.

இப்போது எனது பண்ணையில் மட்டுமல்லாமல், இயற்கை நுண்ணுயிர் தயாரிப்பிலும் சேர்த்து 30 பேர் வேலைபார்க்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தை பலருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எனக்கு பிடித்தமான வேலையை, நான் உருவாக்கிய சூழலிலிருந்தே மேற்கொள்ளும் வாய்ப்பை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். இதுதான் வாழ்க்கையின் அர்த்தமாக உணர்கிறேன் என்றார்.

நல்ல செயல்களுக்கு எங்கும் எப்போதும் வரவேற்பு கிடைக்கட்டும்.

எனக்கு பயோ டெக்னாலஜி குறித்த அனுபவமும், ஆர்வமும் இருந்ததால் நுண்ணுயிர்கள் மூலம் அந்த மண்ணின் தரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டேன்.

தொடர்பிற்கு maheswaran.p@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-கல்லூரி-வேலையை-விட்டு-களத்துக்கு/article8896644.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: தெளிவான இலக்கே வெற்றியை தேடித்தரும்

unnaal1_2954722f.jpg
 

சென்னை செளகார்பேட்டையில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் ஆரிபா கான், சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சென்னைக்கு உயர்கல்விக்காக வந்தவர் இங்கேயே தொழில் நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஆண்கள் கோலோச்சும் ஒரு துறையில், சவால்களைக் கடந்து வெற்றி பெற்ற அனுபவத்தை இந்த வாரம் ‘வணிக வீதி’ இணைப்பிதழுக்காக பகிர்ந்து கொண்டார்.

திருப்பதியில் உள்ள கல்லூரியில் எம்எஸ்சி இயற்பியல் படித்தேன். பிறகு சென்னை பல்கலைக்கழகத்துக்கு எம்பிஏ படிக்க வந்தேன். இங்கு படித்துக் கொண்டிருக்கும்போதே போர்டு நிறுவனத்தில் வளாகத் தேர்வில் வேலை கிடைத்தது. எம்பிஏ முடித்ததும் அந்த வேலையில் சேர்ந்தேன். ஆனால் சில மாதங்கள் மட்டுமே அந்த வேலையில் இருந்தேன். எனது உறவினர் ஒருவர் பிவிசி லைனிங் ஒயர்கள் செய்து வந்தார். அவ்வப்போது அவரது நிறுவனத்துக்கு சென்று வந்த வகையில் நாம் ஏன் சொந்த தொழிலைத் தொடங்கக்கூடாது என்கிற யோசனை வந்தது. அவரது வழிகாட்டுதலில் பிவிசி தொழிலில் இறங்கலாம் என முடிவெடுத்தேன்.

பொதுவாக இந்த துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம், தவிர போட்டிகளும் அதிகம். இதில் தொழில் தொடங்கி நிற்க வேண்டும் என்றால் தன்னம்பிக்கையும், தைரியமும் முக்கியம். தவிர நான் சென்னையிலேயே தொழில் தொடங்க திட்டமிட்டதும் வீட்டினரை கவலையடையச் செய்தது. அம்மா அப்பா, கணவர் எல்லோரும் சொந்த ஊரில் இருக்க இங்கு தொழில் தொடங்குவது என்பது சாதாரண விஷயமாக இல்லை. எனது மூத்த சகோதரி சென்னையில் பல ஆண்டுகளாக பணிபுரிவதால் அவரது பக்கபலமும் அந்த நேரத்தில் தைரியம் கொடுத்தது. எனது சேமிப்பு மற்றும் வீட்டினர் கொடுத்த சிறிய முதலீட்டை வைத்து முதலில் ஒரு இயந்திரம் வாங்கி மூன்று நபர்களுடன் தொழிலைத் தொடங்கினேன்.

ஸ்கூல் பைகள் தயாரிப்பதற்குத் தேவையான லைனிங் ஒயர்களை முதலில் தயாரித்தேன். இதற்கு சில்லரை விற்பனையாளர்கள் கிடையாது. மொத்த விற்பனையாளர்களிடம்தான் விற்பனை செய்ய வேண்டும். நான் பெண் என்பதால் பலரும் கொள்முதல் செய்ய தயங்கினர். மேலும் கொள்முதல் செய்த பிறகு பணத்தை திருப்பி அளிப்பதற்கு நாட்களைக் கடத்துவார்கள். தவணைக் காலம் ஒரு மாதம் என்றால் 2 மாதம் ஆக்குவார்கள். இப்படி நடைமுறை நெருக்கடிகள் இருக்கும். தவிர தொழிலுக்கு நானும் புதிது என்பதால் தயாரிப்பு நஷ்டங்களும் இருக்கும்.

இந்த நிலையில் தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வங்கிக் கடனுக்கு அணுகினேன். எனது திட்ட அறிக்கைகளை பார்த்து கடன் வழங்க கர்நாடகா வங்கி முன்வந்தது. மேலும் தமிழக அரசின் மானிய உதவியும் கிடைத்தது. இந்த முதலீடுகளை வைத்து அடுத்தடுத்து இரண்டு இயந்திரங்களை வாங்கினேன். இப்போது பனிரெண்டு தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இப்போது கார்ப்பரேட் ஆர்டர்கள், மொத்த விற்பனையில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இதற்கான மார்க்கெட்டிங் வேலைகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன்.

பொதுவாக பெண்கள் இதுபோன்ற சவால் நிறைந்த வேலைகளில் ஈடுபடாத தற்கு காரணம் அவர்களின் குடும்பமாகத் தான் இருக்கும். எனது தொடர் முயற்சிகளுக்கு பிறகு எனது குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருந்தனர். இப்போது கணவர் மட்டும் ஆந்திராவில் இருக்க அப்பா அம்மா குழந்தைகள் என இங்கே குடிவந்துவிட்டோம். வேலை நாட்களில் இரவு வீட்டுக்கு போவதற்கு பதினோரு மணிகூட ஆகலாம். ஒரு பெண்ணாக குழந்தைகளை கவனிக்க முடியவில்லையே என்கிற வருத்தம் இருந்தாலும், நான் எனது சொந்த காலில் நிற்கிறேன் என்பதும், அவர்களது எதிர்காலத்துக்காகத்தானே என்கிற நம்பிக்கையும் என்னை உற்சாகப்படுத்தும். தவிர ஞாயிற்றுகிழமையை அவர்களுக்கு என்று ஒதுக்கியும் சமாளித்து கொள்கிறேன்.

இப்போது பிவிசி லைனிங் ஒயர் தவிர, குப்பைகளை சேகரிக்கும் கவர் மற்றும் பிவிசி கிரானுவல்ஸ் போன்றவற்றையும் தயாரிக்கிறேன். கிலோவுக்கு 50 காசு குறைத்தால்கூட இந்த தொழிலில் ஒரு தொழில்முனைவோரை ஓரம் கட்டிவிட முடியும். அவ்வளவு போட்டிகளுக்கு மத்தியிலும் தொழிலில் நிற்க முடிகிறது என்றால் நமது பார்வை தெளிவாக இருக்க வேண்டும். எந்த சமரசமும் இல்லாமல் தொழிலில் சரியாக இருந்தால் எத்தனை போட்டிகளையும் சமாளிக்கலாம். முக்கியமாக பெண் தொழில்முனை வோர்களுக்கான ஊக்குவிப்பில் ஆந்திரா அரசை விடவும் தமிழக அரசின் உதவிகள் சிறப்பாக உள்ளது என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள் என்றார். தமிழக பெண் தொழில்முனைவோர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

பொதுவாக இந்த துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம், தவிர போட்டிகளும் அதிகம். இதில் தொழில் தொடங்கி நிற்க வேண்டும் என்றால் தன்னம்பிக்கையும், தைரியமும் முக்கியம்.

நீரை மகேந்திரன் - maheswaran.p@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-தெளிவான-இலக்கே-வெற்றியை-தேடித்தரும்/article8927457.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: அனுபவம் அடுத்த கட்டத்துக்கு வழிநடத்தும்

suba_2963882f.jpg

சென்னை பெருங்குடியைச் சேர்ந் தவர் சுப. வயது 22. பிபிஏ படித்து முடித்ததும் சுயமாக நிற்க வேண்டும் என திட்டமிட்டவர். இன்று 6 பேருக்கு வேலை அளிக்கும் தொழில் முனைவோராக உருவாகி நிற்கிறார். பல போட்டிகள் இருக்கும் சேவைத்துறையில் தனது புத்தாக்கமான எண்ணத்தின் மூலம் முன்னேற்றமடைந்து வரும் வளரும் தொழில்முனைவோரான இவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

சென்னையில்தான் படித்தேன். வசதி யான குடும்பம். அம்மா ஒரு பொதுத்துறை வங்கியில் கிளை மேலாளராக உள்ளார். அப்பா வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். நான் கல்லூரி படிப்பு முடித்ததும் மேற்படிப்பு படிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன. வீட்டினரும் வலியுறுத்தினர்.

ஆனால் எனக்கு தொழிலில் இறங்கிவிட வேண்டும் என்கிற உத்வேகம்தான் இருந்தது. இந்த வயதில் நேரடியாக உற்பத்தி துறை சார்ந்த தொழில் களைத் திட்டமிடமுடியாது. இதனால் சேவைத்துறை சார்ந்த பணிகளில் இறங்க யோசித்தேன்.

தற்போது வரை டோர் டெலிவரி என்கிற பிரிவில் மூன்றாவது நபர்கள் ஈடுபடுவதில்லை. அதாவது டோர் டெலிவரி வேண்டும் என்று போன் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். இடையில் ஒருவர் வாங்கி வந்து கொடுக்கும் வேலையைச் செய்வதில்லை. அந்த இடம் காலியாக இருந்தது.

இதை மேற்கொள்வதற்கு முன் டோர் டெலிவரி வசதியில்லாத, சிறு விற்பனை யாளர்கள், சிறு உற்பத்தியாளர்களது தொடர்பு வேண்டும். அதாவது அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க வேண்டிய பொருளை எங்களி டம் கொடுப்பது அதை நாங்கள் வாடிக் கையாளர் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது. இதற்காக பல விற்பனையகங்களை ஆய்வு செய்து சிறு உற்பத்தியாளர்களின் பட்டியலை எடுத்தேன்.

அவர்களை நேரடியாகச் சந்தித்து ‘நான் படித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்ய இறங்கியுள்ளேன். வெற்றி பெற வேண்டும் என்கிற வேகம் உள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை தாருங்கள்’ என்கிறபோது பலரும் ஏற்றுக் கொண்டனர்.

அதுபோல இன்னொரு பக்கம் சென்னை யின் பல வீடுகளில் தங்களின் அவசியமான சில வேலைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியாத சூழலில் இருப்பார்கள். வீட்டில் உள்ள வயதானவர்களை அல்லது செல்லப் பிராணிகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆனால் நேரம் இருக்காது. இதற்காக நாட்களை தள்ளிப்போடுவார்கள். அல்லது அவசரத்துக்கு நண்பர்கள் உறவினர்களை உதவிக்கு கூப்பிடுவார்கள். இதிலும் தொழில்வாய்ப்பு உள்ளதை அறிந்தேன். அதுபோல பிற வேலைகளுக்கும் மாத ஒப்பந்தம் செய்து கொள்வது. இதை முதலில் எனது நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் செயல்படுத்தினோம்.

வெற்றிகரமாக அமைந்தது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்களின் அவசரப்பணிகளின் சுமை குறைந்தது. தவிர இதற்கென்று தனியாக வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இதற்கான முதற்கட்ட பயிற்சிகளில் இறங்கினேன். என் நண்பர் ஒருவரும் உடன் உதவி செய்தார். தொழில் தொடங்கிய முதல் மூன்று மாதங்கள் கடும்போராட்டம்தான். எங்களுக்கு வாய்ப்புகளைக் கொடுங்கள் என தொழில் முனைவோர்களை அணுகுவோம். ஆனால் என்னுடைய வயதை வைத்து உன்னால் முடியுமா என்பதைப் போல பார்ப்பார்கள். என்னுடைய உறுதியான பேச்சு மற்றும் வேகத்தை பொறுத்து இப்போது பலரும் தொடர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

தற்போது சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை செய்து வருகிறேன். ஒருபக்கம் நிறுவனங்களுக் கான டோர் டெலிவரி சேவை, இன்னொரு பக்கம் வீடுகளுக்கான சேவைகள் என செய்து வருகிறோம். தற்போது கிட்டத்தட்ட நிரந்தரமாக 50க்கும் மேற்பட்ட வீடு சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களை கையில் வைத்துள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் இதை 200 வாடிக்கையாளர் களாக உயர்த்த வேண்டும் இலக்கு வைத் துள்ளேன். தற்போது 6 பேர் பணி புரிந்து வருகின்றனர்.

உயர்கல்வி முடித்தால் நல்ல சம்பளத் தில் வேலை கிடைக்கும் என்கிற யோசனை களை பலரும் சொல்லத்தான் செய்தனர். ஆனால் எனது சொந்த உழைப்பில் ஒரு நிறு வனத்தை உருவாக்குகிறேன் என்பதும், அதிலிருந்து எனக்கான வருமானம் வருகிறது என்பதும் தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. நானும் இதிலிருந்தபடியே உயர்கல்வியை கற்றலாம். தவிர எதிர்காலத் தில் உயர்கல்வி முடித்தவர்களை என் நிறுவனத்திற்கே பணிக்கும் அமர்த்தலாம். எனது அனுபவம் என்னை அடுத்த கட்டத் துக்கு வழிநடத்தும் என்றார். உங்கள் எண்ணப்படியே நடக்கட்டும் சுப.

maheswaran.p@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-அனுபவம்-அடுத்த-கட்டத்துக்கு-வழிநடத்தும்/article8958940.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும் : நம்பிக்கை கொடுத்த புதிய முயற்சிகள்

neerai_004_2973048g.jpg

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஃபர், தற்போது சென்னை பாரிமுனையில் கொசுவலை சார்ந்த தொழில் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டிருக்கும் இவரது அனுபவம் இந்த வாரம்’ வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமா படித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தேன். நுங்கம்பாக்கத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மாதம் 2,000 ரூபாய்தான் சம்பளம் அதிலும் முதலிரண்டு மாதங்கள் சம்பளமில்லை. அந்த நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது இப்படியே இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்காது. தவிர எனது கல்வித் தகுதிக்கு வேறு நல்ல வேலையும் கிடைக்காது என்பதை உணர்ந்தேன். வீட்டிலிருந்து பணம் வாங்கி படிக்க முடியாத சூழ்நிலையில் அந்த கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து விலகி, வேறு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு மாறிவிட்டேன்.

கடைசியாக சின்டெக்ஸ் நிறுவனத்தின் பிவிசி கதவுகளுக்கான மார்க்கெட்டிங் வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு அது நல்ல வாய்ப்பாக தெரிந்ததால் அந்த வேலையில் நான் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினேன். நிறுவனத்திலும், டீலர்கள், விற்பனையாளர்களிடத்திலும் நல்ல பெயர் உருவாக்கிக் கொண்டேன். ஆனாலும் அங்கு ஏற்பட்ட ஒரு குழப்பம் காரணமாக நானும் எனது நண்பர்கள் சிலரும் வேலையிலிருந்து விலகினோம்.

இந்த சமயத்தில் என்மேல் நல்ல அபிப்ராயம் வைத்திருந்த டீலர் ஒருவர் கொசுவலை பிசினஸ் குறித்த யோசனையைச் சொன்னார். இங்கு ஏற்கெனவே உள்ள நைலான் கொசுவலை இல்லாமல், கதவுகள், ஜன்னல்களுக்கு வெல்க்ரோ வைத்து தைக்கப்படும், பிவிசி, பைபர் கொசுவலைகளின் தேவைகள் குறித்து விளக்கினார்.

எனக்கு அப்போது உடனடியாக வேலை வேண்டும் என்பதால் அந்த தொழிலில் இறங்கினேன். ஆனாலும் இதில் வர்த்தக வேலைகளை மட்டுமே பார்த்தேன். இந்த வலைகள் சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி கிடையாது. ஒன்றரை ஆண்டுகள் இதை வாங்கி விற்கும் மார்க்கெட்டிங் வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வலைகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வெட்டி, வெல்க்ரோ தைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள். ஒரு கட்டத்தில் நாமே இந்த வேலைகளையும் செய்தால் என்ன என்கிற யோசனை வந்தது. உதவிக்கு ஒருவரை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டு நானே இந்த வேலைகளிலும் இறங்கினேன். வெல்க்ரோ தவிர இதர பிரேம்களிலும் கொசுவலைகள் வைத்து கொடுக்க முடியும் என எனது முயற்சிகளிலேயே கற்றுக் கொண்டேன். தவிர ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினாலான கொசுவலைகளையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தேன். இதற்கான மார்க்கெட்டிங் உத்திகளும் எனக்கு தெரியும் என்பதால் விரைவிலேயே தொழிலில் பரபரப்பாகிவிட்டேன். இப்போது வீடுகளுக்காக ஆர்டர்கள் தவிர கல்லூரி விடுதிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது.

இந்த தொழிலுல் பல ஆண்டுகள் அனு பவம் கொண்டவர்களுக்கு மத்தியில் நானும் பரபரப்பானற்கு முக்கிய காரணம் புதிய முயற்சிகள்தான். கொசுவலைகளில் வெல்க்ரோ தவிர காந்த ஸ்ரிப்புகள், எலாஸ்டிக், என பல வகைகளில் கொடுக் கிறேன். தரம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சதுர அடி ரூ.20 முதல் 300 ரூபாய் வரையிலுமான கொசுவலைகள் உள்ளன. இப்போது பத்து நபர்களுக்கு வேலை கொடுத்து வருகிறேன். என்னிடம் வேலை பார்த்த சிலர் தங்களது சொந்த ஊருக்கே சென்ற பிறகு, அங்கு இதை வேலை வாய்ப்பாக எடுத்து செய்து வருகின்றனர், அவர்களுக்கும் மெட்டீரியல் அனுப்பி வைக்கிறேன்.

இந்த தொழிலில் நமது உள்ளூர் போட்டியாளர்களைகூட சமாளித்துவிட முடியும். ஆனால் பைபர் வலையை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனமே இங்கு நேரடியாக வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கிறது. அவர்களை சமாளிப் பதுதான் சிரமம். இன்னொருபக்கம் வங் கிக் கடன் கிடைத்தால் தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்ய முடியும். ஆனால் வட்டியில்லாத முறையில் வங்கிக்கடன் வாங்க முடியாது என்பதால் அடுத்த கட்டங் களுக்கு மெதுவாகத்தான் செல்கிறேன்.

இரண்டு நபராக ஆரம்பித்த தொழிலில் இப்போது பத்து பேருக்கு வேலை இருக்கிறது. அதை இன்னும் அதிகரிப்பேன் அந்த நம்பிக்கை இருக்கிறது என்றார். புதிய முயற்சிகள் எப்போதும் தோல்வியடைவதில்லை ஜாஃபர் வாழ்த்துக்கள்.

இந்த தொழிலில் நமது உள்ளூர் போட்டியாளர்களைகூட சமாளித்துவிட முடியும். ஆனால் பைபர் வலையை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனமே இங்கு நேரடியாக வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கிறது. அவர்களை சமாளிப் பதுதான் சிரமம்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-நம்பிக்கை-கொடுத்த-புதிய-முயற்சிகள்/article8990982.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினேன்

some_2982007f.jpg

பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ பட்டதாரி ஒருவரை கண்ணாடி பிரேம் மாட்டும் சிறிய கடையை கவனித்துக் கொள்ளச் சொன்னால் என்ன நினைப்பீர்கள் நீங்கள்... ஆனால் அந்த கடையின் விதியை மாற்றியவரின் கதை இது. பழனியைச் சேர்ந்த கௌதம் சங்கர், தவிர்க்கவியலாமல் அப்பாவின் தொழிலை மேற்கொள்ள வேண்டிய சூழலில், அதை தலைகீழாக மாற்றி தனது திறமையை நிரூபித்துள்ளார். ‘இவ்வளவுதான் வேலை’ என இருந்த கடையை இன்று வெளிநாட்டு ஆர்டர்களை வாங்கும் நிறுவனமான மாற்றிய இவர் தனது அனுபவத்தை ‘`வணிக வீதி’’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

படித்தது வளர்ந்தது எல்லாம் பழனி. தந்தை சாமி படங்களுக்கு கண்ணாடி பிரேம் மாட்டும் கடை வைத்திருந்தார். பழனியில் மட்டுமே பிசினஸ் என்பதால் பெரிய வருமானம் இருக்காது. இங்குள்ள சாமி பட விற்பனையாளர்களுக்கு அவற்றை கொடுத்துக் கொண்டிருந்தார். கூடவே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தேர்வு அட்டை (கிளிப் பேட்) தயாரித்து மொத்த வியாபாரிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். ரொம்பவே சின்ன அளவில்தான் செய்து வந்தார். ஐந்து பேர் அவரிடம் வேலை பார்த்தனர். ஓரளவு நடுத்தர குடும்பம் என்பதால் சிரமமில்லாமல்தான் பி.இ. முடித்தேன்.

கேம்பஸ் பிளேஸ்மெண்ட் கிடைத்திருந் தது. 2011ல் வேலைக்கு செல்லத் தயாராக இருந்த நாட்களில், அப்பாவின் கடையை கவனிக்க வேண்டிய சூழல் அமைந்தது. வீட்டின் ஒரே பையன், இதனால் வீட்டை கவனித்துக் கொள்ளவும் அப்பாவுக்கு துணையாக இருக்கவும் முடிவெடுத்தேன்.

ஆனால் அப்பா செய்து கொண்டிருக்கும் வேலைகளையே நானும் செய்து கொண்டிருக்க முடியாது. வருமானம் போதாது என்பது மட்டுமல்ல, போட்டோ பிரேம்களில் ரெண்டு மாடல்களுக்கு மேல் வைத்திருக்கவில்லை. அதிக டிசைன், அதிக விலை கொண்ட பிரேம்கள் எல்லாம் இங்கு விற்பனை ஆகாது என்கிற எண்ணத்தில் அவர் இருந்தார். ஆனால் எனக்கு இது போதாது என்று தோன்றியது. பெரிய அளவில் இறங்கினால்தான் நான் இந்த தொழிலிலேயே ஈடுபட முடியும் என்று எனக்குத் தோன்றியது. பொதுவாக இந்த தொழிலில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள தயாரிப்பாளர்கள்தான் விலையைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அது போன்ற ஒரு இடத்தை பழனியிலிருந்து நான் உருவாக்க வேண்டும் என திட்டமிட்டேன். இதற்காக ஆறு மாதங்கள் இந்த தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

பிரேம், கண்ணாடி உள்ளிட்ட மூலப் பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். இதற்காக இந்தியாவின் 24 மாநிலங் களுக்கு பயணம் செய்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களுக்கும் ஆர்டர்கள் பிடிக்க அலைந்திருக்கிறேன். ‘வந்துட்டாங்க.. இதே வேலையா போச்சு’ என்று நம் காதுபடவே பேசுவார்கள் ஆனால் இதுகுறித்து கவலைப்பட்டால் சந்தையை பிடிக்க முடியாது என வேலை பார்ப்பேன். லாபமில்லாமல் அடக்க விலைக்கே ஆர்டர் எடுப்பேன். இதனிடையே கரூர் வைஸ்யா வங்கியின் கடனுதவி கிடைத்ததும் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது.

தற்போது 45 நபர்கள் வேலை செய்கின்றனர். கிட்டத்தட்ட 400 வகையான பிரேம் மாடல்கள் கொண்டு படங்களைத் தயாரிக்கிறோம். நம்ம ஊர் சாமி படங் களுக்கு வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போதுகூட பிரான்சில் உள்ள தமிழர்கள் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர்.

தவிர தென்மாவட்டங்களில் இப்போது முக்கிய விற்பனையாளராகவும் வளர்ந் திருக்கிறேன்.

இன்னொரு பக்கம் தேர்வு அட்டைகளிலும் புதிய முயற்சிகள் செய்தேன். பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று ஆர்டர் எடுத்தேன். குழந்தைகளின் புகைப்படம், வகுப்பு விவரங்களை அதிலேயே அச்சிட்டு கொடுத்தேன். இதிலும் புது டிசைன்கள், படங்கள் என பிரிண்ட் செய்தேன்.

அதுபோல நகைக் கடைகளில் நகைப் பெட்டியில் தங்களது கடையின் பெயரை அச்சிட்டு கொடுப்பார்கள். இந்த நகைப் பெட்டிகளை அழகான பிரேம்களில் வாடிக்கையாளர்களின் பெயரை அச்சிட்டு கொடுத்தால் ஈர்ப்பாக இருக்கும் என ஐடியாவை சில நகைக்கடைகளில் சொல்ல அதற்கும் நல்ல வரவேற்பு. இப்படி பல புதிய முயற்சிகளில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு கொண்டு வந்து விட்டேன். இங்கேயெல்லாம் இதெல்லாம் விற்காது என்று அவராகவே முடிவெடுத்தார் அப்பா. ஆனால் நான் பல வாய்ப்புகளை வழங்கி வாடிக்கையாளர்களை முடிவெடுக்க வைத்தேன். இதுதான் எனது வெற்றிக்கு காரணம். பழைய தொழிலாக இருந்தாலும் புதிய சிந்தனைகளால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக நிற்கிறார் கௌதம்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வாடிக்கையாளர்களுக்கு-வாய்ப்புகளை-வழங்கினேன்/article9017001.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: முயற்சிகளை ஊக்குவிக்கும் சென்னை

bumber_2999631f.jpg

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் கார்த்திக். எம்ஐடி குரோம் பேட்டையில் பொறியியல் பட்டமும், ஷில்லாங் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வியும் முடித்துவிட்டு காக்னிஸெண்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர். தனது கார் டயர் பஞ்சரானதில் ஒரு நாள் சந்தித்த அவஸ்தைகளை யோசித்து தொடங்கிய நிறுவனம் கோ பம்பர் டாட் காம். தொழில்நுட்பம் மூலம் மெக்கானிக்குகளை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு கார் மற்றும் டூ வீலர் சர்வீஸ் தேவைகளை நிவர்த்தி செய்து தருகிறது இந்த தளம். சென்னையின் புதுமையான இவரது தொழில் முயற்சியின் அனுபவத்தை இந்த வாரம் ‘வணிக வீதி’ வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

சென்னை திருவல்லிகேணிதான் பூர்வீகம். நான் பொறியியல் படித்துவிட்டு ஒரு ஆண்டு லீயர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். அதனால் கார் சர்வீஸ் குறித்த அனுபவம் கிடைத்தது. அதற்கு பிறகு ஷில்லாங் ஐஐஎம்-ல் படித்துவிட்டு காக்னிஸெண்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த சமயத்தில் ஒரு நாள் எனது கார் டயர் பஞ்சராகிவிட்டது. சரி ஸ்டெப்னி டயரை வைத்து சமாளித்து விடலாம் என்றால் ஸ்டெப்னியும் பஞ்சர். ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் காரை சர்வீஸ் செய்திருந்தேன். அது கார் நிறுவனத்தின் நேரடி சர்வீஸ் செண்டர் என்பதால் அவர்களிடம் போன் செய்து விசாரித்தேன்.

அவர்களோ ஸ்டெப்னி டயர் பஞ்சர் போடுவது சர்வீசில் சேராது, அதை உங்களுக்கு நோட் செய்து கொடுத்துள்ளோம் என்று கூறினர். அந்த நாளில்தான் எனது தொழில் முயற்சி யோசனை உருவானது என்று சொல்லலாம். இப்படியான அனுபவம் இந்தியா பிராப்பர்டி டாட் காம் நிறுவனத்தில் வேலை பார்த்த எனது நண்பர் சுந்தருக்கும் இருந்தது. இதனால் இது போன்ற அனுபவங்களைச் சந்தித்த பலருக்கு தீர்வாக ஒரு பிசினஸ் மாடல் யோசிக்க தொடங்கினோம். என்னோடு ஷில்லாங்கில் படித்த நந்தகுமாரும் இந்த யோசனையில் இணைந்தார். அவர் சுஸ்லான் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியவர். எனவே தொழில்நுட்பம் மூலம் இந்த தொழிலை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினோம்.

பொதுவாக கார் வைத்திருப்பவர்கள் அவரச தேவைக்கு அருகிலுள்ள மெக்கானிக்குகளை போன் செய்து அழைப்பது நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் மெக்கானிக்குகள் சர்வீஸ் தொடர்பான ஒவ்வொரு தேவைகளுக்கும் நேரம் காலம் பார்க்காமல் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்வது சிலருக்கு தொந்தரவாகவும் அமையும். ஆனால் மெசேஜ் / சாட்டிங் மூலம் தகவல் கொடுப்பதை வாடிக்கையாளர்கள் விரும்புவதை எங்கள் சர்வே மூலம் அறிந்தோம். இதனால் இதை இரண்டையும் ஒருங்கிணைக்கும் விதமாக ஆப்ஸ் உருவாக்க தொடங்கினோம்.

தவிர நிறுவனங்களின் நேரடி சர்வீஸ் செண்டர்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் இருப்பதில்லை. அதே சமயத்தில் எல்லா மெக்கானிக்குகள் மீதும் நம்பிக்கை வைப்பதும் இல்லை. இதனால் ஒவ்வொரு ஏரியாவிலும் அனைத்து வசதிகளும் வைத்துள்ள, நல்ல பெயரெடுத்த கார் மற்றும் டூ வீலர் மெக்கானிக்குகளை இந்த ஆப்ஸில் ஒருங்கிணைக்கவும் முடிவெடுத்தோம். மூவரும் ஒரே நேரத்தில் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு தொழிலை தொடங்கினோம்.

மெக்கானிக் ஷெட்டுகளுக்கு சென்று எங்களது முயற்சிகளை விளக்கினோம். ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் காரை சர்வீஸ் செய்வதற்கான கோரிக்கை, அதிலேயே கொட்டேஷன் அனுப்புவது, தவிர என்ன வேலை செய்துள்ளீர்கள் என்பதை ஆன்-டைம் புகைப்படம் எடுத்து அனுப்பி விட்டால் வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையும் அதிகரிக்கச் செய்ய லாம் என விளக்குவோம். கிட்டத்தட்ட சென்னையில் எல்லா ஏரியா மெக்கானிக் செண்டர்களையும் அணுகியதில் சுமார் 900 பேரை ஒருங்கிணைத்துள்ளோம்.

இன் னொரு பக்கம் இந்த ஆப்ஸை பேஸ்புக், டிவிட்டர், கூகுள் போன்ற சமூக வலைதளங் கள் மூலமும் கொண்டு சென்றோம். ஆறு மாத தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எங்களது நிறுவனத்தை தொடங்கினோம். தற்போது 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் எங்க ளது செயலியை வைத்துள்ளனர். மாதத் துக்கு 2000 வாடிக்கையாளர்கள் புதிதாக இணைகின்றனர். தினசரி 30 வாடிக்கை யாளர்களாவது பயன்படுத்துகின்றனர். இப்போது 17 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம்.

அடுத்ததாக கோயம்புத்தூரில் வேலை களை தொடங்கியுள்ளோம். பெங்களூருவில் தொடங்கும் முயற்சிகளிலும் உள்ளோம். இதன் மூலமே உதிரிபாகங்கள் விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த துறையில் ஆப்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது முதலில் நாங்கள்தான் என்பதால் இதை மிகப் பெரிய நிறுவனமாக கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நிறுவனங்களில் போதுமான சம்பளத்தை துறந்துவிட்டுதான் இந்த முயற்சிகளில் இறங்கினோம். இந்த சின்ன செடிக்கு எங்களது உழைப்புதான் உரம். அதை வளர்ப்பதில் சென்னைக்கும் பங்கு இருக்கிறது என கோரஸாக முடிக்கின்றனர் நண்பர்கள் மூவரும்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-முயற்சிகளை-ஊக்குவிக்கும்-சென்னை/article9074628.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: சொந்தத் தொழிலிலும் இலக்கு வேண்டும்...

unnal_3007518f.jpg
 

சென்னை முடிச்சூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். படித்தது பத்தாம் வகுப்பு. குடும்ப சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்பதால் பல்வேறு சிறு சிறு வேலை களுக்கும் சென்று கொண்டிருந்தவர்... இன்று ஆறு நபர்களுக்கு வேலையளிக்கும் தொழில்முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அக்ரலிக் பெட்டிகள், டிஸ்பிளே ஸ்டாண்டுகள், நேம் பேட்ஜ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழில் புரியும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. ஆனால் நாங்கள் ஆங்கிலோ இந்தியன் குடும்பம் என்பதால் ஆங்கிலம் சரளமாகப் பேசுவேன். அப்பாவுக்கு பெரிதாக வருமானமில்லாத காரணத்தினால் நான் அதற்கு பிறகு சின்ன சின்ன வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். அப்படி பல வேலை களுக்குப் பிறகு கடைசியாக மார்க்கெட்டிங் வேலை செய்து கொண்டிருந்தேன்.

நானும் எனது நான்கு நண்பர்களும் சேர்ந்து பாரீஸ் சந்தையில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்து ஏரியாக்களில் நேரடியாக விற்பனை செய்தோம். ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருந்தன. யார் என்ன என்பது தெரியாமல் பல நெருக்கடிகள் அந்த தொழிலில் உருவானது. இதனால் வாழ்க்கை மீதான பயம் ஏற்பட்டது. இப்படியே இருந்தால் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாது என்கிற பயம் இருந்தது.

அந்த யோசனை எழுந்த நாட்களில் ஒருநாள் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த ஏரியாவில் அக்ரலிக் பொருட்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவரது அறிமுகம் கிடைத்தது. அவரும் வேலைக்கு அழைத்தார். அந்த நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்தேன்.

அக்ரலிக் டிஸ்பிளே ஸ்டேண்டுகள் உள்ளிட்ட பல பொருட்களை அவர்கள் இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்தனர். ஆனால் அவற்றின் விலை அதிகம். நான் மார்க்கெட்டிங் வேலைகளுக்காக அலைந்த வகையில் அந்த பொருட்களை இங்கேயே குறைவான விலைக்குத் தயாரிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன். அந்த சந்தர்ப்பத்தில் சில வாடிக்கையாளர்கள் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இல்லாத மாடல்களையும் என்னிடம் கேட்டனர். இதனால் அதை தனியாக வெளியில் செய்து கொடுத்தேன். ஆனால் நமது பொருட்களை மட்டும்தான் விற்க வேண்டும் தனியாக செய்து தரக்கூடாது என்று நிறுவனம் கூறியதால் வேலையிலிருந்து விலகி அந்த தொழிலிலேயே தனியாக மார்க்கெட்டிங்கில் இறங்கினேன்.

டிசைன்கள் உருவாக்குவது, மார்க்கெட்டிங் இரண்டிலும் முழு கவனம் செலுத்தினால் போதும், மற்றெதுவும் நாம் நேரடியாக செய்ய வேண்டும் என்பதில்லை. வடிவமைப்பதற்கு ஆட்கள் தனியாக இருக்கின்றனர். அக்ரெலிக் ஷீட்டுகளை மொத்தமாக வாங்கி டிசைன்களுக்கு ஏற்ப வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தால் போதும். இதுதான் என் வேலை. பெரிய நிறுவனங்களில் டிஸ்பிளே ஸ்டேண்டுகளின் டிசைன்களை அடிக்கடி மாற்றுவார்கள் அவர்கள்தான் என் இலக்கு. இதற்காக மால்களில் உள்ள நிறுவனங்களுக்கு அடிக்கடி சென்று எனது டிசைன்களைக் காண்பித்து ஆர்டர் வாங்குவேன். இயல்பாகவே ஆங்கிலம் பேச முடியும் என்பதால் கார்ப்பரேட் நிறுவன ஆர்டர்களை பெறுவதில் இதுவரை சிக்கல் இருந்ததில்லை.

இந்த தொழிலில் தயாரிப்பு நஷ்டம் இருக்காது என்றாலும் மூலப்பொருளை பணம் கொடுத்து வாங்கி அதை தயாரித்து கடனுக்கு அளிக்க வேண்டியிருக்கும். இதனால் ஒரு இடத்தில் சறுக்கினாலும் சிக்கலாகிவிடும். இது மட்டும்தான் நெருக்கடியாக இருக்கும். பொருளாதார சூழல் காரணமாக படிக்க முடியாத நிலைமை அவ்வப்போது உறுத்தியதால், இப்போது தொலைதூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்து படித்தும் வருகிறேன்.

டிஸ்பிளே போர்டுகள் தவிர டோர் எண் ஷீட்டுகள், நேம் பேட்ஜுகள், டிராப் பாக்ஸ்கள் என பலவற்றையும் செய்து கொடுத்து வருகிறேன். தேவைக்கு ஏற்ப 6 பேருக்கு வேலை கொடுக்கிறேன். அடுத்த கட்டமாக சொந்த இடத்தில் இருந்து செய்ய வேண்டும் என்பதுதான் என் இலக்கு என்றார். தனது உழைப்புக்கு பின்னால் பல நண்பர்கள் பக்க பலமாக இருந்துள்ளனர் அவர்களுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருப்பதை கட்டாயம் குறிப்பிட வேண் டும் என்ற வேண்டுகோளுடன் முடித்தார் ஜேம்ஸ்.

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சொந்தத்-தொழிலிலும்-இலக்கு-வேண்டும்/article9099360.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்; தோல்வியில் உங்களோடு இருப்பது யார்?

கே.கோபிநாதன், எவர்ஷைன் எண்டர்பிரைசஸ், சென்னை.
கே.கோபிநாதன், எவர்ஷைன் எண்டர்பிரைசஸ், சென்னை.

விரும்பி இறங்கிய தொழிலில் மிகப் பெரிய தோல்வியும் அதிலிருந்து மீண்டு, மீண்டும் அதே தொழிலில் தனக்கான அடையாளத்தையும் உருவாக்கி நிலை நிறுத்திக் கொண்டவர் கோபிநாதன். சென்னை அமைந்தகரையில் ஹவுஸ் கீப்பிங் துறை சார்ந்த பொருட்களை தயாரித்து வரும் இவர் தனது தொழிலில் கடந்து வந்த பாதையை இந்த வாரம் `வணிக வீதி' வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து…

சென்னைதான் பூர்வீகம், அப்பா கார் பெண்டராக இருந்தார், நான் பிகாம் முடித்து விட்டு காவல்துறை பணிக்குச் செல்வது தான் எனது இலக்காக இருந்தது. ஏனென்றால் கல்லூரி காலத்தில் என்சிசியில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கான நேர்காணல் கடிதத்தை தபால்காரர் பத்து நாட்களுக்கு பிறகுதான் கொண்டு வந்து கொடுத்தார். இதனால் விரக்தியில் சில நாட்கள் எந்த வேலைகளிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னோடு என்சிசியில் இருந்த மூன்று நண்பர்கள் ஹவுஸ் கீப்பிங் பொருட்களான ரூம் பிரஷ்னர் உள்ளிட்ட பல பொருட்களை விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைகளில் இருந்தனர். மும்பையிலிருந்து வந்த அந்த பொருட் களை இங்கேயே தயாரிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் சொந்தமாக இறங்கலாம் என ஆலோசித்தோம். இதற்கான இயந்தி ரங்கள், அச்சு போன்றவற்றை எங்களது முயற்சியிலேயே தயாரித்தோம். எனது வீட் டின் மொட்டை மாடியில் தொடங்கிய இந்த வேலைகள் சில முயற்சிகளுக்கு பிறகு ஒரு முழுமையான வடிவத்துக்கு வந்தது.

நண்பர்கள் மூவரும் மார்க்கெட்டிங் வேலைகளைக் கவனித்துக் கொள்வது, நான் தயாரிப்பு, அலுவலக வேலைகளைப் பார்ப்பது என பிரித்துக் கொண்டோம். ஏனென்றால் நான் திக்கி திக்கி பேசுவேன் என்பதால் மார்க்கெட்டிங் ஒத்துவராது என இதர வேலைகளை எடுத்துக் கொண்டேன். தொழிலில் சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி இருந்தது. அடுத்த ஆறு ஆண்டுகளில் சொந்த கட்டிடத்தில் மாறும் அளவுக்கு வளர்ந்தோம்.

இந்த கட்டத்தில் எல்லோருமே மார்க் கெட்டிங்கிற்கு செல்வோம். சுழற்சி முறை யில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதம் அலுவலகத்தை கவனித்துக் கொள்வோம் என முடிவெடுத்தோம். இதன் பிறகு நானும் மார்கெட்டிங் செல்ல தொடங்கினேன். வழக்கமாக ஓட்டல்கள், மால்கள், தியேட்டர்கள் என எங்களுக்கான நிரந்தர சந்தை இருந்தாலும், 2000 -ம் ஆண்டுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருந்த கால கட்டம் என்பதால் எங்களது பொருட்களுக்கான தேவை அதிகரித்தபடியே இருந்தது.

பொருட்களின் தேவைக்கேற்ப கோயம் புத்தூரில் ஒரு உற்பத்தி மையத்தையும் தொடங்கினோம். இதற்கிடையில் மார்க்கெட்டிங் செய்வதற்கு ஏற்ப ஊதியம் எடுத்துக் கொள்வது என நாங்கள் எடுத்திருந்த முடிவுபடி எனக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அதிக ஊதியம் வந்தது. அந்த அளவுக்கு மார்க்கெட்டிங் வேலைகளில் தீவிரமாக இருந்தேன். இதன் காரணமாக எங்களுக்குள் முரண்பாடுகள் எழுந்தன. பத்து ஆண்டுகளுக்கு மேல் குழந்தைபோல வளர்த்த அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் எழுந்தது. சில மாதங்கள் எந்த வேலையும் ஓடவில்லை. ஏனென்றால் அந்த தொழிலில் முதல் நாள் தொடங்கியபோது என் அப்பாதான் முதன் முதலில் மூலப்பொருளை அள்ளி அச்சில் போட்டு வாழ்த்தியவர். எங்கள் வீட்டு மாடியில்தான் ஆறு ஆண்டுகள் வாடகை இல்லாமல் நிறுவனத்தை நடத்தினோம்.

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் பழைய வேகத்தோடு இறங்கினேன். ஏற்கெனவே எனது நட்புக்காக இருந்த வாடிக்கையாளர்களோடு, புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கவும் முன்பை விடவும் பல மடங்கு வேகத்தோடு உழைக்கத் தொடங்கினேன். ரூம் பிரஷ்னர் தவிர தரையை சுத்தம் செய்யும் துடைப்பான் உள்ளிட்டவையும் செய்யத் தொடங்கினேன். இவற்றோடு வாடிக்கையாளர்கள் பல தூய்மைப் பணி பொருட்களையும் வாங்குவார்கள் என்ப தால் 3எம், ஜான்சன், அங்கர் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகளையும் விநியோக உரிமை வாங்கி கொடுத்து வருகி றேன். தனி ஆளாக மீண்டும் தொடங்கிய தொழிலில் இப்போது 8 பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளேன்.

இந்த துறை ரசாயன கலப்பிலிருந்து ரசாயனம் சேர்க்காத மூலப் பொருள் நோக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டி ருக்கிறது. அதுபோல மேலை நாடுகளில் ஜெல் வடிவில் வந்துவிட்டது. அதற்கான தயாரிப்பு ஆராய்ச்சி வேலைகளையும் செய்து வருகிறேன். தோல்வியிலிருந்து மீள வைத்தது மட்டுமல்ல, எனது எல்லா முயற்சிகளுக்கும் மனைவி பக்கபலமாக நிற்கிறார். ஒரு தோல்வியில் கற்றுக் கொள்ள ஆயிரம் பாடம் இருக்கிறது. முதல் பாடம் உங்களோடு யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதுதான் என்று தனது அனுபவத்திலிருந்து விளக்குகிறார் கோபிநாதன்.

- vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-தோல்வியில்-உங்களோடு-இருப்பது-யார்/article9123740.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: நமக்கான பாதையை நாமே உருவாக்க வேண்டும்

unnal_3023796f.jpg
 

சென்னை முடிச்சூரில் வசித்து வருகிறார் முருகன். பாலிமர் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்தவர் தற்போது ரப்பர் கிளவுஸ்கள், பலூன்கள் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். ஆரம்பத்தில் பலூன் பிரிண்டிங் மட்டுமே செய்து வந்த இவர் இப்போது பலூன் உற்பத்தியுடன், பிரிண்டிங் இயந்திரத்தையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த வாரம் இவரது அனுபவம் ‘வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

அப்பாவுக்கு சொந்த ஊர் நாகர்கோவில். வேலை காரணமாக சென்னை வந்து செட்டில் ஆனவர். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ரப்பர் மோல்டிங் டெக்னாலஜி வேலை பார்த்து வந்தார். அதனால் இந்த துறைச் சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்த அனுபவம் இருந்ததால் என்னை பாலிமர் மோல்டிங் சார்ந்து படிக்க வைத்தார். ஆனால் நான் படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக ரப்பர் பொருட்கள், பலூன்களை வாங்கி மார்க்கெட்டிங் செய்யும் வேலைகளை பார்க்கத் தொடங்கினேன். இதனால் படித்து முடித்ததும் வேலைக்குச் செல்வதை விட சொந்த தொழில் இருக்கிறது என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் மார்க்கெட்டிங் வேலை மட்டுமே நமக்கு அடையாளத்தை கொடுக்காது என்று பிறகு புரிந்து கொண்டேன்.

பிறகு 2006ல் ரப்பர் பலூன்களில் பிரிண்டிங் செய்து கொடுக்கும் வேலைகளைத் தொடங்கினேன். அதாவது ரப்பர் பலூன்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து அதில் விளம்பரதாரர்களின் தேவைக்கு ஏற்ப பிரிண்டிங் செய்து கொடுப்பதுதான் இந்த வேலை. இதுவும் நிறைவு கொடுக்கவில்லை. அதனால் ஏற்கெனவே வெளியிலிருந்து வாங்கிய இயந்திரங்களின் செயல்பாடுகளைப் புரிந்து கொண்டு, அதுபோல புதிய இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கினேன். அதில் ஓரளவும் வெற்றி கிடைத்தது. இது பலூனையும் சொந்தமாகத் தயாரிக்கலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்ததாக அந்த வேலைகளிலும் இறங்கினேன்.

எனக்கு பிளாஸ்டிக் மோல்டிங் தொழில்நுட்பம் தெரியும் என்பதால் அதையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான அடிப்படை மூலப் பொருளான ரப்பர் பால் எங்களது சொந்த ஊரான நாகர்கோவில் பகுதிகளிலேயே கிடைத்து விடும் என்பதால் துணிச்சலாக இறங்கினேன். நானே தயாரித்துக் கொண்ட இயந்திரம், தட்டுப்பாடில்லாத மூலப் பொருட்களால் அடுத்த கட்ட வளர்ச்சிகள் தடையில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் இந்த தொழிலில் தமிழ்நாட்டில் உற்பத்தியாளர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். மொத்தமாக வாங்கி விற்கும் விற்பனையாளர்கள்தான் அதிகமாக உள்ளனர். நானே உற்பத்தியாளராகவும், பிரிண்ட் செய்து விற்பனையும் செய்து வருகிறேன். ஏனென்றால் இரண்டிலுமே நல்ல வாய்ப்புகள் உள்ளன.

தவிர சாதாரண பலூன் முதல் ஹீலியம் வாயு அடைத்து பறக்க விடும் பலூன் வரை தயாரிக்கிறேன்.

இந்த துறையில் பலூன் பிரிண்டிங் சார்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளிலும் உள்ளேன். ஏனென்றால் பிரிண்ட் செய்யாத சாதாரண பலூன்களை விடவும், விளம்பரம், நிகழ்ச்சிகளை பிரிண்ட் செய்த பலூன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏனென்றால் பலூனை குழந்தைகளுக்கான விளையாட்டு பொருளாக மட்டும் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அது மிக நுணுக்கமான விளம்பர வாய்ப்பு என்பதை நானே நேரடியாக பார்த்திருக்கிறேன்.

நாகர்கோவிலில் ஒரு நகைக் கடைக்கு பிரிண்ட் செய்த பலூனை கொடுத்தோம். கடைக்கு வந்த குழந்தைகளிடம் கடைக்காரர்கள் பலூனை கொடுத்தனர். இதைப் பார்த்து வெளியில் நின்றிருந்த ஒரு குழந்தை அடம் பிடிக்க, பொருள் வாங்கினால்தால் பலூன் இலவசம் என்ப தால் அந்த குழந்தையின் பெற்றோர் இதற்காகவே ஒரு வெள்ளிக் கொலுசு வாங்கினர். இப்படி நுட்பமான விளம்பர மாக உள்ளது. பலூனை குழந்தை தூக்கிச் செல்லும் இடமெல்லாம் விளம்பரம்தான் என்பது கடைக்காரர்களுக்கு தெரியும் என்பதால் இந்த துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளது.

ஜெராக்ஸ் மிஷின் வாங்கும் விலைக்கு இந்த இயந்திரத்தை வாங்கி வைத்து தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

இதனால் புதிய தொழில்முனைவோர் களுக்கான இயந்திர விற்பனையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது நேரடியாக 20 நபர்களுக்கு வேலை அளிப்பதுடன் மறைமுகமாக தேவைக்கு ஏற்ப 10 நபர்களுக்கும் வேலை கொடுத்து வருகிறேன். நமக்கு என்ன தெரியும் என்பதை தெரிந்து கொண்டு நமக்கான பாதையை நாமே உருவாக்கினால் வெற்றிதான் என்பதை உணர்த்துகிறார் முருகன்.

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-நமக்கான-பாதையை-நாமே-உருவாக்க-வேண்டும்/article9149287.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: சொந்த தொழிலின் பெருமிதத்துக்கு ஈடில்லை

kovai_3032357f.jpg
 

குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா சாதனங்கள் தயாரிப்பில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் கிருஷ்ணகுமார். 2014ம் ஆண்டு ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தால் மொத்த தொழிலும் கைநழுவிப்போக, துவண்டு விடாமல், திறமையாலும்,நம்பிக்கையாலும் மீண்டும் மேலேழுந்து வந்துள்ளார். தற்போது 18 நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் இவர் தனது கடந்த காலத்தை ‘வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

அப்பா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். வேலைதேடி வந்து கோயம்புத்தூரில் செட்டில் ஆனவர். எனவே நான் பிறந்தது, படித்தது எல்லாம் கோவைதான். அப்பா பள்ளிக்கூடத்துக்கு தேவையானவற்றை விற்பனை செய்யும் கடையை சிறிய அளவில் நடத்தி வந்தார். இதனால் படிக்கும் காலத்தில் அவ்வப்போது கடை வேலைகளில் ஈடுபடுவேன். பெரிய வருமானமில்லை என்பதால் கஷ்டப்பட்டுதான் எம்பிஏ படிக்க வைத்தார். நான் படித்து முடித்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைபார்க்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு சொந்த தொழிலில் ஈடுபடவே விருப்பம் இருந்தது. அதிலும் குறிப்பாக விளையாட்டுத் துறை சார்ந்த உபகரணங்களுக்கு தேவை இருக்கிறது என்பதை அறிந்திருந்ததால் அந்த தொழிலையே செய்ய முடிவு எடுத்தேன்.

விளையாட்டு சாதனங்களுக்கான விற்பனையாளர், முகவராக இருந்து செயல்படத் தொடங்கினேன். பிறகு பள்ளிகளில் சிறுவர் பூங்காவுக்கு தேவையான விளையாட்டு சாதனங்களான சீசா, ஊஞ்சல் போன்ற கருவிகளை வெளியிலிருந்து செய்து வாங்கி அதை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதை சொந்தமாகவே தயாரிக்கும் வேலைகளில் இறங்கினேன்.

பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகள், பூங்கா என குழந்தைகள் புழங்கும் இடங்களில் எல்லாம் இதற்கான தேவை உள்ளது என்பதால் அதை இலக்காக வைத்து வேலை செய்தேன். தென்னிந்திய அளவில் முக்கிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்பதுதான் எனது திட்டம். இதனையொட்டி பைபரைக் கொண்டும் விளையாட்டு சாதனங்களையும் உருவாக்கத் தொடங்கினேன்.

தயாரித்த மாடல்களை சாம்பிள் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களில் ஆர்டர் எடுக்கலாம் என ஸ்கூட்டரில் செல்வேன். வேண்டுமா வேண்டாமா என முடிவெடுப்பவர்களை பார்ப்பதற்கு முன்னர், வாசலில் செக்யூரிட்டிகளே பேசி இங்கு தேவையில்லை என்று விரட்டி அனுப்பிவிடுவார்கள். சில இடங்களில் விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக நமது திறமையை குறைத்து மதிப்பிட்டு பேசுவார்கள். தொழிலில் ஆரம்ப காலத்தில் நமது படிப்புக்கு மரியாதை கிடைக்கவில்லையே என கோபமாகவும், ஆதங்கமாகவும் இருக்கும். ஆனால் எனது திறமையிலும், தரத்திலும் மிகுந்த நம்பிக்கை இருந்ததால் இதையெல்லாம் கடந்து வரப் பழகினேன். அரசு துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்களது தயாரிப்புகள் குறித்து கடிதம் எழுதி விளக்கியும் பூங்காக்களுக்கான ஆர்டர் பெற்றுள்ளேன்.

தொழிலில் முக்கியமான கட்டத்தில் நாங்கள் இருந்த வாடகைக்கு இருந்த கட்டிடத்தை விதிமீறல் காரணமாக மாநகராட்சி 2014ல் சீல் வைத்துவிட்டது. கடைக்குள் இருந்த பொருட்களை வெளியே எடுக்கக்கூட அவகாசமில்லை. மொத்த முதலீடும் அங்கு முடங்கிவிட்டது. சுமார் 9 மாதங்கள் தொடர்ச்சியான அலைச்சலின் பலனாக பொருட்களை வெளியே எடுத்துக்கொள்ள மாநகராட்சி அனுமதித்தது. அதை எடுத்து பக்கத்தில் ஒரு வாடகை கட்டிடம் பிடித்து தற்காலிகமாக இருப்பு வைத்தோம். ஆனால் அங்கு மாற்றிய சில நாட்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு மொத்த பொருட்களும் நாசமாகிவிட்டன. தற்காலிக இடம் என்பதால் காப்பீடும் செய்திருக்கவில்லை. எனவே மீள முடி யாத அளவுக்கு இழப்பு. அடுத்த ஆறு மாதத்தில் அப்பாவும் உடல்நிலை சரி யில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தொழிலிலும், வாழ்க்கையிலும் அடுத் தடுத்து ஏற்பட்ட இழப்புகளால் மிகப் பெரிய விரக்தி ஏற்பட்டது.

பலரும் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு போ என்று அறிவுறுத்தினர். ஆனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலை விட எனக்கு விருப்பமில்லை. மூலப் பொருட்கள் சப்ளை செய்பவர்களுடன் மீண்டும் பேசினேன். என்னை நம்பி கடனுக்கு பொருட்களை தாருங்கள். பழைய கடனையும் சேர்த்து திருப்பி அளித்து விடுகிறேன் என்றேன். பலரும் நம்பிக்கையோடு கைகொடுத்தனர். இப் போது எல்லா கடனையும் அடைத்ததுடன் புதிய சந்தைகளை நோக்கியும் பயணப் பட்டுக் கொண்டிருக்கிறேன். கடையில் 10 பேருக்கு, தயாரிப்பு பணிகளில் 8 பேருக் கும் வேலை கொடுத்து வருகிறேன்.

எவ்வளவு சம்பளத்திலான வேலை என்றாலும் சொந்த தொழிலில் கிடைக்கும் பெருமித உணர்ச்சிக்கு ஈடாகாது என்பதுதான் எனது அனுபவம். அதைத்தான் எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்தார்.

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சொந்த-தொழிலின்-பெருமிதத்துக்கு-ஈடில்லை/article9179608.ece?widget-art=four-all

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: தோல்விகளில் கற்றுக் கொள்ளுங்கள்...

திலகவதி, சுபி சேவை, சென்னை

சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார் திலகவதி. உணவு தயாரிப்புத் துறையில் பல நஷ்டங்களுக்கு பிறகு துவண்டு விடாமல் திரும்பவும், அதிலேயே தனக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சேவை என்கிற உணவு தயாரிப்பில் தினசரி இவரது உழைப்பு ஆச்சரியமளிக்கிறது. தனது பிராண்டான ‘சுபி சேவை’க்கு சென்னையில் பல பகுதிகளில் நிரந்தர வாடிக்கையாளர்களை உருவாக்கி யுள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிகவீதி’-யில் இடம் பெறுகிறது.

சொந்த ஊர் கோயம்புத்தூர். எனது அண்ணன் இங்கு வசித்ததால் குடும்பத்தோடு சென்னை வந்துவிட்டோம். திருமணத்துக்கு பிறகு ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என்கிற யோசனையோடு கணவரின் உதவியுடன் சென்னை அண்ணாசாலையில் எல்ஐசிக்கு அருகில் ‘சென்னை மெஸ்’ என்கிற பெயரில் ஓட்டல் தொடங்கினேன். அந்த ஏரியா அலுவலகம் நிறைந்த ஏரியா என்பதால் மதியம் மட்டும்தான் விற்பனை இருக்கும். இதனால் பெரிய நஷ்டமில்லை என்றாலும் சின்ன அளவில் சொந்த தொழில் செய்கிறோம் என்கிற திருப்தியாவது இருந்தது. அப்போது ஐடி நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருந்த நேரம் என்பதால், அங்கு உணவகம் அமைப்பதற்காக அழைப்புகள் வந்தன. மதியத்துக்கு பிறகு நேரம் இருந்ததால் அதை முயற்சித்து பார்க்கலாம் என இறங்கினோம்.

ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்று அழைப்பார்கள். ஆனால் பெரிய உணவு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடும் இடைவெளியில் எங்களை அழைத்துள்ளனர் என்பதை பிறகுதான் உணர்ந்தோம். அப்படி முதற்கட்டமாக இறங்கிய ஒரு சில நிறுவனங்களால் அதிக நஷ்டம் ஏற்பட்டது. எனது நகைகள், குடும்பத்தினரின் முதலீடுகள் எல்லாம் எங்களது நிர்வாக குறைகளால் கை நழுவி போனது என்றே சொல்லலாம். இதற்கிடையில் கடையை கவனிக்க நேரம் ஒதுக்காததால் அதையும் தொடர்ச்சியாக நடத்தவில்லை. 2008-ம் ஆண்டு கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்து வீட்டில் முடங்கினோம். அடுத்த சில மாதங்களில் எனது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் என்னால் சமாதானமாக இருக்க முடியவில்லை. எங்கே தவறு செய்தோம், ஏன் இவ்வளவு இழப்பு, எப்படி மீண்டு வருவது என்கிற சிந்தனையாகவே இருக்கும். ஆனால் அப்படியே முடங்கி இருப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. மீண்டும் சொந்த தொழில் என்று இறங்கினால் வீட்டில் தேவையில்லாமல் சிக்கல் வரும் என்பதால் சுமார் ஒரு வருடம் எனது தோல்விகளை நினைத்து சமாதானமாகவே இருந்தேன். 2010-ம் ஆண்டு இனிமேலும் சும்மா இருக்க வேண்டாம் என இந்த வேலைகளில் இறங்கினேன்.

கோவை மக்களின் உணவில் இதற்கென தனி இடம் உண்டு. முதலில் கோவை பழமுதிர் நிலைய கடைகளில் வைத்து முயற்சித்தேன். இது புழுங்கல் அரிசியில் செய்வதால் ஒருநாள் முழுவதும் வைத்திருந்து சாப்பிடலாம். அதிகாலையில் எழுந்து தயாரித்து கணவர் வேலைக்கு போகிற வழியில் உள்ள பழமுதிர் நிலைய கடையில் சேர்த்து விடுவேன். தவிர அக்கம் பக்க கடைகளிலும் கொடுக்கத் தொடங்கினேன். ஆனால் முதல் சில நாட்களில் அப்படியே ரிட்டன் ஆகிக் கொண்டிருந்தது. முன்பு போல பலத்த நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். எனது சேவையை சாப்பிட்டு பார்த்த ஒருவர் போன் செய்து தினசரி வீட்டுக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டார். இதுவே எனக்கு நல்ல வழியாகப் பட்டது. கடைகளில் போடுவதை விட வீடுகளுக்கு நேரடியாக அறிமுகப்படுத்த என்ன வழி என்பதை அறிந்து உள்ளூர் செய்தி மலரில் விளம்பரம் கொடுத்தேன்.

வாடிக்கையாளர்களின் அழைப்பு எதிர்பார்த்தபடியே இருந்தது. அதற்கு பிறகு கடைகளில் போடுவதை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அளித்து வருகிறேன்.

இந்த ஆறு ஆண்டுகளில் முதலிரண்டு ஆண்டுகள் சற்றே சிரமமாக இருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளில் நல்ல விற்பனை உள்ளது. பலவித தொழில் நெருக்கடிகளையும் கடந்து இன்று சராசரியாக 50 கிலோ வரையில் சப்ளை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது உற்பத்திக்கு ஆட்டோமேட்டிக் இயந்திரம், நிரந்தரமாக 5 பேருக்கு வேலை, பகுதி நேரமாக இருவருக்கு வேலை என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளேன் என்று குறிப்பிடலாம். தவறுகளிலிருந்து பாடம் கற்றவேண்டும். ஆனால் முயற்சியையும், கனவையும் என்றுமே கைவிடக்கூடாது என்பதுதான் எனது அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்து கொண்டது என்கிறார் திலகவதி.

vanigaveedhi@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-தோல்விகளில்-கற்றுக்-கொள்ளுங்கள்/article9206638.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை

unnal_3056366f.jpg
 

கோயம்புத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை. வணிக நிறுவனங்களுக்கான நிழற்கூரைகள், முன்கூரைகள், டென்ட், வர்த்தக நிழல் குடை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பூர்வீகம் திருச்சி என்றாலும், பிறந்தது படித்தது எல்லாம் கேரள மாநிலத்தில். இவரது வெற்றிக் கதைக்கு பின்னால் வேலைதேடி மதுரை வந்து ஏமாந்த அனுபவம் இருக்கிறது. ‘‘ஒருவேளை வேலை கிடைத்திருந்தால் தொழில்முனைவோராக உருவாகியிருப்பேனா தெரியாது’’ என்று குறிப்பிடும் செல்லதுரை தனது தொழில் அனுபவத்தை `வணிகவீதி’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து..

டீ எஸ்டேட் வேலைக்காக அப்பா குடும்பத்தோடு கேரளா வந்தவர். அதனால் நான் பிறந்தது, படித்தது எல்லாமே கேரளாதான். ஆனால் உறவினர்கள், சொந்த இடம் என திருச்சியோடு தொடர்பில் இருந்ததால் அவ்வப்போது வந்துசெல்வோம். நான் கல்லூரி முடித்துவிட்டு வேலைதேடியபோது மதுரையில் உள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவன விளம்பரத்தை பார்த்து விட்டு, கையில் 2,500 ரூபாயோடு கேரளாவிலிருந்து கிளம்பி வந்தேன். அந்த அலுவலகத்துக்கு காலையில் சென்றிருந்தேன். இப்போதே 2,000 ரூபாய் பணத்தை கட்டிடுங்க, மதியமே நீங்க வேலைக்கு சேர்ந்திடலாம் என்று கூறினர்.

அது ஆசை காட்டும் வார்த்தை என எனக்கு அப்போது தெரியவில்லை. நானோ உடனே வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் கையிலிருந்த பணத்தைக் கட்டிவிட்டேன். ஆனால் அன்று மாலை வரை அவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. அங்கு வந்த சென்றவர்களிடம் விசாரித்ததில் இந்த நிறுவனத்தில் இப்படிதான் சொல்வார்கள், ஆனால் உடனே எல்லாம் கிடைக்காது என்று பீதியூட்டினர். பணத்தை திருப்பி கேட்டால், இன்னும் ஒரு சில நாட்களில் வேலை ரெடி ஆகிடும், தங்கி இருந்து சேர்ந்துடுங்க என்றனர்.

நான் ஏமாந்து விட்டேன் என்று தெரிந்த, ஊர்திரும்பிச் செல்ல கையில் இருக்கும் பணமும் போதாது. இதனால் திருப்பூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஊருக்குச் செல்லலாம் என மதுரையிலிருந்து திருப்பூர் வந்தேன். திருப்பூர் பேருந்து நிலையத்தில் அன்றிரவு படுத்து உறங்கினேன். காலையில் போலீஸ்காரர் வந்து எழுப்பி விட்டார். விடிகாலை நேரம் என்பதால் அங்குள்ள டீ கடை ஒன்றில் ஒளிமயமான எதிர்காலம் உன் கண்களில் தெரிகிறது என்கிற பாடல் ஒலிக்க தொடங்கியது.

அந்த பாடல் கேட்ட நேரத்தில் அங்கு பல வேலைவாய்ப்பு போஸ்டர்கள் கண்ணில்பட்டன. இங்கு இல்லாத வேலையா ? எதற்கு ஊருக்குச் செல்ல வேண்டும்? என வைராக்கியம் வந்தது. ஒரு பனியன் நிறுவனத்தில் மாதம் 800 ரூபாய்க்கு வேலை கிடைத்தது. 3 மாதங்கள் அங்கு வேலைபார்த்தேன். ஆனால் திருப்பூரின் சீதோஷ்ண நிலை எனக்கு சரிவரவில்லை. இதற்கிடையில் எனது கேரள நண்பன் ஒருவன் கோயம் புத்தூரில் வேலைசெய்துவந்தான். அவ னோடு தங்கிக் கொண்டு வேறு வேலை தேடலாம் என கோவை புறப்பட்டேன்.

அங்கு வேலைதேடிக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுகிழமை அங்குள்ள சர்ச்-க்கு சென்றிருந்தேன். அங்கு வழிபாடு முடிந்ததும் ஒரு வேலை வாய்ப்பு குறித்து அறிவித்தனர். நான் பாதரை பார்த்து வேலை தேடிக் கொண்டிருக்கும் விவரத்தை சொல்லி அவரது சிபாரிசு மூலம் அந்த வேலையில் சேர்த்தேன். அப்படி நான் வேலைக்கு சேர்ந்த நிறுவனம் இந்த தொழிலில்தான் ஈடுபட்டிருந்தது. அங்கு மாதம் 1,500 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து, அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சார்பில் கேரள மாநில மார்க்கெட்டிங்வரை பார்த்துக் கொண்டேன்.

9 ஆண்டுகள் அங்கு வேலைபார்த்தேன். ஒருகட்டத்தில் அங்கிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வேறு வேலை தேடலாம் என யோசித்த போது, அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் நீ தனியாகவே இந்த தொழிலில் இறங்கு என வழிகாட்டினார். அப்போது கையிலிருந்த 30 ஆயிரத்தை வைத்துதான் இந்த தொழிலைத் தொடங்கினேன். இப்போது 15 நபர்களுக்கு வேலை கொடுத்து வருகிறேன். திருச்சியில் எங்களது சொந்த இடத்திற்கே அப்பா அம்மாவைக் கொண்டு வந்துவிட்டேன்.

இப்போதும் பேருந்து நிலைய வேலை தொடர்பான விளம்பர வாசகங்களும், ஒளிமயமான எதிர்காலம் என்கிற திரைப்பட பாடலும் என்னை ஒரு கணம் எங்கேனும் நிறுத்திவிடத்தான் செய்கிறது என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-ஒரு-திரைப்பாடல்-கொடுத்த-தன்னம்பிக்கை/article9261020.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்.... ஒரு திறமை இருக்கின்றது. அதனைக் கண்டு பிடிப்பதில் தான்... அவனது வெற்றி உள்ளது."  என்பது புகழ் பெற்ற வாசகம். இந்தப் பகுதியில் தொலதிபராக உள்ள எல்லோருமே... பெரிய பணக்காரர் அல்ல. அப்படியிருந்தும், தமது திறமையால்.... இன்று  தொழிலதிராக, உயர்ந்துள்ளமை அவர்கள் தமது திறமையை கணித்து அதில் கால் ஊன்றிய... விவேகம்  
நம்பிக்கையூட்டும்... நல்லதொரு பதிவு ஆதவன். 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: சாதிக்க வயது தடையில்லை

unnal_3063858f.jpg
 

திருமணத்துக்கு முன்பாகவே தனக்கான தொழிலைத் தேர்வு செய்து, அதில் வெற்றிபெற்றுவிடும் தொழில்முனைவோர்கள் சிலர்தான். அதில் ஒருவர் கலைவேந்தன். சொந்த ஊர் பழனி. கோயம்புத்தூரில் உலர் காய்கள், பழ பவுடர்கள் என பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் தொழிலை மேற்கொண்டுவருகிறார். அவரது தொழில் அனுபவம் இந்த வாரம் ``வணிகவீதி’’-யில் இடம் பெறுகிறது.

எனது குடும்பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரி சென்றது நான்தான். அதிலும் இப்போது சொந்த தொழிலில் வருமானம் ஈட்டுகிறேன் என்பதுகூட சாதாரண விஷயமல்ல என தனது தொழில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

ஊரிலிருந்து படிப்பதற்காகத்தான் இங்கு வந்தேன். அரசு கலைக் கல்லூரியில் பிபிஎம் படித்தேன். அதற்கு பிறகு இங்கேயே எம்பிஏ சேர்ந்தேன். எம்பிஏ படித்துவிட்டால் நல்ல வேலை கிடைக்கும், நமது நிலைமைகள் எல்லாம் மாறிவிடும் என்கிற ஆசைதான் எனக்கும் இருந்தது. ஆனால் படித்து முடித்து வெளியில் வந்ததும்தான் நிலைமை அப்படியில்லை என புரிந்தது. ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் என்றால், கிராமப்புற மாணவன் என்பதால் இயல்பாகவே எனக்குள்ளும் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. இதனால் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால்கூட போதும் என்கிற நிலைமையை உணர்ந்தேன். அப்படியும் வேலை கிடைக்கவில்லை என்பதால் ஊருக்குச் சென்றுவிட்டேன்.

சில நாட்களில் ஒரு நண்பனின் திருமணத்துக்காக ஊரிலிருந்து கோவை வந்திருந்தபோது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் வேலைக்கு நேர்காணல் நடப்பது கேள்விப்பட்டு கலந்து கொண்டேன். அந்த வேலை கிடைத்தது. அங்கு 11 மாதங்கள் பணியாற்றிய நிலையில், வாசன் ஐகேர் நிறுவனத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதனால் ரிலையன்ஸ் வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகும் வேலையில் சேர்த்துக் கொள்ளாமல் இழுத்தடித்ததால், பேப்பர் இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த நாட்களில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு இருக்கிறது என உறவினர் ஒருவர் குறிப்பிட்டார். எனக்கும் ஆசை இருந்ததால் அதற்கு தயாரானேன். ஆனால் அந்த வேலைக்காக விசா எடுக்க ஏஜெண்டிடம் பணம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்.

மீண்டும் கோவை வந்து, உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சில மாதங்கள் வேலை செய்த நிலையில் துபாயில் மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது. துபாயில் ஒரு ஆண்டு இருந்துவிட்டு ஊருக்கு வந்திருந்த நாட்களில், திரும்ப செல்லும் சூழ்நிலை வீட்டில் இல்லை. நான் இங்கேயே இருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் திரும்பவும் கோவையில் பழைய நிறுவனத்துக்கே வேலைக்குச் சென்றேன். இப்படியாக நான்கு ஆண்டுகளில் பல வேலை அனுபவம், ஏமாற்றம், விரக்தி என வாழ்க்கை சுழன்றடித்தது.

பழைய நிறுவனத்திலேயே வேலை கிடைத்தாலும் அங்கு முன்பு போல பிசினஸ் இல்லை. பலரும் வேலையை விட்டு சென்றுவிட்டனர். ஆனால் நான் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அங்கு நிறுவனத்தின் கணக்குகள் முதல் டெஸ்பாட்ச் வரை அனைத்து வேலைகளையும் கற்றுக் கொண்டேன். அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் கைவிட்டு போகும் நிலையில் நான் தனியாக தொழிலில் இறங்கலாம் என முடிவெடுத்தேன். இதற்கேற்ப பல வாடிக்கையாளர்களும் ஊக்கம் கொடுத்தனர்.

ஏற்கெனவே எனக்கு மார்க்கெட்டிங் அனுபவம் இருந்ததால் புதிய வாடிக்கை யாளர்களையும் கொண்டுவந்தேன். உணவுப் பொருள் தயாரிப்பவர்களுக்கு நேரடியாகவே விற்பனை செய்வதால் மொத்த விற்பனை, சில்லரை விற்பனை சார்ந்த நடைமுறை சிக்கல்கள் கிடையாது. ஆனால் சிறிய வயது என்பதால் ஆளைப் பார்த்து சில இடங்களில் மரியாதை கூட குறைய இருக்கும். ஆனால் ஒருமுறையில் சந்திப்புக்கு பிறகு பலரும் என்னை உற்சாகப்படுத்தவே செய்கிறார்கள்.

இப்போது 5 நபர்கள் வேலை செய் கிறார்கள். நானும் என்னை மார்க்கெட்டிங் ஹெட் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தொழில் கொடுத்துள்ள மரியாதையும், வருமானமும் என்னை தலைநிமிரவும், தன்னம்பிக்கை உள்ளவனாகவும் மாற்றி யுள்ளது. எனது குடும்பத்துக்கு இதை விடவும் சிறந்த மகிழ்ச்சியை என்னால் கொடுத்துவிட முடியாது என்றார்.

vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சாதிக்க-வயது-தடையில்லை/article9287838.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: வளர்வதற்கு முக்கியம் நேர்மறையான எண்ணங்களே..

பெ.கார்வேந்தன், ரித்விக் ரூபிங், நாமக்கல்.
பெ.கார்வேந்தன், ரித்விக் ரூபிங், நாமக்கல்.

கனவுகளுக்கு சரியான வடிவம் கொடுக்க வேண்டும் என்றால் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நான் கற்றுக் கொண்ட முதல்பாடம் என்கிறார் கார்வேந்தன். நாமக்கல் புறவழிச் சாலையில் ரித்விக் ரூபிங் நிறுவனத்தை நடத்திவரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

விவசாயம் சார்ந்த மதிப்புகூட்டு பொருளைத் தயாரிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தது தற்செயலானதுதான். வீட்டுத் தேவைக்காக ரூபிங் ஷீட் வாங்கியதில், தொடங்கிய தேடல்தான் இதையே செய்தால் என்ன என்பதில் கொண்டு வந்து நிறுத்தியது. படிக்கும்போதும், படித்த பிறகும் எனது ஒவ்வொரு செயல்களிலும் இதற்கான தேடலில் இருந்தேன். படித்து முடித்ததும் ஒரு பிசினஸ் கல்லூரியில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு நான் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலமாக என்னையும் தயார்படுத்திக் கொண்டேன்.

அப்போதே ரூபிங் தொடர்பான அனைத்து ஆரம்ப கட்ட தகவல்களையும் சேகரித்துக் கொண்டேன். நான்கு ஆண்டுகளில் அந்த வேலையிலிருந்து விலகியதும், இந்த தொழில் தொடர்பான கண்காட்சிகளை பார்க்க பெங்களூரு, கொல்கத்தா என பயணத்தை தொடங்கினேன். இதன் மூலம் 30 சதவீத விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

நண்பர் மூலம் எர்ணாகுளத்தில் உள்ள ரூபிங் நிறுவனம் ஒன்றில் நேரில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சில நாட்கள் தங்கி கற்றுக் கொண்டதன் மூலம் 30 சதவீத அறிவு கிடைத்தது. இதற்கடுத்து நாமே நேரடியாக பட்டுத் தெரிந்து கொள்வோம் என சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டேன்.

இயந்திரங்களை ஆர்டர் கொடுத்து எடுக்க ஆறு மாதம் ஆகும் என்பதால், அந்த இடைவெளியில் மார்க்கெட்டிங் வேலைகளை தொடங்கினேன். நாமக்கல், கரூர் மாவட்டங்கள்தான் இலக்கு. கரூர் போகிறேன் என்றால் அங்குள்ள ஹார்டுவேர் கடைக்காரர்கள், வெல்டிங் பட்டறைக்காரர்களை ஒரு நாளில் 50 பேர் என இலக்கு வைத்துக் கொண்டு அவர்களைப் பார்ப்பது, அவர்களது விசிட்டிங் கார்டு வாங்குவது என முதல் நான்கைந்து மாதங்கள் சலிக்காமல் அலைந்தேன். பல வெல்டிங்காரர்கள் கேள்விமேல் கேள்வி கேட்பார்கள். எனக்கு தெரியாத விஷயங்களை இயந்திரம் சப்ளை செய்யும் நிறுவனத்தாரிடம் கேட்டு தெரிந்து கொண்டு பதில் சொல்வேன். சிலர் பிசினஸ் கொடுக்கிறார்களோ இல்லையோ மணிக்கணக்காக பேச்சு கொடுப்பார்கள், ஆனால் சளைக்காமல் விளக்கம் கொடுப்பேன். பேச்சில் எவ்வளவு தூரம் அவர்களைக் கவர்கிறோமோ அந்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்பது என் அனுபவமாக இருந்தது.

இயந்திரங்கள் வந்து ஷீட்களை தயாரிக்கத் தொடங்கியதும், திரும்ப வும் மார்க்கெட்டிங் வேலைகளை தொடங்கினேன். கார்டு வாங்கி வந்தவர்களிடம் போன் செய்து, “உங்களையெல்லாம் நம்பித்தான் இறங்கி இருக்கிறேன். எனக்கு ஆயிரம் ரூபாய்க்காவது ஆர்டர் கொடுங்கண்ணே... வளர்த்து விடுங்கண்ணே’’ என இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவேன். நேரில் சென்றும் கேட்பேன். இப்படி முதல் ஆறு மாதங்களில் 10 ஆயிரம் 20 ஆயிரம் என தொடங்கிய ஆர்டர்கள் மெல்ல லட்சங்களில் வரத் தொடங்கியது. முதலில் 3 வண்ணங்களில் ஆரம்பித்து மெல்ல மெல்ல வண்ணங்களையும் அதிகரித்தேன். இதற்கிடையே சந்தையில் எந்த பிராண்ட் ரூபிங் ஷீட்டுகளை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அந்த நிறுவனத்தின் மூலப் பொருளையே அதிகம் கொடுக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் என்னோடு சேர்த்து நான்கு பேர் பணிபுரிந்தனர். இப்போது பத்து பேர் பணிபுரிகின்றனர்.

anna1_3072059a.jpg

விளம்பரங்களுக்கு செலவழிப்பதை விட, விலையைக் குறைத்து கொடுத்தால் வாடிக்கையாளர்களைக் கவரலாம் என்கிற பிசினஸ் கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன். இதனால் இப்போது ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் “என்னப்பா போன்ல தொந்தரவு செய்யிற’’ என்றவர்கள்கூட இன்று உற்சாகமாக பேசுவதும், ஊக்கம் கொடுக்கவும் செய்கிறார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது எனது பாசிட்டிவான அணுகுமுறைகள்தான். பொதுவாக தொழில்முனைவோராக வளர அடிப்படை தேவை பாசிட்டிவ்வாக சிந்திப்பதுதான்.

தொழிலை தொடங்குவதற்கு முன் பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டு பக்கத்தையுமே யோசிக்க வேண்டும். ஆனால் பாசிட்டிவான எண்ணங்களுக்காகவே உழைக்க வேண்டும். இதைத்தான் நான் கல்லூரியில் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன். பலருக்கு சொல்ல விரும்புவதும் அதுதான் என்று முடித்தார்.

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வளர்வதற்கு-முக்கியம்-நேர்மறையான-எண்ணங்களே/article9314466.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: தொழில் வளர்ச்சியே என் வளர்ச்சி...

unnal_3080027f.jpg
 

தனது திறமை என்ன என்பதை அறிந்து கொண்டு அதை வித்தியாசமான முறை களில் கொடுக்கத் தெரிந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதென்னவோ உண்மை. அப்படியான வகையில் வெற்றி பெற்றவர்தான் சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்த சிவக்குமார். பள்ளியில் கற்றுக் கொண்ட ஓவியக் கலையை, காய் களிலும் பழங்களிலும் மிக நேர்த்தியாக வடிவமைக்கிறார். சமீப ஆண்டுகளாக இந்தியாவில் தனி தொழிலாக வளர்ந்து வரும், இந்த அலங்கார கலையின் மூலம் தனது அடையாளத்தை உருவாக்கி வரும் இவர் தனது அனுபவத்தை இந்த வாரம் `வணிக வீதி’-க்காக பகிர்ந்து கொண்டார்.

மிக வறுமையான குடும்ப சூழ்நிலை யால் ஐந்தாம் வகுப்புக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படிப்பை நிறுத்தி விட்டார் கள். ஆனால் படிக்க வேண்டும் என்கிற எனது தீவிர முயற்சியால் இரண்டு ஆண்டு களுக்கு பிறகு பள்ளியில் சேர்ந்துவிட் டேன். பனிரெண்டாம் வகுப்பு வரை பகுதி நேர வேலைகள் பார்த்துக் கொண்டே படித்தேன். எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்ததைக் கண்டுபிடித்து பள்ளிக்கூடத்தில் ஊக்கப்படுத்தியதுதான் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

அப்போது பகுதி நேர வேலையாக கேட்டரிங் வேலைகளுக்குச் செல்வேன். அங்கு சில இடங்களில் காய்களில் டிசைன்களை செதுக்கி வைத்திருப்பார்கள். ஒன்றிரண்டு இடங்களில் அவற்றை பார்த்த ஆரம்பத்திலேயே அந்த கலையில் எனக்கு ஆர்வம் வந்தது. அதன் பிறகு இதை செய்பவர்களுடன் அவ்வப்போது வேலைக்கு போகத்தொடங்கினேன்.

பனிரெண்டாவது முடித்துவிட்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். கல்விக்கட்டணத்துக்கு அரசு உதவி கிடைத்தாலும் இதர செலவுகளை சமாளிக்க முடியவில்லை. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்றாவது ஆண்டுக்கு பிறகு படிப்பை தொடரவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த டிசைன் வேலைகளை தனியாக எடுத்துச் செய்யத் தொடங்கியிருந்தேன்.

காய்கள், பழங்களில் சாதாரணமாக டிசைன் செய்து கலரிங் செய்து வைப்பதுதான் சில இடங்களில் பழக்கமாக இருந்தது. ஆனால் என்ன டிசைனை நினைக்கிறோமோ அதை அப்படியே வரைந்து வைக்க வேண்டும் அதுதான் இந்த கலையின் வெற்றி. இவற்றை எனது அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டதுடன், இணையதளங்களிலும் தேடி பயிற்சி செய்து பார்ப்பதை வழக்க மாக்கிக் கொண்டேன். வெளிநாடுகளில் இது தனி துறையாகவே வளர்ந்துள்ளது.

ஆனால் நம் நாட்டில் திருமண வீடுகள், பார்ட்டிகள் மற்றும் விழா கொண்டாட்டங்களில் இப்போதுதான் இந்த வகையான அலங்காரம் வரத் தொடங்கியுள்ளது. பள்ளிகளில் காய்கறி, பழங்களுக்கு என்று தனியாக ஒரு ‘தினம்’ கொண்டாடுகிறார்கள், குழந்தைகளை இந்த அலங்காரங்கள் மூலம் எளிதில் ஈர்க்க முடியும். ஆனால் இந்த திறமைக்கான விலையை கொடுக்கிறார்களா என்றால் கிடையாது.

ஒரு தர்பூசணியில் சாதாரண டிசைன் செய்ய அரைமணி நேரம் ஆகும். இதுவே அதிக வேலைப்பாடுகள் கொண்ட தாய்லாந்து டிசைன்கள் செய்ய நான்கு மணி நேரம் வரை ஆகும். ஆனால் வாடிக்கையாளர்களின் மனநிலையோ ‘என்னப்பா ஒரு தர்பூசணி பழத்துக்கு இவ்ளோ விலை சொல்ற’ என்பார்கள். பள்ளிக்கூட புராஜெக்டுக்கு ஒரு கிளி செய்து கொடுக்கிறேன் என்றால் ‘ஒரு முள்ளங்கி, காரட்டுக்கு இவ்ளோ விலையா’ என்கிறார்கள். திறமையை, உழைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பேசும்போது வருத்தமாக இருக்கும்.

ஒரு பிரபல பள்ளிக்கூடத்துக்கு ஆர்டர் வாங்க செல்லும்போது எனது திறமையைக் காட்டும் விதமாக அப்துல்கலாம் உருவம் செதுக்கிய ஒரு பழத்தையும் தூக்கிச் சென்றிருந்தேன். திறமையை நன்றாக உணர்ந்தவர்கள், இதை கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என ஆர்வமாக கேட்டனர், ஆனால் நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த சான்றிதழ் இல்லை என்பதற்காக வாய்ப்பையே வழங்கவில்லை. ஒரு பட்டத்துக்கு கிடைக்கும் மரியாதையை திறமைக்கு கொடுக்க படித்தவர்களே தயங்குகிறார்கள் என்கிற வருத்தம் இருக்கவே செய்கிறது.

ஆனால் இப்படியான அலங்காரத் துறை ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் ஒரு பாடமாக இருந்தாலும் முழுமையாக சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. பெரிய ஹோட்டல்களில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், வேலைக்கு செல்வதைவிட இந்த தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற முயற்சிகளில் உள்ளேன். இப்போது ஆர்டர்களுக்கு ஏற்ப ஐந்து நபர்களுக்கு பகுதி நேர வேலை வழங்கி வருகிறேன். திருமண நிகழ்வு, பார்ட்டிகள் என்கிற இடத்திலேயே முடங்காமல் பரவலாக சென்றால்தான் இதற்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். இந்த தொழிலின் வளர்ச்சியே என் வளர்ச்சி என்பதில் மிக தெளிவாக உள்ளேன் என்றார்.

vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-தொழில்-வளர்ச்சியே-என்-வளர்ச்சி/article9343455.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உன்னால் முடியும்: குடும்பத்துடன் இருக்க வாய்ப்பு கொடுத்த தொழில்

unnal_3088054f.jpg
 
 
 

சில மோசமான தோல்விகளே வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்பதுதான் சொந்த தொழிலில் வெற்றிபெற்றவர்களின் அனுபவமாக உள்ளது. புதுச்சேரியில் கேரம் போர்டு தயாரிக்கும் தொழிலில் உள்ள முகமது உமரும் இதற்கு விதிவிலக்கல்ல. பல தடைகளுக்குப் பிறகு, இன்று தன்னம்பிக்கையோடு நிற்கும் இவரது அனுபவம் இந்த வார ‘வணிகவீதி’-யில் இடம் பெறுகிறது.

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்துவிட்டு சொந்தமாக மெக்கானிக் ஷாப் ஆரம்பித்தேன். பெரிதாக வருமானமில்லை என்றாலும், சொந்த தொழிலில் கிடைக்கும் அனுபவம் காரணமாக சில ஆண்டுகள் செய்து வந்தேன். வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்வதிலும் உடன்பாடில்லை. ஆனால் நல்ல சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் சென்றுவிட்டேன். எனினும் வெளிநாட்டிலேயே இருந்துவிடுவதிலும் உடன்பாடில்லை.

குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பதற்குத்தானே சம்பாதிக்கிறோம். ஆனால் குடும்பத்தை பிரிந்து சம்பாதித்து என்ன சந்தோசம் என்கிற உறுத்தல் இருந்தது. அதனால் சில ஆண்டுகளிலேயே ஊருக்கு வர முடிவெடுத்தேன். திரும்ப வெளிநாட்டுக்கு வரக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தேன். ஆனால் ஊருக்குச் சென்று நல்ல தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கான முதலீடு வேண்டும் என்பதற்காக அப்போதே சேமிக்க தொடங்கினேன். என் உறவினர் ஒருவர் இந்த தொழிலில் ஏற்கெனவே உள்ளதும், அவருக்கான வாய்ப்புகளும் எனக்கு தெரியும் என்பதால் இந்தத் தொழிலை தொடங்க யோசித்திருந்தேன்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஊர் திரும்பியதும் அவரிடம் வேலைக்குச் செல்லத்தொடங்கினேன். ஏனென்றால் இந்த தொழிலை அனுபவத்தினால்தால் கற்றுக் கொள்ள முடியும். ‘என்னப்பா வெளிநாட்டுல நல்லா சம்பாதிச்கிட்டு இருந்த, இப்போ இங்க வந்து கஷ்டப்படுறியே’ என உறவினர்கள் சொல்லத்தான் செய்தனர். ஆனால் நான் பழைய தவறுகளை திரும்பச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனென்றால் எனக்கு மெக்கானிக் வேலை ஏற்கெனவே தெரியும் என்பதால், ‘நீ வெளிநாடு போகலன்னா திரும்ப மெக்கானிக் செண்டர் ஆரம்பிக்க வேண்டியதுதானே, எதுக்கு தெரியாத வேலையில் இறங்குகிறாய்’ என தூண்டினார்கள்.

ஆனாலும் நான் இந்த வேலையை கற்றுக் கொள்ளத் தொடங்கிய சில மாதங்களிலேயே இதற்கு உள்ள சந்தை வாய்ப்புகள் குறித்து நன்றாக தெரிந்து கொண்டேன். ஏனென்றால் இங்கு அதிகமாக டெல்லி போர்டுகள்தான் சப்ளை ஆகின்றன. தமிழ்நாட்டில் ஒரு சிலர்தான் இந்த தொழிலில் உள்ளனர். பெரும்பாலான விற்பனையாளர்கள் டெல்லி போர்டுகளை விரும்புவதில்லை என்றாலும், தரமான போர்டுகள் கிடைப்பதில்லை என்பதால் அதை விற்பனை செய்கின்றனர். மூன்று ஆண்டுகளில் எனக்கு நம்பிக்கை வந்ததும், நான் தனியாக தொழில் செய்யப் போவதாக சொல்லிவிட்டுதான் தொழிலை தொடங்கினேன்.

ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் வேலைகள் சற்று சிரமமாக இருந்தாலும் இப்போது விற்பனையாளர்கள் தேடி வந்து வாங்கும் அளவுக்கு சந்தையை உருவாக்கி யுள்ளேன். ஆனால் இப்போது வரையில் பழைய நிறுவனத்தின் ஒரு வாடிக்கை யாளரைக் கூட ஆர்டர் கேட்டு நான் தொந்தரவு செய்ததில்லை.

இந்த வேலை வெளியிலிருந்து பார்க்க தச்சு வேலையைப்போல தோன்றினாலும், ரொம்ப நுணுக்கமானது. விளையாடும்போது ஸ்டிரைக்கர் அடிக்கும் வேகத்தில் சட்டம் உள்வாங்கிவிட்டால் அந்த போர்டு வீணாகத்தான்போகும். கணுக்கள் இல்லாத மரப்பலகைகளை பார்த்து வாங்கினாலும் ‘டொக்கு’ என்கிற உள்வாங்காத பலகைகளைக் கவனிக்க தனி அனுபவம் வேண்டும். அதுபோல பலகையில், பிரிண்ட், வண்ணம் சேர்ப்பது போன்றவற்றில் அளவு தப்பினால் அதை விற்பனைக்கு அனுப்ப முடியாது.

50 போர்டுகளை செய்ய 4 நாட்கள் ஆகும் என்றாலும் மாதத்துக்கு தொடர்ச்சியாக ஒரே அளவிலான போர்டுகளை செய்ய மாட்டோம். பந்தயங்கள் மற்றும் கிளப்புகளுக்கான போர்டுகளை செய்வதற்கு அதிக நாட்கள் எடுக்கும். ஏனென்றால் இந்த வேலை முழுக்க முழுக்க மனித உழைப்புதான். அப்போதுதான் தரம் கிடைக்கும்.

ஆனால் ஆண்டு முழுவதும் இதற்கான ஆர்டர்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக டிசம்பர் மாதமும், கோடை விடுமுறை மாதங்களிலும் அதிக அளவிலான ஆர்டர்கள் கிடைக்கும். பெரிய போர்டுகள் செய்யும் போது கழித்து கட்டும் பலகைகளை வைத்து சிறுவர்கள் விளையாடும் சின்ன போர்டுகளை செய்யலாம். மதுரை, கும்பகோணம், திருச்சி போன்ற கோவில் நகரங்களில் விற்பனை வாய்ப்புகள் அதிகம். வீட்டுக்குள் விளையாடுவதற்கு ஏற்றது மட்டுமல்ல, குடும்பத்துடன் விளையாடவும் தோதானது கேரம்போர்டு மட்டுமே. இப்போது நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றார்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-குடும்பத்துடன்-இருக்க-வாய்ப்பு-கொடுத்த-தொழில்/article9367938.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து... படமும் பெற்று விட்டு, நல்ல சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைத்தும்,  அதனையும் விட்டு விட்டு..... பெற்றோர், உறவினர்களுடன் ஊரில் இருக்க வேண்டும் என்பதற்காகவே... சொந்த ஊரில் தொழில் தொடங்கிய இவரை நினைக்க பெருமையாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: பெரிய முயற்சிகளே திரும்பிப் பார்க்க வைக்கும்...

 

kannan_3095163f.jpg
 
 
 

“முதல் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்னர் பல சோதனைகள் காத்திருக்கும், மனசை தளர விடக்கூடாது, தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருப்பதுதான் வெற்றியை நோக்கிய வழி’’ என்கிறார் கண்ணன். கோயம்புத்தூர் நகரின் மைய பகுதியான கணபதியில் அபாகஸ் கருவி தயாரிக்கும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ள தொழில்முனைவோரான இவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

“மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து விட்டு உதிரிபாகங்கள் மற்றும் அச்சு தயாரிக்கும் தொழிலில் இறங்கினேன். படிக்கும் காலத்தில் வந்த ஆர்வம் மற்றும் நான்கு மாதங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்த அனுபவத்தோடு சொந்த தொழிலில் இறங்கிவிட்டேன். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பாக செய்தால் ஆர்டர்கள் கிடைத்துவிடும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் நினைத்ததுபோல அவ்வளவு சுலபமில்லை என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். சின்ன சின்ன வேலைகள் வந்தாலும் அதைக் கொண்டு பெரிய அளவில் வளர முடியாது. பெரிய அளவில் செய்தால்தான் நம்மை கவனிப்பார்கள்.

அதைக் கொண்டுதான் வளர முடியும் என்பதை பிறகு என் அனுபவத்தில் உணர்ந்தேன். பத்து ரூபாய் விலையில் ஆயிரம் பொருள் தயாரித்தால் கிடைக்கும் மரியாதையை விட, ஆயிரம் ரூபாய் விலையில் பத்து பொருள் கொடுக்கும்போது கிடைக்கும் மரியாதை வேறாக இருந்தது. அதுதான் நம்மை கவனிக்க வைக்கும் என்பதால் கோவையில் ஒரு முக்கிய தொழில் நிறுவனத்தில் பெரிய ஆர்டரை வாங்கி விட வேண்டும் என்று இலக்கு வைத்து வேலைகளில் இறங்கினேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கிடைத்தாலும் நம்மை நிரூபித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். தோராயமாக 500 முறையாவது ஆர்டர் கேட்டு சென்ற போராட்டத்துக்கு பிறகு முதல் ஆர்டர் கிடைத்தது.

அதுபோல ஒரு எம்என்சி நிறுவன ஆர்டருக்கு அலைந்தேன். அவர்கள் எனது இடத்தை பார்த்துவிட்டு இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் சிஸ்டமேட்டிக் வேலைகள் இல்லை என்று சென்றுவிட்டனர். என் தயாரிப்பு தரத்தை பார்த்து வேலை கொடுங்கள், நான் வேலைகளினூடே கட்டமைப்பை மேம்படுத்துகிறேன், அதற்கு பிறகு வந்து பார்வையிட்டு முடிவு செய்யுங்கள் என்று உறுதியாக நின்று ஆர்டர் வாங்கினேன். அவர்களுக்கு 2 மாதத்தில் கிடைக்கும் வேலையை பத்து நாட்களில் முடித்து கொடுத்தேன். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தொழில் முனைவோராக என்னை மேம்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்தேன்.

அபாகஸ் முறை பரவலாக கவனம் பெற்று வந்தபோது அப்படியே இதற்கு மாறிக் கொண்டேன். எனக்கு ஏற்கெனவே தொழில்நுட்ப கருவிகள் தயாரிப்பது குறித்த அனுபவம் இருந்ததால் பெரிய சிரமமில்லை. ஆனால் மார்க்கெட்டிங் அப்படியில்லை. யாரும் நம்மை தேடி வர மாட்டார்கள். நாம்தான் செல்ல வேண் டும், சில பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும், சில இடங்களுக்கு பல மாதங் கள் அலைய வேண்டும். ஆனால் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு சென்றுவிட்டால் வாடிக்கையாளர்கள் நம்மை விட்டு விலக மாட்டார்கள். இந்த தொழிலில் ஆண்டு முழுவதும் சீரான விற் பனை இருக்காது. பள்ளிகள் தொடங்கும் ஜூன்-ஜூலை மாதங்களில்தான் அதிக விற்பனை நடக்கும்.

அதுபோல மார்க்கெட்டிங் வேலைகளை திட்டமிட்டு செய்வதில்லை. ஒரு ஊருக்குச் செல்கிறேன் என்றால் எனது பையில் நான்கைந்து அபாகஸ் கருவிகளை எடுத்துச் செல்வேன். ஒரு பள்ளிக்கூடம், ப்ளே ஸ்கூல், டியூஷன் சென்டர், டிரெயினிங் இன்ஸ்ட்டியூட் என எல்லா இடங்களுமே எனக்கான மார்க்கெட்டிங் இடங்கள்தான். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில்கூட எனது மார்க்கெட்டிங் வேலைகள் நடக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இபடித்தான் எனது பயணங்கள் அமைந்துள்ளன. தற்போது இந்தியா முழுவதும் அபாகஸ் கருவியை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். பத்து பேர் வேலை பார்க்கிறார்கள். கருவியை அனுப்பி வைப்பது மட்டுமல்லாமல் அபாகஸ் குறித்த பயிற்சி கொடுப்பதன் மூலம் பலருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளேன்.

எனது அனுபவத்தில் நான் உணர்ந்ததும் உணர்த்துவதிலும் முக்கியமானது, தொழில்முனைவோராக எப்போதும் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம் என்பதுதான். ஒரே வேலையை எந்த முன்னேற்றமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்றால், எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் திருப்தி இல்லாமல் போய்விடும். சொந்த தொழில் என்பதே ஒரு திருப்தியான உணர்வுதானே என்றார்.

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-பெரிய-முயற்சிகளே-திரும்பிப்-பார்க்க-வைக்கும்/article9393922.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: திறமையில் தெளிவாக இருக்க வேண்டும்

unnal_3099186f.jpg
 
 
 

வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும் கோவை, திருப்பூர் போன்ற பெருந்தொழில் நகரங் களில் தங்களுக்கு தனி அடையாளம் வேண்டும் என்று நினைத்து தொழில் செய்பவர்கள்தான் மற்றவர்களின் கவ னங்களை ஈர்க்கிறார்கள். கோவையைச் சேர்ந்த சதீஷ், தனசேகரன் இருவரும் அதற்காக உழைத்து வருகின்றனர். ஜவுளித்துறையின் துணைத் தொழில்களில் ஒன்றான பேக்கிங் உறைகள் தயாரிப்பில் ஈடுபடும் இவர்களது அனு பவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

நான் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் முடித்துவிட்டு ஒரு டூல்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலையில் இருந்தேன். தனசேகர் எம்சிஏ முடித்து விட்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்தார் என ஆரம்பித்தார் சதீஷ். நாங்கள் பள்ளியிலிருந்தே நண்பர்கள், தினசரி சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது பிசினஸ் செய்யலாம் என பேசிக் கொள்வோம். ஆனால் டூல்ஸ், டெக்ஸ்டைல் என்று எல்லோரும் செய்வதையே செய்யக்கூடாது. அதில் நமக்கு முன் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள், அதனால் நாம் ஜெயிச்சாலும் பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிவோம். தனியா தெரியணும் என்றுதான் பேச்சு முடியும்.

அப்படி ஒரு நேரத்தில் சட்டென பிடிபட்டதுதான் இந்த தொழில். இதற்கான சந்தையும் திருப்பூர், கோவையில் இருக்கிறது. தவிர பிசினஸ் என்கிற கவுரவும் கிடைக்கும் என யோசித்தோம். ஆரம்ப கட்ட வேலைகளுக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதங்களில் வேலையி லிருந்து வெளியேறினோம்.

இயந்திரம், மூலம்பொருட்களில் முதலில் கவனம் செலுத்தினோம். மார்க் கெட்டிங் வாய்ப்புதான் ஏராளமாக இருக்குதே என முதலிலேயே அதிலும் கவனம் செலுத்தவில்லை. அது தவறு என பிறகு உணர்ந்தோம். எங்களது சேமிப்பு, வீட்டினர், நண்பர்கள் கடன் என உதவிகளோடு இயந்திரம், மூலப் பொருட்கள் வாங்கிவிட்டோம்.

இணைய வீடியோக்கள், இயந்திர விற்பனையாளர் உதவிகள் மூலம் தயாரிப்பு முறைகளையும் கற்றுக் கொண் டோம். வேலைகளில் முறையாக தேறிய பின் மார்க்கெட்டிங் இறங்கினோம். வாய்ப்புகள் ஏராளமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சப்ளை செய்பவர்கள் என, நம்மீது நம்பிக்கை இருந்தால்தான் ஆர்டர் கொடுப்பார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. ஒரு நிறுவனத்துக்குள்ளும் விடவில்லை.

பேக்கிங் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளை பின் தொடர்ந்து சென்று எந்த நிறுவனங்கள் இவற்றை வாங்குகிறார்கள் என தெரிந்து கொண்டு, பிறகு அங்கு சென்று ஆர்டர் கேட்போம். ``புதியவர்களை நம்பி கொடுத்தால், நீங்க குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க வில்லை என்றால், எங்க வேலை வேற வகையில் பாதிக்கப்படும், இதனால தான் புதியவர்களுக்கு ஆர்டர் கொடுப்ப தில்லை’’ என சில நிறுவனங்களில் நேரடி யாகச் சொன்னார்கள். தவறினால் அப ராதம் விதிப்பார்கள் என்பதும் தெரிந்தது.

இதற்கு பிறகு நாம் முதலில் நேரடியாக விற்பனைக்கு இறங்குவதைவிட ‘ஜாப் ஒர்க்' செய்து கொடுப்போம். அதில் கிடைக்கும் தொடர்புகள் மூலம் மீண்டும் நேரடியாக இறங்குவோம் என முடிவு செய்தோம். அதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் இப்படி வேறொருவருக்கு வேலை செய்து கொடுத்தோம். எங்களுக்கு எந்த லாபமும் நிற்காது. சம்பளமும் கிடையாது. வருகிற பணம் மூலப்பொருளுக்கே சரியாக இருக்கும். இந்த சமயத்தில் வீட்டினரும் நம்பிக்கை இழந்தனர். ``வேலையில் இருந்தாலாவது ஏதாவது வருமானம் கிடைச்சிருக்கும். இப்படி எவனுக்கோ உழைக்கிறீங்களே என சொல்வார்கள். ஆனா எங்களுக்கு நம்பிக்கை இருந்தது நாங்க ஜெயிப்போன்னு என்று நிறுத்து கிறார் சதீஷ்.

தொடர்ந்த தனசேகர் ‘‘நடிக்க சான்ஸ் கேட்டு அலைஞ்சு, சாதிச்சு காமிக்கிறோம்னு சவால் விட முடியாது, ஆனா நாங்க பிசி னஸ்ல சாதிச்சு காமிக்க முடியும்’’ என வீட்டில் சொல்லி சமாளிப்போம். அந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனியாக இறங்கியபோது ஆர்டர்கள் கிடைத்தன.

ஆனால் எங்க துரதிஷ்டம் முதல் ஆர்டரி லேயே சொதப்பினோம். மூன்று நாட்களில் முடித்து தருவதாக ஆர்டர் வாங்கி வந்தோம். ஆனால், முதல் நாள் பவர் கட், அன்று இரவு பெய்த மழையில் கம்பெனிக்குள் தண்ணீர் வந்துவிட்டது. மேலும் மூன்று நாள் அவகாசம் கேட்டு செய்து கொடுத்து, அபராதம் கட்டவும் செய்தோம்.

இப்படி பல அனுபவங்களோடு, இப்போது இரண்டாவது ஆண்டில் நல்ல நிலைமையை அடைந்துள்ளோம். நான்கு நபர்களுக்கு வேலை அளித்துள்ளோம். ஆட்கள் பாற்றாக்குறை தவிர வேறு பிரச்சினைகள் இந்த தொழிலில் கிடையாது. ஆனால் இரண்டு நாளில் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு நான்கு நாட்கள் இழுக்கக்கூடாது இதுதான் சிக்கலாகும். நான்கு நாட்களில் செய்யும் வேலையை இரண்டு நாளில் முடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கலாம்; இதுதான் எங்களை வளர்க்கிறது என்று முடித்தார்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-திறமையில்-தெளிவாக-இருக்க-வேண்டும்/article9411093.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: சீரான வளர்ச்சியே நீடித்து நிற்கும்

unnal_3102637f.jpg

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் வேங்கடசுப்ரமணியன். கிண்டி, மடுவங்கரையில் அலுவலக பைல்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். “மென்பொறியியல் படித்துவிட்டு அமெரிக்கக் கனவோடு இருந்த என்னை காலம் காகித கோப்புகள் தயாரிக்க இறக்கியது. வெற்றி தோல்வி அனுபவங்களோடு, இப்போது சிறப்பான இடத்தில் உள்ளேன்’’ என மகிழ்ச்சியோடு குறிப்பிடும் இவரது அனுபவம் இந்த வாரம் “வணிக வீதி’’யில் இடம் பெறுகிறது.
பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கோயம்புத்தூர் தொழில் நுட்பக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் பட்டம். அமெரிக்கா செல்ல வேண்டும் என்று அதீத ஆர்வம். ஏனென் றால் அப்போதுதான் ஐடி துறை வளர்ச்சி மெல்ல உருவாகி வந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலையால் செல்ல முடிய வில்லை. இதனால் எனது அப்பாவிடம் கோபித்துக் கொண்டுதான் சொந்த தொழில் செய்யப்போகிறேன் என்று இறங்கினேன்.

அப்போது என்னோடு படித்த இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது தொழிலில் இறங்கலாம் என திட்டமிட்டு டீத்தூள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினோம். அதில் ஏற் பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து காகித அட்டை முகவர் தொழிலை தொடங்கலாம் என யோசித்தோம். என் நண்பர் ஒருவரது உறவினர் காகித அட்டை தொழிலில் இருந்ததால் அவரிடம் டீலராக சேர்ந்தோம். கூடவே வேறு சில நிறுவன தயாரிப்புகளையும் வாங்கி விற்கத் தொடங்கினோம். அதன் அடுத்த கட்டமாக பைல் தயாரிக்கும் தொழிலில் இறங்கினோம்.

நேரடியாக சில்லரை வர்த்தகத்துக்கான பைல்களை தயாரிப்பதைவிட, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு தயாரித்து கொடுப்பவர்களிடம் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி செய்து கொடுத்தோம். அலுவலக பயன்பாட்டு பைல்கள் தவிர, வங்கிகள், நிதி நிறுவனங்களில் வீட்டுக்கடன், அடமானக் கடன் குறித்த ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கும் பிரத்யேக பைல்களையும் தயாரித்தோம். இந்த தயாரிப்பில் சில ஆண்டுகளிலேயே நல்ல வளர்ச்சியை கண்டோம். கோவையில் உள்ள நண்பர்கள் உற்பத்தியைக் கவனித்துக் கொள்ள, நானும் மற்றொரு நண்பரும் சென்னையில் மார்க்கெட்டிங் வேலைகளைக் கவனித்துக் கொண்டோம்.

எஸ்பிஐ, எல்ஐசி, சுந்தரம் பைனான்ஸ், ஐசிஎப் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் எங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். இதற்கிடையில் நான் தனியாக சென்னையில் பிபிஓ சார்ந்த இ-பப்ளிஷிங் தொழிலில் இறங்கினேன். ஆனால் எனது நிர்வாக தவறுகளால் மிகப் பெரிய சரிவை சந்தித்தேன். இந்த நிலையில் பைல் தயாரிப்பு நிறுவனத்திலும் சிக்கல் உருவானது. கோவையில் இருந்த நண்பர் தனியாக வேறொரு நிறுவனம் தொடங்கி, ஆர்டர்களை அங்கு மாற்றிக் கொண்டது எங்களுக்கு தெரியவில்லை.

இதனால் நண்பர்களுக்குள் முரண்பாடு உருவாகியதில் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினேன். தொழில் நஷ்டம், நண்பர்களின் துரோகம், கடன் என பல வகையிலும் இழப்பு ஏற்பட்டதால் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. பாரிமுனையில் காகித அட்டை மொத்த விற்பனையாளர் ஜேம்ஸ், அந்த நேரத்தில் பக்க பலமாக இருந்து, ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு எடுத்து கொடுத்து உதவி செய்தார். முதல் நிறுவனத்திலிருந்தே ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் சேர்ந்து என்னை அடுத்த கட்ட வெற்றிக்காக இயக்கியது.

திரும்பவும் வடிவமைப்பு, மார்க்கெட் டிங், தயாரிப்பு என இறங்கினேன். ஏற்கெனவே இருந்த வாடிக்கையாளர்கள் தவிர, மருத்துவமனைகளுக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளையும் மேற்கொண்டு புதிய வாடிக்கையாளர்களையும் உருவாக் கினேன். இரண்டு மூன்று ரூபாய் அதிகம் என்றாலும் நீண்ட காலத்துக்கு உழைக்கும் தரமானவை மட்டுமே கொடுத் தேன். பழைய அனுபவங்கள் ஒவ்வொன் றும் என்னை வழிநடத்தத் தொடங்க இப்போது தொழிலில் முழு கவனமும் செலுத்தி வருகிறேன். 22 நபர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்துள்ளேன்.

பைல்கள் உற்பத்தி தவிர மருத்துவமனைகளில் பயன்படுத்தும் காகித படுக்கை விரிப்புகளைக் கேட்டும் ஆர்டர் வருகிறது. வங்கிக் கடன் உதவியோடு அதற்கான இயந்திரங்களை வாங்கும் முயற்சிகளில் உள்ளேன். ஒரு தொழிலை எப்படி நடத்துவது என்பதைவிட, எப்படி நடத்தக் கூடாது என்பதில் தெளிவு கிடைத்துள்ளது. புதிதாக தொழில் தொடங்கும் பலருக்கும் என் அனுபவத்திலிருந்தே பல ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறேன். உண்மையாக உழைத்தாலும் சிலருக்கு தாமதமாகத்தான் வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கு பிறகு அது உங்களை விட்டு போகாது. இப்போது நான் அந்த இடத்தில் இருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக விடை கொடுத்தார்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சீரான-வளர்ச்சியே-நீடித்து-நிற்கும்/article9423006.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: உழைப்பு மட்டுமே நம்மை வளர்க்கும்

அ.அஜய் பிரசாத், இமேஜ் ஸ்டைல், கரூர்.

அ.அஜய் பிரசாத், இமேஜ் ஸ்டைல், கரூர்.

ஜவுளித் துறை நகரமான கரூரில் பல பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில் தனது அனுபவத்தை நம்பி சிறிய அளவில் தொழில் தொடங்கியவர் அஜய் பிரசாத். இன்று பல நாடுகளுக்கும் தனது தயாரிப்புகளான ஏப்ரன், டேபிள் கிளாத் போன்றவற்றை அனுப்பி வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

கரூர்தான் சொந்த ஊர். படித்து முடித் ததும் வேறு ஊருக்கு வேலை தேடி போக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இங்கேயே பல வேலை வாய்ப்புகள் இருந் தன. எனது உறவினர்கள் ஏற்கெனவே கொசுவலை தயாரிப்புகளில் இருந்தனர். ஆனால் அந்த தொழில் நலிவடைந்ததால் அதிலிருந்து வெளியேறிவிட்டனர். இதற் கிடையில் படித்து முடித்துவிட்டு ஒரு நிறு வனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கரூரில் ஜவுளி தொழிலில் பிரதானமாக உள்ளது ஏற்றுமதிக்கான தயாரிப்புகள்தான். ஏப்ரன், கிளவுஸ், டேபிள் கிளாத் போன்றவை ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படுகின்றன. அங்கு இரண்டு ஆண்டுகள் அனுபவத்துக்கு பிறகு சொந்தமாக இறங்க முடிவு செய்தேன். இது முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கான தொழில். ஏற்கெனவே மிகப் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவர்களோடு போட்டி போடுவது என்பது சாதாரணமானதல்ல, ஆனால் வெளிநாட்டு ஆர்டர்களை பிடிப்பதற்கு இங்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நேரத்திற்கு சப்ளை செய்வதும், தரமாகவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்பதுதான் கரூரில் உள்ள நிலைமை. நான் அந்த ரிஸ்க் எடுத்த போது எனக்கு வயது 24தான்.

முக்கியமாக வெளிநாடுகளில் நடை பெறும் கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்கு வரும் வாடிக்கையாளர் தொடர்புகள், நவீன இயந்திரங்கள் குறித்த அனுபவமும் கிடைக்கும். ஆனால் தொழில் தொடங்கிய நான்கு ஆண்டுகள் வரை எனக்கு வெளிநாட்டு கண்காட்சிகளுக்கு போகும் அளவுக்கு வசதிகள் கிடையாது. ஆன்லைன் ஆர்டர்களை நம்பித்தான் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டாக மெல்ல விற்பனை அதிகரித்தது, ஆண்டுக்கு ஒரு முறை வெளிநாட்டு கன்காட்சிக்கு செல்ல தொடங்கி, இப்போது ஆண்டுக்கு நான்கு கண்காட்சிகள் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

இந்த தொழிலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்ப வேண்டும். நேரத்தை தவறவிட்டால் கப்பலில் அனுப்ப வேண்டிய பொருட்களை விமானம் மூலம் அனுப்ப வேண்டிய நெருக்கடி உருவாகும். இதனால் நமக்கு கூடுதல் செலவாகும். அல்லது ஆர்டரே கேன்சல் ஆகலாம். இப்போது எனக்கு பதினோரு ஆண்டு அனுபவம் உள்ளது. ஆனாலும் இப்போதும் ஒன்றிரண்டு ஆர்டர்கள் இதுபோல ஆகிவிடும்.

நமக்கு துணை வேலைகளை பார்த்து கொடுக்கும் நிறுவனங்கள் காலதாமதப் படுத்தினால் இந்த சிக்கல்கள் உருவாக லாம். ஆனால் அவர்கள் இந்த சிக்கல்கலை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். வெளியில் கொடுத்து வாங்கும் பொருட்களை அப்படியே அனுப்பி விடவும் முடியாது. ஒரு கண்டெய்னரில் சோதனைக்கு எடுக்கும் ஒன்றிரண்டு பொருட்களில் சின்ன நூல் பிரிந்திருந்தாலும் மொத்தமும் திரும்பி விடுவார்கள். செக்கிங், பேக்கிங் வேலைகள் நமது கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதுபோல பிராண்டிங் வேலைகளையும் நாமே மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் தொழிலுக்கு முக்கியமான இன்னொரு அத்தியாவசிய தேவை. மொழி. ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். என்னதான் நமது தயாரிப்புகள் தரமாக இருந்தாலும், அதை சரியாக விளக்கத் தெரிந்திருக்க வேண்டும். வெளிநாட்டு கண்காட்சிகளில் கலந்து கொள்ள இதுதான் முக்கியதேவையாக உள்ளது. நான் ஆங்கில வழியில் படித்திருந்தாலும், ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தது. தொழிலில் முழு வீச்சாக இறங்கியபோது இதற்கும் கவனம் செலுத்தி கற்றுக் கொண்டேன்.

தவிர அப்டேட் மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது தயாரிப்பு பொருட்களுக்கு ஏற்ப மட்டும் மாடல்களை யோசிக்ககூடாது. நாம் எந்த நாட்டு வாடிக்கையாளர்களை வைத்துள்ளோமோ அங்கு நிலவும் டிரண்டுக்கு ஏற்ப மாடல்கள் அமைய வேண்டும். இப்போது அதிகளவில் ஜப்பா னுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.

இப்போது நேரடியாகவும் மறைமுக மாகவும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை அளித்து வருகிறேன். இதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. இளம் வயதில் துணிச்சலாக இறங்கியதுதான் இப்போது என்னை வளர்த்துள்ளது. இந்த தொழிலில் இப்போதும் புதியவர்களுக் கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஏற்றுமதியாளருக்காக அரசும், வங்கி களும் உதவி செய்கின்றன. ஆனால் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இறங்கக் கூடாது. நமது உழைப்பு மட்டும் நம்மை வளர்க்கும் என்கிறார் அஜய்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-உழைப்பு-மட்டுமே-நம்மை-வளர்க்கும்/article9433878.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.