Jump to content

திருச்சி - மலைகோட்டை மாநகரில் ஒரு இன்ப சுற்றுலா


Recommended Posts

திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.  
 

 

11-1426074305-7742390964-571191fe98-k.jp

 

திருச்சியின் வரலாறு :
திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் என பல்வேறு மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது.
 
கி.மு 3ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை இந்நகரை ஆட்சி செய்த சோழர்களின் தலைநகரமாக உறையூர் இருந்திருக்கிறது. வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சி சார்ந்த விஷயங்களில் நாட்டம் உடையவர்கள் நிச்சயம் உறையூருக்கு வர வேண்டும். 
 
கல்லணை 
 
11-1426074267-1309253561-8dc4e31f5c-b.jp
 
அறிவியல் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் காட்டப்படும் அணைகளே சில வருடங்களில் விரிசல் விடும் போது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் பிரமாண்டமாக வீற்றிருக்கிறது.
 
11-1426074311-8914125134-22b5443282-k.jp
 
பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் குறுக்கே கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை உலகத்தில் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான அணை என்ற சிறப்பை பெற்றுள்ளது. திருச்சி நகரில் இருந்து 15கி.மீ தொலைவில் இந்த அணை அமைந்திருக்கிறது. 
 
இந்த அணையினால் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் டெல்டா விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனை கட்டிய கரிகால் சோழனை கவுரவிக்கும் பொருட்டு கல்லனைக்கு அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. திருச்சிக்கு செல்கையில் நாம் தவறவிடக்கூடாத இடம் இந்த கல்லணையாகும். 
 
11-1426074342-cholan.jpg
கரிகால் சோழன். 
 
உச்சி பிள்ளையார் கோயில் :
 
11-1426074292-6357418619-cd84dc50e7-b.jp
 
திருச்சி என்று சொன்னதுமே பலருக்கு நினைவுக்கு வரும் ஓரிடம் இருக்குமென்றால் அது மலைகோட்டையின் மேல் அமைந்திருக்கும் உச்சி பிள்ளையார் கோயில் தான். 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தமிழ் நாட்டில் இருக்கும் மிக முக்கியமான விநாயகர் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. 
 
குடைவரைக் கோயில்கள் கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் காலத்தில் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டாலும் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களே இக்கோயிலை முழுமையாக கட்டி முடித்திருகின்றனர். 
 
11-1426076334-4395012200-a013561dc8-b.jp
 
திருச்சி நகரின் அழகை முழுமையாக காண விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த மலைக்கோட்டைக்கு வர வேண்டும். இதன் மேல் நின்று திருச்சி நகரின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்க முடியும். 
 
11-1426076340-15710167355-df58715837-k1.
 
 

 

Link to comment
Share on other sites

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :
 
11-1426076668-16-1400232151-history.jpg
 
108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக வைத்து போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சியில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், 1000 ஆண்டுகளை தாண்டியும் இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
 
11-1426076797-16-1400232166-inscriptions
 
 
வரலாறு :
சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளே கோயிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும்.
 
 
11-1426076899-16-1400232221-rajagopuram.
 
ராஜகோபுரம் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே 3-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜகோபுரம் மட்டும் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபிலா மடத்தால் முழுமை பெற்றது.
 
11-1426076990-16-1400232074-chandrapushk
 
சந்திர புஷ்கரணி ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த சந்திர புஷ்கரணி வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆடம்பர தீர்த்தம் ஆகிய எட்டுத் தீர்த்தங்களால் சூழப்பட்டுள்ளன. சந்திரபுஷ்கரணியும், ஸ்தல விருட்சமான புன்னை மரமும் பரமபதவாசலுக்கும், ஸ்ரீகோதண்டராமன் சன்னதிக்கும் இடையே அமைந்துள்ளன.
 
11-1426077103-16-1400232101-festivals.jp
 
திருவிழாக்கள் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி, சித்திரைத் தேரோட்டங்கள் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. 
 
ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் சில அற்புதமான புகைப்படங்கள்
 
11-1426077371-16-1400232109-fromrockfort
 
11-1426077515-16-1400232203-pillarsandho
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தூண்களில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள குதிரைச் சிற்பங்கள்
 
11-1426077567-16-1400232116-fullmoonday.
ஒரு பௌர்ணமி தினத்தன்று!
 
11-1426077691-16-1400232051-carfestival.
 
11-1426077817-16-1400232036-1000pillars.
1000 தூண் மண்டபம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 1000 தூண் மண்டபம். 
 
/tamil.nativeplanet.com/travel-guide/trichy-the-city-temples-rich-history-000408.html#slide5878
 
 

 

Link to comment
Share on other sites

  • 1 year later...

சம்மர் டூர் : பச்சைப்பசேல் மலை குதூகலிக்க முக்கொம்பு 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருச்சியில் மலைக்கோட்டை, உறையூர் வெக்காளியம்மன் கோயில், சுற்றுப்பகுதிகளில் ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், உத்தமர்கோவில், குமாரவயலூர், செயின்ட் ஜோசப் சர்ச் என ஆன்மீக தலங்கள் மட்டுமின்றி கோடைகாலத்தை சில்லென்று கழிப்பதற்கு ஏற்ற இடங்களும் நிறைய உள்ளன.

பச்சமலை 

எங்கும் பச்சை போர்த்தியது போல் மரங்கள், ஜில்லென்று வீசும் காற்று, மூலிகை மணத்துடன் கூடிய சுவாசம் ஆகியவற்றை அளிக்கும் இடம் பச்சமலை. திருச்சி மாவட்டத்தின் கடைசி பகுதியாக கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக, சுமார் 19 ஆயிரத்து 76 ஹெக்டேர் பரப்பில் விரிந்துள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி திருச்சி மாவட்டத்திலும், நேர் எதிர்பகுதி சேலம் மாவட்டத்திலும் உள்ளது. மற்ற சுற்றுலா தலங்கள் போல இங்கு விடுதி, ஓட்டல்கள் அவ்வளவாக இல்லை. ஆனாலும், கட்டிட ஆக்கிரமிப்புகள் குறைவு என்பதால் சூழல் இன்னமும் பசுமையாக, இயற்கையாகவே இருக்கிறது. மலைவாழ்மக்கள் வாழும் பகுதியாகவே பச்சமலை உள்ளது. 

சுற்றுலாவுடன், மலைவாழ் மக்களின் பாரம்பரிய வரவேற்பும், அவர்களுடன் ஒருநாள் தங்குவது, அவர்களின் கலாசாரத்தை அறிதல் ஆகியவற்றுக்கான பயண திட்டங்களுடன் கூடிய பேக்கேஜ் திட்டமும் இங்கு உள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கேற்ப, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பேக்கேஜ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு வனத்துறையிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில், மலைவாழ் மக்கள் சமைத்த உணவு, தெருக்கூத்து, நடனம், உறியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை கண்டு களிக்கலாம். இரவில் அங்குள்ள ஓய்வு விடுதியில் தங்கிக்கொள்ளலாம். 

இது 24 மணி நேர பேக்கேஜ் திட்டம். ஒரு நாளைக்கு 4 குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி. ஒரு குடும்பத்துக்கு (4 பேர்) ரூ.2 ஆயிரம் கட்டணம். பச்சமலை கீழ்கரை பேக்கேஜ் என்ற திட்டமும் உள்ளது. இதில் ஒரு நாளுக்கு 100 பேருக்கு அனுமதி. பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.300, சிறியவர்களுக்கு ரூ.200. திருச்சியில் இருந்து துறையூர் 45 கி.மீ. தூரம். அங்கிருந்து அடிவாரம் வழியாக பச்சமலையின் கிழக்கு பகுதிக்கு செல்ல 25 கி.மீ. தூரம். அதேபோல, மேற்கு பகுதியான டாப்செங்காட்டுப்பட்டி செல்ல துறையூரில் இருந்து 35 கி.மீ. தூரம். இரண்டு பகுதிகளுக்கும் துறையூரில் இருந்து குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் டவுன் பஸ் வசதி உண்டு.

பொண்ணனியாறு அணை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது பொண்ணனியாறு அணை. பெருமாள்மலை மற்றும் செம்மலைக்கு நடுவே உள்ளது. முன்பு சிறு ஓடைபோல் இருந்த இப்பகுதியில் 2 மலைகளையும் குடைந்து அகலப்படுத்தி 37 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை. பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. ஏராளமான மான்களும் உள்ளன. திருச்சியில் இருந்து செல்வதாக இருந்தால் மணப்பாறை வழியாக வையம்பட்டி சென்று அங்கிருந்து இடையப்பட்டி வழியாக பொண்ணனியாறு அணைக்கு செல்லலாம். மணப்பாறையில் இருந்து பொண்ணனியாறு அணைக்கு தினமும் காலையில் அரசு டவுன் பஸ் செல்கிறது.

முக்கொம்பு

காவிரி, கொள்ளிடம் என அகண்ட காவிரி ஆறு இரண்டாக பிரியும் இடம் முக்கொம்பு. மேலணை எனப்படும் இது 1974-ல் கட்டிமுடிக்கப்பட்டது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் விரும்பிச் செல்லும் இடம். இங்குள்ள காவிரி, கொள்ளிட ஆற்றுப் பாலம், சுற்றிலும் நீர் இருக்க இரண்டு ஆறுகளுக்கு இடையில் உள்ள பூங்கா, நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், ஏரி ஆகியவை சம்மருக்கு ஏற்ற இடங்கள். குடும்பத்துடன் சென்று வர ஏற்ற இடம். இரவில் தங்க பொதுப்பணி துறைக்கு சொந்தமான அறை மட்டும் உள்ளது. திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்சில் செல்லலாம்.

கல்லணை

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அதிசயம் கல்லணை என்று போற்றப்படுகிறது. முற்கால சோழ அரசன் கரிகால் பெருவளத்தான் கட்டிய இந்த அணைதான் உலகில் முதன்முதலில் ஆற்று நீரை தேக்கிவைத்து கட்டப்பட்ட அணை என கூறப்படுகிறது. கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகளை குதிரையில் சிலையாக நின்று வரவேற்கிறார் கரிகால சோழன். கல்லணை பாலத்தில் அமர்ந்து பிரமாண்ட காவிரியை காண்பது தனி அழகு. மே மாதம் துவங்கி ஜூலை வரை சீசன் காலம். காவிரி ஆற்றில் மீன் பிடித்து அங்கேயே வறுத்து தருவார்கள். அணையை ஒட்டி பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ளது என்றாலும், திருச்சி வழியாக செல்வதுதான் எளிது. திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் கல்லணை உள்ளது. டூவீலர் அல்லது காரில் திருச்சியில் இருந்து காவிரிக் கரை வழியாக செல்லலாம். திருச்சி, தஞ்சையில் இருந்து கல்லணைக்கு நேரடியாக பஸ் வசதியும் உள்ளது.

www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=6018#sthash.WsEGCXkm.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்...வாசிக்க ஆவல்

Link to comment
Share on other sites

எத்தனை தடவைகள் பார்த்தாலும் ஆறாதது தமிழ் நாட்டு அழகு .

Link to comment
Share on other sites

இந்த சுற்றுலா நல்லதுகள் பற்றியே எழுத்துக்கள் இருக்கும் இன்றும் கல்லனைக்கு சுற்றுலா செல்வோரிடம் பிராடு தனம் பண்ணும் கும்பல் பற்றி விகடனிலோ எதோ ஒன்றில் படித்த நினவு வந்து போகின்றது நன்றி ஆதவன் இணைப்புக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.... எனக்குப் பிடித்த நகரங்களில் முதலாவது திருச்சி, அடுத்து கோயம்புத்தூர்.
பகிர்விற்கு நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.