Jump to content

அந்தப் பத்து நிமிடங்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"இன்று செவ்வாய்க்கிழமை. வேலைவிட்டு நேரத்திற்கே கிளம்பி வந்துவிட்டது வசதியாகி விட்டது. இன்றும் அவள் வருவாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கண்களாலேயே மட்டும் பேசிக்கொள்ளும் எமது உணர்வுகள் மாற்றங்கள் ஏதுமின்றி இன்றைக்கும் தொடரும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே காரிற்குள் காத்திருந்தேன். பிண்னனியில் இலளையாராஜாவின் பாடல்கள்  மெதுவாக மனதைத் தாலாட்டிக்கொண்டிருக்க அவள் வரும் வழி பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நெருங்க நெருங்க மனது துடிப்பது எனக்கு வெளியே கேட்டது.

 

என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த காரெல்லாவற்றையும் மனம் அங்கலாய்ப்புடன் பர்த்துக்கொண்டது. அவளில்லை. சரி, 3 மணியாகிறது, இனிக் கிளம்பலாம் என்று நான் நினைத்திருக்க அவளது சாம்பல் நிறக் கார் வீதியின் ஆரம்பத்தில் திரும்புவதை எனது பின்கண்ணாடியில் பார்த்தேன். ஆகா, வந்துவிட்டாள், மனம் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது. அவள் மெதுவாக என்னைத் தாண்டி ஓட்டிச் செல்வதை ஆசையுடன் கடைக்கண்ணால் பார்த்தேன். நிச்சயம் நான் அங்கே நின்றிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவள் அதை வெளிக்காட்டப் போவதில்லை. வழமை போலவே எதுவும் தெரியாதவள்போல அவள் என்னைக் கடந்து சென்றாள்

 

ஒரு 20 அல்லது 30 மீற்றர்கள் சென்றிருப்பாள். அவளது கார் நின்றது. அப்படியே U Turn போட்டு வீதியின் மறுபுறத்தில் அவளது கார் என்னை நோக்கியபடி நிற்க அவள் நிறுத்தினாள். சிறுபிள்ளைபோல வெளியே இறங்கி தனது கார் யாரினதும் வீட்டின் Drive way மறித்து நிற்கிறதா என்று அவசரத்துடன் பார்த்தாள். முன்னும் பின்னுமாக அவள் அப்படி பார்க்கும்போது ஓரக்கண்ணால் என் பக்கம் பார்த்ததை நான் பார்த்தேன். மனதினுள் மின்சாரம் ஒன்று ஒரே பாய்ச்சலில் தலையிலிருந்து கால்வரை ஓடி மறைந்தது. இதுதான், இந்தப் பொழுதுதான் நான் நாள்தோறும் காத்திருப்பது. இதுபோதும் இன்றைக்கு. அவள் பேசக் கூடத் தேவையில்லை, பார்வைகளே போதும் என்றது மனது. இதையேதான் கடந்த இரண்டரை வருடங்களாக பாலாய்ப்போன மனம் சொல்லிவருகிறது

 

இன்னும் ஒரு 10 நிமிடத்தில் அவள் வந்து காரை எடுத்துக்கொண்டு என்னைத் தாண்டிப் போவாள். அப்போது அவளை இன்னும் ஒருமுறை பார்த்துவிடலாம் என்கிற ஆசையில் காரிற்குள் அவள் வரும்வரை காத்திருந்தேன். அவள் வந்தாள். காரை மெதுவாக ஓட்டிக்கொண்டே என்னைத் தாண்டி அவள் சென்றாள். அவள் அணிந்திருந்த குளிர் கண்ணாடியினூடாக அவள் என்னைப் பார்க்கிறாளா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பார்க்கவேண்டும் என்றே மனம் விரும்பியது. எந்தச் சைகையும் இல்லாமல் அவள் பின்கண்ணாடியூடு மறைந்தும் போனாள்.

 

சிறிதுநேரம் மனதில் இருந்த ஓட்டமெல்லாம் அடங்கிப்போக இனம்புரியாத சோர்வு ஏற்பட்டது. இளையராஜா காதல் டூயட்டிலிருந்து மாறி இப்போது தனிமையில் சோகக் கீதம் பாடிக்கொண்டிருந்தார். வந்தவேலை முடிந்தது என்று எண்ணி காரை ஸ்டாட் செய்துகொண்டே வீடு கிளம்பினேன்

 

நாளைக்கும் இதே இடத்தில் அவள் வருகைக்காகக் காத்திருப்பேன் என்கிற எண்ணமே புதுமையாக இருக்க (இது கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்தாலும் கூட) நாளை மாலையை எண்ணிக்கொண்டே வீடு சென்றேன்.

 

யாவும் கற்பனை ! (இதைச் சொல்லாட்டி இதை கதை என்று நம்பமாட்டாங்கள் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

யாவும் கற்பனை ! (இதைச் சொல்லாட்டி இதை கதை என்று நம்பமாட்டாங்கள் )

 

இதுதான்..,.. கதை என்று, இப்போது நம்பி விட்டோம்.... ரகு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நகரேலாது. நடக்கிறதைப் பார்க்கவேண்டியதுதான். இது ஒரு கதை கண்டியளோ ?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

Link to comment
Share on other sites

இரண்டரை வருடம் ஓவர் டைம் செய்கின்றீர்கள் போல  :lol:


என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் ஒருவர் ஓவர் டைமாக  பேப்பர் விநியோகிக்க வெளிக்கிட்டு இப்ப நடு ரோட்டில் நிற்கின்றார் :o  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை வருடம் ஓவர் டைம் செய்கின்றீர்கள் போல  :lol:

என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் ஒருவர் ஓவர் டைமாக  பேப்பர் விநியோகிக்க வெளிக்கிட்டு இப்ப நடு ரோட்டில் நிற்கின்றார் :o  .

 

 

அர்ஜுன் அண்ணா, இது கதை. எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

 

 

அவளது தமையன் பற்றி நான் இதுவரை எதுவும் எழுதவில்லையே  கு.சா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையும் பத்து நிமிடங்களும் என்னய்யா நடக்குது இங்க?

 

இப்பிடி சஸ்பென்சா விட்டுட்டுப்போய் இந்த ரகுநாதன் என்ன செய்கிறார்...எனக்கு முழுவிபரமும் தெரியோணும் இல்லை என்றால் தலை வெடிச்சுப்போடும். :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களாக அவளைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. Out of sight , out of mind என்று சொல்வார்களே, அப்படி அவளது நினைவுகள் சிறிது சிறிதாக இல்லாமல் ஒரு புள்ளியாகி மறைந்துபோகலாம் என்று நான் பிடிவாதமாக நினைத்திருந்தேன். இந்த சில வார காலமும் அதற்கு உதவி புரியும் என்று நம்பியிருந்தேன் ( இப்படிப் பல வார விடுமுறைகள் இந்த இரண்டரை வருடத்திலும் வந்து போயாச்சு....ஆனால் எதுவுமே மறைந்ததாக நினவில்லை). ஆனால் அவ்வப்போது அவளது நினைவு இடைக்கிடையே மின்னி மறைந்துகொண்டிருந்ததையும் நான் மறுக்கமுடியாது. காரில் இளையாராஜாவை ஒரு போதுமே நான் நிப்பாட்டியது கிடையாது. காரை start செய்தவுடன் அவர் பாடத் தொடங்கிவிடுவார், சொல்வழி கேளாத மனது அவர் பின்னாலேயே பாடிக்கொண்டு போகும். அப்போதெல்லாம் அவளின் நினைவுகள் தோன்றி மறையும். இந்த இளையராஜாவைக் கண்டுபிடித்தவனைக் கூட்டிவந்து நிறையக் கேள்வி கேட்க வேண்டுமென்றெல்லாம் ஆசையுண்டு............. :D

 

நேற்று மாலைநேரம், குளிர் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க எமது தேசத்தை குளிர்காலம் மெதுவாக அரவணைக்கத் தொடங்கியிருந்தது. வெளிச்சமும் இருட்டும் சங்கமிக்கும் ஒரு பொழுதில் எதேச்சையாக அவளைப் பார்த்தேன் (இது திட்டமிட்ட சந்திப்பில்லையென்றால் நம்பவா போகிறீர்கள் ?) . அவளும் என்னைப் பார்த்தாள். சிரித்தாள்...எனக்காகத்தான் அந்தச் சிரிப்பு என்று மனம் பிடிவாதமாக முடிவெடுத்தாலும், அவளுடனேயே வந்த அவளது உறவினரைப் பார்த்து அவள் சிரித்திருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அவள் சிரித்தவுடன் சொல்வழி கேளாத என்மனதும் சிரித்தது. அதை அவள் சட்டை செய்தாளா இல்லையா என்பதுகூட அந்த இருட்டில் தெரியவில்லை. Out of sight , out of mind என்பவற்றையெல்லாம் தூக்கித் தூரக் கடாசிவிட்டு மனமெல்லாம் ஆக்கிரமிக்க அவளது நினைவுகள் மீண்டும் வந்து மனதில் சப்பாணி போட்டு உட்கார்ந்துகொண்டது. அடக் கடவுளே !

 

காரை Start  செய்ததும் மீண்டும் இளையராஜா பாடத் தொடங்கினார். Situation song தேடித் தேடி விரல்களை தட்டிக் கொண்டு போனேன்.........அப்போது..... ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்றவேண்டுமோ.............அதுசரி, இந்தப் பாட்டுக்கு முன்பெல்லாம் இத்தனை அர்த்தம் புரிந்ததாக நினைவில்லையே என்று வியந்துகொண்டு மிதிக்கத் தொடங்கினேன்........நாளை மறுபடியும் அவளைக் காணப் போகும் 10 நிமிடக் காத்திருப்புக்காக !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

தமையனை விடுங்கோ

வீட்டுல ஆத்துக்காரிக்கு தெரியுமோ இல்லியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமையனை விடுங்கோ

வீட்டுல ஆத்துக்காரிக்கு தெரியுமோ இல்லியோ?

 

 

அதுதானே பார்த்தன், எங்கயடா ஒருத்தரும் இதைக் இதுவரை கேட்கவில்லை என்று................கதையென்று சொன்னாப் பிறகு இப்படியெல்லாம் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது ஈழப்பிரியன்........அப்புறம் அழுதுடுவேன் ! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த காதலா ? கலக்குறீங்க ரகு . தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விறுவிறுப்பான கதை சொல்லியாகிவிட்டீர்கள். தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  அனுபவப்பதிவுக்கு ரகு..... :icon_idea:

 

இதெல்லாம் சாதாரணம் ஐயா

முன்னோர்கள் எவ்வளவு அனுபவசாலிகள் :lol:

நாற்பது வயதில் இதை எவராலும் தடுக்கமுடியாது :icon_mrgreen:

இதுவும் கடந்து போகும் ராசா... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

........நாளை மறுபடியும் அவளைக் காணப் போகும் 10 நிமிடக் காத்திருப்புக்காக !

 

அவனவன் கோடி கோடியாக கொட்டுறான்.

 

மனதுக்கு சுகம் என்றால் ஒரு பத்து நிமிடத்தை வீணாக்குவது ஒன்றும் பெரிதல்ல.

 

அண்டமா முனிவரே தடக்குப்படும் போது நீங்கள் நாங்கள் எந்த மூலைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்டமா முனிவரே தடக்குப்படும் போது நீங்கள் நாங்கள் எந்த மூலைக்கு.

 

அது தானே....? :lol:

நாம் சொல்லி சமாளிப்பதற்காகத்தானே

நம் முன்னோர் இதையெல்லாம் எழுதிச்சென்றிருக்கிறார்கள்  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள் . அஹா அந்த பத்து நிமிடங்களுகாக பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.

இக்கதை கற்பனையா அல்லது இப்பெண் தான் முடிவில் உங்கள் மனைவியா ?

கற்பனை கதை என்று கூறிய பின்னரும் நான் இப்படி கேட்பது சரியில்லை .

ஆனால் இளமை நெஞ்சில் உருவாகும் அந்த ஏக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு எழுத்தாளர் காதல் கதை எழுதினால் அதை ஏன் அவரின் உண்மைக்கதையாக கொள்ள வேண்டும் ? கற்பனையில் வல்லவர்கள் எழுத்தாளர்கள். கற்பனையில் உதிப்பவற்றை

எழுத்து வடிவில் தருவார்கள் . என்றாலும் ரகு நன்றாக அனுபவித்து எழுதி இருப்பதனால் அவரது கதை இங்கு வெற்றி அடைந்துள்ளது .

 

(ரகு , நல்லா தான் காயிந்திருகிறீர்கள் அந்த பத்து நிமிடங்களும் !!! :rolleyes: :rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தனுயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே"

 

அருமையான வரிகள்! இந்தப் பாடல்களை சிறுவயதில் கேட்டபோது அர்த்தம் புரிந்ததில்லை. இசையே பாடலை ரசிக்க வைத்திருந்தது. 

 

இன்றோ நிலமை வேறு. அர்த்தம் முழுவதுமாகப் புரிகிறது. பொழுதுகளுக்கேற்ப அதன் தக்கமும் மாறுகிறது. காதல் செய்யும் விந்தைதான் என்னே??

 

மேற்சொன்ன பாட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?? எதுவுமில்லை. என்னை அலைக்கழிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். 

 

சரி, "கதைக்கு" வருகிறேன்.

 

வருடக் கணக்கில் பரீட்சைக்கு விளித்திருந்து படித்துவிட்டு, பரீட்சையன்று, பரீட்சை நிலையம் வரை போய்விட்டு எழுதாமேலேயே வீடு வருவதென்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் எனது நிலையும். 

 

ஆளை விடுங்கள். இதுக்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.............

கதையென்றால் பேசாமல் கேட்கவேண்டும், கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது ?

 

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்வார்கள் !!! :D


ஒரு எழுத்தாளர் காதல் கதை எழுதினால் அதை ஏன் அவரின் உண்மைக்கதையாக கொள்ள வேண்டும் ? கற்பனையில் வல்லவர்கள் எழுத்தாளர்கள். கற்பனையில் உதிப்பவற்றை

எழுத்து வடிவில் தருவார்கள் . என்றாலும் ரகு நன்றாக அனுபவித்து எழுதி இருப்பதனால் அவரது கதை இங்கு வெற்றி அடைந்துள்ளது .

 

(ரகு , நல்லா தான் காயிந்திருகிறீர்கள் அந்த பத்து நிமிடங்களும் !!! :rolleyes: :rolleyes: )

 

 

பூத்தல், காய்த்தல், இறுதியில் காய்ந்தும் போதல்...இவையெல்லாம் இயற்கைதானே?? நாம் என்ன விதிவிலக்கா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தனுயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே"

 

அருமையான வரிகள்! இந்தப் பாடல்களை சிறுவயதில் கேட்டபோது அர்த்தம் புரிந்ததில்லை. இசையே பாடலை ரசிக்க வைத்திருந்தது. 

 

இன்றோ நிலமை வேறு. அர்த்தம் முழுவதுமாகப் புரிகிறது. பொழுதுகளுக்கேற்ப அதன் தக்கமும் மாறுகிறது. காதல் செய்யும் விந்தைதான் என்னே??

 

மேற்சொன்ன பாட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?? எதுவுமில்லை. என்னை அலைக்கழிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். 

 

சரி, "கதைக்கு" வருகிறேன்.

 

வருடக் கணக்கில் பரீட்சைக்கு விளித்திருந்து படித்துவிட்டு, பரீட்சையன்று, பரீட்சை நிலையம் வரை போய்விட்டு எழுதாமேலேயே வீடு வருவதென்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் எனது நிலையும். 

 

ஆளை விடுங்கள். இதுக்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.............

கதையென்றால் பேசாமல் கேட்கவேண்டும், கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது ?

 

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்வார்கள் !!! :D

 

 

பூத்தல், காய்த்தல், இறுதியில் காய்ந்தும் போதல்...இவையெல்லாம் இயற்கைதானே?? நாம் என்ன விதிவிலக்கா ???

 

கதை என்று நீங்களே கூறிவிட்டு பிறகு காய்த்தல் பூத்தல் என்றெல்லாம் என்ன கதைவிடுகிரீர்கள். மரியாதையாகக் கதையை எழுதி முடியுங்கள் :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.