Jump to content

42-ஆண்டுகளில் முதல் முறையாக உலகின் மிகப் பெரிய ஜனநாய தலைவரின் கனடா வருகை.


Recommended Posts

வன்கூவர்- இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த வாரம் கனடாவிற்கு விஜயம் செய்கின்றார். இவரின் வருகையை இவரது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது. 42-வருடங்களில் முதல் தடவையாக ஒரு பெரிய ஜனநாயகத்தின் தலைவர் கனடா வருகின்றார்.

செவ்வாய்கிழமை ரொறொன்ரோவில் உள்ள Ricoh Coliseum- த்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் 1985-ல் எயர் இந்திய குண்டு வெடிப்பில் பலியான 331-பேர்களின் நினைவுச்சின்னங்களிற்கும் சென்று மரியாதை செலுத்துவார்.

2002-ல் குஜராத்தில் மரணமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் சீக்கியரின் மரணத்தில் மோடியின் பங்கு குறித்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சீக்கியர்களின் சார்பாக சட்டமா அதிபர் பீட்டர் மக்கேயிடம், ஜட்டின்ரர் சிங் கிரேவால் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வன்கூவரில் சீக் தேவாலயம் மற்றும் இந்து தேவாலயம் ஆகியனவற்றிற்கும் மோடி விஜயம் செய்வார். அவரது விஜயத்தின் போது அமைதி ஊர்வலம் நடாத்த தனது குழுவினர் தீர்மானித் திருப்பதாகவும் கிரேவால் தெரிவித்துள்ளார்.

இரு கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என வன்கூவர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனடிய பிரதம மந்திரி ஹாப்பருடன் இராப்போசன விருந்தில் மோடி கலந்து கொள்வார்.

மோடியின் மூன்று நாட்கள் விஜயத்தின் போது அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விடயங்களில் அதிகரித்த ஒத்துழைப்பு குறித்த  கலந்துரையாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகின்றது.

கனடாவிற்கு விஜயம் செய்த கடைசி இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி ஆவார். இவர் 1973-ல் கனடாவிற்கு விஜயம் செய்தார்.

 

- See more at: http://www.canadamirror.com/canada/40939.html#sthash.kitCSTTV.dpuf

 

42-ஆண்டுகளில் முதல் முறையாக உலகின் மிகப் பெரிய ஜனநாய தலைவரின் கனடா வருகை; ஜன நாயக நாடு தலைவர் வருகிறார்.கிள்ளியும் பார்த்தேன்

Link to comment
Share on other sites

ஜேர்மனி, பிரான்சில் அமோக வரவேற்பு மோடிக்கு கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி, பிரான்சில் அமோக வரவேற்பு மோடிக்கு கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

 

ஜேர்மனியில்... ஹனோவர் (Hanover) என்னும் இடத்தில், நடை பெறும் சர்வதேச தொழில் நுட்ப கண்காட்சியை பார்வையிட உள்ளார்.

அதில்... நூற்றுக்கணக்கான  இந்திய நிறுவனங்களும் பங்கு பற்றுகின்றன,

பின்.... அந்த நகரத்தில் மகாத்மா காந்தியின் அரை உருவ சிலையை... திறந்து வைக்க இருக்கிறார் என்று, செய்தியில் கூறப் பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

விசா தடை கொடுத்த நாடுகளுள் ஒன்று ஜேர்மனி..! அப்போது அவர் கிரிமினல்.. :rolleyes:

எப்படியிருந்த ஜேர்மனி இப்பிடி ஆயிட்டுதே.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசா தடை கொடுத்த நாடுகளுள் ஒன்று ஜேர்மனி..! அப்போது அவர் கிரிமினல்.. :rolleyes:

எப்படியிருந்த ஜேர்மனி இப்பிடி ஆயிட்டுதே.. :(:D

 

அரசியல்ல......இது எல்லாம், சகஜமப்பா...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசா தடை கொடுத்த நாடுகளுள் ஒன்று ஜேர்மனி..! அப்போது அவர் கிரிமினல்.. :rolleyes:

எப்படியிருந்த ஜேர்மனி இப்பிடி ஆயிட்டுதே.. :(:D

யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் ...
எல்லாம் சௌவுக்கியமே !
 
கருடன் சொன்னது 
அதில் அர்த்தம் உள்ளது !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கியூபா அரசபயங்கரவாதி என்ற பட்டியலிருந்து விடுபடுகிறது......அரசியலில் இதெல்லாம் சகஜம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையினருக்கு மரியாதை,கனடாவில் விமானத்தில் மரணித்தவ்ர்களுக்கு மரியாதை.......தமிழ் போராட்டமைப்புக்கள்,சீக்கிய போராட்டமைப்புக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கியூபா அரசபயங்கரவாதி என்ற பட்டியலிருந்து விடுபடுகிறது......அரசியலில் இதெல்லாம் சகஜம்

 

எங்களுக்கும் நல்ல காலம் வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.