Jump to content

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை


Recommended Posts

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை APR 11, 2015 | 1:27by கனடாச் செய்தியாளர்in செய்திகள்

ltte-flag-300x199.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான புவனேசன் துரைராஜா என்பவரை போர்க்குற்றவாளி என்று கூறி, அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப, கனேடிய அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

ஆனால்,அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்று கூறி, கனேடிய உயர்நீதிமன்ற நீதிபதி சீன் ஹரிங்டன் அந்த முடிவுக்குத் தடைவிதித்துள்ளார்.

இந்த உத்தரவு கனேடிய உயர்நீதிமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புவனேசன் துரைராசாவைத் திருப்பி அனுப்புவதால், அவர் சிறிலங்காவில் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளமாட்டார் என்ற கனேடிய குடியுரிமை மற்றும் குடிவரவு த்துறையின் மதிப்பீட்டையும் நீதிபதி நிராகரித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரி வசூலிப்பாளராக இருந்த புவனேசன் துரைராஜா, பின்னர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியிருந்தார்.

அங்கு அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதையடுத்து, போலிக் கடவுச்சீட்டில் கனடா வந்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற அடிப்படையில், போருக்காக அவர் வரிவசூரித்தார் என்ற குற்றச்சாட்டில், கனேடிய அதிகாரிகளை அவரை நாடு கடத்த உத்தரவிட்டனர்.

புவனேசன் துரைராஜா, விடுதலைப் புலிகளின் ஆவண பணியகம் மற்றும் நிதிப்பிரிவில் பணியாற்றியிருந்தார்.

இவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பினால் அவர் ஆபத்தை எதிர்கொள்வார் என்றும், நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/04/11/news/5131

 

Link to comment
Share on other sites

அடுத்த தேர்தலில் வழக்கம்போல லிபரல் அல்லது என்டிபிக்கு வாக்குப்போட உள்ளேன்.. இதில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கு வாக்கை வழங்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற புஷ் காலத்து சமாச்சாரத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு இன்னும் திரிகிறது பழமைவாதக் கட்சி.. சிரியாவில் இதைச் சொல்லித்தான் இன்றும் குண்டு வீசுகிறார்கள்..

இவர்களின் சித்தாந்தப்படி எல்லோரையும் இறுக்கிப் பிடிக்கிறார்கள்.. அதாவது இன்றைய ஐசிஸ்காரனும், முன்னாள் புலி வீரரும் ஒன்றுதான் இவர்களைப் பொறுத்தவரையில்..

ஆட்சி மாறினால் ஒரு இளக்கத்தை கொண்டுவர முடியும்.

Link to comment
Share on other sites

புலிகள் தன்னை பலவந்தமாக வரி சேகரிப்பில் ஈடுபடுத்தியதாக தெரிவிப்பு.

 

வாதத்தை ஏற்று நாடுகடத்தலை நிறுத்தியது கனடா நிதிமன்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 மாதம் முன்பு என்று நினைக்கிறன் 
ரேடியோவில் ஒரு கனடிய மிகவும் கொன்செர்டிவ் ஆனா அரசியல் வாதியை பேட்டி 
எடுத்து போட்டார்கள் காரில் போகும்போது கேட்டுக்கொண்டு இருந்தேன்.
(கனடாவில் அப்போது பொலிசாரை சுட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்)
அவரிடம் தமிழர்கள் பற்றி கேட்டார்கள் ..... (இஸ்லாமியரை வாங்கு வாங்கென்று வாங்கிகொண்டு இருந்தார்)
தமிழர்கள் அரசியல் ரீதியாகவே போராடுகிறார்கள் 
தவிர புலிகள் ஒருபோதும் பொதுமக்களை குறிவைப்பதில்லை என்று கூறினார்.
பயங்கரவாதம் என்று எல்லாவற்றையும் போட்டு குழப்புவதால் ....
உண்மையான பயங்கரவாதிகள் மீது கவனத்தை சிதரடிக்கிறோம் என்று முழங்கினார்.
 
(நான் நினைக்கிறேன் அவர் யுதாரக இருக்கலாம். இஸ்லாமியரை போட்டுத்தாக்கினால் அவர்களுக்கு லாபம் 
என்று எண்ணுகிறார் என்று)
இருந்தாலும் ஒரு கொன்செர்டிவ் காரார் தமிழர்கள் பற்றி இப்படி அபிப்பிராயம் 
தெரிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தன்னை பலவந்தமாக வரி சேகரிப்பில் ஈடுபடுத்தியதாக தெரிவிப்பு.

 

வாதத்தை ஏற்று நாடுகடத்தலை நிறுத்தியது கனடா நிதிமன்றம்.

 

அசைலம் என்று வந்திட்டால்.. எங்கள் கண்ணுக்கு தெரிவது.. விசாக்களும்.. பிரஜா உரிமைகளுமே. புலி பலவந்தமா பிடிச்சுது.. பலவந்தமா கொண்டு போச்சுது.. புலி கொலை செய்யப் பார்த்துது.. இப்படிச் சொல்லித் தானே அசைலம் எல்லாம் எடுத்து வைச்சிருக்கிறம் வகை வகையா..!

 

இவர் மட்டும் என்ன அதில் இருந்து விதிவிலக்கா.

 

ஒரு பெரிய தளபதியின் மனைவி பிள்ளைகள் அசைலம் அடிக்க...கொடுத்திருக்கிற ஸ்ரேட்மென்ட்.. இவர்கள் எல்லாம் எப்படி புலியில் யோக்கியமாக இருந்திருப்பார்கள் என்ற கேள்வியையே கேட்க வைச்சுது. இவர்களை நம்பி போராடப் போய் வீரமரணம் அடைந்த உறவுகள் தான் பாவம். :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.