Jump to content

கடற்படையால் தாக்கப்பட்டனர் இந்திய மீனவர்கள்! யாழினில் வைத்தியசாலையினில் அனுமதி!!


Recommended Posts

இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டு காயமடைந்த இந்திய மீனவர்கள் மூவர் யாழினில் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பினில் காயமடைந்தவர்கள் தெரிவிக்கையினில் எங்களைச் சுற்றிவளைத்தனர். பின்னர் எங்கள் படகில் ஏறிக்கைகளைப்பின் பக்கமாகக் கட்டிவிட்டுக் கயிற்றினாலும், துப்பாக்கியின் பின்பக்கத்தினாலும் கடுமையாகத் தாக்கினர் என் நேற்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

பருத்தித்துறைக் கடற்பரப்பை அண்மித்துக் கைதாகிய 37 இந்திய மீனவர்களில், இலங்கைக் கடற்படை யினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் படகின் மாலுமிகள்  மூவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சிறைச்சாலைக் காவலர்களுக்குப் பருத்தித்துறை நீதிவான் மா.கணேசராஜா நேற்று உத்தரவிட்டார்.

  அத்துடன் மருத்துவப் பரிசோத னைக்கு உட்படுத்திச் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை எதிர் வரும் தவணையில் மன்றில் சமர்ப் பிக்குமாறும் யாழ் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.   கைதான இந்திய மீனவர்கள் 37 பேரும் நேற்று பருத்தித்துறை நீதி வான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
மாலை 6 மணியளவில் நான்கு டோறா படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் எங்களைச் சுற்றிவளைத்தனர்.   

 பின்னர் எங்கள் மீன்பிடிப் படகில் ஏறி எங்களுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டி வைத்துக் கயிற்றினாலும், துப்பாக்கியின் பின்பக்கத்தினாலும் கடுமையாகத் தாக்கினர்.   அதன் பின்னர் எங்கள் அனைவரது கைகளையும் கட்டிக் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர் என நீதிவானிடம் தெரிவித்தனர்.

காயமடைந்த சிவபெருமாள் செந்தில்குமார் (வயது-39), தங்கவேல் ரவிச்சந்திரன் (வயது-37), இடும்பன்சாமி கந்தவேள் (வயது-34) ஆகிய மூவரும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

http://www.pathivu.com/news/38985/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை மடிப்பு வலைகளை விட்டெறிந்துவிட்டு வாருங்கள் மீன் பிடிப்போம்.

 

தவிர, உங்களது அரசாங்கத்திடம் கேளுங்கள் எதற்காக ஆழ்கடலில் நெடுநாள் பயணம்செய்து மீன்பிடிப்பதற்கான பயிற்சியை குறிப்பாகத் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வழங்கவில்லை.

 

இந்தியாவின் தென்கோடிக்கடலில் மீன்வளப்பற்றாக்குறை ஏன் நடந்தது என்பதைக் கண்டறிய தகுதிவாய்த ஆணைக்குழு இதுவரை ஏன் நியமிக்கப்படவில்லை?

என

 

எமது கடற்பரப்பில் மீன்வளத்தினை அதிகரிப்பதற்கான பவளப்பாறைகளை மீளவும் வளர்க்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினீர்களா? உங்களது இரட்டை மடிப்பு வலை எமது கடற்பிரதேசத்தின் மீன்களது இனப்பெருக்கத்துக்கும் சிறிய மீன்களது வளர்ச்சிக்கும் உறுதுணை வளங்குபவை. அவைகள் நீங்கள் கடலின் அடிஆழம்வரை சென்றுபவளப்பாறைகளைக் கிளறி அவைகளை அழித்தொழிக்கும் இரட்டை மடிப்பு வலைகளைப் பாவிக்கிறீர்கள்.

 

கடந்த காலங்களில் இப்படியாக உங்களது கடற்பிரதேசங்களில் மீன்பிடித்தமையாலேயே அக்கடற்ப்பிரதேசங்களில் மீன் வளம் முற்ரிலுமாகவே அழிக்கப்பட்டிருக்கின்றன.

 

கடந்த முப்பது வருடங்களாக இருந்த நெருக்கடிகள் எமது மீனவர்களுக்கு இப்போது ஓரளவு குறைவாகவே இருக்கின்றது. அந்தவேளையில் உங்களது இச்செயல்கள் வெந்தபுண்ணில் வேல்பாச்சுவதுபோலவே உள்ளது.

 

கொசுறாக ஒரு செய்தி,

 

இப்படி மீன் வளம் பாதிப்பதற்கான பவளப்பாறைகள் டுகைகளை மீண்டும் கடலின் அடியில் ஏற்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

 

ஒரு குறிப்பிட்ட வலுவுள்ள மின்சாரத்தின் அணோட் இணைப்பை, ஒழுங்குபடுத்தப்பட்ட  கம்பிவலைகளில் பவளப்பாறப் படிமங்களைக் கட்டி  அவற்றை கடலின் நிலப்பரப்பில்வைத்து தொடர்ந்து அணோட் இணைப்பை வழங்கிவந்தால்  குறிப்பிட்ட காலத்துக்குள் மீண்டும் பவளப்பாறைகளது வளர்ச்சி அதிகரித்து அக்கடற்ப்பிரதேசத்தில் பவளப்பாறைகள் அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும்.....1977 இல்......தமிழக முதலமைச்சர்.......மீனவர் பிரச்சனைக்கு மிகவிரைவில் தீர்வு காணப்படும் 2015இல் இந்தியா பிரதமர்

Link to comment
Share on other sites

வராத  என்று  சொன்னால்  பிறகு  பிறகு  எதுக்கு  வாறாங்க  இந்த  தமிழ்நாட்டு  கொள்ளை  கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே.. தமிழ் நாட்டுக் கொள்ளைக் கூட்டம் என்றிட்டார் அண்ணே. நாங்க பயந்து போனம்.. கட்டுமரம் தடக்கி விழுந்ததை.. அவரின் அன்புக்குரிய சிங்கள கடற்படை தாக்கினதா சொல்ல அண்ணன் விடுவாரா பின்ன. ஊரிலை.. அண்ணனுக்கு நேவிக்காரன்... பூவரசம் பூவை போட்டுத்தானே கன்போட்டால அடிச்சவன். அண்ணன் மறந்திட்டர். அவ்வளவு ருசி.. பிரான்ஸ் சொகுசு. :lol::D

Link to comment
Share on other sites

எங்கள்  மீனவர்  வளங்களை  சூறையாடி  போவது ஏற்க்க முடியாது  அவர்கள்  மீன்  பிடிப்பது  ஒன்றும்  அம்பாம்தோட்டையில்  இல்லை  வடக்கு  கடலில் ....

 

தாயும்  பிள்ளையும்  ஆனாலும் வாயும்  வயிறும்  வேறு  உறவு  என்று  சொல்லு  எங்க  மீனவர்களின்  வாழ்வாதாரத்தில்   கைவைக்க  கூடாது  பாருங்கோ ..

 

சும்மா  சீனுக்கு  நீங்க  புலம்பெயர்  போராளிகள்  கத்துவது  போல  அல்லா  அங்கு  அவர்கள்  பசியுடன்  இருக்க  தமிழ்நாட்டுக்காரன்  மீனை  அள்ளி   போவது  அனுமதிக்க  முடியாது  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் வந்து குடியேறி அள்ளுறான். அதைக் கவனிக்க வக்கில்ல.

 

தமிழ்நாட்டுக்காரன் 5 மணி நேரம் மீன்பிடிச்சு இல்லாததை கொண்டோடிடுவான் என்று புலம்பிற உங்களை..??!

 

தமிழ்நாட்டுக்காரனுக்கு மீன் தான் சாப்பாடு. சிங்களவனை விட அவனுக்கு ஈழத்தமிழனின் வலியும் பசியும் கூடத் தெரியும். சீமான் எங்களுக்கா அங்க தன்னை வருத்துவது போல. :icon_idea::)

Link to comment
Share on other sites

சிங்கள இனவெறிக் கும்பல வழிநடத்தலில்  பல வகையிலும் சிங்கள ஒட்டு குழுக்கள் போட்டி போட்டிக்கொண்டு புலம் பெயர் தமிழர் /  இலங்கைத் தமிழர் / தமிழக மக்கள்    மத்தில்  குழப்ப வேலைகள் செய்து  வருகின்றன. :D  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.