Jump to content

கே இனியவனின் கஸல் கவிதைகள்


Recommended Posts

வாழ்க்கை  ....
அடைமழை 
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!

காற்றை போல் நீ 
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?

காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

என் 
கவிதைகளை..... 
உளறல் என்கிறாய் ....
காதலித்தவனின் நிலை ...
அதுதான் ....!!!

காதலால் .....
மயானமாகிய இதயம் ....
நினைவு சின்னம் உன் ...
நினைவுகளும் கனவும் ....!!!

உனக்கு கவிதை 
எழுதினேன் பூக்களில் ...
இருந்த பட்டாம் பூச்சிகள் ...
அருகில் வருகின்றன ....
நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 961
 

Link to comment
Share on other sites

உன் 
எல்லா சுமைகளையும் ....
சுமக்கும் சுமைதாங்கி ...
என் இதயம் ...!!!

உனக்கு தெரியாமலே ....
உன்னை அதிகம் ...
காதல் செய்து விட்டேன் ....
அதுதான் அவஸதைக்கும் ...
காரணம் ....!!!

சூரியன் 
உதிக்கும்போதுதான் ...
எனக்கு இரவு ...
எங்கே சந்திரன் ...
இருக்கும் போது தூங்க ...
விடுகிறாய் ....?

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 962

Link to comment
Share on other sites

விரைவில் ஆயிரம் 
மேடை ஏறப்போகிறது ...
நம் காதல் நாடகம் ....!!!

காதல் 
நம்பிக்கை ...
அவநம்பிக்கையும் ...
கூட்டுக்கலவை ...!!!

உன்னை 
கண்ணால் பார்த்ததை ...
காட்டிலும் கண்மூடி ...
பார்த்ததே அதிகம் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 963

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீ 
இரும்பாகவும் ,,,
நான் காந்தமாகவும் ...
இருந்திருந்தால் -நம் 
காதல் வென்றிருக்கும் ...!!!

நீ 
அழகிய பூ ...
நான் காம்பு ....
விட்டு போகத்தானே ...
போகிறாய் ....!!!

உனக்கு நீராட்ட ...
வாங்கிய பன்னீர் கூட ...
கண்ணீராய் மாறி வருகிறது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 964
 

Link to comment
Share on other sites

நீ 
திரும்பி பார்த்ததை ...
காதலாக எடுத்தது ...
தப்புதான் ,,,,
திரும்பி பார்க்காமல் ...
போகும் போது உணர்தேன் ...!!!

என் காதல் வீட்டில் ...
நீ சிந்தி வலை நான் 
பூச்சி இப்போது என்னை ....
விழுங்கி விடு ....!!!

இதயத்தின் காயத்தை ....
கண்களால் பார்த்தால் ...
கண்ணே வெந்துவிடும் .....
உனக்கும் எனக்கும் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 965

Link to comment
Share on other sites

உன்னை நினைத்து ...
மெய்சிலுத்த என் உடல் ...
மெய் மறக்க தொடங்கி ...
விட்டது -உன்னை ...
சேர்த்து ....!!!

உன் 
நினைவுகளை ...
குழிதோண்டி ...
புதைத்தால் ....
கள்ளி செடிதான் ,,,
முற்கலோடு வளரும் ....!!!

உயிரே 
என்று அழைத்த நாள் ...
முதல் என் உயிர் வெந்து ...
கொண்டே இருக்கிறது ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 966


 

Link to comment
Share on other sites

வானவில்.... 
வரும்போது ...
வானத்துக்கு கண்ணீர் ....
உனக்கு ....
கவிதை எழுதினால்  ...
எனக்கு கண்ணீர் ....!!!

ரோஜாவை ...
வாங்கும் போது....
முள்ளிருப்பதை....
மறந்துவிட்டேன் ....!!!

ஒருமுறை என்னை ...
காதல் செய்துபார் ....
மறு ஜென்மத்தில் ...
என்னிடம் தவம் இருப்பாய் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 967
 

Link to comment
Share on other sites

நான் 
பூச்சியம் ....
நீ -என்னோடு ...
இணைந்தாய்....
இலக்கமானேன்....
காதல் .....!!!

தனிமை 
காதலுக்கு எதிரி ....
என்னை 
தனிமையாக்கிய -நீ 
எதிரிதானே ....!!!

நான் காதல்.... 
ஏறுவரிசை -நீ... 
இறங்கு வரிசை ...
கூட்டி கழித்துப்பார் ...
காதல் பூச்சியம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 968

Link to comment
Share on other sites

பௌர்ணமியில் 
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!

காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!

ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம் 
புதுமையில்லை ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969

Link to comment
Share on other sites

ஆணிவேர் ...
அறுந்தாலும் ...
விழுதுகள் தாங்கும் ...
ஆலமரம் போல் ...
காதல் வேண்டும் ...!!!

எல்லா 
விண்ணப்பத்திலும் ....
நான் வெற்றி ...
காதல் விண்ணப்பம் ...
தோற்று விட்டது ...!!!

நான் 
நாணல் பூண்டு ....
நீ எந்தப்பக்கம் ...
அடித்தாலும் 
நிமிர்ந்து நிற்பேன் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 970

Link to comment
Share on other sites

என் 
வாழ்கையில் ....
ஒரு மாற்றம் 
காதலில் 
ஏமாற்றம் .....!!!

முடிந்த வரை ...
சிரிப்பாய் இருந்த காதல் ....
இயன்றவரை அழும் ....
காதலானது ....!!!

உனக்கு காதல் ...
தந்து வாழ்கையும் ....
தந்தேன் -வாழ்த்தும் 
தந்தேன் .....
காதல் என்னை ....
தனிமரமாக்கியது ....!!! 

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 971

Link to comment
Share on other sites

உன் 
இதயம் தேன் கூடு ....
வார்த்தைகள் தேனீ ...!!!

காதல் 
என்றால் என்ன ...?
எனக்கு தெரியாது ...
உன்னை காதலிக்க ....
தெரியும் ....!!!

ஒவ்வொரு காதலின் ....
இதயமும் மண் பொம்மை ....
எப்போதும் உடையலாம் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 972

Link to comment
Share on other sites

காயப்பட போகிறாயா ....?
காதலித்துப்பார் ....
காயப்பட்டு இருக்கிறாயா ...?
காதல் செய் ....!!!

நீ 
இதை விட பேசாமல் ....
இருந்திருக்கலாம் ...
தவளை தன் வாயால் ...
கெட்டதுபோல் நீயும் ...?

இதயம் 
வலிக்காவிட்டால் .....
காதலே இல்லை ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 974

Link to comment
Share on other sites

என்னை 
தோற்றே உன்னை ...
தோற்றேன் சூதல்ல ....
காதல் ....!!!

உன்னில்  ....
காதல் மதுபானம் ....
தயாரித்தேன் .....
நீ மதுவா ....?
விஷமா....?

வாசம் போன பூவும் ....
மோசம் போன நானும் ....
ஒன்றுதான் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 975

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீ நெருப்பு ....
உனக்கு உணர்வே இல்லை 
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!

பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!

நான் 
பார்வையில்லாத கண் ....
நீ 
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976

Link to comment
Share on other sites

நீ 
காற்று 
என் மூச்சாவும் ...
புயலாகவும் ....
இருகிறாய் ....!!!

எவ்வளவு தான் ....
மறைத்தாலும் ...
பரகசியமாகும் ....
பிரசவம் ....
காதல் ....!!!

உன்னை நினைத்து.... 
அழும்போதெல்லாம் ....  
ஆறுதல் தருவது ...
உன் கடந்தகால உறவு ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 977

உன் 
இதயத்தில் ....
நான் துடிப்பா ...?
நடிப்பா ....?

என்னிடம் நீ 
இருக்கின்ற போதெல்லாம் 
உன்னிடம் - நான் ...
இருக்க வேண்டும் ....
என்னை கலைகிறாய் ...?

உயிரே ...
நீ போதையா இரு ...
என்னை பேதையாக்காதே,,,,!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 978

Link to comment
Share on other sites

சில நேரம் 
பாசமாய் இருக்கிறாய் 
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!

பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!

உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979

உன் 
கண் வலைக்குள் ...
சிக்கிய மீன் நான் ....
எடுத்து விடு ...!!!

நம் 
காதல் தொடர் கதை ...
எப்போது நிறைவு ...
பெறும் ...?

நீ 
என்னை வதைப்பாய் 
தெரிந்தும் உன்னிடம் ...
வசப்பட்டேன் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 980

Link to comment
Share on other sites

உனக்கு வாழ்கை 
கிடைக்கும் என்றால் 
என் வாழ்கையை 
துறக்க தயார் ....!!!

நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ 
வேறு இதயத்துக்கு  ....
போவாய் என்றால் ....!!!

உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981
 

Link to comment
Share on other sites

இதயக்கதவை ...
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!

பஞ்சாக 
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!

மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982
 

Link to comment
Share on other sites

உன் 
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!

காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!

காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983

Link to comment
Share on other sites

நீ 
இதயத்தில் இருந்து... 
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்... 
ஏன் செருவினாய் ...?

உன் 
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!

நீ 
நகர்ந்தபோது 
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984

Link to comment
Share on other sites

வா 
காதல் வழியே சென்று 
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!

எம்மை விட்டு 
பிரிந்த காதல் பாவம் 
தனியே இருந்து 
அழப்போகிறது ...!!!

உனக்கென்ன ...?
கண்டும் காணாதது 
போல் போய் விடுவாய் 
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985

Link to comment
Share on other sites

நீ 
அகராதி... 
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!

மீனைப்போல்... 
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!

நீ 
நிலா 
நான் நட்சத்திரம் 
அமாவாசையிலும் 
உன்னை நினைப்பேன் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986

நீ 
கற்பில் நாகம் 
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!

உன் 
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ 
நின்று விடாதே ....!!!

உனக்கும் 
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987
Link to comment
Share on other sites

உன்னை கண்டால் ....
என் கண்கள் தானாக ....
மூடுகின்றன ....!!!

நான் 
வெறும் கப்பல் ....
துடுப்பும் -நீ 
பாய்மரமும் நீ 
தள்ளாடும் கப்பலை ...
நிறுத்து ...!!!

காதல் 
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 991
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.