Jump to content

முகவரி இடப்படாத கடிதம்


Recommended Posts

 
முகவரி இடப்படாத கடிதம்
 
முகவரி இடப்படாத கடிதம் இது
முடிந்தால் எவராவது 
உரியவரிடம் சேர்ப்பிப்பீர்களா?
 
ஓலமிட்டு அழுகின்றோம்
ஓடி ஓடி நீதி கேட்கின்றோம்
ஆனால் எந்த விழிகளிலும்
மனித நேயத்தை காணமுடியவில்லையே.
 
மார்ச் எட்டு என்றவுடன்
உலகமெங்கும் 
அனைத்துலக பெண்கள் நாள்
ஆடம்பரமாக கொண்டாடப்படும்.
ஆனால் ஒடுக்கப்பட்டோர் எம் குரல் கேட்க
உலகில் எவருக்கும் நேரமில்லை.
 
காணாமல் போகடிக்கப்பட்டவர்கள்
எங்கள் உறவுகள்.
கணவன்,மகன்,தந்தை என
நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடுகின்றோம்
 
ஆறு ஆண்டுகளாக உளவலிகளால் 
அலைந்து உலைந்து கொணடிருக்கின்றோம்
அழுது அரற்றுகின்றோம்.
எந்த நாட்டுப் பிரதிநிதி வந்தாலும்
ஓடி ஓடி அவர்களிடம்
எங்கள் நிலைமையை எடுத்தரைத்து
எவராவது எம் உறவுகளைத் 
தேடித்தர உதவ மாட்டார்களா என
ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கின்றோம்.
எங்களின் ஓலம் 
எவர் செவிகளையும் எட்டவில்லையே
 
காணாமல் போகடிக்கப்ட்ட உறவுளைத் தேடி
உலகத்தின் காதுகளுக்கு உண்மை சொன்னதால்
பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு 
என்ன நடந்தது என்பதும் தெரியாமல்
எங்களுக்கும் அந்த நிலை வரலாம் 
என்ற உண்மை தெரிந்தாலும்
எங்கள் உறவுகளைத் தேடி 
நீதிகேட்டு அலைகின்றோம்
 
வேண்டுமென்றே விழி மூடி
செவி அடைத்தவர்களிடம் தான்
நாங்கள் நீதி கேட்கின்றோம் என்ற
உண்மை நிலைமை புரிந்தாலும்
நாளும் பொழுதும் அழுது அழுது
அவலநிலைமையை சொல்கின்றோம்.
 
இன்னும் எவ்வளவு காலம் 
இப்படியே நாங்கள்
இரக்கமற்றவர்களிடம் இறைஞ்சுவது
 
 
எதுவுமே புரியாமல்
மீண்டும் மீண்டும் நீதிகேட்டு
வீதிகளில் இறங்கிப்போராடுகின்றோம்
 
இனி அழுதிடக் கண்ணீருமில்லை
இதயத்தில் வலுவுமில்லை
உயிரற்ற வெறும் மனிதக்கூடுகளாக
மெல்ல மெல்ல ஒடுங்கும் எங்கள் நிலையை 
எண்ணிப்பார்க்க எவருக்கும் 
நேரமுமுமில்லை இதயமும் இல்லை.
 
இனி முடியவில்லை
அதனால் 
இந்த முகவரி இல்லாத கடிதத்தை
எங்கள் கண்ணீரால் எழுதுகின்றோம்
எஞ்சிஇருக்கும் உள்ளவலுவை
முழுவதுமாக திரட்டி 
இந்த அஞ்சலை அனுப்புகின்றோம்
 
முடிந்தால் மனித நேயமுள்ள 
எவரையாவது யாராவது சந்தித்தால்
மறக்காமல் இதனை 
அவர்களிடம் சேர்ப்பித்துவிடுங்கள்
உள்ளம் நொந்து நைந்து 
நாங்கள் சாவதற்கிடையில்
எவராவது விழி திறந்தால்
எமக்கு நீதி கிடைக்கும்.
காணாமல் போகடிக்கப்பட்ட
எங்கள் உறவுகளை நாங்கள்
உயிருடன் உள்ள போதே
காணுவோம் என்ற நம்பிக்கை
ஊசலாட காத்திருக்கின்றோம்
 
 
மந்தாகினி
 
 
 
 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி. நல்ல வரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதிலிருந்து பெருகிவரும் வார்த்தைகள் ஆனால் அவற்றை காது கொடுத்துக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை இவ்வுலகில்... இந்த உலகம் வலிப்பட்டவர்களுக்காக பேசாது வல்லமை உள்ளவர்களையே கண்டுகொள்ளும். இது மனிதம் செத்தபூமி அதனைத்தேடிக்கொண்டிருந்தால் காலங்கள் கடப்பதைத்தவிர வேறு எதுவும் நடக்காது. மந்தாகினி உங்கள் கவிதையைப்பார்த்ததும் எனக்குள் எழுந்த ஆற்றாமை, கோபத்தை.... மானுடம் செத்தவர்களிடம் எதிர்பார்த்து ஏமாந்த கணங்களை எல்லாம் விரக்தியோடு மீளப்பார்க்க வைக்கின்றன..... நல்ல எழுத்து..... வளர்க.

Link to comment
Share on other sites

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி. நல்ல வரிகள்

 

நன்றி. ஆற்றாமையும், வேதனையும் என்னை இதனை எழுதவைத்தது

Link to comment
Share on other sites

மனதிலிருந்து பெருகிவரும் வார்த்தைகள் ஆனால் அவற்றை காது கொடுத்துக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை இவ்வுலகில்... இந்த உலகம் வலிப்பட்டவர்களுக்காக பேசாது வல்லமை உள்ளவர்களையே கண்டுகொள்ளும். இது மனிதம் செத்தபூமி அதனைத்தேடிக்கொண்டிருந்தால் காலங்கள் கடப்பதைத்தவிர வேறு எதுவும் நடக்காது. மந்தாகினி உங்கள் கவிதையைப்பார்த்ததும் எனக்குள் எழுந்த ஆற்றாமை, கோபத்தை.... மானுடம் செத்தவர்களிடம் எதிர்பார்த்து ஏமாந்த கணங்களை எல்லாம் விரக்தியோடு மீளப்பார்க்க வைக்கின்றன..... நல்ல எழுத்து..... வளர்க.

 

இன்று அனைத்துலகபெண்கள்நாள். இன்று என்ன நடக்கும் என யோசித்தேன். வாழ்த்துக்கள்,சாதனையாளர்கள் தகவல் சொல்லுதல்,பெண்களை உயர்த்தி கூறுதல்,பெண்கள் மாநாடு என ஊடகங்கள் உட்பட பல நாடகங்கள் அரங்கேறும்.இதனை நினைத்தேன். 

எங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்பற்றி பேச ஒருவருக்கும் நேரமில்லை. காணாமல்போகடிக்கப்பட்ட தங்கள் உறவுகளைத்தேடி கண்ணீருடன் நீதிகேட்டு அலையும் எங்கள் உறவுகளைப்பற்றி யோசிக்க எவருக்கும் மனமில்லையே. அவர்களின் உள்ளவலிகளை புரிந்துகொள்ள எவருமேயில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலமிட்டு அழுதாலும் ஓடிஓடி நீதி கேட்டாலும் பதில் மட்டும் பூச்சியம் தான். மனிதத்தை இழந்து விட்ட மகத்தான பூமி இது. இங்கு பெண்களை வெறும் போகப் பொருளாக பார்ப்பவர்கள்தான் அதிகம். மகளிர் தினம் இழப்புக்களையோ வேதனைகளையோ தணிக்கப் போவதில்லை. எம் மண்ணில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை செய்திகளாகத்தான் பார்ப்பார்களே அன்றி அதற்கு எந்த நிவாரணமும் செய்ய அரசாங்கம் முயற்சி எடுக்காது. ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம். முகவரி இல்லாத கடிதம் என்றுமே உரிய இடம் போய்ச் சேரப் போவதில்லை. நல்ல கவிதை பாராட்டுக்கள் மந்தாகினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான காலம் ஒன்று வரும் என்று நம்புவோம்

அதைத்தவிர வேறு எதுவும் இல்லாதநிலை...

 

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி

பாராட்டுக்களும் நன்றிகளும்..

Link to comment
Share on other sites

ஒலமிட்டு அழுதாலும் ஓடிஓடி நீதி கேட்டாலும் பதில் மட்டும் பூச்சியம் தான். மனிதத்தை இழந்து விட்ட மகத்தான பூமி இது. இங்கு பெண்களை வெறும் போகப் பொருளாக பார்ப்பவர்கள்தான் அதிகம். மகளிர் தினம் இழப்புக்களையோ வேதனைகளையோ தணிக்கப் போவதில்லை. எம் மண்ணில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை செய்திகளாகத்தான் பார்ப்பார்களே அன்றி அதற்கு எந்த நிவாரணமும் செய்ய அரசாங்கம் முயற்சி எடுக்காது. ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம். முகவரி இல்லாத கடிதம் என்றுமே உரிய இடம் போய்ச் சேரப் போவதில்லை. நல்ல கவிதை பாராட்டுக்கள் மந்தாகினி.

ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம் என நாம் சோர்ந்துவிடாமல் என்னஎன்ன வழிகள் உண்டு என தேடினால் நல்ல வழி ஒன்று கண்ணில் தென்படலாம் என்ற நம்பிக்கையுடன்தான் தாயகத்தில் எம் உறவுகள் தாங்களே அந்த வழியைத்தேடி புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதிலாவது ஒன்றுபட்டால் நல்லது.நடக்குமா ?

எமக்கான காலம் ஒன்று வரும் என்று நம்புவோம்

அதைத்தவிர வேறு எதுவும் இல்லாதநிலை...

 

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி

பாராட்டுக்களும் நன்றிகளும்..

நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன்

நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கொரு காலம் வரும்.  இல்லையெனில், நமக்கான காலத்தைச் செய்வோம்.

நற்கவிதைக்கு வணக்கம்.

சொற்களைக் கொஞ்சம் சுருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.