Jump to content

எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற...........


Recommended Posts

எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற வேண்டியது எமது சமூகத்தின் கடமையாகும். ஆனால் அதனை எவ்வளவு பெயர் மனதில் முன்னிறுத்தி செயற்படுகின்றார்களென்பது கேள்விக்குறியே. மல்லாவி பாண்டியன்குளம் பகுதியில் முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக இருந்திருந்த 35 வயதேயான முன்னாள் போராளியொருவர் அண்மையில் இயற்கை எய்திருந்தார். படுக்கை புண் முள்ளந்தண்டை தாக்கியதினால் மரணம் 

சம்பவித்துள்ளது. எனினும் இயற்கை எய்திய முன்னாள் போராளியான அவ்விளைஞரது புகழுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூட வசதியற்றதாககே அவரது குடும்ப நிலை இருந்துள்ளது.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து தொழிற்பட்ட அவ்வமைப்பினர் தமது இணைப்பாளர் ச.சஜீவன் மூலம் அப்போராளியின் இறுதிக்கிரியைகள் நடைபெற வழி செய்துள்ளனர்.

10982846_10153153721399396_7503536254947

காலமறிந்து செயற்பட்டவர்களுக்கு எமது நன்றிகலந்த வணக்கங்கள் உரித்தாகுக!

Link to comment
Share on other sites

  • 1 year later...

 

 

10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10 சிறப்பு கழிவறைகள் கட்டிக் கொடுக்கிறது கனடிய தமிழர் அறக்கட்டளை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10சிறப்பு கழிவறை கட்டிக் கொடுக்க கனடிய தமிழர் அறைக்கட்டளை (Canadian Tamil Community Trust)முன்வந்துள்ளது. ஒரு கழிவறை கட்ட உரூபா 135,000 இலட்சம் என்ற அடிப்படையில் . மொத்தம் 10கழிவறைகள் கட்ட உரூபா 1,350,000 செலவாகிறது. முதற் தவணையாக இந்தச் சிறப்புக் கழிவறைகளைக் கட்டும் துணுக்காய் ஒளி வாழ்வு அமைப்புக்கு உரூபா 500,000 இலட்சம் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி பெறும் பயனாளிகள் முல்லைத்தீவு மாவட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தா அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

 

சென்ற ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தில் 5, கிளிநொச்சி மாவட்டத்தில் 5 மொத்தம் 10 சிறப்பு கழிவறைகள் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செந்தில்குமரன் நிவாரண நிறுவனம் உரூபா 1,200,000 இலட்சத்தில் கட்டிக் கொடுத்து உதவியது.

 

உருத்துரபுரத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்லத்துரை கிருபானந்தன் சிறையில் இருந்து அண்மையில் விடுதலையானார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் உருத்திரபுரத்தில் இருக்கிறது. அதனைத் துப்பரவு செய்து தோட்டம் செய்வதற்கு வேண்டிய தண்ணீர் இறைக்கும் யந்திரம், குழாய்கள் இன்னபிற பொருட்களுக்கு ததேகூ (கனடா) உறுப்பினர்கள் 3 பேர் சேர்ந்து கடந்த வாரம் உரூபா108,500 அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறான சிறு சிறு உதவிகளை புலம்பெயர் தமிழர்கள் செய்யும் போது ஒரு சில முன்னாள் போராளிகள் அல்லது மாவீரர் குடும்பங்களது வாழ்வாதாரத்தையாவது நிமிர்த்த முடியும்.

 

நக்கீரன் .


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Gari said:

 

 

10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10 சிறப்பு கழிவறைகள் கட்டிக் கொடுக்கிறது கனடிய தமிழர் அறக்கட்டளை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10சிறப்பு கழிவறை கட்டிக் கொடுக்க கனடிய தமிழர் அறைக்கட்டளை (Canadian Tamil Community Trust)முன்வந்துள்ளது. ஒரு கழிவறை கட்ட உரூபா 135,000 இலட்சம் என்ற அடிப்படையில் . மொத்தம் 10கழிவறைகள் கட்ட உரூபா 1,350,000 செலவாகிறது. முதற் தவணையாக இந்தச் சிறப்புக் கழிவறைகளைக் கட்டும் துணுக்காய் ஒளி வாழ்வு அமைப்புக்கு உரூபா 500,000 இலட்சம் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி பெறும் பயனாளிகள் முல்லைத்தீவு மாவட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தா அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

 

சென்ற ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தில் 5, கிளிநொச்சி மாவட்டத்தில் 5 மொத்தம் 10 சிறப்பு கழிவறைகள் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செந்தில்குமரன் நிவாரண நிறுவனம் உரூபா 1,200,000 இலட்சத்தில் கட்டிக் கொடுத்து உதவியது.

 

உருத்துரபுரத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்லத்துரை கிருபானந்தன் சிறையில் இருந்து அண்மையில் விடுதலையானார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் உருத்திரபுரத்தில் இருக்கிறது. அதனைத் துப்பரவு செய்து தோட்டம் செய்வதற்கு வேண்டிய தண்ணீர் இறைக்கும் யந்திரம், குழாய்கள் இன்னபிற பொருட்களுக்கு ததேகூ (கனடா) உறுப்பினர்கள் 3 பேர் சேர்ந்து கடந்த வாரம் உரூபா108,500 அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறான சிறு சிறு உதவிகளை புலம்பெயர் தமிழர்கள் செய்யும் போது ஒரு சில முன்னாள் போராளிகள் அல்லது மாவீரர் குடும்பங்களது வாழ்வாதாரத்தையாவது நிமிர்த்த முடியும்.

 

நக்கீரன் .


 

நல்ல செய்தி

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.