Jump to content

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்


Recommended Posts

நேர் பந்துகளை வீசினாலும் சுனில் நரைன் எங்கள் அணியின் சொத்துதான்: கம்பீர்
 

 

தவறான பந்து வீச்சு முறைக்காக பரிசோதனை மேற்கொள்ள பணிக்கப்பட்டிருந்த சுனில் நரைன், ஐபிஎல் தொடரில் வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பற்றி பேசிய கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர், ‘நரைன் நேராக வீசினாலும் அணியின் சொத்துதான் அவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

"கொல்கத்தா அணியின் ஒரு அங்கம் சுனில் நரைன். அவர் நேர் பந்துகளை மட்டுமே வீசினாலும் அவர் எங்கள் அணியின் சொத்து என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அத்தகையது. அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஸ்பின்னர் வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நினைத்ததில்லை.

ஏனெனில் அவருக்கு மாற்று வீச்சாளர் கிடையாது. அவர் நேராக வீசினாலும் அதுவும் அணிக்கு நன்மையே. ஏனெனில் எதிரணியினரிடத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள பிம்பம் அத்தகையது.

 

 

அவர் தனது பந்து வீச்சு முறையை இவ்வளவு குறுகிய காலத்தில் சரி செய்து கொண்டு விடுவார் என்று நினைக்கவில்லை. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சுனில் நரைன் தரமான ஒரு வீரர், தரமான ஒரு தனி மனிதர், மேலும் கடின மனப்பாங்கு உடையவர். இப்படிப்பட்ட சோதனைக் காலக்கட்டங்களில் மனவலிமை மிக முக்கியம், அப்போதுதான் மீண்டும் சிறப்பாக வர முடியும். கடந்த காலங்களிலும் அவர் மனவலிமை மிக்கவர் என்பதை காட்டியுள்ளார்.

 

அதிகம் அறியப்படாத கே.சி.கரியப்பா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்களை அணியில் எடுக்கும் காரணம் என்னவெனில் பிராட் ஹாக், சுனில் நரைன் ஆகியோருடன் இணைந்து விளையாட வைத்து அதன் மூலம் இந்திய அணிக்கு நல்ல ஸ்பின்னர்களை உருவாக்கித் தருவதே.

குல்தீப் யாதவ், கரியப்பா ஆகியோரை ஏதோ பேக்-அப் பவுலர்களாக தேர்வு செய்யவில்லை. இந்திய பிட்ச்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிற்பட்ட பகுதிகளில் நன்றாக திரும்பக்கூடியவை. எனவே இதுதான் உத்தி.

 

களத்தில் அனுபவமிக்க வீரர்களுடன் விளையாடுவதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளலாம். மக்கள் எங்கள் அணியைப் பற்றி பேச வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை காட்ட விரும்புகிறோம்.

 

கரியப்பா போட்டிகளில் பந்து வீசி நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் மேட்ச்- வின்னர் என்பதற்காக அவரை ஏலம் எடுக்கவில்லை. அவரை ஒரு நல்ல வீரராக இந்திய அணிக்காக வளர்த்தெடுக்க விரும்புகிறோம். நிச்சயம் இவருக்கு இந்த ஐபிஎல் தொடரில் பெரிய ஒரு பங்கு உள்ளது என்றே நான் கருதுகிறேன்”

இவ்வாறு கூறினார் கம்பீர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/article7077493.ece

Link to comment
Share on other sites

  • Replies 449
  • Created
  • Last Reply

எங்கள் அணிக்கு சாதகமாக மந்தமான பிட்ச்களை தயாரிக்கிறோமா?: கம்பீர் கொதிப்பு
 

 

தங்கள் அணியின் ஸ்பின் பவுலர்களுக்குச் சாதகமாக மந்தமான பிட்ச்களை தயாரிப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

 

நாளை (புதன்) ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல்-8 தொடரின் முதல் போட்டியில் களமிறங்குகிறது.

 

இந்நிலையில் பிட்ச் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கம்பீர், “நாங்கள் வெற்றி பெறுவதற்காக மந்தமான, ஸ்பின் சாதக ஆட்டக்களங்களை தயாரிக்கிறோம் என்று பேசிவருகின்றனர். மந்தமான பிட்ச்களில் விளையாடி இருமுறை சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது. பெரிய தொடர்களை வெல்ல சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். நாங்கள் அதைத்தான் செய்தோம்.

 

பந்துகள் திரும்பும் ஆட்டக்களம், இருதரப்பினருக்கும் சாதகமான நல்ல ஆட்டக்களமும் கூட, ஆனால் எங்களிடம் சிறந்த பேட்டிங் வரிசையும் உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

இருதரப்புக்கும் சாதகமான பிட்ச்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற பிசிசிஐ-யின் எச்சரிக்கை ஒவ்வொரு பிட்ச் தயாரிப்பாளருக்குமானதே என்று நம்புகிறேன்.

நாங்கள் கொல்கத்தாவுக்கு வெளியேயும் சிறப்பாக ஆடி வருகிறோம், பிட்ச் பற்றிய பேச்சை நிறுத்த வேண்டும் என்று கருதுகிறேன். நாங்கள் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளோம்.

 

எப்போது தொடரை தொடங்கினாலும் பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பதை நாங்கள் அறியாமல்தான் களமிறங்குகிறோம். இப்போது போடப்பட்டுள்ளது ஒரு புதிய பிட்ச் ஆகவே அது இப்படித்தான் செயல்படும் என்றெல்லாம் கூறுவதற்கில்லை.

 

எங்கள் அணியை வீழ்த்துவது கடினம். மீண்டும் உள்நாட்டு வீரர்கள்தான் முக்கியத்துவம் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். ராபின் உத்தப்பா நல்ல ஃபார்மில் இருக்கிறார். சூரியகுமார் யாதவ் ஒரு பிரகாசமான இளம் வீரர், அவர் இந்தத் தொடரில் ஒரு முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம். மணிஷ் பாண்டே இருக்கிறார், அவரும் ரன்களை எடுத்து வருகிறார். யூசுப் பத்தான் இருக்கிறார்... ஆகவே உள்நாட்டு வீரர்கள் அதிக பங்களிப்பு செய்வார்கள் என்றே நான் கருதுகிறேன்” இவ்வாறு கூறினார் கம்பீர்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7077979.ece

 

Link to comment
Share on other sites

ஐபிஎல் துடுப்பாட்டத் தொடர்: சென்னைப் போட்டிகளில் சிறிலங்கா வீரர்களுக்கு அனுமதி மறுப்பு APR 08, 2015 | 1:46by அ.எழிலரசன்in செய்திகள்

Sri_Lanka_Cricket_Team-300x200.jpgஇந்தியாவில் ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டித்தொடரில், பங்கேற்கும் அணிகளில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், கொடுமைகளைக் கண்டித்து, சிறிலங்காவின் துடுப்பாட்ட மற்றும் ஏனைய விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டில் போட்டிகளில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பல துடுப்பாட்ட, உதைபந்தாட்ட அணிகள், தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் நடந்து வரும் ஐபிஎல் போட்டித் தொடரில், பங்கேற்கும் அணிகளில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில்லை.

தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் எதிர்ப்பினால், இந்த நிலை நீடித்து வருகிறது.

தற்போது ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் போட்டித் தொடரிலும், சிறிலங்கா வீர்ர்கள், சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும்,  சென்னை சுப்பர்கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்கவுள்ளது.

இதில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா வீரர், அஞ்சலோ மத்யூ விளையாடமாட்டார் என்று தெரியவருகிறது.

அவர், தமது அணியுடன் சென்னைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/04/08/news/5078

 

Link to comment
Share on other sites

வேகம், விறுவிறுப்பு, சிக்ஸர் மழை: 8-வது ஐபிஎல் இன்று தொடக்கம்

 

 

வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, சிக்ஸர் மழை என கிரிக்கெட் பிரியர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 8-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

 

nwkca0.jpg

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதரா பாத் என பலம் வாய்ந்த 8 அணிகள் களத்தில் உள்ளன. மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கொல்கத்தாவில் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வரும் 12 முதல் 25-ம் தேதி வரை அங்கு எந்தப் போட்டியும் நடைபெறாது.

 

இன்று தொடங்கும் இந்த ஐபிஎல் தொடர் மே 24-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 12 மைதானங்களில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் மற்ற அணிகளை எதிர்த்து தலா இரு முறை (உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில்) மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

 

முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் முதல் தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். அதைத் தொடர்ந்து வெளியேற்றும் சுற்று நடைபெறும். இதில் லீக் சுற்றில் 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த அணிகள் மோதும். அதில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதிச்சுற்றில் தோற்ற அணியுடன் மோதும். இதற்கு 2-வது தகுதிச்சுற்று என்று பெயர். இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். வெளியேற்றும் சுற்றில் தோற்கும் அணி 4-வது இடத்தைப் பிடிக்கும். 2-வது தகுதிச்சுற்றில் தோற்கும் அணிக்கு 3-வது இடம் கிடைக்கும்.

 

இறுதிச்சுற்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஆனால் பிளே ஆப் சுற்று நடக்கும் இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளின் ஊர்களில் பிளே ஆப் சுற்று நடத்தப்படும்.

 

பலம் வாய்ந்த சூப்பர் கிங்ஸ்

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு நிகரான பலம் கொண்டதாக திகழ்கிறது. இரு முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2011-ல் சாம்பியன் ஆனது. அதன்பிறகு இரு முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய போதும் கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே இந்த முறை அந்தக் குறையை போக்க தோனி படை முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, பிரென்டன் மெக்கல்லம், டூ பிளெஸ்ஸி, டுவைன் பிராவோ என பலம் வாய்ந்த வீரர்கள் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். உலகக் கோப் பையில் எதிரணிகளை பந்தாடிய மெக்கல்லம், இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அச்சுறுத்தும் வீரராக திகழ்கிறார்.

 

பெங்களூர் அணி தொடர்ச்சியாக கலக்கி வந்தாலும், கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் மட்டும் அந்த அணிக்கு இதுவரை கிடைக்க வில்லை.

 

கேப்டன் கோலி, அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், எந்தத் தருணத்திலும் எதிரணியிடமிருந்து போட்டியைப் பறிக்கும் ஆற்றல் கொண்ட டிவில்லியர்ஸ் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. உலகக் கோப்பையில் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பெங்களூர் அணியில் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

 

ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் வலுவாகவே உள்ளது. ஸ்டீவன் ஸ்மித், சாம்சன், ரஹானே போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி, ஃபாக்னர், அபிஷேக் நய்யார் போன்ற ஆல்ரவுண்டர்களும் அந்த அணியின் பலமாகத் திகழ்கின்றனர்.

 

கேப்டன் பெய்லி, டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், சேவாக், மனன் வோரா, விருத்திமான் சாஹா என வலுவான பேட்டிங் படையைக் கொண்டுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

 

யுவராஜ் சிங்

புதிய கேப்டன் தலைமையில் களமிறங்குகிறது டெல்லி. அந்த அணியில் வலுவான வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்த முறையாவது அதிர்ஷ்டம் கை கொடுக்குமா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும். கேப்டன் டுமினி, மயங்க் அகர்வால், அல்பி மோர்கல், யுவராஜ் சிங் போன்றோர் அந்த அணியின் பலமாகத் திகழ்கின்றனர். ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள யுவராஜ் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

சன்ரைஸர்ஸ் அணி இந்த முறை புதிய கேப்டனான வார்னரின் தலைமையில் களமிறங்குகிறது. வார்னர், ஷிகர் தவன், கெவின் பீட்டர்சன் போன்ற வலுவான பேட்ஸ் மேன்களும், டிரென்ட் போல்ட், ஸ்டெயின், இஷாந்த் சர்மா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-8%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7080247.ece


ஐபிஎல்: இதுவரை சாம்பியன்கள்
 

 

ரூ.34 கோடி பரிசுத் தொகை

 

போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.34 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடியும், 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணி களுக்கு முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.4 கோடியும் வழங்கப்படவுள்ளது.

o73v9k.jpg

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7080488.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் 2015 போட்டி அட்டவணை
 

வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, சிக்ஸர் மழை என கிரிக்கெட் பிரியர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 8-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

swd0uw.jpg

 

போட்டி அட்டவணைக்கான விவரங்கள்:

289lwfs.jpg

 

qsnpf5.jpg

 

rkyosy.jpg

 

24yn7rs.jpg

 

2py48c9.jpg

 

jztwdl.jpg

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2015-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88/article7080561.ece

 

 

 

 

Link to comment
Share on other sites

ஐபிஎல்: எல்லா புகழும் ரெய்னாவுக்கே!
 

110j5li.jpg

ஐபிஎல் போட்டியின் தொடக்கம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் புதுமாப்பிள்ளை சுரேஷ் ரெய்னா, இந்த முறை தனது மனைவியின் முன்னிலையில் கலக்கவுள்ளார்.

 

சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெற்றவரான ரெய்னா, அந்த அணி இதுவரை விளையாடிய 115 ஆட்டங்களிலும் விளையாடிய ஒரே நபர் ஆவார்.

 

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3325 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரெய்னா, அதிகமுறை அரைசதம் (23), அதிக கேட்ச் (64) பிடித்த வீரர் போன்ற சாதனைகளையும் தன்வசம் வைத்துள்ளார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/article7080319.ece

 

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் 2015: அணி விவரங்கள்

9zrkas.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ்

எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கைல் அபாட், அஸ்வின், அங்குஷ் பெய்ன், டூ பிளெஸ்ஸி, மைக் ஹசி, பிரென்டன் மெக்கல்லம், ரோனித் மூர், ஆசிஷ் நெஹ்ரா, இர்ஃபான் பதான், சுரேஷ் ரெய்னா, ராகுல் சர்மா, ஆண்ட்ரூ டை, டுவைன் ஸ்மித், மோஹித் சர்மா, பிரதியூஷ் சிங், ஈஸ்வர் பாண்டே, பவன் நெகி, மிதுன் மன்ஹாஸ், ரவீந்திர ஜடேஜா, மட் ஹென்றி, டுவைன் பிராவோ, சாமுவேல் பத்ரீ, அபராஜித், இக்லவ்யா துவிவேதி.

 

டெல்லி டேர்டெவில்ஸ்

ஜே.பி.டுமினி (கேப்டன்), மயங்க் அகர்வால், ஸ்ரீகர் பரத், நாதன் கோல்ட்டர் நீல், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டொமினிக் ஜோசப், சிதம்பரம் கவுதம், டிராவிஸ் ஹெட், இம்ரான் தாஹிர், ஸ்ரேயாஸ் ஐயர், கேதார் ஜாதவ், கே.கே.ஜியாஸ், ஜாகீர்கான், ஏஞ்செலோ மேத்யூஸ், அமித் மிஸ்ரா, முகமது சமி, அல்பி மோர்கல், சபேஸ் நதீம், குரீந்தர் சாந்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ், மனோஜ் திவாரி, சவுரப் திவாரி, ஜெயதேவ் உனட்கட், ஜெயந்த் யாதவ், யுவராஜ் சிங்.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), அனுரீத் சிங், பர்விந்தர் அவானா, ரிஷி தவன், யோகேஷ் கோல்வால்கர், குருகீரத் சிங், பியூரான் ஹென்ரிக்ஸ், மிட்செல் ஜான்சன், கரன்வீர் சிங்,

ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், நிகில் நாயக், அக்ஷர் படேல், திசாரா பெரேரா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சந்தீப் சர்மா, வீரேந்திர சேவாக், சிவம் சர்மா, ஷர்துல் தாக்குர், முரளி விஜய், மனன் வோரா.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கவுதம் கம்பீர் (கேப்டன்), அசார் மெக்மூத், ஜோஹன் போத்தா, கே.சி.கரியப்பா, பியூஷ் சாவ்லா, பட் கம்மின்ஸ், ஆதித்ய கார்வால், பிராட் ஹாக், ஷெல்டன் ஜாக்ஸன், குல்தீப் யாதவ், மோர்ன் மோர்கல், சுனில் நரேன், சுமித் நர்வால், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், வீர் பிரதாப் சிங், வைபவ் ராவல், ஆண்ட்ரே ரஸல், ஷகிப் அல்ஹசன், ரியான் டென் தஸ்சாத்தே, ராபின் உத்தப்பா (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ்.

 

மும்பை இண்டியன்ஸ்

ரோஹித் சர்மா (கேப்டன்), கோரே ஆண்டர்சன், பிளிஸ்ஸார்டு, ஜேஸ்பிரித் பூம்ரா, உன்முக்த் சந்த், மெர்ச்சண்ட் டி லேஞ்சி, ஆரோன் ஃபிஞ்ச், ஸ்ரேயாஸ் கோபால், ஹர்பஜன் சிங், ஜோஷ் ஹேஸில்வுட், சித்தேஷ் லேட், மிட்செல் மெக்லீனா கான், லசித் மலிங்கா, அபிமன்யூ மிதுன், பிரக்யான் ஓஜா, ஹார்டிக் பந்த்யா, பார்திவ் பட்டேல் (விக்கெட் கீப்பர்), கிரண் போலார்ட், நிதிஷ் ராணா, அம்பட்டி ராயுடு, லென்ட் சிம்மன்ஸ், ஜெகதீஷ் சுசித், பவன் சுயால், ஆதித்ய தாரே, வினய் குமார், அக்ஷய் வாக்கரே.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஷேன் வாட்சன் (கேப்டன்), அங்கித் சர்மா, பேரின்டர் ஸ்ரன், ரஜத் பாட்டியா, ஸ்டூவர்ட் பின்னி, பென் கட்டிங், ஜேம்ஸ் ஃபாக்னர், தீபக் ஹூடா, தவல் குல்கர்னி, விக்ரம்ஜித் மாலிக், கிறிஸ் மோரிஸ், கருண் நாயர், அபிஷேக் நய்யார், அஜிங்க்ய ரஹானே, பிரதீப் சாஹு, தினேஷ் சலுங்கே, சஞ்ஜு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், டிம் சவுதி, பிரவீண் டாம்பே, ராகுல் திவேதியா, ரஸ்டி தேரான், சாகர் திரிவேதி, திஷந்த் யாக்னிக்.

 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

விராட் கோலி (கேப்டன்), வருண் ஆரோன், சீன் அபாட், அபு நெசிம், எஸ்.பத்ரிநாத், ஷிஷிர் பவானே, மன்விந்தர் பிஸ்லா, யுவேந்திர சாஹல், ஏ.பி.டிவில்லியர்ஸ், அசோக் திண்டா, கிறிஸ் கெயில், இக்பால் அப்துல்லா, தினேஷ் கார்த்திக், சர்ஃப்ராஸ் கான், நிக் மேடின்சன், மன்தீப் சிங், ஆடம் மில்னி, ஹர்ஷல் படேல், ரிலீ ரொசாவ், டேரன் சமி, சந்தீப் வாரியார், ஜலஜ் சக்ஸேனா, மிட்செல் ஸ்டார்க், யோகேஷ் டக்கவாலே, டேவிட் வியெஸ், விஜய் ஸோல்.

 

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர் (கேப்டன்), ஆசிஷ் ரெட்டி, ரிக்கி பூய், ரவி போபாரா, டிரென்ட் போல்ட், ஷிகர் தவன், மோசஸ் ஹென்ரிக்ஸ், சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார், பிரவீண் குமார், சாமா மிலிந்த், இயோன் மோர்கன், நமன் ஓஜா, பர்வேஸ் ரசூல், கெவின் பீட்டர்சன், பத்மநாபன் பிரசாந்த், லோகேஷ் ராகுல், இஷாந்த் சர்மா, கரண் சர்மா, லட்சுமி சுக்லா, டேல் ஸ்டெயின், ஹனுமா விஹாரி, கேன் வில்லியம்சன்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2015-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7080456.ece

 

Link to comment
Share on other sites

சூப்பர் கிங் தோனி: ஐபிஎல் வரலாற்றில் படைக்கப்பட்ட சாதனைகளில் சில..!
 

 

ஐபிஎல் வரலாற்றில் படைக்கப்பட்ட சாதனைகளில் சில…

# ஐபிஎல் போட்டியின் தொடக்கம் முதல் தற்போது வரை கேப்டனாக இருக்கும் ஒரே நபர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிதான். அதிலும் அவர் தொடர்ந்து ஒரே அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை 112 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். மொத்தத்தில் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, சூப்பர் கிங்தான்.

 

# அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற பெருமை இன்றும் சென்னை அணியின் வசமே உள்ளது. அந்த அணி 69 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது.

 

# அதிக தோல்வியைப் பதிவு செய்த அணிகள் வரிசையில் டெல்லி அணி (59) முதலிடத்தில் உள்ளது.

 

# ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: பெங்களூர்-263/5 (புனேவுக்கு எதிராக, 2013).

 

# ஓர் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: ராஜஸ்தான்-58 (பெங்களூருக்கு எதிராக 2009)

 

# அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற பெருமையை கெயில் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிக்காக 68 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 192 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

 

# இதுவரை 31 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

 

# கிறிஸ் கெயில் 4 சதங்களுடன் அதிக சதமடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

 

# தனிநபர் அதிகபட்சம்: கிறிஸ் கெயில் (பெங்களூர்) 175* (புனேவுக்கு எதிராக 2013).

 

# அதிக முறை டக்அவுட்டானவர்கள் கவுதம் கம்பீர், அமித் மிஸ்ரா. இருவரும் தலா 10 முறை டக்அவுட் ஆகியுள்ளனர்.

 

# அதிக விக்கெட் எடுத்தவர்களில் மும்பை வீரர் லசித் மலிங்கா முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை 83 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 119 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

 

# 13 முறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் அமித் மிஸ்ரா 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி, சன்ரைஸர்ஸ் அணிகளுக்காக விளையாடியபோது தலா ஒரு முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/article7080312.ece

Link to comment
Share on other sites

ப்ப்பா.. அன்பிலும், பண்பிலும் என்னா டீமுடா சென்னை சூப்பர் கிங்ஸ்:'மும்பை ரிட்டர்ன்' மைக் ஹஸ்சி

2uy4vn6.jpg

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மிகவும், அன்பானவர்கள், பண்பானவர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார், மும்பை அணிக்காக கடந்த வருடம் மட்டும் ஆடிவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ள மைக் ஹஸ்சி. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாஜி முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மைக் ஹஸ்சி. ஐ.பி.எல். போட்டியில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் 2013 வரை விளையாடினார்.

 

2011 மற்றும் 2013ல் அதிக ரன் எடுத்த சென்னை வீரராக திகழ்ந்தார். ப்ப்பா.. அன்பிலும், பண்பிலும் என்னா டீமுடா சென்னை சூப்பர் கிங்ஸ்:'மும்பை ரிட்டர்ன்' மைக் ஹஸ்சி கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மைக்ஹஸ்சி மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். தற்போது நடைபெற இருக்கும் 8வது ஐ.பி.எல். போட்டியில் ஹஸ்சி மீண்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுகிறார். அவரை ரூ 1.5கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

 

ஐபிஎல் அதிகாரபூர்வ இணையதளத்தில் மைக் ஹஸ்சி கூறியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு டோணி மற்றும் பிளமிங் ஒரு முக்கிய பங்களிப்பாக இருப்பார்கள். இருவரும் மிக நுட்பமான கிரிக்கெட் அறிவு உடையவர்கள். நெருக்கடியான நேரத்திலும், பதற்றப்படாமல் திட்டம் தீட்டுவார்கள் அவர்களிடையே நல்ல நட்புறவு உள்ளது. அணியில் உள்ள வீரர்கள் மனதிறந்து நேர்மையாக பழகுகிறார்கள். வீரர்களுக்கு இடையில் மிகதெளிவான தொடர்புகள் உள்ளன.

 

யாரும் உணர்ச்சிவசப்படுவது கிடையாது. கேப்டனை போலவே கூலாக பழகி வருகிறார்கள். அவர்களுக்கு இடையில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சமநிலையை நன்றாக பராமரிக்கிறார்கள். இது வீரர்கள் அறையில் ஆரோக்கியத்தை தருகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கைவிட, டோணி மிகவும் கூலாக காணப்படுகிறார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/dhoni-has-very-astute-cricketing-brain-says-hussey-224316.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜபிஎல் விளையாட்டில் எனக்கு பெரிதும் ஆர்வம் இல்லை.........இன்று சுனில் நரன் விளையாடுவதால் அவரின் விளையாட்டை பார்க்க ஆர்வமாக உள்ளேன்...........நீண்ட நாள் அவரின் விளையாட்டை பார்த்து............இந்த ஜபி எல்லில் அதிக விக்கேட் எடுக்க சுனில் நரனுக்கு எனது வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

8வது ஐ.பி.எல்.: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு- மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

 

கொல்கத்தா: 8வது ஐ.பி.எல். போட்டியின் முதலாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இன்றைய முதல் போட்டியில் சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 8வது ஐ.பி.எல்.: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு- மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் காம்பீர், பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆரோன் பிஞ்ச் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் அவுட் ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-kkr-opt-bowl-against-mi-224351.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MI 168/3 (20)

KKR 13/1(2.5)

Link to comment
Share on other sites

ஐபிஎல்: 2 ரன்களில் சதத்தை தவற விட்ட ரோஹித் சர்மா

 

ஐபிஎல் 2015-ன் முதல் போட்டியில் 2 ரன்களில் சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார் ரோஹித் சர்மா. அவர் அபாரமாக விளையாடி 98 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

 

ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் இந்த ஐபிஎல் டி 20 போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் மும்பை அணியை பேட் செய்ய களமிறக்கினார்.

மோர்னி மோர்கெலின் அருமையான தொடக்க ஓவர்களில் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது ஓவரில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ரோஹித் மட்டுமே களத்தில் இருந்தார்.

 

ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் 5 ரன்கள் எடுத்து, மோர்னி மோர்கெல் வீசிய அவ்வளவாக ஷார்ட் பிட்ச் இல்லாத பந்தை புல் ஆட முயன்றார் பந்து மேலே எழும்பி கேட்ச் ஆனது.

 

மும்பை வீரர் ஆதித்ய தாரே 7 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார். ஷாகிப் அந்தப் பந்தை நன்றாக தூக்கி வைடாக வீசினார், தாரேயால் அதனை சரிவர மட்டையினால் தொடர்பு படுத்த முடியவில்லை. லாங் ஆஃபில் உமேஷ் யாதவ் கையில் கேட்ச் ஆனது.

 

அம்பாத்தி ராயுடு அடுத்து களமிறங்கி சோபிக்கவில்லை. அவருக்கு 2 ஸ்லிப்களை நிறுத்தினார் கம்பீர். மோர்கெல் வீசிய பந்தை மட்டையால் தொட்டார் நேராக ஸ்லிப்பில் யூசுப் பதானிடம் கேட்ச் ஆனது. ராயுடு ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார். 5.2 ஓவர்களில் 37/3 என்று மும்பை திணறியது.

 

ஆனால் அதன் பிறகு அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்து 14.4 ஓவர்களில் 131 ரன்களை ஆட்டமிழக்காமல் 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. நிச்சயம் இது கொல்கத்தாவுக்கு கடினமான இலக்கு என்றே தெரிகிறது.

 

ரோஹித் சர்மா 65 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 98ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோரி ஆண்டர்சன் 41 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிச்கர்களுடன் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

 

19வது ஓவர் முடிவில் ரோஹித் சர்மா 93 ரன்கள் எடுத்திருந்தார். 20வது ஓவரில் ஆண்டர்சன், ஷாகிபை ஒரு சிக்சர் அடித்தார். பிறகு 2 ரன்கள், பிறகு 1 ரன்.

ரோஹித் பேட் செய்ய வந்து பாயிண்டில் ஒரு பவுண்டரி அடித்து 97-க்கு வந்தார். ஆனால் அடுத்து 5-வது பந்தை மேலேறி வந்து அடித்தார் 1 ரன் மட்டுமே கிடைத்தது இதனால் அவர் 98 ரன்களில் எதிர்முனையில் தேங்கினார். கடைசி பந்தை ஆண்டர்சன் லாங் ஆனில் சிக்ஸ் அடித்து அரைசதத்தை கடந்தார்.

 

கடைசி 6 ஓவர்களில் 88 ரன்களை விட்டுக் கொடுத்தது கொல்கத்தா. மோசமான பீல்டிங், கோரி ஆண்டர்சன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு சில கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. இந்தக் கேட்ச்களை பிடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் குறைவான ஸ்கோருக்கு மட்டுப்படுத்தியிருக்கலாம்.

 

கொல்கத்தா அணியில் மோர்னி மோர்கெல் அருமையாக வீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுனில் நரைன் 4 ஓவர்கள் 28 ரன்கள் விக்கெட் இல்லை. ஷாகிப் 4 ஒவர்களில் 48 ரன்கள் விளாசப்பட, உமேஷ் யாதவ் 3 ஓவர்களில் 36 ரன்கள் வழங்கினார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article7081796.ece

Link to comment
Share on other sites

கோல்கட்டா கலக்கல் வெற்றி

 

கோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரை அமர்க்களமாக துவக்கியது ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி. நேற்றைய முதல் லீக் போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நேற்று துவங்கியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

மார்கல் மிரட்டல்:

மும்பை அணி துவக்கத்தில் மார்னே மார்கல் ‘வேகத்தில்’ அதிர்ந்தது. இவரிடம் முதலில் ஆரோன் பின்ச்(5) சரணடைந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, சாகிப் பந்தை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். ஆதித்ய தாரே(7) நிலைக்கவில்லை. மார்கல் பந்தில் அம்பதி ராயுடுவும்(0) கிளம்ப, மும்பை அணி 5.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்து திணறியது.

 

தனது 4 ஓவரில் 18 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய மார்கல், கோல்கட்டாவுக்கு கைகொடுத்தார். இவரது ஓவர் முடிந்த நிலையில், ரோகித், கோரி ஆண்டர்சன் சேர்ந்து விவேகமாக ஆடினர். 4வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தனர். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 15வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரோகித், அரைசதம் கடந்தார்.

 

மறுமுனையில் அதிரடி காட்டிய ஆண்டர்சன், சாகிப் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அரைசதம் கடந்தார். மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. சதம் எட்ட தவறிய ரோகித்(98 ரன், 65 பந்தில், 12 பவுண்டரி, 4 சிக்சர்), ஆண்டர்சன்(55) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

காம்பிர் அரைசதம்:

சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு உத்தப்பா(9) ஏமாற்றினார். பின் காம்பிர், மனிஷ் பாண்டே சேர்ந்து அபாரமாக ஆடினர்.  ஹர்பஜன், பிரக்யான் ஓஜா, மலிங்கா என யார் பந்துவீசினாலும் பவுண்டரி, சிக்சர்களாக அடித்து நொறுக்கினர். பாண்டே 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து, வெளியேறினார். அரைசதம் கடந்த காம்பிர்(57), பும்ரா ‘வேகத்தில்’ வீழ்ந்தார்.

 

அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் துடிப்பாக ஆடி, பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டார். பும்ரா வீசிய போட்டியின் 17வது ஓவரில் யாதவ் 2 சிக்சர், யூசுப் பதான் ஒரு சிக்சர் அடிக்க, 20 ரன்கள் எடுக்கப்பட்டன. வினய் குமார் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய யாதவ், விரைவான வெற்றியை தேடித்தந்தார். கோல்கட்டா அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. யாதவ்(46), யூசுப்(14) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

5

ஐ.பி.எல்., தொடரில் ஒரு போட்டியில் 2 அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்திய போதெல்லாம், மார்னே மார்கல் 20 ரன்னுக்கும் குறைவாகத் தான் விட்டுக் கொடுத்தார். மார்கல் 5வது முறையாக இப்படி அசத்தினார்.

 

ஈடனும் ரோகித்தும்...

கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானம் ரோகித் சர்மாவுக்கு ராசியானது. இங்கு கடைசியாக விளையாடிய இரண்டு இன்னிங்சில் 238 பந்துகளில் 362 ரன்கள் குவித்தார். அதாவது, கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 173 பந்தில் 264 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். நேற்று 65 பந்தில் 98 ரன்கள் எடுத்தார்.

ஈடனில் மட்டும் அனைத்துவிதமான போட்டிகளில் சேர்த்து 4 சதம், ஒரு அரைசதம் உட்பட ஒட்டுமொத்தமாக 919 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 102.1.

 

3000 ரன்கள்

ஐ.பி.எல்., வரலாற்றில் 3000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை நேற்று  ரோகித் சர்மா (113 போட்டி, 3001 ரன்) பெற்றார். முதலிடத்தில் சென்னை அணியின் ரெய்னா(115 போட்டி, 3325 ரன்) உள்ளார்.

 

24

நேற்று 57 ரன்கள் எடுத்த கோல்கட்டா கேப்டன் காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ரெய்னா (24) சாதனையை சமன் செய்தார். மும்பை வீரர் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் (23) உள்ளார்.

 

முதன் முதலாக

எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் முதன் முதலில் அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகள்.

 

* முதல் ‘டாஸ்’ வென்றார் கோல்கட்டா கேப்டன் காம்பிர்

 

* முதல் பந்தை வீசினார் கோல்கட்டாவின் உமேஷ் யாதவ். இதனை சந்தித்த ரோகித் சர்மா ரன் எடுக்கவில்லை. அடுத்த பந்தில் முதல் ரன்னை  எடுத்தார்.

 

* முதல் பவுண்டரியை மார்னே மார்கல் பந்தில் மும்பை அணியின் பின்ச் அடித்தார்.

 

* முதல் விக்கெட்டை வீழ்த்தினார் கோல்கட்டாவின் மார்னே மார்கல். இவரது பந்தில் பின்ச் அவுட்டானார்.

 

* முதல் சிக்சரரை சாகிப் பந்தில் ரோகித் சர்மா அடித்தார்.

 

* மும்பையின் அம்பதி ராயுடு, இத்தொடரில் ‘டக்’ அவுட்டான முதல் வீரரானார்.

 

* முதல் அரைசதம் அடித்தார் ரோகித் சர்மா

 

http://sports.dinamalar.com/2015/04/1428425786/IndianPremierLeagueHoldersKolkataKnightRidersFaceFormidable.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லோரும் ஐ .பி ல் தொடரில் ஆர்வமாக இருப்பதனால், இவ் இணையத்தளம் உங்களை நிச்சயம் கவரும் .

 

https://cricket.cash/

 

வெல்லுங்கள் விளையாட்டில் . :D

 

நீங்கள் ஒவ்வொருவரும் ஆதரவு கொடுக்கும் அணி நன்றாக விளையாடட்டும் . ஆனால் நான் ஆதரவு அளிக்கும்

சென்னை சுப்பர் கிங்க்ஸ் மட்டும் கோப்பையை தட்டிச் செல்லட்டும் .

Link to comment
Share on other sites

இண்டியன் ப்றீமியர் லீக் போட்டிகளில் பெண் வர்ணனையாளர்கள் அறிமுகம்
2gsgwu9.jpg

 

இண்­டியன் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மா­னது முதல் ஒவ்­வொரு முறையும் ஏற்­பாட்­டா­ளர்கள் ஏதா­வது ஒரு புதி­யதை அறி­மு­கப்­ப­டுத்தி வந்­துள்­ளனர்.

இம்­முறை வர்­ண ­னை­யா­ளர்கள் குழாமில் அஞ்சும் சொப்ரா, ஈசா குஹா, லீசா ஸ்தாலேக்கர், மெலானி ஜோன்ஸ் ஆகிய நால்­வரே இணை­ய­வுள்­ளனர்.

இவர்கள் நால்­வரும் முன்னாள் சர்­வ­தேச கிரி­க்கெட் வீராங்­க­னை­க­ளாவர்.

 

அஞ்சும் சொப்ரா இந்­திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வி­யாவார். இவர் பல கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது தொலைக்­காட்சி கலை­ய­கத்தில் கட­மை­யாற்­றிய அனு­ப­வ­சா­லி­யாவார்.இங்­கி­லாந்து மகளிர் அணியின் முன்னாள் வேகப்­பந்­து ­வீச்­சா­ளி­னி­யான ஈசா குஹாவும் வானொலி, தொலைக்­காட்சி சேவை­களில் ஊட­க­வி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி ­வரு­கின்றார்.

 

அத்­துடன் நேரடி வர்­ண­னை­யா­ள­ரா­கவும் பல போட்­டி­களில் செயற்­பட்­டுள்ளார்.

 

லீசா ஸ்தாலெக்கர், இந்­தி­யாவில் பிறந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­த­வ­ராவார்.

 

இவர் அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணிக்­காக 8 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் 125 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளிலும் 54 இரு­பது 20 போட்­டி­க­ளி லும் விளை­யா­டி­யுள்ளார்.

மெலானி ஜோன்ஸும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் சர்­வ­தேச கிரிக்கெட் வீராங்­க­னை­யாவார்.

 

இவர் 5 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் 61 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளிலும் விளை­யா­டி­ய­வ­ராவார்.இதே­வேளை, இவ்வருடப் போட்­டி­க­ளின்­போது சுனில் காவஸ்கர், ரசல் ஆர்னல்ட், ரமீஸ் ராஜா, லக்ஸ்மன் சிவராம கிருஷ்ணன் ஆகிய முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 22 ஆண்கள் வர்ணனை வழங்கவுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9610#sthash.kTWWFc2F.dpuf

Link to comment
Share on other sites

அதிரடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி டேர் டெவில்ஸ்?
 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் நாளை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 போட்டியில் களமிறங்குகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான கடந்த ஐபிஎல் போட்டி சர்ச்சைகள் இன்னமும் உயிருடன் உள்ள நிலையில், சர்ச்சைகளை புறமொதுக்கி ஆட்டத்தில் அந்த அணி கவனம் செலுத்தவுள்ளதாக அணி நிர்வாகம் கூறுகிறது.

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையிலான 7 தொடர்களில் மிகவும் சீரான முறையில் ஆடி வெற்றிகளைக் குவித்து வரும் அணி தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ். மாறாக டெல்லி டேர் டெவில்ஸ் அணி முற்றிலும் புதிய கேப்டனான ஜே.பி.டுமினியின் தலைமையின் கீழ் ஒரு புதிய அணியை களமிறக்குகிறது.

இதற்கு முந்தைய 7 ஐபிஎல் தொடர்களிலும் இறுதி 4 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். 4 இறுதிப் போட்டிகளில் விளையாடி 2 முறை சாம்பியன் பட்டமும் தோனியின் தலைமையின் கீழ் வென்றுள்ளது சென்னை.

 

ரசிகர்களின் பேராதரவு பெற்ற ஒரு அணி இருக்கிறதென்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் அது மிகையாகாது.

 

அணிக்கு மீண்டும் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி திரும்பியுள்ளார். இர்பான் பதான் வந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் மற்றும் லெக் ஸ்பின்னர் ராகுல் சர்மா ஆகியோரும் உள்ளனர்.

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலக்கிய பிரெண்டன் மெக்கல்லம்மின் ஆட்டம் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜொலிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

நடுவரிசையில், எப்போதும் ஃபார்மில் இருக்கும் சுரேஷ் ரெய்னா, ஹஸ்ஸி, தோனி, டிவைன் பிராவோ, ஆகியோர் இருக்க ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, மற்றும் அஸ்வின் உள்ளனர்.

 

பந்துவீச்சில் கைல் அபாட் தவிர மணிக்கு 150 கிமீ வேகத்தில் சீராக வீசும் நியூஸிலாந்தின் மேட் ஹென்றி இருக்கிறார். உலகக் கோப்பை ஃபார்மைத் தொடரும் முனைப்புடன் மோஹித் சர்மா இருக்கிறார்.

 

டெல்லி அணியில் யுவராஜ் சிங் எனும் திமிங்கிலம் உள்ளது. எப்படியாவது மீண்டும் அணியில் இடம்பெறத் துடித்துக் கொண்டிருக்கும் இவர் விக்கெட் கீப்பர் நிலையில் இருக்கும் தோனியை கவரும் விதமாக, அல்லது அசத்தும் விதமாக நிச்சயம் ஒரு அனாயாச மட்டை சுழற்றல் இன்னிங்ஸை காண்பிப்பார் என்று ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

 

டெல்லி அணியில் யுவராஜ், ஜே.பி.டுமினி, மயங்க் அகர்வால், குவிண்டன் டி காக், கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி ஆகியோர் இருக்கின்றனர். மேத்யூஸ் இலங்கை வீரர் என்பதால் சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை.

 

பந்துவீச்சில் ஜாகீர் கான், மொகமது ஷமி, நேதன் கூல்டர் நீல் என்ற ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஆகியோர் உள்ளனர். ஸ்பின் துறையில் இம்ரான் தாஹிர் உள்ளார். இவர் அல்லது அமித் மிஸ்ரா அணியில் நிச்சயம் இடம்பெறுவது உறுதி. சென்னை முன்னாள் வீரர் ஆல்பி மோர்கெல் டெல்லி அணியில் தற்போது இருக்கிறார். அவரை விளையாட வைக்க வாய்ப்பு குறைவென்றாலும் சென்னை அணிக்கு எதிராக அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி முனையலாம்.

 

சென்னை அணி (உத்தேசம்): தோனி, ரெய்னா, பிரெண்டன் மெக்கல்லம், மைக் ஹஸ்ஸி, டிவைன் பிராவோ, டுபிளெஸ்ஸிஸ், ஜடேஜா, அஸ்வின், மோஹித் சர்மா, இர்பான் பதான், கைல் அபாட்/ஈஸ்வர் பாண்டே

 

டெல்லி டேர் டெவில்ஸ்உத்தேசம்) ஜே.பி.டுமினி, மாயங்க் அகர்வால், டி காக், கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி/ஆல்பி மோர்கெல், சவுரவ் திவாரி, ஜெய்தேவ் உனட்கட், ஜாகீர் கான், மொகமது ஷமி, அமித் மிஸ்ரா
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7081218.ece?homepage=true&ref=tnwn

Link to comment
Share on other sites

8வது ஐ.பி.எல்.: மெக்கல்லம் விக்கெட்டை இழந்தது சென்னை! 3 ஓவர் முடிவில் 36 /1

 

சென்னை: 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியிருந்தது.

 

இன்றைய 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் டுமினி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

 

8வது ஐ.பி.எல்.: மெக்கல்லம் விக்கெட்டை இழந்தது சென்னை! 3 ஓவர் முடிவில் 36/1 இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் நடக்கவில்லை

 

. மூன்று கேலரிகள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாக எழுந்த பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியிருந்ததால் அப்போது சென்னை அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்கள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டிருந்தன. தற்போது சென்னையில் மீண்டும் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் மைதானமே களைகட்டியிருக்கிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-delhi-daredevils-opt-bowl-against-chennai-super-ki-224430.html

Link to comment
Share on other sites

சென்னை 113/4 after 14.2 overs


சென்னை அணி 5வது விக்கெட்டை இழந்தது.

ஜடேஜா 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட்

 

Link to comment
Share on other sites

சென்னை அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள்

 


7வது விக்கெட்டையும் இழந்தது சென்னை அணி

டோணி 30 ரன்களில் அவுட்

 


சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது

 

Link to comment
Share on other sites

டெல்லி 20 /2


டெல்லி அணி 2வது விக்கெட்டையும் பறிகொடுத்தது

ஒரே ஓவரில் டெல்லியின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் நெஹ்ரா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.