Jump to content

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை


Recommended Posts

On 2016-03-10 at 2:04 AM, விசுகு said:

உறவுகளே

ஏற்கனவே இங்கு நான் குறிப்பிட்ட

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலையின் 

அடுத்த கட்டம் ஈடேறியிருக்கிறது.

எமது கட்டமைப்பையும்

அதன் நோக்கத்தையும் நண்பர்களுக்கு கொண்டு சென்றதன் பலனாக

நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.

அந்த நண்பர் தனது பெயரை தற்பொழுது எங்கும் வெளியிடவேண்டாம் என அறிவுறுத்தியதால்

அவரது பெயரை மட்டும் தவிர்க்கின்றேன்.

உங்கள் யாருக்காவது இது போன்ற திட்டங்களில்

அல்லது அவர்களிடமிருந்து இறக்கமதி செய்யும் விருப்பமிருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கமாகும்.

நன்றி.

 

[நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.]

 

முதலீடுசெய்தால் ஏதாவது லாபம் கிடைக்குமா (~1%/month)?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

செயல் வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!

ஆண்டுக்கான மொத்த வருமானத்தையும் தெரிவித்து விட்டால்...முதலில் இடப்பட்ட மூலதனம்..எவ்வாறு அதிகரித்துள்ளது அல்லது குறைந்துள்ளது என மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியுமல்லவா?

இலாப நோக்கமற்ற நிறுவனம் எனினும்...இதனைப் பார்க்கும் மற்றையவர்கள்  இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஒரு ஊக்குவிப்பாக அமையும் அல்லவா?

மேலுள்ளவாறு எழுதுவதையும் வருங்காலங்களில் குறைக்கச் சொல்லுங்கள்!

இது அவர்களது உழைப்பால் விளைந்தது என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்! அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க இது உதவும் எனக் கருதுகின்றேன்!

நன்றி அண்ணா

இலாப நோக்கமற்றது என்பதுடன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு என்பதே இலக்காக இருப்பதால் அதனுடன்  முதலாண்டு கணக்கறிக்கை நிற்கிறது அண்ணா.

எமது நிர்வாகக்கூட்டத்தில் இது பற்றி விவாதித்தபோது

1 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பரீட்சார்த்தமாக 6 பேருடன் தொடங்கி

ஒரு வருடத்தில் 13 பேருக்கு வேலை வாய்ப்பும் நிர்வாகச்செலவுமாக 1.1 மில்லியன் ரூபாக்களை அது இலாபமாக பெற்றிருப்பது கருத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் முதலீட்டின் பற்றாக்குறை சார்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் இந்தவருடம் மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்கிளப்பில் இதன் கிளையாக ஒரு நிறுவனத்தை அமைக்கவும் குறைந்தது 10 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பல இடைஞ்சல்கள் தடைகள் குறுக்கீடுகளுக்கிடையில்

ஒரு சிலரின் தைரியப்படுத்தலில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் 

வெற்றிகரமாக 3வது கிளை பரப்பி கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபா முதலீட்டுடன் 

போரால் குடும்பத்தலைவர்களை இழந்த

பெண்கள் தலமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு அவர்களின் சொந்தக்காலில் நின்று வாழும் வாழ்வாதாரத்தை  கொடுத்து நிற்பது தான் எமது இலக்கு அண்ணா.

அதை நாம் அடைந்துள்ளோம்.

இத்துடன் நின்றுவிடாது. தொடர்வோம்.

முடிந்தவர்கள் தொடருங்கள் என்பதே எமது முன்னுதாரணத்துடனான கோரிக்கை.

 

(மேலுள்ளவாறு எழுதுவதையும் வருங்காலங்களில் குறைக்கச் சொல்லுங்கள்! 

பலமுறை சொல்லியாச்சண்ணா. அவர்களின் வலியோ அல்லது எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் நாம் வந்ததன் விளைவோ கேட்கிறார்களில்லை. அந்த வரிகள் எம் இதயங்களை மிகவும் கூச வைக்கின்றன.)

 

 

 

28 minutes ago, Knowthyself said:

 

[நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.]

 

முதலீடுசெய்தால் ஏதாவது லாபம் கிடைக்குமா (~1%/month)?

 

வணக்கம் சகோதரா

மேலே புங்கை அண்ணாவுக்கு எழுதியதை வாசித்தால் எமது நிலை தெரியும்

இலாபம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிவீர்கள்

சாவகச்சேரியில் ஆரம்பித்த நண்பரும் போட்ட ஒரேயொரு கண்டிசன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றீர்கள் என்று தான் பார்ப்பேன் என்பதாகும்.

எனவே அவருக்கும் இலாபநோக்கமில்லை.

உங்களுக்கு ஆவலிருப்பின்

சசிகரனின் தொலைபேசி இலக்கம் தருகின்றேன் பேசுங்கள்.

நன்றி  ஆர்வத்துக்கும் நேரத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் 
ஒருவனுக்கு மீனை கொடுப்பதை விட
அவனுக்கு மீனை பிடிக்க கற்றுக் கொடு

என்று மாவோ இரண்டு வரிகளில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

கள உறவுகளை வாழவைக்கும் நல்ல உள்ளம் கொண்டோர்க்கு பாராட்டுக்கள்.நீழீழி வாழ்க.

Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

வணக்கம் சகோதரா

மேலே புங்கை அண்ணாவுக்கு எழுதியதை வாசித்தால் எமது நிலை தெரியும்

இலாபம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிவீர்கள்

சாவகச்சேரியில் ஆரம்பித்த நண்பரும் போட்ட ஒரேயொரு கண்டிசன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றீர்கள் என்று தான் பார்ப்பேன் என்பதாகும்.

எனவே அவருக்கும் இலாபநோக்கமில்லை.

உங்களுக்கு ஆவலிருப்பின்

சசிகரனின் தொலைபேசி இலக்கம் தருகின்றேன் பேசுங்கள்.

நன்றி  ஆர்வத்துக்கும் நேரத்துக்கும்...

 

(நண்பர்) முதலீடு என்று எழுதினீர்கள் அதுதான் கேட்டேன், குறைவிளங்காதீர்கள், எனக்கு 2 millions அளவில் செய்ய சிலகாலம் எடுக்கும்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே...

 

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை மேலும் பலமாக்குதல்

கிழக்கில் மட்டக்கிளப்பில் இதேபோல் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தல் என 

செக்டா நிறுவனத்தால் வைக்கப்பட்ட கோரிக்கை

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகசபையால் ஆராயப்பட்டு

2016க்கான தாயகத்துக்கான கொடுப்பனவாக

10 லட்சம் ரூபா ஒதுக்குவதென தீர்மானிக்கப்பட்டு

அதற்கு செக்டா தலைவர் சசிகரனின் ஒப்புதல் பெறப்பட்டு

திங்கட்கிழமை (23-05-2016)

5 லட்சம் ரூபாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மேலும் திட்டத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளின் பதில்கள் கிடைத்ததும்

மீதி 5 லட்சம் அனுப்பி வைக்கப்படும்.

 

நன்றிக்கடிதம் இணைக்கப்படுகிறது.

 

தலைவர்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
25/05/2016

அன்புடையீர் வணக்கம்

அண்ணா

ஆடைத் தொழிற்சாலை அனுசரனைக்கான நன்றி மடல்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு கிளிநொச்சியில் அமைந்திருக்கும் ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டத்திற்காக 2016ம் ஆண்டுக்கான அனுசரணை நிதியாக ஐந்து இலட்சம் ரூபா நிதியினை வழங்கியமைக்கு செக்டா நிறுவனத்தின் சார்பிலும் ஆடைத் தொழிற்சாலை யின் சார்பிலும் பயனாளிகள் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றோம்.

தங்கள் மனித நேயப் பணிக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

நன்றி
ச.சசிகரன்
தலைவர்
செக்டா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மட்டக்களப்பிலா வாழ்த்துக்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவும் என நினைக்கிறேன் 

மீண்டும்  வாழ்த்துகள் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிரான்ஸ் மக்கள் புங்குடுதீவு ஒன்றியத்தை"  வாழ்த்த வரிகள் கிடைக்கவில்லை.
தமது ஊருக்கு உதவி செய்து, வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று... இவர்களின் உதவி பரந்து விரிந்து செல்வதுடன்...
"நாவலர் குறும்பட போட்டி" என்றும் வைத்து... கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியையும்... சிறப்பே செய்யும்,
அந்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். sLove_100-108-101

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

ஓ மட்டக்களப்பிலா வாழ்த்துக்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவும் என நினைக்கிறேன் 

மீண்டும்  வாழ்த்துகள் ???

நன்றி முனிவர் ஜீ

போரினால் கணவன்மாரை இழந்து

பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கு

வேலை வாய்ப்பை வளங்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 

எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி கண்டு

இன்று 50 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை தருவதாக செயற்ப்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்த இலக்கை இவ்வளவு விரைவில் அடைவோம் என கனவிலும் நினைக்கவில்லை.

இது மேலும் வளரும்

பயன் தரும்.

 

 

1 hour ago, தமிழ் சிறி said:

"பிரான்ஸ் மக்கள் புங்குடுதீவு ஒன்றியத்தை"  வாழ்த்த வரிகள் கிடைக்கவில்லை.
தமது ஊருக்கு உதவி செய்து, வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று... இவர்களின் உதவி பரந்து விரிந்து செல்வதுடன்...
"நாவலர் குறும்பட போட்டி" என்றும் வைத்து... கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியையும்... சிறப்பே செய்யும்,
அந்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். sLove_100-108-101

நன்றி  சிறி

உங்களது சிமிலியைப்பார்த்ததும்

எல்லாக்களைப்பும் தீர்ந்து போனது போலிருக்கு...

நான் அடிக்கடி சொல்வதை அப்படியே ஒரு சிமிலியில் கொண்டு வர உங்களால் மட்டுமே முடியும்

நாலு பேர் சேர்ந்தால்

எவ்வளவோ செய்யலாம்...

எத்தனையோ பேர் வாழ உதவலாம்..

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அருமையான முயற்சி, மிகவும் சிறப்பாக வளர்வது ஆனந்தத்தை தருகிறது.  
 

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இடம் மாற்றம் தொடர்பாக

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் அனுசரணையுடன் செக்டா தொண்டு நிறுவனத்துடன் கூட்டிணைந்து முன்னெடுக்கப்பட்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டம் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இயங்கிய தொழிற்சாலை தற்போது நரசிம்மர் வைரவர் கோவிலடி A9 வீதி, பளை நகரம், பளை, கிளிநொச்சி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். (பளை, A9 வீதியிலிருந்து 2வது காணி)

கிளிநொச்சி பளை பிரதேச செயலகத்தில் சமுர்த்திப் பிரிவுடன் இணைந்து அவர்களின் நிர்வாக ரீதியான அனுசரனையுடன் செயற்திட்டம் இயங்கி வருகின்றது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

செக்டா

ஆடைத் தொழிற்சாலை 23 மே – 2௦16

அனுசரனைக்கான கணக்கறிக்கை

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்டத்தில் செக்டா தொண்டு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்ட அபிவிருத்திக்கு 23 மே – 2௦16ல் அனுப்பிவைக்கப்பட்ட 500,000.00 (ரூபா ஐந்து இலட்சம்) நிதிக்கான கணக்கறிக்கை விபரத்தினை தங்கள் பார்வைக்கு அனுப்பிவைக்கின்றேன்.

திகதி

விபரம்

வீதம்

தொகை

12.3.2016

ரெனிம் துணி 365m

362.5X320

116000.00

30.7.2016

பயனாளிகளுக்கான விசேட கொடுப்பனவு

 

36000.00

14.11.2016

சோக்கோத் துணி

275m x 320

88000.00

14.11.2016

சேட் துணி

225m x 210

67000.00

14.11.2016

பஞ்சாவித்துணி

200 x 600

120000.00

14.11.2016

நூல் கட்டை

120 x 90

18000.00

14.11.2016

லேஸ் வகைகள்

 

15500.00

14.11.2016

கொழும்பு போக்குவரத்து செலவு

 

6250.00

16.11.2016

2 தையல் இயந்திர மோட்டர்

720 x 2

14500.00

 

வர்த்தக விளம்பரம்

 

5000.00

 

புதிய நிலையஇயந்திரத்திற்கு மின் இணைப்பு

 

7450.00

 

வரவுகள்

 

500000.00

 

செலவுகள்

 

493700.00

 

மீதி

 

6300.00

 

12.3.2௦16ல் கடன் கொள்வனவாக 116௦௦௦ துணிகள் கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கான கடன் 26 மே 2௦16ல் செலுத்தப்பட்டது.

3௦.7.2௦16 ஆடைத் தொழிற்சாலை பயனாளிகளுக்கு விசேட கொடுப்பனவுகளுக்காக ரூபா 36௦௦௦ பயன்படுத்தப்பட்டது. இந்த நிதி பயன்பாடு அவசரகால சூழ்நிலை காரணமாக பயன்படுத்தப்பட்டது.

ரூபா 92௦௦௦ நிதி சாவகச்சேரி செயற்திட்டத்திற்கு கடனாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த நிதி 12.11.2௦16 மீளப் பெறப்பட்டு கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு மீண்டும் பயன்படுத்தப்பட்டு செயற்திட்டம் மீண்டும் இயங்குநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

15.௦6.2௦16 பயனாளிகள் சம்பளங்களுக்காக தாங்கள் அனுப்பிய நிதியில் ரூபா 13௦௦௦௦ பயன்படுத்தப்பட்டது. அந்த நிதியும் கடன் விற்பனைகள் மூலம் மீள் திரும்பிய நிதி மூலம் மீள் நிரப்பப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து மீளப் பெறப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்திற்காக தாங்கள் அனுப்பிய நிதி மாற்றீட்டு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டாலும் மீண்டும் மூலதன இருப்பினை மேம்படுத்துவதற்காக அல்லது சொத்து மதிப்பினை அதிகரிப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை இதய சுத்தியுடன் அறியத்தருகின்றேன்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 2௦16ம் ஆண்டுக்காக முதலாம் கட்டமாக அனுப்பப்பட்ட நிதி ரூபா 5௦௦,௦௦௦வும் கிளிநொச்சி செயற்திட்டத்திற்காகவே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானதினால் கிளிநொச்சி செயற்திட்டதிற்கே பயன்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி செயற்திட்டம் இயங்கு நிலையில் ஏற்பட்ட தடங்கலினால் மீண்டும் அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டிய தேவை இருந்ததினால் தாங்கள் அனுப்பிய நிதி கிளிநொச்சி செயற்திட்டதிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கறிக்கை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் மாற்றீட்டு தேவைக்கு பயன்படுத்தப்பட்ட நிதி மீள் திரட்ட ஏற்பட்ட கால தாமதமும் செயற்திட்டத்தை மீள் இயங்குநிலைக்கு கொண்டுவருவதற்கு எடுத்தகால அவகாசமும் காரணமும் ஆகும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இனால் 23 மே 2௦16ல் செக்டா தொண்டு நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட ரூபா 5௦௦,௦௦௦,௦௦ நிதிக்கான கணக்கறிக்கையினை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். மேற் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் இதய சுத்தியுடன் அளிக்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகின்றோம்.

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் செக்டா நிறுவனத்துடன் கூட்டிணைந்த ஆடைத் தொழிற்சாலையின் சொத்துமதிப்பு 21 இலட்சம் சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியிலும் தேறிய 3 இலட்சம் ரூபா தேறிய இலபாமீட்டியுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

 

கடந்த 4 மாதங்கள் ஏற்பட்ட இடையூறுகள் அனைத்தும் இயல்பு நிலையை எட்டியுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

செயற்திட்டத்தின் இடையே ஏற்ப்பட்ட இடயூறுகளுக்காக மன்னிப்பு கோருவதுடன் எனது உள்ளம் சார்ந்த வருத்தத்தினையும் தெருவிக்கின்றோம். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

 

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

தலைவர்  

செக்டா

அன்புடையீர் வணக்கம்

 சுயமான முறையில் தனித்துவத்துடன் இயங்கும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் செக்டா தொண்டு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டம் ஆடைத் தொழிற்சாலைகளின் பிரதான (தலைமை) நிலையமாகவும் இயங்கும் மட்டக்களப்பு, சாவகச்சேரி செயற்திட்டங்கள் சகோதர நிறுவனங்களாக செயற்படும்.எதிர்காலத்தில் கைமாற்று நடவடிக்கைகள் அனைத்தும் உத்தியோக பூர்வமாகவும் கடன் அடிப்படையிலும் இடம்பெறும். தங்கள் அனுசரணையுடனான திட்டம் சுயமான முறையில் இயங்கும் தனித்துவத்துடன் இயங்கும் என்பதை அறியத்தருகின்றேன்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

தலைவர்  

செக்டா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.