Jump to content

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in


Recommended Posts

சிறீலங்கா தேர்தலில் தமிழ்மக்கள் ஆர்வம் காட்டவில்லை

அதை தலைமைகளாலும் மாற்றமுடியவில்லை

தமது பாதையில் தமிழர் உறுதியாக உள்ளனர் என்பதையே மீண்டும் மீண்டும் தாயகத்தமிழர் நிரூபிக்கின்றனர்

 

தவறு,

 

தமிழர்களின் பங்களிப்பு ஒடுமொத்தமாக 55% வீதத்துக்கு கிட்ட வருதாம். 

 

ஆஸ்திரேலியாவை தவிர அநேகமான நாடுகளில் 60% வீதம் வந்தாலே வெற்றிதான்.

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மாவட்டம்.. சிங்கள.. முஸ்லீம் குடியேற்றங்களால்.. தமிழ் மக்களின் சதவீதத்தில்.. வேறுபாட்டை காண்பிக்கின்ற மாவட்டங்களில் இப்போது அடங்குகிறது. யாழ் மாவட்டமும் முஸ்லீம்களின் சிங்களவர்களின் வாக்குகளை கொண்டுள்ளன. அதேபோல் வவுனியா.. மற்றும் மன்னார். கிழக்கிலும் இதே நிலை தான். வாக்கு சதவீத அடிப்படையில் வைத்து தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா தேர்தலில் தமிழ்மக்கள் ஆர்வம் காட்டவில்லை

அதை தலைமைகளாலும் மாற்றமுடியவில்லை

தமது பாதையில் தமிழர் உறுதியாக உள்ளனர் என்பதையே மீண்டும் மீண்டும் தாயகத்தமிழர் நிரூபிக்கின்றனர்

ம்.. என்னத்தை சொல்ல.. ததாஸ்து.

Link to comment
Share on other sites

முல்லை மாவட்டம்.. சிங்கள.. முஸ்லீம் குடியேற்றங்களால்.. தமிழ் மக்களின் சதவீதத்தில்.. வேறுபாட்டை காண்பிக்கின்ற மாவட்டங்களில் இப்போது அடங்குகிறது. யாழ் மாவட்டமும் முஸ்லீம்களின் சிங்களவர்களின் வாக்குகளை கொண்டுள்ளன. அதேபோல் வவுனியா.. மற்றும் மன்னார். கிழக்கிலும் இதே நிலை தான். வாக்கு சதவீத அடிப்படையில் வைத்து தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. :):icon_idea:

 

:D  :D  :D

 

சரி, 

 

அப்படி பார்த்தால் இனி தமிழர்களால் தங்கள் சனநாயக கருத்தை இலங்கயில் சொல்ல முடியாது அல்லது அவர்களுக்கே என்று ஒரு தாயகம் கிடையாது. எது அப்பிடி என்றாலும் இதை தமிழர்களின் ஆதரவேன்றே உலகம் சொல்லும். 

 

தமிழ்மக்களுக்கு தலைமை தாங்க நினைப்போர் சரிவர இதுகளை கணிக்க தவறினால் தோல்வியை தவிர்க்க முடியாது. இதுவே கஜேந்திரன் அணிக்கும் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு,

 

தமிழர்களின் பங்களிப்பு ஒடுமொத்தமாக 55% வீதத்துக்கு கிட்ட வருதாம். 

 

ஆஸ்திரேலியாவை தவிர அநேகமான நாடுகளில் 60% வீதம் வந்தாலே வெற்றிதான்.

 

 

என்ன  அவசரம்

கொஞ்சம் பொறுங்கள்

முடிவுகள் வெளிவரட்டும்

ம்.. என்னத்தை சொல்ல.. ததாஸ்து.

 

நீங்கள்

ஓடி ஒடி ஆட்களை  தள்ளிவிட்டாலும்

உண்மை இன்னும சில மணித்துளிகளில்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.

 
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை
 
கொழும்பு 54%
களுத்துறை 70 %
இரத்தினபுரி 70 %
நுவரெலியா 70  %
திருகோணமலை 63 %
மாத்தளை 70 %
கேகாலை 70 %
அம்பாறை 57%
குருநாகல் 70 %
கண்டி 75 %
மட்டக்களப்பு 55 %
மொனராகல 75 %
அனுராதபுரம் 76 %
திகாமடுல்ல 70 %
பொலநறுவை 75 %
அம்பாந்தோட்டை 70%
கம்பகா 65 %
புத்தளம் 55%
மாத்தறை 73%
பதுளை 60%
காலி 65%
 
சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 

 

08 ஜனவரி 2015, வியாழன் 4:45 பி.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=752043792608639413#sthash.SfWRQntg.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லையில் மாகாண சபை தேர்தலிலும் மகிந்த கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தன. அதன் பின்னணியில்..குடியேற்றக்காரர்களில் வாக்குகள் அவர்களுக்கு பிரதிநித்துவத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் முல்லையில் கள்ள வாக்குப் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.

 

கஜேந்திரன் அணியின் நிலைப்பாட்டை மக்களிலும் கிட்டத்தட்ட 50% வீதமானோர் கடைப்பிடித்துள்ளனர். சம்பந்தனின் நிலைப்பாட்டை 10% கூட வரவேற்கவில்லை. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

என்ன  அவசரம்

கொஞ்சம் பொறுங்கள்

முடிவுகள் வெளிவரட்டும்

 

முடிவு என்னவாத்தான் இருந்தால் என்ன? அதன் பிறகு நடக்கவிருக்கும் நாடகமே முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக்கழித்துப் பார்த்தால் நாடளாவிய ரீதியில் 60 வீதத்தை  தாண்டுமா ?
அப்படித்தாண்டினால் மிகுதி அத்தனை வாக்குகளும் மகிந்தவிற்கு விழுந்த கள்ள வாக்குகளாகவே இருக்க முடியும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு என்னவாத்தான் இருந்தால் என்ன? அதன் பிறகு நடக்கவிருக்கும் நாடகமே முக்கியமானது.

 

அதற்காக எதற்கு தமிழர்கள் அடிபடணும்

ஏன் அவர்களை இதற்குள் இழுக்கின்றீர்கள்..?? :(

Link to comment
Share on other sites

 

எந்த கட்சியை ஆதரிப்பது என்று குழப்பமாக இருக்கிறது.
 
மகிந்த  வென்றால் .........?
குழந்தை ஹிருனிகா சோகாமாகி விடுவாள். அவளது சோகம் என்னையும் தாக்கும்.
 
 
மைத்திரி வென்றால் ....? 
தமிழர் வாழ்வு சோகமாகிவிடும்   அதுக்கும் என்னை தாக்கும். 

 

10806381_916960975003887_889210888692273

 

இது குழந்தை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.வாக்களிப்பு சதவீதம் அடுத்த அரைமணி நேரத்துக்குள் முழுமையாக வெளிவரத்தான் போகிறது.. பார்க்கலாம் பகிஷ்கரிப்பை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு என்னவாத்தான் இருந்தால் என்ன? அதன் பிறகு நடக்கவிருக்கும் நாடகமே முக்கியமானது.

 

 

முடிவு என்னவாக  இருந்தாலும்

தொடரப்போவது மகிந்த ஆட்சிதான் (குறைந்தது 2 வருடம்)

 

அதற்குள் எதிரணி

பலரணியாகிவிடும்..... :o

ஆக்கிவிடுவார்கள் மகிந்த சகோதரர்கள்..

Link to comment
Share on other sites

வாக்களிப்பின் போது தேர்தல் விதிமுறையை மீறிய மகிந்த குடும்பம் JAN 08, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

mahinda-family-300x200.jpgசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றிருந்த போது, தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனைவி சிராந்தி ராஜபக்ச, மகன்கள், நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச, ராகித ராஜபக்சவுடன் வாக்களிக்கச் சென்றிருந்தார் மகிந்த ராஜபக்ச.

வாக்களிப்பு நிலையத்துக்குள், மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், கடற்படை அதிகாரியுமான, யோசித ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.

mahinda-family.jpg

வாக்களிப்பு நிலையத்துக்கள் எவரும், ஒளிப்படங்கள் எடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டிருந்தார்.

அதை மீறி மகிந்த ராஜபக்சவின் மகன் ஒளிப்படம் எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் தலைப்பு சுமத்திரன் அன்னப்பறவைக்கு வாக்களித்தார் என்று இருக்கிறது. சரி அவர் யாருக்கு வாக்களித்தாரா என்பது அவரைத்தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. அல்லது அவர் அன்னப்பறவைக்குத்தான் வாக்களித்தார் என்று சொல்லியிருக்கவேண்டும் சிலவேளை மகிந்தாவுக்கு வாக்களித்துவிட்டு அன்னப்பறவைக்குத்தான் வாக்களித்தேன் என்று சொல்லலாம். ஆனால் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது அவரைத்தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாக்களிப்பு நிறைவு
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7மணிக்கு ஆரம்பமாகி சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. 
 
இதன்படி வடக்கு மாகாணத்தில் காலை முதல் வாக்களிப்பு முடிவடையும் வரை யாழ். மாவட்டத்தில் 61% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
 
 
நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் எடுத்துவரப்பட்டுள்ளது. அதுபோல முல்லை. மாவட்டத்தில் 74.78 % வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 70%வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 66 %வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
எனினும் முழுமையான விபரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=667853790708628919#sthash.sJKRhqlT.dpuf

 

Link to comment
Share on other sites

அனேகமா சம்மந்தரின் சாணக்கியம் இதிலும் சறுக்கும் என்று நினைக்கின்றேன்....

Link to comment
Share on other sites

வன்முறையே இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்திருப்பதை பார்த்தால் மகிந்த மாமா தன்னுடைய வெற்றி மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாவே தோணுது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் 
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் 
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் 
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் 
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன் 
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
"கண்கள் மூடிய புத்த சிலை 
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன் 
தயக்கம் என்பது சிறிதும் இன்றி 
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் "
அட உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க 
என்னை ஏன் பிடிக்காது என்றாய்
10891806_871174232939148_566410755799740


10906404_783920221673301_875434992899320

Link to comment
Share on other sites

முல்லையில் மாகாண சபை தேர்தலிலும் மகிந்த கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தன. அதன் பின்னணியில்..குடியேற்றக்காரர்களில் வாக்குகள் அவர்களுக்கு பிரதிநித்துவத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் முல்லையில் கள்ள வாக்குப் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.

 

கஜேந்திரன் அணியின் நிலைப்பாட்டை மக்களிலும் கிட்டத்தட்ட 50% வீதமானோர் கடைப்பிடித்துள்ளனர். சம்பந்தனின் நிலைப்பாட்டை 10% கூட வரவேற்கவில்லை. :lol::icon_idea:

:D  

 

Voter turnout in some of the districts

76% in Matara

70% in Hambantota

80% in Nuwara Eliya

70% in Puttalam

75% in Moneragala

75 % in Polonnaruwa

70% in Kegalle

65% in Gampaha

79% in Galle

61% in Jaffna

70% in Vanni

60% in Batticaloa

70% in Digamadulla

 

 

இதுதான் இறுதியாக வந்த வாக்களிப்பு வீதம்.

 

வாக்களிப்பு தோல்வி?  :D  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.