Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கிறிஸ்மஸ் வாழ்த்தை முகநூலில் மட்டுமன்றி தொலைபேசியிலும் பலர் கிறீத்தவர்கள் அல்லாத பலருக்கும் கிறீத்தவர்கள் அல்லாதவர்கள் அனுப்புகின்றனர். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் மதமும் தனித்துவமானது அவரவர்க்கு. நாம் மற்றைய மதத்தினரை மதிக்கவேண்டும். ஆனால் மற்ற மதத்தவரின் ஒரு கொண்டாட்டத்தை அந்த மதம் அல்லாதவர்கள் ஏன் கொண்டாட வேண்டும்????  பல இந்து சமயத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் மரம் வைத்து அலங்கரித்து பரிசுப்பொருட்கள் வாங்கிக் குவித்து, அவர்கள் உண்பதுபோலவே உணவுகள் சமைத்து......

 

அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ???

 

மற்றைய மதத்தவர் பலர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வந்து வசிக்கவில்லையா??? அவர்கள் எல்லாம் எமது விழாக்களைக் கொண்டாடினார்களா ???? இது நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. ஆனால் காலப்போக்கில் எமது பிள்ளைகள் மொழியை மறந்தது போல எந்த மதம் என்பதையும் மறந்து கிறித்தவ மதத்தினராக வாழ வழிவகுக்காதா என்னும் ஆதங்கம் தான்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 140
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தப்பான அபிப்பிராயம் சுமே.... :(

மதம் மீது பற்றிருக்கலாம்

மதவெறி  இருக்கவே கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் மதவெறிக்கும் என்ன தொடர்பு அண்ணா. நான் கேட்டதுக்கு பதில் எழுதாமல் உங்களை நல்லவர் என்று மற்றவருக்குக் காட்டுவது மட்டுமானதாகவே உங்கள் பதில் உள்ளது அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் மதவெறிக்கும் என்ன தொடர்பு அண்ணா. நான் கேட்டதுக்கு பதில் எழுதாமல் உங்களை நல்லவர் என்று மற்றவருக்குக் காட்டுவது மட்டுமானதாகவே உங்கள் பதில் உள்ளது அண்ணா.

 

ஓரு கிறித்தவ நாட்டில் இருந்து கொண்டு

தாய் மொழியில் அல்லாத பிறமொழியில்  பேசிக்கொண்டு

அவனது பாடசாலையில் படித்துக்கொண்டு

அவனது கொண்டாட்டத்தையே நாம்  ஏன் கொண்டாடணும் என்ற கேள்விக்கு என்ன பதில் தரமுடியும் சுமே..

இதில் வேறு நான் நல்லவனா??

கெட்டவனா?.? :(  :(

தனது மண்ணில்

எங்களது கொண்டாட்டங்களை அனுமதிக்கும் அவன் எங்கே??

நாம் எங்கே....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவர்களையும் அதிகமாகவும் கிறிஸ்து மதத்தை முன்னிலைப்படுத்தும் மேற்குநாடுகளில் வசிப்பவர்கள் அந்த அந்த நாடுகளின் கலாச்சாரங்களில் பங்கெடுப்பது நல்லதுதானே. கிறிஸ்மஸ் பண்டிகைக்காலம் விடுமுறைக்காலம் என்பதால் இதனை சமயக்கொண்டாட்டமாகப் பார்க்காமல் விடுமுறையை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மகிழ்ந்திருந்து கொண்டாடும் நாட்களாகப் கருதவேண்டியதுதானே.

அது சரி. ஏன் சைவர்கள் எல்லாம் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கும் ஜனவரி முதலாம் திகதி நள்ளிரவு சைவக் கோயில்களுக்கு முண்டியடித்துப் போய் சாமிகளைக் கும்பிட்டு கலண்டர் வாங்கி வருகின்றார்கள்? இதற்கும் ஏதாவது சமய விளக்கம் இருக்குது என்று சொல்லவேண்டாம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கு அண்ணா அவர்கள் எமது நாட்டில் வந்து இருந்தபோது நாம் அவர்களுக்கு எம் மதத்தைத் திணித்தோமா ?? விதண்டாவாதத்துக்குக் கருத்தெளுதாமல் எழுதுங்கள் அண்ணா. அவர்கள் எப்பவாவது எங்கள் மதத்தைப் பின்பற்றுங்கள் என்றார்களா???

 

மொழி என்பது ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு. ஆகவே இருவருக்கும் தெரிந்த மொழியில் உரையாடினால் அன்றி மற்றவர் புரிந்து கொள்ள முடியாது. எதையும் எதையும் முடிச்சுப்போடுகிறீர்கள். எத்தனை காலம் என்றாலும் தமிழரிடம் ஊறியிருக்கும் அடிமைப்புத்தி மாறவே மாறாது. 

 


கிறிஸ்தவர்களையும் அதிகமாகவும் கிறிஸ்து மதத்தை முன்னிலைப்படுத்தும் மேற்குநாடுகளில் வசிப்பவர்கள் அந்த அந்த நாடுகளின் கலாச்சாரங்களில் பங்கெடுப்பது நல்லதுதானே. கிறிஸ்மஸ் பண்டிகைக்காலம் விடுமுறைக்காலம் என்பதால் இதனை சமயக்கொண்டாட்டமாகப் பார்க்காமல் விடுமுறையை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மகிழ்ந்திருந்து கொண்டாடும் நாட்களாகப் கருதவேண்டியதுதானே.

அது சரி. ஏன் சைவர்கள் எல்லாம் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கும் ஜனவரி முதலாம் திகதி நள்ளிரவு சைவக் கோயில்களுக்கு முண்டியடித்துப் போய் சாமிகளைக் கும்பிட்டு கலண்டர் வாங்கி வருகின்றார்கள்? இதற்கும் ஏதாவது சமய விளக்கம் இருக்குது என்று சொல்லவேண்டாம்!!!

 

விடுமுறையை மனைவி பிள்ளைகள், நண்பர்கள் அனைவருடனும் கொண்டாடுங்கள், உண்டு மகிழுங்கள், ஆடிப்பாடுங்கள் யார் வேண்டாம் என்றது ??? அதற்காக கிறிஸ்மஸ் மரம் வைத்து வீட்டில் .........

 

ஆங்கிலப் புதுவருடத்துக்கு சைவக்கொவில்களுக்குப் போவோரை எல்லோ உந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் கிருபன். கோவிலுக்கே போகாத என்னிடம் கேட்கிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறையை மனைவி பிள்ளைகள், நண்பர்கள் அனைவருடனும் கொண்டாடுங்கள், உண்டு மகிழுங்கள், ஆடிப்பாடுங்கள் யார் வேண்டாம் என்றது ??? அதற்காக கிறிஸ்மஸ் மரம் வைத்து வீட்டில் .........

 

ஆங்கிலப் புதுவருடத்துக்கு சைவக்கொவில்களுக்குப் போவோரை எல்லோ உந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் கிருபன். கோவிலுக்கே போகாத என்னிடம் கேட்கிறீர்கள்.

இரண்டுக்கும் விடை ஒன்றுதான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு கிறித்தவ நாட்டில் இருந்து கொண்டு

தாய் மொழியில் அல்லாத பிறமொழியில் பேசிக்கொண்டு

அவனது பாடசாலையில் படித்துக்கொண்டு

அவனது கொண்டாட்டத்தையே நாம் ஏன் கொண்டாடணும் என்ற கேள்விக்கு என்ன பதில் தரமுடியும் சுமே..

இதில் வேறு நான் நல்லவனா??

கெட்டவனா?.? :( :(

தனது மண்ணில்

எங்களது கொண்டாட்டங்களை அனுமதிக்கும் அவன் எங்கே??

நாம் எங்கே....??

நல்ல பதில் விசுகர்.

சுமே அக்கா, கனடா, அமெரிக்கா குடியேறிகள் நாடு. அதனால் அங்கே' happy holiday' என்றே சொல்வார்கள்.

ஆனால் ஐரோப்பவில் நாம் வாழ்வது சுதேசிகளின் நாடுகளில். ஆகவே கிறிஸ்மஸ், புதுவருட விடுமுறைக்காலம் என்கின்றனர்.

ஊரில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ நண்பர்களுடன் பாடசாலைகளில் சரஸவதி பூசை கொண்டாடி இருக்கிறோம்.

ரம்ஜான் சாப்பாடு, அரக்கப் பறக்க, நண்பர்கள் வீடு செல்வோம், ஒரு கை பார்க்க...

அதே போல் தான் கிறிஸ்மஸ் பண்டிகையும்.

பண்டிகைகள் சிறுவர்களுக்கே. இதிலே மதம் எங்கே அவர்களுக்கு தெரியப் போகிறது?

Link to comment
Share on other sites

சுமே அக்கா நாங்க தமிழர். அக்கா நாங்க அப்படிதான் எல்லா விழக்களையும் கொண்டாடுவோம் அதுதான் வாஙவன் போறவன் எல்லம் ஏறி மிதிச்சிட்டுபோறான்.

Link to comment
Share on other sites

பண்டிகைகள் சிறுவர்களுச்கே. இதிலே மதம் எங்கே அவர்களுக்கு தெரியப் போகிறது?

அவ்வளவு தான் :)

Link to comment
Share on other sites

கனடாவில் Merry Christmas and Happy Holidays! என்றுதான் வாழ்த்து சொல்லுகிறார்கள்.. நானும அவர்களுக்கு சொல்லுவேன்.. மற்றும்படி, மரம் வைத்து இன்னும் கொண்டாடியதில்லை. பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு ஆர்வம் வந்து கேட்கிறார்கள்.. சில பெற்றோர்கள் செய்கிறார்கள்.. சிலர் மத விடயம் என்பதால் செய்வதில்லை.. வேறும் சிலர் பஞ்சிபிடித்து செய்வதில்லை.. :D

அலுவலகத்தில் வேலை செய்யும் சில வெள்ளைகளுக்கு அறவே கடவுள் பக்தி கிடையாது. ஆனாலும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிப்பார்கள்.. அவர்களுக்கு மதம் என்பதைவிட விடுமுறைக்காலம்; மலிந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்; நண்பர்களுடன் கூடிக் களிக்கலாம்; உறவினர்களை சந்திக்கலாம்; தண்ணியடிக்கலாம் என்பதினாலேயே கூடுதல் மகிழ்ச்சி. :D இந்த விடயம் மிகவும் வியாபாரமயப்படுத்தப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது.... மதத்திற்கு அப்பால்பட்டு, பொதுவாக எல்லோருக்கும் விடுமுறை நாளாக அமைவதால்... அதனை எம்மவரும் கொண்டாடுகிறார்கள்.
இதனை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமலே... செய்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டியது.
 

எமது கொண்டாட்டமான ... தைப்பொங்கல், புதுவருடப் பிறப்பன்று இங்கு லீவு கிடைக்காது... வேலை செய்து கொண்டிருப்போம். அதனை ஈடுகட்ட, கிறிஸ்மஸ் விடுமுறையை கொண்டாடுகின்றோம்.
 

அத்துடன்.. எதிர்த்த வீடு, அயல் வீடு, மேல் வீடு, கீழ் வீடு  எல்லாம் அலங்கரித்து கொண்டாடும் போது...
நம்ம வீடு... அலங்காரம் இல்லாமல், வழமையான சோறையும், கறியையும் சமைத்து சாப்பிட்டால்... பிள்ளைகளுக்கும் ஒரு ஏமாற்றமாக.... நமக்கும் நல்லாவா இருக்கும். :D

 

வேலை செய்யும் இடத்தில்.... கிறிஸ்மஸ் அலவன்சை கூச்சப் படாமல் கை நீட்டி வாங்கும் நாம் :lol:, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் கொண்டாடுவதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

எமது தமிழீழம் அமைந்து வெளிநாட்டவர் அங்கு வரும்போது பொங்கல் வைக்கச் சொல்லுவோம்.. :D வெள்ளைப் பெண்களை குலவையிடச் சொல்லுவோம்.. சரியா!! :lol:

Link to comment
Share on other sites

தமிழர் கொண்டாட்டங்களில் தைப்பொங்கல், ஆடிப்பெருக்குத் தவிர்ந்த ஏனைய கொண்டாட்டங்கள் அனைத்துமே தமிழர்மரபுவழி வந்ததா என்ற சதேகம் உறுதியாகத் தீர்க்கப்படாமலே அவற்றைக் கொண்டாடிவருகிறோம். இந்நிலையில் ஏனைய இனங்களின் மதக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுவதை ஏன் தவறாக நோக்கவேண்டும். பாதிரியார் புதுப்பானைவைத்துப் பொங்கித் தைப்பொங்கலை தேவாலயத்தில் கொண்டாடியபோது நானும் அதில் பங்குபற்றியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ???

 

 

 

மிகவும் பிழையான கருத்து.
 
கொழும்பில் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்களன்று கோலம் போட்டு, பொங்கி தமிழர்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசுக்கு அண்ணா

1- அவர்கள் எமது நாட்டில் வந்து இருந்தபோது நாம் அவர்களுக்கு எம் மதத்தைத் திணித்தோமா ?? விதண்டாவாதத்துக்குக் கருத்தெளுதாமல் எழுதுங்கள் அண்ணா.

2- அவர்கள் எப்பவாவது எங்கள் மதத்தைப் பின்பற்றுங்கள் என்றார்களா???

 

அவர்களும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நாமும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நீங்கள் தான் இரண்டையும் எழதியுள்ளீர்கள்

இப்போ திணிப்பில்லாமல் அவரவர் சுயமாக எடுக்கும் முடிவுகளை நீங்கள் எப்படி சரியில்லை எனத்திணிப்பீர்கள்

 

3-மொழி என்பது ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு. ஆகவே இருவருக்கும் தெரிந்த மொழியில் உரையாடினால் அன்றி மற்றவர் புரிந்து கொள்ள முடியாது. எதையும் எதையும் முடிச்சுப்போடுகிறீர்கள். எத்தனை காலம் என்றாலும் தமிழரிடம் ஊறியிருக்கும் அடிமைப்புத்தி மாறவே மாறாது. 

 

அதாவது தேவையென்றால் மாற்றிக்கொள்ளலாம்

சுயநலமில்லையா இது...??

 

விடுமுறையை மனைவி பிள்ளைகள், நண்பர்கள் அனைவருடனும் கொண்டாடுங்கள், உண்டு மகிழுங்கள், ஆடிப்பாடுங்கள் யார் வேண்டாம் என்றது ??? அதற்காக கிறிஸ்மஸ் மரம் வைத்து வீட்டில் .........

 

ஆங்கிலப் புதுவருடத்துக்கு சைவக்கொவில்களுக்குப் போவோரை எல்லோ உந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் கிருபன். கோவிலுக்கே போகாத என்னிடம் கேட்கிறீர்கள்.

 

உங்கள் வாழ்வில் இதுவரை எந்த மற்ற மதக்கோயிலவ்களுக்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடியுமா??

ஒன்றுக்கு 100 தரம் யோசிக்கவும்

இங்கு எழுதினால்  எழுதியது தான்.. :icon_idea: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதில் விசுகர்.

சுமே அக்கா, கனடா, அமெரிக்கா குடியேறிகள் நாடு. அதனால் அங்கே' happy holiday' என்றே சொல்வார்கள்.

ஆனால் ஐரோப்பவில் நாம் வாழ்வது சுதேசிகளின் நாடுகளில். ஆகவே கிறிஸ்மஸ், புதுவருட விடுமுறைக்காலம் என்கின்றனர்.

ஊரில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ நண்பர்களுடன் பாடசாலைகளில் சரஸவதி பூசை கொண்டாடி இருக்கிறோம்.

ரம்ஜான் சாப்பாடு, அரக்கப் பறக்க, நண்பர்கள் வீடு செல்வோம், ஒரு கை பார்க்க...

அதே போல் தான் கிறிஸ்மஸ் பண்டிகையுன்.

பண்டிகைகள் சிறுவர்களுச்கே. இதிலே மதம் எங்கே அவர்களுக்கு தெரியப் போகிறது?

 

விடுமுறை காலம் தேவை இல்லை என்றா நான் எழுதியுள்ளேன் ???

நீங்கள் தான் சரஸ்வதி பூசை கொண்டாடினீர்களே தவிர உங்கள் இஸ்லாமிய நண்பனோ அல்லது கிறித்தவ நண்பனோ சரஸ்வதி பூசையைக் கொண்டாடவில்லை. அல்லது நீங்கள் ரம்லானைக் கொண்டாடவில்லை. நான் எழுதியிருப்பதை வாசிக்காமல் பதில் எழுதியுள்ளீர்களோ நாதமுனி ???

 

 

சுமே அக்கா நாங்க தமிழர். அக்கா நாங்க அப்படிதான் எல்லா விழக்களையும் கொண்டாடுவோம் அதுதான் வாஙவன் போறவன் எல்லம் ஏறி மிதிச்சிட்டுபோறான்.

 

மற்றவர்களுக்காக எங்கள் சுயத்தை இழப்பவன் தமிழன். அதற்காகவே தமிழனை வருடாவருடம் கௌரவிக்கவேண்டும்

அவ்வளவு தான் :)

 

உங்கள் காலத்துக்குப் பின்னரும் எம் பிள்ளைகள் இங்குதான் வேரூன்றப் போகின்றனர். நீங்களே உங்கள் பிள்ளைகளுக்குத் தவறான வழிகாட்டி ?? எங்கள் வாழ்வைப்பற்றி யார் அவர்களுக்குக் கூறுவது ???

 

கனடாவில் Merry Christmas and Happy Holidays! என்றுதான் வாழ்த்து சொல்லுகிறார்கள்.. நானும அவர்களுக்கு சொல்லுவேன்.. மற்றும்படி, மரம் வைத்து இன்னும் கொண்டாடியதில்லை. பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு ஆர்வம் வந்து கேட்கிறார்கள்.. சில பெற்றோர்கள் செய்கிறார்கள்.. சிலர் மத விடயம் என்பதால் செய்வதில்லை.. வேறும் சிலர் பஞ்சிபிடித்து செய்வதில்லை.. :D

அலுவலகத்தில் வேலை செய்யும் சில வெள்ளைகளுக்கு அறவே கடவுள் பக்தி கிடையாது. ஆனாலும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிப்பார்கள்.. அவர்களுக்கு மதம் என்பதைவிட விடுமுறைக்காலம்; மலிந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்; நண்பர்களுடன் கூடிக் களிக்கலாம்; உறவினர்களை சந்திக்கலாம்; தண்ணியடிக்கலாம் என்பதினாலேயே கூடுதல் மகிழ்ச்சி. :D இந்த விடயம் மிகவும் வியாபாரமயப்படுத்தப்பட்டுவிட்டது.

 

நன்றி :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பிறப்பால் சைவர்கள். ஆனால்.. ஊரிலேயே.. கரோல் ஆராதனைகளில் பங்கெடுத்திருக்கிறேன். தேவாலய திருவிழாக்களில் பங்கெடுத்திருக்கிறேன். நத்தார் தினம் ஊரிலும் பொதுவாக எல்லோராலும் கொண்டாடப்படும் ஒன்று தானே. வீதி உலா வரும் நத்தார் தாத்தாக்களுக்கு எல்லா மக்களும் வீதியில் இறங்கி மதிப்பளிப்பது.. எல்லாம் நடக்கிறது தானே. அவரை வரவேற்க வீடுகள்.. வீடுகளின் முன்னாள் உள்ள மரங்கள் எல்லாம் வண்ண மின் விளக்குகள் ஒளிர விட்டு.. கொண்டாடுவார்கள். கிறிஸ்தவர்கள்.. இந்துக்கள் என்ற வேறுபாடின்றி. ஆனால் முஸ்லீம்கள் இவற்றைச் செய்வது மிகக் குறைவு..!! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திரியை  ஆரம்பித்தவரைக்காணோம்.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது.... மதத்திற்கு அப்பால்பட்டு, பொதுவாக எல்லோருக்கும் விடுமுறை நாளாக அமைவதால்... அதனை எம்மவரும் கொண்டாடுகிறார்கள்.

இதனை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமலே... செய்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டியது.

 

எமது கொண்டாட்டமான ... தைப்பொங்கல், புதுவருடப் பிறப்பன்று இங்கு லீவு கிடைக்காது... வேலை செய்து கொண்டிருப்போம். அதனை ஈடுகட்ட, கிறிஸ்மஸ் விடுமுறையை கொண்டாடுகின்றோம்.

 

அத்துடன்.. எதிர்த்த வீடு, அயல் வீடு, மேல் வீடு, கீழ் வீடு  எல்லாம் அலங்கரித்து கொண்டாடும் போது...

நம்ம வீடு... அலங்காரம் இல்லாமல், வழமையான சோறையும், கறியையும் சமைத்து சாப்பிட்டால்... பிள்ளைகளுக்கும் ஒரு ஏமாற்றமாக.... நமக்கும் நல்லாவா இருக்கும். :D

 

வேலை செய்யும் இடத்தில்.... கிறிஸ்மஸ் அலவன்சை கூச்சப் படாமல் கை நீட்டி வாங்கும் நாம் :lol:, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் கொண்டாடுவதில் தவறில்லை.

 

நேரடி வற்புறுத்தல் இல்லையே தவிர எம் ஆட்கள் தமக்காகச் செய்வதை விட மற்றவர்கள் எம்மை பற்றி பெரிதாக நினைப்பதர்க்கோ அல்லது தம் அறிவுக்கு அப்படிச் செய்வதை தற்பெருமையாக எண்ணியோ தான் செய்கின்றனர் சிறி.

 

ஏன் நீங்கள் பொங்கல் அன்று அலங்கரிக்கக் கூடாது?? பிள்ளைகளுக்கு ஏன் எமது விழாக்கள் பற்றி விளங்கப்படுத்திச் சொல்லக் கூடாது ??? மற்றவர் செய்வதை நாமும் செய்யவேண்டும் என்பதே பிள்ளைகளுக்கு ஒரு தவறான வழிகாட்டல் தானே.

 

ஏன் வழமையான சோறையும் கறியையும் கொடுப்பான்.  வித்தியாசமாகச் செய்து கொடுப்பதுதானே ???

 

உனக்கு கிறிஸ்மஸ் அலவன்ஸ் கொடுக்கிறார்களா??? கொடுத்தால் அதுவும் தவறுதான். நான் வேலை செய்த இடத்தில் கிறித்தவர் அல்லாதவர்களுக்கு இல்லை என்று 95 இல் நிறுத்திவிட்டனர். அதுபற்றி நான் கவலை கொண்டதோ அன்றி அந்தக் காசுக்காக கிறித்தவத்தில் மாறலாம் என்றோ எண்ணியது கிடையாது. ஆனால் உங்கள் கதையைக்கேட்டால் சனம் அதுக்காகவும் தான் கொண்டாடுது போல.

 

 

மிகவும் பிழையான கருத்து.
 
கொழும்பில் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்களன்று கோலம் போட்டு, பொங்கி தமிழர்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள்.

 

 

எமது ஊரில் இருந்தது ஒரு கிறித்தவத் தேவாலயம், ஒரு கிறித்தவப் பள்ளி, ஒரு கிறித்தவ மிசனால் ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலை. இத்தனை இருந்தும் ஒரே ஒரு கிறித்தவக் குடும்பமே மதம் மாறி இருந்தது நான் ஊரில் இருக்கும் வரையும். அந்தப் பெண் என்னுடன் படித்தார். ஆனால் ஒருநாள் தன்னும் பொங்கல்  கொண்டாடியதில்லை.அதனால் நான் மற்றவர்களும் கொண்டாடுவதில்லை என்ன்று எண்ணியது தவறுதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவர்களும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நாமும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நீங்கள் தான் இரண்டையும் எழதியுள்ளீர்கள்

இப்போ திணிப்பில்லாமல் அவரவர் சுயமாக எடுக்கும் முடிவுகளை நீங்கள் எப்படி சரியில்லை எனத்திணி

 

நான் சரியாகத்தான் எழுதியுள்ளேன். ஒருவரோ அன்றி ஒருசிலரோ சுயமாக முடிவு எடுத்தால் அது சரி என்பது அல்ல. வருங்கால சந்ததிக்கும் எதிகால இனத்தின் நன்மைக்குமாக தூர நோக்கு வேண்டும்.

 

அதாவது தேவையென்றால் மாற்றிக்கொள்ளலாம்

சுயநலமில்லையா இது...??

 

நீங்கள் தான் மொழிபற்றி தேவை அற்று முடிச்சுப் போட்டீர்கள். மொழி என்பது வாழ்வில் மிக அத்தியாவசியமான ஒன்று. ஆனால் நத்தார் வாழ்த்துக் கூறுவதும் கொண்டாடுவதும் அதனுடன் சமமாகப் பர்ர்க்ககூடியாவ்ன்று என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறிவு.

 

உங்கள் வாழ்வில் இதுவரை எந்த மற்ற மதக்கோயிலவ்களுக்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடியுமா??

ஒன்றுக்கு 100 தரம் யோசிக்கவும்

இங்கு எழுதினால்  எழுதியது தான்.. :icon_idea:

 

உங்களுக்கு ஒருகால் வாசிச்சால் விளங்காதுபோல. நான் இதுவரை என்ற சொல்லை எங்கே பயன்படுத்தினேன் ????ஈழத்தில் இருக்கும் போது கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.யேர்மனியில் கூட இரண்டு மூன்று தடவைகள் சென்றுள்ளேன். இங்கு வந்த இந்த பதினோரு ஆண்டுகளில் இரண்டு தடவை வணக்கச் சென்றுள்ளேன். அதன்பின் இங்குள்ள கோவில்களின் அங்கு நிற்பவர்களின் நிலை பார்த்து கோவில்களுக்குச் செல்வதை விட்டுவிட்டேன்.

நான் வணங்கச் செல்வதோ அன்றி எந்தத் ஹ்டினத்துக்கும் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு என்னில்னம்பிக்கை உண்டு. வீட்டில் இருந்தவாறே இறைவனை வழிபட முடியும் என்பதும் தெரியும். கிருபன் எழுதியதையும் நான் அதற்குக் கொடுத்த பதிலையும் மீண்டும் வாசியுங்கள் விளங்கும். :icon_idea: :icon_idea:

 

 

தமிழர் கொண்டாட்டங்களில் தைப்பொங்கல், ஆடிப்பெருக்குத் தவிர்ந்த ஏனைய கொண்டாட்டங்கள் அனைத்துமே தமிழர்மரபுவழி வந்ததா என்ற சதேகம் உறுதியாகத் தீர்க்கப்படாமலே அவற்றைக் கொண்டாடிவருகிறோம். இந்நிலையில் ஏனைய இனங்களின் மதக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுவதை ஏன் தவறாக நோக்கவேண்டும். பாதிரியார் புதுப்பானைவைத்துப் பொங்கித் தைப்பொங்கலை தேவாலயத்தில் கொண்டாடியபோது நானும் அதில் பங்குபற்றியிருக்கிறேன்.

 

அண்ணா தைப்பொங்கல் மதம் சார்ந்த கொண்டாட்டம் அல்ல. எம்மவர்க்கு எது மத விழா எது பொதுவிழா என்பதுகூட தெளிவு இல்லை. அதுதான் பிரகுச்ச்சனையே.

நாங்க பிறப்பால் சைவர்கள். ஆனால்.. ஊரிலேயே.. கரோல் ஆராதனைகளில் பங்கெடுத்திருக்கிறேன். தேவாலய திருவிழாக்களில் பங்கெடுத்திருக்கிறேன். நத்தார் தினம் ஊரிலும் பொதுவாக எல்லோராலும் கொண்டாடப்படும் ஒன்று தானே. வீதி உலா வரும் நத்தார் தாத்தாக்களுக்கு எல்லா மக்களும் வீதியில் இறங்கி மதிப்பளிப்பது.. எல்லாம் நடக்கிறது தானே. அவரை வரவேற்க வீடுகள்.. வீடுகளின் முன்னாள் உள்ள மரங்கள் எல்லாம் வண்ண மின் விளக்குகள் ஒளிர விட்டு.. கொண்டாடுவார்கள். கிறிஸ்தவர்கள்.. இந்துக்கள் என்ற வேறுபாடின்றி. ஆனால் முஸ்லீம்கள் இவற்றைச் செய்வது மிகக் குறைவு..!! :):icon_idea:

 

கூழுக்கும் பாடி கஞ்சிக்கும் பாடுபவரா நீங்கள் நெடுக்ஸ் :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நாமும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நீங்கள் தான் இரண்டையும் எழதியுள்ளீர்கள்

இப்போ திணிப்பில்லாமல் அவரவர் சுயமாக எடுக்கும் முடிவுகளை நீங்கள் எப்படி சரியில்லை எனத்திணி

 

நான் சரியாகத்தான் எழுதியுள்ளேன். ஒருவரோ அன்றி ஒருசிலரோ சுயமாக முடிவு எடுத்தால் அது சரி என்பது அல்ல. வருங்கால சந்ததிக்கும் எதிகால இனத்தின் நன்மைக்குமாக தூர நோக்கு வேண்டும்.

 

அதாவது தேவையென்றால் மாற்றிக்கொள்ளலாம்

சுயநலமில்லையா இது...??

 

நீங்கள் தான் மொழிபற்றி தேவை அற்று முடிச்சுப் போட்டீர்கள். மொழி என்பது வாழ்வில் மிக அத்தியாவசியமான ஒன்று. ஆனால் நத்தார் வாழ்த்துக் கூறுவதும் கொண்டாடுவதும் அதனுடன் சமமாகப் பர்ர்க்ககூடியாவ்ன்று என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறிவு.

 

உங்கள் வாழ்வில் இதுவரை எந்த மற்ற மதக்கோயிலவ்களுக்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடியுமா??

ஒன்றுக்கு 100 தரம் யோசிக்கவும்

இங்கு எழுதினால்  எழுதியது தான்.. :icon_idea:

 

உங்களுக்கு ஒருகால் வாசிச்சால் விளங்காதுபோல. நான் இதுவரை என்ற சொல்லை எங்கே பயன்படுத்தினேன் ????ஈழத்தில் இருக்கும் போது கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.யேர்மனியில் கூட இரண்டு மூன்று தடவைகள் சென்றுள்ளேன். இங்கு வந்த இந்த பதினோரு ஆண்டுகளில் இரண்டு தடவை வணக்கச் சென்றுள்ளேன். அதன்பின் இங்குள்ள கோவில்களின் அங்கு நிற்பவர்களின் நிலை பார்த்து கோவில்களுக்குச் செல்வதை விட்டுவிட்டேன்.

நான் வணங்கச் செல்வதோ அன்றி எந்தத் ஹ்டினத்துக்கும் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு என்னில்னம்பிக்கை உண்டு. வீட்டில் இருந்தவாறே இறைவனை வழிபட முடியும் என்பதும் தெரியும். கிருபன் எழுதியதையும் நான் அதற்குக் கொடுத்த பதிலையும் மீண்டும் வாசியுங்கள் விளங்கும். :icon_idea: :icon_idea:

 

 

இல்லை சுமே..

மதம் என்பது ஒரு இனத்தின் குறியீடு அல்ல

மொழியே அதன் அடிநாதம்

அதையே  குறிப்பிட்டேன்

அதையே தேவைகள் கருதி விட்டுக்கொடுக்க தொடங்கிவிட்டோம்...

ஆனால் நண்பர்கள் உறவுகளின் மதவிடயங்களில் இறுக்கமாக இருக்க விரும்பவதையே குறிப்பிட்டேன்

 

மற்றும்படி

நானும்  ஒரு இந்துமத வெறியன் தான்

ஆனால் பல தலைமுறை அதிலிருந்து தூரப்போயாச்சு.......

அது சரியாகவே படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சுமே..

மதம் என்பது ஒரு இனத்தின் குறியீடு அல்ல

மொழியே அதன் அடிநாதம்

அதையே  குறிப்பிட்டேன்

அதையே தேவைகள் கருதி விட்டுக்கொடுக்க தொடங்கிவிட்டோம்...

ஆனால் நண்பர்கள் உறவுகளின் மதவிடயங்களில் இறுக்கமாக இருக்க விரும்பவதையே குறிப்பிட்டேன்

 

மற்றும்படி

நானும்  ஒரு இந்துமத வெறியன் தான்

ஆனால் பல தலைமுறை அதிலிருந்து தூரப்போயாச்சு.......

அது சரியாகவே படுகிறது

 

யாரும் எந்த மதத்திலும் வெறியுடன் இருக்கவே தேவை இல்லை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை மற்றைய மதங்களிலும் விட அதிக வெறி கொண்டவர்கள் மதத்தின் பெயரால் பெண்களை வதைப்பதிலும். ஆழ்ந்த தூரநோக்குச் சிந்தனை அற்ற இனம் எம்மினம். அதனால்த்தான் எம்மால் நீண்ட காலமாக எதையும் ஒருமனதாய் நின்று சாதிக்க முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

 

உங்கள் காலத்துக்குப் பின்னரும் எம் பிள்ளைகள் இங்குதான் வேரூன்றப் போகின்றனர். நீங்களே உங்கள் பிள்ளைகளுக்குத் தவறான வழிகாட்டி ?? எங்கள் வாழ்வைப்பற்றி யார் அவர்களுக்குக் கூறுவது ???

 

 

நன்றி :D:lol:

 

 

சுமோ, கிறிஸ்துமஸ் பரிசு பொருள் வாங்கி கொடுத்தவுடன் எனது பிள்ளைகள் மதம் மாறிவிடபோவதில்லை. அவர்களுக்கு எமது பண்டிகை நாட்களும்

தெரியும். நாங்கள் மறந்தாலும் அவர்கள் நினைவூட்டிய நாட்களும் உண்டு. :o

 

உங்கள் எழுத்தை பார்த்தால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கபட்டு இருக்கிறீர்களோ என்று எண்ண தோன்றுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரம்பனில் ஒரு வேளாங்கன்னி கோயில் இருந்தது.ஒவ்வொரு வியாழக்கிழமையும் 5,6 மைல் தொலைவில் இருந்து ஆயிரக்கணக்கான சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் அந்தக்கோயிலுக்கு போய்வருவார்கள்,ஆனால் கடைசிவரையும் யாரும் கிறித்தவ மத்த்திற்கு மாறவில்லை.இறுக்கமான உலகில் வாழும் எங்களைப் போன்றோருக்கு ஒரு விடுதலை நாளாக இதை கொண்டாடுகிறோம்.அது எந்த மத்த்தின் விழாவாக இருந்தால் எமக்கென்ன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.