Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும்,அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம். 

உங்களை நீங்களே குணபடுத்தி கொள்ள, உற்சாக படுத்த இந்த இடங்களில் மெதுவான அழுத்ததை கொடுக்கவும்10670265_819576244739580_168720279968870

Link to comment
Share on other sites

  • Replies 709
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும்,அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம். 

உங்களை நீங்களே குணபடுத்தி கொள்ள, உற்சாக படுத்த இந்த இடங்களில் மெதுவான அழுத்ததை கொடுக்கவும்10670265_819576244739580_168720279968870

 

 

பெண்களுக்கு இடக்கையா? வலக்கையா?  z123.gif

Link to comment
Share on other sites

நீல் ஆம்ஸ்ட்ராங்... ...........!

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...

பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான் நிலவுக்கு சென்ற

அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். 

மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக

நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.

மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்

பட்டார்...

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?

என்றல்ல...

"‘நிலவில் முதன் முதலில்

கால் எடுத்து வைக்கிறோம்.

புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.

புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக

தாமதிக்கவில்லை... 

சில நொடிகள்தான்

தாமதித்திருப்பார்...

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது... 

திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்

காரணமாக தாமதித்ததால்

இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்

என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...

தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...

அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...

எனவே, நல்ல விஷயங்களில்...

தயக்கத்தை தவிர்ப்போம்...

தலைநிமிர்ந்து நிர்ப்போம்...

 

Link to comment
Share on other sites

9e7a19163bb2683f41482e0abc995d56

Link to comment
Share on other sites

5dddcc2f699408c8a21967d0492ceb1c

Link to comment
Share on other sites

5dddcc2f699408c8a21967d0492ceb1c

Link to comment
Share on other sites

8fc349503f6878fcee18db59d5ae6f81

Link to comment
Share on other sites

9a3904f187919cc211c1db163f350a7c

Link to comment
Share on other sites

818b7313df3e357b7a24dd885cc59948

Link to comment
Share on other sites

man vs robot

 

 

 

 

818b7313df3e357b7a24dd885cc59948

 

Link to comment
Share on other sites

b17b306f0f9a261b9b99a897b1aa8d23

Link to comment
Share on other sites

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்

பெறுவதில்லை....?

.

அது மாணவர்களின் தவறு கிடையாது,

அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..

வருடத்தில் 365 நாட்கள்

மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய

குறை..

உதாரணத்திற்கு ஒரு மாணவனின்

ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..

.

1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..

மற்ற நாள்கள் 313 (365-52=313)

.

2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான

காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.

மீதி 263 நாள்கள் (313-50=263).

.

3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம்

என்பதால்

(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).

மீதி 141 நாட்கள் (263-122=141).

.

4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும்

பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.

மீதி 126 நாட்கள் (141-15=126).

.

5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக

மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால்

30 நாள்கள்.

மீதி 96 நாட்கள் (126-30=96).

.

6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.

நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள்

வருகிறது.

மீதி 81 நாட்கள் (96-15=81).

.

7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்

தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்

(81-35=46).

.

8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம்

விடுமுறைகள் 40 நாட்கள்..

மீதி 6 நாட்கள்(46-40=6).

.

9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்

விடுப்பு குறைத்தது

3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).

.

10. சினிமா, உறவினர் திருமணம்,திருவிழானு 2

நாள் போய்விடும். மீதி ஒரு நாள்

(3-2=1).

.

11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..

.

பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்

பெறமுடியும்....?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக  மொத்தத்தில் அந்தப் பேசியே கத்துக்கிற பதினைந்து நாட்களை வைத்துத்தான் ஆயுள் முழுதும் சமாளிக்கின்றோம்...! காலைக் கடனுக்காக பத்து நாட்கள் அடுத்த வருடத்தில் கடன் வாங்க வேண்டிக் கிடக்கு...!!  :):D

Link to comment
Share on other sites

 

கோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா?

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் உள்ள இர­க­சிய 
முகா­மொன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு அந்த முகா­முக்கு கோத்தா முகாம் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடந்த19 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்ற போது தெரி­வித்த தக­வ­லா­னது நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் தொடங்­க­வி­ருக்­கின்ற காலங்­க­ளி­லெல்லாம் இவ்­வா­றான பர­ப­ரப்­பான தக­வல்­களும் அதிர்ச்சி தரும் செய்­தி­களும் வெளி­வ­ரு­வது இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு பாரிய சவால்­களை உண்டு பண்­ணி­யி­ருக்­கி­றது என்­பது கடந்த கால அனு­ப­வங்­களைக் கொண்டு அறிய முடியும்.

2012 ஆம் ஆண்டு ஒக்­டோ­பரில் மனித உரிமை மாநாடு நடை­பெற்ற வேளையில் (மனித உரிமைப் பேர­வையின் பூகோள கால மீளாய்­வுக்­கூட்டத் தொடர்) 31.10.2012 இல் நடை­பெற்ற வேளையில் அனைத்து மனித உரிமை ஆர்­வ­லர்­களும் சர்­வ­தேச நாடு­களின் பிரதிநிதிகள் 100 பேருக்கு மேற்­பட்­டோரும் 50 க்கு மேற்­பட்ட அமைப்­புக்­களும் கலந்து கொண்­டி­ருந்த வேளையில் மன்­னா­ரி­லி­ருந்து மறை மாவட்ட ஆயர் இரா­யப்பு யோசப் தொலைத்­தொ­டர்பு மூலம் (ஸ்கைப்) தெரி­வித்த கருத்தும் தக­வலும் மனித உரிமை ஆர்­வ­லர்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­ய­துடன் உல­கத்­தையே ஜெனிவாப் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்­தது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது காணாமல் போனோர் ஒரு லட்­சத்து 40 ஆயிரம் பேர். இந்த காணாமல் போன தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு இது­வரை பொறுப்புக் கூற­வில்லை. சர­ண­டைந்த போரா­ளிகள் மீள்­கு­டி­யேற்றம் மனித உரிமை மீறல்கள் காணிப் பறிப்பு போன்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை இலங்கை அரசு மீது அவர் சுமத்­தி­யது இலங்­கை­ய­ர­சுக்கு பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

அது மட்­டு­மன்றி பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்கா மீது இக்­காலப் பகு­தியில் கொண்டு வரப்­பட்ட குற்றப் பிரே­ரணை இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு சங்­க­ட­மான சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யி­ருந்­தது. இது போன்­ற­தொரு இன்­னு­மொரு நெருக்­க­டியை இலங்­கை­ய­ர­சாங்கம் சந்­தித்த ஆண்­டாக கரு­தப்­ப­டு­வது 2013 ஆம் ஆண்­டாகும். மனித உரிமை மாநாடு ஜெனி­வாவில் நடை­பெ­று­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு முன் சனல் 4 இனால் வெளி­யி­டப்­பட்ட விடு­தலைப் புலி­களின் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் இசைப்­பி­ரி­யாவின் காணொளிக் காட்சி உல­கத்­தையே உலுக்­கி­யது.

இக்­கா­ணொ­ளியைப் பார்த்த பெண்­ணிய அமைப்­புக்­களும் மனித உரிமை அமைப்­புக்­களும் சினம் கொண்டு கர்ச்­சித்­தன. கடந்த வருடம் மார்ச் மாதம் நடை­பெற்ற (3.3.2014 –- 28.3.2014) ஜெனிவா மனித உரிமை மாநாட்டின் போது இலங்­கையின் நன்­ம­திப்பை கெடுக்கும் இரு சம்­ப­வங்கள் பதி­யப்­பட்­டன. இது நேர­டி­யா­கவே இலங்­கையின் மனித உரிமை மீறல் பற்­றிய சுட்­டிக்­காட்­ட­லாக அமைந்­தது. அதில் ஒன்­றுதான் சனல் 4 இனால் வெளி­யி­டப்­பட்ட கொலைக்­களம் என்னும் ஆவ­ணப்­படம்.

மற்­றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஜெனிவா மனித உரி­மை­யா­ணை­யா­ள­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட 160 பக்கம் கொண்ட அறிக்கை. இந்த அறிக்­கையில் இலங்­கையில் முஸ்­லிம்கள் எதிர்­கொள்­கின்ற பல்­வேறு பிரச்­சி­னைகள் சுட்­டிக்­காட்­டப்­பட்டு இலங்­கை­யி­லுள்ள இன­வாத அமைப்­புக்­க­ளாலும் ஒரு சில பௌத்த குரு­மார்­க­ளி­னாலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் மதப் பண்­பா­டு­க­ளுக்கும் இழைக்­கப்­பட்டு வரும் கொடு­மைகள் பற்றி சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யாக அது இருந்­த­தாகக் கூறப்­பட்­டது.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் மேலாக விடு­தலைப் புலி அமைப்பின் தலை­வரின் மகன் பாலச்­சந்­தி­ரனின் படு­கொலை சம்­பந்­த­மான விவ­ரணப் படம் போன்­றவை கடந்த வருடம் ஜெனி­வாவின் அக்­கினி சாட்­சி­யங்­க­ளாக இருந்த நிலை­யில்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரனின் திரு­கோ­ண­மலை கோத்­தா முகாம் சம்­பந்­த­மான அறிக்கை அதிர வைக்கும் தக­வ­லாக வெளி­வந்­துள்­ளது. முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பாயவின் பெய­ருடன் திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை முகாமில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் 35 க்கு மேற்­பட்ட குடும்­பங்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர் பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாடு எதிர்­வரும் மார்ச் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற வேளையில் இப்­ப­ர­ப­ரப்பு ஊட்டும் தகவல்கள் வெளி­வந்­துள்­ளன. இலங்­கையின் இனக்கலவரம் வெடித்­த­தாக கூறப்­படும் 1983 ஆம் ஆண்டு காலப் பகு­தி­யி­லி­ருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு வரை­யுள்ள சுமார் 30 வருட கால வர­லாற்று அடை­யா­ளங்­களில் திரு­கோ­ண­மலைப் பிர­தே­ச­மா­னது ஒரு கொலைக்­க­ள­மா­கவே பார்க்­கப்­பட்டு வந்­துள்­ளது என்­ப­தற்கு இந்த முப்­பது வருட கால பதி­வுகள் சாட்­சி­யங்­க­ளாக நிற்­கின்­றன.

திரு­கோ­ண­ம­லையில் 1983 ஆம் ஆண்­டுக்குப் பின் இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்கள் மனித உரிமை மீறல்கள் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பாரிய அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தற்கு அவ்வவ் காலத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களே சாட்­சி­யங்­க­ளாக அமைந்து காணப்­ப­டுகின்றன.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி யாழ். திரு­நெல்­வே­லியில் வைக்­கப்­பட்ட கண்­ணி­வெடி கார­ண­மாக 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இதன் எதி­ரொ­லி­யாக கொழும்பு திரு­கோ­ண­மலை வாழ் தமிழ் மக்கள் தாக்­கப்­பட்­டனர். திரு­கோ­ண­ம­லையில் ஏரா­ள­மான கடைகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. திரு­கோ­ண­மலை சிவன் ஆல­யத்தின் தேர் எரித்து நாசம் செய்­யப்­பட்­டது. ஆல­யத்தின் அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தந்தை செல்­வாவின் சிலைக்கு குண்டு மழை பொழி­யப்­பட்­டது.

இச் சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு சுமார் மூன்று மாதங்­க­ளுக்கு முன் (20.04. 1983) கிளி­வெட்­டியைச் சேர்ந்த கதிர்­கா­மத்­தம்பி நவ­ரத்­தி­ன­ராசா என்­பவர் கிளி­வெட்­டி­யி­லி­ருந்து கைது செய்­யப்­பட்டு குரு­நகர் முகாமில் வைத்து சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்டார். இந்த தொடக்­கத்­தினைத் தொடர்ந்து திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் பல்­வேறு சம்­ப­வங்கள் நடந்­தே­றின. வடக்கு கிழக்கு மாகா­ணத்தில் ஆகக் கூடு­த­லான உயிர்­களை முதல் முதல் பறி­கொ­டுத்த கிரா­ம­மாக மூதூர் கிளி­வெட்டிக் கிராமம் என்­பதை அப்­போ­தைய புள்ளி விபரப் பதி­வுகள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

1986 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கிளி­வெட்டிக் கிரா­மத்தை அண்­டி­யுள்ள கிரா­ம­மான தெஹி­வத்தை கிரா­மத்­தி­லி­ருந்து இரண்டு இளை­ஞர்கள் மோட்டார் சைக்­கிளில் கிளி­வெட்டிக் கிரா­மத்­துக்கு வந்த வேளை இவர்­களும் இவர்­க­ளுடன் வந்த இன்னும் சிலரும் தாக்­கப்­பட்­டதன் எதி­ரொ­லி­யாக இரு பெண்கள் உட்­பட 36 பேர் கிளி­வெட்டிக் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்கள் பதை­ப­தைக்கக் கொல்­லப்­பட்­டார்கள்.

இதன் அடுத்த கட்ட திரை அரங்­கேற்ற காட்­சி­யாக 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி மல்­லி­கைத்­தீவு பார­தி­புரம் பெரிய வெளி­ம­ணற்­சேனை மேன்­காமம் ஆகிய கிரா­மங்­களைச் சேர்ந்த 44 பேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டார்கள். அன்­றைய தினம் காலை (16.7.1986) மல்­லி­கை­த்தீவு சந்­தியில் கண்ணி வெடியில் இரா­ணுவம் கொல்­லப்­பட்­டதை பழி தீர்க்கும் முக­மாக பெரி­ய­வெளி பாட­சா­லையில் முகா­மிட்டு தங்­கி­யி­ருந்த அப்­பாவி பொது­மக்கள் 44 பேர் கொல்­லப்­பட்­டனர்.

இதில் இரு குழந்­தைகள் கூட துப்­பாக்கி ரவைக்குப் பலி­யா­கி­னர். பால்­மணம் மாறாத சிறு­மிக்கு முன்னால் அவ­ளின்தாய் உட்­பட்ட இரு பெண்கள் பாலியல் வன்­மத்­துக்கு ஆளாக்­கப்­பட்டு 7 ஆண்­களும் இரு பெண்­களும் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உப்­பு­வெளிச் சந்­தியில் நடை­பெற்­றது. திரு­கோ­ண­மலை நக­ரத்­தி­லி­ருந்து நிலா­வெ­ளிக்கு செல்லும் பிர­தான பாதையை இணைக்கும் 3 ஆம் கட்டைச் சந்­தியில் அந்தப் பயங்­கரப் படு­கொலை நடந்­தது.

குறித்த அன்­றைய தினம் 11 பேர் கைது செய்­யப்­பட்டு 3 ஆம் கட்டை சந்­தி­யி­லுள்ள ஆட்கள் இல்­லாத வீட்டில் அடைத்து வைக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­துடன் அங்­குள்ள மல­ச­ல­கூட புதை­கு­ழி­களில் முகம் தெரி­யாத வண்ணம் அசிட் ஊற்றி புதைக்­கப்­பட்­டி­ருந்­தனர். பத்து பேர் படு­கொலை செய்­யப்­பட்ட போதும் ஒரு­வரின் உடல் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை.

1985 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி குச்­ச­வெளி பிர­தேச பிரி­வுக்கு உட்­பட பொலிஸ் நிலையம் தாக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளை­வாக திரியாய் கிரா­மத்தில் குடி­யி­ருந்த தமிழ் மக்­களின் 1500 க்கும் மேற்­பட்ட வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. (05.06.1985) இக்­கொ­டூ­ரத்தின் கார­ண­மாக அக­திகள் ஆக்­கப்­பட்ட சுமார் 3000 க்கும் மேற்­பட்ட திரி­யாய்க்­கி­ராம மக்கள் திரியாய் மகா வித்­தி­யா­ல­யத்தில் அமைக்­கப்­பட்ட மூன்று முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

10.8.1985 ஆம் நாள் முகா­மி­லி­ருந்த 8 பேர் பஸ் ஒன்றில் ஏற்­றிச்­செல்­லப்­பட்டு திரியாய் கிரா­மத்­தி­லி­ருந்து ஹோம­ரங்­க­ட­வல என்னும் கிரா­மத்­துக்கு செல்லும் இடைக்­கி­ரா­ம­மான கல்­லம்­பத்தை என்ற கிரா­மத்தில் வைத்து கொல்­லப்­பட்­டுள்­ளனர். அன்­றைய தினம் காலை­யி­லேயே கல்­லம்­பத்தை கிராமவாசி­க­ளான நான்கு பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள். இது திரியாய் படு­கொ­லை­யென பதிவு செய்­யப்­பட்­டது.

2000 ஆம் ஆண்­டுக்குப் பின் போர் உக்­கி­ர­ம­டைந்த நிலையில் திரு­கோ­ண­ம­லையில் மனித உரிமை மீறல்கள் உக்­கிரம் பெற்­றுக்­கா­ணப்­பட்­டது என்­ப­தற்கு இக் காலத்தில் நடை­பெற்ற படு­கொ­லைகள் காணாமல் போனோர் கடத்­தப்­பட்டோர் என்ற பட்­டி­யல்கள் நீண்டு கொண்டே போகின்­றது. 2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி நடை­பெற்ற மாணவர் படு­கொலைச் சம்­ப­வ­மா­னது திரு­கோ­ண­ம­லையை மாத்­தி­ர­மன்றி உல­கத்­தையே கதி­க­லங்க வைத்த சம்­ப­வ­மாக இருந்­தது.

2006.01.2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்கரையில் வைத்து 5 மாண­வர்கள் துப்­பாக்­கி­தா­ரி­களால் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். தங்­கத்­துரை சிவா­னந்தா, ச. சஜேந்­திரன், மனோ­கரன் ரஜீகர், லோ. ரொகாந்த், போ. ஹேமச்­சந்­திரன் ஆகிய ஐவர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். இவர்­களின் கொலையின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­டு­பி­டித்து குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்த எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட வில்லை.

இந்த படு­கொலை உட்­பட்ட ஏனைய மோச­மான மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கூட வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யென தமிழ்த் தேசியக் கட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய இரா. சம்­பந்தன் 2013 பெப்­ர­வரி 27 ஆம் திகதி பிரிட்டிஷ் பாரா­ளு­மன்­றத்தின் குழு அறை 14ல் உரை­யாற்­றிய போது எடுத்துக் காட்­டி­யி­ருந்தார்.

இது போல் முன்னாள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளையின் எச்­ச­ரிக்­கையைத் தொடர்ந்து அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்­யப்­பட்டு திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் (2013 ஆம் ஆண்டு) ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். ஏழு வரு­டங்­க­ளுக்­குப்­பின்னே இவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந்த மாண­வர்­களின் படு­கொ­லையின் பின்­ன­ணி­யாளர் யார் என்­பது உல­க­றிந்த விட­ய­மாகும்.

இதே­யாண்டு (2006 ) இன்­னு­மொரு கோர­மான மனித உரிமை மீறல் சம்­பவம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நடை­பெற்­றது. அது தான் தொண்டர் நிறு­வனப் பணி­யா­ளரின் படு­கொ­லை­யாகும். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் தேசத்தின் தொண்டர் நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்­றிய 17 தொண்­டர்கள் மூதூரில் வைத்து கொல்­லப்­பட்­டார்கள். நான்கு பெண்­களும் 13 ஆண்­களும் பலி­யாக்­கப்­பட்­டார்கள்.

மாவி­லாறு யுத்தம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து வாழ்ந்த மக்­க­ளுக்கு தொண்­டாற்ற வந்த மேற்­படி தொண்­டர்­களே அலு­வ­ல­கத்­துக்கு வெளியே கொண்­டு­வ­ரப்­பட்டு குப்­புற படுக்க வைத்து பின்­பக்­க­மாக தலையில் சுடப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டார்கள். 2006 ஆம் ஆண்டு ஒரு அபத்­த­மான ஆண்டு என வர்­ணிக்­கப்­ப­டு­கிற அள­வுக்கு இன்னும் பல சம்­ப­வங்கள் திரு­கோ­ண­ம­லையில் நடந்­ததை பல்­வேறு சம்­ப­வங்கள் நினை­வு­ப­டுத்­து­கின்­றன.

கிண்­ணியா பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட ஆலங்­கே­ணி­யென்னும் தமிழ்க் கிரா­மத்தைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயான காந்தன் சித்­திரா (40 ) குடும்பப் பெண் 2.7.2006 ஆம் ஆண்டு இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டார். இச்­சம்­பவம் நடை­பெற்ற மறுநாள் 3.7.2006 இல் அனு­ரா­த­புர சந்­தியில் வீதிச்­சோ­த­னையில் ஈடு­பட்­டி­ருந்த கிளைமோர் தாக்­கு­தலில் ஆறு படையினர் கொல்­லப்­பட்­டனர்.

14 பேர் படு­காயம் அடைந்­தனர். 07.07.2006 கணேஷ் லேனில் முஸ்லிம் மீன­வரும் 23.05. 2006 கன­க­சபை சந்­திரன் என்ற மீன்­வி­யா­பாரியும் கட்­டைப்­ப­றிச்சான் சோதனைச் சாவ­டி­யிலும் 23.07.2006 இல் ஈச்­சி­லம்­பற்று பூநகர் கிரா­மத்தைச் சேர்ந்த நாக­ராஜா சுந்­த­ர­லிங்கம் (24) 20.08. 2006 ஆம் திகதி சொர்ணம் என்­ப­வரின் சகோ­தரர் மக்­ஹேய்சர் ஸ்ரேடி­யத்­துக்கு அருகில் 14.09.2006 இல் அரச ஊழியர் ஒருவர் 2006.11.07இல் மூன்று இளை­ஞர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டமை மற்றும் செல்­வ­நா­ய­க­புரம் கொலை, ஆத்­தி­மோட்டைக் கொலை­யென இவ்­வாண்டில் பல்­வேறு அசம்­பா­வி­தங்கள் நடந்­தி­ருந்­தன. இவற்­றுக்கு மேலாக உவர்­மலை லோவர் வீதியில் வைத்து சுட­ரொளிப் பத்­தி­ரி­கையின் திரு­கோ­ண­மலை நிருபர் எஸ். சுகிர்­த­ராஜன் (வயது 35) ஆயு­த­தா­ரி­களால் (24.01.2006) சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

2007 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையின் இத்­த­கைய போக்­குகள் இன்னும் மலிந்து காணப்­பட்­டன. 2007.01.26 ஆம் திகதி கிண்­ணியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் ஆலங்­கே­ணியைச் சேர்ந்த தங்­க­ராஜா இத­ய­ராஜா (வயது 39) ஆயுத தாரி­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். 5.1.2007 இல் கிளேமோர் தாக்­குதல் கார­ண­மாக காய­ம­டைந்­ததன் எதிர்த்­தாக்­க­மாக உப்­பு­வெளிப் பிர­தே­சத்தில் ஜெய­ராசா ஜெய­தீபன் அச்­சுதன் சசி­தரன் செல்­வ­நா­ய­க­புரம் நிரோசன் பற்றிக் ஆகியோர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்கள்.

இவ்­வாறு 1983 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து 2009 ஆம் ஆண்டு காலம்­வரை திரு­கோ­ண­மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­க­ளா­னது அப்­பாவி பொது மக்­களை பலி கொள்ள வைத்­த­துடன் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் அமைதிச் சம­நி­லை­யையும் இனச்­ச­ம­நி­லை­யையும் பாதித்த சம்­ப­வங்­க­ளாகக் காணப்­ப­டு­கி­றது. இவை ஒரு புற­மி­ருக்க இம்­மா­வட்­டத்தில் வித­வைகள் ஆக்­கப்­பட்டோர், காணாமல் போனோர், கடத்­தப்­பட்டோர் இடம்­பெ­யர்ந்தோர் என்ற விவ­கா­ரங்கள் மனித உரிமை மீறல்­களை உச்ச நிலைக்கு உயர்த்திக் காட்­டு­வ­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நியாயம் அல்­லது தீர்வு காணப்­ப­டாத விட­ய­மா­கவே பேசப்­ப­டு­கி­றது.

முதலில் வித­வைகள் என்ற பிரச்­சி­னை­களை நோக்­கு­வோ­மாயின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 21 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட வித­வைகள் ஜீவ­னோ­பா­ய­மற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மாத்­திரம் போரினால் பாதிக்­கப்­பட்ட 10 ஆயிரம் வித­வைகள் இருப்­ப­தாக உத்­தி­யோ­கப்­பற்­றற்ற புள்ளி விப­ரங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன. இவர்­களின் நலனை நோக்­க­மாகக் கொண்டு மாவட்­டத்தில் 26 வித­வைகள் சங்கம் இயங்கி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. மூதூரில் மாத்­திரம் சுமார் 5 ஆயி­ரத்து 500 க்கும் மேற்­பட்ட வித­வைகள் போரினால் கண­வன்­மாரை இழந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.

சம்பூர் மூதூர் பாலத்­த­டிச்­சேனை கூனித்­தீவு, கடற்­கரைச் சேனை, சேனையூர், பச்­சைநூல் கிளி­வெட்டி, கங்­கு­வேலி, மேன்­காமம் ஈச்­சி­லம்­பற்று வெருகல் இலங்கைத் துறை­முகம் போன்ற கிரா­மங்­களில் இந்த வித­வைகள் பர­வ­லாக வாழ்ந்து வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அண்­மைக்­கா­லத்தில் வெளி­யி­டப்­பட்ட சில அறிக்­கைகள் தக­வல்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போது சட்ட ரீதி­யாக பொது­மக்கள் கொடுத்­துள்ள மனுக்­களின் அடிப்­ப­டையில் 20 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்டோர் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் எத்­தனை ஆயிரம் பேர் காணாமல் போயுள்­ளார்கள் என்ற முறை­யான கணக்­கெ­டுப்பு இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்றே கூற வேண்டும். இருந்த போதிலும் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கணக்­கெ­டுப்­புக்கள் பூர­ண­மாக்­கப்­ப­ட­வில்­லை­யென்ற வதந்­தி­களும் கூறப்­ப­டு­கின்­றன. ஒரு சில ஆய்வு மையங்கள் மேற்­கொண்ட தக­வ­லின்­படி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சுமார் 3, 200 பேர் கடத்­தப்­பட்டும் காணா­மலும் போயுள்­ளனர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தடியில் காணாமல் போ னோரை தேடியறியும் அமைப்பின் ஏற்பாட் டில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட் டத் தில் தாய்மார் மனைவிமார் சகோதரர் உறவி னர் என்ற வகையில் பலநூறு பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட தாயொருத்தி 23 வருடங்களாக என் பிள்ளையைத் தேடுகிறேன் என்றும் ஒரு மூதா ட்டி தனது 3 பிள்ளைகள் கடத்தப்பட்டு காணா மல் போயுள்ளனர் என்றும் இன்னுமொரு தாய் தனது மகளின் படத்தை ஏந்திய வண்ணம் 2008 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சைக்கு சென்ற எனது மகளை இதுவரை காணவில்லை என வும் கதறியழுத காட்சிகளைக் காணமுடிந்தது.

கடந்த 3.2.2015 ஆம் திகதி கடத்தப்பட்டோர் காணாமல் போனோரை கண்டுபிடித்து தரும்படிகோரி கவனயீர்ப்புப் போராட்ட மொன்று திருகோணமலை ஆளுநர் அலுவல கத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது. இதை நாங்கள் அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு மாவட்ட பெண்கள் சமாஜம் அமரா அமைப்பு என்பன இணைந்து நடத்தியிருந்தன. ஏலவே பதியப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் விபரங்களும் புதிய தகவல்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

இவ் வகைத் தகவல்கள் எல்லாம் முறையான வகை யில் கோவைப்படுத்தப்பட்டு தரவு மயப்படுத் தப்பட வேண்டும்.சுரேஷ் பிரே மச்சந்திரனால் தெரிவிக்கப்பட்ட கோத்தா முகாம் தொடக்கம் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டோர் மறைமுக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர அரசியல் தலைமைகளும் சமூக அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வரவேண்டும்.

- திருமலை நவம்

 

Link to comment
Share on other sites


859f782c5ad8d52de41b046ce0576245
Link to comment
Share on other sites

நீங்கள் ஒருவரும் கானகுக்யில் கல்பனா அக்கா வின் பாடல் கேட்கவில்லையா ?

அபடியகின் இங்கை கிளிக் பண்ணவும்

https://www.facebook.com/public/Kalpana-Bales

Link to comment
Share on other sites

8cd827bc01103afed3d3fc70f1e996da

Link to comment
Share on other sites

f698e06d7366f3a1ab5737eaeedceb0a

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக படிக்கவும்..
ஆணுறையோ பெண்ணுறையோ 
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள் 
தேவை முடிந்தபின்பு - நடுத் 
தெருவில் போடாதீர்கள் 
அரும்புகளும் அதைக்கண்டு 
அர்த்தம் தேடித் தவிக்கிறது...
மாதவிடாய் என்பது - பெண் 
மகத்துவத்தில் ஒன்றாகும் 
வீதியில் போட்டு நீங்களும் - அதனை 
விளம்பரம் செய்யாதீர் 
நெகிழிப்பையில் முடித்து 
குப்பையலிட மறவாதீர்....
இரவுகென்றுப் பல உடைகள் 
விருப்பம்போல் அணியுங்கள் 
ஆனால் அறிவின்றி அதனோடே 
சந்தைவரை செல்லாதீர் 
ஆடவரைத் தூண்டாதீர்..
..
பொதுக் கழிப்பிடங்கள் 
போதுமானவரை உண்டு - இனியும் 
மூச்சடைக்க வைக்காதீர் 
விலங்கினம் போல் வீதியிலே கழிக்காதீர்...
சின்னஞ்சிறு குழந்தைகளும் 
உண்டுக் களிக்கிறது பலகாரம் 
தள்ளுவண்டித் தோழமைகளே 
கைகள் சுத்தம் செய்ய மறவாதீர் 
குழந்தைகளைப் பேணத் தவறாதீர்....
வீசும் குப்பைக் காற்றில் பறந்து 
வாகன ஓட்டியின் மேல் விழுந்து 
நிலைத்தடுமாறி விபத்துகளும் நிகழக்கூடும் 
குப்பைகளைத் தொட்டியில் போடப் பழகிடுவீர்...
நன்மைக்கென்றுப் புரிந்திடுவீர் - நம் 
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர் 
பாதிக்கப்படுவோரில் நாமும் அடக்கம் - எனவே 
சுகாதாரம் கடைபிடிப்பீர் - நம் 
சுற்றுப்புறம் காத்திடுவீர்.....
(நாசூக்கா சொல்லத் தெரியலங்க.... சில கன்றாவிகள சகிக்க முடியலங்க....)

 

முகப்புத்தககத்திலிருந்து.....

Link to comment
Share on other sites

b524a0ceed343d379f1ec504c414ac14

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.