Jump to content

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்


Recommended Posts

அடிலெய்ட் டெஸ்ட்டில் கிளார்க் விளையாடுகிறார்; 13-வது வீரராக பிலிப் ஹியூஸ் சேர்ப்பு

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விளையாடுகிறார். மரணமடைந்த பிலிப் ஹியூஸ் பெயர் 13-வது வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பிலிப் ஹியூஸிற்கு கவுரவம் செய்யும் விதமாக அவரது பெயர் 13-வது வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி, வழக்கம் போல் அனுபவமிக்க பீட்டர் சிடில், ரியான் ஹேரிஸ், மிட்செல் ஜான்சன் ஆகியோருடன் களமிறங்குகிறது. நேதன் லயன் ஸ்பின்னராக சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

ஊடகங்களைச் சந்திப்பதிலிருந்து கிளார்க்கிற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் மிட்செல் ஜான்சன் அணியை அறிவித்தார்.

 

கிளார்க் விளையாடுவதால் ஷான் மார்ஷ் உள்நாட்டு கிரிக்கெட்டிற்குத் திரும்பியுள்ளார்.

“இந்தக் கடினமான தொடருக்கு கிளார்க் கேப்டனாக செயலாற்றுவது அவசியம். அவர் உடற்தகுதி பெற்றிருப்பது எங்களுக்கு பெரிய ஊக்கமளித்துள்ளது. அவர் ஒரு பலமான கேப்டன்.

நாங்கள் எப்படி விளையாடி வருகிறோமோ அதுபோலவே விளையாடுவது அவசியம். அதாவது ஆக்ரோஷமான அணுகுமுறை அவசியம். நாங்கள் அப்படித்தான் விளையாடி வருகிறோம். சூழ்நிலைகள் எதனை வலியுறுத்துகிறதோ அதனைச் செய்வோம், அது பவுன்சர் வீசுவதாக இருந்தாலும் சரி. அணுகுமுறையில் மாற்றம் இருக்காது” என்றார் மிட்செல் ஜான்சன்.

 

ஆஸ்திரேலிய அணி வருமாறு:

டேவிட் வார்னர், கிறிஸ் ராஜர்ஸ், ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன், ரியான் ஹேரிஸ், பீட்டர் சிடில், நேதன் லயன், ஜோஸ் ஹேசில் உட் (12-வது வீரர்), பிலிப் ஹியூஸ் (13வது வீரர்).

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6672528.ece

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

முதல் டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டன்
 

அடிலெய்டில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயலாற்றுவார். தோனி நாளைய டெஸ்டில் இடம்பெறமாட்டார்.

"நான் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பு வகிக்கிறேன். தோனி அடுத்த சில நாட்களில் 100% உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இது எனக்கு மிகப்பெரிய தருணம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது என் கனவு, ஆனால் தற்போது இந்திய அணியை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார் கோலி.

 

மேலும், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் கணுக்கால் காயம் காரணமாக ஞாயிறன்று பயிற்சியில் விளையாடவில்லை. நாளை காலை இவரது உடற்தகுதி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இவர் விளையாடுவது முடிவு செய்யப்படும் என்றார் கோலி.

இந்திய அணி விளையாடும் அனைத்து இருதரப்பு டெஸ்ட் போட்டிகள் போலவே இந்தத் தொடரிலும் டி.ஆர்.எஸ். முறை இல்லை. அது 100% துல்லியமாக இருக்கும் போது அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இப்போது அவுட்டை நாட் அவுட் என்கிறது, நாட் அவுட்டை அவுட் என்கிறது ஆகவே டி.ஆர்.எஸ் தானும் ஏற்கவில்லை என்று கூறினார் விராட் கோலி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article6672491.ece

Link to comment
Share on other sites

பாதுகாப்பான அணிச்சேர்க்கை அல்ல, வெற்றிக்கூட்டணியே தேவை: விராட் கோலி
 

 

ஆஸதிரேலியாவுக்கு எதிராக தன்னம்பிக்கையான, சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்லவே வந்திருக்கிறோம் என்று கேப்டன் விராட் கோலி உறுதி அளித்துள்ளார்.

"நாங்கள் டெஸ்ட் தொடரை வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வரவில்லை. ஒன்றை நம்பாவிட்டால் நாம் அதனை சாதிக்க முடியாது, எனவே தொடரை வெல்ல ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

ஆக்ரோஷமாகவே நான் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடிவந்துள்ளேன். இதே மனநிலை, அணுகுமுறையை எனது கேப்டன்சியிலும் நான் காட்டப் போகிறேன்.

பாதுகாப்பான அணியைத் தேர்வு செய்து பாதுகாப்பாக ஆடும் அணுகுமுறை கிடையாது. எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் அணிச்சேர்க்கையைத்தான் நான் தேர்வு செய்வேன்.

 

வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற வகையில் சிறந்த சேர்க்கையைக் கொண்டுள்ளோம். நல்ல உடற்தகுதியுடன் வேகமாக வீசும் பவுலர்கள் இப்போது இருக்கின்றனர். ஒரு கேப்டனாக அணியில் வேகமாக, நல்ல உடற்தகுதியுடன் வீசக்கூடிய பவுலர்கள் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

100% உடற்தகுதியுள்ள தோனி வேண்டும், மேலும், ஆஸ்திரேலியாவில் அவர் தனக்கு தேவைப்படுவதாகக் கருதும் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். எனவே போதிய தயாரிப்பில்லாமல் வந்து விளையாடுவது என்பது அவரைப் பொறுத்தமட்டில் நடக்காது.

 

அணி வீரர்களை ஒருங்கிணைத்து ஒரே மனநிலையில் கவனம் செலுத்தி ஆடவைப்பதில் இப்போது எங்கள் கவனம் இருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவைப்படும் கடினமான மனநிலையிலிருந்து திசை மாறுவது கூடாது, எனவே இதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்.

அணியின் ஒவ்வொரு வீரரும் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் பாசிடிவ்வாக விளையாடி, அணியின் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும், சொந்த ஃபார்மை மட்டும் குறிவைத்து ஆடக்கூடாது. இவ்வகை மாற்றங்களில் தற்போது மிகக்கவனமாக இருக்கிறோம்” என்றார் விராட் கோலி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/article6673419.ece

Link to comment
Share on other sites

தவறாகத் தொடங்கி சரியாக நிறைவு செய்த இந்தியா: ஆஸ்திரேலியா 354/6

 

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் தவறாக பந்து வீசிய இந்திய அணி முடிவில் சிறப்பாக வீசியது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 354 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மறைவைத் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி, இன்று அடிலெய்டில் துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக புதிய வீரர் கரன் சர்மா சேர்க்கப்பட்டார்.

துவக்க வீரராக ரோஜர்ஸுடன் களமிறங்கிய வார்னர், ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

தவறான தொடக்கம்:

மொகமது ஷமியும், வருண் ஆரோனும் தொடக்க ஓவர்களை தவறான முறையில் தொடங்கினர். ராஜர்ஸ், வார்னர் இருவரும் இடது கை ஆட்டக்காரர்கள். ஓவர் த விக்கெட்டில் வீசி பந்தை உடலின் குறுக்காக வெளியே இழுப்பதுதான் அவர்களைப் பதட்டமடையச் செய்திருக்கும், ஆனால் ரவுண்ட் த விக்கெட் எடுத்து இடது கை பேட்ஸ்மென்கள் இருவரும் இரு கண்களாலும் பந்தை பார்க்கும்படியாக வீசினர். மேலும் பந்தின் லெந்த் ஓவர் பிட்சாக அமைந்தது. குட் லெந்த்திற்கு சற்று முன்னே பந்தை பிட்ச் செய்து வெளியேவோ, உள்ளேயோ கொண்டு சென்றிருக்க வேண்டும், மாறாக நேர் நேர் தேமாவாக வீசினர்.

இதனால் ஒரு நாள் போட்டியைப் போல, பவுண்டரிகளில் ரன் சேர்த்தார் வார்னர். இந்திய பந்துவீச்சளர்கள் முகமது ஷமியும், வருண் ஆரோனும் செய்வதறியாது திகைத்தனர். வருண் ஆரோன் தனது முதல் 2 ஓவர்களில் 5 பவுண்டரிகளை விட்டுக் கொடுக்க மொகமது ஷமி 3 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். 4-வது ஓவர் முடிவில் 40 ரன்கள் என்று ஸ்கோர் போர்டு காட்டியது

தொடர்ந்து இவர்கள் இப்படியேதான் வீசினர். இருவரும் 12 ஓவர்களில் முறையே 75 மற்றும் 77 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தனர்..

இஷாந்த் சர்மா வந்துதான் எப்படி வீச வேண்டும் என்று காண்பித்தார் ரவுண்ட் த விக்கெட்டில் வீசினாலும் ஓவர் தி விக்கெட்டில் வீசினாலும் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டார்.

 

மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ரோஜர்ஸ் 9 ரன்களுக்கு, இஷாந்த் சர்மாவின் ஓவரில் ஆட்டமிழந்தார். அது ஒரு துல்லியமான லெந்த் பந்து. வெளியே எடுத்துச் சென்றார். ராஜர்ஸ் அதனை ஆட சபலம் கொண்டு வீழ்ந்தார். தொடர்ந்து அதிரடியாகவே ஆடிவந்த வார்னர் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். ஆனால் புதிதாக களமிறங்கிய ஷேன் வாட்சன், 12 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் ஆரோன் பந்தில் ஆட்டமிழந்தார்.

 

60 ரன்களில் முதுகுவலி காரணமாக வெளியேறிய கிளார்க்:

உணவு இடைவேளைக்கு சிறுது நேரம் முன்பு, ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், வார்னருடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 106 பந்துகளில் வார்னர் சதத்தை தொட்டார். சக வீரர் பிலிப் ஹியூஸின் மறைவுக்கு அடுத்து அடித்த சதம் என்பதால் தனது கொண்டாடத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தினார். மறுமுனையில் கிளார்க் 69 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

உறுதியாக ஆடிவந்த இந்த இணையால் கண்டிப்பாக வலுவான ஸ்கோரை ஆஸ்திரேலியா எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, 60 ரன்கள் எடுத்திருந்த கிளார்க், முதுகில் ஏற்பட்ட காயத்தினால் மேற்கொண்டு ஆடமுடியாமல் களத்தை விட்டுச் சென்றார்.

 

அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், வார்னருடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 145 ரன்கள் எடுத்திருந்த போது கரண் சர்மாவின் பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். கரண் சர்மாவின் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. கரண் சர்மா இந்தத் தருணங்களில் அபாரமாக வீசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலியும் சரியானஇடத்தில் பீல்டரை நிறுத்தி வைத்திருந்தார். வார்னர் மேலேறி வந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிக்க நினைத்தார். பந்து உயரம் சென்ற அளவுக்கு தூரம் செல்லவில்லை.

 

சரியான நிறைவு:

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கரண் சர்மா அபாரமாக வீசினார். விக்கெட் எடுப்பது போல் இருந்தது அவரது பந்து வீச்சு. இடையில் முரளி விஜய், வார்னருக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டார். கரண் சர்மா ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை உருவாக்கினார் ஆனால் தகையவில்லை.

வார்னர் ஆட்டமிழந்தவுடன் ஆஸ்திரேலியாவின் அதிரடி ரன்குறைப்பும் குறைந்தது. களத்தில் இருந்த மிட்சல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிதனமான டெஸ்ட் பாணி ஆட்டத்தை தொடர்ந்தனர். 84 ஓவர்கள் முடிவில் 345 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா, 2-வது புதிய பந்தை எடுத்த பின்பு அடுத்த சில ஓவர்களில் மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது.

 

ஆரோன் வீசிய ஓவரில் 41 ரன்கள் எடுத்த மார்ஷ் ஆட்டமிழந்தார். ஷமி தனது அடுத்தடுத்த ஓவர்களில் லயனையும், ஹாடினையும் வெளியேற்றினார். 90-வது ஓவரில் ஹாடின் ஆட்டமிழந்தவுடன், இன்றைய நாள் ஆட்டம் முடிந்தது. முடிவில் 354 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்திருந்தது.

அபாய வீரர் மிட்செல் மார்ஷ் வருண் ஆரோனின் கூடுதல் பவுன்சில் கல்லியில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். நேதன் லயன் காலைப் பயன்படுத்தாததால் 3 ரன்களில் ஷமியின் பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டார். பிராட் ஹேடின் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் போராடிக்கொண்டிருந்தார். கடைசியில் ஷமியின் அபாரமான பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து 0-வில் வெளியேறினார்.

விக்கெட் எடுக்க முடியாத நேரங்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். இந்திய பவுலர்கள் இசாந்த் சர்மா நீங்கலாக மற்றவர்கள் இதில் சோடை போயினர். இதனா. 90 ஓவர்களில் 354 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் டைட் செய்திருந்தால் 290 அல்லது 300 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்பது இந்தியாவுக்கு மனரீதியான பலத்தை அளித்திருக்கும். நாளை 400 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை சுருட்ட முடிந்தால் உண்மையில் இந்த பந்து வீச்சு வரிசை தன் காரியத்தை சரியாகச் செய்து முடித்ததாகவே கொள்ளலாம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3546/article6675861.ece

Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட்: வார்னரின் 'உணர்வுபூர்வ' சதத்துடன் ஆஸி. வலுவான துவக்கம்
 

 

டேவிட் வார்னரின் உணர்வுபூர்வமான சதத்துடன், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி வலுவான துவக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று காலை தொடங்கியது.

 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் ரோஜர்ஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதேவேளையில், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் உத்வேகத்துடன் பேட் செய்து சதமடித்தார். சக வீரர் ஹியூஸை இழந்து ஆஸ்திரேலிய அணி களம் காணும் இந்த முதல் போட்டியில், அவரது சதம் உணர்வுபூர்வமானது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் வருணிக்கின்றனர்.

வாட்சன் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆரோனின் பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மைக்கேல் கிளார்க் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதுகு வலி அதிகரித்ததன் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.

 

முதல் நாளின் 50 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 131 ரன்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, ஆரோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இஷாந்த் மிகச் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முகம்து சமியும், ஆரோனும் சற்றே ரன்களை மிகுதியாக வழங்கி வருகின்றனர்.

 

தீவிரம் காட்டும் ஆஸ்திரேலியா

சமீபத்தில் மரணமடைந்த பிலிப் ஹியூஸுக்காக இந்தப் போட்டியில் வெல்வதில் ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. அதனால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்பதால் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்புக்கிணங்கவே ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் காணப்படுகிறது.

 

2012-ல் ஆஸ்திரேலிய மண்ணில் படுதோல்வி (0-4) கண்ட இந்தியா, இந்த முறை அதை ஈடுகட்டுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அது அவ்வளவு எளிதல்ல. 2012-ல் சச்சின், திராவிட், சேவாக், லட்சுமண் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய இந்திய அணி இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.

கடந்த ஆஸ்திரேலியத் தொடரின்போது கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும், ரஹானேவுக்கும், ரோஹித்துக்கும் ஒரு போட்டியில்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டில் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை விளையாடாத இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஆனால் அந்த தொடர்கள் அனைத்தையும் இழந்தது.

வலது கட்டை விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து கேப்டன் தோனி இன்னும் முழுமையாக குணமடையாததால் விராட் கோலி தலைமையில் களமிறங்கியிருக்கிறது இந்திய அணி.

 

ஹியூஸுக்கு கவுரவம்

சமீபத்தில் மரணமடைந்த ஹியூஸை கவுரவிக்கும் வகையில் முதல் டெஸ்ட் போட்டியில் அவருடைய எண் 408-ஐ (ஆஸி.யின் 408-வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஹியூஸ்) தங்கள் சட்டைகளில் அணிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுகின்றனர். இதுதவிர மைதானத்திலும் 408 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. ஹியூஸை கவுரவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், தெற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

 

32-வது டெஸ்ட் கேப்டன் கோலி

இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை வகிப்பதன் மூலம் இந்தியாவின் 32-வது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த அதே மைதானத்தில் கேப்டனாக அறிமுகமாகிறார் கோலி.

தற்போது தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 3-0 என்ற கணக்கிலோ அல்லது 4-0 என்ற கணக்கிலோ ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழக்குமானால் தரவரிசையில் 7-வது இடத்துக்கு தள்ளப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6675416.ece

Link to comment
Share on other sites

கிளார்க், ஸ்மித், மழை ஆதிக்கம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 517 ரன்களை எடுத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக வெளியேறிய ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், இன்று மீண்டும் களமிறங்கி சதமடித்தார். நேற்று 72 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த ஸ்டீவன் ஸ்மித்தும் சதமடித்தார்.

 

354 ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழந்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை இன்றும் தொடர்ந்தது. நேற்று முதுகில் காயம் காரணமாக ஆடமுடியாமல் 60 ரன்களில் வெளியேறிய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், இன்றும் ஸ்மித்துடன் இணைந்து களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே, ஒரு ஓவருக்கு குறைந்தது 4 ரன்கள் வீதம் ஆஸ்திரேலியா எடுத்து வந்தது. பவுண்டரிகளும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இந்திய பந்துவீச்சாளர்கள் எவரும் சிறிதளவு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஆட்டம் ஆரம்பித்த 10 ஓவர்களிலேயே பலத்த மழை குறுக்கிட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டத்தை நிறுத்தியது.

 

மழைக்குப் பின், ஸ்மித், கிளார்க் இணை மீண்டும் தங்கள் நேர்த்தியான ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஸ்டீவன் ஸ்மித் 172 பந்துகளில் தனது சதத்தை தொட்டார். இதில் 14 பவுண்டரிகளும் அடக்கம். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த கிளார்க்கும் சதத்தை நோக்கி தனது ஆட்டத்தை எடுத்துச் சென்றார். கிளார்க் 98 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. 90 நிமிடங்களுக்கு மேல் வந்த இந்த இடைவெளி இந்திய அணிக்கு மீண்டும் பின்னடைவாகவே இருந்தது. ஒவ்வொரு மழை இடைவெளியிலும் கிளார்க் மற்றும் ஸ்மித் ஓய்வெடுத்து, மீண்டும் புத்துணர்வோடு ஆட்டத்தை தொடர்வது போலவே இருந்தது.

தொடர்ந்த ஆட்டத்தில், 127 பந்துகளில் கிளார்க் தனது சத்தை எட்டினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 28-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ரன்கள் தொய்வில்லாமல் வர, வலுவான ஸ்கோரை நோக்கி ஆஸ்திரேலிய அணி நடை போட்டது. ஸ்கோர் 473 ஆக இருந்த போது, மூன்றாவது முறையாக மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் ஆட்டம் தொடர்ந்தது.

 

ஸ்மித் 218 பந்துகளில் 150 ரன்களை அடைந்தார். இன்றைய நாளில் இந்த இணைய ஆட்டமிழக்கச் செய்யமுடியாது என்ற நிலையில், மைக்கேல் கிளார்க் 128 ரன்களில், கரன் சர்மாவின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யாத நிலையில் மிட்சல் ஜான்சன் களமிறங்கினார். மோசமான வானிலை காரணமாக அந்த ஓவரிலேயே இன்றைய நாள் ஆட்டம் முடிந்ததாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

முடிவில் ஆஸ்திரேலியா 517 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 162 ரன்களுடனும், ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இன்று இந்தியப் பந்துவீச்சு எதுவும் எடுபடாத நிலையில், கடைசியில் கரன் சர்மா வீழ்த்திய விக்கெட் இந்திய ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. வலுவான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா, கண்டிப்பாக நாளை இந்தியாவை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிக்கும். மோசமான வானிலை தொடரும் பட்சத்தில், நாளை இந்தியாவுக்கு கடினமான நாளாக அமையும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6679004.ece

 

Link to comment
Share on other sites

எந்த ஒரு தீவிரத்தையும் காட்டாத இந்திய பந்துவீச்சு: 2ஆம் நாள் ஆட்டம் ஒரு பார்வை

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக மொத்தம் 30.4 ஓவர்களையே கொண்டதாக அமைந்தது. இதில் ஆஸ்திரேலியா 163 ரன்களை விளாசியது.

354/6 என்று முதல் நாள் ஆட்ட இறுதியில் வீழ்த்திய 3 விக்கெட்டுகளுடன் தன்னம்பிக்கையுடன் தொடங்க வேண்டிய இந்திய அணி, மந்தமான முறையிலும் தொய்வான உடல்மொழியிலும் தொடங்கியது. 'ஆக்ரோஷமான அணுகுமுறை', 'வெற்றிபெறத்தான் இங்கு வந்திருக்கிறோம்' போன்ற வார்த்தைகளெல்லாம் வெறும் வாய்ப்பந்தல்தானா என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது

மேலும், ஸ்மித்துடன் கிளார்க் களமிறங்குவார் என்பதை இந்திய அணி சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. கிளார்க் களமிறங்குவார் என்பதற்கான திட்டமிடுதல் எதுவும் இல்லாததால் இந்திய அணி திகைத்தது.

கடுமையான முதுகு காயத்தில் அவதிப்பட்ட கிளார்க் பல ஊசிகளைப் போட்டுக் கொண்டு களமிறங்கினார். அவரால் கால்களை நகர்த்த முடியவில்லை. ரன்களை வேகமாக ஓட முடியவில்லை.

 

அதாவது அரைகுறையான உடற்தகுதியுடன் அவர் களமிறங்கிய போதும், இந்திய அணியின் பவுலர்கள் அதனைப் பயன்படுத்தி அவரை வீழ்த்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் தன் இஷ்டத்திற்கு கால்களை நகர்த்தாமலேயே வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை விளாச முடியும் அளவுக்கு பந்து வீச்சில் எந்த வித ஆக்ரோஷமோ, தாக்கமோ இல்லை.

சரியான உடற்தகுதியுடன் இல்லாத மைக்கேல் கிளார்க்கையே இந்தப் பந்து வீச்சினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கிளார்க் சில பந்துகளில் காயத்திற்கு அஞ்சி ஒதுங்கி ஒதுங்கி விளையாடினார். முதல் நாள் நன்றாக வீசிய இசாந்த் சர்மாவுக்கு இன்று என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஷார்ட் மற்றும் வைடாக வீசி சில பவுண்டரிகளை விளாசக் கொடுத்தார். 5 பந்துகளை லெக் திசையில் வைடாக வீசினார் இசாந்த்.

இசாந்த் எவ்வழியோ நாங்களும் அவ்வழி என்று முடிவெடுத்து மொகமது ஷமியும் ஷார்ட் மற்றும் வைடாக வீசினார். இல்லையெனில் லெக் திசையில் வீசினார். அல்லது ஓவர் பிட்சில் வீசினார்.

 

ஓவருக்கு 8 ரன்கள், 7 ரன்கள் என்று வந்து கொண்டேயிருந்தது. குறிப்பாக ஸ்மித் விளாசினார். ஸ்மித்தை வீழ்த்தவும் எந்த திட்டமிடுதலும் இல்லை, தட்டுத்தடுமாறிய கிளார்க்கை வீழ்த்தவும் பந்து வீச்சில்லை.

வேகப்பந்து வீச்சாளர்களின் இந்தக் கூத்தைக் கண்ட கோலி, 96-வது ஓவரிலேயே கரன் சர்மாவை கொண்டு வர நிர்பந்திக்கப்பட்டார். 98-வது ஓவரில் வருண் ஆரோன் வந்தார். ஸ்மித் அந்த ஓவரின் கடைசி பந்தை ஆடாமல் விட்டார் பந்து துரதிர்ஷ்டவசமாக ஆஃப் ஸ்டம்பை உரசிக் கொண்டு சென்றது.

நடுவில் ஒரு ஓவர்தான் கரன் ஷர்மா. வேகப்பந்து வீச்சாளர் முனையை மாற்ற 4-வது பவுலராக எடுக்கப்பட்ட கரன் சர்மா பயன்படுத்தப்பட்டார். வருண் ஆரோனைத் தொடர்ந்து இசாந்த் சர்மாதான் வீசினார்.

 

மழை இடைவெளிக்குப் பிறகு ஸ்மித் சதம் எடுத்தார். பிறகு மீண்டும் சம்பந்தமில்லாமல் கரண் சர்மாவை பந்து வீச அழைத்தார். கிளார்க் 2 பவுண்டரிகளை விளாசினார். கிளார்க், ஸ்மித் எளிதாக சிங்கிள் எடுக்க வசதியாக லாங் ஆன் நிறுத்தப்பட்டிருந்தது. மிட் ஆனில் நிறுத்தி சிங்கிளை தடுத்திருக்க வேண்டும்அல்லது ரன்களைக் கட்டுப்படுத்தினால் பேட்ஸ்மென்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. கேள்வி கேட்பாரில்லாமல் ரன்கள் பல வடிவங்களில் வந்து கொண்டிருந்தது.

98 ரன்களில் கிளார்க்கிற்கு வருண் ஆரோன் சில பவுன்சர்களை வீசினார். ஆனால் விக்கெட்தான் விழவில்லை. ஸ்மித், வருண் ஆரோனின் அனைத்து பவுன்சர்களையும் டி20 கிரிக்கெட்டில் அடிப்பது போல் ஒதுங்கிக் கொண்டு விளாசினார்.

 

கோட்டைவிடப்பட்ட வாய்ப்புகள்:

ஸ்மித் 131 ரன்களில் இருந்த போது பரிதாபத்திற்குரிய கரன் சர்மா வீசிய பந்தை மேலேறி வந்து விளாச நினைத்து கோட்டை விட்டார். பந்து விக்கெட் கீப்பர் சஹாவிடம் சென்றது 109 ஓவர்கள் கீப்பிங் செய்த அவர் பந்தை சரியாக பிடிக்காமல் ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவவிட்டார். அதைவிட கரன்சர்மாவுக்கு ஒரு முக்கியமான விக்கெட் பறிபோனது. இப்படித்தான் பங்கஜ் சிங்கை ரவீந்திர ஜடேஜா கேட்சை விட்டு உத்வேகத்தைக் கெடுத்தார். அவரது டெஸ்ட் வாழ்வு அல்பாயுசில் முடிந்து போனது.

இது மட்டுமல்ல மீண்டும் கரன் சர்மாவே துரதிர்ஷ்டத்திற்கு ஆளானார். ஸ்மித் 161 ரன்கள் எடுத்திருந்த போது லாங் லெக்கில் இசாந்த் சர்மா கேட்சை கோட்டை விட்டார். இது வேண்டுமானால் கொஞ்சம் கடினமான வாய்ப்பு என்று கூறலாம். ஆனால் எந்த ஒரு வாய்ப்பையும் இந்தியா உருவாக்கத் தயாராக இல்லை. தானாக வந்த வாய்ப்பை பற்றிக் கொள்ளும் நிலையிலும் இல்லை. கடைசியாக கிளார்க் அவுட் ஆனது கூட போனால் போகட்டும் என்பது போலவே தெரிந்தது.

 

மொத்தத்தில் 2-ஆம் நாள் ஆட்டம், மழையினால் பாதிக்கப்பட்டு சோர்வளித்ததை விட இந்திய அணியின் அணுகுமுறை ஏற்படுத்திய சோர்வே அதிகம். இந்த அணிக்காக அதிக சம்பளத்தில் ஒரு பயிற்சியாளர், ஏகப்பட்ட உதவி பயிற்சியாளர்கள் என்று பிசிசிஐ செலவழித்தும், 2ஆம் நாள் ஆட்டத்திற்கென எந்த ஒரு திட்டமும் இடப்படவில்லை என்பதையே இந்திய அணியின் இன்றைய ஆட்டம் நிரூபித்துள்ளது.

இந்திய ரசிகர்களுக்கு மிகவும் சோர்வூட்டக்கூடியதாக 2ஆம் நாள் ஆட்டம் அமைந்தது. 354/6 என்ற நிலையிலிருந்து 517/7 என்ற வெற்றி நிலைக்குச் சென்றுள்ளது. இந்திய அணியை பேட்ஸ்மென்களும், மழையும்தன் காப்பாற்ற வேண்டும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article6679304.ece

Link to comment
Share on other sites

கோலி அபார சதம்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி
 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை 369 ரன்களை எடுத்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி, நேற்றைய ஸ்கோரான 517 ரன்களில் இன்று காலை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் இணை நல்ல துவக்கத்தைத் தந்தனர்.

 

தவான் 25 ரன்களில் ஹாரிஸ்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய புஜாராவும், விஜய்யும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். சீராக இந்தியாவின் ஸ்கோரும் உயர்ந்தது. அரை சதத்தைக் கடந்திருந்த நிலையில், ஜான்சனின் பந்தில் விஜய் (53 ரன்கள், 88 பந்துகள், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது.

 

விஜய்க்கு அடுத்து களமிறங்கிய விராட் கோலி, புஜாராவோடு இணைந்து தொடர்ந்து அணியின் ஸ்கோரை நிலையாக எடுத்துச் சென்றார். அவ்வப்போது பவுண்டரிகளும் வரத் தவறவில்லை. புஜாரா 96 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார். ட்ரிங்ஸ் இடைவேளையைத் தாண்டி தொடர்ந்த இந்த பார்ட்னர்ஷிப்பை 50-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் லயான் முறித்தார். 73 ரன்கள் எடுத்திருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக லயானின் பந்தில் புஜாரா ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரஹானேவும், கோலிக்கு ஈடுகொடுத்து தன் பங்கிற்கு ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். தேநீர் இடைவேளையைத் தாண்டி விளையாடிய இந்த இணை ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு சவாலாகவே அமைந்தது. கோலி 86 பந்துகளில் அரை சதம் எட்டினார். ரஹானே 61 பந்துகளில் விரைவாக அரை சதம் எட்டினார். இதில் 10 பவுண்டரிகளும் அடக்கம்.

 

76-வது ஓவரில் லயான் வீசிய பந்து, எதிர்பாராத விதமாக பவுன்ஸ் ஆக, முன்னால் வந்து ஆடிய ரஹானே பந்தை கணிக்க முடியாமல் தடுமாற, அது எட்ஜில் பட்டு கேட்ச் ஆனது. 62 ரன்களுக்கு ரஹானே பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்த விராட் கோலி, 158 பந்துகளில், பவுண்டரியை அடித்து சதத்தைக் கடந்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆட்டம் முடிய சில ஓவர்களே இருந்த நிலையில், விராட் கோலி (115 ரன்கள், 184 பந்துகள், 12 பவுண்டரி) மிட்சல் ஜான்சனின் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் இன்றைய நாளின் ஆட்டம் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 33 ரன்களுடனும், சாஹா 1 ரன்னோடும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 148 ரன்கள் பின் தங்கியுள்ளது.

நாளை மதியம் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி ஆடினால் மட்டுமே, இந்த போட்டி டிராவில் முடியும். எனவே நாளைய ஆட்டம் இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக அமையும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF/article6682406.ece

Link to comment
Share on other sites

கோலியை தாக்கிய பௌன்சர்

அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராத் கோலி, தான் எதிர்கொண்ட முதற் பந்துவீச்சில் பௌன்சர் பந்துவீச்சு தாக்குதலுக்கு இலக்கானார். மிச்சல் ஜோன்சன் வீசிய பந்து நேரடியா அவரின் தலைக் கவசத்தை தாக்கியது. பதற்றமடைந்த வீரர்கள், உடனடியா கோலிக்கு அருகில் ஓடிச் சென்று அவர் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றாரா என சோதனையிட்டனர். பந்து வீசிய மிச்சல் ஜோன்சன் மிகவும் பதற்றமாக காணப்பட்டார். கோலியின் தலைக்கவச முன் பகுதியிலேயே பந்து தாக்கி இருந்தது.


பௌன்சர் பந்துவீச்சு தாக்கி அவுஸ்திரேலியா வீரர் மரணமடைந்து 2 வாரங்களில் இந்த சம்பவம் நடைபெற்றமையே இந்த பதற்றத்துக்கு காரணமாக அமைந்தது.

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/135749-2014-12-11-05-43-25.html

 

Link to comment
Share on other sites

பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்தோம்: புஜாரா
 

 

ஆஸ்திரேலியா எடுத்த 517 ரன்களுக்கு எதிராக எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்பதை விவாதித்தோம் என்கிறார் புஜாரா.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாளான இன்று இந்தியா சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் எடுத்துள்ளது. அணியின்ஆட்டம் குறித்து புஜாரா பெருமிதம் அடைந்துள்ளார்.

புஜாரா மிகவும் அனாயசமாக 73 ரன்களை எடுத்து, நேதன் லயன் பந்தில் பவுல்டு ஆனார். பந்து அவரது மட்டையில் பட்டு ஸ்டம்பிற்கு உருண்டு சென்று பைல்களை கீழே தள்ளியது.

 

இன்றைய ஆட்டம் பற்றி புஜாரா கூறியதாவது: ‘இந்த டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று நாங்கள் புதன்கிழமை கூடி ஆலோசித்தோம்.

அதாவது இந்தப் பிட்ச் பற்றியும் ஆஸ்திரேலியாவின் ரன் பற்றியும் விவாதித்து, பிறகு இந்த பேட்டிங் வரிசையினால் பதிலடி கொடுக்க முடியும் என்று உறுதிபூண்டோம்.

இளம்திறன்கள் கொண்ட இந்திய பேட்டிங் வரிசை இன்று தங்களை நிரூபித்துள்ளது. இந்த நிலையிலிருந்து அடுத்த இலக்கிற்கு முன்னேறுவது இப்போது அவசியம்.

இந்தத் தொடருக்காக நான் கடுமையான முன் தயாரிப்பில் ஈடுபட்டேன், நான் 73 ரன்களையே எடுத்திருந்தாலும், அது எனக்கு மனநிறைவைத் தருகிறது. கடந்த தொடரில் நல்ல தொடக்கம் கண்டேன், ஆனால் அவற்றை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்து கொண்டிருந்தேன்.

 

எப்போதுமே இரட்டை சதங்கள் எடுத்து விட முடியாது, ஆனாலும் எவ்வளவு ரன்களை அதிகபட்சமாக எடுக்க முடியுமோ அது வரையில் அங்கு போராடியாக வேண்டும். எதிரணியினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் ஆட்டமிழந்த பிறகு எப்படி அவுட் ஆனேன், என்ன தவறு செய்தேன் என்பதை ஆய்வு செய்தேன்” என்றார் புஜாரா.

கோலிக்கு மிட்செல் ஜான்சன் வீசிய பவுன்சர் ஹெல்மெட்டைத் தாக்கிய சம்பவம் குறித்து புஜாரா கூறும்போது, “பந்து ஹெல்மெட்டைத் தாக்கியவுடன் அனைவரும் கோலியிடம் சென்று நலமாக இருக்கிறாரா என்று விசாரித்தனர். நான் அவரை விசாரிக்க போன போது, ஹெல்மெட்டை சரிபார்த்து பிறகு ஆடத் தொடங்கினார்.

 

அதன் பிறகு அந்தப் பந்து பற்றி விவாதித்தோம், அதை எப்படி ஆடுவது என்பதை திட்டமிட்டோம், கோலி எப்படி ஆடினார் என்பதையும் ஆலோசித்தோம். ஆனால் அவர் அதையெல்லாம் மறந்து விட்டு நமக்கு முக்கியமான சதத்தை அடித்துக் கொடுத்துள்ளார். அவரது இன்னிங்ஸை பார்ப்பது உற்சாகமான ஒன்று.

நான் இன்று ஆட்டமிழந்த விதம் துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். பந்து எங்கு சென்றது என்பது எனக்குப் புரியவில்லை. ரீப்ளே பார்த்த போதுதான் தெரிந்தது பந்து வேகமாக ஸ்டம்பை தாக்கியது. என்னால் பந்தை தடுக்க போதிய நேரம் இல்லை.

நேதன் லயன் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் பவுலர்களின் காலடித் தடங்களை நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அவர் உண்மையிலேயே நன்றாகவே வீசுகிறார்.

இந்தத் தொடருக்கான நல்ல பேட்டிங் தொடக்கமாக இந்த இன்னிங்ஸ் அமைந்துள்ளது” என்றார் புஜாரா.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article6682782.ece

Link to comment
Share on other sites

வார்னர் மீண்டும் சதம்: ஆஸி. 363 ரன்கள் முன்னிலை

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 363 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஆஸி. வீரர் டேவிட் வார்னர், இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 444 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

73 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா, உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 32 ரன்களை எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளித்த துவக்க வீரர் ரோஜர்ஸ், இம்முறையும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரரான வார்னர், முதல் இன்னிங்ஸை போலவே, இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 63 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார்.

வாட்சன் - வார்னர் இணை, பார்ட்னர்ஷிப்பில் 102 ரன்களைக் குவித்தது. வாட்சன் 33 ரன்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி அவரை வெளியேற்றினார். சென்ற இன்னிங்ஸில் சதமடித்த கிளார்க், 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், வார்னர் 154 பந்துகளில் சதம் எடுத்தார். ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் வார்னர் களத்தில் நிலைக்கவில்லை. கரண் சர்மா வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று வார்னர் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

 

தொடர்ந்து களமிறங்கிய மார்ஷ், அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். கரண் சர்மா வீசிய 64-வது ஓவரில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாசினார் மார்ஷ். அடுத்து ரோஹித் சர்மா வீசிய ஓவரில் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் நோக்கில் அடிக்க, அது கேட்ச் ஆனது. 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து மார்ஷ் வெளியேறினார்.

முதல் இன்னிங்ஸில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவன் ஸ்மித் 59 பந்துகளில் அரை சதம் தொட்டார். ஆட்ட நேர முடிவில் ஸ்மித் 52 ரன்களுடனும், ஹாட்டின் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து, 290 ரன்களை எடுத்து, 363 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக 369 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை இந்தியா துவக்கியது. களத்தில் இருந்த ரோஹித் சர்மாவும், விருத்தமான் சாஹாவும் பொறுமையாகவே ஆடிவந்தனர். ரன் சேர்ப்பை விட விக்கெட்டை பறிகொடுக்காமல் தாக்குப்பிடிப்பதே இன்று பிரதானமாக இருந்தது.

 

ஆனால் ரோஹித் சர்மா 43 ரன்கள் எடுத்திருந்த போது லயானின் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கரண் சர்மாவும் அடுத்த சில ஓவர்களில் சிட்டில் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சாஹாவும் (25 ரன்கள்), இஷாந்த் சர்மாவும் (0) ஒரே ஒவரில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

களத்தில் இருந்த முகமது ஷமி, அதிரடியாக ஆடி 3 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் அடித்து ஸ்கோர் உயர துணை புரிந்தார். அவரும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 444 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவின் லயான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

நாளைய ஆட்டத்தில் 400 ரன்கள் முன்னிலையைக் கடந்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யுமா அல்லது அதற்கு முன்பாகவே டிக்ளேர் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 5-ஆம் நாள் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்பதால், இந்திய அணி நாளை டிராவை நோக்கியே ஆட்டத்தை எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-363-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article6685845.ece

Link to comment
Share on other sites

இந்திய-ஆஸ்திரேலிய வீரர்களிடையே கடும் வாக்குவாதம்: கோபக்கார கோலி சமாதானத் தூதரானார்
 

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் ஒருவழியாக உண்மையான ஆஸ்திரேலிய-இந்திய டெஸ்ட் போட்டியாக விளையாடப்பட்டது. இரு அணி வீரர்களுக்கு இடையேயும் இருமுறை மைதானத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ஆட்டத்தின் 34-வது ஓவரை வீச வருண் ஆரோன் அழைக்கப்பட்டார். அப்போது டேவிட் வார்னர் அந்த ஓவரின் 3-வது பந்தை அடிக்க முயன்று தோல்விகண்டு பவுல்டு ஆனார்.

வருண் ஆரோன் ஆக்ரோஷமாக அதனைக் கொண்டாடினார். வார்னரும் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். ஆனால் நடுவருக்கு நோ-பால் என்ற சந்தேகம் எழவே வார்னரை நிற்கச் சொன்னார்.

ரீ-ப்ளேயில் அது மிகப்பெரிய நோ-பால் என்று தெரிந்தது. வார்னர் உடனே க்ரீஸிற்கு திரும்பியவர் சும்மா இல்லாமல் ‘கமான் கமான்’ என்று வருண் ஆரோனை நோக்கி கத்திய படியே வந்தார்.

 

கிரீஸில் ஒரு பந்தை எதிர்கொண்ட பிறகும் கமான் கமான் என்று மீண்டும் ஆரோனை வெறுப்பேற்றவே. இது தவானுக்கு பிடிக்காமல் போக அவருக்கும் வார்னருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. வருண் ஆரோனும் இதில் இணைந்தார். மேலும் சில வீரர்களும் இணைய கேப்டன் விராட் கோலி அனைவரையும் சமாதானம் செய்ய நேரிட்டது, வருண் ஆரோன் கமான் கமான் அறைகூவல் மீது கடும் கோபமடைந்தார்.

 

அவ்வளவு பெரிய நோ-பாலை நடுவர் கவனிக்காமல் இருந்ததால் இந்த தகராறு ஏற்பட்டது. பேட்ஸ்மென் பவுல்டு என்று பவுலர் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அது நோ-பாலா என்று சரி பார்ப்பதை நடுவர்கள் கைவிட வேண்டும். அவ்வளவு பெரிய நோ-பாலை பார்க்காமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? நடுவரின் முதல் பணி நோ-பால் பார்க்க வேண்டியதே. இப்போதெல்லாம் இது அதிகமாக நடைபெறுகிறது. இதனால் உணர்வு பூர்வமான தருணங்களில் வீரர்களிடையே தகராறு ஏற்படுகிறது.

அதன் பிறகு சமாதானமாக ஆட்டம் சென்றது.

ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பிறகு வாட்சன், மைக்கேல் கிளார்க் விக்கெட்டுகள் விழுந்த பிறகு மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டது. இந்த முறை ரோஹித் சர்மா நாயகன் ஆனார்.

ஸ்டீவன் ஸ்மித், ரோஹித் சர்மா வீசிய ஒரு பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார் ஆனால் ரோஹித் பந்தை ஷாட்டாக அவருக்கு சிக்காமல் வீசினார். பந்து அவரைக் கடந்து சென்று விடும் என்ற அச்சத்தில் இயல்பாக காலை நீட்டி அந்தப் பந்தை பேடால் தடுத்தார் ஸ்மித். அது அவுட் என்பதற்கு வழியே இல்லை.

ஆனால், ரோஹித் அபத்தமாக நடுவரிடம் முறையீடு செய்தார். பேசினார். ஆனால் இது முழுதும் நடுவருக்கும் பவுலருக்கும் இடையிலானது. ஆனால் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ஸ்டீவன் ஸ்மித் அங்கிருந்து ரோஹித் சர்மாவை நோக்கி ஏதோ கூற, ரோஹித் சர்மா பதிலுக்கு ‘வாட்? வாட்?’ என்று இருமுறை கோபமாக பேச மீண்டும் கோலி, நடுவர்கள், ரோஹித் சர்மா, புஜாரா, வார்னர் ஆகியோரிடையே சிலபல வார்த்தைகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

மீண்டும் விராட் கோலி சமாதனத் தூதராகச் செயல்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களின் செய்கை குறித்து நடுவர் இயன் கோல்டிடம் நீண்ட நேரம் பேசினார்.

ஆனால் அனைத்துமே ஆட்ட உணர்வுடன் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அதன் ஆக்ரோஷ சொற்பிரயோக அணுகுமுறைக்குத் திரும்பியுள்ளது, இந்தத் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6685986.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆட்டத்தின் இறுதிநாள் மொத்தமாக 90 ஓவர்கள் வீசப்படவேண்டும். தேவைப்பட்டால் மேலதிகமாக 15 ஓவர்கள் வீசலாம். மொத்தம் 105 ஓவர்களிருக்கின்றன. 364 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையை நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்வது கடினமானது. எனவே இன்று ஆஸி தனது ஆட்டத்தை நிறுத்திவிட்டு இந்தியாவை ஆட அழைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

முதல் டெஸ்டை வென்றது ஆஸி. - கோட்டை விட்ட இந்தியாஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை, ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாள் முடிய வெறும் 11 ஓவர்களே இருந்த நிலையில், இந்திய பேட்டிங் வரிசை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மதிய தேநீர் இடைவேளை வரை 205 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி, முரளி விஜய் 99 ரன்களில் ஆட்டமிழந்தத்தைத் தொடர்ந்து, வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் 315 ரன்கள் எடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை முடித்தது. இந்திய கேப்டன் விராட் கோலி (141 ரன்கள்) சதமடித்தது வீணானது.

ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும், ரோஹித் சர்மா 6 ரன்களுடனும், சாஹா 13 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் வெற்றிவாய்ப்புக்கு அருகில் இருந்த இந்திய அணி, பேட்டிங்கில் சொதப்பியதால் டிரா செய்யக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. தனித்துப் போராடிய விராட் கோலிக்கு இணை கொடுத்து ஆட இந்திய பேட்ஸ்மென் தவறினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி வெற்றி பெற முக்கியக் காரணமாய் அமைந்தார். முதல் இன்னிங்ஸிலும் இவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6688853.ece

 

Link to comment
Share on other sites

டிராவைப் பற்றி நான் எந்தக் கட்டத்திலும் யோசிக்கவில்லை: விராட் கோலி திட்டவட்டம்

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கடினமான பிட்சில், கடும் நெருக்கடியில் தலைசிறந்த டெஸ்ட் சதத்தை எடுத்த கேப்டன் விராட் கோலி எந்த கட்டத்திலும் டிரா பற்றி யோசிக்கக் கூட இல்லை என்று உறுதியுடன் கூறினார்.

"எனக்கு ஒரே சிந்தனைதான், நான் ஒற்றைப் பரிமாணத்தில் யோசித்தேன். எனக்கு அதுதான் தெரியும். நேற்று அணியினரிடத்தில் கூறினேன், அவர்கள் என்ன இலக்கை நமக்கு நிர்ணயித்தாலும் சரி, நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், நாம் வெற்றி பெற ஆட வேண்டும் என்று கூறினேன். நான் அனைவரிடமும் இதைத்தான் கூறினேன். ஏனெனில் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவதைப் பற்றி யோசிப்பது அவசியம் என்று நினைத்தேன். ஏனெனில் எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்க அதுதான் ஒரே தீர்வு.

டிராவுக்கு ஆடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை, அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தால் அவர்கள் சடக்கென தங்களது உத்தியை மாற்றி ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு வந்தால் பிறகு நாம் அங்கு நிற்க முடியாது.

 

அவர்கள் என்ன பந்து வீசினாலும் அதனை அடித்து நொறுக்குவதற்கான திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம். இப்படித்தான் நேற்று பேசினோம், அதற்கு வீரர்கள் சிறப்பாக வினையாற்றினார்கள். நாங்கள் விளையாடிய விதம் பற்றி எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இலக்கிற்கு சற்று குறைந்து போனோம், ஆனால் சரியான அணுகுமுறை இருந்த பட்சத்தில் அது ஒரு பெரிய விஷயமல்ல. நாம் வெற்றிக்கு தொலைவில் இல்லை.

நானும் முரளி விஜய்யும் இன்னும் கூடுதலாக 40 ரன்களை சேர்த்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது இதுதானே. ஆனால் ஆட்டத்தின் எந்த நிலையிலும் டிரா பற்றி நான் யோசிக்கவேயில்லை. நேதன் லயனுக்கு பந்து சதுரமாகத் திரும்பியது, அந்த நிலையில் அவரை தொடர்ந்து தடுத்தாடிக் கொண்டேயிருந்தால் அவுட் ஆவதில்தான் போய் முடியும் என்று எனக்கு தெரிந்தது. அதனால் நாம் நெருக்கடிக்கு ஆளாவதை விட அவரை நெருக்கடிக்கு ஆளாக்க முடிவு செய்தேன். அவருக்கு எளிதான விக்கெட்டை கொடுக்க விரும்பவில்லை.

 

விஜய் ஆட்டமிழந்த பிறகு கூட நான் ரஹானே, ரோஹித் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்தேன். இவர்களில் யாரேனும் ஒருவர் என்னுடன் நின்றிருந்தால் இலக்கு என்பது ஒன்றுமல்ல. சஹா ஆட்டமிழந்த பிறகு கரன் சர்மா இறங்கிய போது கூட நான் அவரிடம் எனக்கு ஸ்ட்ரைக்கைக் கொடு என்றே கூறினேன். அவர் அப்படி இப்படி நின்றிருந்தால் போதும் வெற்றி நிச்சயம் என்றே ஆடினேன். எனக்கு எந்த வித வருத்தமுமில்லை. அனைவரும் சிறப்பாக கடைசி நாளில் ஆடினர்.

 

நான் அவுட் ஆன பந்து: அந்தப் பந்தை ஸ்கொயர்லெக் திசையில் ஒரு இடத்தில் பந்து பிட்ச் ஆகி செல்லுமாறு அடிக்கவே நினைத்தேன், ஆனால் இது பற்றியும் எனக்கு வருத்தமில்லை. வேண்டுமானால் பின்னால் ஒருநாள் அந்த ஷாட்டை ஆடியிருக்க வேண்டாமோ என்று எனக்கு தோன்றலாம். ஆனால் நான் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்தே வருவதை நினைத்துக் கவலைப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

 

நம் நாட்டிற்காக ஆடவேண்டும் என்று நினைத்து இங்கு வந்து விட்டால், இங்கு கடப்பாடுடனும், நேசத்துடனும் ஆட்டத்தை விளையாட வேண்டும். இதனால்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது எனக்கு பிடித்தமானது. நான் எதனை நம்புகிறேனோ அந்த வழியில் அவர்கள் விளையாடுகின்றனர். எப்போதும் போராட்டத்தையும், சவாலையும் அளிப்பதே கிரிக்கெட்.”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6688980.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளில் இந்த இந்திய அணியை ஆல்அவுட் ஆக்க முடியாது .

இந்த இந்திய அணியை ஒரேநாளில் ஆல் அவுட் ஆக்கமுடியும் என நிருபித்த ஆஸி அணிக்கு வாழ்த்துகள்!
Link to comment
Share on other sites

காலை எழுந்து இந்த முடிவை பார்க்க ஆச்சரியமாக இருந்தது ,பின்னர் கோலியின் பேட்டியை படிக்க ஓரளவு நியாயமாகவும் இருந்தது .இப்படியா நேரங்களில் ட்ரோ என்ற ஒன்றை நினைத்து விளையாடுபவர்கள் மத்தியில் கோலி வித்தியாசமாகத்தான் படுகின்றார்கள் .

இந்தியா தோற்றாலும் கோலிக்கு எனது வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கோலியின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படியான அணுகுமுறைதான் டெஸ்ட் போட்டிகளை சுவாரிசியமாக்கும். டோனியைக் கழற்றிவிட்டு கோலியையே கப்டனாகத் தொடரலாம். இது இந்தியாவுக்கு நல்லதொரு அடையாளம்.

Link to comment
Share on other sites

முரளி விஜயின் இரண்டாவது இனிங்ஸ் ஆட்டத்தை யூடியூபில் கண்டேன். அசத்தலான நேர நேர்த்தியுடன் ஆடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது போட்டியில் இந்தியா படுதோல்வி அடையும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த கபா மைதானத்தில் இந்தியாவுக்கு அதிக சவால் இருக்கிறது.

Link to comment
Share on other sites

விராட் கோலி இன்னிங்ஸ்: கிளார்க், இயன் சாப்பல் புகழாரம்
 

விராட் கோலியின் அடிலெய்ட் டெஸ்ட் சதங்களைப் பற்றி மைக்கேல் கிளார்க் புகழும்போது சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ஏறக்குறைய சாத்தியமில்லாத வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்ற விராட் கோலி பற்றி மைக்கேல் கிளார்க் புகழாரம் சூட்டியுள்ளார்.

காயத்தினால், பெவிலியனிலிருந்து கோலியின் சதத்தை பார்வையிட்ட மைக்கேல் கிளார்க், கூறும்போது, “தொலைக்காட்சியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தை எப்போதும் பார்த்து ரசிப்பேன்.

 

ஆனால், மேட்சில் அவரை அவுட் செய்யவும், அவரது மனத்தைக் கலைக்கவும் எப்போதும் நேரத்தைச் செலவிட்டுள்ளேன். இப்போது கோலி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். ஆனால் இந்த இடத்தில் ஒன்றை கூறிவிட வேண்டும், என்ன ஒரு அருமையான, நம்பமுடியாத இன்னிங்ஸை ஆடிவிட்டார் விராட் கோலி இன்று. அதனை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.

பந்துகள் கடுமையாக ஸ்பின் ஆகிக் கொண்டிருந்தது, இயல்பாகவே நிறைய சீரற்ற தன்மை பிட்சில் இருந்தது, சில பந்துகள் எழும்பின, சிலது தாழ்வாக வந்தது, நான் நினைக்கிறேன் இன்று விராட் தனது ‘கிளாஸ்’என்ன என்பதைக் காண்பித்து விட்டார் என்று. அவருக்கு எனது முழுமையான பாராட்டுக்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரை வீழ்த்தும் விதத்தை இன்று கண்டுபிடித்துள்ளோம். அவர் அவுட் ஆன அந்த ஒரு பந்தைத்தான் அவர் இன்று தவறாக ஆடினார் என்று கூறலாம்.” என்றார் மைக்கேல் கிளார்க்.

 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறும்போது, "கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் சதம் அடித்துள்ளார். ஒரு விதத்தில் எனது தம்பி கிரெக் சாப்பல் 1975-76-இல் இதனைச் செய்ததை எனக்கு இன்று விராட் கோலி நினைவுபடுத்தினார். இது வெகுவாகப் பாராட்டப்பட வேண்டிய ஒரு ஆட்டம், அதுவும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது ஒரு மகத்தான இன்னிங்ஸ் இது, குறிப்பாக விக்கெட்டுகள் எதிர்முனையில் விழுந்து கொண்டிருக்கும் போதும் தொடர்ந்து வெற்றி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு ஆடினார்.

மேலும், எவ்வளவு கேப்டன்கள் அவுட் ஆன போது அவர் ஏமாற்றமடைந்த அளவுக்கு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்திருப்பார்கள்? ஆனால், இந்த இந்திய அணியிடம் நிறைய உறுதி இருக்கிறது என்பதையும், கடந்தமுறை சரணாகதி அடைந்தது போல் இம்முறை இல்லை என்பதை அவர் ஆஸ்திரேலிய அணிக்குக் காட்டியுள்ளார்.” என்றார் இயன் சாப்பல்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6689296.ece

Link to comment
Share on other sites

அடிலெய்ட் டெஸ்ட்: கடைசி நாள் ஆட்டத்தில் சொதப்பிய நடுவர்கள்
 

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்கள் அபாரமாக செயல்பட்ட நடுவர்கள் கடைசி நாள் ஆட்ட பரபரப்பில் அபத்தமான தவறுகளை இழைத்தனர்.

இந்திய தோல்விக்கு அது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. ஒருவேளை ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களுக்கு எதிரான சில தீர்ப்புகளை அவர்களும் சுட்டிகாட்டியிருக்க கூடும்.

364 ரன்கள் இலக்கை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் நடுவர் அதிர்ச்சி அளித்தார். ஷிகர் தவன், மிட்செல் ஜான்சன் பந்தில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

 

ஆனால், அந்த பவுன்சர் தவனின் தோள்பட்டையில் பட்டுச் சென்றது தெளிவாகத் தெரிந்தது. இயன் கோல்டு இந்த மகாதவற்றைச் செய்தார்.

பிறகு முரளி விஜய் ஒரு பந்தை தவறாகக் கணித்து ஆடாமல் விட அது ஸ்டம்புக்கு நேராக கால்காப்பைத் தாக்கியது, நேதன் லயன், ஆஸி.வீரர்கள் கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக முறையீடு செய்தனர். ஆனால் நாட் அவுட் என்றார். அது சரியான அவுட் என்பதாகவே தெரிந்தது. இது நடந்த போது விஜய் 24 ரன்களில் இருந்தார்.

இதே போல் மீண்டும் முரளி விஜய் அவர் 64 ரன்களில் இருந்த போது மற்றொரு நெருக்கமான அவுட் கொடுக்கப்படவில்லை. இதுவும் ரீப்ளேயில் அவுட் என்பதாகவே தெரிந்தது.

பிறகு கோலி 85 ரன்களில் இருந்த போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே நன்றாக பிட்ச் ஆகி கடுமையாக திரும்பிய நேதன் லயன் பந்து சற்றும் எதிர்பாராமல் கணுக்காலுக்குக் கீழே வந்தது கோலியில் பேடைத் தாக்கியது. இதையும் அவுட் என்று கிராபிக்ஸ் காண்பித்தது.

 

இந்த அவுட் எல்லாம் கூட எல்.பி.டபிள்யூ தீர்ப்பு பற்றியது. இதில் கணிப்புகள் முன்பின் இருக்கலாம். டி.ஆர்.எஸ்.-ஐ இதில் நம்ப முடியாமல் போகலாம்.

ஆனால், கடைசியில் முக்கியமான கட்டத்தில் ரஹானேயிற்கு பேட்டில் பட்டதாக முடிவு செய்து கொடுத்த தீர்ப்பு மிக அபத்தம், இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பே பறிபோனது. பந்துக்கும் பேட்டிற்கும் சம்பந்தமே இல்லை.

நடுவர் அபத்தங்கள் மீண்டும் ஒரு இந்தியத் தோல்வியில்தான் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6689175.ece

 

Link to comment
Share on other sites

இனி நான் விளையாட முடியாமல் கூட போகலாம்: காயமடைந்த கிளார்க்
 

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் பாதியிலேயே காயம் காரணமாக மைக்கேல் கிளார்க் வெளியேறினார். அவரது காயம் அவர் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனால், அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். நடுவில் மருத்துவமனைக்கு ஸ்கேனிற்காகச் சென்று திரும்பிய கிளார்க் பெவிலியனில் அமர்ந்து ஆஸ்திரேலிய வெற்றியையும், விராட் கோலி, முரளி விஜய்யின் அபார பேட்டிங்கையும் பார்த்து மகிழ்ந்தார்.

 

"ஸ்கேன்களை நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். எத்தனை நாட்களுக்கு நான் விளையாட முடியாது என்பது உறுதியாகத் தெரியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் பயிற்சி ஆட்டத்திற்கு இன்னும் 8 வாரங்கள் உள்ளன. அதற்கு முன்பு முத்தரப்பு போட்டியில் விளையாட விரும்புகிறேன், உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன். ஆனால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உலகக் கோப்பையில் விளையாடலாம், விளையாட முடியாமல் போகலாம், ஏன் இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாமலேயே கூட போகலாம். அப்படி விட்டுவிட மாட்டேன், ஆனாலும் நான் எதார்த்தமாக பேச வேண்டுமல்லவா?

 

இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. காயத்தால் வெளியேறிய பிறகு மீண்டும் வந்து ஆடியது பற்றியும் எனக்கு வருத்தமில்லை.

நான் மருத்துவ நிபுணர்களை நம்பியிருக்கிறேன், இந்த கோடைகால கிரிக்கெட் தொடரில் மீண்டும் விளையாடுவேன் என்று அவர்களை வைத்து என்னால் நம்பிக்கை கொள்ள முடிகிறது” என்றார் கிளார்க்.

அவருக்குப் பதிலாக பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிக்கு ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article6689076.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.