Jump to content

கனவுகளைக் கைப்பற்றுவோம்...


Recommended Posts

கனவுகளைக் கைப்பற்றுவோம்
 
gallerye_185717245_1071759.jpg
 
ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
 
ஹா... ஹா... இந்தத் தொழில் முனைவுத் தொடரில் நுழைவதற்கு முன் மனசை ஃபிரெஷ்சாக வைத்துக் கொள்ள முதலில் ஒரு குட்டிக் கதை. ஓஷோவின் கதை இது. படிச்சு சிரிச்சுட்டு அப்புறம் விஷயத்துக்குப் போவோம். ஓகே.
ஒரு சாமியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது.
 
"மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் சாமியார்.
 
"சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் படைப்பதற்காக ஆணின் உடம்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்தார். அதுவே முதல் செயல். எனது தொழில்தான் மிகப் பழமையான தொழில். கடவுள் பெண்ணைப் படைப்பதற்கு முன்பு உலகில் வெறும் கலவரம் மட்டும்தான் இருந்தது!" என்றார் டாக்டர்.
"சரியாகச் சொன்னீர்கள் டாக்டர்! உங்கள் வாதப்படி எனது தொழில்தான் பழமையான தொழில்" என்றார் அரசியல்வாதி.
"எப்படி?"
 
"கடவுளின் அறுவை சிகிச்சைக்கு முன்பு உலகில் வெறும் கலவரம்தான் இருந்தது என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அந்தக் கலவரத்தை என்னைப் போன்ற அரசியல்வாதி தவிர, வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்? எனவே, என் தொழில்தான் மிகப் பழமையானது." என்றார் அரசியல்வாதி. இனி ஆரம்பிக்கலாமா?
தேவை குடுகுடுப்பைக்காரர் மனோபாவம் : "இந்த வீட்டு அய்யாவிற்கும், அம்மாவிற்கும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது...'' என்று குடுகுடுப்பைக்காரர் குறிசொல்வதைக் கேட்டிருப்போம். நல்லதை சொல்வதற்கும் நாலு பேர் வேண்டும். நல்லதை நினைத்துக் கொண்டே இருந்தால் அது நிச்சயம் நன்மையில்தான் முடியும். நம்பிக்கை இழந்தவர்களுக்கு குடுகுடுப்பைக்காரர் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள் உற்சாகத்தைத் தருகிறது.
 
உற்சாகத்துடன் ஒரு செயலில் இறங்கும்போது, அந்தச் செயல் இமாலய வெற்றியாகிறது. எனவே உற்சாகம் முக்கியம். நாம் மட்டுமே உற்சாகமாய் இருந்து நம்மைச் சுற்றியிருப்பவர்கள் உற்சாகக் குறைவாய் அழுது வடிந்து கொண்டிருந்தால் நம் உற்சாகம் வடிந்து முடிந்து விடும். எனவே நம்மைச் சுற்றியிருப்பவர்களும் உற்சாகமாய் இருக்க வேண்டும். அவர்களின் உற்சாகமும் நம்முடன் சேர்ந்து கொள்ளும்போது, செயல்கள் வேகமாக நடக்கும். வெற்றியும் விரைவாகும். எளிதும் ஆகும். எனவே நாமும் குடுகுடுப்பைக்காரரின் மனோபாவத்துடன் நாம் இருக்க வேண்டும்.
 
நம்மைச் சுற்றியிருப்பவர்களை, சார்ந்திருப்பவர்களிடம் "எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப்படாதீங்க...' என்று நம்பிக்கையான வார்த்தைகள் கூற வேண்டும். நீங்கள் அவர்களின் மீது காட்டும் அன்பு இரண்டு மடங்காக உங்களிடம் அவர்களால் திருப்பிக் கொடுக்கப்படும். அன்புக் கணக்கில் வட்டி விகிதம் வங்கிகள் கொடுப்பதையெல்லாம் விட அதிகம். எனவே தொழில் சார்ந்த இடங்களில் அனைவரிடமும் அன்பை முதலீடு செய்வோம். ஒருவரிடம் நாம் செலுத்தும் அன்பும், அக்கறையும் வட்டியும் முதலுமாய்த் திரும்ப வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பிஸினஸ் பற்றிச் சொல்லப் போவதாய்ச் சொல்லிவிட்டு, அன்பு பற்றி பாடம் எடுப்பதாய் நினைக்காதீர்கள். பிஸினசுக்கும் இதற்கும் தொடர்புண்டு.
 
எதிரிலிருப்பவரிடம் அது வாடிக்கையாளராய் இருந்தாலும், ஊழியராய் இருந்தாலும் நாம் காட்டும் அன்பும், அக்கறையும் நம் பிஸினஸை பன்மடங்கு மேலே கொண்டு செல்வதற்கான படிக்கட்டுகள். இதனைத்தான் மக்கள் தொடர்பு என்பார்கள். மக்களிடம் எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கிப் பழகுகிறோமோ அதே அளவு அவர்களது இதயங்களில் எளிதாக நுழைந்து விடமுடியும்.
 
"எங்க முதலாளி, தங்க முதலாளி...' என்று ஓர் ஊழியர் உங்கள் அனபுக்கு அடிமையாகி விட்டால், கூடுதல் சம்பளம் கொடுத்தாலும் வேறு நிறுவனத்துக்கு அவர் மாற மாட்டார். அதேபோல் ஒரு வாடிக்கையாளருக்கும் உங்கள் அக்கறையும், சேவையும் பிடித்துவிட்டால், வெளியில் குறைந்த விலையில் ஒரு பொருள் கிடைத்தாலும் கூட உங்கள் கடையை விட்டு விலக மாட்டார். எனவே, அனைவரிடமும் சகஜமாகப் பழகுங்கள். நலம் விசாரியுங்கள். நேர்மறைச் சிந்தனையை விதைக்கும் வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். எப்போதும் முகத்தில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவதுடன் உங்களது பணி அழுத்தத்திலிருந்தும் விடுதலை அளிக்கும்.
 
திட்டமிட்டு உழைப்பைக் கொடு: நினைவில் கொள்ளுங்கள், வெற்றி ஒரேநாளில் வந்து விடாது. ரோமாபுரி நகரம் ஒரே நாளிலேயே கட்டமைக்கப்பட்டு விடவில்லை என்பது ஆங்கில பழமொழி. அது படிப்படியாக திட்டமிடப்பட்டு பலமான அஸ்திவாரம், உறுதியான சுவர்கள், அழகான உள்ளலங்காரம் எல்லாம் அமைக்கப்பட்டு கடின உழைப்பு, முயற்சி இவற்றுக்கும் மேலாக பல்லாயிரம் இதயங்களின் கனவுகளின் பலனாய் கூட்டு முயற்சியாக கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. எனவே நாமும் இமாலய வெற்றியைப் பெற வேண்டுமென்றால் அந்த ரோமாபுரி போல படிப்படியாகத் திட்டமிட்டு நம் செய்நேர்த்தியின் மூலம் அது படிப்படியாகத்தான் நடந்தேறும்.
 
நம் தொழிலுக்குத் தேவை முதலில் ஒரு கனவு. அதை நிறைவேற்றுவதற்கான திட்டம். ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். "இதற்கு நாம் தகுதியானவர் தானா?' அது நம் மனோபாவத்தை உரசிப் பார்த்து உறுதி செய்து கொள்வது. எறும்புக்கும் தீங்கு செய்தறியாத மனதினர் வேட்டைத் தொழிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அப்படித் தேர்ந்தெடுத்தால் ஒரு குருவியைக் கூட வேட்டையாட முடியாது. நமக்கு எது சரிவரும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நமது மனோபாவம் எது என்பதை உணர வேண்டும்.
 
உடனே தொடங்கு: தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அதை உடனே செய்வது நலம், ஒரு எண்ணம் பசுமையாக எழும்பியிருக்கும் பொழுது தான், அதைச் செயல்படுத்துவதற்கு ஏதுவான சூழ்நிலைகளும் கண் முன் நிற்கும். அதை செயல்படுத்துவதால் ஏற்படும் பல நன்மைகளையும் நாம் உணர முடியும். ஆரம்பத்தில் அதைப் பற்றி ஏற்படும் ஆர்வமும், ஆற்றலும் பன்மடங்காக ஒளி வீசும். அந்த எண்ணங்களை செயல்படுத்தாமல் சுமை போல மனதில் வைத்துக் கொண்டிருந்தால், புதிய எண்ணங்கள் உதிப்பதற்கே முட்டுக்கட்டை கொடுத்ததுபோல் ஆகிவிடும்.
 
முதலில் நம்மை பற்றி அறிந்து கொண்டால்தான் உலகத்தில் போராட முடியும். நம்மைப் பற்றிய புரிதல்தான் முதலில் தேவை. நம்மை ஓர் ஆற்றல் மிக்க மனிதனாக மாற்றி நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். எப்படி?
 
குயவர் பானை செய்யும் முன் மண்ணை பரிசோதிக்கின்றார்,
 
சிற்பி சிலை வடிக்கும் முன் பாறாங்கல்லைச் சோதிக்கின்றார்.
 
மிக சிறிய எறும்பு தன்னை விட அதிக பளுவான உணவு பொருளை தன வாயால் எடுத்து செல்வதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
 
ஆற்றலைக் காட்டிலும் ஆர்வமே வெற்றிக்கு காரணம் என்பது அனுபவத்தின் படிப்பினை. உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சி, தோல்வியை கண்டு அஞ்சாத நெஞ்சம் இவை இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு தேவை.
"சந்தர்ப்பங்கள் வரும் என்று காத்திருப்பவர்களை விட, சந்தர்ப்பங்களைத் தேடிப் பெறுபவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்' என்கிறார் பெர்னாட்ஷா.
ஆகவே, என் அன்பின் தோழமைகளே... நாம் சாதிக்கப் பிறந்திருக்கின்றோம், சாதிப்போம் வாருங்கள்...
காணுவோம் கனவு...
- ரோஸலின்
gallerye_184354839_1071759.jpg
 
 
Link to comment
Share on other sites

"கனவுகளை கைப்பற்றுவோம்'- 2

 

வணக்கம் அன்பு தோழமைகளே,

 
 
 
எல்லோரும் எப்படி இருக்கீங்க...? கடந்த தொடரை படித்திருப்பீர்கள் அதில் தொழில் தொடங்குவதற்கு முன் சுய பரிசேசாதனை மேற்கொள்வது குறித்து பார்த்தோம்.... "உறங்கும்போது காண்பதல்ல கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதே கனவு...' என்றார் இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாம். கனவு கண்டு விட்டால் மட்டும் போதுமா? அதனைக் கைப்பற்றி வெற்றிச் சிகரங்களில் நம் சாம்ராஜ்யக் கொடியைப் பறக்க விடவேண்டாமா? அதற்கான வழிமுறை என்னென்ன? சூட்சுமங்கள் என்னென்ன? திட்டங்கள் என்னென்ன? அவற்றைப் பற்றிதான் இத் தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். கற்றுக் கொண்டதைக் கற்பிப்பதே நாம் கற்றுக் கொண்டதை அர்த்தமுள்ளதாக்கும். எனவே நான் கற்றுக் கொண்டதை, கற்றுக் கொண்டதன் மூலம் என் கனவுகளைக் கைப்பற்றிய அனுபவங்களைப் பற்றி, "கனவுகளை கைப்பற்றுவோம்' என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
 
கடவுள் கொடுத்த அற்புதமான மணி துளிகளை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம்..கொஞ்சம் சிந்தித்து பார்த்தால், பாதி நேரம் வீணாக பொழுது போக்குவதிலும், தூக்கத்திலும் கழித்து விடுகின்றோம்...நமக்கு தேவையான ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் கணவரை கேட்க வேண்டிய சூழ்நிலை, முன்பெல்லாம் காய்கறி வாங்க கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து நகைகள், சேலைகள் வாங்கிய காலம் உண்டு, இப்போது அப்படியா இருக்கு? கணவர் கொடுக்கும் பணம் போதாமல் கடைகளில் கடன் சொல்லி வரவேண்டிய சூழ்நிலை,. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் நினைத்தை வாங்கவும், நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் பொருளாதாரம் இன்றியமையாதது,.
 
ஒவ்வொரு பெண்ணின் கையிலும் பொருளாதார சுதந்திரம் இருந்தாலே பெண் விடுதலை அடைந்தது போல் தான். ஆக எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. "படிச்சிருந்தாலாவது வேலைக்குப் போகலாம்' எனப் படிக்காத பெண்களும், "படிச்சிருந்து என்ன செய்ய... வீட்டை விட்டு வேலைக் குப் போக அனுமதியில்லை' எனப் படித்த பெண்களும், "படிப்பும் இருக்கு. ஏதாவது தொழில் செய்யணும்கிற துடிப்பும் இருக்கு. வழிதான் தெரியலை' எனப் புலம்புகிற பெண்களும் நம்மிடையே பரவலாக உண்டு
 
ஒரு வண்ணத்துப்பூச்சி ஆக வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலில் ஒரு கம்பளிப் புழு தன் இறக்கைகளை வளர்த்துக் கொள்வதற்காக தன்னை சுற்றி ஒரு கூட்டை நெய்து கொள்கின்றது. நீங்கள் பொருளாதாரம் ஈட்ட வேண்டுமென்றால் தன்னம்பிக்கை, தொழிற் பயிற்சிகள், விடா முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் மனசுக்குள் வைராக்கியத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்..
 
அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்காது.
 
எந்த ஒரு விஷயத்திலும் அடிப்படையான ஆர்வம் என்று ஒன்று இருக்க வேண்டும் . அதோடு மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க தொடங்கினால் நமக்கு தெரியாத பல தகவல்களை சுலபமாக அறிந்து கொள்ளலாம். நம் கண்களையும், காதுகளையும் எப்போதும் திறந்து வைத்திருந்தால் புது புது வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்.
 
நம்மில் பெரும்பாலோர் நம்மை பற்றி சுய மதிப்பீடு செய்வதில்லை , அப்படியே செய்தாலும் ஒன்று நம்மைப் பற்றி மிக தாழ்வான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொள்கிறோம். அல்லது மிதமிஞ்சிய அளவுக்கு நம் திறமையின் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஈடு எவரும் இல்லை என்று கூறிக்கொள்கிறோம்.
 
இந்த இரண்டு நிலையையும் எடுக்காமல் நடுநிலையோடு நம்மை நாமே சுய விமர்சனம் செய்து,நமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளைத் தூசித்தட்டி வெளிக்கொணர்ந்து, உண்மையான உழைப்பை முதலீடாக்கினால் வெற்றி நிச்சயம். நம் திறமையை இனம் காண வேண்டியது செல்வத்திலும் வெற்றியிலும் அல்ல - நம்முடைய தளராத உழைப்பிலும், முயற்சியிலும்..!
 
தொழில் செய்யும் பலர் இன்றும் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவதற்கு காரணம் விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பு. பெரும் வெற்றிகளைக் கண்டவர்கள் நடுவில் திடீரென்று நஷ்டமாகிக் காணாமல் போவதையும் காண்கிறோம். காரணம், தம் உழைப்பிலும் முயற்சியிலும் ஆர்வத்திலும் சமச்சீரான தொய்வில்லாத நிலையை அவர்கள் மேற்கொள்ளவில்லை. எனவே ஒன்றைத் தொடங்கிவிட்டால் அதில் கடைசிவரை சிறிது குறையாத அக்கறையும் ஆர்வமும் அவசியம்.
 
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விட சிறந்த உணவை ஒரு போதும் வாழ்வில் உண்ண முடியாது. சொந்த உழைப்பில் உண்ணும் பழைய சோறு கூட பஞ்சாமிர்தமாய் இனிக்கும் என்று கூறியுள்ளார் ஒரு கோடீஸ்வரத் தொழிலதிபர்.
 
எனவே நாம் பொருளாதாரம் ஈட்ட, முதலில் என்ன தொழில் செய்வது, அதற்கு விற்பனை வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன , அதற்கு தேவையான பயிற்சிகள் குறித்து அடுத்த வாரம் இந்தக் "கனவுகளை கைப்பற்றுவோம்...' பெண்கள் சுய முன்னேற்ற வாழ்வாதார தொடர் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்..
 
நான் ரெடி... அப்ப நீங்க ரெடியா?
 
gallerye_200024200_1089050.jpg
 
- ரோஸலின்
 
Link to comment
Share on other sites

"கனவுகளை கைப்பற்றுவோம்'- 3

 

'எழ வேண்டும் என்று

ஆசைதான்
ஒருவேளை
தலை வானத்தில் இடித்து விட்டால்?
எதற்கு வம்பு
படுத்திருப்பதே பாதுகாப்பு...
இது ஒரு புதுக் கவிதை...'
 
-இன்று நம்மவர்களில் சிலரின் மன இயல்பைக் காட்டிடும் ஒரு உரைகல் போல இந்தக் கவிதை உள்ளது. ஒரு செயலைச் செய்யாமல் வீணே இருப்பதற்கு சொல்லக்கூடிய பொய்யான காரணங்கள் பல. அவற்றை சோம்பேறித்தனம், அச்சம், முயற்சியின்மை, தயக்கம், தன்னம்பிக்கையின்மை என்று பெரிய பட்டியலே இடலாம். இது ஒருபுறம் இருக்க...
 
தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஐயப்பாடுகள்... என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்று கூட தெரியாத நிலை... நம்மைச் சுற்றிப் பல தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அதை இனம் காண முடியாத தன்மை...
 
முதலில் நாம் தொழிலினை தேர்ந்தெடுக்கும் பொழுது, நாம் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கிடைக்க கூடிய மூலப்பொருட்களைக் கொண்ட தொழிலைத் தேர்ந்தெடுப்பது வெற்றியை எளிதாக்கும். மேலும் தேர்ந்தெடுக்கும் தொழில் அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையுள்ளதா? அல்லது வெளியிடங்களுக்குப் போய் மார்க்கெட்டிங் செய்ய வேண்டுமா? என்பதையும் அறிந்து கொள்வது நல்லது.
 
மனதில் பதித்துக கொள்ள வேண்டியவை
 
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..
 
1.கிடைக்க கூடிய வளங்கள்.
2.மூலப்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள்
3.போட்டியாளர்கள் இருக்கிறார்களா? அவர்களிடம் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா?
4.உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை வாய்ப்பு.
 
இதற்கு முதலில் தொழில் வகைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்...பொதுவாக சுய தொழில்களை 4 வகையாக பிரிக்கலாம்..
1. நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்.
2. விவசாயம் சாராத தொழில்கள்,
3. கைத்தொழில், கைவினைப் பொருட்கள் மற்றும் நெசவுத் தொழில்
4, சேவைத் தொழில்கள் போன்றவையாகும்
 
முதலில் நாம் இன்று நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்து காண்போம்..
நிலம் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிக்க நல்ல வாய்ப்புள்ளது..
 
உதாரணமாக சில தொழில்களை பார்க்கலாம்..
 
பூக்கள், காய்கறிகள், பழ வகைகள் பயிரிட்டு அதிக வருவாய் பெறலாம்..
 
விவசாயத்துடனோ, தனியாகவோ கால்நடை சார்ந்த தொழில்களான கறவை மாடுகள், நாட்டு கோழி வளர்ப்பு, கோழிப்பண்ணை, பண்ணை முறையில் ஆடுகள் வளர்ப்பு, காளான் வளர்த்தல் போன்றவை செய்தல்..
 
கிராம குளங்கள் ஊரணிகளில் மீன் வளர்ப்பு
 
பட்டுப் பூச்சி வளர்த்தல்...
 
உயர் தொழில் நுட்பத்துடன் விதை உற்பத்தி , மூலிகை செடி வளர்ப்பு, இயற்கை விவசாயத்தில் காய்கறி உற்பத்தி
 
உலர் மலர்கள் சேகரித்தல், பதப்படுத்தல்
 
இயற்கை உரம் தயாரித்தல், கடல் பாசி வளர்த்தல்,
 
விவசாயம் சார்ந்த தொழில்கள்:
 
உணவு பதப்படுத்துதல் ; அரிசி, சேமியா, உடனடி இட்லி , தோசை மாவு , சிப்ஸ் தயாரித்தல், உலர்ந்த காய்கறிகள், வெங்காயம் போன்ற பல உணவு பொருட்கள் பதப்படுத்தி விற்பனை செய்தல்...
 
பழங்கள், காய்கறியிலிருந்து ஊறுகாய் , பழச்சாறு , ஜாம் , ஜெல்லி போன்ற பதப்படுத்தப்பட்ட பழப் பொருட்கள் தயாரித்தல்
 
குழந்தைகள் உணவு, கேழ்வரகு மாவு, ராகி மால்ட் தயாரித்தல்..
 
பருப்பு பதப்படுத்துதல் , எண்ணெய் எடுத்தல், புளி பதப்படுத்துதல், போன்ற தொழில்கள்..
 
இயற்கை சாயம் எடுத்தல், தைலம் எடுத்தல், மூலிகை செடியிலிருந்து பவுடர், எண்ணெய் மற்றும் மாத்திரைகள்,மிட்டாய்கள் , கடலை பர்பிகள், பனைவெல்லம் போன்றவை தயாரித்தல்
 
மசாலா பொடி , பருப்பு பவுடர் , வற்றல் அப்பளம், இட்லி, உலர் தேங்காய் , பால் பதப்படுத்துதல், இனிப்புகள், முறுக்கு போன்ற பொருட்கள் தயாரித்தல்
 
கீரைகள் , காய்கறிகள், வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து கட் செய்து பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்தல்..
 
நில அடிப்படையிலான தொழில்கள் குறித்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளுக்கு இந்த துறைகளை அணுகலாம்.. நபார்டு, விவசாயக் கல்லூரி, கால்நடைவளர்ப்பு மற்றும் மீன் பிடித்துறை..
விவசாயம் சார்ந்த தொழில்கள் - உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு குடிசை தொழில் சான்றிதழ், கடன் உதவி மற்றும் தொழில் ஆலோசனைகளுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்...
விவசாயம் சாராத தொழில்கள்...
 
கிராம மற்றும் காதி தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளை சார்ந்த சில தொழில்கள் இதில் அடங்கும்..
 
உதாரணமாக…
 
1. சோப்பு , சோப்புத்தூள்,ஷாம்பூ, பினாயில், கிளினிக் பவுடர் .
2. அகர்பத்தி, வாசனை பவுடர்கள் , கொசுவர்த்தி தயாரித்தல்,
3. மெழுகுவர்த்தி, சாக்பீஸ் தயாரித்தல்,
4, பற்பசை, ஹேர் ஆயில் , பற்பொடி தயாரித்தல்,
5, பேனா மை , பென்சில்கள் தயாரித்தல்,
6. ஆயத்த ஆடைகள் தயாரித்தல்
7. கட்டிடம் கட்ட தேவையான சிமென்ட் பிளாக் போன்றவை...
சொந்தத் தொழில்கள் துவங்க விரும்புவோரின் தொடர்புக்கு...
 
· District Industries Centre
Thiru Vi Ka Industrial Estate (SIDCO),
Guindy, Chennai - 600 032.
Ph: 044 - 28549753
Email: dicchn@tn.nic.in
 
 
· NABARD - 48, Mahatma Gandhi Road
Post Box No. 6074
Nungambakkam Chennai - 600 034
Tamil Nadu Phone No. : 04428276088
Email : chennai@nabard.org
 
பின் வரும் நாட்களில் ஒவ்வொரு துறை குறித்தும் , அதன் பயன்கள் குறித்தும் விரிவாக சொல்கின்றேன்...
 
அடுத்த வாரம் கைத்தொழில் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் நெசவுத் தொழில்கள் குறித்து காண்போம்...
 
- ரோஸலின்
 

gallerye_080132872_1094815.jpg

Link to comment
Share on other sites

கனவுகளை கைப்பற்றுவோம்- 4

Tamil_News_large_109946520141025164712.j

 

அன்பு தோழமைகளே நலமா? சென்ற வாரம் நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், விவசாயம் சாராத தொழில்கள் குறித்து பார்தோம்...இந்த வாரம் கைத்தொழில், கைவினைப் பொருட்கள் நெசவுத் தொழில், மற்றும் சேவைத் தொழில்கள் குறித்து பார்போம்..
 
தச்சர்கள், கொல்லர்கள், மண்பாண்டம், நெசவாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் என பாரம்பரியமாக இத்தொழில்களை கைவினைஞர்கள் செய்து வந்தனர்..தற்பொழுது பெண்களும் இது போன்ற கைத்தொழில்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்..எனினும் இது போன்ற தொழில்கள் நீடித்து நிலைத்த பயனை தர வேண்டுமெனில் காலத்திற்கு ஏற்ப தரமான தொழில் நுட்பத்துடன் மக்கள் விரும்பி வாங்கும் வகையில் பலவிதமான பொருட்களை புதிய வடிவமைப்புடன் தயாரிப்பது அவசியம்..
கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருள் , உற்பத்தி தொழில்களுக்கு சில உதாரணங்களை இங்கு பார்க்கலாம்...
 
மண்பாண்ட தொழில்கள்: மண் பாண்டங்கள் , மண் தொட்டிகள் செய்தல், மண் பொம்மைகள், டெரக்கோட்டா நகைகள் செய்தல்..
 
இரும்பு தொழில்கள்: பாத்திரங்கள், விவசாயக் கருவிகள் செய்தல்
 
தச்சு தொழில் : மரச் சாமான்கள், பொம்மைகள், மரசிற்ப வேலைப்பாடுகள் , பிரம்பு மூங்கில் பொருட்களாகும்..
 
நெசவுத்தொழில்: பட்டு , காதி , பருத்தி ஆடைகள், பருத்தி உள்ளாடைகள்
நகை தொழில் தங்க நகைகள் தயாரித்தல், பாலிஷ் போடுதல், கவரிங் நகை தயாரித்தல்,
கயிறு திரித்தல், தென்னை நார் பொருட்கள் , வாழை நார் பொருட்கள் மூலம் நகைகள், கூடைகள் , பைகள் தயாரித்தல்..
 
தென்னை ஓடு , மரக்கழிவுகள் போன்றவற்றிலிருந்து அலங்காரப்பொருட்கள்...
பனை ஓலையில் அலங்காரப்பொருட்கள், உணவு பொருட்கள் தயாரித்தல்..
 
காகிதக் கூழ் பொம்மைகள், பர் பொம்மைகள் செய்தல்..
கூடை பின்னுதல், அலங்காரப் பொருட்கள்...
 
பாய் முடைதல், அலங்காரப் பொருட்கள்
 
வாழ்த்து அட்டைகள் தயாரித்தல், கவர்கள், காகிதப்பைகள், பைல்கள், புத்தகம் பைண்டிங் , ஸ்க்ரீன் பிரிண்டிங் ..
ஓவியம், ஆரத்தி தட்டுகள்..
 
தோல் பொருட்களில் கைப்பை, பர்ஸ் , பெல்ட் போன்ற பொருட்கள் தயாரித்தல்..
சேவை அடிப்படையிலான தொழில்கள்; வியாபாரம் பெருகிவரும் இக்காலகட்டத்தில் சேவை தொழில்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன... குறிப்பாக உணவு விடுதிகள் முதல் அழகு நிலையம் வரை சுயதொழில்களுக்குக்கான வாய்ப்புகள் நிறைந்துள்ளன..
.
இருசக்கர வாகனங்கள் ரிப்பேர் செய்தல் , உதிரி பாகங்கள் விற்பனை செய்தல்,
பலசரக்கு அங்காடிகள் , கடைகள் வைத்தல்..
 
கணினி மையம் வைத்து பயிற்சிகள் நடத்துதல், குழந்தைகள் கணினி விளையாட்டு , ஜெராக்ஸ் எடுத்தல் ..டைப்பிங் நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி வேலை செய்தல், . .
விளம்பரத்துறை அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' என்ற வகையில் காப்பிரைட்டராக விளம்பர ஏஜென்சிகளுடன் பணியாற்றுதல்...
வெப் டெவலப்பர் - இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று.
 
அண்டை வீடுகளில் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன் பெறுதல்
ஹோட்டல்கள், அலுவலகம் மிகுந்த ஏரியா என்றால்...மினரல் வாட்டர் சப்ளை செய்தல்
செல்போன் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம்.
மோட்டார் ரிவைண்டிங், டிவி , மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு பொருட்கள், மின் பொருட்கள் ரிப்பேர் செய்தல்..
 
சலவைத்தொழில், பட்டு சேலைகளுக்கு பாலிஷ் செய்தல்..
 
சிற்றுண்டி, உணவகம் மற்றும் துரித உணவகம் நடத்துதல்..
 
அழகு நிலையம், செயற்கை நகை தயாரித்தல், பேன்சி கடை வைத்தல்..
 
பாத்திரங்கள், மேஜை , நாற்காலிகள் போன்றவற்றை வாடகைக்கு விடுதல்
இப்படி நம்மை சுற்றி பல தொழில்கள் இருந்தாலும் நாம் அத்தகைய தொழில்களில் ஈடுபட்டு இந்த போட்டி மிகு உலகில் ஜெயிப்பதற்கு நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம்..அதற்கென்று சில குணநலன்கள் கண்டிப்பாக தேவை...
 
ஒரு கருப்பு நிற சிறுவன் தன தந்தையுடன் கடைத்தெருவிற்கு சென்ற பொழுது அங்கு ஒரு பலூன் வியாபாரி சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை வர்ண பலூன்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தார்...அந்த சிறுவன் பலூன்காரரின் கையை பிடித்து சார் நீங்கள் ஒரு கருப்பு பலூனை விட்டால் அது பறக்குமா என்று கேட்டான்..உடனே அவர் தம்பி பலூன் மேலே எழும்பி சென்று பறப்பதற்கு அதனுடைய நிறம் காரணமில்லை...அந்த பலூனின் உள்ளே என்ன இருக்கிறதோ அது தான் காரணமாகும் என்றார்...
அது போல நாம் மேற்கொள்ளும் தொழிலில் வெற்றி பெற மனம் , மனப்பாங்கு இது தான் வெற்றிகரமாக செயல்படும் .
 
இதை படித்தால் மட்டும் போதாது , கருத்துக்களை உள் வாங்க வேண்டும், வார்த்தைகளை உணர வேண்டும், உணர்ந்தால் மட்டும் போதாது , முழுவதுமாக புரிந்து கொள்வது அவசியம். புரிந்து கொள்ள நம் கனவுகளை கைப்பற்ற தேவையான குண நலன்களை தெரிந்து கொள்ள வரும் வாரம் வரை காத்திருப்போம்..
- ரோஸ்லின்
 
 
 
Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம்- 5
 
அன்பு தோழமைகளே நலமா? இன்று தொழில்முனைவோர்களுக்கான குண நலன்களை குறித்து காண்போம்...
 
தன்னம்பிக்கை:
 
ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்தால் முதலில் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்தவர் எட்மண்ட் ஹில்லாரி . முதன் முதலில் ஏற முயன்று தோற்றுப் போனவர். தன்னுடைய நண்பர் ஒருவரையும் பலி கொடுத்து தோல்வியோடு திரும்பிய பொழுது அவர் செசான்ன வார்த்தை ; 'எவரெஸ்ட் சிகரமே நீ என்னை தோற்கடித்து விட்டாய் பொறுத்திரு நான் திரும்பி வருவேன் , நான் உன்னை தோற்கடித்துக் காட்டுவேன், எதனால் இப்படிச் சொல்கிறேன் தெரியுமா? உன்னுடைய உயரத்தை தாண்டி உன்னால் ஒரு பொழுதும் போக முடியாது ஆனால் என்னால் போக முடியும் என்றார் அந்த தன்னம்பிக்கை தான் அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது . முடியும் என்று நம்புவோர்க்கே எதுவும் முடியும் .. தான் மேற்கொண்ட தொழிலை தைரியமாக , தன்னம்பிக்கையுடன் இறுதி வரை போரிடுபவர்களுக்கே வெற்றி வந்து சேரும்..
 
இலக்கு நிர்ணயித்தல்:
 
உற்பத்தி செய்யப் போகும் பொருளுக்கு நாட்டில் தேவை இருக்கிறதா, எவ்வளவு உற்பத்தி செசய்ய வேண்டும், தாது பொருள் எங்கு மலிவாக கிடைக்கும் , எவ்விடத்தில் தொழிலை துவங்குவது , பொருளின் தரம், முதலீடு , வங்கி நிதியுதவி, மின்சாரம், தண்ணீர் , சாலை ஆகியவற்றை நன்கு ஆராய்ச்சி செசய்து இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.. குறிக்கோளைத் திட்டவட்டமாக்கி அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும்.... அடுத்தவர்களுடைய குறிக்கோளை இரவல் வாங்க வேண்டாம். உங்கள் குறிக்கோள்களைக் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் அவற்றின் மீது முழுக் கவனம் செலுத்த முடியும்.. எங்கே சென்று கொண்டிருக்கின்றீர்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை திறனாய்வு செய்யுங்கள்
 
கடின உழைப்பும் , விடா முயற்சியும்:
 
வீண் முயற்சி செய்யாதே, விடா முயற்சி செய் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம். வீண் முயற்சியை விடாமல் செய்து என்ன பயன். பலரும் பல தருணங்களில் செய்து தோற்றுப் போகும் பொழுது உணரும் மனம் அந்த தோல்வியை சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை. வில்மாருடால்ப் 4 வயதில் நிமோனியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டு அவளது இடதுகால் பயன்படாமல் போயிற்று , ஊன்றுகோலுடன் நடந்தாள்.. 9 ஆம் வயதில் ஊன்றுகோலை விட்டெரிந்து தானாக நடக்கத் தொடங்கினாள்..13 ஆம் வயதில் வேகமாக நடந்ததை பார்த்து டாக்டர்கள் வியப்படைந்தார்கள் , அதே ஆண்டில் ஓட்டப்பந்தயத்தில் ஓட முடிவெடுத்தாள், கடைசியாக வந்தாள்.. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தோல்வியே.. நீ ஓடியது போதும் நின்று விடு என்றார்கள். .ஆனால் அவள் விடுவதாக இல்லை.. ஒரு பந்தயத்தில் வென்றாள். அடுத்து அடுத்து தொடர்ந்து வெற்றி பெற்றாள். மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றாள்..தொடர்ந்து முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்காமலா போகும்.
 
தொழில் அறிவு:
 
அனுபவம் என்பது நம்மால் மட்டுமல்ல பிறரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும். எனவே நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை திட்டமிடும் முன்பு அந்த தொழில் பற்றிய அறிவுடைய சிலரின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனை அளிக்கும். மேலும் அத்தொழில்கள் குறித்து பயிற்சிகள் மேற்கொள்வதும் நல்ல பயனை தரும்... இல்லை ஏற்கனவே செய்யப்போகும் தொழிலுக்கு உண்டான அனுபவத்தை பெற்றிருப்போமாயின் அதில் புதிதாக மாற்றம் செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வது இன்றைய போட்டி யுகத்தில் வேரூன்ற உதவி செய்யும். நாம் செய்யும் தொழில் எத்தகையது..? அதற்கான போதிய தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா..? அல்லது அதை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது...? என்பது போன்ற காரணிகளை தெளிவாக ஆலோசனை செய்யுங்கள். ஏனெனில் தொடங்கிய பின்பு அதற்குன்டான அனுபவத்தை நாம் பெறுவதற்குள் ஏறக்குறைய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை நாம் இழக்க நேரிடும்...
 
அணுகுமுறை:
 
உறவுகள் மேம்பட பேசுவதில் நிதானம், விவேகம், அமைதி அன்பு கலந்த நட்பு, சொல்வதை செய்வது எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் நெருக்கடிகள் , கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டாலும் சிரித்த முகத்துடன் கையாள்வது சிறப்பான ஒன்றாகும். சிறந்த அணுகுமுறையால் சக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோரிடமும் புத்திசாலித்தனமாகவும் , கவர்ச்சியாகவும் பேசி பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் தொழிலிலும் , பணியிலும் வெற்றி காண்பதற்கு மனித உறவுகள் மிகவும் அவசியம் , மக்கள் தொடர்பு சரியாக அமையாவிட்டால் வெற்றி காண்பதில் சிக்கலான பிரச்சனைகள் , பின்னடைவுகள் ஏற்படலாம்..
 
நேர மேலாண்மை:
 
தொழிற்சாலை, அலுவலகம், வீடு மற்றும் எந்த இடமாக இருந்தாலும் நேர நிர்வாகம் இருந்தால் தான் வெற்றிகரமாக செயல்பட முடியும். சாதனைகளை நிகழ்த்த முடியும். நாம் தொழில்களை மேற்கொள்ளும் பொழுது உடனே உற்பத்தி செய்ய வேண்டிய பொருள்களை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு கால கட்டத்திற்குள் சப்ளை செய்யும் நிர்ப்பந்தம் இருக்கும்.. இந்த கால நிர்வாகத்தில் உற்பத்தி , விற்பனை , இந்த இரண்டு பிரிவுகளுக்கும் ஒத்துழைப்பு அவசியம் .. இன்று விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் நேரச் சேமிப்பின் பயன் பிரமிக்கத்தக்கது. .ஆனால் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்த நாட்களிலேயே முற்போக்கான சிந்தனை கொண்ட டி.வி,சுந்தரம் ஐயங்கார் நேரம் , கண்டிப்பு, நேர்மை, பணியாளர்களின் நலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் இன்றும் பலரும் வியந்து பாராட்டும் தொழில் அதிபராக உள்ளார்..
 
படைப்புத்திறன்:
 
பிறரது படைப்புத்திறனை பாராட்டும் நாம் நமக்குள் படைப்பாற்றல் இருப்பதை காண்பதில்லை.. தானும் ஒரு படைப்பாளியாக முடியும் என்று நம்புவதுமில்லை. நம்மிடம் படைப்புத்திறன் உண்டு என்று நம்பி முழுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுதும், மற்றவர்கள் தயார் செய்யும் பொருட்களை விட கொஞ்சம் வித்தியாசமாக பொருட்களை படைக்கும் பொழுதும் நம் பொருட்களுக்கு என்று சந்தையில் தனி மவுசு இருக்க தான் செசய்யும்..
 
தரம்/ கண்காணிப்பு:
 
வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே தரம் ஆகும்.. பொருளின் தோற்றம் , அது கொடுக்கப்படும் விதம் சேவை , அதன் விலை, நம்பகத்தன்மை போன்ற விஷயங்கள் ஒரு பொருளின் தரத்தை நிர்ணயம் செய்யும்.. இது சிறப்புற நடைபெற கண்காணிப்பு அவசியம்..
 
பணியாளர்கள் நலனில் அக்கறை:
 
தங்களுடைய பணியாளர்களுக்கு என்ன தேவை என்று தொழில்முனைவோர் பலருக்கு தெரிவதில்லை.. உண்மையில் பணியாளர்கள் விரும்புவது இதைத்தான் . விருப்பமான வேலை, முடிந்த வேலைக்குப் பாராட்டு, நல்ல சம்பளம், பதவி உயர்வு, மனதை புண்படுத்தாத கட்டுப்பாடு, தனிப்பட்ட உதவிகள் , ஆறுதலான வார்த்தைகள்..
 
நன்மதிப்பு:
 
மனிதர்கள் மூன்று வகையானவர்கள்.. தன்னை பற்றி என்ன நினைக்கின்றார்கள் ? பிறர் என்ன நினைக்கின்றார்கள்? உண்மையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதாகும்.. எப்படி நாம் வாழ்க்கையில் துணிவு உள்ளவராக இருந்தால் பயம் என்பது இருக்காதோ ? அறிவாளியாக இருந்தால் குழப்பம் இருக்காதோ ?அது போல் ஒழுக்கம் உடையவராக இருந்தால் கவலைக்கு இடமே இருக்காது , எண்ணத்திலும் சரி, செயல்பாட்டிலும் சரி இந்த மூன்றிலும் நேர்மை , ஒழுக்கம் அவசியம்.. உள்ளத்தில் ஒன்று வைத்துக் கொண்டு பேசுவதில் வேறுவிதமாக இருப்பதோ , வாழ்வதோ உண்மையான வாழ்வு அல்ல. .அது போலியானதே.. கெட்டிக்காரன் பொய் எட்டு நாளில் தெரிந்து விடும் என பெரியவர்கள் சொல்வதுண்டு... தொழில்முனைவோர் தன் தொழிலில் கொடிக்கட்டி பறந்து தன் ஒழுக்கத்தில் தவறினால் வீழ்ச்சி நிச்சயம்..
 
மனிதாபிமானம்:
 
தன்னம்பிக்கை இருக்குமிடத்தில் தான் அன்பும், மனிதாபிமானமும் உள்ளது. இவை இரண்டும் இருக்குமிடத்தில் தான் அமைதி உள்ளது... அமைதி இருக்குமிடத்தில் தான் உண்மை உள்ளது.. உண்மை இருக்குமிடத்தில் தான் மகிழ்ச்சி இருக்கின்றது... மகிழ்ச்சி உள்ள இடத்தில் கடவுள் இருக்கின்றார்.. தன்னலம் மறந்து பொதுநலத்திற்கு பாடுபடும் மனிதர்களே மிகவும் உயர்ந்தவர்கள்.. தொழில்முனைவோர்கள் தாங்கள் மேற்கொள்ளும் தொழில் லாபநோக்கத்துடன் மட்டும் இல்லாத பிறர் நேயத்துடன் இருக்கும் பொழுது மக்கள் மனதில் இடம் பெற்ற சிறந்த தொழில் முனைவோர் என்பது செசால்லவும் வேண்டுமா? கனவுகள் இனிமையானவை... கைப்பற்றுதல் அதை விட இனிமையானவை... வாருங்கள் கைப்பற்ற... 
 
 
Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம்- 6

 

Tamil_News_large_111015720141108105354.j

 

அன்பு தோழமைகளே நலமா?

 

சென்ற பதிவில் தொழில்முனைவோர்களுக்கான குணநலன்களான தன்னம்பிக்கை, இலக்கு நிர்ணயித்தல், கடின உழைப்பும் , விடா முயற்சி, தொழில் அறிவு, அணுகுமுறை, நேர மேலாண்மை, :படைப்புத்திறன், தரம்/ கண்காணிப்பு, பணியாளர்கள் நலனில் அக்கறை, நன்மதிப்பு, மனிதாபிமானம் ஆகியன குறித்து சுருக்கமாக பார்த்தோம் .இனி ஒவ்வொரு தலைப்புகளிலும் விரிவாக பார்ப்போம்..
 
ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது.அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.
அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
 
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார். ஆனால் ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.
ஏன்னா, அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிகிட்டு இருக்கார். அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியலையாம்.காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.
 
நம்ம எல்லாருமே இவரைப் போலத்தான்.நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது ஆனால் நாம் யாரும் அதை பயண்படுத்தாமல் கடவுளின் மீதும், விதி மீதும் பாரத்தை போட்டு விடுகின்றோம்..காணாத கடவுளிடத்தில் நம்பிக்கை வைக்கும் நாம் கண்ணால் காணக்கூடிய தன்னிலே ஏன் நம்பிக்கை வைக்க கூடாது, தன்னை நம்பாதவன் தெய்வத்தையும் நம்ப முடியாது, ஏனென்றால், தன்னம்பிக்கையில் பிறப்பதே தெய்வ நம்பிக்கையாகும், தன்னை நம்புவது மட்டும் இல்லை , தான் ஆராய்ந்து பார்த்து தொடங்கிய செயல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.இல்லை என்றால் தோல்வி மனப்பான்மை நம்மை சுற்றி சுற்றி வரும்
 
தோல்வி ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுவது அறிவீனம், தோல்விக்கு பயந்து முயற்சியே செய்யாமல் இருப்பது மூடத்தனமும், கோழைத்தனமும் ஆகும், நடக்கும் குழந்தை விழத்தான் செய்யும், விழுந்த குழந்தை எழாது என நினைக்க கூடாது, அது போல் வாழ்க்கை வெற்றி பெற வேண்டுமானால் தோல்விகளை சந்தித்தே ஆக வேண்டும், இந்த தோல்வியை வெல்ல ஒரே ஒருவரால் தான் முடியும் அவர் தான் தன்னம்பிக்கை.., எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பதற்கு ஒருவர் மனதில் இருக்க வேண்டிய பலத்தின் பெயர் தான் தன்னம்பிக்கை..தன்னம்பிக்கை என்பது தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை கொள்ளுதல் அல்ல.என்னால் முயற்சிக்க முடியும் , அம்முயற்சியில் வெற்றி காண முடியும் என்று திட்டவட்டமாக நம்புவது தான் தன்னம்பிக்கை மனித சமுதாய வரலாற்றைப் புரட்டி பார்த்தால் மாபெரும் சாதனைகள் தன்னம்பிக்கையின் அடிப்படையில் தான் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன.
 
வாழ்க்கை வாழ்வதற்கே என்பது சான்றோர் தம் கூற்று அதிலும் இன்புற்று வாழ வேண்டும் என்பது அனைவரின் எண்ணம் , இன்பமாக வாழ தன்னம்பிக்கை மட்டுமே ஊன்றுகோலாக திகழ்கின்றது. தடைகளை மீறி வெற்றிகளை அடைய முடிகின்றது, தன்னம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் ஒரு தெளிவான நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலாது , நம்மிடம் முதன்மை குணமும், தலைமைத் தகுதியும் இருப்பதாக முதலில் ஒரு கற்பனையை வளர்த்துக் கொள்ள வேண்டும், இந்த கற்பனைச் சக்தி இல்லையென்றால் இத்தகுதியை வளர்த்திக்கொள்ள முடியாது
 
விற்பனையாளர் ஒருவருக்கு தான் விற்பனை செய்யும் பொருட்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு துணிவோடு பேச முடியும், வாடிக்கையாளர் எச்சரிக்கை உணர்வு உள்ளவராக இருந்தால் அந்த அவநம்பிக்கையை சட்டென்று இனம் கண்டு விடுவார்.விற்பனையாளரின் எண்ணங்கள் அவரது ஆற்றலைக் குறைத்து விடுகின்றது, இதன் மூலம் தன்னம்பிக்கை எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
விதையிலிருந்து மரமும், முட்டையின் கருவிலிருந்து உயிர் சக்தியாம் பறவையும் வெளிப்படுகின்றன..அது போல் உங்களது பொருளாதார முன்னேற்றம் உங்கள் மனதில் உறைந்து கிடக்கின்றது நீர் உயர உயரத் தாமரையும் உயர்கின்றது, அது போல் தன்னம்பிக்கை உயர உயர மனிதன் உயர்கின்றான். அவனுக்கு உள்ள தன்னம்பிக்கையின் அளவை பொறுத்து அவனது வளர்ச்சி ஏற்ப்படுகின்றது, யானையின் பலம் தும்பிக்கையில் , மனிதனின் பலம் நம்பிக்கையில் இந்த நம்பிக்கையை கொண்டு வாழ்ந்தால் பல சாதனைகளை செய்ய இயலும்..
 
இளம்பெண் ஒருவர் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.
 
ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.
 
அவள் வருத்தத்திலிருந்த போது, சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
 
"உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார்.
 
நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.
 
''தன்பெண்டு தன்பிள்ளை சோறுவீடு
 
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டேன்போன்
 
சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன்''
 
பாவேந்தர் பாரதிதாசன் பாடலில் உள்ள வரிகள் இவை. தன்னலமற்ற தன்னம்பிக்கை வேண்டும், சமுதாயத்திற்கும் , நாட்டிற்கும் நல்ல செயல்கள் செய்யவேண்டும் என்ற தன்னம்பிக்கையே இன்றைய இந்தியாவை வலிமைமிக்க பாரதமாக உருவாக்கும்..தன்னம்பிக்கை உள்ளவன் எதையும் சாதிப்பான் , எனவே தன்னம்பிக்கை என்னும் விதையை நெஞ்சில் விதைத்துக் கொண்டால் நாமும் உயரலாம் , வீடும், நாடும் நலம் பெறும்..
 
- ரோஸலின்
 
Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம்...7

 

Tamil_News_large_111553920141115082101.j

 

இத்தொடரை தொடர்ந்து வாசித்து உங்கள் விமர்சனங்கள் மூலம் ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கும் அன்பின் தோழமைகளே நலமா? இன்று "இலக்கு நிர்ணயித்தல்" குறித்து காண்போம்.
 
 
வள்ளியூர் என்ற செழிப்பான கிராமத்தில் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் வள்ளியூரில் கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது , இதனால் .பெரியவர் தம் குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார் ,
 
பெரியவர் நல்ல இடம் தேடி செல்லும் வழியில் அழகிய கிராமத்தின் , ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு அமைந்திருந்தது , அதில் இறந்தவர்களை புதைத்து அவற்றின் மீது குறிப்புக் கற்களை வைத்திருந்தார்கள் , குறிப்புக் கற்கள் ஒவ்வொன்றிலும் இருந்த வாசகங்கள் பெரியவரை திகைக்க வைத்தன, அதில் " இவர் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவர்", "இவர் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவர்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன அது பெரியவருக்கு ஆச்சரியத்தையும் , அதிர்ச்சியையும் அளித்தது, 
 
இது என்ன சோதனை , இக்கிராமத்தில் அற்ப ஆயுள் படைத்தவர்கள் தான் அதிகம் போலுள்ளதே என்று தமக்குள்ள எண்ணினார் இதனால் இக்கிராமத்தில் தங்க கூடாதென்றும் முடிவுக்கும் வந்தார் , உடனே அங்கிருந்து கிளம்பினார் ,
 
 
அப்பொழுது தங்கள் ஊருக்கு வந்த பெரியவர் திரும்புவதை ஊரில் பலரும் கவனித்தனர் , அவர்களில் முதியவர் ஒருவர் அவர்களை அழைத்து பெரியவரை பார்த்து எங்கள் ஊர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? நீங்கள் இங்கேயே தங்கலாமே என்றார் ..
 
அதற்கு பெரியவர் எனக்கு ஒரு சந்தேகம் , நான் ஊருக்கு வெளியே இருக்கும் குறிப்புக் கற்களைப் பார்த்தேன் , அவற்றை பார்த்த பொழுது இந்த ஊரில் ஐந்து வயதிற்கு மேல் எவருமே வாழவில்லையோ என்ற உறுத்தல் எழுந்தது என்றார்.இதை கேட்ட ஊர் முதியவர் சிரித்தார் , என்னைப் பாருங்கள் எனக்கு எவ்வளவு வயதிருக்கும்?" என்று கேட்டார் .அதற்கு பெரியவர் "அறுபதுக்கு மேல் இருக்கும் என்று பதில் அளித்தார், "சரி என் வயதில் இவ்வூரில் எவ்வளவு பேர் இருக்கிறோம் பார்த்தீர்களா ?..இந்த குறிப்பில் உள்ள வாசகங்கள் என்ன சொல்கின்றது தெரியுமா ? வாழும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக வாழும் நாட்களே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுகின்றது என்றார்...
 
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு , செய்யும் தொழிலுக்கு இலக்கு நிர்ணயித்தல் . முக்கியமானதாகும்..
 
 
ஒரு தொழிலின் நோக்கங்களை எடுத்துக் கொண்டால் லாபம் ஈட்டுவது மட்டுமே ஒரு தொழிலின் நோக்கமாக இருக்க முடியாது, லாபத்தை மட்டுமே நோக்கமாக நினைத்து செயல்பட்டால் இறுதியில் அந்த நோக்கமும் நிறைவேறாமல் போகலாம்.
 
 
எனவே ஒரு தொழிலுக்கு பல நோக்கங்கள் இருக்க வேண்டும் கல்வி , சுற்றுச் சூழலைப் பாதுக்காப்பது , போன்றவற்றையும் நோக்கமாக கொள்ள வேண்டும்..
 
லாபமும் முக்கியம் தான் லாபம் ஈட்டினால் தான் ஒரு தொழில் நிலைத்திருக்கவோ , வளர்சியடையவோ முடியும்.
 
குறிக்கோள்களை நிர்ணயிக்கும் போது கீழ்காணும் கேள்விகளை எழுப்ப வேண்டும்,
 
 
தொழில் என்ன?
 
தொழிலின் தனிப்பட்ட சிறப்பு?
 
உற்பத்தி செய்யப் போகும் பொருளுக்கு தேவை இருக்கிறதா?,
 
உற்பத்தியின் அளவு ?
 
தாது பொருள் எங்கு மலிவாக கிடைக்கும்? ,
 
இடம்?
 
 
பொருளின் தரம்?, 
 
 
முதலீடு? , 
 
 
மின்சாரம், தண்ணீர் , சாலை ஆகியவற்றை நன்கு ஆராய்ச்சி செய்து இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்ப்பட வேண்டும்..
 
 
இப்படி சிந்திக்கும் பொழுது நல்ல குறிக்கோள்களை நமக்கு தரும், வாழ்க்கையோ, தொழிலோ வேண்டியதை அடைவதற்கு இலக்கு அவசியம், நமது கவனத்தை ஒருமுகப்படுத்தினால் தான் இலக்கை அடைய முடியும் குஞுt tடஞு கூச்ணூஞ்ஞுt ச்ணஞீ ஏடிt டிt" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் நாம் செய்யும் எந்த காரியமும் கால எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் , 
 
இலக்குகள் மூன்று வகைப்படும் அவை குறுகிய கால இலக்குகள் , இடைக்கால இலக்குகள், நீண்ட கால இலக்குகள் எனப்படுவன...
 
10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டியதற்கான திட்டம் நீண்ட கால இலக்குகள்
 
5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டியதற்கான திட்டம் இடைக்கால இலக்குகள்
 
1 ஆண்டுக்குள் மேற்கொள்வதற்கான திட்டம் குறுகிய கால இலக்குகள் ,
 
எட்ட வேண்டிய இலக்கை தீர்மானித்துவிட்டால் , அந்த இலக்கை ஆழ்மனதில் நாம் பதித்து விட்டால் அத்தனை சக்தியையும் பயன்படுத்தி நம் லட்சியக் கனவை நனவாக்கி காட்டலாம்.. எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான். நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.
 
நம் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே நம்மை செயல்படுத்த தூண்டும். நம் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுவோம் அதை நம் தீவிர எண்ணங்களால் உரமேற்றினால் .. நிச்சயம் நம் குறிக்கோளை அடைந்து விடுவோம் . 
 
நம் கற்பனையில் குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கின்றோமோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. நம் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.
 
 
குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.
 
 
குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / நம் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் நம் குறிக்கோளின் மீது குவியும்.
 
 
 
நான் சிறு தொழில் மேம்பாட்டு மையத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபொழுது ராஜபாளையம் தளவாய்புரத்திலுள்ள ஒரு ஆயத்த ஆடைகள் தயார் செய்யும் நிறுவனத்திற்கு சென்றிருந்தேன் அங்கு மேலாண்மை இயக்குநரின் அறையில் ஒரு வெள்ளை போர்டு இருந்தது..அது என்னை ஈர்த்தது அதில் ஒவ்வொரு மாதத்தின் பெயர்கள் மேலிருந்து கீழ்புறமாகவும், தேதிகள் மேல்புறத்திலும் எழுதி இருந்தது அதில் ஒவ்வொரு தேதியிலும் எத்தனை ஆடைகள் தயார் செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தது...முடிந்து போன மாதங்களில் மின் தடை , இயந்திர பழுது போன்ற காரணங்களால் முதல் நாள் தயாரிக்கமுடியாத தயாரிப்புகளை அடுத்த நாட்கள் சேர்த்து தயார் செய்ததையும் குறித்து வைத்திருந்தனர்... 
 
 
 
எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!
 
 
 
ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பி விடுவார்கள் .
 
அவர் அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க 
 
ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு.போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.
 
இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
 
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.
 
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்..!
 
Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 8

 

Tamil_News_large_1121144.jpg

 

சாலை, மின்சார வசதி எதுவுமே இல்லாத கிராமத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர் தன மாணவர்களைப் பார்த்து நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக போகின்றீர்கள் என்று கேட்டார்.."டாக்டர், ஆசிரியர், என்ஜினீயர், கலக்டெர் , போலீஸ் போன்ற பதில்கள் வந்தன..அதில் ஒரு குரல் மட்டும் 'தொழிலதிபர்' என்று சொல்ல "கொல்" என்று வகுப்பு முழுக்க சிரிப்பொலி..சிரித்தவர்கள் சாதித்தார்களா என்று தெரியாது .."தொழிலதிபர் ஆகப் போகிறேன் என்று சொன்ன சிறுவன் சாதித்து விட்டான்..அந்த அசாத்திய சாதனையாளரின் பெயர் பி.ஜெயக்குமார் ..பூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தவர்..இந்தியாவில் கிரௌண்ட் இன்ஜினியரிங் செய்யும் நிறுவனம்..இன்று இவரது நிறுவனத்தின் மதிப்பு ரூபாய் 100 கோடி..அவர் சொல்வது தமிழ்நாட்டில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படி படி என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால் ஒரு பையனை படிக்க வையுங்கள்...இன்னொரு பிள்ளையை பிசினஸ் செய்யச் சொல்லுங்கள் ஒரு பிள்ளையின் படிப்பை பிஸினஸ் க்கு பயன்படுத்தலாம்..இந்தியாவில் டெல்லி , மும்பை போன்ற இடங்களில் பிசினஸ் வளர்ந்தது போல் தமிழ்நாட்டில் வளராததற்கு இதுவும் ஒரு காரணம்..என்றார்....
 
ஆனால் நம் மக்கள் பிசினஸ் என்றாலே பயப்படுகின்றனர்..'ஒரு வேலைக்கு போனால் மாதம் ஒரு குறிப்பிட்ட வருமானம் வரும் ஆனால் பிசினஸ் அப்படி இல்லை ரிஸ்க் எடுக்க வேண்டி வருமே' என்று 
 
கொஞ்சம் இப்படி கற்பனை செய்து பாருங்கள் அடுத்தவர்களுக்கு உழைப்பதை விட நாம் செய்யும் தொழிலுக்கு உழைத்து நமக்கு நாமே ராஜாவாக இருந்தால் ?
 
அதற்கு தேவை கடுமையான உழைப்பும் , விடாமுயற்சியும்
 
உழைப்பின் பெருமையை உழைக்கும் பொழுது தான் உணர முடியும்..உழைப்பு என்ற வார்த்தையை அலசிப் பார்ப்போமேயானால் அது ஒரு சுயநலமற்ற வார்த்தையாகவே தென்படுகின்றது..ஏழையும், பணக்காரரும் சமமாக கொள்வது உழைப்பு..எந்த மதத்தினரும் கடவுளாக கொள்வது உழைப்பு....
 
கடினமாக நாம் உழைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக நாம் இருக்கலாம் சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.
 
 
ஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும்.
 
முயற்சி என்பது முயன்றுகொண்டே இருப்பது தான் , வெற்றி தோல்வி பற்றிய கவலை கொள்ளாமல் முழு ஈடுபாட்டுடன் நாம் நினைத்த காரியத்தில் ஈடுபடுவது தான் முயற்சி எனப்படும்..
 
முயற்சி செய்யும் பொழுது மேற்கொண்டுள்ள செயல் வெற்றியடைகின்றது, முயலாத பொழுது அது தோல்வியையும் வருத்தத்தையும் கொடுக்கின்றது..
 
நம் உடல் சீராக இயங்குவதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகின்றது ..அதே போல் ஒரு செயலின் வெற்றிக்கு முயற்சி தேவைப்படுகின்றது...தன்முனைப்பு இல்லாத மனிதனைப் பொம்மையாக உலகம் பார்க்குமெயொழிய சக மனிதனாகப் பார்ப்பதில்லை
 
உணவு தேவை ஏற்படும் பொழுது தான் விலங்குகள் முயற்சியை மேற்கொள்கின்றன..தேவை நிறைவுறும் பொழுது அவைகள் உணவு தேட முயற்சி செய்வதில்லை ..ஆனால் மனிதனுக்கு ஒரு தேவை நிறைவேறும் பொழுது மறு தேவை ஆரம்பமாகின்றது..அவன் அன்றாட தேவைகளையும் வரவிருக்கும் தேவைகளையும் கருத்தில் கொண்டு முயல வேண்டும்..அவ்வாறு இல்லையெனில் அவன் ஒரு சமூக விலங்காக கருதப்படுவான்..
 
எப்பொழுது லட்சியம் உயர்ந்த அளவில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் முயற்சியே ஊக்கமளிக்கின்றது 
 
விடாமுயற்சி உள்ளவர்களுக்கு சோம்பல் வராது ..உழைப்பே அவர்கள் ஓய்வாக இருக்கும்..தோல்வியை கண்டு துவள மாட்டார்கள் ..தோல்விகள் தான் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதை உணர்வார்கள் .
 
ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும். மிகப் பிரபலமான விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், முட்டாள் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, "ஒரே வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்' என்றாராம்.
 
தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதை விட அதற்கான வழியை தேடுதல் நலம்..., புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், போராட நேர்ந்திருக்கிறது.
 
நான் யாராக இருந்தாலும் பரவாயில்லை நான் எண்ணுவதை அடைந்தே தீருவேன் என இலட்சியத்துடனும் விடா முயற்சியுடனும் செயற்பட்டால் வெற்றி வந்தே சேரும். தனித் தன்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
 
வெற்றியடைந்த பெரிய மனிதர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டதில்லை... மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் கடுமையாக உழைக்கின்றார்கள் 
 
நம் உழைப்பும் , விடா முயற்சியும் தன நலத்துடன் மட்டும் இல்லாது பொது நலத்துடன் இருக்கும் பொழுது உலகம் நம்மை திரும்பி பார்க்கும்...
 
- ரோஸ்லின்
 
Link to comment
Share on other sites

Tamil_News_large_112657920141129091149.j
 
அன்பு தோழமைகளே நலமா?
விடுமுறை நாட்கள் முடிவான பின்னர் ரயிலில் , பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் முன்கூட்டியே முன் பதிவு செய்திருக்கலாமே என்று நொந்து கொள்வோர் பலர்..
அது போல் நாம் ஒரு தொழிலினை மேற்கொள்ளும் பொழுது அது தொடர்பான முழு அம்சங்களின் சாதக, பாதக , தொழில் நுட்பங்களை அறிந்து கொள்தல் அவசியம்..
செய்யும் தொழிலே தெய்வம் என்று தொழிலின் புனிதத்தைப் போற்றுவது நம் தமிழ் மரபு..தொழிலை பிழைப்பாக மட்டுமல்ல..அழைப்பாக நாம் பார்க்க வேண்டும்..
 
காரல்மார்க்ஸ் தனது தத்துவத்தில் மனிதன் தொழிலை ஆற்றும் போது புதியன படைப்பதோடு மட்டுமல்லாமல் தானும் புதிய பரிமாணத்தில் வளர்ச்சியடைகின்றான் .என்கின்றார்.
ராபின் ஷர்மா கூறுகையில் மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுக்கு உங்கள் வேலையை நேசிப்பதே காலமறியாத ரகசியம் என்பார்..நாம் செய்யும் தொழிலைத் தெய்வீகமாகச் செய்ய நாம் பெரிய பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை..
 
ஹங்கேரி கால்பந்து வீரர் ஒருவர் ஐரோப்பாவில் பெரிய போட்டியில் வென்று முதல் இடத்தைக் கைப்பற்றினார் . அப்போது நிருபர்கள் அவரிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டார்கள் . 'நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் கால்பந்து பற்றிப் பேசுகிறேன், பேசாத போது கால்பந்து விளையாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றேன் " என்று பதில் கூறினார் அந்த கால்பந்து வீரர்..
ஆக, நாம் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அதை செய்யும் பொழுது அதே நினைவாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் அந்த வகையில் ஒரு தொழில்முனைவோருக்கு தான் மேற்கொள்ளும் தொழிலின் தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.
 
முதலில் நாம் என்ன தொழில் செய்யப்போகிறோம்.
அதற்குரிய அனுபவம் நம்மிடம் இருக்கின்றதா இல்லை பிறறிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்...
 
எனவே நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை திட்டமிடும் முன்பு அந்த தொழில் பற்றிய அறிவுடைய சிலரின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனை அளிக்கும். ஏற்கனவே செய்யப்போகும் தொழிலுக்கு உண்டான அனுபவத்தை பெற்றிருப்போமாயின் அதில் புதிதாக மாற்றம் செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வது இன்றைய போட்டி யுகத்தில் வேரூன்ற உதவி செய்யும்.
நாம் செய்யும் தொழில் எத்தகையது..? அதற்கான போதிய தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா..? அல்லது அதை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது...? என்பது போன்ற காரணிகளை தெளிவாக ஆலோசனை செய்யுங்கள். ஏனெனில் தொடங்கிய பின்பு அதற்குன்டான அனுபவத்தை நாம் பெறுவதற்குள் நம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை இழந்து விடும் அபாயம் இருக்கிறது.
 
எனக்கு தெரிந்த பெண் ஒருவர் எனக்கு போட்டியாக ஒரு பயிற்சி மையத்தை ஆரம்பிக்க எண்ணி அனுபவம் + அறிவு இதனை பற்றி சிந்திக்காமல் ஒரு மையத்தை தொடங்கி நடத்தினார் . அவருக்கு தொழில் நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து போதிய அறிவு பெற்றிருக்கவில்லை. இருந்தாலும், ஆட்களை வேலைக்கு வைத்து நடத்தி விடலாம் என்ற நினைப்பின் காரணமாகவே அவர் அதை தொடங்கினார் .சில மாதங்கள் மட்டுமே அவரால் செய்யமுடிந்தது, இப்போது திரும்ப அவர் ஒரு பயிற்சி மையத்திற்கு வேலைக்கு சென்றி கொண்டிருக்கிறார். காரணம், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை முழுமையாக அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
நாம் தொழிற்பயிற்சியினை மேற்கொள்ளும் முன் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செயல்கள் , இல்லாத செயல்கள் என்பது பற்றிய தெளிவான சிந்தனை கொண்டிருப்பது அவசியம் ? இதற்காக உளவியல் அறிஞர்கள் SWOT ஆய்வைப் பரிந்துரைக்கின்றார்கள் ..என்றால் என்ன ?
 
S - STRENGTH - ஆற்றல்
W - WEAKNESS - நம்மிடம் இல்லாத அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆற்றல்..
O - OPPORTUNITIES - வாய்ப்புகள்..
T - THREATS - அச்சுறுத்தல்கள் ...
 
கடந்த வாரங்கள் வரை ஒவ்வொரு தலைப்பின் கீழ் நாம் பார்த்த விசயங்களை இந்த ஆய்வில் உட்படுத்தி நம்மை நாமாக சுய ஆய்விற்கு உட்படுத்திக் கொள்தல் அவசியம்..
 
ஒரு தொழிலை ஆரம்பிக்கும் பொழுது மலைப்புத் தட்டுவது சகஜம் , இதை எவ்வாறு செய்யப் போகின்றோம் என்ற பயம் உண்டாகின்றது ..பயத்திற்கு இடம் கொடுத்தால் எப்படி வெற்றி பெற முடியும்?
நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளான ரேசன் கடையில், சினிமா தியேட்டரில், கோவில்களில் கியூவில் நின்று அடி மேல் அடி வைத்து தங்கள் வரிசையில் முன்னேறி தம் குறிக்கோளை அடைகின்றனர்..அது போல் தான் நாம் மேற்கொள்ளும் தொழில்களும் அடி மேல் அடி வைத்து தான் வெற்றிக்கான முடியும்..ஒரே நாளில் வெற்றி பெற சினிமா படம் அல்ல...
ஜி.கே .செஸ்டர் கூறுவார்… நடப்பவற்றை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று..அதோடு நாம் மேற்கொள்ளும் தொழிலை ரசித்து செய்யக் கற்றுக்கொண்டால் மலைப்பு மலையேறி விடும்..
மலைப்பை போக்க ...இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு தொழில்களின் செயல்முறைகள் குறித்து காண்போம்…
 
- ரோஸலின்
 
Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 10 தைரியம் கொடுக்கும் தையல்!

Tamil_News_large_1131828.jpg

 

வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதற்கு நம் திறமை என்ன என்பதையும் அதனை நாம் எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றோம் என்பது தான் முக்கியம்.

 
எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.பெண்கள் வீட்டு வேலை போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல்.
 
காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்கள் தங்களுக்கு உடுத்த உடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை!அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று கண்கவர் தையல் கலைகளாக நம்மை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது. 
 
ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். அந்தந்த ஊர்களில் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக இப்பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கின்றனர்...
 
நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் கூட தலையணை உறை, டர்க்கி டவல் மற்றும் சிறிய டவல்களும் தைத்து விற்கலாம்.
 
ஒருவர் மற்றும் இருவர் பயன்படுத்துவது என பல்வேறு நீள அளவில் தலையணைகள் உள்ளன. அதற்கேற்ற நீளங்களில்துணிகளை வெட்டி கொள்ள வேண்டும். வெட்டிய துணிகளை 3 புறமும் தைத்து கொள்ள வேண்டும். 4வது புறத்தில் தலையணை திணிக்க திறப்பு இருக்கும். தலையணை திணித்தவுடன், அது வெளியேறாமல் இருப்பதற்காக உள்புறமாக துணியை மூடிபோல் மடித்து தைக்க வேண்டும். தைக்கப்பட்ட நூல் பிசிறுகளை நீக்கினால் தலையணை உறை தயார். தலையணை உறையிலும் பெயிண்டால் அழகிய ஓவியங்கள் மற்றும் கருத்துள்ள வாக்கியங்களால் அழகு படுத்துவதன் வாயிலாக வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தலாம்.. உழைப்பும் தொழில் நேர்த்தியும் போதும். நெருக்கமில்லாமல் தைத்தால் பிரிந்து விடும், அடுத்து நம்மிடம் வாங்க மாட்டார்கள். நல்ல நூலில், நெருக்கமாக தைத்தால் பிரியாது. வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.
 
உள்பாவாடை தயாரித்தல்:
 
பாவாடை தயாரிக்கும் வேலை எளிதானது. கட்டிங், தைப்பது ஈஸி. தைத்த பின் நாடா கோர்க்காமல், தைக்கும்போதே நாடாவுடன் தைத்தால், பாவாடையின் இடுப்பு பகுதி தரம் குறையாமல் இருக்கும். 
 
குறைந்தபட்ச இன்ச் 36க்கு குறையாமல் இருந்தால் நல்லது. 26 இன்ச் இடுப்புள்ளவர்கள்கூட எளிதில் நாடாவை சுருக்கிக் கட்டிக் கொள்ள முடியும். பெண்களின் இடுப்பு பருமனுக்கேற்ப அதிகபட்சம் 44 இன்ச் வரை தைக்கலாம்.
 
பாவாடையின் கீழ் பகுதியில் சன்னமாக ஒரு லேஸ் வைத்தால் எடுப்பாக இருக்கும். சின்ன டிசைனில் மெஷின் எம்ப்ராய்டரி செய்தால் மதிப்பு கூடும். அதே போல் பாவாடையின் உள்புறம் இரண்டு தையல்கள் முடிந்தால் ஓவர் லாக் அடித்தால் தரம் நன்றாக இருக்கும்..இன்றைய நவீனக் காலத்தில் பாவடையில் அழகிய எம்ப்ராய்டரிகள் போட்டு உடுத்துவது பேஷன் ஆகி விட்டது..முடிந்தால் அந்த சேலை பார்டர் நிறத்தில் லேஸ் வைத்து தைத்து கொடுத்தால் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளலாம்..
 
சுடிதார் ஜாக்கெட் தைக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்...
 
என்னதான் அழகாக தைத்தாலும், உள்புறம் கொடுக்கும் லைனிங் துணி தரமில்லாவிட்டால், சுடிதாரின் உழைப்பும், அணியும் சவுகரியமும் குறைந்துவிடும். தரமாக தயாரிப்பது தொழில் வெற்றிக்கு முக்கியமானது. 
 
சுடிதார் தைப்பதற்கு அடிப்படை கட்டிங் செய்வது தான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். அதில், டாப்ஸின் முன்புற மேல்பகுதி டிசைன் மற்றும் சுடிதாரின் மாடல் இடம்பெற்றிருக்கும். அதன்படி வெட்டி தைக்க வேண்டும். இதில் மீடியம்(எம்), லார்ஜ்(எல்), எக்ஸ்ட்ரா லார்ஜ்(எக்ஸ் எல்), டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ்(டபுள் எக்ஸ் எல்) என்று தனித்தனி அளவுகள் உள்ளன.
 
சுடிதாரில் டாப்ஸ், பேன்ட் என்று 2 பாகங்கள் உள்ளன. டாப்ஸில் சோல்டர், உயரம், உடல் சுற்றளவு, இடுப்பு, பாட்டம் அகலம், கை உயரம், கை அகலம், பேன்டில் இடுப்பு சுருக்கு, பெல்ட் பிளிட்ஸ், உயரம், லூஸ், பாட்டம் அகலம் என்று தனித்தனி அளவுகள் உள்ளன. சில டாப்ஸ்கள் கை இல்லாமலும் (ஸ்லீவ்லெஸ்), சில முழுக்கையாகவும்(புல் ஸ்லீவ்ஸ்) இருக்கும். அதற்கு நிலையான அளவுகள் உள்ளன. 
 
சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்து கொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் சுடிதார் ரெடி.
 
அடுத்தபடியாக வெவ்வேறு வெரைட்டியில் இருந்து வெவ்வேறு டிசைன்களை எல்லாம் வெட்டி எடுத்து ப்ளைன் சேலையில் ஓட்டினால் டிசைனிங் சேலை ரெடி..இன்று இதுவும் சக்கை போடும் பிஸ்னெஸ் ஆகி விட்டது...
 
சேலைக்கேற்ப ஜாக்கெட் தேடியது அந்தக் காலம். ஆடம்பரமான ஜாக்கெட், அதற்கு மேட்ச்சாக சேலை தேடுவது இந்தக் காலம்! கழுத்தில், கைகளில், முதுகில் என ஜாக்கெட்டில் ஏதாவதொரு வித்தியாசத்துடன் தைத்து அணிவதையே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். டிசைனர் சேலைகள் எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு டிசைனர் ஜாக்கெட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.ரவிக்கையில் ஜர்தோசி வேலைப்பாடுகள் , பூ வேலைப்பாடுகள் , டிசைன்கள் செய்து கொடுத்து ஒரு ரவிக்கைக்கு ரூபாய் 5000/- வரை வாங்குகின்றனர்...இன்றைக்கு இது தான் பேஷன்..
 
 
மனிதன் உயிரோடு இருக்கும் வரை உடைகள் அவசியம்...சந்தை வாய்ப்புள்ள இந்த தொழிலை வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப செய்து கொடுக்கும் பொழுது பணத்தை கொட்டும் தொழில்...
 
எந்த ஒரு தொழிலும் ஜெயிக்க வேண்டுமென்றால் மனதில் திகுதிகுவென எரியும் ஆர்வமும், ,அதை செயல்ப்படுத்த கடின உழைப்பும், வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த , வித்தியாசமான சிந்தனையும் இருந்தால் இந்த தொழில் வெற்றிக்கனியை கொடுக்கும் தொழிலாகும்.
 
- ரோஸ்லின்
 
Link to comment
Share on other sites

  • 1 year later...

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 11

Tamil_News_large_1137771.jpg

ஊக்கம் தரும் உணவு தொழில்

அன்பின் தோழமைகளே நலமா?மனிதன் உயிர் வாழ உணவு, உடை , இருப்பிடம் இவை மூன்றும் கண்டிப்பாக தேவை ..இன்று, இதில் மிக முக்கியமான உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் குறித்து பார்க்க போகின்றோம்…

இந்தியா… கலாச்சாரத்தில் மட்டுமின்றி, உணவு முறைகளிலும் மிகவும் பிரபலமானது. இந்திய உணவுகளின் சுவைக்கு ஈடு இணை, இவ்வுலகில் வேறு எந்த ஒரு உணவும் இல்லை என்று சொல்லலாம். மேலும், பல்வேறு நாட்டினரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளின் சுவையானது இருக்கும். அதிலும் சைவ, அசைவ உணவுகளில் மட்டுமின்றி, இனிப்பு வகைகளிலும் சிறந்து விளங்குகின்றது... தொழில்களில் கொடி கட்டி பறப்பது உணவு தொழிலாகும்..

ஒரு நல்ல விஷயம் ஆரம்பிக்கும் முன்பு ஸ்வீட் சாப்பிட வேண்டும்ன்னு சொல்லுவாங்க... ஆகவே, முதலில் இனிப்பிலிருந்தே ஆரம்பிப்போமா?

இனிப்பு மகிழ்ச்சியின் குறியீடு… நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுகின்ற மகிழ்ச்சி காலங்களில் உற்றாருக்கும் , உறவினர்கள் மற்றும் தோழமைகள் அனைவருக்கும் இனிப்பு தந்து தம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றோம்..

கற்கண்டு

இனிப்பு பண்டங்கள் பல வகைகள் இன்று நம்மிடையே இருந்தாலும் கற்கண்டின் மகிமையே தனியானது , இதற்கு எப்பொழுதும் வரவேற்புண்டு.
கற்கண்டினைக் கொண்டு பல பொருட்கள் செய்யப்படுகின்றது , குல்கந்து, லேகியம், குளிர்பானங்கள் , இனிப்பு வகைகள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு கற்கண்டு மிக அவசியம். கற்கண்டு இரண்டு வகைப்படும் . பனங்கற்கண்டு , சீனிகற்கண்டு ஆகும். பனங்கற்கண்டு பனஞ்சாறிலும் , சீனிகற்கண்டு சீனியிலும் தயாரிக்கபடுகின்றன ..இதற்கு எப்பொழுதும் வரவேற்புண்டு.


இனிப்பு வகைகள்

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான இனிப்புகள் பிரபலமானதாக இருக்கும். உதாரணமாக, திருநெல்வேலியை எடுத்துக் கொண்டால் அல்வா , மதுரையில் ஜில் ஜில் ஜிகர்தண்டா, கொல்கத்தாவில் ரசகுலா . இப்படி இனிப்பு வகைகள் இங்கு மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் பிரபலமானது.


இயற்கை இனிப்புகளான தேன், கரும்புச் சாறு, இயற்கை வெல்லம், உளர் திராட்சை, பேரீட்சை, மற்றும் கடலை மிட்டாயும் கூட பிரபலம்தான்.

இனிப்பு - கார உருண்டைகள்: குழந்தைகள் நன்கு வளரவும், பெரியவர்கள் களைப்படையாமல் உழைக்கவும் புரதச்சத்து மிகவும் அவசியம். ''பொரி விளங்காய் உருண்டை, முப்பருப்பு உருண்டை, கேழ்வரகு மாவு உருண்டை போன்ற பாரம்பரியமான உணவு வகைகளுடன்... பிரெட் - பனீர் உருண்டை, பிஸ்கட் - கார்ன்ஃப்ளேக்ஸ் உருண்டை என்று குட்டீஸ்களை கவர்ந்து இழுக்கும் அயிட்டங்களுக்கும் இன்று நல்ல வரவேற்பு உண்டு..

ஹோம் மேட் சாக்லேட்:

சாக்லெட் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு சிற்றுண்டி வகையாகும். சாக்லேட்ட. விரும்பாதவர்களைக் காண்பது அரிது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். எந்த சீசனிலும் படுத்துப் போகாத பிசினஸ் சாக்லேட் தயாரிப்பு. குறைந்த உழைப்பில் பெரிய வருமானம் .. இதில் தற்பொழுது ஹோம் மேட் சாக்லேட்கள் விற்பனை சக்கை போடு போடுகின்றது..

பேக்கரி தொழில்

உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ், பீட்சா , பர்கர் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரமயமான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை..

நறுமணமூட்டிய குளிர் பாலேடு:
என்னங்க புரியலையா? அட நம்ப ஐஸ் கிரீமுக்கு தான் இந்த பெயர்..சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சக்கை போடும் தொழிலிலும் இதுவும் ஒன்று என்று சொல்லி தெரியவும் வேண்டுமா…?

குளிர்பானம் தயாரித்தல் ;
நம்முடைய நாடு உஷ்ண பிரதேசமாகும். குறிப்பாக, கோடை காலங்களில் மிக கடினமான வெப்பம் நம்மில் பலரை வாட்டி வதக்கிவிடும் . எனவே நம் நாட்டில் குளிர்பான விற்பனை அதிகமாகும்..

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் பழச்சாறுகள் பலதும் உண்மையில் பழச்சாறுகள் அல்ல. ஆபத்தான வெறும் ரசாயனக்கலவைகளே. இத்தகைய சூழ்நிலைகளில் இயற்கையாக கிடைக்கும் மோர், லெமன்ஜூஸ், காரட் ஜூஸ், இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்ற குளிர்பானங்களுக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு...

கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் இயற்கை உணவு பக்கம், மக்கள் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். இதன் விளைவு, கோடை காலங்களில் ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் கம்பங்கூழ், கேப்பைக் கூழ் விற்பனை செய்வதை காண முடிகிறது. சுத்தமாக செய்து விற்றால் நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாகும்..
எச்சில் ஊறும் ஊறுகாய்..
தினுசு தினுசாக வந்தாலும், நல்ல சுவை, தரம் உள்ள ஊறுகாய்க்கு என்றுமே கிராக்கி உள்ளது. தேடி வந்து வாங்குவார்கள். எலுமிச்சை, மாங்காய், நார்த்தங்காய் உள்ளிட்ட ஊறுகாய்களோடு, வாழைப்பூ, பப்பாளி , பாகற்காய் போன்ற வித்தியாசமான ஊறுகாய்கள், மேலும் மீன் ஊறுகாய்கள் தயார் செய்து விற்றால் நம் காட்டில் மழை தான்..
ஸ்குவாஷ் , இஞ்சி முரப்பா, டூட்டி ப்ரூட்டி , ஜாம் , ஜெல்லி போன்றவை தயார் செய்து விற்பனை செய்யலாம்..
பணமாக சம்பாதித்தால் தான் வருமானம் என்றில்லை , வீட்டுக்கு ஆகும் செலவுகளைக் குறைப்பதும் கூட ஒரு வகையில் வருமானம் தான் ..அந்த வகையில் மேற்கண்டவற்றை சுத்தமாக நம் வீட்டிற்கு தேவையானதை நாமே செய்து கொள்வது கூட ஒரு வகையில் சம்பாத்தியம் தான்..
உணவு தொழில் தொடரும்...

http://www.dinamalar.com/news_detail.asp?id=1137771

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 12

ஊக்கம் தரும் உணவுத் தொழில்…2

Tamil_News_large_1142613.jpg
பாட்டி வடை சுட்ட கதை தான் நமக்கான முதல் உணவகத் தொழில. மக்களின் வாழ்க்கை முறை , வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆர்வம் , செலவிடும் மனோபாவம் அதிகரித்ததின் பயனாக உணவகத் துறை சிறப்பான எதிர்காலத்தை கொண்டுள்ளது...

பாரம்பரிய உணவகங்கள் , நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்கள் தவிர வெளிநாடுகளில் உள்ளதைப் போன்ற சாலையோர மற்றும் துரித உணவகங்கள் இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகின்றன. மேலும், இத்துறை ஈட்டித்தரும் சிறப்பான வருவாய் காரணமாக புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்களின் முதல் தேர்வு உணவகம் என்பதாகவே இருப்பதாக அரசு ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது..

ஒரு உணவிற்கு ருசியை கூட்டுவது மசாலாக்கள். சாம்பார், குழம்பு போன்றவை மசாலா பொருட்களின் சரியான கலவையின் மூலம் சிறப்பாக ருசியை கொடுக்கூடிய மசாலா பொடிகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது..இதே போல் உடனடி இட்லி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்ற மாவு வகைகள் இப்படி உணவுகளில் கொட்டிக் கிடக்கும் தொழில்கள் ஏராளம்...இவற்றை முறைப்படி செய்ய கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இத்தொடரில் காணலாம்..


சுயதொழில் தொடங்க அரசு பல்வேறு உதவிகள் செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களைக் கொண்டு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலம் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு வங்கிக் கடன் மூலம் சுயதொழில் தொடங்கவும் உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்களின் கீ்ழ் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அதிக தொழில் முனைவோரை உருவாக்க New Entrepreneur -cum- Enterprise Development Scheme- NEEDS (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்) என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் ரூ.5 இலட்சத்திற்கு மேலும் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மானிய உதவியாக தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடும் அதிகபட்சமாக 25 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது NEEDS திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானிய (Subsidy) உதவி தொழிலின் திட்ட மதிப்பில் (Project Value) 25% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும் பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 10% விழுக்காட்டை தொழிலில் முதலீடு (Investment) வேண்டும்.
சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை தொழிலில் முதலீடு (Investment) வேண்டும்.NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் பயனடைய 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருப்பின் 35 வயதிற்குள்ளும், சிறப்புப்பிரிவினராக ஆதி திராவிடர், மகளிர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளிகள் ஆகியோர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

. திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.கடனுதவி பெற தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைபவர் ஒரு மாத தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கட்டாயமாகப் பெறவேண்டும்.

UYEGP :இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. பொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந் தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது.

U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்பதாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தால், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை.

ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.


தொழில் தொடங்க முதலில் நம்மிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்க வேண்டும், பின் நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் மேனேஜரை அனுகி தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும், . அவரிடம் செய்யப் போகும் தொழில், திட்ட அறிக்கை அதில் மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் போன்ற விபரங்களை தயார் செய்து கொண்டு செல்ல வேண்டும், . அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிசினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிசினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ளாமல், அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.

கோயம்பத்தூர்…

வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள அறுவடைபின்சார் தொழில்நுட்ப மையமானது, கீழ்வரும் பயிற்சிகளை வழங்கி வருகிறது,
·    அறுவடைபின்சார் தொழில் நுட்ப மேலாண்மை
·    தரக்கட்டுப்பாடு
·    சுகாதார முறையில் உணவு உற்பத்தி
·    வணிக ரீதியான அறுவடைசார் மற்றும் உணவு பதப்படுத்தும் மையங்களை நிறுவுவதற்கான பயிற்சி


உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சியானது விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், வேலையில்லா இளைஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பண்ணை மகளிர் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வேளாண் வணிகர்களுக்கு, மிக குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பதப்படுத்தப்படும் மையம் அமைப்பதற்கான பயிற்சியும், வழிமுறைகளும் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு மாதமும் கட்டணத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது,
மாணவர்களுக்கான உணவு பதப்படுத்தும் தொழில் பயிற்சி
ஓவ்வொரு மாதமும் அடுமனை (பேக்கரி) சம்பந்தமான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கேக், ரொட்டி, கட்லட், பஃப்ஸ், மிட்டாய் ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
இலவச பயிற்சியில், காய்-கனி பதனிடும் முறை, அடுமனை தயாரிப்புகள், கரும்புச்சாறு பதனிடும் முறை மற்றும் மசாலா பொருட்கள் உற்பத்தி முறை ஆகியவை வழங்கப்படுகிறது,


பயிற்சிபற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடைபின் சார் தொழில் நுட்ப மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர் 641003, தமிழ் நாடு
தொலைபேசி, 0422 -6611268

ஒருங்கிணைப்பு:
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:

செயல் துறைத் தலைவர் (வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044 - 28553118, 285553866

-ரோஸ்லின் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1142613

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 13

Tamil_News_large_1148453.jpg

தொழிற்சாலைகள் தொடங்குவது , புதிய வியாபாரம் ஆரம்பிப்பது , பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது என்று பிசினஸில் பல வகை உண்டு ..எந்த ஒரு வெற்றிகரமான பிசினஸும் சின்ன ஐடியாவில் தான் ஆரம்பமாகிறது அதற்கு நம் திறமை என்ன என்பதையும் அதை புத்திசாலித்தனமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொண்டால் போதும்..

தங்கம் , கண்ணு என்று நமக்கு பிடித்தமானவர்களை கொஞ்சுகின்றோம்... தங்கம்மாள் , தங்கப்பன் என்று நம் குழந்தைகளுக்கு பெயர் வைத்து மகிழ்கின்றோம்... ஒரே தங்கம் மயமா இருக்குன்னு பார்க்கின்றீர்களா? ஆமாங்க, நீங்க நினைத்து சரி தான் இன்று எல்லோரும் விரும்பும் தங்கமான தொழிலை குறித்து பார்க்க போகின்றோம்..

மனிதனின் உள்ளத்தைப் பற்றிக் கொண்ட தங்கத்தின் மோகம் உலகப் பொருளாதாரத் தத்துவத்தையும் பற்றிக் கொண்டு விட்டது, உலக நாடுகளிடையே வாணிக பரிமாற்றம் , கடன் தீர்வை , போர்முறை நஷ்ட ஈடு , மற்றும் பொருளாதாரப் பலப்பரீட்சைக்கும் பயன்படுவது தங்க சேமிப்பின் வலிமையேயாகும். சர்வதேசப் பொருளாதாரப் பரிமாற்றங்கள் தங்க நாணயத்தின் மூலம் நடைபெறுகின்றன.உலக பொருளாதார வலிமை அவைகள் சேமித்து வைத்துள்ள தங்கத்தின் மதிப்பை பொருத்ததாகும் .

நம் நாட்டு மக்கள் தங்க நகைகள் அணிவதில் மிகுந்த விருப்பமுடையவர்கள். காதில் தங்க நகை அணிவதற்காகக் காதணி விழா என்னும் விழாவையே நடத்துகிறோம். மேலும் பூப்பு நன்னீராட்டு, திருமணம், வளைகாப்பு என ஒவ்வொரு விழாவிலும் தங்க நகைகளே சிறப்பிடம் பெறுகின்றன.

ஒரு அவுன்ஸ் தங்கத்தைப் பெற மூன்று டன் தாதுப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது, நைட்ரிக் அமிலம் மற்றும் ஹைட்ரோக்ளோரிக் அமிலக் கலப்பைத் தவிர மற்ற எப்பொருளாலும் அழிக்க முடியாத தங்கத்தை ஒளிவீசும் வைகறை என்ற பொருள்பட ஆறாம் என லத்தீன் மொழியில் வழங்கப்பட்டது . தங்கத்திற்கு AU என்பது ரசாயினக் குறியாகும் .உலோகங்கள் அனைத்திலும் மிகச் சிறந்ததான தங்கத்தின் நிறத்தைப் போன்று பளபளப்பு வேறு எவ்வித உலோகக் கலப்பிலும் ஏற்ப்படுவதில்லை , தங்கம் ஒளி குன்றுவதில்லை , கரை பிடிப்பதில்லை , எவ்வித சக்தியையும் முழு அளவில் ஏற்கும் தன்மையுடையது. எவ்வித வடிவிலும் வடித்தெடுக்க உகந்தது.ஒரு மில்லி மீட்டரில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு கனமுள்ள தகடாக வடித்தால் ஒரு கிராம் தங்கத்தில் 5800 சதுர சென்டிமீட்டர் தங்கத் தகட்டைப் பரப்பலாம் , அதே அளவு தங்கத்தில் 2300 மீட்டர் நீளமுள்ள மிக மெல்லிய தகடுகளும் , இழைகளும் சிற்பங்களுக்கும் பொன்னாடைகளுக்கும் விவிலிய நூல் காலத்தில் கூடப் பயன்பட்டன ..தங்கத்தின் நிலையான தன்மையும் , நிறம் மங்காத இயல்பும் , காற்றின் ஈரத்தாலும் வலிவுமிக்க வேதியல் பொருட்களாலும் சிதையாத தன்மையும் தங்கத்தை விலையுயர்ந்த பொருளாக மதிப்பிடச் செய்கிறது , நகைகள், நாணயங்கள் செய்யும் தொழிலும் , பல்கட்டும் தொழிலும் வேதியல் தொழிலும் தங்கம் பயன்படுகிறது

மிக மெல்லிய தங்கத் தகட்டில் ஊடுருவும் ஒளிக்கதிர் மென்பச்சை நிறமாக உள்ளதால் நவீன ஒளிக்கதிர் ஆராய்ச்சியில் வடிகட்டும் சாதனமாக தங்கத்தகடு பயன்படுத்தப்பட்டு , கண்ணுக்கு புலப்படாத இன்ப்ரா சிவப்பு ஒளிக்கதிரை உபயோகிக்க வகை செய்கின்றது . பூமியை தவிர செவ்வாய் , புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களில் தங்கம் இருப்பதாக கருதப்படுகின்றது.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட தங்க கனிமத்திலிருந்து தங்கத்தை பிரிக்கும் பொழுது நமக்கும் கிடைக்கும் சுத்த தங்கத்தின் தூய்மை 100 சதவீதம் துகள்களாக கிடைக்கின்றது . இதை உருக்கும் பொழுது காற்றில் கலந்துள்ள தனிமங்களில் ஒன்றை ஈர்த்துக் கொண்டு கெட்டி தன்மையை அடைகிறது . இதை பரிசோதித்து பார்க்கும் பொழுது 100 சதவிகித தங்கம் 99.99 சதவிகிதமாக கிடைக்கிறது . இதை அடிப்படையாக கொண்டு தூய்மையை அளவிடும் முறையில் முன் காலத்தில் 24 பாகங்களாக பிரித்தனர். முன் காலத்தில் வணிகம் நடக்கும் பொழுது ஒரு முறை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பண்டமாற்று முறையில் கப்பலில் வணிகம் நடந்தது அப்போது ஒரு நாட்டில் ஒரு பொருளை கொடுத்து விட்டு அதற்கு ஈடாக தங்கத்தை பரிமாற்றம் செய்தனர் ..அதே கப்பலில் வாங்கின தங்கத்தில் சிறிதளவு எடுத்து தரத்தை பிரித்துப் பார்த்து அதன் தரத்தின் படி 24 அடுக்குகள் -ரேக் கொண்ட அடுக்குகளில் பிரித்து வைத்தனர். காலப்போக்கில் ரேக் என்பது கேரட்டாக உருமாறியது

சாதரணமாக மக்கள் தங்க நகைகள் வாங்கும் பொழுது நகைக்கான குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்குகிறோம் , அதே நகையில் தரத்திற்கான முத்திரை , விற்பனையாளரின் முத்திரை அனைத்தும் இருப்பதை காணலாம் இருந்தாலும் அந்த முத்திரையானது தரத்திற்கு பூர்ண உத்திரவாதம் தருமென்று கூற இயலாது .மக்கள் தரக்குறைவான நகைகள் வாங்கி ஏமாறாமல் இருப்பதற்கும் , வியாபாரிகள் தரக்குறைவான நகைகள் விற்பனை செய்யாமல் இருப்பதற்கும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தர நிர்ணயதலங்களில் இருந்து உலோக நகைகளுக்கு குறிப்பிட்ட தரத்திற்கான உத்திரவாத முத்திரையை அந்த நகைகளில் பாதிப்பதாகும் . இதை தான் ஆங்கிலத்தில் Hall Marking என்கின்றோம்..இந்திய நாட்டில் தங்கம் மற்றும் தங்க நகைகளின் தரத்தை நிர்ணயித்து BIS CERTIFICATION FOR HALL MARKING OF GOLD JEWELLERY - BIS எனப் பெயரிட்டுள்ளது

இத்தகைய சிறப்புமிக்க இத்தொழிலில் தொழில்கள் கொட்டிக் கிடக்கின்றது..அனுபவ வாயிலாக இத்தொழிலை மேற்கொண்டு வருபவர்களும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் காலக்கட்டாயம் எழுந்திருக்கின்றது.

பல்வேறு தொழில் நுட்பங்கள் , வெளிநாட்டு சந்தையின் போட்டிகள், புதுவடிவு நகைகள், நெருக்கடிகளுக்கு சிக்கித் தவிக்கும் தங்க நகைத் தொழிலாளர்கள் அவற்றை மீறி தங்கள் கால்களை உறுதியாக ஊன்றி வளர்ச்சி பாதையில் நடை போடுவதற்கும், புதிதாக இந்த தொழிலை செய்ய நினைப்பவர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் தடைகளை தாண்ட , மக்களின் தேவை அறிந்து அதற்கு ஏற்றவாறு தங்க நகைகளை உருவாக்கி பல்நோக்கு முறையில் சிறந்த சந்தைப்படுத்துதல் உத்திகளை கையாளும் தொழில் முனைவோராக உருவாக்கிட இந்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் இந்திய இயற்கை கல் மற்றும் ஆபரண செய்திதிறன் கூட்டமைப்பு உடன் இணைந்து கீழ்க்கண்ட பயிற்சிகளை இலவசமாக கொடுத்து வருகின்றது.
.1. வார்ப்பு இயந்திரம் கையாளுதல்
2. நகை உற்பத்தி பயிற்சி
3. கற்கள் பதிக்கும் பயிற்சி
4. நகை வடிவமைப்பு பயிற்சி
5. மதிப்பீட்டாளர் பயிற்சி
6. நகை விற்பனைப் பயிற்சி

பயிற்சி மற்றும் தங்க தொழில்கள் குறித்த சந்தேகங்களுக்கு 9842073219, 9842195644, இந்த எண்களை தொடர்புக் கொள்ளுங்கள்...

-    ரோஸலின் -

http://www.dinamalar.com/district_detail.asp?id=1148453

Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 14

Tamil_News_large_115499420150106093407.jpg

அன்பு தோழமைகளே நலமா?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்...

பெண்களுக்கு நகை என்றால் கொள்ளை ஆசை அதுவும் விதவிதமாக அணியவே பெரும்பாலான பெண்கள் விரும்புவர் . இன்னிக்கு தங்கம் விற்கின்ற விலையில அதை வாங்க முடியாதவங்களுக்கெல்லாம் ஃபேன்ஸி ஜுவல்ஸ்தான் பெஸ்ட் சாய்ஸ்!

'ஆம் இந்த வாரம் பெண்கள் விரும்பும் , பெண்களை அழகாக காட்டும்...பேன்சி நகைகள் தயாரிக்கும் தொழில்கள் குறித்து பார்க்க போகின்றோம்.. 

சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை அதனால இந்த தொழிலுக்கு எப்பொழுதும் வரவேற்ப்பு இருந்து கொண்டே இருக்கும். 

பேன்சி நகைகள் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மட்டுமே விரும்பி வந்த பேன்சி நகைகள் தற்பொழுது எல்லா தரப்பு பெண்களையும் ஈர்த்துள்ளது பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்' 

"கிறிஸ்டல் நகைகள், குந்தன் நகைகள், திரெட் பேங்கிள்ஸ், பேப்பர் ஸ்டட், டெரகோட்டா ஜுவல்லரி போன்ற பேன்சி நகைகளை முறையாகக் கற்றுக்கொண்டு பெண்கள் வீட்டில் இருந்தபடியே இதற்கு மூலதனம் கலை ஆர்வமும், கிரியேட்டிவிட்டியும்தான்” பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் பேன்சி நகையை உருவாக்கலாம். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும். இதற்கு பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.

உதாரணமாக . ரெடிமேடாக கிடைக்கும் பல வண்ண கிரிஸ்டல், குந்தன் கற்கள், ஸ்டோன் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கிரிஸ்டல், குந்தன் போன்ற நகைகள் தயாரிக்கப்படுகின்றன. ..இன்று பலரும் இதை செய்வதால் புதுமைகளை புகுத்தினால் மட்டுமே இந்த போட்டி உலகில் நிலைத்து நிற்க முடியும்..

வட இந்தியப் பெண்களும், வெளிநாட்டுப் பெண்களும் நம்மூர் பெண்களைப் போல பளபள தங்க நகைகளை விரும்பறதில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா நகைகளை அதிகம் விரும்புகின்றனர்..தற்பொழுது தமிழகத்திலும் இந்த நகைகளுக்கு நல்ல வரவேற்ப்பு வர ஆரம்பித்துள்ளது..

'சாதாரண களிமண்ல செய்யறதுதான். இந்த டெரக்கோட்டா நகைகள் , ''சுற்றுச்சூழலுக்கு உகந்தது... உடல் சூட்டைத் தணிக்கக் கூடியது. மெட்டல் நகைகளைப் போல அலர்ஜியை உருவாக்காதது. எந்த டிசைன், எந்த கலர்லயும் செய்யக் கூடியது. எல்லாத்தையும் விட, தோற்றத்தையே கம்பீரமா மாத்தக் கூடியது...”

''தங்கமும் வெள்ளியும் விற்கின்ற விலைக்கு இன்றைக்கு அதையெல்லாம் வாங்க முடியாத சூழ்நிலை . டிரஸ்சுக்கு மேட்ச்சா, அதே கலர்ல, அதே டிசைன்ல செயற்கை நகைகளைத் தேடிப் பிடிச்சுப் போட்டுக்கிறது அத்தனை சுலபமில்லை. பட்ஜெட்டுக்கு ஏத்தபடி, விரும்பின கலர், டிசைன்ல நகை வேணும்னு நினைக்கிறவங்களுக்கு டெரகோட்டா நகைகள்தான் சரியான சாய்ஸ்.என்பது இன்றைய சந்தை நிலவரம்..

அடுத்தபடியாக சக்கை போடு போடுவது காகிதத்தால் செய்யும் நகைகள் எடையும் குறைவு. எந்தக் கலர் உடைகளை அணியறோமோ அதுக்கு மேட்ச்சிங்கா அணியலாம்.அவ்வளவு ஏன், எந்த டிசைன்ல, எந்தக் கலர்ல, எப்படி விரும்பறோமோ அப்படி இதைச் செய்யலாம்.

.எதிலுமே ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கற்றுக்கொள்ள முடியும் பொழுதுபோக்கிற்காகக் கற்றுக்கொண்ட கலை சிலருக்கு பொழுதுபோக்காகவே தொடரலாம். ஆனால் சிலருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறலாம். எல்லாமே நம் அணுகுமுறையிலதான் இருக்கிறது.

ஒரு செயலைத் தொடங்கும் பொழுது வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளைக் கூட கையாள முடியும் ..உள்ளுக்குளேயே எழுகின்ற எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவை எதிர்மறை எண்ணங்களாக பதிந்து விடும். முதலில் இந்த எதிர்மறை எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றது என்பதை அறிந்து அதை அகற்ற சில அடிப்படை மன நிலையையும் , மதிப்புகளையும் உணர்வுகளையும் மாற்ற வேண்டும். 

கொஞ்சம் ரசனை


கொஞ்சம் முயற்சி


பெரிய வெற்றி..

எந்த தொழிலாக இருந்தாலும் வித்தியாசமான அணுகுமுறை வேண்டும்...நான் நடத்தி வரும் நிறுவனத்தில் தீபாவளி , கிறிஸ்மஸ் போன்ற விழாக்களுக்கு பெண்கள் எடுத்த உடைகளின் புகைப்படங்களை வாங்கி அந்த நிறத்திற்கு தகுந்தவாறு கிறிஸ்டல், காகித , டெரக்கோட்டா, லோரியல் நகைகளை செய்து கொடுக்கும் பொழுது வாடிக்கையாளர்களும் திருப்திப்பட்டனர்..பெண்களிடையே நல்ல வரவேற்ப்பும் கிடைத்தது..

அதே போல் தமிழகமாக இருந்தால் எந்த ஊர் பெண்கள் எப்படிப்பட்ட நகைகளை அணிய விரும்புவார்கள் என்பதையும் அறிந்து அதற்கு தகுந்தவாறு இத்தொழிலை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சிறந்த தொழில் இது.

மற்ற எல்லா உயிர்களையும் விட மனிதனுக்கு இயற்கை கொடுத்த பரிசு சிந்திக்கும் திறன்..இந்த ஈடில்லா பரிசான சிந்தனை திறனை நாம் மேற்கொள்ளும் இந்த தொழிலில் புகுத்தினாலே வெற்றி மேல் வெற்றி தான்..

- ரோஸலின்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1154994

Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 15

Tamil_News_large_1159558.jpg

அழகே அழகு.. தேவதை… ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்...
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே...
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..! வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..! உண்மைதான்! ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான்! எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும்.
அழகு ..ஆம் இந்த வார்த்தையை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்தளவுக்கு ஒவ்வொருவரும் இன்னும் கொஞ்சம் நளினமாகக் காட்சி தந்தால் என்ன, முகம் இன்னும் கொஞ்சம் சிவப்பழகுடன் இருந்தால் நல்லது தானே, கூந்தல் இன்னமும் நீளமாக, அடர்த்தியாக இருந்தால் சற்று அழகாயிருக்குமே என்றெல்லாம் பெண்கள் எண்ணுவதும், நேர்த்தியான சிகை அலங்காரத்துடன் இன்னும் கொஞ்சம் சிவப்பான முகத்துடனும் கம்பீரமாகக் காட்சி தந்தால் நன்றாக இருக்குமே என பெரும்பாலான ஆண்கள் நினைப்பதும் இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாகி விட்டது

முன்பிருந்த தலைமுறையினர் மஞ்சளும் , சந்தனமும், பன்னீராலும் தன அழகை பராமரித்தனர் என்றால் இந்த காலத்து பெண்கள் முகப்பூச்சுகளை பயன்படுத்துகின்றனர் அவசரம் கலந்த அதிரடியான நிகழ்வுகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறை, அனைவரையும் மூச்சுமுட்டத் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓட்டத்தால் அவர்களின் உணவு பழக்கம், மனச்சோர்வு, பதட்டம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர் , சுற்றுச் சூழல் மாசுவால் தோலில் , தலைமுடியில் ஏற்படும் மாற்றங்கள், தூக்கமின்மையால் முகத்தில் தெரியும் சோர்வு, கருவளையம் போன்ற்வை ஆண்/ பெண் இருபாலருக்கும் உற்சாகமின்மையை உருவாக்குகிறது. இதனால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்ந்துபோய்விடுகிறது. அதனால் ஆண்களும், பெண்களும் அழகு நிலையங்களை நம்புகிறார்கள். அங்கே புறத்தை அழகுபடுத்தி, அகத்திலும் தன்னம்பிக்கையை தூக்கி நிறுத்துகிறார்கள்.
புதிய தொழில் நுட்பங்களுடன் அழகு கலை மகத்தான விரிவாக்கத்தைப் பெற்றதற்கான முக்கிய காரணம் ஆண்- பெண் இருபாலரிடையேயும் அழகு சிகிச்சை மற்றும் அழகுபடுத்தலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான விழிப்புணர்வே ஆகும்.அழகு நிலையம் என்றதும், குடும்ப பெண்களுக்கு அது எதற்கு என்று பெண்கள் விலகி ஓடிய காலம் ஒன்று இருந்தது. இன்று அழகு நிலையங்களைத் தேடி எல்லோரும் ஓடுகிறார்கள். காரணம், அழகு நிலையம் என்பது அழகுபடுத்தும் இடம் மட்டுமல்ல, ஆரோக்கிய அம்சங்களும் அங்கே நிறைந்திருக்கிறது. அதனால்தான் ஏராளமான பெண்கள் அழகுக் கலையை கற்று வீட்டிலேயே அழகு நிலையங்கள் அமைத்து சம்பாதிக்கிறார்கள்.


இந்தத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள் பொருளாதார சுதந்திரத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் வேலையை ரசித்து செய்வதால் முழு திருப்தியும் இருக்கிறது. குறிப்பாக, நிறைய பெண்களுடைய வாழ்க்கையை சாதகமான சூழலுக்கு மாற்றக்கூடிய வல்லமை இந்தத் துறைக்கு உண்டு.
அழகுக் கலைப் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இதற்குரிய பாடங்களைப் படிப்பதோடு, வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசவேண்டும்; எப்படி பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். எல்லா மொழி வாடிக்கையாளர்களிடமும் சுலபமாகத் தொடர்புகொள்ள வேண்டும். அதற்கு, ஆங்கில மொழி அறிவு கொஞ்சமாவது இருந்தால் நல்லது..
அதேபோல், வேலை உத்தரவாதமும் உண்டு. எளிதில் தனியாக தொழில் தொடங்கி வெற்றி பெறவும் முடியும். இந்தத் துறையில் இவ்வளவுதான் படிப்புன்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் நிறைய விஷயங்கள் வந்துகிட்டே இருக்கு. நம்மை நாமே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.
மணப்பெண் அலங்காரம் முகூர்த்த நாட்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதில் முறையான பயிற்சி, பொறுமை, ஆர்வம் இருக்கவேண்டும். நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்துக்கு செல்வது அவசியம். அவசரகதியில் செய்தால், அலங்காரம் நன்றாக இருக்காது. மணப்பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே சரும பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்னதாக மட்டும் மற்ற அலங்காரங்களை செய்ய வேண்டும். எண்ணெய் பிசுபிசுப்பில்லாத, நிலைத்து நிற்கக்கூடிய மேக்கப் சாதனங்களை பகல் நேரத்தில் மணமகளுக்கு பயன்படுத்த வேண்டும். மாலை, இரவு நேரங்களில் வேறு விதமான மேக்கப் யுக்திகளை கையாளலாம். மெஹந்தி போடும்போது, பழைய பாணியை பின்பற்றாமல், புதிய டிசைன்கள் போடுவது பலரையும் கவரும். இதற்கு அழகுணர்ச்சியும், கற்பனை திறனும் அவசியம். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தொழில் சிறக்கும். வீட்டில் இருந்தவாறே வெளியிடங்களுக்கு சென்று மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடும் பணி மேற்கொண்டால் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாய் கிடைக்கும்.

புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ற முறையில் தயார்ப்படுத்திக் கொண்டு பல அழகு நிலையங்கள் களம் இறங்கியுள்ளனர்.... ஹேர்-ஸ்பா எனப்படும் சிகை அலங்காரங்கள், Hair Straightening என்னும் முடிநீட்டல், முடி நிறம் மாற்றுதல் முதலியனவும் பேசியல் ஒயிட்டனிங், ஃபூரூட் பேசியல், சாக்கலேட் பேசியல், அரோமா பேசியல், கோல்டன் பேசியல் ஆகியவையும் ஸ்பா - பெடிகியூர், ஸ்பா-மெனிக் கியூர், வாக்ஸிங், வார்ட்ஸ் ரிமூவிங் (மரு நீக்குதல்) முதலானவைகளும் நவீன தொழில் நுட்பங்களுடன், உத்திரவாதம் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டும், மிக அண்மையிலான செய் முறை யுக்திகளுடனும் பாதுகாப்புடனும் திறம்படச் செய்யப்படுகின்றன.
தற்பொழுது இயற்கை பக்கம் மக்களின் கவனம் திரும்பிய நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ போன்ற இயற்கையாக்க் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அகத்துக்கும் புறத்துக்கும் சிகிச்சை மேற்கொள்ளும் அழகு நிலையங்களுக்கு மக்களின் வரவேற்பு உண்டு என்று சொல்லவும் வேண்டுமா..
இந்த துறையை பொறுத்தவரை நாளுக்கு நாள் அழகு நிலையம் அதிகரித்து வருவது போல் தெரிந்தாலும் ..இக்கலையை படித்து தொழில் ஆரம்பித்து செய்ய முடியாமல் தடுமாறியவர்கள் நிறைய நபர்கள் உண்டு, இதற்கு காரணம் முறையான பயிற்சியின்மையே , வாடிக்கையாளர்களின் உடல் நிலைக்கு எது பொருந்தும், எது பொருந்தாது என்பதை தெரிந்து கொள்ளாததும் ஒரு காரணம் .

மேக்கப் போடும்போது நல்ல தரமான கம்பெனி பொருட்களை வாங்கி மேக்கப் போடணும். விலை கம்மியாக கிடைக்கிறது; என்று நினைத்து மலிவான பொருட்களை வாங்கி பயன்படுத்தி லாபம் ஈட்டலாம் என்று தப்பு கணக்குப் போடக்கூடாது. அப்புறம் இன்னும் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை வந்துவிடும்..
ஆங்காங்கு நடக்கும் ஒரு மாத பயிற்சி எடுத்துக் கொண்டு தாங்களும் அழகு நிலையம் நடத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். இதில் தொழில்நுட்பம் இருக்கிறது; அறிவியல் இருக்கிறது; புதிய உத்திகள் தேவை இருக்கிறது. இதற்கு ஒரு மாத கால பயிற்சி போதுமானது இல்லை...நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்ற தாகம் தனியாமல் இருக்க வேண்டும்.
கடினமான பாறையை மென்மையான நீர் துளை செய்கின்றது..
அன்பான அணுகுமுறையால் வாடிக்கையாளர்களை தன வசமாக்கலாம்..

http://www.dinamalar.com/news_detail.asp?id=1159558

Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 16

அதோ வருகிறாரே அவரை பார்த்தீர்களா? எவ்வளவு துணிச்சலுடன் அந்தத் தொழிலை செய்தார்..இன்றைக்கு பாரு காரு என்ன பங்களா என்ன என்று சிலரை வியப்புடன் குறிப்பிட்டு சொல்லியிருப்போம்...துணிந்தவர்களுக்கு துக்கம் இல்லை என்பார்கள் ..துணிந்து விட்டால் துக்கம் மட்டும் இல்லை தூக்கமும் வருவதில்லை எப்பொழுதும் அவர்கள் இலக்கை நோக்கியே சிந்தித்து கொண்டிருப்பார்கள்..

சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டால் அதை பற்றிய தேடல், தாகம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.அப்புறம் தோழமைகளே இன்றைக்கு என்ன தொழில் என்று தானே ஆவலுடன் இருக்கீங்க...இன்றைக்கு விளம்பரத்துறையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பிரிண்டிங் தொழில் குறித்து பார்க்க உள்ளோம்..

.புதுமனை புகுவிழாவோ,காதுகுத்தோ,கல்யாணமோ, துக்க நிகழ்ச்சியோ - எதுவாக இருந்தாலும் இன்றைக்குப் பத்திரிகை அடித்து அதை ஊருக்குத் தெரியப்படுத்துவது வாடிக்கையான விசயமாக மாறிவிட்டது. இதற்கு அடிப்படையாக இருப்பது பிரின்டிங் தொழில். இந்தத் தொழில்மூலம் இன்றைக்கு நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர் பலர். பெரிய ஆப்செட் இயந்திரங்கள் வைத்திருந்தால்தான் பிரின்டிங் தொழிலில் லாபம் பார்க்க முடியும் என்றில்லை. சிறிய அளவில் மினி ஆப்செட் என்று சொல்லப்படும் இயந்திரங்களைக்கொண்டும் வெற்றிகரமாக வருமானத்தை ஈட்டலாம்.

வீட்டு விசேஷங்களுக்கான பத்திரிகைகள் தவிர, விசிடிங் கார்டு , விதவிதமான விளம்பரங்கள், பில் புக்குகள், லெட்டர் பேடுகள், விளம்பரத் துண்டறிக்கைகள், விளம்பரத் துணிப்பைகள் அச்சிடுதல், பனியன்களில் அச்சிடுதல், பேட்ஜ்கள் தயாரித்தல், ஸ்டிக்கர்ஸ் தயாரித்தல், வாழ்த்து அட்டைகள் தயாரித்தல், புத்தகங்களின் மேலட்டை அச்சிடுதல், போஸ்டர்கள் அச்சிடுதல், கொடிகள் அச்சிடுதல், பேனர்கள் அச்சிடுதல், நேம் கீ செயின், காலேண்டர், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், டயரி, போஸ்டர், புத்தகம், தீப்பெட்டிக்கு லேபில், மேப், தொங்கும் போஸ்டர், போன்ற ஏராளமான வாய்ப்புகள் இந்தத் தொழிலில் உள்ளது.

இத்தனை தொழில் வாய்ப்புகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கும் பிரிண்டிங் தொழிலில் பல வகை உண்டு அவை இன்க் ஜெட் பிரிண்டிங், டிஜிட்டல் பிரிண்டிங், ஸ்க்ரீன் பிரிண்டிங், ஹீட் பிரஸ், பிலேசோக்ராபிக் பிரிண்டிங், லேசர் பிரிண்டிங், பேட் பிரிண்டிங் மற்றும் ஆப் செட் பிரிண்டிங். 

'ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகிக்கும் ஸ்க்ரீன் வேறுபடும்.


குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட் முறையில், மஞ்சள் பை, 'நான் ஓவன்' பைகளில் பிரின்ட்டிங் செய்யலாம். இதன் டைரக்ட் ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.


மூன்றாவது முறையான 'லாஸ் ரன்னிங்'குக்கு, கிரோன் (இணூணிண) லேயர் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது நீல நிற ஸ்க்ரீன் ஆகும். அதிக எண்ணிக்கையில் பிரின்ட் செய்ய இது உதவும். ஆக, எது உங்கள் வசதிக்கும் வரும் ஆர்டர்களுக்கும் ஏற்றது என்று யோசித்து, தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


டிஜிட்டல் பிரிண்டிங்கில் இன்று சக்கை போடு போடுவது ஃப்ளெக்ஸ் ப்ரின்டிங். இரண்டு அடி முதல் பிரமிக்கவைக்கும் அளவு பேனர்கள் நினைத்த நேரத்தில் நினைத்தவுடன் பிரமிக்கவைக்கும் டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் ப்ரின்டிங், புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு.


இதில் முன்பக்க ப்ரின்டிங், பேக் சைடு ப்ரின்டிங் என இருவகை உள்ளன. முன்பக்கமாக விளக்குகள் பொருத்தும் வகையும், பின்பக்கம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிரூட்டும் விளம்பரமாகவும் பார்ப்பதுதான் இந்த இருவகை ஃப்ளெக்ஸ்கள். டிஜிட்டல் ப்ரின்டிங் இயந்திரம், கணினி, ப்ரின்டர் மற்றும் சில அடிப்படை உபகரணங்கள் போதுமானது. நன்கு திறமையான வடிவமைப்பு ஆட்கள், ப்ரின்டிங் தொழில் தெரிந்தவர்கள், உதவியாளர்கள் தேவைப்படும். கணினி மூலம் உருவாக்கப்படும் வடிவமைப்பை அப்படியே டிஜிட்டல் இயந்திரத்தில் ப்ரின்டிங் செய்யவேண்டியதுதான். 


பிரிண்டிங் தொழிலில் இயந்திரங்கள் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய தொழில். இதன் மூலம் சணல் பைகள், துணிப்பைகள், போன்றவற்றிலும் ஆர்டர் எடுத்து பிரிண்ட் செய்து கொடுக்கலாம். ஓரளவிற்கு இடவசதி உள்ளவர்கள் இத்தொழிலை செய்யலாம்.


பிளாக் பிரிண்டிங்: இது சுலபமாகச் செய்யக் கூடிய பிரிண்டிங் தொழிலாகும். தலையணை உறை, படுக்கை விரிப்பு, சுடிதார், சேலை போன்றவற்றில் பிரிண்டிங் செய்யலாம். மேலும் கடவுள் படங்கள், பூ டிசைன்கள் ஆகியவற்றை பிரிண்டிங் செய்து, பிரேம் போட்டு விற்பனை செய்யலாம்


டை அண்டு டை: இதை சுடிதார், நைட்டி, படுக்கை விரிப்பு போன்றவற்றை பிரிண்ட் செய்யலாம். பிளாக் பிரிண்ட் போல் இல்லாமல் வட்ட வடிவில், அலை அலையாக பலவிதங்களில் பிரிண்ட் செய்யலாம். இந்த துணிகளினால் தயார் செய்த பைல்கள் , கைப்பைகள் போன்றவற்றிற்கு நல்ல வரவேற்ப்பு உண்டு.. 

.மதி நுட்பம் இருந்தால் மட்டும் போதாது , ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க துணிவு நிறைய வேண்டும்..இந்த தொழில் தான் என்று முடிவு செய்து இறங்கி விட்டால் எந்த வித குழப்பமும் நேராமல், தடைகளை , தோல்விகளை கண்டு சோர்வடையாமல் முனைப்புடன் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். 

துணிவு ஒன்று தான் தொழில் முனைவோர்களின் பக்க பலம் ..இனி உங்கள் முயற்சியும் , துணிவும் வெற்றியை தரும்..

கனவுகள் தொடரும்..

- ரோஸலின் 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1165164

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 17

அன்பு தோழமைகளே நலமா? தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் , தை மாதம் என்றாலே மங்களகரமான மாதம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் , இந்த மாதத்திற்கு ஏற்றார் போல் சிறிய முதலீட்டில் நிறைய லாபம் தரும் மங்களகரமான தொழில்கள் குறித்து காணப் போகின்றோம்..
முதலில் மங்களகரமான குங்குமத் தொழிலிருந்து ஆரம்பிக்கின்றேன்..குங்குமம் மங்களத்தின் குறியீடு, அக்காலத்தில் போருக்கு போகுமுன்பும் போரிலிருந்து வந்த பின்பும் வீரர்களை வெற்றி பெற வேண்டி இறைவனுக்கு உயிர் பலி கொடுத்து அதன் ரத்தத்தை நெற்றியில் பூசி வந்த பழக்கம் பிற்காலத்தில் உயிர் பலியை நிறுத்திய பின்பு , இரத்தத்திற்கு பதில் சிவப்பு நிற குங்குமத்தை பயன்படுத்துகின்றனர். இன்றும் வடஇந்திய பெண்களில் திருமணமாகதவர்கள் நெற்றியில் குங்குமமும் , திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமமும், தலை வகிட்டில் குங்குமமும் வைக்கின்றனர். இதே போல் பெண் தெய்வ வழிபாட்டில் குங்குமத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது . எனவே இந்தியாவில் ஆண்டிற்கு பல்லாயிரம் டன் அளவு குங்குமம் செலவாகின்றது, தேவைப்படுகின்றது நறுமண மிக்கதும் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டும் , விற்பனையாகிக் கொண்டு வருகின்றது. குங்கும தயாரிப்பு தொழிலானது குறைந்த முதலீட்டில் மிகுந்த லாபகரமான தொழிலாகும்.

வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு இம்மூன்றும் சேர்ந்ததே தாம்பூலம் ..நம் நாட்டில் தாம்பூலம் ஒரு சமூக பழக்கமாகவே உள்ளது. தாம்பூலம் இல்லாமல் மகிழ்ச்சியான விழா இல்லை.துக்கமான நிகழ்ச்சியுமில்லை .இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற தாம்பூலத்தில் பாக்கை பலவகைகளில் உபயோக்கின்றனர். சீவல், வெட்டு பாக்கு , கொட்டை பாக்கு , வாசனை பாக்கு என்று ஒவ்வொரு விதமாக பயன்ப்படுதுகின்றனர் .இது ஒரு குடிசை தொழிலாகவும் , நல்ல லாபகரமான தொழிலாகவும் உள்ளது.
கற்பூரம் என்றும் , சூடம் என்றும் அழைக்கபடுகின்ற பொருளானது இந்திய மக்களின் அன்றாட பொருளாக உள்ளது. தெய்வ வழிபாடுகளில் ஒன்றான தீப ஆராதனைக்கு இக் கற்பூரவில்லை முதலிடம் வகிக்கின்றது . இல்லங்களிலும் , ஆலயங்களிலும் , இறைவழிபாட்டிலும் கற்பூரம் அத்தியாவசியப் பொருளாக உள்ளது. மார்கழி , தை போன்ற மாதங்களில் இதனுடைய தேவையானது அதிகமாக உள்ளது. இதுவும் நல்ல லாபம் தரக் கூடிய தொழிலாகும்.

திருமணம் மற்றும் மகிழ்ச்சிக்குரிய விழாக்களில் உறவினர்கள், நண்பர்களை வரவேற்கப் பன்னீர் தெளிப்பதை ஒரு வித சடங்காக நாம் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம் இன்று பன்னீர் என்பது வாசனைத் திரவியம் மட்டுமல்ல, பற்பல காரியங்களுக்கு பயன்படுகின்ற பொருளாகும் மனோ ரஞ்சித பன்னீர், மல்லிகை பன்னீர், தாழம்பு பன்னீர், ரோஜா பன்னீர் போன்று நமக்கு விருப்பமான மலர்களில் பன்னீர் தயார் செய்யலாம்.

ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும். இதற்கு பெரிய மூலதனம் தேவையில்லை.. . ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சிறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்தி, மட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்தி, தாழம்பூ வத்தி, ரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.

சாம்பிராணியினால் புகை மூட்டி தெய்வ வழிபாடு செய்யாத மக்களே உலகில் இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு சாம்பிராணியின் தேவை இன்று நாட்டில் உள்ளது . இந்தியாவில் பெண்கள் குழந்தைகள் நீராடின பின்பு தங்கள் கேசங்களை நறுமண மூட்ட தொன்று தொட்டு சாம்பிராணியை புகைமூட்டப் பயன்படுத்துகின்றனர் மற்றும் செவ்வாய் , வெள்ளி போன்ற நாட்களில் கழுவி சுத்தப்படுத்திய பின் சாம்பிராணி புகை மூட்டி வீட்டை கம கம என்று வாசனையால் மூழ்கடிக் கின்றனர்..இவ்வாறு பற்பல காரியங்களுக்குப் பயன்டும் சாம்பிராணி வாசனைப் பொருள் மட்டுமின்றி ஒரு கிருமி நாசினியும் கூட, கொசு, ஈ , பாச்சான் போன்ற வீட்டில் நடமாடும் நோய்ப் பூச்சிகளை சாம்பிராணி புகைமூட்டத்தால் வெளியேற்றப் பயன்படுகின்றது.

மெழுகுதிரியின் உபயோகத்தினைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். மெழுகுதிரியில் பலவகைகள் உள்ளது. மெழுகுதிரி வெண்மையானதும், தேன் மெழுகு போன்றும், மஞ்சள் நிறத்திலும் , பல வண்ணங்களிலும், பிறந்தநாள் விழாக்களில் பயன்படுத்தும் சிறிய வண்ண நிற மெழுகுதிரிகளும் மற்றும் ஐந்து நட்சத்திரங்கள் போன்ற தங்கும் விடுதிகளில் விருந்துகளின் போது பிக்னிக் போன்ற சுற்றுலா காலங்களில் உணவினை சூடுபடுத்த Fuel Candle என்றும் பல .வகைகள் உள்ளன.மேலும் வண்ண ஒளி தருவது, நறுமணமிக்க வாசனை தருவது, கொசுவர்த்தி போன்ற இம்மாதிரி பல வகையான மெழுகுதிரிகள் உள்ளன.

பாச்சை உருண்டையை நாப்தலின் பால் என்றும் கூறுவார்கள் . பாச்சை உருண்டையானது ஒரு பூச்சி கொல்லியாகும் , ஒரு விதமான மணம் உள்ளதால் , துர்நாற்றம் போக்குகின்ற பொருளாகவும் இருப்பதால் பாச்சை உருண்டையின் தேவை அதிகமாக உள்ளது.துணிகள், காகிதங்களை அரிக்கும் சில்வர்பிஸ் போன்ற பூச்சிகளைக் கொல்லும் திறன் இருப்பதால் , வீட்டில் உள்ள பீரோ , புத்தக அலமாரிகளில் இந்த பாச்சை உருண்டையை பாமரரும், செல்வந்தரும் பயன்படுத்தும் காரணத்தால் இதற்கு எப்பொழுதும் வரவேற்ப்பு உண்டு..

இப்படி சிறிய முதலீட்டில் லாபம் தரும் தொழில்கள் ஏராளம் ..அதை லாபமாக கொண்டு செல்வதும், நட்டத்தில் கொண்டு செல்வதும் நம் கையில் தான் இருக்கு..மனம் என்னும் நிலத்தில் எந்தவிதமான எண்ணங்களை விதைக்கின்றோமோ அந்த விதமான செயல்கள் தான் முளைக்கும் என்பது உண்மை. உன்னதமான கனவு நிச்சயம் மெய்ப்படும் , குறிக்கோள் இல்லாத கனவு தோல்வியில் தான் முடியும். அறிவுக்கும் , ஆற்றலுக்கும் ஏற்ப உறுதியான நம்பிக்கையுடன் எந்த நேரத்திலும் குறிக்கோளையே நினைத்து துணிவுடன் கொஞ்சம் வித்தியாசத்துடன் தொழிலை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்..

- ரோஸலின்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1169291

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 18

Tamil_News_large_1173457.jpg

அன்பு தோழமைகளே நலமா?நமக்குத் தேவையானப் பொருட்களைத் தொலைதூர இடங்களிலிருந்து பெறுவதை விட நமக்கு அருகாமையில் கிடைக்கும் பாரம்பரிய பொருட்களை நாம் பயன்படுத்திக் கொள்வதோடு , அதனை போற்றி பாதுகாத்து வருவதே சுதேசித் தன்மையாகும் என்றார் தேசியத் தந்தை மகாத்மா அவர்கள். எனவே இன்று நம்மை சுற்றியுள்ள மரமாகும் பனை மரத்தில் இருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து என்ன என்ன தொழில்கள் செய்யலாம் என்பது குறித்து காண போகின்றோம்..பனை ஒரு மரம் மட்டுமல்ல , இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு அடையாளம். பனையின் தாவரப் பெயர் BORASSUS FLABELLIER ஆகும்.இதன் அர்த்தம் கனியின் மேல் போர்த்திய தோல் என கிரேக்க மொழியில் கூறுகின்றார்கள் FLABELLIER என்பது விசிறி உடையது எனப் பொருள்படும் .
பனையின் தாயகம் ஆப்ரிக்கா , அங்கிருந்து இந்தியா, பர்மா, இலங்கை, போன்ற நாடுகளுக்கு பரவியது . இந்தியாவில் மத்திய பகுதியிலும் , பீகார் , வங்காளம் ஆகிய இடங்களில் அதிகளவு உள்ளன..குறிப்பாக கடற்கரைப் பகுதியில் அதிகளவு வளர்கின்றன...
பனை ஓலை, பூ, பூந்தண்டு, பதநீர், கருப்பட்டி, நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு , வேர் என்று எல்லா பகுதியிலும் மருத்துவ குணங்கள் நிறைந்த மரம் நம் இந்திய தேசிய மரமான பனமரமாகும்...இதனால் பனையை கற்பக விருட்சம் என்று சிறப்பிட்டு அழைக்கிறார்கள். 10 சதுர மீட்டர் இடத்தில் வளர்ந்திருக்கும் ஒரு பனையானது நமக்குத் தரும் வளங்கள் கணக்கிலடங்காதது. உதாரணமாக ஆண்டு ஒன்றுக்கு

180 லிட்டர் பதநீரும்
100 கிலோ தும்புகளும்
10 கிலோ எரித்தும்பும்,
10 ஓலைகளும்
5 கிலோ ஈர்க்கும்
20 கிலோ நாரும்

தருவதோடு பொங்கலுக்கு பனங்கிழங்கும் , கோடைக்கு நுங்கும் , பதநீரும் ஆண்டிற்கு 24 கிலோ கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு, முற்றிய வைரம் பாய்ந்த மரமும், கூரைக்கு ஓலையும் தருகிறது. எனவே பனைமரத்தை கருப்புநிற கற்பக மரம் என்றால் மிகையல்ல.
பனை ஓலையினால் முன்பு தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களின் இடத்தை இன்று பிளாஸ்டிக் வருகையினால் பனை ஒளியின் உபயோகம் குறைந்து காணப்பட்டாலும் , பனை ஓலையினால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கின்றது . இப் பொருட்களின் ஏற்றுமதியின் மூலமாக பல கோடி ரூபாய் அந்நிய செலாவணி கிடைக்கின்றது . இதனால் பலருக்கு வேலை வாய்ப்பினைத் தரவும் முடிகின்றது.
இளம் மரத்திலிருந்து வெட்டப்படும் ஓலைக்கு வடலி ஓலை என்று அழைக்கிறார்கள். வடலி ஓலையில் இரண்டு வகைப்படும். ஒன்று குருத்தோலை மற்றொன்று சாரவோலை என்று பெயராகும்.குருத்தோலையில் பலவிதமான கூடைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிக்கின்றார்கள் . சார ஓலையில் பாய் மற்றும் பெரிய கூடைகள் தயாரிக்கின்றார்கள். குறிப்பாக ாற்றோட்டமாக இருக்கக்கூடிய பொருட்களான கரும்பு, வெள்ளம், பனை, கருப்பட்டி, கருவாடு, பூக்கள் பண்டல் செய்ய இன்றும் பனை ஓலைப் பாய்களையே பெரிதும் பயன்படுத்துகின்றார்கள் .
குருத்தோலையை மரத்திலிருந்து வெட்டி எடுத்த பின்பு அதை தனியாக ஒன்றிரண்டு நாள் வைத்திருந்து விட்டு பின் லேசாக விரித்து நிழலில் காய வைக்க வேண்டும் ..நிழலில் காய வைப்பதன் மூலமாக ஓலையில் நல்ல நிறத்தையும் , வழவழப்புத் தன்மையையும் பெற முடியும் ஓலையின் நடுப்பகுதியானது அகலமாக இருக்கும்.அந்த அளவிற்கு ஓலையை வெட்டி எடுத்து ஒன்றாக கட்டி அதன் மேல் கனமான பாரம் வைத்து கட்டி வைக்க வேண்டும். இதனை கொண்டு அழைப்பிதழ் அட்டை, விசிட்டிங் கார்டு போன்றவைகளை ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையில் அச்சிடலாம் .
பனை ஓலைக்கு எதிரி மழைத்துளியாகும். பனை ஓலைப் பொருட்களில் விழுந்தால் அப்பொருட்களின் நிறம் மாறி விடும் மேலும் அதன் ஈரத்தன்மையானது பூசாணத்தை உருவாக்கி விடும் . எனவே மழைக் காலத்தில் பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பதையும் , சேமித்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும்..
சாயம் ஏற்றின ஓலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. சாயம் ஏற்ற வேண்டிய ஓலை குருத்தோலையாக இருக்க வேண்டும்..
பனை ஈர்க்கு
இரண்டு பக்க ஓலையின் நடுவில் இருக்கும் முதுகுப்புறத்திலுள்ள நரம்புகளுக்கு ஈர்க்கு என்று பெயர் .ஒரு ஓலையிலிருந்து சுமார் 50லிருந்து 60 ஈர்க்குகள் கிடைக்கும். இதனை கொண்டு கூடைகள் செய்யலாம் .
மட்டையில் நார் உரிப்பது ;
மட்டையிலிருந்து நீக்கப்பட்ட நார் மிகவும் உறுதியானது . இந்த நாரின் மூலமாக கயிறு தயாரிக்கலாம், இந்த கயிறு தென்னை நார் கயிறை விட உறுதியானது ..இந்த நாரில் கனமான பொருட்களைக் கொண்டு செல்லும் பெட்டிகள் , கட்டில் , கூரையில் அமைக்கப்படும் மரச்சட்டங்களைக் கட்டவும், பிணைக்கவும் பயன்படுகின்றது.மட்டையின் உட்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட மட்டையை கொண்டு முறம், நார் பெட்டிகள் தயாரிக்கலாம்.
பனை நாரிலிருந்து வீட்டுக்கு தேவைக்குரிய பிரஷ்கள், தொழில் உற்பத்திக்குரிய பிரஷ்கள், சுகாதார பணிக்குரிய பிரஷ்கள் தயாரிக்கலாம்.
பத்தல்
பனை மட்டையின் அடிப்பகுதியில் பிளவுபட்டு காணப்படும் பகுதியை பத்தல் என்று அழைக்கிறார்கள். இந்தப் பத்தலிலிருந்து தான் தும்புகள் எடுக்கிறார்கள் .பத்தல் காய்ந்தால் கெட்டியாக மாறிவிடும்.எனவே பசுமையாக இருக்கும் போதே அதிலிருந்து தும்புகளை எடுத்து விட வேண்டும்..பத்தலிலிருந்து தும்பு தயாரிக்கும் பொழுது , திப்பிகள் என்ற கழிவுப் பொருட்கள் கிடைக்கின்றது இதனை எரிபொருளாகவும், பொம்மைகளும் தயாரிக்கலாம் . சில இடங்களில் உரமாகவும் பயன்படுத்துகிறார்கள் .நிலத்தின் உவர் தன்மையை இந்த திப்பிகள் நீக்கி விடுகின்றது.
பனையில் பாளை முதலில் தோன்றும் பொழுது அதை சுற்றி தோல் போன்ற பாகம் மூடி வளர்கின்றது இதை பீலி என்று அழைக்கிறார்கள் ...இதிலிருந்து விளக்குமாறு தயாரிக்கின்றார்கள்


பதநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யலாம், பதநீரில் ஐஸ் கிரீம் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதற்கு நல்ல வரவேற்ப்பு உண்டு.. மேலும் பதநீரில் காடியும் தயார் செய்யலாம்.
பனை வெல்லம் உபயோகமானது தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வந்தது..இன்று அந்த இடத்தை கரும்பு வெல்லமும், வெள்ளைச் சர்க்கரையும் பிடித்துக் கொண்டாலும் ..சித்த, ஆயுர்வேத போன்ற வைத்திய முறைகளுக்கு பனை வெல்லம் தான் பயன்படுத்துகின்றனர் .மேலும் இதை கொண்டு சாக்லேட் , கடலை மிட்டாய் , இஞ்சி மொரப்பா போன்றவற்றிற்கு பனை வெல்லம் பயன்ப்படுத்தப் படுகின்றது.
இன்று மக்கள் இயற்கையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நுங்கில் நுங்கு ஜெல்லி, நுங்கு ஜாம், நுங்கு மொரபா, பனம்பழத்தில் சாறு, ஜாம், கிழங்கில் சத்துமாவு, பனங்கிழங்கு மாவில் அல்வா போன்றவற்றிற்கும் இன்று நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது...
சிறு சிறு விதைக்குள் இருக்கும் பெரிய மரம் போல நம் சக்தி அடங்கிக் கிடக்கின்றது. முயற்சியாலும் , பயிற்சியாலும் தான் நம் ஆற்றலை வளர்த்திக் கொள்ள முடியும் .நாம் இயற்கையின் உன்னத பிள்ளைகள் ..நாமும் இயற்கையும் வேறு வேறு அல்ல...இயற்கைை நேசிப்போம்..இயற்கைக்கு உயிர் கொடுப்போம். இயற்கையாக வாழ்வோம்..

http://www.dinamalar.com/news_detail.asp?id=1173457

Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 19

Tamil_News_large_1179871.jpg

அன்பு தோழமைகளே நலமா?மாற்றம் என்பது ஒரு வளர்ச்சி படியில் இருந்து மற்றொன்றிற்கு செல்லுதல் .ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை கொள்ளல். வாழ்தல் மாற்றங்களுக்குட்பட்டது. அவ்வாறு இன்று சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களுக்கு மாற்றாக, காகித, சனல் மற்றும் வாழை நாரினால் தயாரிக்கும் தொழில்கள் குறித்து காண உள்ளோம்..
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக நிலம், நீர், காற்றுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களுக்கு மவுசு கூடி வருகிறது. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களுக்கு மாற்றாக, காகித, சனல் மற்றும் வாழை நாரினால் ஆனப் பொருட்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

காகிதப் பைகள் :
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம்

ஜூட் எனப்படும் சனல் :
அடுத்தபடியாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வை சனல் பொருட்கள் மீது திரும்பியுள்ளது. ஆரம்பத்தில் சணல் மூலம் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன . தற்பொழுது ஜூட் எனப்படும் சனலை கொண்டு புதுமையான பல பொருட்கள் தயாரிக்கின்றனர். . செல்போன் கவர், காலனிகள், வாட்டர் பாட்டில், பெல்ட், வண்ண நகைகள், வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் , தலை விரிப்புகள், லேப்டாப் பேக், பைல் கைப் பைகள் இப்படி பல அவதாரம் எடுத்துள்ளது சனல். இப்பைகள் அதிக எடை தாங்கக்கூடியதாகவும் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன.தேசிய சனல் ஆணையம் இத்தொழிலுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதுடன் மூலப்பொருள் அளிப்பதில் துவங்கி சந்தை வாய்ப்பையும் ஏற்றுமதி தொடர்புகளையும் ஏற்படுத்தி தருகிறது. இதனால் சனல் பொருள் தயாரிப்பில் பலரும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர் கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். உற்பத்தி பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது.

பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம்.சனல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட ரூ.1 லட்சம் முதலீடு இருந்தாலே போதும் 40% லாபம் கிடைக்கும் என்பதால் இதில் ஈடுபடும் அனைவருக்கும் நல்ல லாபம் கிடைக்கும் விதமாக அமைகிறது

வாழை நார் :
விவசாயத்தில் சின்ன சின்ன விசயங்களையும் காசாக்கும் வித்தையைத் தெரிஞ்சுக்கிட்டாதான்… நம்ம விவசாயி களும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். அந்த வகையில நம்ம நாட்டுல பெரும்பாலான விவசாயிகள், சாகுபடி செய்யுற வாழையில இருந்து கூடுதல் வருமானம் பெற இந்த தொழில் கைக் கொடுக்கின்றது.

'அந்த வகையில் வாழை நாரில் உருவாகும் ஹேண்ட்பேக், மிதியடி, தொப்பி, ஷாப்பிங் பேக், டிபன் கூடை, டீ பாய் மேட், ப்ளோர் மேட், அலங்கார மாலை உள்ளிட்ட பொருட்கள் பிரபலமாகி வருகின்றன. ஒரு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம். பிளாஸ்டிக் வயரால் பின்னப்படும் பைகள் எடை அதிகமாக இருக்கும். வளைந்து கொடுக்காது. வாழை நார் பைகள் எடை குறைவாக இருப்பதோடு துணியை போல் வளைந்தும் கொடுக்கும். அழுக்கானால் சோப்பு நீரில் ஊறவைத்து அலசினால் போதும். பளிச்சென்று புதுப்பொலிவு பெற்றுவிடும். வாழை நார் பைகள் நீண்ட காலம் உழைப்பவை. வண்ணமயமாக, ஸ்டைலாக உருவாக்கப்படும் வாழை நார் ஹேண்ட் பேக்குகளை பெண்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் விரும்புகின்றனர். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாவதால் கிராக்கி அதிகம் உள்ளது.ஹேண்ட் பேக் மட்டுமல்ல காய்கறி, பழங்கள் ஆகியவற்றை காற்றோட்டமாக வைக்கக்கூடிய பை உள்பட அனைத்து வகை பைகளையும் வாழை நாரில் தயாரிக்க முடியும். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற டிசைனில் தயாரித்தால் தொழிலில் ஜொலிக்கலாம்.

சந்தைப்படுத்துதல் ;

வீட்டில் வைத்தோ, கடை போட்டோ விற்கலாம். கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, பைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு ஆர்டர் வாங்கலாம். அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பேன்சி, ஜவுளி, டிபார்ட்மென்டல் கடைகள் மற்றும் பிரத்யேக ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்யலாம்., பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.

மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம். பிளாஸ்டிக் பைல்களுக்கு பதில் காகித சனல், வாழைநார் பைல்கள் தயாரித்து விற்பனை செய்யலாம்..கல்யாண சீசன்களில் தாம்பூல பைகள் ஆர்டர் எடுத்து , பொண்ணு , மாப்பிள்ளை பெயர் அச்சிட்டு கொடுக்கலாம் .

நாம் மேற்கொள்ளும் தொழில்களில் உள்ள படைப்பாளிகளைப் பாருங்கள் , அவர்கள் உங்களை விட அறிவுடையவர்களா? சிறப்புடையவர்களா? அநேகமாய் எல்லாப் பகுதிகளிலுமே அவர்கள் தேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது ..அவர்களை விட நீங்கள் ஒளிவிடக் கூடிய பகுதிகளைக் கண்டறியுங்கள் ..அது உங்களால் முடியுமென்று கனவு காணுங்கள் ..முடியும்..

http://www.dinamalar.com/news_detail.asp?id=1179871

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 20

அன்பு தோழமைகளே நலமா,

நலமா எனக் கேட்பதற்கும், நலம் என சொல்வதற்கும் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக நாம் இருப்பதற்கு முக்கியமான இடத்தை பிடிப்பது நம் உணவு முறைகள். 'நம்ம மரபுப்படி, உணவுதான் மருந்து. அம்மிக்கல்லு, ஆட்டுக்கல்லுன்னு பெண்களுக்கு சமையலே உடலுழைப்பு சார்ந்த விஷயமாத்தான் இருந்துச்சு. அதனாலதான் எல்லா தட்ப வெப்பங்களையும் தாண்டி அவங்களால திடகாத்திரமா வாழ முடிஞ்சுச்சு. இன்றைக்கு எல்லாமே மாறிப் போச்சு. எல்லாரும் பணத்தைத் தேடி ஓடுறாங்க. ரசிச்சு, ருசிச்சு ஒரு வாய் சோறு சாப்பிட யாருக்கும் நேரமில்லை. காலம் முழுவதும் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிச்சு, கடைசியா அதை மருந்துக்கு செலவழிக்கிறாங்க..சத்தான உணவுகளை சாப்பிட மக்களுக்கு விருப்பம் இருந்தாலும் அதை பக்குவமாக செய்வதற்கு நேரமில்லை என்று சாக்கு சொல்லி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்..ஆனால் இதே உணவுகளை தயாரித்து கொடுத்தால் கண்டிப்பாக வாங்கி கொள்வார்கள்...ஆக மக்களின் தேவைகளை உணர்ந்து நாம் மேற்கொள்ளும் தொழில்கள் கண்டிப்பாக வெற்றியை தேடி தரும்...

சிறுதானியத்துக்கு முக்கியத்துவம்:

தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது அரிசி உணவை குறைத்து சிறு தானியம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு, தினை, குதிரை வாலி, சாமை. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. சிறுதானிய உணவுகளைத் தினசரி பயன்படுத்தும் போது நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது.

தற்போது தமிழ்நாட்டில் தினை, வரகு, குதிரைவாலி, சாமை போன்ற உணவுகள் குறித்து விழிப்புணர்வு வந்துள்ளது...இது சரியான நேரம் 


குறுந்தானியங்கள் கொண்டு முளைகட்டிய தானிய சத்து மாவு , வரகு அரிசி முறுக்கு மாவு, வரகு அரிசி களி மிக்ஸ் , தினை பாயாசம் மிக்ஸ், தினை உருண்டை மிக்ஸ், தினை அப்பம் மாவு, சோள புட்டு மாவு, சோள சப்பாத்தி மாவு , நவதானிய போலி, கம்பு பனியாரம் மிக்ஸ் எள்ளுருண்டை, கொள்ளுப்பொடி, தினை அதிரசம், பொரி உருண்டை, குதிரைவாலி பணியாரம், தயிர் அவல், தானிய அவல், தானிய சீவல், தானிய அல்வா, தினை அதிரசம், கம்பு கந்தரப்பம், தானிய தட்டுவடை, சீப்புச்சீடை, கைச்சுத்து முறுக்கு, தானிய அடைபோன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்

ரெடி மிக்ஸ் ஆதிக்கம்:

அரிசியுடன் உளுந்து , அரிசியுடன் கடுகு , அரிசியுடன் கொள்ளு வைத்து சமைக்கக்கூடிய முறையெல்லாம் முன்பு வாழ்ந்த தமிழர்களிடம் இருந்தது. இன்று அதெல்லாம் குறைந்து விட்டது..இதனை கொண்டு ரெடிமேட் மிக்ஸ் மற்றும் வரகு அரிசி பொங்கல் ரெடிமேட் மிக்ஸ் தயார் செய்து விற்பனை செய்யலாம்..

சமைக்கும்போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்துவதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. எனவே உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்புகளான பீட்ரூட் கீர், முருங்கைக்கீரை சூப், வாழைப்பூ சூப் புதினா ஜூஸ், கொத்தமல்லி ஜூஸ் :பழ சாலட்:காய்கறி சாலட்: போன்றவற்றை உடனடியாக தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். 

இதற்கான பயிற்சி வேளாண்மைக் கல்லூரிகள்,தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைக்கழகம் , போன்ற இடங்களில் கொடுக்கப்படுகின்றது...

உரிமம் பெற வழிமுறை:

உணவு பொருள் தயாரிப்பு தொழிலில் உரிமம் அவசியமாகிறது, செயலாக்க, இறக்குமதி, இந்தியாவின் விநியோகம் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை. ஆகையால், அனைத்து உணவகங்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒரு உணவு பொருள் தயாரிப்பு தொழிலில் உரிமம் பெற வேண்டும். உரிம உணவகங்கள் பரப்பு மாநில அளவில் உரிமம் அதிகாரம் கீழ் வீழ்ச்சி மற்றும் எளிதாக முன் உணவகம் நடவடிக்கைகளை தொடங்கி பெறலாம். உணவு வணிக ஆபரேட்டர் உரிமம் வழங்கப்படும் 1 ஆண்டு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆகிறது. எனவே உணவு பொருள் விற்பனை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள்,"லைசென்ஸ்' பெற "ஆன்- லைனில்' விண்ணப்பிக்கவும் ,உணவு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது..


இணையதளத்தில், கடைகள், விற்பனை விபரங்கள் கேட்கப்படும். விபரங்களை பூர்த்தி செய்து, லைசென்ஸ்தாரர் போட்டோ, அடையாள விபரங்களை பொருத்தி விண்ணப்பிக்கலாம்.


மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் தொழில்நுட்பங்கள் உலகளாவிய தொழில்நுட்பங்கள்.மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் என்பது ஓர் முழுமை அடைந்த உணவு ஆராய்ச்சி ஆய்வகம் ஆகும். அவற்றின் முக்கிய குறிக்கோள் யாதெனில் உணவு தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தரமான பதப்படுத்தப்பட்ட பொருட்களை உலக மயமாக்குவதே ஆகும். உணவு தொழிற்சாலைகளில் பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது. இந்நிலையில் சிறு குறு மற்றும் பெரும் உணவு தொழில் முனைவோருக்கு அதிகம் லாபம் ஈட்ட வழி வகுக்கிறது.நவீன அடிப்படை வசதியைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட பொருட்களை உலகமயமாக்க நீண்ட கால ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. பலதளத்தின் தேவைகளும் மற்றும் தீர்வும்.

அடிப்படை உணவு முறை மற்றும் செயல்பாடுகள். பதப்படுத்தும் பொறியியல் மற்றும் தாவர வடிவமைப்பு


உணவு உயரிய சோதனை


தர ஆய்வுச் சோதனை


தொழில்நெறி பயிற்சி


தொழில்நுட்ப தேவைகள் என வழிகளில் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது..மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள 

இந்திய பயிர் தொழில்நுட்ப நிலையம்


(உணவு பதனிடும் தொழிற்சாலை செயலகம், இந்திய அரசு)


புதுக்கோட்டை சாலை


தஞ்சாவூர் - 613005 


தொலைபேசி: 04362-226676


04362-228155


04362-227971

அன்பு தோழமைகளே நாம் மேற்கொண்ட தொழிலில் வெற்றி பெற பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கவும் பிறரைக் காட்டிலும் வித்தியாசமாக செய்தால் நம் கனவுகளைக் கைப்பற்றி விடலாம்...

http://www.dinamalar.com/news_detail.asp?id=1184653

Link to comment
Share on other sites

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 21

Tamil_News_large_1190347.jpg

வணக்கம் அன்பின் தோழமைகளே எப்படி இருக்கீங்க ..
இந்த வாரம் அறிவு சார்ந்த தொழில்கள் குறித்து காணப்போகின்றோம்..இத்தகைய தொழில்கள் வெறும் லாப நோக்கில் மட்டுமல்லாது சேவை மனப்பான்மையுடன் செய்யக்கூடிய தொழிலாகும் . இத்தகைய தொழில்கள் பிறரின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும், வாழ்வாதாரத்தையும் நமக்கு மனத்திருப்தியையும் தரக் கூடிய தொழில்களாகும்..சரி பார்ப்போமா......

லேடிஸ் ஹாஸ்டல் :
வெளியூரில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்து விட்டது என குதுகலப்படும் பெண்களின் முகம் சற்று நேரத்தில் வாட துவங்குகிறது என்றால் அது பாதுகாப்பான தங்கும் இடத்திற்கு தான்...அடுத்ததாக சுகாதாரமான சாப்பாடு . இந்த தேவைகளை நிறைவேற்றுவதில் செல்வம் கொழிக்கும் ஒரு பிஸினஸ் இருக்கிறது என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அது லேடிஸ் ஹாஸ்டல் தான். இதற்கு நல்ல ஏரியா, குடி தண்ணீர் வசதி முக்கியம். அடுத்ததாக தரமான சாப்பாடு, தாய்மை பண்புடன் கூடிய கவனிப்பு மற்ற ஹாஸ்டலிடமிருந்து கொஞ்சம் வித்தியாசம் இவை இருந்தாலே ..நம்ப வீட்டு பொண்ணுங்க மாதிரி வாஞ்சையுடன் அங்கிருந்து நகல மாட்டார்கள் மேலும் அவர்களே நிறைய நபர்களை அழைத்து வருவார்கள்..முறைப்படி அரசு அனுமதி பெற்று திறம்பட நடத்தினால் நன்கு லாபம் தரக்கூடிய தொழிலாகும்..

டிரைவிங் ஸ்கூல்:
அரசியலில் தொடங்கி உலகின் எந்த துறையை எடுத்தாலும் ஆண்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்கள் பலமுறை நிருபித்துள்ளார்கள். நிருபித்துவருகிறார்கள். அவர்கள் கால் பதிக்காத துறை இல்லை...இப்படியாக பெண்களின் வாழ்க்கை சவால் மிகுந்ததாக மாறும் பொழுது பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து விரைந்து பணியை முடிக்க வேண்டியுள்ளது அதற்கு வாகனமும் அதை இயக்க தெரிந்திருக்கவும் வேண்டும்...இங்க தான் அடுத்த தொழில் வாய்ப்பு நம்ப கண் முன் தெரிகின்றது அது வேறு ஏதுமில்லை டிரைவிங் ஸ்கூல் தாங்க..பக்கா லைசன்ஸ் , ஆர்.சி புக் இருந்தால் ஆர் டி ஒ அப்ரூவல் வாங்கி L போர்டு போட்டு பெண்களுக்கு பெண்களால் டிரைவிங் கற்றுக் கொடுக்கப்படும் என்று ஆரம்பிக்கலாம்..இல்லை நீங்க முறைப்படி லைசன்ஸ் வாங்கியிருந்தால் உங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் பெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுக்கலாம்..இதில் நல்லா பிக் அப் ஆன பின்பு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கலாம்...

திறன் பயிற்சி மையம்:
இன்று பெரும்பாலும் பெற்றோர்கள் அதிகம் செலவழிப்பது குழந்தைகளின் கல்வி அறிவுக்கு தான்...கல்வி என்னும் கட்டமைப்பு தான் குழந்தைகளுக்கு பயத்தை அறிமுக படுத்துகிறது. நாம் அவர்கள் மீது செலுத்தும் எதிர்பார்ப்புகள் அவர்களின் மிக பெரிய சுமையாக மாறுகிறது. நம் விருப்பத்தில் தான் கவனம் செலுத்துகிறோமே தவிர அவர்கள் வேற என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் எந்த கவனமும் இல்லை. அவர்களின் எல்லா செயல்களையும் சரி தவறு என்ற வட்டத்துக்குள் அடைத்து விடுகிறோம். நாம் தான் இப்படி என்றால் பள்ளிகளில் கல்வியை குழந்தைகளுக்கு புரியும் வகையில் அவர்களுக்கு பயன்படும் வகையில் வித்தியாசமாக கொடுக்கிறார்களா என்றால் பல பள்ளிகளில் இல்லை என்பதே பதில் ஏட்டுப் படிப்பாகவே இருக்கிறது பலரது கல்வி .

இந்நிலையை மாற்ற ஒரு சேவையாகவும், அதே நேரம் வருமானம் தரக் கூடிய வகையில் இந்த சேவைத் தொழிலை ஆரம்பிக்கலாம் ..மாணவர்களுக்கு நேர மேலாண்மை , பிறரிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை ,தலைமைத்துவம் இதை தவிர மூளை வளர்ச்சி , ஞாபகத் திறனை அதிகப்படுத்தும் பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகளை அவர்கள் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தலாம் அல்லது தனியாக பயிற்சி மையங்கள் ஆரம்பித்தும் நடத்தலாம்.


இசை வகுப்புகள்:

இசையில் பட்டபடிப்பு பெற்றவர்கள் அல்லது முறையாக இசையைக் கற்றவர்கள், அது எந்தப் பிரிவைச் சேர்ந்த இசையாக இருந்தாலும், இசை வகுப்புகள் நடத்தலாம். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொடுக்கலாம்.அதே போல் வாய்பாட்டு , நடனம் போன்றவை கற்றுக் கொடுக்கலாம் இன்று டிவியில் பலவித போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் பெற்றோருக்கு ஆர்வம் அதிகரித்துக்கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.தங்கள் பிள்ளைகளும் இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்களா , பரிசுகள் பெற மாட்டார்களா என ஏங்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை இத்தகைய பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு... பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்கள் அல்லது வாரத்திற்கு இருமுறை தத்தம் வீடுகளில் எடுக்கலாம் . இல்லை பள்ளிகள் , கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம் பேசி மாலை நேர வகுப்பும் எடுக்கலாம்....

தற்காப்புக் கலைகள் :

பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சில தற்காப்புப் பயிற்சிகளைப் பெறுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அனுபவம் வாய்ந்த பெண்களே பெண்களுக்கு பயிற்சிகள் கொடுப்பதன் வாயிலாக நல்ல வருமானம் ஈட்டலாம்'.

யோகா பயிற்சி:

இதே போல் யோகா /தியானப் பயிற்சி ஆகியவற்றில் முறைப்படி தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கலாம். இதில் ஆண்கள், பெண்கள் , மாணவ செல்வங்களுக்கு என்று தனித் தனியாக வகுப்புகள் நடத்தலாம்..

வீட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் சேவை மையம்:

இதற்கு மனிதர்களை எடைபோட பழகிக் கொள்ளுதல் அவசியம். தான் வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பின்புலத்தையும் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும். அதே போல் சமூகத்தில் பின் தங்கியுள்ள வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு, அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வசதி படைத்தவர்களிடமும் அவர்களை மனித நேயத்தோடு நடத்துமாறு வற்புறுத்த வேண்டும். பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் house keeping மற்றும் nursing care போன்ற துறைகளில் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதை ஒரு சிறு தொழிலாக, சேவைகளின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ளமுடியும்.இனி வரும் காலங்களில் நிச்சயம் இது ஒரு லாபகரமான தொழிலாக மாறும் வாய்ப்பு அதிகம் உண்டு.

பயிற்சி மையங்கள் :

ஓவியம், கணினி தையல் அழகுக்கலை சமையல் கலை, கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையங்கள் ஆரம்பிக்கலாம்..இப்படிப்பட்ட வகுப்புகளுக்கு இன்று நல்ல தேவை உள்ளது . இதற்கு வீட்டின் ஒரு பகுதியை வகுப்பறையாக மாற்றலாம், பத்திரிகையில் விளம்பரங்கள் கொடுப்பதன் வாயிலாக நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் பள்ளி ஆண்டு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்தினால் நல்ல வருமானம் ஈட்ட முடியும் . மற்ற பயிற்சி வகுப்புகளிலிருந்து சிறு வித்தியாசப்படுத்தி கற்பனை வளத்துடன் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக நல்ல பெயர் கிடைக்கும்...

பயிற்சி வகுப்புகள் நடக்குமிடங்கள், கற்க வருபவற்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்க வேண்டும். பயிற்சிக்கான நேரம், கட்டண விவரம், வயது வரம்பு, பயிற்சித் திட்டங்கள் போன்றவை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் நபர்கள் தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொண்ட பின்னரே, அதை சுயத்தொழிலாக செய்ய முன்வர வேண்டும். பொறுமையாகவும் அக்கறையுடனும் வகுப்புகள் எடுத்தால் கற்கும் மாணவர்கள் மூலமே மேலும் பலர் வந்து இணைந்துகொள்வார்கள்.

தெய்வீக குணங்களில் தலை சிறந்த குணமாக விளங்குவது சகிப்புத்தன்மையாகும் . எந்த ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும் அதற்கு சகிப்புத் தன்மை அவசியமாக இருக்கிறது .மேற்கண்ட தொழில்களுக்கு இத்தகைய குணம் மிக மிக அவசியம்..இப்பூங்கொத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள் வெற்றி உங்கள் கைகளில்...

- A.ரோஸ்லின்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1190347

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 22

அன்பு தோழமைகளே நலமா? முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். நான் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது ஒரு முறை தேள் கொட்டி விட எங்க தாத்தா தான் முதலுதவியாக சின்ன வெங்காயம் , மஞ்சள் , மிளகு வைத்து அரைத்து தேள் கொட்டிய இடத்தில் கட்டினார். அதன் பின்பு தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் .ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது. காய்ச்சல் தலைவலி என்றாலும் மருத்துவமனையை தேடி ஓடும் நிலை..

இயற்கை அன்னையே காரணம்

: உங்களுக்கே தெரியும் சில வருடங்களுக்கு முன்பு சிக்கன் குனியா காய்ச்சல் பரவி அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எழுந்து நடமாடவே பல மாதங்கள் ஆனது..இதே காய்ச்சலால் நான் பாதிக்கப்பட்ட பொழுது எங்கள் வீட்டிலிருந்த நொச்சி இலைகள் , குப்பைமேனி இலைகள், வேப்ப இலைகள் இவற்றை பறித்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்த காரணத்தால் ஒரு வாரத்திலே காய்ச்சல் சரியாகி பணிக்கு செல்ல ஆரம்பித்து விட்டேன். மகப்பேறுக்கு பின் மருத்துவமனை பக்கம் செல்லாமல் இருக்கின்றேன் என்றால் அதற்கு இயற்கை அன்னை தான் காரணம் நான் பெற்ற , அடைந்த இன்பத்தை கடந்த 21 வாரங்களாக என்னோடு இணைந்து பயணம் செய்யும் உங்களிடம் பகிர்ந்து கொண்டு இவ்வளவு பயனுள்ள மூலிகைகளை தொழில்களாக மாற்றும் உக்தியை குறித்து இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகின்றேன்.....

இன்றைக்கு மக்கள் இயற்கையை நோக்கி திரும்புகின்றனர்.தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றனர் .ஆனால் அதே நேரம் சோம்பேறியும் கூட..வாழைப்பழத்தை உரித்து கையில் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் .இந்த சோம்பலை பயன்படுத்தி மூலிகைகளை மதிப்பூட்டும் பொருளாக மாற்றி விற்பனை செய்தால் மக்களுக்கு நல்லது செய்தது போலவும் இருக்கும் நமக்கு வருமானம் மற்றும் ஆத்மத் திருப்தி தரும் தொழிலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...

மூலிகை தலையணை செய்யலாமா ..

.மூலிகை தலையணையா என யோசிப்பவர்களுக்கு ..இது ஒன்றும் புதிதல்ல..நம் முன்னோர்கள் செய்த விசயத்தை .நாம் இந்த காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி தொழிலாக செய்யப் போகின்றோம் அவ்வளவு தான்..

நொச்சி தலையணை : நொச்சி இலைகள் சர்வ சாதாரணமாகக் கிடைப்பவை ..இவற்றை தேவையான அளவு பறித்து ஒரு தலையணை உறையினுள் திணித்து தினசரி இரவில் இதன் மீது தலை வைத்து உறங்கி வர தலைவலி, கழுத்து வலி ஆகியன கட்டுப்படும் குறிப்பாக சைனஸ் பிரச்சனைக்கு இது மிகவும் நல்லது கழுத்து வீக்கம், கழுத்து வாதம், ஜன்னி, நரம்பு வலி, மூக்கடைப்பு குணமாகும் தினசரி புதிய நொச்சி இலைகளை பறித்து ஒன்றிரண்டாக நறுக்கி தூய்மையான வெள்ளை நிற மெல்லிய தலையணை உறையினுள் திணித்து விற்பனை செய்யலாம் .இந்த தலையணையில் தூங்கினால் மாத்திரை, தைலம் என எதுவுமே தேவையில்லை.

மருதாணி தலையணை

: மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்க முடியவில்லை என்பார்கள்...இனி இந்த தலையணையை வாங்குபவர்கள் யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள் ..ஆம் மருதாணி மலர்கள் மனம் மயக்க செய்யும் வாசம் உடையனவாகும். மருதாணிப் பூ மலரும் வேளை இரவு நேரமாகும் . இரவு தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணி பூக்களால் ஆன தலையணையை தலைக்குக் கீழே வைத்துப் படுத்தால் உடனே தூக்கம் வரும்

வேளைக்கீரைத் தலையணை: தோட்டம், பூங்கா தோப்பு என எல்லா இடங்களிலும் வளர்வது வேளைக்கீரை இதனை நல்வேளை என்றும் கூறுவர். இதனை பிடுங்கி வந்து நன்றாக இடித்து சாறு பிழிந்து விட செடி சக்கையாக மாறும் ..இந்த சக்கைகளை கொண்டு தலையணை செய்யலாம் .இந்த சக்கைகள் தலையில் தேங்கியுள்ள நீரை மெலிதாக இழுத்துக் கொள்ளும் .இந்த தலையணை காலையில் நனைந்திருப்பதை காணலாம்...இந்த தலையணை ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பயன்படுத்தினால் தலைவலி பறந்து விடும்...

வாழ்வு தரும் தலையணை:

அரச இலை, ஆல இலை, அத்தி இலை, நொச்சி இலை, வேப்பிலை, மா இலை, யூக்கலிப்டஸ் இலை ஆகியவற்றை கொண்டு தயார் செய்த தலையணை மகப்பேறு அடைந்த மகளிர், நீண்ட நாட்கள் தொற்று கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள் , எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிருமிகளின் தொற்றிலிருந்து தங்கள் உடம்பை பாதுகாக்க இந்த தலையணையைப் பயன்படுத்தலாம் .

நாய்த்துளசி தலையணை : பெண் குழந்தைகள், பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவது பேன் தொல்லைகளால் தான் . இதற்கும் நம் முன்னோர்கள் செய்த முறைகளை தான் இங்கு காணப் போகின்றோம்.நாய்த்துளசி இலை

இந்த இலைகளை கொண்டு தலையணை செய்து படுத்தால் பேன் தொல்லை இருப்பவர்களுக்கு நல்ல பலன் தரும் நாய்த் துளசியிலிருந்து வெளி வரும் ஒரு விதமான கார நெடியினால் பேன்கள் செத்து விழும் 

சந்தை வாய்ப்பு:

பொதுவாக மேற்கண்ட பிரச்சனையில் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாவது பெண்கள் தான்..இவர்கள் மருத்துவருக்கு அடுத்து பெரிதும் நம்புவது அழகுக் கலை நிபுணர்களை ..எனவே அழகு நிலையங்களில் இத்தகைய தலையணைகளை விற்பனை செய்வதன் வாயிலாக நல்ல வருமானம் பார்க்கலாம்..பருத்தியிலான மெல்லிய உறைகளில் , தினம் தினம் இலைகளை நிரப்பி விற்பனை செய்யலாம் சந்தைக்கு புதிது...ஆனால் எதிர்காலத்தில் இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்புள்ளது...இதே போல் பசுமை அங்காடிகள் , பெரிய கடைகளிலும் முயற்சி செய்யலாம்..


இந்த உலகில் வேண்டாம் என்று வீணடிக்க எதுவுமில்லை. கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் எல்லாவற்றையுமே காசாக்கலாம்....தரத்திற்கு முதலிடம் தருவதும், வாடிக்கையாளர் நலனுக்கு முக்கியத்துவம் தருவதும், இன்று நாம் பார்த்த தொழிலுக்கு மிக மிக அவசியம்.... துணிச்சல் இன்றி இலாபம் இல்லை. துணிந்து இறங்குங்கள் வெற்றி மட்டுமல்ல ஆரோக்கியமான பாரதமும் நம் கையில் வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்.. 

- ஆ .ரோஸ்லின்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1197374

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 23

அன்பு தோழமைகளே நலமா? இந்த பதிவில் நாம் அன்றாட வேலைகளை கவனித்துக் கொண்டே வருமானம் பார்க்கும் தொழில்கள் குறித்து காணப் போகின்றோம்..

தேனீ வளர்ப்பு: விவசாயம், கால்நடை வளர்ப்பு என்று எதைச் செய்தாலும் கவனமா பராமரிச்சாதான் வருமானம் கிடைக்கும். ஆனா, எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தருவது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் வருமானத்தோட, விளைச்சலையும் கூட்டுற அற்புதத்தைச் செய்யுது தேனீ..சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது.பல வித பிராண்டுகளில் பெரிய பெரிய மால்களிலுள்ள கடைகளில் தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. மலை, மரம், பாறை, கட்டிடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, வீட்டில் நம் தோப்புகளில் பெட்டிகள் மூலம் வளர்த்து தேன் சேகரித்து விற்கலாம். அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். மலை, கொம்பு, இத்தாலி என பல வகைகள் இருந்தாலும், இந்திய தேனீ வகைதான் இந்த தொழிலுக்கு ஏற்றதாக, அதாவது பெட்டிகளில் வளர்க்க தகுந்தவையாக உள்ளன.
 

அடுக்குத் தேனீ இனம்:


 

தமிழகத்தில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ இனம் இந்தியத் தேனீ இனமாகும். இவை மலைகளிலும் சமவெளிகளிலும் வாழவல்லவை. மழைவாழ் ரகத் தேனீக்களின் குணாதிசயங்கள் சமவெளி ரகத்திலிருந்து சற்று வேறுபடுகின்றன. விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை, கையாளலாம், தேனீ'க்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும். தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, நமக்கு கிடைக்கும் பொருள்கள் ஆகும் 

பெட்டிகள் வாயிலாக தேனீக்களை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த பயிற்சிகளும் விவசாயத்துறையினரால் அந்தந்த மாவட்டங்களில் கொடுக்கப்படுகின்றன..தேனீக் கூட்டத்தின் வளர்ச்சி சிறிய பெட்டிகளில் விரைவாக நடைபெறுகின்றது.தேன் வளர்க்கும் இடத்தை பொருத்தவரை , மரங்கள் நிறைந்த பகுதிகளாகவும் நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும். எறும்பு ஏருவதை தடுக்கும் வகையிலும் , வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை அமைக்க வேண்டும்.போக்குவரத்து மிகுந்த வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும். பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும். சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்து தேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், தேனீக்கள் வேகமாக கூட்டினை கட்ட இயலும் விடியலுக்கு முன் துவங்கும் உணவு திரட்டும் பணி அந்தி சாயும் நேரம் வரையிலும் தொடர்கின்றது வயல்வெளித் தேனீக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று உணவு திரட்டி வருகின்றன வயல் வெளித் தேனீக்கள் ஒரு மணிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லவை

பெட்டிகள் மூலம் தேனீ வளர்ப்பவர்கள் குறைஞ்சது 10 பெட்டிகளுக்கு மேல வெச்சாதான் நல்ல வருமானம் கிடைக்கும். இதுக்கு முதலீடு னு பாத்தா ரொம்ப ரொம்பக் குறைவுதான். 20 ஆயிரம் தேனீக்களோட ஒரு பெட்டி 1,500 ரூபாய்க்குக் கிடைக்குது. பெட்டியை வாங்கிட்டு வந்து தோட்டத்துல வெச்சுட்டாப் போதும். வேற எந்தச்செலவும் இல்லை. தினமும் ஒரு தடவை பார்த்தால் போதும் இல்லையென்றால் வாரம் ஒரு முறையாவது பெட்டியில எறும்பு, கரையான் ஏறியிருக்கான்னு பார்த்தால் போதும் . 
 

வீட்டு தோட்டம்/ மாடியில் தோட்டம் அமைத்தல்:


 

அடுத்து நாம பார்க்க போகும் தொழில் வீட்டு தோட்டம் அல்லது மாடியில் தோட்டம் அமைப்பது குறித்து...இன்றைய இயந்திரமான வாழ்க்கை சூழலில் எல்லா உணவுப் பொருட்களும் உடனடி தயாரிப்பு நிலைக்கு வந்தாகிவிட்டது. காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய வகைகள் யாவும் தனது இயற்கைத் தன்மையிலிருந்து மாறி ஒருவித செயற்கை தன்மையோடு தான் நமக்கு கிடைக்கின்றது .எந்தவித செயற்கை தன்மையும் இல்லாமல் இயற்கையாக இவற்றை உண்ண வேண்டுமானால் . நாமே நமக்காக உருவாக்கிக் கொண்டால் தான் உண்டு அவ்வகையில் எளிதானதும், மன நிறைவு அளிப்பதும் வீட்டுத் தோட்டம் அமைப்பது ஆகும் . வீட்டுத் தோட்டம் நமது தேவைகளையும் பூர்த்தி செய்கிறது...நகரங்களில் வாழும் மக்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்க முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைத்து காய், கனி, மருந்து செடிகள், பூச்செடிகள், அலங்கார தாவரங்களை வளர்க்கலாம் இதையே தொழிலாக பிறருக்கு செய்து கொடுப்பதன் வாயிலாக மனத்திருப்தியுடன் கூடிய வருமானத்தை பார்க்கலாம்..டீஇதனால் வீட்டுப் பெண்கள் காய்கறிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. அலைச்சல், பணவிரயம் போன்றவை மிச்சமாகும். இந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும்.
 

காளான் வளர்ப்பு தொழில்:


 

இயற்கை சார்ந்த. அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. 

''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்', 'சிப்பிக்காளான்', 'பால் காளான்'னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்களிலும் விளைவிக்கலாம். வெயில் காலங்களில் சிப்பிக்காளான் விளைச்சல் குறைவாகவும் . குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சம் குறைவாகவும் இருக்கும்.. ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்

இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. 

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. 

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

இத் தொழிலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு காளானின் ரகங்கள்காளான் குடில் எப்படி அமைப்பது?காளான் வித்து உருவாக்குவது எப்படி?

 

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?:


 

காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது? போன்றவை செய்முறை பயிற்சிகளாக வேளாண் துறை மற்றும் தனிப்பட்ட நபர்களாலும் விபரமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது ....

மேற்கண்ட தொழில்கள் நம் அன்றாட பணிகளை மேற்கொண்டவாறு செய்யக் கூடிய தொழில்களாகும் ..இவை மூன்றும் நமக்கு வருமானம் மட்டுமல்லாமல் சுத்தமான, சத்தான உணவுகளை கொடுக்க கூடிய தொழில்களாகும்..மேலும் இயற்கையோடு ஒன்றித்த வாழ்வையும் மனத் திருப்தியை தரக் கூடிய தொழில்களாகும் .

நாம் மேற்கொள்ளும் தொழிலில் மனநிறைவும், ரசிப்பு தன்மையும் இருக்குமானால் அதுவே நம் வெற்றிக்கு காரணமாகும்..

- ரோஸ்லின்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1202942

 

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 24

Tamil_News_large_1210140.jpg

வணக்கம் அன்பு தோழமைகளே நலமா , இன்று நமக்கு பிடித்த உணவு அதே நேரம் மிக மிக எளிதாக செய்யக் கூடிய தொழில் குறித்து காணப் போகின்றோம்..குறிப்பா பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விசயம்...பார்ப்போமா ..
என்னதான் ,உணவு விடுதிகளில் உயர் ரக உணவுகளை உண்டாலும் அப்பளத்துக்கு ஏங்காத நாக்கு இல்லை எனலாம்..பிள்ளைகளின் மதிய உணவு டப்பாவில் வடகம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.. குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுதலிலும் அப்பளம் முதலிடம் பிடிக்கின்றது . , பொரித்த அப்பளத்தை பாயசத்தில் கலந்து சாப்பிடுவதற்கென்றே ஒரு பெரிய ரசிக கூட்டங்கள் உண்டு.. இப்படி நம் வாழ்வில் அன்றாடம் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் அப்பளத்தை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை...இப்ப தெரிஞ்சிருக்குமே இன்று எது குறித்து காணப்போகின்றோம் என்று... '


அப்பளம் , வடகம், வற்றல் போன்ற பண்டங்கள் ஒரு காலத்தில் இந்தியர்களிடம் மட்டுமே , உணவு பொருட்களாக இருந்து வந்தது , இன்று பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகி நம் நாட்டிற்கு அன்னிய செலாவாணியைச் சம்பாதித்து தருகின்றது .வருடத்தின் எல்லா நாட்களிலும் தேவையாக இருக்கிற பொருள் அப்பளம்! அவசர சமையலுக்கு கை கொடுப்பதிலாகட்டும், விருந்து சாப்பாட்டை முழுமையாக்குவதில் ஆகட்டும்... அப்பளத்தின் பங்கு மகத்தானது திருமணமோ, காது குத்தோ மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில் விருந்துக்கு முக்கிய இடம் உண்டு. விருந்தில் கட்டாயம் இடம் பெறுவது அப்பளம்.,மேலும் அப்பளம் இல்லாத உணவு விடுதிகள், வீடுகள் இல்லையெனலாம் பொறிக் காமலேயே நம்மை சாப்பிடத் தூண்டுவது ஆனால், இந்தளவு தேவை அதிகமுள்ள அப்பளம் தரமாக கிடைக்கின்றதா என்றால் கேள்விக்குறி தான்...அந்த அப்பளத்தை தயாரிக்கும் இடத்தை சென்று பார்த்தால் சுகாதாரமில்லாமல் ..கைகளில் கிளவுஸ் இல்லாமல் அவர்கள் மாவுகளை பிணைவதும் , உருட்டுவதும், உளுந்து மாவு காற்றில் பறந்தபடி இருப்பதால் தொழிலாளர்கள் உடல் முழுவதும் மாவு படிந்து ஆடைகள் வீணாகின்றன இக்காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா, ஒவ்வாமை, சுவாசக் கோளாறு ஆகிய நோய்களால் அவதிப்பட்டு அவர்கள் உடல்நலம் கெடுவது மட்டுமில்லாமல் அவர்கள் தயார் செய்யும் பொருட்களும் தரமிழந்து போகின்றது...இப்ப வர்ற அப்பளமெல்லாம் சுவையா இருக்கிறதில்லை. .மக்களுக்கு மிகவும் தேவைப்படுகின்ற இந்த அப்பளத்தை சுத்தமாக நாம் தயார் செய்து கொடுத்தால் வாங்கி கொள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர்.

அப்பளத்தில் பல வகைகள் உண்டு..

.அரிசி அப்பளம், மரவள்ளிக் கிழங்கு அப்பளம், டபுள் அப்பளம், பப்படம், மிளகு அப்பளம், புதினா அப்பளம், காளான் அப்பளம்

வற்றல்:

இப்பொழுதெல்லாம், பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டதாலும் , பழைய சமையல் முறைகள் தெரியாத காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் முன் போன்று வீடுகளில் வற்றல், வடகம் பெரும்பாலும் செய்வதில்லை , கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். தேவைக்கேற்றவாறு, சில மாற்றங்களுடன், இந்த வடகம் , வற்றலை செய்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் மோர் மிளகாய், பாகற்காய் வற்றல், மணத்தக்காளி, சுண்டக்காய் வற்றல்,கொத்தவரங்காய் வற்றல்
மிதுக்கு வற்றல், கத்தரிக்காய் வற்றல் வெண்டக்காய் வற்றல் என கடைகளில்விதவிதமானவகைகளில் வற்றல் கிடைத்தாலும், பிரண்டை,நெல்லி வற்றல் இப்படி சந்தைக்கு அவ்வளவாக வராத வற்றல்களை தயாரித்து விற்பனை செய்யலாம்

வடகம் :

'வடகம் தயாரிப்பது எளிதான வேலை. அப்பளம் எப்படி எல்லோராலும் விரும்பப்படுகின்றதோ அது போல் வடகம் எல்லோராலும் விரும்பப்படுபவை விதவிதமான மற்றும் புதுமையான வடிவங்களில் தயாரித்தால் வடகம் தொழிலில் நல்ல லாபம் பார்க்கலாம்

*இலை, ஜவ்வரிசி, முறுக்கு, குச்சி என வடகத்தில் பல வகைகள். இலை வடகம் மற்றும் ஜவ்வரிசி வடகத்தில் காரம், பூண்டு, தக்காளி, புதினா, மல்லி, வெங்காயம் வேப்பம்பூ , தூதுவளை ,கலந்து சுவையாய் வடகங்கள் தயாரிக்க முடியும்.
மேலும் அரிசி மற்றும் ஜவ்வரிசி மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வடகத்தை வெவ்வேறு முறைகளில் செய்யலாம். மாவில், காரட் மற்றும் பீட்ரூட் சாறைச் சேர்த்துச் செய்தால், வற்றல் நிறமாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.

விற்பனை வாய்ப்பு

''வாய்வழி விளம்பரம், இணையத்தளம், அக்கம்பக்கத்து வீடுகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் , உணவு விடுதிகள், கேட்டரிங் போன்ற இடங்கள்ல தொடர்ந்து ஆர்டர் எடுத்தாலே மாசம் முழுக்க விற்பனை இருக்கும். கடைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. .புதுமையாக , தரமாக, சுவையாக இருந்தாலே நம்மை தேடி வருவார்கள்... 30 சதவீத லாபம் நிச்சயம்.''

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். அது நமக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டும். வள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார், "முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று!

நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. கிடைக்கும் நேரத்தில் விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். சிகரங்கள் காத்திருக்கின்றன - சிகரங்களை எட்ட நாம் தான் தயாராக வேண்டும்..

http://www.dinamalar.com/news_detail.asp?id=1210140

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 25

Tamil_News_large_121717320150328091831.jpg

அன்பு தோழமைகளே நலமா?

இன்று நாம் பெண்கள் வீட்டில் இருந்தவாறே செய்யக் கூடிய கலைநயமிக்க தொழில்கள் குறித்து காணப்போகின்றோம். இத்தகையவற்றை செய்முறையோடு உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகின்றேன்...பார்ப்போமா...

முதலில் வெல்வெட் பைகள், பர்ஸ்கள் தயாரிக்கும் தொழில் குறித்து காண்போம்... 

இல்லத்தரசிகள், வேலைக்கு செல்லும் பெண்கள். கல்லூரி மாணவிகள் முதற்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது அவர்கள் கையில் பர்ஸ் அல்லது அழகிய கைப்பை இடம் பெற்றிருக்கும்...இப்படி நம் வாழ்வோடு ஒன்றி விட்ட தேவையான பொருளை நாமே செய்துக் கொண்டாலும் சரி இல்லை தொழிலாக மேற்கொண்டாலும் அதற்கு நல்ல வாய்ப்புள்ளது..இன்று. ஒரு பை செய்வதற்கு, ஒரு மீட்டர் வெல்வெட் துணி, ஜிப், வளையம் அவ்வளவு தான். இதற்கு, ஆகக் கூடிய மொத்த செலவு, 130 ரூபாய் முதல்,140 ரூபாய் வரை தான். இதை 250 ரூபாய் வரை விற்கலாம். பைக்காக வெட்டும் போது, மீதமாகி விழும் வெல்வெட் துண்டு துணிகளை கொண்டு சின்ன பர்சுகள், சிறிய கைப் பைகள், மொபைல் போன் பவுச், பென்சில் பவுச் சின்ன நகைபெட்டி போன்றவைகளை செய்யலாம். தரம், கண்கவர் வண்ணங்கள், வார்களில் புதுமை என பெண்களின் விருப்பத்தை அறிந்து அவர்கள் ரசனைக்கு ஏற்ப தைத்துக் கொடுக்க வேண்டும்

அலங்கார நகைப் பெட்டி:

பெண்கள் நகையை வாங்கும் பொழுது அதை பாதுகாக்க அழகிய பெட்டிகளை பரிசாக வழங்குவார்கள் இந்த பெட்டிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக ஜாதிக்கா மரப்பலகை மற்றும் வெல்வெட் துணிகள் பயன்படுகின்றன. அலங்கார நகைப் பெட்டி மூன்றடுக்காக பெட்டி அடியில் பெரிய நகை, செயின், ஒட்டியாணம் வைப்பது போலவும், இரண்டாவது அடுக்கில் நெக்லஸ் மற்றும் வளையல்கள் வைப்பதற்கும், மேலுள்ள அடுக்கில் தோடுகள், மோதிரம், கடிகாரம், ப்ரேஸ்லெட் போன்றவை வைக்கவும் தயார் செய்யப்படுகின்றது..இது போன்ற ஆபரணங்களுக்கு என்று தனித்தனியான வடிவமைப்பை டிசைன் செய்து கொள்ள வேண்டும் பின்னர் அளவுக்கு தகுந்தபடி மரப்பலகையை சிறிய அறுவைக் கருவியில் அறுத்து எடுத்து அதன் மேல் வெல்வெட் துணியை இணைத்து தேவையான இடங்களில் பொருத்த வேண்டும் நகைப்பெட்டியின் எல்லா இடங்களிலும் வெல்வெட் துணியானது கச்சிதமாக மரப்பலகையுடன் பொருந்தியிருக்க வேண்டும்.இப்பெட்டியின் சிறப்பம்சமாக பெட்டி திறந்து , மூடுவதற்கு லாக் வசதியும், திறக்கும் பொழுது முதல் அடுக்கின் மேற்புறத்தில் அழகிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் இணைத்து விட்டால் நகைப்பெட்டி மிக அழகாக காட்சியளிக்கும் ..

சந்தைவாய்ப்பு:

இந்த பெட்டிகளை விற்பதற்கான சந்தை வாய்ப்பும் அதிகமாக உள்ளது சிறிய நகைக்கடைகள் முதல் பெரிய நகைக்கடைகள் வரை இந்த அலங்கார நகைப் பெட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றார்கள்..தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான நகைக் கடைகள் உள்ளன .இந்த கடைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பெட்டிகளை தான் பயன்படுத்துகின்றனர் ..வெல்வெட் பெட்டிகள் கண்ணை கவரும் வகையில் இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்ப்பு உண்டு..மேலும் நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை வைத்துக் காட்டும் டிஸ்ப்ளே ட்ரே போன்றவற்றிற்கும் நல்ல வரவேற்பு உண்டு..

பொம்மைகள் : பொம்மைகள் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை...அதுவும் புசு புசுன்னு இருக்கும் பொம்மைகள் எல்லோர் மனதையும் கொள்ளை அடிப்பவை. கொஞ்சம் பொறுமையும், ரசனையும் இருந்தால் நாமே செய்து விடலாம்,,,பர் துணி, பெல்ட் துணி, நூல், பஞ்சு, கண்ணு, மூக்கு, பேக்கிங் கவர் பெரிய பொம்மைகள் செய்கிற போது, வெட்டி எறியற சின்னத் துண்டுத் துணிகள்ல கார்ல தொங்க விடுற சின்னச் சின்ன பொம்மைகள், கீ செயின் செய்யலாம். முதல்ல சாட் பேப்பர்ல உருவங்களை வரைஞ்சு கட் பண்ணிக்கணும். பிறகு பர் துணியை வச்சு அந்த அளவுக்கேற்ற மாதிரி வெட்டி ஒரே ஒரு இடத்தை விட்டுட்டு மற்ற பகுதிகளை ஊசியால தைக்கணும். உள்ளே டெரிகாட்டன் பஞ்சு திணித்து அந்தப் பகுதியையும் தச்சுட்டா முடிஞ்சுச்சு. சொல்ல எளிமையா இருந்தாலும் ஒவ்வொரு வேலையையும் கவனமா செய்யணும். இல்லைன்னா ஃபினிஷிங் இருக்காது... மேடு பள்ளமாயிடும்... பொம்மையோட வடிவம் குலைந்து விடும்.

கால் மிதியடி :

நாம் கால்மிதியாக வாங்கிப்பயன்படுத்துபவை அத்தனையும் பயன்படாத துணிகளில் இருந்தே தயாராகின்றன.கால்மிதியடி இல்லாத இடங்களை பார்க்க முடியாது ..இத்தகைய பயனுள்ள கால்மிதி செய்ய சிறு இயந்திரம் பயன்படுகிறது. பெரும்பாலானவர்கள் கால்மிதி தயாரிப்பை வீட்டிலிருந்து சிறுதொழிலாகவே செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் செய்ய ஏற்ற தொழில்தான். சரி, இயந்திரம் இல்லாமல் கால்மிதி செய்வது எப்படி? மிகவும் எளிமையான வழி இருக்கிறது. பின்னல் போடும் தெரிந்தால்போதும் அழகிய கால்மிதி செய்யலாம்.முதலில் பயன்படாத நீளமான பருத்தித் துணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். கால்மிதியின் நீளத்திற்கு ஏற்ப அரை இன்ச் அகலத்தில் துணிகளை கத்திரியால் வெட்டிங்கள். கைகளில் கிழித்தால் நூல் பிசிறு பிசிறாகத் தெரியும். மூன்று கால் பின்னலுக்குத் தேவையானதைப் போல வெட்டிய துண்டுகளில் மூன்று மூன்று சேர்த்து ஆரம்பத்தில் முடிச்சிடுங்கள். முடிச்சிட்ட இடத்திலிருந்து இறுக்கமாகப் பின்னுங்கள். இறுதியாகவும் படத்தில் காட்டியுள்ளதுபோல இடைவெளி விட்டு முடிச்சிடுங்கள். இப்படி தேவையான அளவில் தனித்தனியாக பின்னலிட்டுக் கொள்ளுங்கள். பின்னலிட்டவற்றை ஊசியில் நூலைக்கோர்த்து ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை குறிப்பிட்ட இடைவெளியில் சாதாரண தையல் போட்டு ஒவ்வொன்றையும் இணைத்து . இறுதியாக ஓரங்களில் அதிகப்படியாக உள்ள துணிகளை குஞ்சலம் போல் வெட்டி விட்டால் கால்மிதியடி தயார்...இன்று இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது..

அன்பு தோழமைகளே நம் கண்முன்னே இத்தகைய தொழில்களை திறம்ப்பட நடத்தி வருபவர்களை காண்கின்றோம் அவர்களின் சாதனையைக் கண்டு பொறாமைப்பட வேண்டாம், ஐயோ நம்மால் முடியுமோ என்று மனம் கலங்கவும் வேண்டாம், அவர்கள் சாதிப்பது எதனால் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று அவர்கள் நம்புவதால் தான் என்பதை உணர்ந்தால் போதும்..நம் நம்பிக்கை நாளைய சரித்திரமாக மாற்றுவது நம் கைகளில் ..

கனவுகளைக் கைப்பற்றுவோம் .

http://www.dinamalar.com/news_detail.asp?id=1217173

கனவுகளைக் கைப்பற்றுவோம்- 26

Tamil_News_large_122304220150406104242.jpg

அன்பு தோழமைகளே நலமா? தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன் ..தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் 3 C க்கள்..அதென்னங்க 3 C என்கின்றீர்களா?

3 C 'S COURAGE (தைரியம்), CONFIDENCE (நம்பிக்கை)CONVINCING (திருப்திபடுத்தும் திறன்) எப்பொழுது ஒரு செயலைத் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் செய்கிறோமோ, அப்பொழுது நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களைத் திருப்திப்படுத்தும். புன்னகையை நாம் அணிந்திருந்தால் எதையும் தேடிநாம் அலைய வேண்டியதில்லை. அவை தானே நம்மைத் தேடி வரும்.. .“திட்டமிட்டு முயற்சித்தால், வெற்றியில் நிச்சயம் ஜொலிக்கலாம்”. இன்றைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சந்தை வாய்ப்புள்ள சிறு தொழில்கள் குறித்து காணப் போகின்றோம்...


கொசு விரட்டி தயாரிப்பு:


தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.முன்பு நம் முன்னோர்கள் சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை போன்றவற்றால் புகை மூட்டம் போட்டு கொசுகளை விரட்டினார்கள் . இதை அடிப்படையாக வைத்து, நாம் மூலிகை கொசுவிரட்டி தயாரிக்கலாம் அதற்கு தேவை கொஞ்சம் வேப்பிலை, துளசி நொச்சி மஞ்சள் ,சாம்பிராணி, குங்குலியம் தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை லெமென் கிரேஸ் ஆயில், சந்தன எசன்ஸ் போன்றவை ஆகும்.இதனை கொண்டு லிக்யுட், பத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி ,போன்றவை தயாரிக்கும் பொழுது நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெறலாம்..எனவே .கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்' ..இதற்கான பயிற்சிகள் பயிற்சி மையங்களில் கொடுக்கின்றார்கள் .


பினாயில் தயாரிப்பு:


வாசனை சூழ்ந்த வாழ்க்கைதான் அனைவரின் விருப்பமும். உடுத்துகிற உடை முதல் இருப்பிடம் வரை எல்லாவற்றிலும் நறுமணத்தை நாடுகிறோம். நல்ல வாசனை நமக்குள் ஒருவித தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்து வதை மறுப்பதற்கில்லை ..அந்த வகையில் நல்ல நறுமணத்துடன் கூடிய கிருமி நாசினி பினாயிலுக்கு நல்ல சந்தை வாய்ப்புள்ளது அதிலும் சற்று வித்தியாசப்படுதினால் வெற்றி பெறலாம். 

பினாயில் தயாரிக்க தனி இடம் தேவை யில்லை. பினாயில் தயாரிக்கும் போதும். வெளி யேறும் நெடி அதிகமாக இருக் கும் என்பதால், காற்றோட்டமுள்ள வராண்டாவில் தயாரிப்பது நல்லது. பினாயில் லிக்விட் ஒரு லிட்டர், சென்ட் 150 மிலி, நல்ல தண்ணீர் 30 லிட்டர். 20 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 வாளியை அருகருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மற்றொன்று காலியாக இருக்க வேண்டும். ஒரு கப் எடுத்துக் கொண்டு, அதில் 30 முதல் 35 மிலி பினாயில் லிக்விட்டை ஊற்ற வேண்டும். மற்றொரு கப்பில் தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து நன்றாக ஆற்ற வேண்டும். இந்த கலவையை வாளியில் ஊற்ற வேண்டும். இப்படியே செய்து பினாயில் கலவையை வாளியில் ஊற்றி வர வேண்டும். வாளியில் ஊற்றிய பிறகும் நன்றாக கலக்கி விட வேண்டும். அப்போதுதான் லிக்விடும், தண்ணீரும் கலக்கும். இடையில் மக்கில் 15 மிலி (மல்லிகை, தாமரை, தாழம்பூ, மரிக்கொழுந்து உள்ளிட்ட வெவ்வேறு மணங்களில் உள்ள) சென்ட் எடுத்து அதில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி வாளியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மில்லி சென்ட், 30 லிட்டர் தண்ணீர் முழுவதையும் கலக்க வேண்டும். பிறகு தயாரான பினாயிலை கப்பில் எடுத்து புனல் வழியாக காலி பாட்டிலில் ஊற்ற வேண்டும். பினாயில் லிக்விட், தண்ணீரோடு முழுமையாக கலக்காவிட்டால் திரிந்து விடும். திரியாமல் நன்று கலப்பதற்காக தான் மாறி, மாறி ஆற்ற வேண்டியது முக்கியம்.
தேவை அதிகம் பினாயில் லிக்விட் கிருமி நாசினி. அதில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதால், அப்படியே பயன்படுத்தலாம். மேலும் தண்ணீர் கலக்க வேண்டியதில்லை. இதை சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் தெளித்தால் கிருமிகள் அழியும், சென்ட் கலப்பதால் வாசனையாக இருக்கும். ஈ மொய்க்காது. வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகம் உள்ளது. தரமான வாசனையுள்ள பினாயில்களுக்கு கிராக்கி உள்ளது. மக்களுக்கு வாடிக்கையாக சப்ளை செய்யலாம். நல்ல லாபம் தரக் கூடிய தொழிலாகும் .
சினிபிரஸ், நீலகிரி தைலம், புல் தைலம், சிட்டி டோரா, லெமன் கிராஸ் உள்ளிட்ட நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரித்தால் மக்கள் மனதில் இடம் பெறுவது மட்டுமில்லாமல் கூடுதல் லாபமும் பெறலாம்
இயற்கை மூலிகை பேஸ் பேக்:

கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்
உலர்ந்த மகிழம் பூ-200கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்
கோரைக்கிழங்கு பொடி-100கிராம்
உலர்த்திய சந்தனப்பொடி-150கிராம்
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சுத்தமான பாக்கெட் அல்லது சின்ன டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யலாம்...பயன்படுத்த வேண்டிய முறையில் கீழ்க்கண்ட தகவல்களை பிரிண்ட் செய்து வைத்து விட வேண்டும்.இயற்கை மூலிகை பேஸ் பேக்:..பன்னீர் சேர்த்து உருண்டை பிடித்து அரைமணி நேரம் வைத்த பின்பு குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பால் கலந்து முகத்தில் தடவி அரைமணிநேரம் ஊறிய பின் குளிர்ந்த முகத்தை கழுவலாம். கழுவிய பின் சோப்பு எதுவும் போடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் முகத்திற்கு மென்மையும் பளபளப்பும் கூடும்
இயற்கை குளியல் பொடி:

கஸ்தூரி மஞ்சள்-100கிராம்
வெட்டி வேர்-200கிராம்
அகில் கட்டை-200கிராம்
சந்தனத்தூள்-300கிராம்
கார்போக அரிசி-200கிராம்
தும்மராஷ்டம்-200கிராம்
விலாமிச்சை-200கிராம்
கோரைக்கிழங்கு-200கிராம்
கோஷ்டம்-200கிராம்
ஏலரிசி-200கிராம்
பாசிபயறு-500கிராம்
சோம்பு-100கிராம்
இவை அனைத்தையும் தனி தனியாக காயவைத்து அரைத்து பின் ஒன்றாகக் கலந்து பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யலாம். வைத்து தினமும் குளிக்கும் போது உங்களுக்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து குழைத்து உடல் முழுவதும் பூசி 15 நிமிடத்திற்கு பின் குளித்தால் உடல் தூற்நாற்றம் நீங்கி உடல் நறுமணம் வீசும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தேமல், படர்தாமரை,சொறி, சிரங்கு, கரும்புள்ளி, முதலியவை மறையும். இதை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
இதை விரும்பாத நபர்கள் இருக்க மாட்டார்கள் ஆனால் நல்ல தரத்தில் பொடியாக இவை கிடைத்தால் விரும்பாத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
மேற்கண்ட கைத்தொழிலை எடுத்தவுடனே அதிக அளவில் தயாரிக்க வேண்டியதில்லை முதலில் பரீட்சார்த்தமாக சிறிதளவு 'சாம்பிள்' தயாரித்துவிட்டு அதன் தரம் எப்படி என்பதை அறிந்த பின்னரே அதிக அளவில் தயாரிப்பது தான் தரமானதாக இருக்கும். விலை மிக அதிகம் கொண்ட மூலப் பொருள்களில் மட்டுமின்றி எல்லாவித பொருட்களின் தயாரிப்பு முறைக்கும் இந்த வழிமுறையைக்கையாளவும்.
நமக்கு என்ன தேவைகள் உள்ளனவோ அதே தேவைகள் அடுத்தவருக்கும் உள்ளன என்று எண்ணுவதே அடிப்படை மனித பண்பு. நம்மை அடுத்தவர் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ , அவ்வாறே அடுத்தவர்களை நாம் நடத்துவதும், அவர்களிடம் நாம் நடந்து கொள்வதும்தான் உயர் பண்பு.அது போல் நாம் ஒரு பொருள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி தயார் செய்வது தான் தொழில் யுக்தி...இந்த யுக்தியை கை கொண்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்...
- ரோஸ்லின்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1223042

Link to comment
Share on other sites

  • 1 month later...

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 27

அன்பு தோழமைகளே நலமா? இன்று வேண்டாம் என்று தூரப் போட நினைக்கும் பொருட்களைக் கொண்டு அழகிய பரிசு பொருட்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து காண்போம்... ஆனால் இதை தயார் செய்ய நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கின்றோம்.....உடல் நோகாமல் வேலை பார்க்கவும் , தொலைக் காட்சிப் பெட்டியில் சீரியல் பார்க்கவும், முகநூல், வாட்சப், ட்விட்டர், போன்று சமூக வலைதளங்களின் மோகத்தில் இருக்கும் நாம் உண்மையான சந்தோசம் என இவற்றில் பொழுதை போக்கி கொண்டிருக்கின்றோம்..ஆனால் உண்மையில் இவை உண்மையான சந்தோசங்களை கொடுப்பதில்லை, நம் பணமும் விரயமாகின்றன அதற்கு நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தேவையில்லை என்று தூக்கி போடும் பொருட்களைக் கொண்டு அழகிய கலைநயமிக்க பொருட்களை தயார் செய்யலாம் .இவை மனதிற்கு நிம்மதி கொடுப்பது மட்டுமல்லாமல் இவற்றை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானமும் பார்க்கலாம்...

gallerye_075159636_1231580.jpg

 

gallerye_075205839_1231580.jpg

கலைநயமிக்க போர்டு -Wall Hanging:

நாட்காட்டி அட்டை அல்லது கேக் அடியில் இருக்கும் அட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பசையை தடவி சாக் பவுடரை தூவி நிரப்ப வேண்டும். சற்று காய்ந்ததும், அதில் வெள்ளை களிமண்ணை தேவையான உருவங்களில் வடிவமைத்து ஒட்ட வைக்க வேண்டும். அது கடவுள், பூக்கள், கார்ட்டூன் என எந்த உருவமாகவும் இருக்கலாம். அவற்றை மீண்டும் நன்றாக காயவைத்த பின்பு, போர்டு மற்றும் உருவத்தின் மீது எனாமல், பேர்ல், பேப்ரிக் ஆகிய பெயின்ட் வகைகளில் ஒன்றை பிரஷ் மூலம் வண்ணம் பூச வேண்டும். எந்தெந்த இடங்களில் எந்த வண்ணம் பூச வேண்டும் என்பது முக்கியம். சில இடங்களில் குறிப்பிட்ட நிறங்களை தான் பயன்படுத்த வேண்டும். வண்ணம் பூசிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் காயவைத்து, அதன் மீது வார்னிஷ் அடித்து 2 மணி நேரம் காய வைத்தால் அழகிய சிற்ப ஓவியம் தயாராகிவிடும். சுற்றி பார்டர் வேண்டும் அல்லவா அதற்கு சாக்பவுடர், பசை, வெள்ளை களிமண் (எம்.சீல்) கொண்டே பார்டர் உருவாக்க வேண்டும்...இதில் வெள்ளை களிமண் (எம்.சீல்) க்கு பதில் குல்லிங் பேப்பர், டெரக்கோட்டா போன்றவற்றையும் பயன்படுத்தி செய்யலாம்...


டிஸ்யு பேப்பரில் அழகிய பொம்மை

: செம்பு கம்பி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதை தலை, கை,கால் என வடிவமைத்துக் கொள்ளுங்கள்...டிஸ்யு பேப்பரை எடுத்து சின்ன சின்னதாக வெட்டி வைத்துக் கொள்ளவும், கம்பியில் கம் தடவிய பின்பு வெட்டி வைத்த காகிதத்தை கம்பி முழுவதும் சுற்றி சிறிது நேரம் காய வைக்கவும், டிஸ்யு பேப்பரை எடுத்து அதை விசிறி போல் மடித்து , பொம்மைக்கு உடைகள் தயார் செய்யவும், உடைகள் தயார் செய்யும் பொழுது இரண்டு மூன்று கலரில் செய்து கொண்டு அடுக்கடுக்காக வைத்து நூலால் கட்டவும்...இப்பொழுது அழகிய பொம்மை தயார்..

ஐஸ் குச்சியில் பென்ஸ்டாண்ட்: ஐஸ் குச்சி- தேவைகேற்ப எடுத்துக் கொள்ளவும்...அதில் 7 குச்சிகளை அடுத்தடுத்து அடுக்கி கொள்ளவும்...அதன் பின் இரண்டு குச்சிகளை எடுத்து ஒவ்வொன்றிலும் கம் தடவி .அடுக்கி வைத்த குச்சியின் மேல் நீளவாக்கில் ஒட்டவும் ..இது அடீபாகம்...அதன் மேல் நான்கு குச்சிகளை எடுத்து பிரேம் போல் ஒட்டிக் கொண்டு , இந்த அடிப்பாகத்தின் மீது தேவையான உயரை வரை நான்கு குச்சிகளை ஒட்டிக் கொண்டே வர வேண்டும் ..பிறகு ஓரங்களில் கலர் கொடுக்கவும். மேலே உங்கள் கற்பனைக்கு ஏற்ப்ப கண்ணாடி, மணி வைத்து அலங்கரிக்கவும் . இப்பொழுது அழகியபென்ஸ்டாண்ட் தயார்..இதே போல் இக்குச்சிகளை வைத்து அழகிய வால் ஹாங்கிங், லெட்டெர் ஹோல்டர் , போட்டோ பிரேம்கள் போன்றவை தயார் செய்யலாம்...


ஸ்பூன் ஸ்டாண்ட்:

பெண்களே இன்று நீங்கள் புடவை எடுக்கும் பொழுது பெரும்பாலும் ஜாகெட்டுக்கும் துணி சேர்ந்தே இருக்கும் ..சிலர் தைப்பார்கள்..சிலர் அதை வெட்டி எடுத்து விடுவர்..அவ்வாறு எடுத்த துணிகளோ அல்லது நல்ல துணிகளாக இருக்கும்..நாம் அயர்ன் செய்யும் பொழுது ஓட்டை விழுந்து விட்டால் உபயோகம் செய்ய மாட்டோம் அத்தகைய துணிகளை கொண்டு அழகிய ஸ்பூன் ஸ்டாண்ட்: செய்யலாம்..நீளம் அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்குமாறு துணிகளை எடுத்துக் கொண்டு ஓரம் மடித்து தைத்துக் கொள்ள வேண்டும்...பின் ஒவ்வொரு கரண்டிகள் வைக்கும் அளவுக்கு இடம் விட்டு இரு பக்கமும் தையல் போடா வேண்டும்...இப்படியே ஒரு துணியில் கரண்டிகள் வைக்குமாறு போடலாம் .துணிகளின் இரு பக்கமும் கட்டுவதற்கு துணிகளை கொண்டே கைப்பிடி செய்து கொள்ள வேண்டும்....

பொக்கே: கோன், பூ ஆகியவற்றை தனித்தனியாக தயாரிக்க வேண்டும். ஜவுளி துணிகள் வைத்து வரும் கவர்களை எடுத்து அதை கத்தரித்துக் கொண்டு முக்கால் அடி உயரம், ஒன்றரை இஞ்ச் திறப்பு உள்ளவாறு சுற்றினால் கோன் தயார். பூ தயாரிக்க முதலில் இதழ் தயாரிக்க வேண்டும், பின் அவ ற்றை பூவாக மாற்ற வேண்டும். ஒரு பூவுக்கு 7 இதழ்கள் தேவை. இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 2 இஞ்ச் அளவில் 1 துண்டு, இரண்டரை இஞ்ச் அளவில் 2 துண்டு, இரண்டே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 3 இஞ்ச் அளவில் 2 துண்டு என மொத்த 7 துண்டுகளை வெட்டி கொள்ள வேண்டும். ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும். இதழ் செய்ய, முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் அதை சமமாக இடது, வலதாக மடிக்க வேண்டும். இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும். இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகும்.

பூ தயாரிக்க, முதலில் 5 இஞ்ச் நீளமுள்ள கம்பியை எடுத்து கொள்ள வேண்டும். மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து, சிறிய இதழை அதில் செருக வேண்டும், பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து, ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். 7 இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும். பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் செலோ டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும். காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை செருகினால் செயற்கை ரோஸ் சிங்கிள் பொக்கே ரெடி...


சந்தைவாய்ப்பு:

பரிசு பொருட்களுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்புகள் அதிகம். பிறந்த நாள், திருமணநாள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு பரிசு பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.சின்ன சின்ன கலைநயத்துடன் செய்யும் பரிசு பொருட்களின் புதுவித வடிவமைப்புகள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். டீ உழைக்க நான் தயார்- ஆனால் வாய்ப்பு இல்லையே, , வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.... வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மக்கள் பெருக்கம். தேவை அதிகம். தேவை பெருகப் பெருக உழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.உழைத்துப் பிழைக்கக் கற்றுக்கொண்டால் யாருக்கும் நாம் அடிமையாக வேண்டியதில்லை. தன்னம்பிக்கையும் நம்மால் எதுவும் சாதிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை வரும்...

' உன்னை அறிந்தால்-நீ

உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்'

என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளை நினைவில் கொண்டு வாழ்வோம்...

- ரோஸ்லின்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1231580

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 28

மரம் இயற்கையின் சீதனம் 

காற்றின் வாகனம் 


அழகின் ஆசனம் 


பசுமையின் தோரணம் 


பறவைகளின் சரணாலயம் 


நமக்கோ நிழற்குடை

ஆம் அன்பு தோழமைகளே இன்று ஒரு அருமையான தகவல்களை பெற போகின்றோம்..அது என்ன தெரியுமா? வேரிலே ஊற்றிய தண்ணீருக்கு கைமாறாய் தலையாலே இளநீராய்த் தரும் தென்னையை குறித்து காணப் போகின்றோம்..தென்னை மரத்திலிருந்து விளை பொருளாக கிடைக்கும் தேங்காய் மனித வாழ்வில் பலவிதத்திலும் பயன்படுத்தப்படுகிறது, 


தென்னை மரத்தின், இலை, தண்டு, பூ, மடல், தேங்காய் பிசிறுகள் என்று அனைத்துமே மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது. இவற்றை சரியான முறையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால் நல்ல லாபம் பார்க்கலாம்

தென்னை நார் கேக் :


தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் மட்டைகளோ முழுவதுமாக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறமோ தென்னை நார் பிரித்தெடுக்கும் பொழுது உபரிதமாக கிடைக்கும் நார் கழிவு உபயோகிக்கும் முறையை இன்னும் பெரும்பான்மை விவசாய பெருங்குடி மக்கள் அறிந்திருக்கவில்லை. தென்னை நாரிலிருந்து வீணாகும் கழிவுத்துகள் இயற்கை யாகவே விவசாயத்திற்கு ஏற்ற சத்து மிக்க பொருட்களாக உள்ளது

10 சதவீத நாருடன் உள்ள தேங்காய் மட்டை தூள்களில் தண்ணீர் குழாய் மூலம் அடித்து, அதில் உள்ள உப்புச்சத்தை குறைத்து பின் அதை பதப்படுத்தி காய வைத்து பெரிய நார்களை அகற்றிவிட்டு, அத்தூளில் 10 சதவீத நார்கள் மட்டும் இருக்கும்படி செய்ய வேண்டும் . அதை 'டை' மிஷின் மூலம் 2 அடி நீள, அகலத்தில் கேக்குகளாக தயாரிக்க வேண்டும். வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு 2 டன் கேக், மழைக் காலத்தில் ஒன்றரை டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கேக், 70 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். காய்கறி பயிரிடுவோர், செடியின் அடிப்பாகத்தில் தண்ணீரில் ஊற வைத்த இந்த நார் கேக்கை போடுவர். இதனால், செடியின் வேர்ப்பகுதி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த கேக்கை உபயோகப்படுத்துவதால், 20 சதவீதம் விளைச்சல் அதிகமாக இருக்கும். வளர்ந்து வரும் நகரச் சூழலுக்கு ஏற்ப தற்போது வீட்டுத் தோட்டங்களையும், மாடித் தோட்டங்களையும் அமைத்து மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை விளைவித்துக் கொள்கின்றனர்.இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. .

தேங்காய் பால் பவுடர் :
இன்றைய உணவு தயாரிப்பில் தேங்காயின் பங்கு அளப்பரியது. இயந்திரமான உலகில் சமையலுக்கு தேங்காய் பால் எடுப்பது என்பது நேரம் எடுக்கும் வேலையாக இருக்கிறது எனவே தேங்காய் பாலை பிழிந்து அதனை பக்குவப்படுத்தி பவுடராக டின்களிலும், பாலிதீன் பைகளிலும் அடைத்து விற்பனை செய்யலாம். அல்லது பாலாகவும் விற்பனை செய்யலாம்தேங்காயை அரைத்துப் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய் பால் இனிப்பும், துவர்ப்பும் சேர்ந்த ஒரு கலவை. இது குடல்புண், வாய்ப்புண்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக இருக்கிறது.

.தேங்காய் துருவல்கள்: நன்கு முற்றிய தேங்காயிலிருந்து மென்மையான, மிதமான மற்றும் சொரசொரப்பான துருவல்களாக எடுத்து உலரவைத்து கொள்ள வேண்டும், வணிகரீதியாக தயாரிக்கும் போது தேங்காய் உடைத்து பருப்பு தனியாக பிரித்து மரநிற தோலைநீக்கி துருவல்களாக்கி சூடான காற்று செலுத்தப்பட்டு 140-170 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் 2% ஈரப்பதத்திற்கு கட்டுப்படுத்தப்படுகிறது. இவை பொருவாக தேன், பப்ஸ், மற்றும் மிட்டாய்கள் தயாரிக்க பயன்படுகிறது.

தேங்காய்சட்னி:
சூடானகாற்று உலர்த்துதலின் மூலமாக இந்த சட்னி தயார் செய்யப்படுகிறது. இது குளிர்ந்த நீரில் சேர்த்தால் புதிதாக செய்த சட்னி போன்று குணங்களை பெறும் இதன் பயன்படும் காலம் 3 மாதங்கள் 37 டிகிரி செ வெப்ப நிலையில் 6 மாதம் வரை இருக்கும்

தேங்காய் மிட்டாய்: தேங்காய் துருவல்களுடன் தேங்காய் பால் சேர்த்து தேங்காய் மிட்டாய் செய்யப்படுகிறது. துருவிய தேங்காய் ஈரப்படுத்த சிறிதளவு பால் சேர்க்கப்டுகிறது. மீதமுள்ள பால் சூடுபடுத்த வேண்டும் பின்னர் சர்க்கரை சேர்த்து சூடுபடுத்த வேண்டும் . இவை கெட்டியாகும் பதத்தில் வெண்ணெய் தடவிய தட்டுகளில் ஊற்றி ஆறவைத்து சிறு துண்டுகளாக்கினால் மிட்டாய் ரெடி...

தென்னையில் பிற தொழில்கள்:
தேங்காய் நார்களை கொண்டு தற்போது அழகான மிதியடிகள், தரைவிரிப்புகள் செய்யலாம். தேங்காய் ஓட்டில் பொம்மைகள் செய்யலாம்..இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது..தேங்காய் ஓட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சட்டை பித்தான்கள் செய்யவும், எரிபொருளாகவும், நாதஸ்வரக்குழாய்களுக்கு தேவையான வில்லைகள் செய்யவும் பயன்படுகிறது. தென்னை ஓலை வீடுகளில் கூரை வேய்ந்த அறைகளை உருவாக்க பயன்படுகின்றது . தென்னை ஈர்க்குகள் வீடு சுத்தம் செய்ய துடைப்பமாக மாறிவிடுகிறது.

உலர்ந்த கொப்பரையிலிருந்து கிடைப்பது தேங்காய் எண்ணெய். இவை தலைக்கு தேய்க்கும் எண்ணையாகவும சில இடங்களில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான சமையல் எண்ணையாகவும் பயன்படுகிறது. 

தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம். இதனை தொழிலாக மேற்கொள்ள விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

கயிறு வாரியம் மத்திய அரசு - பொள்ளாச்சி . 


04259 - 222450, 227665

http://www.dinamalar.com/news_detail.asp?id=1248973

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.