Jump to content

பூனையை மட்டும் அனுமதிக்காதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகத்தான ஞானி ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது சீடனை அழைத்தார்.

“ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். உனது வாழ்க்கையில் பூனையை மட்டும் அனுமதிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு மரணத்தைத் தழுவினார். குருவின் கடைசி வார்த்தைகளை ஒரு பெரிய கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது. சீடனுக்கோ யோசனையாக இருந்தது.

“ நான் ஏன் என் வாழ்க்கையில் ஒரு பூனையை நுழையவிட வேண்டும்? இதுதான் எனது குருவின் ஒட்டுமொத்த கோட்பாடா?” என்று சந்தேகம் எழுந்தது. அவனோ வயதில் இளையவன். அப்போதுதான் இன்னொரு சீடர் உதவிக்கு வந்தார். அவரோ வயதில் முதிர்ந்தவர்.

அவர் முதுமையை அடைந்துவிட்ட காரணத்தாலேயே அவருக்கு ஆசிரமத்தின் தலைமைப் பதவி தரப்படவில்லை. அவர் இளைய சீடனிடம் கூறினார். “ குரு சொன்னது தொடர்பாக உனக்கு எதுவும் தெரியாது. அவர் வார்த்தைகளுக்குப் பின்னர் நீண்ட கதை ஒன்று உள்ளது. முத்தாய்ப்பான ஒரு பொன்மொழியையே உனக்குக் கூறினார்” என்று தெரிவித்தார்.

இளைய சீடன் மூத்த சீடரிடம் குருவின் பூர்வாசிரமக் கதையைக் கேட்டான்.

முன்பொரு காலத்தில் அவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் வீட்டையும் துறந்து இமாலயத்திற்குச் சென்றார். இமாலயத்தின் அடிவாரத்தில் ஒரு கிராமத்திற்கு அருகே அவர் தியானம் செய்தார். அங்கிருந்த கிராமத்து மக்கள் அவருக்கு உணவு அளித்தனர். அவருக்காக சிறிய அளவில் மூங்கில் கொட்டகை ஒன்றையும் கட்டிக்கொடுத்தனர்.

குரு தனக்கென உடைமையாக இரண்டு வேஷ்டிகளை மட்டுமே வைத்திருந்தார். ஒரு வேஷ்டியைத் துவைத்து உலர்த்தி இன்னொன்றைக் கட்டிக்கொள்வார். அதில்தான் பெரிய தொந்தரவு உருவானது. கொடியில் தொங்கவிடப்படும் வேஷ்டியை இரவில் எலிகள் கடித்துக் குதறி கந்தலாக்கின.

என்ன செய்வது என்று யோசித்து கிராமத்தவர்களிடம் ஆலோசனை கேட்டார். கிராமத்தவர், குருவிடம் ஒரு பூனையை வளர்க்கச் சொன்னார்கள். பூனைக்குப் பால் வேண்டுமே? என்ன செய்வது என்று கிராமத்தினரிடம் மறுபடியும் ஆலோசனை கேட்டனர். ஒரு பசு மாட்டை வாங்க ஆலோசனை கூறப்பட்டது. குருவும் பசு மாட்டை வாங்கினார்.

பசு மாட்டுக்குத் தினசரி புல் தேவைப்பட்டது. துறவி கிராமத்திற்குள் சென்று ஒவ்வொரு வீட்டிலும் புல்லைப் பிச்சையாகப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. கிராமத்தினர் துறவியிடம், “உங்கள் கௌரவத்துக்கு இது சரியல்ல. புல்லுக்காக ஒரு துறவி வீடுதோறும் ஏறி இறங்குவதா? இது முறையல்ல” என்றனர்.

“என்ன செய்வது? எனது பசுவையும், பூனையையும் நான் எப்படி பராமரிப்பது” என்று கேட்டார்.

“ ஒரு எளிய தீர்வு இருக்கிறது. எங்கள் ஊரில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் விதவை. அவளைப் பாதுகாக்க ஒருவரும் இல்லை. அவளைச் சம்மதிக்க வைக்கிறோம். ஒரு ஞானிக்கு சேவை செய்வதில் அவளும் சந்தோஷமே அடைவாள். அவள் உங்கள் பசுவையும் பூனையையும் பார்த்துக்கொள்வாள். உங்களையும் பார்த்துக் கொள்வாள். உங்கள் வீட்டைச் சுற்றி நிலத்தைத் திருத்தி பயிரும் செய்யலாம்” என்று ஆலோசனை கூறினார்கள்.

அவளும் சம்மதித்தாள். குருவும் சம்மதித்தார். இப்படியாக எல்லாம் நடந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தானே …

புல் தானாகவே வளர்கிறது என்று பாஷோ கூறியது போல எல்லாம் வளரத் தொடங்கியது. துறவியும் அந்தப் பெண்ணும் காதல் கொண்டார்கள். அவர்கள் சேர்ந்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டார்கள். கோதுமை வளர்ந்தது. மாட்டுக்குப் புல்லும் கிடைத்தது. பூனையும் சந்தோஷமாக இருந்தது. குழந்தைகள் பிறந்தன. ஒரு நாள் அந்த குருவுக்கு திடீரென்று ஒரு எண்ணம் எழுந்தது.

“இந்த உலகத்தைத் துறந்து நான் இமாலயத்திற்கு வந்தேன். இப்போதும் இங்கேயும் அதே உலகத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டேனே” என்று யோசித்தார்.

பூனையால் தானே இத்தனை பிரச்சினை. அதனால்தான் பூனையை அனுமதிக்கக் கூடாது என்று குரு கூறியதாக மூத்த சீடர் இளைய சீடரிடம் கூறினார்.

எலிகள் எல்லா இடத்திலும் இருக்கவே செய்கின்றன. திரும்பவும் அதே கதைதான் தொடங்கும். அதனால் அமைதியாக இருப்பது நல்லது.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

அருமையான கதை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கஸ்டத்துக்கு பேசாமல் வேட்டியையும் துறந்து பரிநிர்வாணம் அடைந்திருக்கலாம்...! :rolleyes::D

Link to comment
Share on other sites

சாமியார்கள் எல்லாரும் கமெராவில் மாட்டுப்படுறதுக்கு.. எலித்தொல்லைதான் காரணம் என நினைக்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகள் எவரும் கமெராவில் மாட்டுப்படுவதில்லை அவர்கள் வளர்க்கும் எலிகளே மாட்டுப்படுகின்றன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.