Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்..மற்றும் யாயினியின் பக்கத்தை புரட்டிச் செல்லும் அத்தனை உறவுகளுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

விடியாத இரவென்று

எதுவுமில்லை...

முடியாத துயரென்று

எதுவுமில்லை...

வடியாத வெள்ளமென்று

எதுவுமில்லை..

வாழாத வாழ்க்கையென்று

எதுவுமில்லை.

 

கவிஞர் வைரமுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நட்புக்கள்,யாழ் இணைய உறவுகளுக்கு திருஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்கள்!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செயல் பாட்டை கால தாமதமின்றி விரைவாக  செய்வது உத்தமமானது.விரைவாக முடிவு எடுப்பது அதி உத்தமானது...காலத்தே பயிர் செய் என்று இதை தான் சொல்லி வைத்தார்களோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பத்திரிகையில் படித்த செய்தி ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்...அந்த செய்தியானது சீன நாட்டு செவ்ப் சமையல் காரர் ஒருவரால் சுப் செய்யப் பட்ட பாம்பின் தலை இறுதிக் கணத்தில் அந்த மனிதரையே பதம் பார்த்துக் கொண்டதுவாம்.உணவுக்காக,மதுவிற்காக வளர்க்கபட்டு வந்த பாம்பே ஒரு தலை மட்டும் மிஞ்சிய நிலையில் அந்த மனிதரை பழி வாங்கி இருக்கிறது.அந்த மனிதர் நினைத்தே இருக்க மாட்டார்.உடன் நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டது ஒன்றே ஒன்று தான் எல்லாரையும் நம்பும் என் போன்றவர்களுக்கு கடசியில் அதிலிருந்து மீள முடியாதளவுக்கு சில வலிகளை  தாங்க வேண்டியதாக இருக்கும்.எப்போதும் பாம்பு,பாம்பு தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிக்க ,,நானும் ஆவலாக உள்ளேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,

 

றோசாப் பூவையும் சேர்த்தால், 100 பூக்கள்

இதில் இப்போ.... 50%மான பூக்கள், அழிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோசாப் பூவையும் சேர்த்தால், 100 பூக்கள்

இதில் இப்போ.... 50%மான பூக்கள், அழிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

 

 

ஓம் இப்போ நிறையப் பூக்கள் அழிந்து போய் இருக்கலாம்,பெயர்கள் கூட புளக்கதில் இல்லாமலும் போய் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிக்க ,,நானும் ஆவலாக உள்ளேன்....

 

நன்றி தம்பி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் ஆண்கள்,பெண்களுக்கு மட்டுமல்ல பூக்களுக்கும் பருவங்கள் உண்டு அவையாவன..

 

அரும்பு-----பூ   அரும்பும் நிலை

மொட்டு-------பூ    மொக்கு விடும் நிலை

முகை---------பூ    முகிழ்கும் நிலை

மலர்-----------பூ     மலரும் நிலை

அலர்----------பூ     மலர்ந்த நிலை

வீ---------------பூ    வாடும் நிலை

செம்மல்----பூ    வதங்கும் நிலை

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி யாயினி. தொடருங்கள். இன்று ஓணம் ஏன் கொண்டாடுவது என்று யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள். என் கணவருக்குத் தெரிந்த ஒருவர் இன்று 23 வகைக் கறிகள் செய்து கொடுத்துவிட்டார். உண்ணவே முடியவில்லை. ஆனால் எல்லாம் வித்தியாசமான சுவை. சுடச்ச்சுட விடயங்களைப் போடுவதால் எல்லா விபரமும் உங்கள் திரியிலேயே கிடைத்துவிடும் போல் இருக்கே. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோசாப் பூவையும் சேர்த்தால், 100 பூக்கள்

இதில் இப்போ.... 50%மான பூக்கள், அழிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

 

 

அருமையானாதை அழகானதை தேவர்கள் தமது தேவலோகத்திற்கு எடுத்து சென்று விட்டார்களாம். எஞ்சியிருப்பதைதான் மானிடப்புளுக்கள் அனுபவிக்கின்றார்களாம்..புராண இதிகாகங்களில் சொல்லப்பட்டுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி யாயினி. தொடருங்கள். இன்று ஓணம் ஏன் கொண்டாடுவது என்று யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள். என் கணவருக்குத் தெரிந்த ஒருவர் இன்று 23 வகைக் கறிகள் செய்து கொடுத்துவிட்டார். உண்ணவே முடியவில்லை. ஆனால் எல்லாம் வித்தியாசமான சுவை. சுடச்ச்சுட விடயங்களைப் போடுவதால் எல்லா விபரமும் உங்கள் திரியிலேயே கிடைத்துவிடும் போல் இருக்கே. வாழ்த்துக்கள்.

 

உங்கள் கருத்துக்களுக்கம் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் அக்கா..நான் இப்படியான விடையங்கள் தேடிச் சேகரிப்பது, சின்ன,சின்னதாய் எழுதுவது,வீட்டு வேலை  பொன்றவற்றேில் தான் எனது நேரத்தை செலவிடுவது வளக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  டாக்ரர் சீர்காளி கோவிந்தராஜன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி 1970 ஆண்டு.யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 

தமிழில் ஆண்கள்,பெண்களுக்கு மட்டுமல்ல பூக்களுக்கும் பருவங்கள் உண்டு அவையாவன..

 

அரும்பு-----பூ   அரும்பும் நிலை

மொட்டு-------பூ    மொக்கு விடும் நிலை

முகை---------பூ    முகிழ்கும் நிலை

மலர்-----------பூ     மலரும் நிலை

அலர்----------பூ     மலர்ந்த நிலை

வீ---------------பூ    வாடும் நிலை

செம்மல்----பூ    வதங்கும் நிலை

 

 

 

 

 
என்ன யாயினி இப்படிச் சொல்லீட்டீங்க....
 
 
அப்போ... தமிழ்ச் செம்மல் என்போர் நிலை ???
 
 
ஓ........  காட் !!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்களுடன் யாயினி......அனைத்து உறவுகளுக்கும் இனிதான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்.எப்பொருள் யார்,யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்...இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்.world letracy day.முதன் முதலில் 1965ம் ஆண்டு உலக எழுத்தறிவு தினம் பிரகடனப்படுத்தப்பட்து.இலங்கையில் எழுத்தறிவு தினம் 95.6 மதிப்பிடப்பட்டுள்ளது.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல நட்பு

கரும்பைபோன்றதது,

நாம் அடித்தாலும்..

ஒடித்தாலும்,

கடித்தாலும்,

பிழிந்தாலும் நமக்கு

அது  இனிப்பை,

மட்டுமே தரும்!

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எவ்வளவுக்கு, அமைதியாக பயந்த சுபாவமாக இருப்பாரோ அந்தளவுக்கு மற்றவர்ளினால் தாக்கப்படுவார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

 

மரியாதைக்கு உரிய ஆசிரியர் அவர்களுக்கு.என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல..அனைத்து மனிதர்களும் உண்மையானர்வர்களும் அல்ல  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் மனிதர்களில் கயவன் இருப்பது போல,பின்பற்ற தக்கவர்களும் இருக்கிறார்கள் என்பதையும்,ஒவ்வொரு தன்னல அரசியல் வாதி இருப்பது போல  அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும் ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருப்பார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்கு தெரியும்.உழைத்து சம்பாதித்த ஒரு டாலர் உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று கற்றுக் கொடுங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் ,வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.மவுனமாக ரசித்து சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள்.எதற்கு எடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதை புரிய வையுங்கள்.புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை  அவனுக்கு திறந்து காட்டுங்கள்.

அதனை விடவும் இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.ஏமாற்றுவதை விடவும் தோல்லியடையவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு பள்ளியில் கற்றுக் கொடுங்கள்.மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும் முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் நடக்க  அணுகுவதற்கு பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய் கரைந்து  போய் விடாமல் சுயமாக செயல்படும் ததரியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.கஷ்டமான சுழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும்,புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயற்சி கொடுங்கள்.தன் செயல் திறனுக்கும் அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும்.ஆனால் தன் இதயத்திற்கும் தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை  அவன் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.இது மிகப் பெரிய பட்டியல் தான்.இதில் உங்களுக்கு சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு நீங்கள் கற்றுக் கொடுங்கள்.அவன் மிக நல்லவன் என் அன்பு மகன்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு யானையை வளர்க்கும் பாகன் எப்படித் தான் அந்த யானையைத் தடவிக் கொடுத்து அன்பாக வளர்ந்து வந்தாலும் அது மதம் கொள்ளும் போது தன்னை வளர்த்த பாகனையே பதம் பார்த்து விடுகிறது....அன்பானவர்கள்,பண்பானவர்கள் என்று பழகும் போது அவர்கள் எங்களுக்கு தெரியாமலே தங்களைப் பலப்படுத்திக் கொண்டு போவது நோவுகள் ஏற்படும் போது தான் தெரிகிறது...

 

 

நான் மெழுகாய் உருக

இரவுகளை  நேசிக்கிறேன்

நம்பியவர் தேனாய்

உருக பெண்ணைத்

தேடி பயணமாகிட்டர்..

 

 

இது தான் இன்றைய உலகம்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான தேர்வுகள் மிக நல்ல பதிவுகள்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு திறமையையும்  வைத்துக்கொண்டு

ஏன் ஒதுங்கியிருப்பான்....

 

இதை வெளிக்கொணர  என்னால் முடிந்தது

என் பாக்கியம்......... :icon_idea:

 

தொடருங்கள்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.