Jump to content

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரம் ஆகிவிட்ட நிலையில், இதை நிறைத்தமாட்டார்கள், பாவம் பிள்ளைகள்.


பெற்றோரின் ஆசைக்காக பலியாடக்கப்படும் சிறுவர்கள்

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

உற்று நோக்கினால் தெரியும், மாற்றங்கள் செய்துள்ளார்கள் (DD's talks, magic ball)

http://tamilo.com/2016TamilTVShow/SuperSinger/11/Nov26a.html

http://tamilo.com/2016TamilTVShow/SuperSinger/11/Dec03d.html

தமிழ் நாட்டு (அறிவு, கலை, அடிக்க முடியாது. வறுமையும் எனது உறவுகளை கொல்லுகிறது ) எழுத்துக்கள்(face book jokes), பாடல்கள், படங்கள் இல்லையெனில், ஈழத்து எந்த ஊடகங்களாளும் நின்று பிடிக்க முடியாது, இழுத்து மூடவேண்டியதுதான், மன்னிக்கவும், யாழ் உற்பட

Link to comment
Share on other sites

  • 9 months later...

குழந்தையா? காட்சிப்பொருளா?

 

ஏன்டா ! நம்ம பாப்பா டிவில எந்தப்  பாட்டு போட்டாலும் ஆடுறா , பேசாம எதாவது டான்ஸ் ஆடச் சொல்லிக்கொடுக்குற எடத்துல சேத்துவிடுவமா? அவளும் டிவி நிகழ்ச்சியில போய் ஆடுவாள! என் அக்கா கேட்ட கேள்வி இது. இந்தக் கேள்வி டிவியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று ஒளிபரப்பாகும் அத்தனை சேனல்கள் மீதும் வெறுப்பை உண்டு பண்ணியது. காரணம் அந்தக் குழந்தையின் வயது வெறும் இரண்டரை தான்! உங்கள் குழந்தை நன்றாக ‘’தவக்குமா?‘’, உடனே வாருங்கள் இந்தியாவின் சிறந்த தவக்கும் குழந்தைக்கான தேடல்! என்று தான் இன்னமும் அவர்கள் நிகழ்ச்சிக்குப் பேர்  வைக்கவில்லை. ஹலோ எங்க குழந்தைக்கு இருக்கும் திறமையை உலகத்துக்கு காட்றோம் உங்களுக்கு என்ன வந்துச்சு என்று கேட்க தோன்றுகிறதா? பிரச்சனை அதுவல்ல, அந்தக் குழந்தைகள் தாங்கள் காட்சிப்பொருளாகக்  காட்டப்படுகிறோம் என்று தெரிந்தா நிற்கிறார்கள் ?

maxresdefault-1-1-701x394.jpg

குழந்தைகள் நடிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று. அதுவும் மிகப்  பிரபலமான சேனலின் நிகழ்ச்சி. அதில் ஒரு 3 வயது சிறுவன்  மாடு போன்று வேடம் போட்ட மற்றொரு  நபரைப் பார்த்து பயந்து பார்வையாளர்கள் இருக்கையில் இருக்கும் அம்மாவைப்  போய் கட்டிப் பிடித்துக் கொண்டான். நெடுநேரம் கழித்து அவர் அந்த வேடத்தைக்  களைத்த  பின்தான் மேடை ஏறுகிறான் ! அதையும் நகைச்சுவை எனச் சிரிக்கிறார்கள் மக்கள். ( வீட்டிற்கு போனதும் எப்படியும் தலைவருக்கு தனி கவனிப்பு கிடைக்கும் அது வேறு கதை) பிஞ்சுக் குழந்தைகளின் மனதை நோகடிக்கும் செயலை எப்படி பொதுவெளியில் பார்க்க அனுமதிக்கிறோம் நாம்? என் நண்பன் அடிக்கடி சொல்வான், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளைக்  குழந்தைத் தொழிலாளர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று. சோகம் என்னவென்றால் உண்மையும் அதுதான் .

சரி நகைச்சுவை நிகழ்ச்சியில்தான் இந்தக் கொடுமை என்றால், டான்ஸ் நிகழ்ச்சி என்று அவர்கள் செய்யும் கொடுமையெல்லாம் கருடபுராணம் லெவல்! கட்டிப்  பிடிப்பது முத்தம் கொடுப்பது இரட்டை அர்த்தபாடல்களுக்கு நடனமாடுவது என்று நம்ம ஊர் ஆடல், பாடல் நிகழ்சிகளையெல்லாம் ஓவர்டேக் செய்கிறார்கள். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ( குட் டச்,  பேட் டச்  ) அறியாத குழந்தைகள் இந்த நிகழ்சிகளைப் பார்க்கும்போது   தவறான நோக்குத்தொடு தம்மைத் தொடுபவர்களை எப்படித்  தவிர்ப்பார்கள் அல்லது தாங்கள் தவறான ஆட்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளோம் என்று எப்படித் தெரிந்துகொள்வார்கள்.

சரி அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்குக்  கேட்கப்படும் கேள்வி எப்படி இருக்கிறது என்று கவனித்து உள்ளீர்களா ?  அவை இன்னமும் ஆபாசமாகத்தான் உள்ளது.  நிகழச்சித்  தொகுப்பாளர் ஒருவர் ஒரு  குழந்தையிடம்  உங்க அப்பா உங்க அம்மாவைத்  தவிர வேறை யாரையும் லவ் பண்ணியிருக்காரா ? உங்க அம்மா உங்க அப்பாவை அடிப்பாங்களா? , அந்தப்  பெண் அழகாக இருக்கிறாரா ? என்றெல்லாம் கேட்கிறார் . அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு இது எத்தனை தூரம் உதவும்?  ( அந்த டிவி ஷோ வளர்ச்சிக்கு வேண்டுமானால் உதவும்) ஒரு ஹிந்தி சேனல் ஒன்றில் 9 வயது சிறுவனுக்கும் 2௦ வயது பெண்ணிற்கும் காதல் என்று ஒரு நாடகத்தை ஒளிபரப்ப அது பல்வேறு போராட்டத்திற்குபின் நிறுத்தப்பட்டது ! . இப்படி ஒரு நாடகத்தை நடத்த அவர்கள் எப்படித்  துணிந்தார்கள் ? காரணம் இங்கு நாடங்களுக்கு என்று தரச்சான்று அமைப்பு எதுவும் இல்லை, விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் நாம்தான் குழந்தைகளின் நலனைக்  குழிதோண்டிப்  புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

maxresdefault-3-701x394.jpg

என்னப்பா ! ரெம்ப பில்டப் பன்றியே !, என்ற உங்களின் மைன்ட்வாய்ஸ் கேட்கிறது . இது மிகவும் குறைந்த உதாரணங்களே . அதுவும் நாம் நேரடியாக கவனிக்கக்  கூடிய, ஆனால் கவனிக்க மறந்த நிகழ்வுகள். டிவியில் காட்டப்படும் 9௦ சதவீத பொருட்கள் குழந்தைகளை மையப்படுத்தியே வருகிறது , அது காராக  இருந்தாலும் சரி கொசுபத்திச்  சுருளாக இருந்தாலும் சரி . காரணம் குழந்தைகளைக்  காட்டி என்ன சொன்னாலும் அதை நாம் கண்களை மூடிக்கொண்டு நம்பி விடுவோம். 5 வயதுவரை தெருப்புழுதியில் விளையாடி பின் பள்ளியில் சேர்ந்து படிக்க பிள்ளைகளை அனுப்புவோம் அதுவும் கையால் தலையை சுற்றிக்  காதை தொட்டால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை , இல்லையேல் மீண்டும் விளையாட்டு . இன்று கர்ப்பபையில் குழந்தை இருக்கும் போதே பயிற்சிவகுப்புகள் செல்லுங்கள் அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் உங்கள் குழந்தைதான் என்று விளம்பரங்களை பார்க்கமுடிகிறது.

ஏன் தம்பி நீதான் நெட்டுல நிறைய எழுதுவியே  சி.பி.எஸ் .சி, இன்டெர்நேஷனல் ஸ்கூல், இதெல்லாம் வேற வேறைய எதுல சேர்த்தா இந்த நீட் பரீட்சை எல்லாம் ஈசியா புள்ளைங்க பாஸ் ஆகுங்க ? அவ்வளவு அப்பாவியாய் கேட்டார் நண்பர் ஒருவர். அவருக்கு சென்ற வாரம்தான் குழந்தை பிறந்தது என்பதுதான் நகை முரண் . இப்பொழுது குழந்தைகளை 3 வயதுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால் ஏதோ கவுரவ பிரச்னைபோல் ஆகிவிட்டது . குறைந்த பட்சம் அவர்களை ப்ளே ஸ்கூலிலாவது சேர்த்துவிட வேண்டும் என்று நம் புற சமுகம் நம்மைத்  தள்ளுவது போன்ற மாயயை இந்த தனியார் நிறுவனங்கள் உருவாக்கி விட்டனர். வெறும் கல்வியோடு முடியவில்லை குழந்தைகளைக்  காட்டி பணம் பிடுங்கும் வேலை , குழந்தைகள் பயன்படுத்தும் உடை, அவர்களின் உணவு, புதிதாக நாட்டுமாட்டுப்  பாலில் தயாரித்த பிஸ்கட்  என்றெல்லாம் வருகிறது ( ஜல்லிக்கட்டில் நாட்டுமாட்டு பாலை பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வைக் காசாக மாற்றும் உத்தி . நல்லாவருவிங்கடா!)

boy-330582_640.jpg

படம்: pixabay

பல உலக நாடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப்  பொருட்களுக்கு உச்சகட்ட தரசோதனை இருக்கிறது. இங்கு நீங்கள் எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளை வேண்டுமானாலும் விற்கலாம்.யாரும் கேள்வி கேட்க முடியாது.( தமிழ்நாட்டில் வர வேண்டிய ஒரு பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை நம் அமைச்சர்கள் லஞ்சம் கேட்க அதும் உச்சகட்டமாக அவர்கள் ஆந்திரா பக்கம் ஓடியே விட்டார்கள் ) இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்குத் தரமானதைத்  தருவது எப்படி? , எனக்கு விவரம் தெரிஞ்சவரை குழந்தையென்றால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களைத்தான் அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள்.  அதில்தான் நமது  வீடுகளிலும்,  சோப்பு, எண்ணெய் என்று எல்லாம் வாங்கினோம். ஆனால்அதைப்  பயன்படுத்தியதால் தனக்குப்  புற்றுநோய் வந்ததாக வழக்கு தொடர்ந்து,  அதில் வெற்றிபெற்று அந்த நிறுவனத்தை அபராதம் கட்ட வைத்துள்ளார் வெளிநாட்டில் ஒருவர் . அதைப்  பற்றி இந்திய சுகாதாரத்துறை ஏன் இன்னமும் அறிக்கைகூட விடவில்லை என்பது புரியாததல்ல                       (வரவேண்டியது வந்திருக்கும் வேறென்ன) , குழந்தைக்குப்  பயன்படுத்தும் விக்ஸ் போன்றவை தடைசெய்யப்பட்ட பொருட்கள். ஆனால் அவை  தொடர்ந்து நமது கடைகளில் விற்கப்படுகிறதே எப்படி ?

459452-surf.jpg

படம்: dnaindia

நமது ஏழ்மை எந்தச்  சூழலிலும் குழந்தைகளைப்  பாதித்துவிடக் கூடாது என்று கவனம் செலுத்தும் நாம் அவர்களுக்கு சரியான , பாதுகாப்பான , முக்கியமாக தேவையானதை வாங்கித்தருகிறோமா ? கண்டிப்பாய் இல்லை தானே ? . கடலைமிட்டாய், தேங்காய் மிட்டாய்     எல்லாம் அவர்களிடம் இருந்து இந்த டிவி பூதம் பிடுங்கி விட்டது. பள்ளியின் அருகில் வயதான பாட்டி, தாத்தாகளின் மூலம் கிடைத்த நாவல் பழம், கொய்யா பழம் , சீத்தா பழம் என்று சத்தான உணவை எல்லாம் கார்ப்பரெட் பள்ளிகள் ஒழித்துவிட்டன. இப்பொழுது அவர்கள் சாப்பிடும் நொறுக்குத்  தீனி முழுமையாய் அவர்களை நோயாளிகளாக மாற்றும் என்பது மட்டும் உறுதி. ஆனால் காற்று அடைத்த பையில் விற்பதை வாங்கி உண்பது கவுரவம் என்ற எண்ணத்தில் அதைத்தான் நாமும் ஆதரிக்கிறோம். 2 நிமிடத்தில் தயாரிக்கும் உணவு ஆரோக்கியமானது என்பது எத்தனை பெரிய வியாபாரப்  பொய் ? .

இப்போது எந்தக்  குழந்தை விளையாட வெளியே போகிறேன் என்றாலும் சரி அல்லது சேட்டை செய்தாலும் சரி ஏதாவது அனிமேஷன் தொடர்களைக்  கைபேசியிலேயோ அல்லது டிவிலேயோ போட்டு அவர்களை அமைதியாக்கி விடுகிறோம். அனிமேஷன் என்னவெல்லாம் அவர்களுக்குத்  தருகிறது, எதையெல்லாம் அவர்களிடம் புகுத்துகிறது என்பதைத்  தொடர்ந்து பார்க்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல அது அன்பின் வெளிப்பாடு. ஆனால் அது அவ்வாறா இருக்கிறது ?

https://roar.media/tamil/features/children-in-tv-shows/

 

Link to comment
Share on other sites

குழந்தமையைக் கொல்லு குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்

மக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விசயம் அதில் உண்டு. கார்ட்டூன் படங்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், காமெடிகள், நெடுந்தொடர்கள், செய்திகள், மத நிகழ்ச்சிகள், என்று நம் விருப்பம் போல் ஒவ்வொன்றிற்கும் தனி சேனலே உள்ளது. சேனல்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே செல்லலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த தொலைக்காட்சியில் தான் இன்று பெரும் வணிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பெரும் வணிகத்தை மையமாகக் கொண்டே அதன் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அதன் வடிவமைப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங் உயரவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சமுதாயம் தான்.

junior super star

            தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினுடைய தாக்கம் யாரையெல்லாம் பாதிக்கின்றது என்று பார்த்தால், வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையுமே என்று கூறலாம். பார்வையாளர்களைச் சிந்திக்கவிடாமல் அதற்கு அடிமையாக்கி உட்காரவைக்கின்றது இந்த தொலைக்காட்சி. குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை மணிக்கணக்கில் பார்ப்பதையும், இளம் வயதினர் விளையாட்டு, திரைப்படம், பாடல்கள், காமெடிகள் பார்ப்பதையும், இல்லத்தரசிகள் நெடுந்தொடர்களைப் பார்ப்பதையும், முதியவர்கள் செய்திகளைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதை நம் சுற்றத்தினர் மூலம் தினமும் கண்கூடாகப் பார்க்கலாம். வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தால் கூட நல்லது என்று எண்ணுகின்ற அளவிற்கு வந்துவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்றால் அதில் பங்கேற்பவர்களின் நிலைமையும் பிரச்சனைகள் நிறைந்ததுதான்.

            இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. இவற்றில் குழந்தைகள் போட்டியாளர்களாக பங்குபெறும் நிகழ்ச்சிகளே அதிகம். குறிப்பாக குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களான குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் மற்றும் சமூகம் சார்ந்தும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு தன்னுடைய வயதுக்கு மீறிய ஆபாச சிந்தனையைத் தொலைக்காட்சிகள் நடத்தும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் தூண்டுகின்றது. நடனம் சம்பந்தமான போட்டிகளில், பாடல்களில் வரும் ஆபாச வரிகளின் உள் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் அதற்கு ஏற்றார்போல் வாய் அசைத்து ஆபாசமக உடலை வளைத்து ஆடுகின்றனர். தாங்கள் எதற்காக அப்படி உடல் அசைவை வெளிப்படுத்துகின்றோம், அந்த வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன, போன்ற எதுவுமே தெரியாமல் குழந்தைகள் இவற்றைச் செய்கின்றன. இச்செயல்கள் பார்ப்போரை குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் பெரியவர்கள் போல் பார்க்கச்செய்துவிடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆபாசமாக பார்ப்பது என்று கூறலாம்.

            நடிப்பு சம்பந்தமான போட்டி நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வயதுவந்த ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் வேடங்கள் அணிந்துகொண்டு அந்த வேடத்திற்கு ஏற்றர்போல் நடிக்கின்றனர். உண்மையிலேயே பெரிய மனிதர்கள் போன்று பாவனை செய்து நடிக்கின்றனர். பின்னர் நடிப்பு குறித்து நடுவர்கள் சொல்லும் கருத்துக்களுக்குப் பெரியவர்கள் போல பதில் அளிக்கின்றனர். இதில் குழந்தைகள் குழந்தைத்தனம் இல்லாமல் மாறிவிடுகின்றனர். இது அவர்களின் இயல்பு அல்லாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட நடத்தையாக உள்ளது. குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற நடத்தையுடனும், மனோபாவத்துடனும் வளரவேண்டும். அதுவே சீறான வளர்ச்சி, படிப்படியான மனநிலை முன்னேற்றமே சாலச்சிறந்தது.

            இவற்றில் மிகவும் வருந்தத் தக்க விசயம் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் நான்கைந்து குழந்தைகளைத் தேர்வுசெய்து நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்கின்றார்கள். மேலும் பார்வையாளர்களின் வரிசையில் அவர்களின் பெற்றோர்களை அமரச்செய்கின்றார்கள். அக்குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றிய கேள்வியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தைகள் அனைவரின் மத்தியிலும் வீட்டில் நடைபெறுவதைஎல்லாம் பொதுவெளி என்று பாராமல் அனைத்தையும் தங்களின் மழழைக் குரலில் கூறுகின்றனர். தங்களின் அப்பா, அம்மா, எவ்வாறு வீட்டில் சண்டை போட்டுக்கொள்கின்றனர், என்ன மதிரியான வார்த்தைகளில் திட்டிக்கொள்கின்றனர், எவ்வாறு சந்தோசமான நேரங்களில் கொஞ்சிக்கொள்கின்றனர் என்று அவர்களின் அந்தரங்க விசயங்களையெல்லாம் தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் ஆமோதிப்பதைப்போல் அனைத்துப்பெற்றோர்களும் சந்தோசத்தில் திளைத்து தங்களின் குழந்தைகளின் அறிவுக்கூர்மையைப் பார்த்து மெய்சிலிர்த்து வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பதாக எண்ணி பெருமைப்படுகின்றனர்.

            பெரும்பாலும் எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களும் தங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் எல்லாவற்றையும் செயற்கைத்தனமாக செய்கின்றனர். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், சோகங்களும், அழுகைகளும், கோபங்களும், சூழ்ச்சிகளும், சுயநலன்களும் இப்படி எதிர்மறை எண்ணங்களையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்து மக்களின் அனுதாபங்களைப் பெறுகின்றனர். தங்களின் விளம்பர வருமானத்திற்காக குழந்தைகள் இயற்கையாக அவர்கள் கொண்டுள்ள இயல்பான குணநலங்கள் காவுகொடுக்கப்படுகின்றன.

            ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று குழந்தைகள் நெருக்கடி கொடுக்கப்படுகின்றனர். தாங்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற எண்ணமே அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது.பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்று பிரபலமடைய வேண்டுமென்று அவர்களை உற்சாகமூட்டுகிறேன் என்ற பெயரில் மறைமுக மனஅழுத்தம் கொடுக்கின்றனர். வெற்றி பெற்றால் பிரபலமாகலாம், நிறைய பணப்பரிசு கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் திணிக்கின்றனர். இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளர் முறையே. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அவர்கள் தங்களின் குழந்தைகளின் உடல் மற்றும் மன வல்லமை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஏமாற்றம் நிகழாது. குழந்தைகளும் இதை விளையாட்டுப் போட்டியாக எண்ணாமல் வாழ்வா சாவா என்ற போட்டிபோல் எண்ணி, தோல்வியுற்றால் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனநிலை இல்லாதவர்கள் ஆகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விசயமல்ல இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கடுமையான தீர்ப்புகளைக் குழந்தைகளின் மனம் சமாளிப்பது எளிதானதல்ல. பெரியவர்களுக்கு அறிவுமுதிர்ச்சி இருக்கும் அதனால் விமர்சனங்களையும், தோல்விகளையும் கையாளத்தெரியும். ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல அவர்கள் அந்த அளவிற்கு அறிவுமுதிர்ச்சியை எட்டவில்லை. அவர்கள் விமர்சனங்களை மிகக்கடுமையாக எடுத்துக்கொள்கின்றனர். தங்களின் நடிப்புக்கு எதிரான கருத்துக்களை நடுவர்கள் கூறினால், அதனால் தாங்கள் மதிப்பிழந்துவிட்டதாக நினைக்கின்றனர். நிகழ்ச்சியில் நடுவர் சொல்லும் முடிவால் குழந்தைகள் அழுவதன் மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தோல்வி எண்ணங்கள் அவர்களைத் தாங்களாகவே கஷ்டப்படுத்திக்கொள்ளச் செய்கின்றது. இது போன்ற போட்டி சூழ்நிலையால் இக்குழந்தைகள் வளரும்போதே எதிரி மனப்பாண்மையுடன் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்றனர். இது  குழந்தைகளிடையேயான நட்புறமைப் பாதிக்கின்றது. உலகமே நம்மைப் பார்க்கும் என்ற பயத்திலேயே குழந்தைகள் இவ்வாறு நடக்கின்றனர்.

            பெயர்கள் தான் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆனால், அவற்றில் எல்லாமே மிகைப்படுத்தப்படும் நடிப்புகள். குழந்தைகளுக்கு கேமரா முன் எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. நடுவர் சொல்லும் தீர்ப்புக்கும், தொகுப்பாளர்களிடம் எவ்வாறு பேசுவது, என்று இவை எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படும் வசனங்கள்தான்.

            உளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வயதுக்கு ஏற்ப அதன் சிந்தனையும் செயலும் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் மூலம் போட்டி உலகத்தில் தள்ளும்போது பிற்காலத்தில் அவர்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகநேரிடுகின்றது. மேலும், இக்குழந்தைகளின் சீரான கல்வியில் தடையேற்படுகின்றது. தொடர்ந்த வெற்றிக்கு அவர்கள் தங்களை உடல் ரீதியாக வருத்தி, பெரிதும் மெனக்கெடவேண்டியுள்ளது. இம்மெனக்கெடல் அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனையையும் செயலையும் வளர்க்கின்றது அல்லது பெற்றோர்களினால் வலுக்கட்டாயமாகத் தினிக்கப்படுகின்றது. ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு முடிவில்லாத பயிற்சி தேவைப்படுகின்றது. உடல் ரீதியான பயிற்சியும் நீண்ட நேரம் ஒத்திகையும் இன்றியமையாத ஒன்று. இதனால் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரும் போகும் ஆனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

            இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகள் தன் சகவயதுள்ள குழந்தைகளுடன் பழக வாய்ப்பில்லாமலும், இவர்களின் வயதுக்கு மீறிய செயல்களினால் சககுழந்தைகளுடன் இயல்பாகப் பழகமுடியாததாலும் தனிமைப்படுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் இக்குழந்தைகளைத் தனித்துவிடப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வதுபோன்று மாற்றிவிடுகின்றது. பெரும்பாலும் வெளிஉலகத் தொடர்புகளையே துண்டித்துவிடும் அளவுக்குச் இட்டுச்செல்கின்றது.

            இறுதியாக, ரியாலிட்டி ஷோக்கள் குழந்தைகளின் மீது கெடுதலான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் குழந்தைகளுக்கு ஏமாற்றதைக் கொடுக்கின்றது. இந்த அழுத்தங்கள், ஏமாற்றங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் குழந்தைகளிடம் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும், புற அழுத்தங்களையும்  எதிர்கொள்ளும் அளவுக்கு குழந்தைகளின் வயது இருப்பதில்லை. குழந்தைகள் இந்த வயதில் விளையாட, ஒரு விசயத்தைக் கற்றுகொள்ள, சந்தோசத்தை அனுபவிக்க மற்றும் சமுதாயத்தில் சிறந்தவர்களாக வளர பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். 

- சி.வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வாளர், சமூகப்பணித்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003

 

http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/33788-2017-09-05-04-32-11

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.