Jump to content

1,000 வருடங்களுக்கு முன்னர் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்தார்கள்? அறிந்துகொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்திலமைந்த ஜி.பி.எஸ் -


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1,000 வருடங்களுக்கு முன்னர் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்தார்கள் என அறிந்துகொள்வது இலகுவானதொரு விடயமல்ல. ஆனால் உங்களை உங்கள் மூதாதையர்களின் இடத்திற்கு வழிகாட்டும் சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

5409Thum.jpg

இதற்காக அதி தொழில்நுட்பத்திலமைந்த புவியியல் குடித்தொகை அமைப்பு (ஜோகிரபிக் பொபியூலேஷன் ஸ்ரக்சர்) எனும் ஜீ.பி.எஸ் எனப்படும் இணையத்த டூல் ஒன்றினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர்.

இச்சாதனத்தின் மூலம் உங்களது மரபணு எங்கே எந்த கிராமத்தில் உருவானது என கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் உங்களது மூதாதையர்களின் இடத்தினை கண்டுபிடிக்க முடியும். இதற்கு முன்னர் எந்த இடத்தில் உங்களது மரபணு உருவானது என 700 கிலோ மீற்றர்களுக்கு உட்பட்ட பிரதேசத்திலே கண்டுபிடிக்க முடியுமாக இருந்தது.

ஆனால் இந்த ஜீ.பி.எஸ் அமைப்பின் மூலம் மரபணுவின் உரிய பிரதேசத்தினை உலகின் எந்த பாகமாக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும். இது 98 சதவீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'நாங்கள் கண்டுபிடித்துள்ள விடயமானது கடவுச்சீட்டிலுள்ள தகவலினைக் கொண்டு எங்கே நீங்கள் பிறந்தீர்கள் எனக் தெரிந்துகொள்வது போன்றதொரு வழியல்ல. ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உங்களது மூதாதையர் எங்கு வாழ்ந்தார்கள் எனக் கண்டுபிடிக்கும் வழிமுறை' என ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் விலங்கு மற்றும் தாவர விஞ்ஞானப் பிரிவினைச் சேர்ந்த டொக்டர் எரான் எல்ஹைக் தெரிவித்துள்ளார்.

மரபணுவின் அமைப்பைக்கொண்டு மூதாததையரின் வீட்டை எவரும் கண்டுபிடிக்க மக்களுக்கு உதவும் வகையில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்திற்காக ஒரு இணையத்தளத்தினை டொக்டர் எல்ஹைக் மற்றும் டொக்டர் டற்றியானா டற்றரினொவோ ஆகியோர் மேம்படுத்தியுள்ளனர்.

உயிரைப் பாதுகாக்கும் மருத்து வசதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பிறப்பிடம் உள்ளிட்ட பல தேவைகளுக்கு இந்த ஜீ.பி.எஸ் முiறைமை உதவியாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=technology&news=5409#sthash.BiwwvanP.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்துக்கு பிறந்தது என சொல்லி  எழுதி வைச்சிருக்கிற கூட்டத்திற்க்கு முதலில் இதை உபயோகிக்க சொல்ல வேணும் :icon_mrgreen:

 

(இங்குள்ள மாற்றுக் கருத்து கூட்டங்களுக்கும் கிலி பிடிக்க வைச்சுள்ளதாம் தங்கடை உண்மையான இனத்தொடர்பு விவரம் வெளியாட்களுக்கு தெரியபோகுதென!)  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.