Jump to content

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.


Recommended Posts

தி இந்து செய்தி எதிரொலி: அரசுப்பள்ளி மாணவரின் 'ரஷ்ய கனவு' நனவானது

அரசுப்பள்ளி மாணவருக்கு உதவிய விஜயகுமார், தன் மனைவியுடன். உள்படம்: மாணவர் ஜெயக்குமார்
அரசுப்பள்ளி மாணவருக்கு உதவிய விஜயகுமார், தன் மனைவியுடன். உள்படம்: மாணவர் ஜெயக்குமார்
 
 

சிவகாசி அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், அறிவியல் ஆராய்ச்சிக்காக ரஷ்யா செல்ல ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது குறித்த செய்தி 'தி இந்து' தமிழ் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

சிவகாசி அருகே நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், வெடிவிபத்தைத் தடுக்கும் தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கி இருந்தார். இதன்மூலம் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ரஷ்யா செல்லும் இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் இணைந்தார்.

அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும் எனவும் அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது.

ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக ரூ.1.75 லட்சத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா? என்ற தலைப்பில் 'தி இந்து' தமிழ் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகுமார் பேசும்போது, ''சமூக ஊடகங்களில் எனக்குப் பெரியளவில் ஈடுபாடு இல்லை. என்னுடைய மனைவிதான் இந்த செய்தியைப் பாருங்கள் என்று கூறினார். பார்த்தவுடன் உடனே அந்த மாணவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. நாரணாபுரம் என் சொந்த ஊர். என்னுடைய அம்மா அங்கேதான் அரசுப்பள்ளியில் படித்தார். எப்போது இந்தியா வந்தாலும் என் சொந்த ஊருக்குச் செல்வேன்.

ரஷ்யாவில் குறிப்பாக மாஸ்கோவில் வசிக்கும் நாம் ஏன் ஜெயக்குமாருக்கு உதவக்கூடாது என்று தோன்றியது. எதையும் யோசிக்காமல் உடனே ஆசிரியரை அழைத்துப் பேசிவிட்டேன்'' என்றார்.

ஒன்றேமுக்கால் லட்சம் பணத்தை அளிப்பது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டதற்கு, ''ரஷ்யாவில் கண் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறேன். இந்தப் பணம் எனக்குப் பெரிய தொகையாகத் தோன்றவில்லை. எதற்கெல்லாமோ செலவு செய்கிறோம். படிப்பை ஊக்குவிக்கவும் செய்யலாம் அல்லவா?

என்னால் கொடுக்கமுடியும் என்ற நிலையில் இருக்கிறேன். கொடுத்துவிட்டேன்!'' என்கிறார் விஜயகுமார்.

இந்த செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/தி-இந்து-செய்தி-எதிரொலி-அரசுப்பள்ளி-மாணவரின்-ரஷ்ய-கனவு-நனவானது/article9594252.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 106
  • Created
  • Last Reply
  • 3 weeks later...

பாடசாலைக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் செயற்பாட்டால் சந்தோசத்தில் திளைத்த மாணவர்கள், ஆசிரியர்கள்

நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

16107956_1347264312010890_439713962_o.jp

டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை போன்ற சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்காக திட்டமிட்டு சாரதியுடன் ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

அவரது திட்டத்தின்படி முதலாவது சுற்றுலா விஜயமாக சிகிரியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலாவினை முடித்துவிட்டு செல்கையில் சிகிரியாவில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் பின்தங்கிய நிலையில் இருந்த சிகிரியா உடவெலயாகம கனிஷ்ட வித்தியாலயத்தை அவதானித்துள்ளார்.

கற்றலுக்கான எவ்வித அடிப்படை வசதிகளுமற்று அப் பாடசாலை இடம்பெறுவதை சுற்றுலாப்பயணி அவதானித்துள்ளார். 

இந்நிலையில் தான் சுற்றுலாவுக்காக வாடகைக்கு அமர்த்திய வாகனத்தையும் சாரதியையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கடைகளில் பாடசாலைக்குத் தேவையான வெண்பலகை, பாடசாலை சுவர்களுக்கு பூசுவதற்காக பெயின்ற் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்துள்ளார். 

குறித்த பாடசாலையில் உள்ள  11 வகுப்புகளுக்கும் தேவையான வெண்பலகைகைளை கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் எவரது உதவியுமின்றி தானே முன்வந்து பாடசலைக்கு நிறப்பூச்சு பூசும் பணியையும் குறித்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் ஆசரியர்கள் அவருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். 

இவ்வாறான உதவிகளை தான் எதிர்காலத்திலும் இலங்கைக்கு வரும்போது மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

16121675_1347263202011001_1043717724_o.jpg

16121603_1347262358677752_973113374_o.jpg

http://www.virakesari.lk/article/15480

Link to comment
Share on other sites

மர வியாபாரியின் இலவச கல்விச் சேவை: கிராமப்புற மாணவர்கள் அரசுப் பணியில் சேர பயிற்சி - இதுவரை 200 பேர் தேர்வாகியுள்ளனர்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்காக மர வியாபாரி சேகர் நடத்தி வரும் ‘சொந்தம் கல்வி சோலை’ இலவச பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகள் | சேகர்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்காக மர வியாபாரி சேகர் நடத்தி வரும் ‘சொந்தம் கல்வி சோலை’ இலவச பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகள் | சேகர்
 
 

அரசுப் பணியில் சேர விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டியில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தை இலவசமாக நடத்திவருகிறார் மர வியாபாரி ஒருவர். இந்த மையத்தில் இருந்து இதுவரை 200 பேர் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சேகர். மர வியாபாரம் செய்கிறார். கிராமப்புறங்களில் படித்துவிட்டு அரசுப் பணிக்குத் தயாராகும் மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இலவச பயிற்சி மையத்தை தொடங்கி நடத்திவருகிறார். இங்கு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கல்விச் சேவை குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

10-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். அதன்பிறகு மரம் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன். கும்மிடிப் பூண்டியைச் சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு படித்து முடித்துள்ள ஏராளமானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தயாராகி வருவதைப் பார்த்தேன். இவர் களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தேன். ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இந்த மையத்தை தொடங்கினோம். இங்கு தினமும் சுமார் 250 பேர் பயிற்சி பெறுகின் றனர். கடந்த 4 ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்று 200 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, விஏஓ, ஆசிரியர் பணி என தேர்வாகி யிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

பயிற்சி மையத்தின் ஒருங் கிணைப்பாளர் முகுந்தன் கூறிய தாவது:

கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் பலர் அரசுப் பணிக்கு செல்லவேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், அதிக கட்டணம் செலுத்திப் படிப்பது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே, கிராமப் புற மாணவர்களுக்கு தரமாகவும், இலவசமாகவும் பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த மையம் 2012-ல் தொடங்கப்பட்டது.

சேவை மனப்பான்மையோடு...

இதற்காக எம்.சேகர் என்பவர் தனது 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்தார். அதன்பிறகு நாற்காலிகள், நகலெடுக்கும் கருவி, கம்ப்யூட்டர் என நிறைய பொருட்கள் நன்கொடையாகக் கிடைத்தன. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனாலும், வாரம் முழுவதும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். சேவை மனப்பான்மையோடு இந்த மையம் செயல்படுவதால், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களும் பெரிய அளவில் ஊதியத்தை எதிர்பார்க்காமல் பணியாற்று கின்றனர் என்றார்.

இங்கு பயிற்சி பெற்று தமிழக அரசுப் பணியில் இருக்கும் உமா மகேஸ்வரி, ஸ்ரீதர், டில்லிபாய் ஆகியோர் கூறியதாவது:

எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பது கடினம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் வந்து தங்கி பயிற்சி மேற்கொள்ள போதிய பண வசதி இல்லை. கும்மிடிப்பூண்டியிலேயே சேகர் என்பவர் இலவசப் பயிற்சி மையம் நடத்துவதைக் கேள்விப்பட்டோம். அதன்பிறகு அங்கு சேர்ந்து பயிற்சி பெற்றோம். இலவசம் என்றாலும்கூட, மிகச் சிறப்பாக, தரமான பயிற்சி எங்களுக்கு அளிக்கப்பட்டது.

அதனால்தான், எங்களால் அரசுப் பணியில் சேரமுடிந்தது. இந்த மையத்துக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு வரவேண்டும். அதற் காக, அந்த பயிற்சி மையத்துக்கு நாங்கள் என்றென்றும் துணையாக இருப்போம். வாய்ப்பு கிடைக்கும் போது நாங்களும் நேரில் சென்று, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். எங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/மர-வியாபாரியின்-இலவச-கல்விச்-சேவை-கிராமப்புற-மாணவர்கள்-அரசுப்-பணியில்-சேர-பயிற்சி-இதுவரை-200-பேர்-தேர்வாகியுள்ளனர்/article9697508.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கற்றல் குறைபாடு இருந்ததால் பள்ளி படிப்பை கைவிட்டவர் வருமான வரித்துறை அதிகாரி ஆனார்: வாழ்க்கை திறன் பற்றி ஆண்டுக்கு 4 லட்சம் பேருக்கு பயிற்சி

வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து மாணவிகளுடன் உரையாடும் வருமானத் வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார்
வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து மாணவிகளுடன் உரையாடும் வருமானத் வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார்
 
 

‘டிக்ஸ்லக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டால் 6-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை கைவிட்ட போதிலும் தனது விடா முயற்சியால் இன்று வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருகிறார் நந்தகுமார்.

சென்னையில் உள்ள வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருபவர் வி.நந்தகுமார். இவர் பள்ளியில் படிக்கும்போதே கற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுள்ளார். இதனால் படிக்க முடியாமல் 6-ம் வகுப்பில் தோல்வியடைந்து, பின்னர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு, சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

படிப்பில் ஆர்வம்எனினும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் விடா முயற்சியுடன் தொடர்ந்து படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இன்று வருமான வரித்துறை இணைஆணையராக பதவி வகித்து வருகிறார். அத்துடன், ‘துணிந்து நில்’என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல்

குறித்து போதித்து வருகிறார். அவர் இந்த நிலையை அடைந்தது குறித்து ‘தி இந்து’விடம் கூறிய தாவது: “எனக்கு ஏன் படிப்பு ஏறவில்லை என எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், பெற் றோர்களுக்கும் தெரியவில்லை. காரணம், கற்றல் குறைபாடு குறித்து ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதால் பெற்றோர் வருத்தம் அடைந்தனர். வயது ஆக ஆக, எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

வீட்டிலேயே படிப்புஆனால், மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல மிரட்சியா இருந்தது. அப்போது அமல்ராஜ் என்ற நண்பன்,‘பள்ளிக்கூடம் போய்த்தான் படிக்கணும்னு இல்லை, வீட்டில் இருந்து படித்தே தேர்வு எழுதலாம்’என்று சொன்னான். உடனடியாக தேர்வுக்கு விண்ணப்பித்தேன். வேலை செஞ்சுகிட்டே படித்து தேர்வு எழுதினேன்.

சிவில் சர்வீஸ் ஆர்வம்

வீட்டிலேயே பாடங்களைப் படித்து எழுதி எழுதிப் பார்ப்பேன். நாலு தடவை தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதும் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும், பிரசிடென்சி கல்லூரியில் எம்ஏ ஆங்கிலமும் படித்து தேர்ச்சி பெற்றேன்.

அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும்போது தப்பு தப்பாக படிப்பதையும், அவற்றை திருப்பி எழுதும் போது ஏகப்பட்ட பிழைகளுடன் எழுதுவதையும் எனது நண்பர் சேஷாத்ரி என்பவர்தான் கண்டுபிடித்துக் கூறினார். அப்போதுதான் எனக்கு ‘டிக்ஸ்லக் சியா’ எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பது தெரியவந்தது. எனினும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினேன். இவ்வாறு கடினமாக உழைத்ததன் விளைவாக ஐ.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) பணியில் சேர்ந்தேன்.

இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனதில் தோன்றியதால், நண்பர்கள் உதவியுடன் ‘துணிந்து நில்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து போதித்து வருகிறேன்.

இதற்காக ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் அரசுப் பள்ளி, மாணவர்களைச் சந்தித்து போதித்து வருகிறேன்.

ஆசிரியர்களுக்கும் பயிற்சி

தற்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள் ளேன். அண்மையில் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 700 ஆசிரியர்

களுக்கு பயிற்சி அளித்தேன். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட முடிவு செய்த மாணவர்கள் சிலர் எனது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தாங்களும் வாழ்வில் ஓர் உன்னத நிலையை அடைவோம் எனக் கூறினர். இதுதான் எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்” என்றார்

 

http://tamil.thehindu.com/tamilnadu/கற்றல்-குறைபாடு-இருந்ததால்-பள்ளி-படிப்பை-கைவிட்டவர்-வருமான-வரித்துறை-அதிகாரி-ஆனார்-வாழ்க்கை-திறன்-பற்றி-ஆண்டுக்கு-4-லட்சம்-பேருக்கு-பயிற்சி/article9716562.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 1 month later...

பசித்த வயிற்றுக்கு கொஞ்சம் கல்யாணச் சாப்பாடு

bangaluru%20photo

ஒரு விழாவில் இருந்து உபரி உணவு சேகரித்து எடுத்துவந்து மக்களுக்கு விநியோகிக்கிறார் யுவராஜ்   

இரு இளைஞர்கள் ஏழைகளைத் தேடி கல்யாணச் சாப்பாடு பரிமாறிவருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், திருமணத்திற்குப் பிறகு மீதமுள்ள உணவைத்தான் அவர்கள் கேட்டுப் பெற்றுவந்து கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பசியால் வாடுவோருக்கு வழங்குகிறார்கள்.

தினம் தினம் கேளிக்கை விருந்துகள் முடிந்தபிறகு, சாலையோர யதார்த்தம் ஜெயித்த கதை இது.

திருமணத்தைவிட்டு விருந்தினர்கள் வெளியேறியதும், விழா அமைப்பு காண்ட்ராட்காரர்கள் வழக்கமாக உணவுப்பொருட்கள் மீந்திருப்பதைப் பார்த்து அதை அப்புறப்படுத்திவிடுவார்கள். ஆனால் யுவராஜ் எம், மற்றும் சிவகுமார் பத்ராய்யா போன்ற நல்ல உள்ளங்கள், அந்த தேங்கிப்போன உணவை நகரத்தின் நலிந்த பிரிவினர் நிறைந்த பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

மார்க்கெட்டிங் செய்யும் யுவராஜ்

மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வரும் யுவராஜ் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது வேலை நேரம் போக கிடைக்கும் சிறிது நேரங்களில் திருமண விழாக்களுக்குச் சென்று உபரி உணவை கட்டுமானத் தளங்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் மற்றும் ரெயில்வே நிலையங்களுக்கும் எடுத்துச்சென்று அங்கு பசியால் வாடுவாருக்கு உணவளித்து வருகிறார். குறிப்பாக மேற்கு வங்காளம், சாமராஜ்பேட்டை மற்றும் பசவனகுடி போன்ற பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். காலையில் திருமணம் இருந்தால், கட்டுமான தளங்களுக்கு உணவை எடுத்துக் செல்கிறார். அதுவே ஒரு மாலை நிகழ்வு என்றால், அவர் ரயில் நிலையங்களுக்கு உணவை எடுத்துச் செல்கிறார். போக்குவரத்து செலவை தற்போது லயன்ஸ் கிளப் தந்து உதவுகிறது.

காவிபுரத்தில் கட்டுமான வேலை நடக்கும் ஒரு இடத்தில் வீட்டு வேலைகளில் உதவிசெய்யும் வேளாங்கண்ணி இந்த சேவையின் பயனாளிகளில் ஒருவர். ''இது போன்ற உணவை வாங்கிச் சாப்பிட எங்களுக்கு கட்டுபடியாகாது'' என்கிறார் அவர்.

விழாவுக்கு வரும் ஒரு விருந்தினர் ஒரு பந்தியில் அதிகபட்சம் 500 கிராம் உணவை சாப்பிடுவார். ஆனால் அவருக்கு 1,500 கி.கிராம் வரை உணவு வழங்கப்படுகிறது என்று கூறும் யுவராஜ் தான் உணவைப் பெற்றுவர 10 அழைப்புகளைப் பெறுவதாகக் கூறுகிறார். ''சில கிலோமீட்டர் தொலைவுகளிலேயே பலர் பசியால் வாடிக்கிடக்க அதை ஏன் நாம் வீணாக்க வேண்டும்'' என்று கேட்கிறார்.

வெற்றிலைப்பழக்கடை பத்ரய்யா

யுவராஜைப்போல இன்னொருவரும் இதே பெங்களூருவில் இருக்கிறார்.

ராஜாஜி நகரில் 16 வருடங்களாக வெற்றிலைப்பாக்கு மற்றும் வாழைப்பழக் கடை வைத்திருக்கும் பத்ரய்யா, தான் விழாக்களில் பெறும் உணவை ஏழைக்கு அளித்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இங்கு வறுமையில் உள்ளவர்களும் திருமணங்களுக்கு உணவு வழங்கும் கைம்மாறு கருதாமல் உதவி

செய்பவர்களும் இருபிரிவாக பரவலாக பிரிந்துகிடப்பதைக் கவனித்த அவர், "பயிர்களை வளர்க்கும் விவசாயி ஒரு கைநிறையப் பெறும் தானியத்திற்காக விவசாயிகள் எவ்வளவு உழைக்கிறார்கள், எவ்வளவு போராடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இந்த மக்கள் ஒரு மோகத்தோடு விழாவிருந்தை உண்பதும் அதை வெட்கமின்றி வீணடிப்பதும் முரண்பாடுமிக்க ஒன்றாகும்."

இந்த இரட்டையர்கள் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் உணவு தயாராகும் இடங்களில் அவை வீணாக்கப்படுவதையும் தடுக்க சட்டத்தை உருவாக்கும் நம்பிக்கையில் அரசியல்வாதிகளையும் கொள்கைத் திட்டங்கள் வகுப்பவர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.

பெங்களூருவில் விருந்து உணவு
  • பெங்களூரில் பதிவுசெய்யப்பட்ட திருமண அரங்குகள்: 530
  • வருடாந்திர திருமணங்கள் எண்ணிக்கை: 85,000
  • பரிமாறும்முன் உணவு மதிப்பீடுகள்: 943 டன்
  • பரிமாறும்முன் உணவு செலவு: ₹ 339 கோடி
  • தகவல்: வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் படிப்பு, 2012

திருமணங்களில் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியுமா?

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் கிட்டத்தட்ட ஒன்பது டன் உணவு வீணாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன மற்றும் வீண்செலவுகளின் அளவுகளைப் பார்த்து அதைத் தள்ளிவிடும் விழா அமைப்பாளர்கள், ஆடம்பரமான திருமணங்களை ஒரு வரன்முறைக்குள் கொண்டுவர முடியுமா?

திருமணங்கள் மற்றும் பிற விழா செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால் சிறிய அளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கும் நம்பிக்கையில், கர்நாடகா அரசு,

திருமணங்கள் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், உணவு மற்றும் சிவில் விவகாரங்கள் அமைச்சர் யு.டி. காதர், ''உணவுப் பாதிப்பைக் குறைப்பதற்கும் ஏழைகளுக்கு மத்தியில் மறுபகிர்வு செய்வதற்கும் அரசாங்கம் ஒரு திட்டத்தை பரிசீலனை செய்துவருவதாக'' கூறினார்.சட்டமும் கொள்கைகளும் இன்னும் பலனளிக்கவில்லை.

சட்டங்கள் அரிதாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருவதால், உணவு விரயம் குறித்த விழிப்புணர்வுக்கு முதன்மை இடம் தர வேண்டும் என ஆர்வலர்கள் நம்புகின்றனர். "சட்டங்களை உருவாக்கும் முன் மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டங்கள் பயனற்றதாக இருக்கும்" என்கிறார் குடகு மாவட்டம், குஷால்நகரைச் சேர்ந்த என்.கே. மோகன். இவர் குடகு மாவட்ட பஞ்சாயத்து சார்பாக 2012ல் உணவு விரயக் கட்டுப்பாட்டுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியவர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு விரயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த அவர், உணவுப்பொருட்களை வீணடிக்காத பழக்கவழக்கம் சிறுவயது முறையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நம்புகிறார்.லயன்ஸ் கிளப்பின் கேபினட் உறுப்பினரான பி.வி.துவாரகநாத் தண்ணீர் சேமிப்புக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அதற்கு இணையாக உணவு விரயக் கட்டுப்பாடும் இருக்கவேண்டுமென விரும்பினார். திருமண மண்டபங்களிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுக்க குளிர்ப்பதன சேமிப்பு காப்பகங்களை உருவாக்க அரசாங்க உதவி தேவை என்று அவர் விரும்புகிறார்.

உணவுப் பற்றாக்குறைக்கு செக்...

உணவுப் பற்றாக்குறை எனும் கொடுமையான சொல்லாடலுக்கு திருமணங்களில் உணவு விரயமாவதைத் தடுத்து நிச்சயம் செக் வைக்கமுடியும். அது ஒரு விழாவில் விருந்தினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 1960 களில் விருந்தினர் கட்டுப்பாட்டு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜி.கே. ஜெயின் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜி.கே.ஜெயின் ''இந்த சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்'' என்று விரும்புகிறார்.

"இது பஞ்சம் மற்றும் போர்கள் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு பற்றாக்குறை ஏற்படும்போது, வாழ்வதா இல்லையா இரண்டில் ஒன்று என்ற நிலை ஏற்பட்டதால் அச்சமயம் உணவு விரயங்களை எப்படி கையாள்வது என்பது குறித்த கடுமையான அமலாக்கத்தை உத்தரவாதப்படுத்தவே இச்சட்டம் இயற்றப்பட்டது" என்று அவர் கூறினார்.

நம்மால் உணவை தயாரித்து ஊருக்கு வழங்கமுடியாது. விருந்துக்காக யாரோ தயார் செய்த உணவு வீணாகாமல் ஏழைகளுக்குச் சென்றுசேரட்டுமே என உதவும் யுவராஜ், பத்ரய்யாக்களின் முயற்சிகள் நம்மூரிலும் பரவுமா?

தமிழில்: பால்நிலவன்

http://tamil.thehindu.com/india/article19315900.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.