Jump to content

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரியில் KFC மாணவர்களினால்முற்றுகை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 அமெரிக்காவின் ”அயோக்கிய” தீர்மானத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று வேளச்சேரியில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான KFC ஐ பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த 20 மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

1) தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து.

2) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை உடனே நடத்து.

என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்களின் முற்றுகை அமைந்தது. கடையில் இருந்தவர்களிடம் இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு குறித்த விடயங்களை துண்டறிக்கைகளாக கொடுத்து அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிக்க கோரினர்.

கடைக்கு வெளியே கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியும், கடையில் அமர்ந்திருதவர்களுக்கு மத்தியில் சென்று இனப்படுகொலை மற்றும் தமிழீழம் தொடர்பான முழக்கங்களும் எழுப்பபட்டன.அதை கண்டு சாப்பிட வந்த பலர் வெளியேறினர். இறுதியாக மாணவர்களை காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்

 

velachery%2004.jpg

velachery%2005.jpg

velachery%2001.jpg

velachery%2002.jpg

 

http://www.sankathi24.com/news/39380/64/KFC/d,fullart.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.