Jump to content

!!!சயனைடு!!!


Recommended Posts

!!!சயனைடு!!! இப்படம் கன்னடத்தில் வெளியாகி சக்கைப் போடு போடுகிறதாம்.... தமிழில் விரைவில் வெளியாக உள்ளது.

Link to comment
Share on other sites

சிவராசன், சுபாவின் இறுதி நாட்களை சித்தரிக்கும் திரைப்படம்

20060903170901cyanidemovie_316.jpg

இப்படம் முதலில் கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டது

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படும் சிவராசன், சுபா மற்றும் அவர்களது சகாக்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் சயனைட் எனும் புதிய தமிழ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பாடல்கள், மரத்தைச் சுற்றும் காதலர்கள், ஒரேயடியில் பலரை அடித்து வீழ்த்தும் கதாநாயகன், பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் இவையெல்லாம் இல்லாமலேயே ஒரு திரைப்படத்தை துணிச்சலாக தயாரித்து வெளியிடுகிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ரமேஷ். முதலில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டது சயனைட்.

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது சென்னை திரைப்படக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரமேஷ் அப்போது நடந்த பல்வேறு பரபரப்புக் காட்சிகளை நேரில் பார்த்திருககிறார். பெங்களூரில் சிவராசன் குழுவினரின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது அவரது ஆவலை மேலும் தூண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, கொலையாளிகளுககு புகலிடம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலையான ரங்கநாத் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்கிறார் ரமேஷ்.

ராஜீவ் கொலையுண்ட சில மாதங்களிலேயே தமிழ் திரைப்பட இயக்குநர் செல்வமணி, அக்கொலையினை மையமாக வைத்து தயாரித்த குற்றப்பத்திரிகை என்ற படம் இன்னமும் காங்கிரஸ்காரர்கள், சென்சார், நீதிமன்றங்கள் என்று உதைபந்தாக உருண்டுகொண்டிருக்கிறது, வெளியான பாடில்லை.

இந்நிலையிலேயே கன்னடத்தில் மிக கவனமாக தயாரித்து, அனைவரும் பார்கக அனுமதிக்கும் யூ சான்றிதழ் பெற்று திரையிட்டு கர்நாடக மாநிலத்தில் பரவலான வரவேற்பை பெற்றிருப்பதன் பின்னணியிலேயே மொழி மாற்றம் செய்யப்படுகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவரான கார்த்திகேயனின் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவரான நாசர்.

அவர் சயனைட் எவரையும் ஏற்றவோ, தூற்றவோ இல்லை, இது ஒரு ஆவணப்படம் என்கிறார்.

கத்திமேல் நடக்கும் சாகசத்தை இயககுநர் ரமேஷ் சரியாகவே செய்திருப்பதாகத்தான் பலரும் கருதுகின்றனர்.

-பீபீசீ தமிழ்

Link to comment
Share on other sites

சுபாவாக நடித்த மாளவிகா கல்கி பேட்டியில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறியிருக்கிறார்.... எப்படித்தான் இவரை அந்த கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களோ?

Link to comment
Share on other sites

சுபாவாக நடித்த மாளவிகா கல்கி பேட்டியில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறியிருக்கிறார்.... எப்படித்தான் இவரை அந்த கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களோ?
:shock: :shock:
Link to comment
Share on other sites

சுபாவாக நடித்த மாளவிகா கல்கி பேட்டியில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறியிருக்கிறார்.... எப்படித்தான் இவரை அந்த கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களோ?

தீவிரவாதிகள் எனும் சொற்பதம் அவ்வளவு கெடுதலானது அல்ல... பயங்கரவாதிகள் எண்று சொல்லாத போது...!

கொள்கையில் தீவிரமாக இருந்த பெரியார் கூட ஆயுதம் ஏந்தாவிட்டாலும் தீவிரவாதியாக பலராலும் வர்ணிக்கப்பட்டவர்...!

Link to comment
Share on other sites

கொள்கையில் தீவிரமாக இருந்த பெரியார் கூட ஆயுதம் ஏந்தாவிட்டாலும் தீவிரவாதியாக பலராலும் வர்ணிக்கப்பட்டவர்...!

தீவிரவாதி என்ற சொல்லுக்கும் போராளி என்றச் சொல்லுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.... நாங்கள் பெரியாரை சமூகப் போராளி என்றே இன்றுவரை குறிப்பிடுகிறோம்.....

Link to comment
Share on other sites

தீவிரவாதி என்ற சொல்லுக்கும் போராளி என்றச் சொல்லுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.... நாங்கள் பெரியாரை சமூகப் போராளி என்றே இன்றுவரை குறிப்பிடுகிறோம்.....

பெரியார் சமூக போராளிதான் ஆவாலும் அவரின் சிரத்தையும் தீவிரமும் அவரை பிடிக்காதவர்களால் அப்படி சொல்ல வைத்து இருக்கிறது... எங்களுக்கு அவரை பிடிக்கும் என்பதால் அப்படி எல்லாம் சொல்ல முடிவதில்லை...!

பெரியாரை பிடிக்காதவர்களின் ஆக்கங்களின் அவரை பற்றிய வாதங்களில் அவரை ஒரு கொலைகாறன் றேஞ்சுக்கு வர்ணிப்பதை கண்டு இருக்கின்றேன்... ஏதோ அவர்களின் திருப்திக்காக செய்கிறார்கள் எண்றுவிட்டு விடவேண்டியதுதான்...!

Link to comment
Share on other sites

பெரியார் சமூக போராளிதான் ஆவாலும் அவரின் சிரத்தையும் தீவிரமும் அவரை பிடிக்காதவர்களால் அப்படி சொல்ல வைத்து இருக்கிறது... எங்களுக்கு அவரை பிடிக்கும் என்பதால் அப்படி எல்லாம் சொல்ல முடிவதில்லை...!

பெரியாரை பிடிக்காதவர்களின் ஆக்கங்களின் அவரை பற்றிய வாதங்களில் அவரை ஒரு கொலைகாறன் றேஞ்சுக்கு வர்ணிப்பதை கண்டு இருக்கின்றேன்... ஏதோ அவர்களின் திருப்திக்காக செய்கிறார்கள் எண்றுவிட்டு விடவேண்டியதுதான்...!

நன்றி....

ஒரு ஈழத்தமிழருக்கு பெரியார் பற்றிய புரிதல் இந்த அளவுக்கு இருப்பது குறித்து மகிழ்ச்சி.....

பெரியாரைப் பொறுத்தவரை முற்பட்ட சமூகத்தில் பிறந்து அந்த சமூகத்திற்கு எதிராகவே ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடினார்... அது தான் அவரது சிறப்பு....

Link to comment
Share on other sites

சுபாவாக நடித்த மாளவிகா கல்கி பேட்டியில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறியிருக்கிறார்.... எப்படித்தான் இவரை அந்த கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களோ?

இதில் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை லக்கிலுக்.

நீங்கள் இந்தப் படத்தில் ஒரு தீவிரவாதியாக நடிக்கிறீர்கள் என்று இயக்குனர் மாளவிகாவிடம் கதை சொல்லும் போது சொல்லியிருக்கலாம்.

அதே பாணியில் அவர் பேட்டியிலும் கூறியிருக்கலாம்!?

அப்படிப் பார்த்தால் கதாநாயகனாக தமிழகத்தில் நடிப்பவர்கள் எல்லோரும்

அப்படி வாழ்பவர்களாக இருக்க வேண்டும்?

வில்லனாக நடிக்கிறேன் என்றால்

அவர் நிஜத்தில் வில்லன் என்று அர்த்தமல்ல.

உதாரணத்துக்கு நம்பியார்!

இது கூட புரியாம

என்னா லக்கிலுக்? :D

Link to comment
Share on other sites

நன்றி....

ஒரு ஈழத்தமிழருக்கு பெரியார் பற்றிய புரிதல் இந்த அளவுக்கு இருப்பது குறித்து மகிழ்ச்சி.....

பெரியாரைப் பொறுத்தவரை முற்பட்ட சமூகத்தில் பிறந்து அந்த சமூகத்திற்கு எதிராகவே ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடினார்... அது தான் அவரது சிறப்பு....

இலங்கையில் பெரியார் கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்!

நல்ல காலம் கட்சிகள் தொடங்கவில்லை!

உதாரணத்துக்கு என் பெரியப்பா டாக்டர் கோவூர்

பெரியாரின் நெருங்கிய நண்பர்.

http://members.tripod.com/~Arumugam/kovoor.htm

http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm

http://www.puzha.com/puzha/selfpublish/1018683478.html

Link to comment
Share on other sites

http://img168.imageshack.us/img168/1544/cyeni24080624js6.jpg%7Boption%7D

சயனைட் எவரையும் ஏற்றவோ, தூற்றவோ இல்லை, இது ஒரு ஆவணப்படம் என்கிறார் நாசர்.

Link to comment
Share on other sites

இலங்கையில் பெரியார் கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்!

நல்ல காலம் கட்சிகள் தொடங்கவில்லை!

உதாரணத்துக்கு என் பெரியப்பா டாக்டர் கோவூர்

பெரியாரின் நெருங்கிய நண்பர்.

http://members.tripod.com/~Arumugam/kovoor.htm

http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm

http://www.puzha.com/puzha/selfpublish/1018683478.html

ஆரம்பத்தில இருந்தே பாக்கிறன் யாழ்களத்துக்கை குண்டுகள் வீசுறதில உங்களை விட்டால் யாரும் இல்லை எண்ட நிலைக்கு வந்திட்டுது போல கிடக்கு...

யோசிக்காதேங்கோ.... கோவூர் உங்களின் பெரியப்பா எண்ற செய்திதான்... பெரிய மனோதத்துவ நிபுணர்கள் வரிசையில் இங்கையில் நன்கு அறியப்பட்ட மனிதர்.... எனது அம்மாவுக்கு அவரை நன்கு தெரியும் எண்று கூறுவார்...( அவருக்கு அம்மாவை தெரியுமா எண்டு கேட்டுடாதேங்கோ.. அதை நான் அம்மாவைதான் கேக்க வேணும்... :wink: :lol::lol: )

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில இருந்தே பாக்கிறன் யாழ்களத்துக்கை குண்டுகள் வீசுறதில உங்களை விட்டால் யாரும் இல்லை எண்ட நிலைக்கு வந்திட்டுது போல கிடக்கு...

யோசிக்காதேங்கோ.... கோவூர் உங்களின் பெரியப்பா எண்ற செய்திதான்... பெரிய மனோதத்துவ நிபுணர்கள் வரிசையில் இங்கையில் நன்கு அறியப்பட்ட மனிதர்.... எனது அம்மாவுக்கு அவரை நன்கு தெரியும் எண்று கூறுவார்...( அவருக்கு அம்மாவை தெரியுமா எண்டு கேட்டுடாதேங்கோ.. அதை நான் அம்மாவைதான் கேக்க வேணும்... :wink: :):D )

:D:D:D:D
Link to comment
Share on other sites

இதில் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை லக்கிலுக்.

நீங்கள் இந்தப் படத்தில் ஒரு தீவிரவாதியாக நடிக்கிறீர்கள் என்று இயக்குனர் மாளவிகாவிடம் கதை சொல்லும் போது சொல்லியிருக்கலாம்.

அதே பாணியில் அவர் பேட்டியிலும் கூறியிருக்கலாம்!?

அப்படிப் பார்த்தால் கதாநாயகனாக தமிழகத்தில் நடிப்பவர்கள் எல்லோரும்

அப்படி வாழ்பவர்களாக இருக்க வேண்டும்?

வில்லனாக நடிக்கிறேன் என்றால்

அவர் நிஜத்தில் வில்லன் என்று அர்த்தமல்ல.

உதாரணத்துக்கு நம்பியார்!

இது கூட புரியாம

என்னா லக்கிலுக்? :)

அண்ணே!

இது உங்கள் பார்வை.... அந்தப் பேட்டியில் அவர் நான் நடித்தது சுபா கேரக்டர் என்றாலும் பிரபாகரனின் மனநிலையை என் மனதுக்குள் கொண்டு பிரபாகரனாகவே நடித்தேன் என்று கூறியிருக்கிறார்.... இப்பவாவது அவர் சொன்ன கருத்து எவ்வளவு அபத்தமானது என்று புரிகிறதா? :D

என்னைப் பொறுத்தவரை சாதாரணத் திரைப்படங்களில் எந்த கேரக்டர்களில் வேண்டுமானால் எப்படிப்பட்டவர்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம்.... இதுபோன்ற படங்களில் பிரச்சினையை நன்கு உள்வாங்கிக் கொண்டவர்களே நடிக்க வேண்டும்.... மாளவிகா எப்படி நடித்திருக்கிறார் என எனக்குத் தெரியாது.... ஆனாலும் நடித்து முடித்தபின் இதுபோல பேட்டி கொடுத்தது எனக்கு ஏற்புடையது அல்ல....

கற்புநிலை குறித்து சர்ச்சைக்குரிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிப்பது கூட எனக்கு கொஞ்சமும் சம்மதமில்லாதது.... இதுகுறித்து தோழர் திருமா மற்றும் டாக்டர் ஐயா ஆகியோரின் நிலையை நான் வரவேற்கிறேன்.....

Link to comment
Share on other sites

லக்கிலுக்

உங்கள மாதிரி நானும் சினிமா என்னண்ணு தெரியாம இருந்த காலத்தில நெனைச்சதுண்டு.

சினிமாவுக்குள்ள வந்ததுக்கப்புறமா நான் என் நிலையை மாத்திக்க வேண்டியதாயிடுச்சு.

நான்

நம்ம எம்.ஜீ.ஆர் ரசிகன்.

இன்னைக்கும்தான்.........

ஒரு ஆள் எப்படி இவ்வளவு பேரை சமாளிக்கிறார்ண்ணு அப்போ பிரமிச்சதுண்டு.

சினிமாவுக்குள்ள வந்ததும் படம் காட்டுறது புரிஞ்சுது.

ரஜனி விஜயகாந் சரத்குமார் விஜய் .................... இப்பிடி எல்லாரும் என்னமா ஜமாய்த்து நீதியை நிலை நாட்டுறாங்கண்ணு படத்தில பாத்திருப்பீங்க.

இது கனவுலக படங்கள்.

பொய்யில மக்கள குசிப்படுத்துறதுக்கு எடுக்கிற படங்கள்.

இதெல்லாம் யதார்த்தமான படங்கள் இல்ல.

இதை நம்பி ஏமாறுறவங்க பாவம்.

கொஞ்சோண்ணு பிளாஸ்பெக்!

பாருங்க.........

இவங்கல்லாம்

கலைஞரை கைது செஞ்சப்போ என்ன செஞ்சாங்கண்ணு?...............

இவங்க எல்லாம் போலீஸ் ஸ்டேசன் கேட்டுக்கு வெளிய மூஞ்சியை தொங்கப் போட்டுக்கிட்டு அழாத குறையா டீவீக்கு பேட்டி கொடுத்தாங்க.

சரிண்ணா

கேட்ட உடைச்சுக்கிட்டு உள்ள போயி

அவ்வளவு போலீசையும் அடிச்சு உதைச்சு

கலைஞரை வெளியில கொண்ணாந்து

அம்மாவை வெளிய தள்ளிட்டு

ஐயாவை சீட்டில அமர வச்சிருக்கணும்.

பலர் வாயே திறக்கல்ல.

இதுதான் இவர்களது உண்மையான பலம்.

நிஜத்தில இவங்க வேறங்க.

நம்ம கெப்டன் விஜயகாந்

மக்கள் துரத்தினப்போ

ஓடியாந்தாரே................நியுஸ் மறந்துட்டீங்களா?

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் தொடர்பாக எனக்குள்ளும் சில கருத்து முரண்பாடுகள் உண்டு.

அதை அவர்களே அறிவார்கள்.

இருந்த போதும்

பிரபாகரன் மேல் மட்டும் எனக்கு அலாதியான ஒரு ஈடுபாடு உண்டு.

என் காலத்தில் என் சமுதாயத்தில் நான் பார்த்த நிஜ வீரன் பிரபாகரன்.

என் மனதில் இருப்பதும் இதுதான்.... குழந்தைப் பருவத்தில் இருந்தே பிரபாகரனின் வீரதீரத்தைச் சொல்லியே என்னை வளர்த்தார்கள்.... அப்படித்தான் என் தலைமுறையே தமிழகத்தில் வளர்ந்தது....

ராஜீவ் மரணத்துக்குப் பிறகு கூட பிரபாகரன் மீது எனக்கு இருக்கும் பிரமிப்பும், ஆச்சரியமும் இம்மியளவு கூட மாறவில்லை....

ஆனாலும் தீவிரவாதிகள் என்று கூறுவதை விட போராளிகள் என்று கூறினால் சரியான பதமாக இருக்கும்.... தீவிரவாதிகள் என்பதை ஆங்கிலத்தில் Terrorists என்றுதானே மொழி பெயர்க்கிறார்கள்.... அதே போராளி என்றால் Freedom Fighters என்கிறார்கள் அல்லவா?

Link to comment
Share on other sites

என் மனதில் இருப்பதும் இதுதான்.... குழந்தைப் பருவத்தில் இருந்தே பிரபாகரனின் வீரதீரத்தைச் சொல்லியே என்னை வளர்த்தார்கள்.... அப்படித்தான் என் தலைமுறையே தமிழகத்தில் வளர்ந்தது....

ராஜீவ் மரணத்துக்குப் பிறகு கூட பிரபாகரன் மீது எனக்கு இருக்கும் பிரமிப்பும், ஆச்சரியமும் இம்மியளவு கூட மாறவில்லை....

ஆனாலும் தீவிரவாதிகள் என்று கூறுவதை விட போராளிகள் என்று கூறினால் சரியான பதமாக இருக்கும்.... தீவிரவாதிகள் என்பதை ஆங்கிலத்தில் Terrorists என்றுதானே மொழி பெயர்க்கிறார்கள்.... அதே போராளி என்றால் Freedom Fighters என்கிறார்கள் அல்லவா?

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பட முடிகிறது.

இருந்தாலும் அதற்காக நாம் எல்லோர் மனதிலும்

நாம் விரும்பும் அனைத்தையும் திணிக்க முடியாது இல்லயா லக்கிலுக்.

அதெல்லாம் தானாக ஒரு மனிதனுக்குள்ள வரணும்!

ஐரோப்பாவுக்கு வர்ரதுக்கு முன்ன

எல்லா வெள்ளைக்காரங்களுக்கும் ஆங்கிலம்

தெரிஞ்சிருக்கும் எண்ணுதான் நினைச்சேன்.

அது இங்க வந்த பிறகு மாறிடிச்சு.

அதுக்கு காரணம் நாங்க வாழும் ஐரோப்பாவில

இங்கிலீசை வெறுத்தவங்களைத்தான் ஆரம்பத்தில பாத்தேன்.

ரொம்ப பேருக்கு இங்கிலீசே தெரியல்ல.

ஒருவனை கெட்டவன் என்கிறதை விட

அவன் பரவாயில்லை என்கிறது மேலில்லையா?

என் மனசை ரொம்ப நாளா பாதிக்கிற ஒரு நிகழ்வு

அதை நான் இங்கே பகிர்ந்துக்கலாம்ண்ணு நெனைக்கிறேன்.

இது சரியான இடமாண்ணு கூட தெரியல்ல?

psycho.gif

நான் வேலை செய்யிற இடத்தில

ஒரு இலங்கை தமிழன் வேலை செய்யிறான்.

அவன் வானோலிகளில தன்னை பெரிய அறிவாளி

மனித நேயம் மிக்கவண்ணு காட்டிக்கிறது வழக்கம்.

பாவம்

அதை ரொம்ப பேர் நம்புறாங்க.

வேலை செய்யிற இடத்துல ஜனங்கங்களுக்கு குழி தோண்டுறதில

இவனை மாதிரி ஒருத்தனை என் வாழ்கையிலயே பார்த்ததில்ல.

நல்லவன் மாதிரி தெரியும் ஒரு நஞ்சு.

வேலை செய்யிற இடத்தில காப்பி கொடுக்கிறதும் இவன் வேலைகளில ஒண்ணு!

வேலை செய்யிறவங்களுக்கு இலவசமா காப்பி கொடுக்கணும்ணு எழுதாத மனிதாபிமானமான சட்டம்

ஒண்ணு இருக்கு...........

காப்பி கொடுக்கல்லண்ணு யாரும் தட்டி கேக்க முடியாது.

இவன் வேலை செய்யும் போது

அப்பிடி கொடுக்கிற காப்பியை கொடுக்காம

காப்பி மெசினை நிறுத்தி விடுவான்.

இல்லைண்ணா நிலத்தில கொட்டி விடுவான்.

பலரும் இது பத்தி சொல்லி வேதனைப்படுவாங்க.

நம்ம நாட்டுக்காரன் ஒருத்தன் இப்பிடி பண்ணுறானேண்ணு வெட்கமாயிருக்கும்.

நானும் பலமுறை சொல்லி பாத்துட்டேன்.

இன்னொருத்தன் வேதனைப்படுறதை பார்க்கிறதில ஒரு திருப்திண்ணே நினைக்கிறேன்.

நீ எல்லாம் நம்ம நாட்டில இருந்தா

உன் மக்களுக்கே சாப்பிடக் கொடுக்காம தடுக்கிற முதல் ஆளா நீதான் இருந்திருப்பேன்னு

சொல்லியிருக்கேன்.

நேத்து அவனுக்கு வேண்டிய ஒருவருக்கிட்ட இப்பிடி சொன்னேன்.

"அவன் ஒரு மனநோயாளி.

நல்ல மனநல மருத்துவரா பாத்து உடனடியா தெரபி ஏதாவது செய்யச் சொல்லு"ண்ணு.

இங்க தளத்தில கூட அவருக்கு வேண்டிய ஒரு நண்பர் இருக்கார்.

முடிஞ்சா நான் இணையத்தில எழுதியிருப்பதா சொல்லட்டும்!

ஒண்ணு

அவனா திருந்தணும்.

இல்ல வைத்தியர் உதவியோட திருந்தணும்.

இவங்கள எல்லாம் விட அந்த பொண்ணு எவ்வளவோ மேல் லக்கிலுக்.

Link to comment
Share on other sites

சயனைட்' தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ராஜீவ் கொலை தொடர்பான திரைப்படம்

[10 - September - 2006] [Font Size - A - A - A]

-திருவாரூர் கணா-

அரசியல் தலைவர்கள் சிலரின் படுகொலைகளை உலகம் ஒரு போதும் மறக்காது. அமெரிக்க அதிபர்களாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஜோன் எஃப் கென்னடி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் எப்போதுமே நெஞ்சத்தைப் பதற வைக்கும்.

உலக நாட்டுத் தலைவர்களுடனும், ஐ.நா. சபையிலும் ரோஜா நிற முகத்துடன் உரையாற்றிய ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஷ்ரீ பெரும்புதூரில் இரத்தச் சகதியில் முகம் புதைத்து உயிரிழந்து பதினைந்து வருடங்கள் பறந்தோடி விட்டன. தனு என்ற பெண் விடுதலைப் புலியை மனித வெடி குண்டாகப் பயன்படுத்தி இதை நிகழ்த்தியவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு ஒற்றைக் கண் சிவராசன், சுபா மற்றும் உள்ள விடுதலைப் புலிகள் ஒரு லொறி மூலம் பெங்களூர் இந்திரா நகரில் சென்று பதுங்கினர்.

ஆனாலும் அவர்களால் பெங்களூர் பொலிஸிடமிருந்து தப்ப முடியவில்லை. அவர்கள் பதுங்கியிருந்த வீட்டை பொலிஸ் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இனி தப்பிக்க முடியாது என்று நினைத்த கொலையாளிகள் தங்கள் கழுத்திலிருந்த சயனைட் குப்பிகளை விழுங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

இந்த நிஜக் கதையை சினிமாத் தனம் எதுவுமில்லாமல் `சயனைட்' என்ற பெயரில் அப்படியே திரைப்படமாக எடுத்திருக்கிறார் கர்நாடகத்தைச்

சேர்ந்த டைரக்டர் ரமேஷ். இவர், ஏற்கனவே கன்னடத்தில் புது முகங்களை வைத்து `சந்தோஷம்' என்ற பெயரில் படமெடுத்து அவார்ட் தட்டிச் சென்றவர். இப்போது `சயனைட்' படம் கர்நாடகத்தில் ரிலீஸாகி 50 நாட்களுக்கு மேலாக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் இப்போது தமிழிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 25 ஆம் திகதி இப்படம் பத்திரிகையாளர்களுக்கும் சினிமா உலக பிரபலங்களுக்கும் சென்னையில் பிரத்தியேகமாக போட்டுக் காட்டப்பட்டது. கமலஹாசன், தங்கர் பச்சான், சீமான், அமீர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்கள் `சயனைட்'டைப் பார்த்து விட்டு உறைந்து போய்விட்டார்கள். அந்தளவுக்கு நேர்த்தியும் யதார்த்தமும் இழையோட ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியிருக்கிறார் டைரக்டர் ரமேஷ். இப்போது இந்த படத்தின் தமிழ் நாட்டு விநியோக உரிமையைப் பெற பிரபல தயாரிப்பாளர்களிடத்தில் போட்டி நிலவுகிறது.

`குற்றப் பத்திரிகை' என்ற பெயரில் ராஜீவ் காந்தி படுகொலையை அப்போதே சுடச் சுட படமெடுத்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. கடந்த 15 ஆண்டுகளாகப் போராடியும் இன்று வரை அந்தப் படம் குறித்த சர்ச்சை கோர்ட்டில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, `சயனைட்' படத்தை `யு' சேட்டிஃபிகேட்டுடன் ரசிகர்கள் பார்வைக்கு ரமேஷ் கொண்டு வந்திருப்பது ஆச்சர்யமான விடயம் தான். இது எப்படி சாத்தியம் என்று அவரிடமே கேட்டோம்.

"1991 இல் நான் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் `கோஸ்' படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராஜீவ் கொல்லப்பட்டார். இதைக் கேட்டதும் நானும் என் நண்பன் கமலநாதனும் பைக்கை எடுத்துக்கொண்டு ஜி.ஹெச்-சுக்குப் போனோம். ஷ்ரீபெரும்புதூரில் இறந்தவர்களின் சடலங்கள் அலங்கோலமாக அங்கே வைக்கப்படிருந்தன. எங்கும் அழுகுரல்கள், அந்தச் சம்பவம் என்னை ரொம்பவும் பாதித்தது. இதன்பிறகு 90 நாட்கள் கழித்து ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோரை பெங்களூரில் சுட்டுக்கொன்றனர் என்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ரெங்கநாத் என்றும் படித்தபோது, மேலும் அதிர்ச்சி. ஏனென்றால் எனக்கு பத்து வயது இருக்கும்போது என் அண்ணன் வீட்டுக்கு அருகில் மிருதுளா என்ற பெண் வசித்தார். அவரை அப்போது சேலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரெங்கநாத் அங்கிள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த கல்யாணத்துக்குக்கூட நான் போயிருக்கிறேன். எனவே, ரெங்கநாத் அங்கிளை ரொம்ப வருடமா தெரியும். ஜெயிலுக்குப் போன ரெங்கநாத் அங்கிள் 99 இல் விடுதலையானார். அவரிடம் ஷ்ரீபெரும்புதூர் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் குழுவினர் எப்படி பெங்களூர் வந்து செட்டிலானார்கள் என்ற கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதையே சினிமாவாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

அப்போதான் ராஜீவ் காந்தி கொலையை மையப்படுத்தி எடுத்த `குற்றப்பத்திரிகை' படம் எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டிக்கொண்டு கடைசிவரை வரவேயில்லை என்பதையும் யோசித்துப் பார்த்தேன். அதனால், பக்காவாக கதை, திரைக்கதை தயார் செய்துகொண்டு கர்நாடகா சென்சார் போர்ட் சீஃப் ஆபீஸர் சந்திரசேகரிடம் காட்டினேன். அவர் சில தவறுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, குறை சொல்லவில்லை.

அடுத்து, சிவராசன் கேரக்டருக்கு ஆள் தேடினோம். `சர்க்கார்' படத்தில் அமிதாப்பச்சனுக்கு அடியாளாக வரும் ரவிகாளிதான் பொருத்தமான ஆள் என்று தேர்ந்தெடுத்து அவரைத் தொடர்பு கொண்டேன். `ராஜீவை கொன்ற சிவராசன் கரக்டரா, அய்யோ வேணாம். சாமி என்று மறுத்தார். அதன்பின் சேலஞ்சிங்கான கரக்டர் என்று விபரித்த பிறகு ஒப்புக்கொண்டார்.

சிவராசன் முதலில் தங்கியிருந்த ரெங்கநாத் வீட்டில்தான் படத்தை ஷூட் செய்தோம். ஒரு காட்சியில் வாழை மர நிழல் வீட்டில் படும் அதைப்பார்த்த சுபா (மாளவிகா), `நிழல் விழக் கூடாது' அது போராளிகளுக்கு ஆகாது.' என்று டயலாக் பேசுவார். அதுகூட நிஜமாகவே சுபா பேசிய வார்த்தைகள்தான். இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், படத்தில் ரெங்கநாத் கேரக்டரில் நடிப்பவர் சிவராசனிடம் `என்ன இருந்தாலும் நீங்க எங்க பிரதமரைக் கொன்றது தப்பில்லையா?' என தயங்கித் தயங்கிக் கேட்பார். ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, `உங்க மண்ணில் அதைச் செய்ததுதான் தப்பு. அதனால் நீங்கள் எங்கள் மீது கொண்ட மதிப்பையும் இரக்கத்தையும் நாங்கள் இழந்துவிட்டாம், என்று சொல்வான் சிவராசன் கேரக்டர். இது கூட உண்மையான வசனங்கள்தான்.

"சிவராசனை ஹீரோ ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறீர்களே?"

"நம் பிரதமர் ராஜீவ் காந்தியை அவர் படுகொலை செய்தது நூறு வீதம் தப்பான விடயம். அது மன்னிக்கக் கூடிய விடமயல்ல. ஆனால், எந்தவித சலனமும் இல்லாமல் ஒரு நாட்டின் பிரதமரைக் கொலை செய்யும் அளவுக்கு மன உரத்துடன் இருப்பவனின் குணாதிசயம் வியப்பானதுதானே. அதேசமயம், அவர்கள் மண்ணில் அவர்கள் போராடுவதை மதிக்கத்தான் வேண்டும்.

"இலங்கையில் புலிகள், இராணுவம் மோதிக் கொள்ளும் இந்தச் சூழலில் இப்படியொரு படம் தேவையா?"

"இலங்கையில் மீண்டும் இப்படியொரு போர்ச்சூழல் உருவாகும் என்று யார் நினைத்தார்கள்? நான், நான்கைந்து வருடமாவே சிறிது சிறிதாக யோசித்து செய்த ஸ்கிரிப்ட்டைத்தான் படமாக எடுத்திருக்கிறேன்" என்றார்.

http://www.thinakkural.com/news/2006/9/10/...s_page10456.htm

Link to comment
Share on other sites

சயனைட்' தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ராஜீவ் கொலை தொடர்பான திரைப்படம்

திருவாரூர் கணா-

அரசியல் தலைவர்கள் சிலரின் படுகொலைகளை உலகம் ஒரு போதும் மறக்காது. அமெரிக்க அதிபர்களாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஜோன் எஃப் கென்னடி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் எப்போதுமே நெஞ்சத்தைப் பதற வைக்கும்.

உலக நாட்டுத் தலைவர்களுடனும், ஐ.நா. சபையிலும் ரோஜா நிற முகத்துடன் உரையாற்றிய ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஷ்ரீ பெரும்புதூரில் இரத்தச் சகதியில் முகம் புதைத்து உயிரிழந்து பதினைந்து வருடங்கள் பறந்தோடி விட்டன. தனு என்ற பெண் விடுதலைப் புலியை மனித வெடி குண்டாகப் பயன்படுத்தி இதை நிகழ்த்தியவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு ஒற்றைக் கண் சிவராசன், சுபா மற்றும் உள்ள விடுதலைப் புலிகள் ஒரு லொறி மூலம் பெங்களூர் இந்திரா நகரில் சென்று பதுங்கினர்.

ஆனாலும் அவர்களால் பெங்களூர் பொலிஸிடமிருந்து தப்ப முடியவில்லை. அவர்கள் பதுங்கியிருந்த வீட்டை பொலிஸ் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இனி தப்பிக்க முடியாது என்று நினைத்த கொலையாளிகள் தங்கள் கழுத்திலிருந்த சயனைட் குப்பிகளை விழுங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

இந்த நிஜக் கதையை சினிமாத் தனம் எதுவுமில்லாமல் `சயனைட்' என்ற பெயரில் அப்படியே திரைப்படமாக எடுத்திருக்கிறார் கர்நாடகத்தைச்

சேர்ந்த டைரக்டர் ரமேஷ். இவர், ஏற்கனவே கன்னடத்தில் புது முகங்களை வைத்து `சந்தோஷம்' என்ற பெயரில் படமெடுத்து அவார்ட் தட்டிச் சென்றவர். இப்போது `சயனைட்' படம் கர்நாடகத்தில் ரிலீஸாகி 50 நாட்களுக்கு மேலாக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் இப்போது தமிழிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 25 ஆம் திகதி இப்படம் பத்திரிகையாளர்களுக்கும் சினிமா உலக பிரபலங்களுக்கும் சென்னையில் பிரத்தியேகமாக போட்டுக் காட்டப்பட்டது. கமலஹாசன், தங்கர் பச்சான், சீமான், அமீர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்கள் `சயனைட்'டைப் பார்த்து விட்டு உறைந்து போய்விட்டார்கள். அந்தளவுக்கு நேர்த்தியும் யதார்த்தமும் இழையோட ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியிருக்கிறார் டைரக்டர் ரமேஷ். இப்போது இந்த படத்தின் தமிழ் நாட்டு விநியோக உரிமையைப் பெற பிரபல தயாரிப்பாளர்களிடத்தில் போட்டி நிலவுகிறது.

`குற்றப் பத்திரிகை' என்ற பெயரில் ராஜீவ் காந்தி படுகொலையை அப்போதே சுடச் சுட படமெடுத்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. கடந்த 15 ஆண்டுகளாகப் போராடியும் இன்று வரை அந்தப் படம் குறித்த சர்ச்சை கோர்ட்டில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, `சயனைட்' படத்தை `யு' சேட்டிஃபிகேட்டுடன் ரசிகர்கள் பார்வைக்கு ரமேஷ் கொண்டு வந்திருப்பது ஆச்சர்யமான விடயம் தான். இது எப்படி சாத்தியம் என்று அவரிடமே கேட்டோம்.

"1991 இல் நான் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் `கோஸ்' படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராஜீவ் கொல்லப்பட்டார். இதைக் கேட்டதும் நானும் என் நண்பன் கமலநாதனும் பைக்கை எடுத்துக்கொண்டு ஜி.ஹெச்-சுக்குப் போனோம். ஷ்ரீபெரும்புதூரில் இறந்தவர்களின் சடலங்கள் அலங்கோலமாக அங்கே வைக்கப்படிருந்தன. எங்கும் அழுகுரல்கள், அந்தச் சம்பவம் என்னை ரொம்பவும் பாதித்தது. இதன்பிறகு 90 நாட்கள் கழித்து ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோரை பெங்களூரில் சுட்டுக்கொன்றனர் என்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ரெங்கநாத் என்றும் படித்தபோது, மேலும் அதிர்ச்சி. ஏனென்றால் எனக்கு பத்து வயது இருக்கும்போது என் அண்ணன் வீட்டுக்கு அருகில் மிருதுளா என்ற பெண் வசித்தார். அவரை அப்போது சேலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரெங்கநாத் அங்கிள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த கல்யாணத்துக்குக்கூட நான் போயிருக்கிறேன். எனவே, ரெங்கநாத் அங்கிளை ரொம்ப வருடமா தெரியும். ஜெயிலுக்குப் போன ரெங்கநாத் அங்கிள் 99 இல் விடுதலையானார். அவரிடம் ஷ்ரீபெரும்புதூர் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் குழுவினர் எப்படி பெங்களூர் வந்து செட்டிலானார்கள் என்ற கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதையே சினிமாவாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

அப்போதான் ராஜீவ் காந்தி கொலையை மையப்படுத்தி எடுத்த `குற்றப்பத்திரிகை' படம் எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டிக்கொண்டு கடைசிவரை வரவேயில்லை என்பதையும் யோசித்துப் பார்த்தேன். அதனால், பக்காவாக கதை, திரைக்கதை தயார் செய்துகொண்டு கர்நாடகா சென்சார் போர்ட் சீஃப் ஆபீஸர் சந்திரசேகரிடம் காட்டினேன். அவர் சில தவறுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, குறை சொல்லவில்லை.

அடுத்து, சிவராசன் கேரக்டருக்கு ஆள் தேடினோம். `சர்க்கார்' படத்தில் அமிதாப்பச்சனுக்கு அடியாளாக வரும் ரவிகாளிதான் பொருத்தமான ஆள் என்று தேர்ந்தெடுத்து அவரைத் தொடர்பு கொண்டேன். `ராஜீவை கொன்ற சிவராசன் கரக்டரா, அய்யோ வேணாம். சாமி என்று மறுத்தார். அதன்பின் சேலஞ்சிங்கான கரக்டர் என்று விபரித்த பிறகு ஒப்புக்கொண்டார்.

சிவராசன் முதலில் தங்கியிருந்த ரெங்கநாத் வீட்டில்தான் படத்தை ஷூட் செய்தோம். ஒரு காட்சியில் வாழை மர நிழல் வீட்டில் படும் அதைப்பார்த்த சுபா (மாளவிகா), `நிழல் விழக் கூடாது' அது போராளிகளுக்கு ஆகாது.' என்று டயலாக் பேசுவார். அதுகூட நிஜமாகவே சுபா பேசிய வார்த்தைகள்தான். இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், படத்தில் ரெங்கநாத் கேரக்டரில் நடிப்பவர் சிவராசனிடம் `என்ன இருந்தாலும் நீங்க எங்க பிரதமரைக் கொன்றது தப்பில்லையா?' என தயங்கித் தயங்கிக் கேட்பார். ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, `உங்க மண்ணில் அதைச் செய்ததுதான் தப்பு. அதனால் நீங்கள் எங்கள் மீது கொண்ட மதிப்பையும் இரக்கத்தையும் நாங்கள் இழந்துவிட்டாம், என்று சொல்வான் சிவராசன் கேரக்டர். இது கூட உண்மையான வசனங்கள்தான்.

"சிவராசனை ஹீரோ ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறீர்களே?"

"நம் பிரதமர் ராஜீவ் காந்தியை அவர் படுகொலை செய்தது நூறு வீதம் தப்பான விடயம். அது மன்னிக்கக் கூடிய விடமயல்ல. ஆனால், எந்தவித சலனமும் இல்லாமல் ஒரு நாட்டின் பிரதமரைக் கொலை செய்யும் அளவுக்கு மன உரத்துடன் இருப்பவனின் குணாதிசயம் வியப்பானதுதானே. அதேசமயம், அவர்கள் மண்ணில் அவர்கள் போராடுவதை மதிக்கத்தான் வேண்டும்.

"இலங்கையில் புலிகள், இராணுவம் மோதிக் கொள்ளும் இந்தச் சூழலில் இப்படியொரு படம் தேவையா?"

"இலங்கையில் மீண்டும் இப்படியொரு போர்ச்சூழல் உருவாகும் என்று யார் நினைத்தார்கள்? நான், நான்கைந்து வருடமாவே சிறிது சிறிதாக யோசித்து செய்த ஸ்கிரிப்ட்டைத்தான் படமாக எடுத்திருக்கிறேன்" என்றார்.

http://www.thinakkural.com/news/2006/9/10/...s_page10456.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.