Jump to content

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் எதிர் இந்தியா.... பாக்கிஸ்தான் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்.............

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

நெதர்லாந்து அதிரடி : பிரதான சுற்றுக்கு முன்னேறியது

 

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபது-20 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப்போட்டிகளின் இறுதி போட்டியில் இன்று நெதர்லாந்து திடீர் திருப்பமாக அதிரடியாக துடுப்பெடுத்தாடி அயர்லாந்தை வீழ்த்தி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றது.
நெதர்லாந்தின் இந்த திடீர் எழுச்சியினால் முதலிடத்திலிருந்த ஜிம்பாவேயும் வெளியே தூக்கி எறியப்பட்டது. ஏற்கனவே குழு 'பி" பிரிவிற்கு பங்களாதேஷ் தகுதி பெற்றது. மற்றொரு பிரிவுக்கு தற்போது நெதர்லாந்து தகுதி பெற்று வரலாறு படைத்தது.

அயர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து பிரதான சுற்றுக்கு, அதாவது சூப்பர் - 10 அணியுடன் இணைய 14.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்தால் தகுதி பெறும் நிலை காணப்பட்டது. ஆனால் நடந்தது சற்றும் கண்களால் நம்ப முடியாத ஒன்று. 13.5 ஓவர்களில் 194-4 என்று அபார வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

 

http://www.virakesari.lk/?q=node/362314

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு சூப்பர் வெற்றி: மிஸ்ரா சுழலில் பாகிஸ்தான் சரண்டர்
மார்ச் 21, 2014.

 

மிர்புர்: உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை  7 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. ‘சுழலில்’ மிரட்டிய அமித் மிஸ்ரா, வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார்.

ஐந்தாவது ‘டுவென்டி–-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த லீக் போட்டியில் ‘பிரிவு–2’ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அஷ்வின், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா சேர்த்து இந்திய அணியில் மூன்று ‘ஸ்பின்னர்கள்’ இடம் பெற்றனர்.

துவக்கம் மோசம்: இந்திய அணியின் துடிப்பான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. சற்று வித்தியாசமாக முதல் ஓவரை இம்முறை அஷ்வின் வீசினார். இதில், கம்ரான் ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார். அடுத்த ஓவரில் அவசரப்பட்ட கம்ரான் (8), புவனேஷ்வர் குமாரின் நேரடி ‘த்ரோவில்’ பரிதாபமாக ரன் அவுட்டானார்.

ரவிந்திர ஜடேஜா பந்தில் ஹபீஸ் (15) வீழ்ந்தார். அமித் மிஸ்ராவின் ‘சுழலில்’ ஷேசாத்(22) வெளியேற, பாகிஸ்தான் அணி 8.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

பின் உமர் அக்மல், சோயப் மாலிக் சேர்ந்து போராடினர். யுவராஜ் வீசிய போட்டியின் 11வது ஓவரில் உமர் அக்மல் 2 பவுண்டரி அடிக்க மொத்தம் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. மறுமுனையில் மிஸ்ரா பந்தை சோய்ப் மாலிக் சிக்சருக்கு அனுப்ப, ‘ஸ்கோர்’ மெல்ல உயரத் துவங்கியது. மீண்டும் பந்துவீச வந்த மிஸ்ரா இம்முறை மாலிக்கை(18) அவுட்டாக்கி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ஷமி ‘வேகத்தில்’ உமர் அக்மல்(33) வீழ்ந்தார். புவனேஷ்வர் குமார் பந்தில் ‘ஆபத்தான’ அப்ரிதி(8) அவுட்டாக, தோனிக்கு நிம்மதி பிறந்தது.

ஷமி வீசிய போட்டியின் கடைசி ஓவரில் சோயப் மக்சூத் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து கவுரவமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். இவர் 21 ரன்களுக்கு ரன் அவுட்டானார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் சேர்ந்து வலுவான துவக்கம் தந்தனர். ஜுனைடு கான் ஓவரில் ரோகித் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். தொடர்ந்து சயீத் அஜ்மல் ஓவரில் தவான் மூன்று பவுண்டரிகள் விளாச, பாகிஸ்தான் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. உமர் குல் ‘வேகத்தில்’ தவான்(30) அவுட்டானார். சிறிது நேரத்தில் சயீத் அஜ்மல் வலையில் ரோகித்(24) சிக்கினார். பிலாவல் பந்தில் யுவராஜ் சிங்(1) அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது.

அதிரடி ஆட்டம்: பின் விராத் கோஹ்லி, ரெய்னா சேர்ந்து வெளுத்து வாங்கினர். பவுண்டரி, சிக்சர்களாக விளாசிய இவர்கள், அணிக்கு விரைவான வெற்றி தேடித் தந்தனர். இந்திய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி(36), ரெய்னா(35)

அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை அமித் மிஸ்ரா தட்டிச் சென்றார்.

நுாறு சதவீத வெற்றி     

‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதுவரை நான்கு முறை (2007, 2007, 2012, 2014) இந்தியா–பாகிஸ்தான் அணிகள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் மோதின. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

யுவராஜ் ஏமாற்றம்           

இந்திய அணியின் ‘பீல்டிங்’ நேற்று எடுபடவில்லை. ‘டுவென்டி–20’ போட்டிகளில் அறிமுகமான முகமது ஷமி பந்தில் ஹபீஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த ‘கேட்ச்சை’ யுவராஜ் சிங், பிடித்து நழுவ விட்டார். இதனை பயன்படுத்திய ஹபீஸ் 15 ரன்கள் எடுத்தார். இதே போல பவுண்டரிக்கு செல்லும் பந்துகளை துடிப்பாக தடுக்கவும் தவறினர்.               

பழிதீர்த்தது

சமீபத்தில் இதே மிர்புரில் நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதற்கு நேற்று பழிதீர்த்தது.

சபாஷ் தோனி

இந்திய கேப்டன் தோனி வெற்றிப்பாதையை கண்டு கொண்டார். இவரது முடிவுகள் அனைத்தும் நேற்று மிகச் சரியாக இருந்தன. மூன்று ‘ஸ்பின்னர்களுக்கு’ வாய்ப்பு அளித்தார். மந்தமான ஆடுகளம் மற்றும் பனிப்பொழிவை உணர்ந்து, முதலில் ‘பவுலிங் தேர்வு செய்தார். இது சரியானது என்பதை நிரூபிக்கும் வகையில் அமித் மிஸ்ரா(2/22), ஜடேஜா(1/18), அஷ்வின்(0/23) சேர்ந்து 12 ஓவர்களில் 63 ரன்கள் மட்டும் கொடுத்து பாகிஸ்தான் அணியை திணறடித்தனர். இவர்கள் மூவரையும் திறமையாக பயன்படுத்திய தோனி, பாகிஸ்தான் அணியின் ரன் வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தினார்.

http://sports.dinamalar.com/2014/03/1395422857/IndiaPakistanWorldCupT20Cricket.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெதர்லாந்ட்தின் விளையாட்டை என் வாழ் நாளில் மறக்க மாட்டேன்..என்ன ஒரு விளையாட்டு........

Link to comment
Share on other sites

இருபது-20 உலக கிண்ணம் : முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

 

இருபது-20 உலக கிண்ண சூப்பர் 10 சுற்றில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடரின் சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி நேற்று ஆரம்பமானது. சூப்பர்-10 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி சிட்டகொங்கில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இருபது ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசெல் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக இம்ரான் தஹிர் 3 விக்கெட்டுகளையும் ஸ்டெயின் மற்றும்மோர்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய தென்னாபிரிக்க அணிவீரர்கள் அதிரடியா துடுப்பெடுத்தானர்.

டிகொக் 25 ஓட்டங்களையும் அம்லா 25 ஓட்டங்களையும் டுமினி 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு தடுமாறிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் தோல்விடைந்தது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சேனநாயக்க 2 விக்கெட்டுகளையும் மெத்தியூஸ், மலிங்க மற்றும் மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

http://www.virakesari.lk/?q=node/362337

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலிங்கா கீரோ...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது...

Link to comment
Share on other sites

வெற்றி மழையில் நியூசிலாந்து: இங்கிலாந்து அணி பரிதாபம்

 

சிட்டகாங்: இங்கிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், மழை குறுக்கிட, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வங்கதேசத்தில் ஐந்தாவது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 'பிரிவு-1' லீக் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்: இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மில்ஸ் வீசிய முதல் ஓவரில், ரன் கணக்கைத் துவக்கும் முன்பே, கோரி ஆண்டர்சனின் 'சூப்பர் கேட்ச்சில்' ஹேல்ஸ் வெளியேறினார். பின், லம்ப்புடன் இணைந்த மொயீன் அலி, மில்ஸ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.
நாதன் மெக்கலம் ஓவரில், லம்ப் இரு பவுண்டரி என விளாச, இங்கிலாந்து அணி 7.1 ஓவரில் 70 ரன்களை எட்டியது. பின் மொயீன் அலி (36), லம்ப் (33) அடுத்தடுத்த ஓவரில் அவுட்டாகினர்.
அடுத்து பட்லர், மார்கன் இணைந்து ரன்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு பலன் கிடைக்கவில்லை. மார்கன் 12 ரன்னுக்கு அவுட்டானார்.
நாதன் மெக்கலம் ஓவரில் இரு பவுண்டரி அடித்த பட்லர், சவுத்தி பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் 32 ரன்கள் எடுத்தார். ஜோர்டனும் (8) ஏமாற்றினார். கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.
போபரா (24), பிரஸ்னன் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
மழை குறுக்கீடு: கடின இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (11) ஏமாற்றினார். 5.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்யவே, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரண்டன் மெக்கலம் (16), வில்லியம்சன் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்டநாயகன் விருதை கோரி ஆண்டர்சன் வென்றார்.

 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=938848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர போக்கை பார்த்தால் இலங்கை தான் கோப்பையை தட்டி செல்லும் போல இருக்கு.........

இலங்கை உட்பட சில நாடுகள் சிறப்பாக ஆடுகின்றன. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் அரை இறுதி போட்டிக்கு வரவில்லையானால், வருமானம் குறைந்து விடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாக்கிஸ்தான் எதிர் அவுஸ்ரெலியா விளையாட்டை நம்பவே முடிய வில்லை..... அடி அகோரம்...ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு அவுஸ்ரெலியாவுக்கு இருந்திச்சு....பாக்கிஸ்தான் துள்ளியமாக பந்தை போட்டு விக்கெட் எடுக்க கடசி ஓவருக்கு 23 ஓட்டமெடுத்தால் வெற்றி என்று ஆடிய அவுஸ்சுக்கு பாக்கிஸ்தான் பந்து விச்சுக்கு 6 ஓட்டம் தான் எடுக்க முடிஞ்சது.....

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய அணி தோல்வி
 

 

மிர்புர்: பாகிஸ்தானுக்கு எதிரான 'டுவென்டி--20' உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐந்தாவது 'டுவென்டி--20' உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. மிர்புரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் 'பிரிவு-2'ல் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்லி பவுலிங் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் அதிர்ச்சி தந்தார். போலிஞ்சர் வேகத்தில் இவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். வாட்சன் வேகத்தில் கேப்டன் ஹபீஸ் (13) வௌியேறினார். உமர் அக்மல், கம்ரான் அக்மல் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினர்.கம்ரான் அக்மல் 31 ரன்களில் அவுட்டானார்.
அரை சதம் கடந்த உமர் அக்மல், 94 ரன்களில் ஆட்டமிழந்தார். மகசூத் (5) நிலைக்கவில்லை. பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. அப்ரிதி (20), மாலிக் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர்(4), வாட்சன் (4) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் எதிரணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அரை சதம் கடந்த மேக்ஸ்வெல் 74 ரன்களில் அவு்டடானார். பெய்லி (4), ஹாட்ஜ் (2) விரைவில் திரும்பினர். உமர் குல் வேகத்தில் கவுல்டர் நைல் டக்-அவுட் ஆனார். மற்றவர்கள் சொதப்ப, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 175 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=939493

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் வெஸ்சின்டீஸ் எதிர் இந்தியா..........

Link to comment
Share on other sites

இந்திய தேசிய கீதத்தைப் பாடினார்கள்.. இதில் தென்மாநிலங்களைப் பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லையே.. :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ போனில் போனில் பார்க்கக்கூடிய லிங்க் இருந்தால் போட்டு விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்காவிலும் , பாகிஸ்தானிலும் ஏதோ மாயம் வேலை செய்யுது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜந்து சத்தத்துக்கு உதவாத விளையாட்டு வெஸ்சின்டீஸ் அணியின் விளையாட்டு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.