Jump to content

தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர்..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2101.jpg

 

வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில்.

 

நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன்.

 

நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்டில குளிர் என்பதால்.. பிகர் மூடிக்கட்டிக் கொண்டு வேற ஓடிக் கொண்டிருந்தால.. முகத்தை மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது.

 

இந்தக் கலகலப்புக்கு மத்தியிலும்... நான் ஒரு வட்டம் முடிச்சு.. இரண்டாம் வட்டம் ஓட ஆரம்பித்திருந்தேன். இப்போ.. அந்த நடுத்தர வயசுக்காரர்.. பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்து கொண்டு.... அந்த பிகரை கூப்பிட்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்தார். பிகரும் அவருக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்து கொண்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்திச்சு.

 

நான் நடப்பவற்றை எல்லாம் கடைக்கண்ணால் கவனிச்சுக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில்.. அந்த நடுத்தர வயதுக்காரர் இருந்த பெஞ்சுக்கு நேர் எதிரே பார்க்கின் எதிர் புறத்தில்.. இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன். ஓடிக் களைச்சது போல.. வேற பாசாங்கும் செய்து கொண்டேன். அங்கிருந்து கொண்டு...எதிர் பெஞ்சில் என்ன நடக்குது என்று ஆராயத் தொடங்கினேன். அந்த நடுத்தர வயதுக்காரர்.. தான் கொண்டு வந்திருந்த துவாயை எடுத்து அந்த பிகரின் முகத்தில் வழிந்திருந்த.. வியர்வையை துடைக்கக் கொடுத்தார். அப்ப தான் தெரிஞ்சுச்சு அவர் அந்த பிகரின் அப்பான்னு.

 

ஆகா.. அந்த பிகருடைய அப்பாவா இவரு.. என்றிட்டு.. நிலைமை கைமீறிப் போவதற்குள்.. இளைப்பாறி எழுவது போல எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். இப்போ நான் மீண்டும் பார்க்கை சுற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் வர.. மீண்டும் அவர் கூப்பிட்டார்.

 

இம்முறை.. தம்பி என்றல்ல. ஹலோ என்றார். உடன பக்கத்தில இருந்த பிகரு.. ஏன் டாட் கூப்பிடுறீங்க என்றிச்சுது. தமிழ் பொடியன் போல இருக்குது... அப்போதையும் கூப்பிட்டனான் தமிழ் விளங்காத மாதிரி போயிட்டான். பொறு.. கூப்பிட்டு கதைப்பமே என்றார்...என் காதுபட.

 

நானும்.. பிகருட அப்பா என்றது உறுதியாக.. ஓடுவதை நிறுத்தி நடந்து வந்து.. காய் அங்கிள் என்றேன். அவர் கான் யு ஸ்பீக் ரமிள் என்றார்..! ஐ கான் ராட்க் எ பிட் என்றேன்... என் இமேச்சை பிகருக்கு முன்னால்..உயர்த்திக் காட்ட. உடனே அவரோ.. அப்ப இஞ்ச வாரும் இதில இரும் என்றார் தனக்கு அருகில். எனக்கோ எதிர்பார்த்தது போல எல்லாம் நடப்பதால்.. மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருந்திச்சு. அவர் நடுவில் இருக்க.. நான் ஒரு கரையிலும்.. பிகர் மறுகரையிலுமாக பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.

 

தம்பி... நாங்கள் இப்ப தான்.. ஜேர்மனில இருந்து மூவ் பண்ணி லண்டனுக்கு வந்திருக்கிறம். இவா பிள்ளை.. இங்க ஏ எல் செய்யுறா. உமக்கு தெரியுமே நல்ல ரியூசன் இங்க.. என்றார்.

 

நான் சொன்னேன்.. அங்கிள்.. எனக்கு தெரியும் ஒன்றிரண்டு ரியூசன். பட் அவையள் எப்படி படிப்பிப்பினம் என்று எனக்குத் தெரியாது. சோ.. என்னால.. உங்களுக்கு கறண்டி பண்ணிச் சொல்லேலாது என்றேன்.

 

ஓகே.. நீர் சொல்லுறதும் நியாயம் தான்.. என்றிட்டு.. என் பதிலைக் கேட்டிட்டு.. யோசிச்சுக் கொண்டிருந்தவர்.. திடீர் என்று தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர் என்றார். நான் பிகரு முன்னால.. உள்ளதைச் சொல்லி.. இமேச்சைக் கூட்டுவமா.. இல்ல கொள்கையை.. அதாவது என்ன படிச்சன் என்பதை யாரோடும் அநாவசியமாக பகிர்ந்து கொள்வதில்லை என்ற அந்தக் கொள்கையை காக்கிறதா..என்ற தவிப்பில்... அது வந்து அங்கிள்... இஞ்ச வந்து கொஞ்சம் படிச்சிருக்கிறன் என்றேன்.

 

அதுக்கு அவர் அப்ப இதுக்கு முதலில் எங்க படிச்சனீர் என்றார். நான் அதுக்கு சிறீலங்கா.. என்றேன். அவ்வளவும் தான் அவரின்.. மூஞ்சியில் ஈயாடவில்லை. முகம் மலர்ச்சி இழந்து கறுத்துப் போனது. அதுவரை என்னை அடிக்கடி.. கடைக்கண்ணால் பார்த்திட்டு இருந்த பிகரும்.. வெறிச்சு.. இலைகள் உதிர்த்திருந்த.. பார்க் மரங்களை பார்க்க ஆரம்பிச்சுது.

 

எனக்கோ.. அட ஏண்டா சிறீலங்கா என்று சொன்னன்.. என்று ஆகிச்சு. அப்புறம் அவரே.. அட நீர் சிறீலங்காவில படிச்சிட்டு இங்க வந்தனீரே... என்றார் ஒரு இழக்காரத் தொனியில். அதோட நிற்காமல்.. அப்ப ஏன்.. உமக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் என்றீர் என்றார். நான் நிலைமையை சுதாகரிச்சுக் கொண்டு.. சொன்னன்.. நான் கொழும்பில இருந்திட்டு தான்.. இஞ்ச வந்தனான் என்று. உடன அவரின் முகத்தில் இப்போ மீண்டும் கொஞ்சம் பழைய புத்துணர்ச்சி.. திரும்ப ஆரம்பிச்சுது.

 

அப்படியே.. கொழும்பில எங்க என்றார். நான்.. கொல்பிட்டி என்றேன். அவ்வளவும் தான்.. கொஞ்சம் எனக்குக் கிட்டவா நகர்ந்து இருந்து கொண்டு.. அப்ப அங்க எந்த யுனில படிச்சனீர் என்றார். நான்.. கொழும்பு என்ற. கொழும்பே. அங்க என்ரர் பண்ணுறது கஸ்டம் என்ன... என்றார். நான்.. விடுவனா இந்தச் சந்தர்ப்பத்தை.. ஆம் என்றேன்.. பிகருக்கும் கேட்க.

 

இதற்கிடையில்.. பிகரு.. ஒருக்கா என்னை திரும்பிப் பார்த்து புன்னகைச்சும் விட்டிச்சுது. நானும் பதிலுக்கு புன்னகைச்சு விட்டன். எனக்கோ.. மனசெல்லாம்.. ஒரு வித புத்துணர்ச்சி.. பெருகி.. வழிஞ்சு ஓடிக்கொண்டிருந்திச்சு.

 

அவரோ விடுவதாக இல்லை. மீண்டும்.. கேட்கத் தொடங்கினார். அங்க படிச்சிட்டு.. அப்ப இங்க என்ன படிக்க வந்தனீர் என்றார். நான்.. பிடிபடாமல்.. மேற்படிப்பு என்றேன். அவருக்கு அது விளங்கிச்சோ இல்லையோ.. ஓகே என்றார். அப்புறமா...இங்க.. என்ன பாடம் படிச்சனீர் என்றார். நான் விஞ்ஞானம் (சயன்ஸ்) என்றேன். விஞ்ஞானமோ... அப்ப நல்லது... இவாவுக்கு.. கெமிஸ்ரி தான் பிரச்சனை. நீர் கெமிஸ்ரி சொல்லிக் கொடுப்பீரே என்றார். எனக்கோ மீண்டும்.. கூட்டுப்புழுவுக்குள் இருந்து கிளர்ந்தெழுந்து.. பட்டாம்பூச்சிகள் பறந்து திரிவது போல.. மனசெல்லாம் மகிழ்ச்சி. தோல் எல்லாம் அந்தக் குளிரிலும்.. ஒரே புல்லரிப்பு.

 

நான் மெளனமாக என் புல்லரிப்பில் பூரித்துப் போய் இருக்க.... சிறிது மெளனத்தின் பின் மீண்டும் அவரே தொடர்ந்தார். தம்பி.. குறை நினைக்காதையும் கண்ட இடத்திலும் வைச்சுக் கேட்கிறன் என்று.. இவாக்கு கெமிஸ்ரி தான் முக்கிய பிரச்சனை. மற்சும்.. ஜியோக்கிரபியும் ஓரளவுக்குச் செய்வா. மாட்டன் என்று சொல்லாமல் படிப்பிப்பீரே தம்பி என்றார்.

 

எனக்கோ.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு பக்கம்.. பக்கத்தில.. பிகரு. இன்னொரு பக்கம்.. படிச்ச கெமிஸ்ரில கொஞ்சம் தான்.. மனசில நிற்குது. மிச்சம் மறந்து போயிட்டுது என்ற பிரச்சனை. மனசோ.. சமாளிச்சிடடா மச்சி.. எப்படியாவது சமாளிச்சு வெளிய வந்திடு.. பிகரு மட்டும் பத்திரம்.. என்றிச்சுது. அங்கிள்.. அது வந்து.. நான்.. தொடர்ந்து படிக்கிறதால.. ரியூசன் எடுக்க நேரம் வருமோ தெரியல்ல... என்றேன்.

 

ஐயோ தம்பி எங்களைக் கைவிட்டிடாதையும்.. என்று கையைப் பிடிச்சு.. காலில விழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்தார். பார்க்கப் பாவமாக இருந்தது. இப்போ.. மனதில் பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகள் எல்லாம் இறக்கை களைத்து.. முருக்கை மரத்தில் இளைப்பாறப் போனது போல.. என் மனதில்.. முன்னர் இருந்த.. பூரிப்பின் அளவும் குறைந்து அவர்கள் மீது.. பரிவாக அது மாறி இருந்தது.

 

அங்கிள்.. டோண்ட் வொறி...என்னால முடியாட்டிலும்.. உங்களுக்கு உதவி செய்யுறன். எனக்கு தெரிஞ்ச ஆக்களிட்ட கேட்டு.. ஒரு நல்ல ரீச்சர் பிடிச்சுத்தாறன் என்றேன். சரி தம்பி பறுவாயில்லை. அப்ப உம்மட போன் நம்பரைத் தாரும்.. பிறகு அடிச்சுக் கதைக்கிறனே என்றார். நானும்.. என் போன் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு.. பாவம்.. உதவத் தான் வேண்டும்.. பிகருக்காக எண்டு இல்லாட்டிலும்.. கல்வி மேல.. இவ்வளவு அக்கறையா இருக்கிற ஒரு தமிழனுக்கு உதனும் என்ற முடிவோடு விடைபெற ஆயத்தமானேன்.

 

அதுவரை மெளனமாக இருந்து நடக்கிறதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிகரு.. நான் புறப்படக் கிளம்பியதும்.. சிறிது புன்னகைத்தபடி.... பாய் அண்ணா என்றிச்சுது.

 

எனக்கோ.. அண்ணா என்றதைக் கேட்டதும்.. மனசில பறந்த பட்டாம்பூச்சிகள் எல்லாம் ஒரே நொடியில் செத்து விழுந்தது போல இருந்திச்சு. நாடி நரம்பெல்லாம் ஓய்ஞ்சு இரத்தம் அந்தக் குளிரோடு சேர்ந்து விறைச்சது போல ஆச்சுது.  இருந்தாலும்.. உதவி செய்யனும் என்ற அந்த எண்ணம் மட்டும் குறையாமல் விடைபெற்றுச் சென்றேன்.

 

சிறிது நாட்களின் பின்னர் அவராகவே போன் பண்ணி கேட்ட இடத்தில்.. ஒரு ஆசிரியரை ஒழுங்கும் பண்ணிக் கொடுத்தேன். அதுக்கு நன்றிக்கடனாக.. இப்போ.. பார்க்கில் என்னைக் கண்டால் தானும் கூட ஓடி வருவார். ஆனால்.. பிகரு.. மட்டும் தங்கச்சியானது.. மனதின் ஒரு மூலையில்... வலியாக... இருந்து கொண்டே இருந்தது. :lol::icon_idea:

 

(நிஜம் + கற்பனை)

Link to comment
Share on other sites

ஃபிகர் எடுத்த உடனேயே அண்ணா சொன்னதால் ஏற்கனவே புக் ஆகிவிட்டது என்று அர்த்தம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் அண்ணா என்று கூப்பிட்டவர்கள் பிற்காலத்தில் சிலருக்கு மனைவியாகவும் காதலியாகவும் வந்திருக்கினம். அதன் பிறகு சிலருக்கு கொடூர பத்திரகாளியாகவும் வந்திருக்கினம். எதுக்கும் மனதினைத்தளர விடாதே நெடுக்கு.

Link to comment
Share on other sites

முதலில் அண்ணா என்றுதான் தொடங்குவினம் . :icon_mrgreen: .மீண்டும் வடை போச்சா .

அப்பாவே கூப்பிட்டு டியுசன் சொல்லி கொடுக்க கேட்குமளவில் அப்பாவி லுக்கா :lol:

எழுதுதியவிதம் நன்றாக இருந்தது .

Link to comment
Share on other sites

எல்லாம் கற்பனை என்று நம்பி துலைக்க வேண்டி இருக்கு இறைவா ..

அருமை கதை நெடுக்கு அண்ணே ..

Link to comment
Share on other sites

சி... இந்த நெடுக்கும், சுண்டலுக்கும்  தான் ஒண்ணும் வாய்கிதில்லையே  :(  :D

 

கதை நகர்த்திய விதம் அருமை!!

Link to comment
Share on other sites

இது வஞ்சனை அலை அக்கா நாங்களும் இருக்கிறம் .....இசை முணுமுணுப்பு :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமும்.. கருத்தும் நல்கிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. :)

Link to comment
Share on other sites

பார்க்கில இருந்த பிகர் மேல படத்தில இருக்கிற பிகர் அளவுக்கு வருமா  ??  :huh:
 
கலயாணத்திற்கு முன் பிகர் எல்லாம் சுகர் மாதிரி. (sugar)
பிற்பாடு அது சுகர் அல்ல பகர். (bugger)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கர், அப்பாவோட நிக்கிற பெண்ணு, உங்களைப்பாத்து 'அத்தான்' என்றா கூப்பிடும்? :icon_idea:

 

எதுக்கும் நேரம் கிடைக்கிறபோது, அப்பாவும் ஓடிக்களைச்ச பிறகு, 'தங்கச்சியையும்' கூட்டிக்கொண்டு ரெண்டு ரவுண்டு ஓடிப்பாக்கிறது! :D

 

அதுக்குப் பிறகு, உங்களை முதல்ல கண்டதிலேயிருந்து, என்னவோ எனக்கு 'நித்திரை' வாறது நல்லாக் குறைஞ்சு போட்டுது எண்டு துவங்க வேண்டியது தானே! :o

 

தூண்டில் காரன், தூண்டிலைப்போட்டிட்டு எவ்வளவு நேரம் குந்திக்கொண்டிருக்கிறான்? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூண்டில் காரன், தூண்டிலைப்போட்டிட்டு எவ்வளவு நேரம் குந்திக்கொண்டிருக்கிறான்? :icon_idea:

 

பார்த்தமா.. சிரிச்சமா.. பாய் சொன்னமா என்றிருக்கிற விசயத்தில எல்லாம் சலனப்படக் கூடாது.. புங்கையண்ணா. அப்புறம் சிக்கலில் சிக்க வைச்சிடும். :):lol:

 

கருத்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே  பார்த்தன்

நம்ம தம்பியாச்சே

ஒரே ரத்தம்.......... :wub:

 

இந்த கதையை  வாசித்தபோது.....

தமிழரின் ஒரே சொத்து  படிப்பு

அதற்காக

எவரிடமும் கையேந்த தயாராக  இருக்கும் தமிழர்......

அந்த அப்பாவும்

பெண்ணும் பெரும் அப்பாவியாக எம்முன்

ஆனால் அவர்களது குறிக்கோள்........ :icon_idea:

 

நன்றி  தம்பி

கதைக்கும் நேரத்திற்கும்........

Link to comment
Share on other sites

அதுக்கு அவர் அப்ப இதுக்கு முதலில் எங்க படிச்சனீர் என்றார். நான் அதுக்கு சிறீலங்கா.. என்றேன். அவ்வளவும் தான் அவரின்.. மூஞ்சியில் ஈயாடவில்லை. முகம் மலர்ச்சி இழந்து கறுத்துப் போனது. அதுவரை என்னை அடிக்கடி.. கடைக்கண்ணால் பார்த்திட்டு இருந்த பிகரும்.. வெறிச்சு.. இலைகள் உதிர்த்திருந்த.. பார்க் மரங்களை பார்க்க ஆரம்பிச்சுது.

கற்பனையோ! உண்மையோ! கதை பளிச்சென்று ஒரு உண்மையை உணர்த்தி நிற்கிறது. :icon_idea:

சிறீலங்கா .. என்றால் கொழும்பைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் கலாச்சாரம் வேறு. கொழும்பு, லண்டன் என்றால்! இங்கு நாலு பிகருடன் கூடிப்பழகும் வாய்ப்புகள் நிறைந்த இடமாகும். பிகருகளை ரசிக்கலாம். ரசித்ததை அவர்கள் அனுமதி இல்லாமலே ருசிக்கலாம். இந்த வாய்ப்புகளை பெறமுடியாத பெடியள் என்றால் காஞ்ச மாடு கம்பிலை விழுந்ததுபோல் விழுந்துவிடுவார்களோ என்கிற பயம்தான், அப்பனுக்கும் மகளுக்கும் ஏற்பட்டதோ??. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையோ! உண்மையோ! கதை பளிச்சென்று ஒரு உண்மையை உணர்த்தி நிற்கிறது. :icon_idea:

சிறீலங்கா .. என்றால் கொழும்பைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் கலாச்சாரம் வேறு. கொழும்பு, லண்டன் என்றால்! இங்கு நாலு பிகருடன் கூடிப்பழகும் வாய்ப்புகள் நிறைந்த இடமாகும். பிகருகளை ரசிக்கலாம். ரசித்ததை அவர்கள் அனுமதி இல்லாமலே ருசிக்கலாம். இந்த வாய்ப்புகளை பெறமுடியாத பெடியள் என்றால் காஞ்ச மாடு கம்பிலை விழுந்ததுபோல் விழுந்துவிடுவார்களோ என்கிற பயம்தான், அப்பனுக்கும் மகளுக்கும் ஏற்பட்டதோ??. :blink:

 

அண்மையில்.. உறவுக்காரர் ஒருவரின் புலம்பெயர் வாரிசுப் பெண். அவருக்கு ஊரில் அவர்களின் தூரத்து உறவில் ஒரு பையனை பார்த்தார்கள். இவாவும் சிறீலங்கா போய் வந்த போது அந்தப் பையனோடு சாதாரணமாகப் பழகி இருக்கிறா. அவர் இப்போது.. மருத்துவத்துறை முடிச்சுவிட்டார் (யாழில்). பெற்றோர் பெண்ணிடம்.. அவனை கட்டிறியா என்று கேட்க.. மாட்டன் பதிலாம். பெற்றோர் அதோட அந்தப் பேச்சை கைவிட்டு விட்டார்கள்.

 

திருமணம் என்பது அவரவர் சுய விருப்பம். ஆனால்.. அந்தச் சுய விருப்பில் என்னென்ன விடயங்கள் செல்வாக்குச் செய்கின்றன என்பதில்.. பல காரணிகள் தங்கி உள்ளன.

 

நன்றி பாஞ்ச். இந்தக் கதைக்குள் எங்களின் சமூக நடத்தைகள் பலவற்றை ஒளிச்சு வைச்சிருக்கிறன். அதில் ஒன்றை அடையாளம் கண்டிட்டீங்க. :):D

 

நன்றி விசுகு அண்ணா. நீங்களும் இன்னொன்றை அடையாளம் கண்டிருக்கிறீங்க. பிற உறவுகளும் கண்டிருக்கிறார்கள். ஆனால் அநேகர்.. நேரிடையாக.. பிகரை பற்றித்தான்.. சிந்தித்திருக்கிறார்கள். பிகர் தானே அங்கு முக்கியப்பட்டுள்ளது. அது அவர்களின் குற்றமும் அல்ல. எங்களின் தவறும் அல்ல. :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உப்பவும் 18 வயசுக்கு குறைவான ஏ எல் படிக்கிற பெட்டை கேட்குதோ :o ....பெட்டை சுமார் ஆனால் அண்ணா என்டு கூப்பிட்டுட்டுது என்டு கவலை :rolleyes: ஜயோ,ஜயோ எங்க போய் முட்டிறது :lol: என்டு தெரியேலையே :D
 
கதை எழுதின விதம் சுப்பராய் இருக்குது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஒரு டவுட் வருது, :unsure:  அந்தப் பெட்டை இவரை அண்ணா எண்டு கூப்பிட்டதா இல்லாட்டி அங்கிள் எண்டு கூப்பிட்டதா? :rolleyes:  கூடுதலாக அங்கிள் எண்டுதான் கூப்பிட்டிருக்கும்! :D

 

ஸ்டோரி கலக்கல் ரகம்!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பவும் 18 வயசுக்கு குறைவான ஏ எல் படிக்கிற பெட்டை கேட்குதோ :o ....பெட்டை சுமார் ஆனால் அண்ணா என்டு கூப்பிட்டுட்டுது என்டு கவலை :rolleyes: ஜயோ,ஜயோ எங்க போய் முட்டிறது :lol: என்டு தெரியேலையே :D

கதை எழுதின விதம் சுப்பராய் இருக்குது

நாங்க எப்பவும் உடலாலும் மனசாலும் 18 தான்.சிலருக்கு பொறமை.ஆனாலும் பிகர் பார்ப்பமே தவிர பிடிக்கிறதில்ல. சுமார் பிகர் என்றாலும் அண்ணான்னு கூப்பிட்டால் தப்புத்தான்.அம்மாக்கு வயசானா பாட்டின்னு கூப்பிட முடியாதில்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஒரு டவுட் வருது, :unsure: அந்தப் பெட்டை இவரை அண்ணா எண்டு கூப்பிட்டதா இல்லாட்டி அங்கிள் எண்டு கூப்பிட்டதா? :rolleyes: கூடுதலாக அங்கிள் எண்டுதான் கூப்பிட்டிருக்கும்! :D

ஸ்டோரி கலக்கல் ரகம்!!! :)

இன்னும் அங்கிள் ஆகல்ல.உங்க மகள் பிறந்து வளர்ந்து யாழ் வந்தால் அப்படி கூப்பிடலாம்...ஒரு வேளை.:)

×××××××××××××××××××××××××××××××

நன்றி இருவர் கருத்துக்கும்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது. படிக்க உதவி கேட்பவர்களுக்கு மனம் சஞ்சலப்படாமல் உதவி செய்யவேண்டும். அதுதான் நல்லது...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது. படிக்க உதவி கேட்பவர்களுக்கு மனம் சஞ்சலப்படாமல் உதவி செய்யவேண்டும். அதுதான் நல்லது...! :D

 

நன்றி சுவி அண்ணா. :)

 

உதவி செய்ய... மனசு இடம் கொடுத்தாலும்.. சூழ்நிலை.. காலம் இடம்கொடுக்கனுமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அம்மா. ;)

 

(நிஜமாவே அம்மா இதைப் பார்த்தா.. அருமை என்று சொல்லி இருக்கமாட்டா. எருமை... உன்னை படிக்க அனுப்பினனா.. கதை கவிதை எழுத அனுப்பினனா என்று தான் விழும்.) :D:lol:

Link to comment
Share on other sites

கதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் , நெடுக்கர் தொடர்ந்து எழுதுங்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோம்ஸ் அண்ணா உங்கள் கருத்திற்கு. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.