Jump to content

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிகாரியிடம் நாடு இருக்கும் வரை கடும் அதிர்ச்சியைதான் இந்தியர்கள் காட்ட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உடையை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர்" இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

devyani-khobragade1_CI.jpg

அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மீதான அவமரியாதைக் கைது நாட்டு மக்களிடயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கர்கள் எப்போதுமே பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் உஷாராக, கவனமாக இருப்பார்கள் என்பதால் அதில் இந்தியா  கை வைத்துள்ளது. இது அமெரிக்காவை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று இந்தியா கருதுகிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகமே இதைச் செய்துள்ளது. அவை அத்தனையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது. தூதரகங்களுக்கான மது, உணவுக்கு தடை அதேபோல அமெரிக்க தூதரகம், இந்தியாவில் உள்ள பிற துணைத் தூதரகங்களுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள், உணவுப் பொருட்களுக்கான அனுமதியையும் நிறுத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் விசா விவரத்தை சேகரிக்க உத்தரவு அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவிடம் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியப் பெண் தூதரக அதிகாரியின் உடையை களைந்து  அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர் - இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

 01:49

விசா மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியப் பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவின் ஆடையை அவிழ்த்து அதிகாரிகள் சோதனையிட்ட செயல் இரு நாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடையை அவிழ்த்து சோதனையிட்டது மட்டுமல்லாமல், அவரை போதைப் பொருள் குற்றவாளிகளுடன் அமர வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து செல்வதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த செயலுக்கு வழக்கம் போல கண்டனத்துடன் இந்தியா அமைதி காத்து வருகிறது. கடுமையான எச்சரிக்கையோ அல்லது அதிரடி நடவடிக்கை எதையுமோ இதுவரை இந்தியா எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இந்திய அளவில் ஏற்பட்டு இருக்கின்றது.

தேவயானியிடம் அமெரிக்க அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைக்கான மாதிரியை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் தேவயானியின் ஆடையை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்றுள்ள அமெரிக்க எம்.பிக்கள் குழுவை சந்திக்க லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனனும் மறுத்துள்ளனர்.

தேவயானி விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியன்னா உடன்படிக்கையின் 40வது பிரிவை அமெரிக்கா மீறியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது. தேவயானி ஒரு தூதரக அதிகாரி என்பது தெரிந்தும் கூட இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. அதிர்ச்சி அளிக்கிறது. வேண்டும் என்றே அவர்கள் இப்படி நடந்துள்ளனர் என்றனர். 1999ம் ஆண்டு முதல் ஐஎப்எஸ் அதிகாரி தேவயானி. அவர் தூதரக அதிகாரி என்றாலும் கூட அவருக்குப் சட்டப் பாதுகாப்பு சிறப்பு சலுகையைத் தர முடியாது என்று அமெரிக்கா திமிராகப் பேசி வருகிறது. மேலும் உயர் மட்ட அளவிலிருந்து வந்த உத்தரவுப்படியே தாங்கள் நடந்து வருவதாகவும், நியூயார்க் போலீஸார் கூறுகிறார்கள்.

இந்திய பெண் தூதர் கைதுக்கு எதிர்ப்பு.. அமெரிக்க எம்.பிக்களைச் சந்திக்க ராகுல், மோடி மறுப்பு

இந்தியத் துணைத் தூதர் தேவ்யானியை அமெரிக்கப் போலீஸார் அடாவடியாக கைது செய்து, கைவிலங்கிட்டும், ஆடைகளைக் களைந்தும் சோதனை செய்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் ரத்து செய்து விட்டனர். ஆனால் இந்தக் காரணத்திற்காகத்தான் ரத்து என்று ராகுல் காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றப் பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்கவில்லை என்று அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், துணைத் தூதருக்கு ஏற்பட்ட அவமானத்தால்தான் தான் அமெரிக்க குழுவை சந்திக்கவில்லை என்று வெளிப்படையாக மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், நமது நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவர்களுக்குத் துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பை நான் நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இதே குழுவை, இதே காரணத்திற்காக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் சந்திக்க மறுத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்க்வீகெர்ட், ராபர்ட் உடால், மெடலின் போர்டெல்லா ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு டெல்லி சென்றுள்ளது. இந்தக் குழுவைச் சந்திக்கத்தான் இந்தியத் தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தனது அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திருப்பி அளிக்குமாறு இந்திய அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100469/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

Link to comment
Share on other sites

இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

 

 

 

குண்டை கொண்டு வந்து போட்டு விடுமோ என பயமாக உள்ளது. சில வேளை 3ம் உலக யுத்தம் கூட உருவாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வீடியோவில் மன்மோகன் சிங் என்னத்தை செய்கிறாரோ அதுபோல தான் இந்தியாவின் கடுமையான நடவடிக்கையாக இருக்கும்  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

 

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள். 

 

Link to comment
Share on other sites

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள்.

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு காங்கிரஸ் பெரும்புள்ளியின் கையாளாகத்தான் இந்தப் பெண்மணி இந்தப் பதவியைப் பெற்றிருக்க வேண்டும்.  செய்த பிழையை விசாரிக்க வேண்டியது அமெரிக்கப் பொலீஸாரின் கடமை.  சும்மா முகத்துக்கு அஞ்சி இதையெல்லாம் விடமுடியாது. உவவை பெரிய பதவியில் வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பியது காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறு. அதற்காக அமெரிக்காவுடன் ராஜதந்திர இழுபறிகளில் காங்கிரஸார் ஈடுபடுவது இந்தியாவுக்கு நல்லதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

 

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..
Link to comment
Share on other sites

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..

அந்தக் கொடுமையைத் தாங்கின ஏட்டய்யாவுக்கு நிவாரணம் குடுப்பினமா?? :blink::D

Link to comment
Share on other sites

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

ஆமாம் நானும் கொஞ்சம் கெட்டு போய்க்கொண்டிருக்கிற மாதிரி ஒரு பீலிங் .............. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

 

 

நீங்கள் சொன்னது சரி. அவர் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பான ரீதியில் ஒருவரை அமெரிக்காவுக்குள் கொண்டுவந்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதற்காகத்தான். மாறாக இந்தியர் என்பதற்காக அல்ல. 

 

அதுமட்டுமல்லாமல், இந்த அதிகாரியின் மேல் இந்தியாவிலேயே சட்டத்திற்குப் புறம்பான வகையில் சொத்துச் சேர்த்ததற்காக வழக்கொன்றும் பதியப்பட்டிருக்கிறது. தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாயன்படுத்தி இவ்விரு குற்றங்களையும் இவர் புரிந்திருக்கிறார் என்று இந்தியச் செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிற்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

 

 

 

இவர் சட்டத்திற்குப் புறம்பான ரீதியில், தவறான வேலைவிசா ஒன்றின்மூலம் ஒருவரை வேலைக்குக் கொண்டுவந்து, அவருக்கு மணித்தியாலம் ஒன்றிற்கு 4 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தையே வழங்கி வேலை வாங்கியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் இந்தியாவில் பெயர் பெற்ற பெண் உரிமை வாதியாம் !!! இது எப்படியிருக்கு???

Link to comment
Share on other sites

சர்வதேச குற்ற்வாளிகளான விஜய் நம்பியார், கமேஸ் சர்மா, சிவசங்கர் மேனன் போன்றவர்களை கொண்ட நாடு, தேவயானியை கொண்டிருப்பதில் எந்த வெக்ககேடும் இல்லை. இவர்கள் பிரபாகனை ஏமாற்றியது மாதிரி எல்லோரையும் ஏமாற்றிவிட்டத்தாக நினைத்தால் அவர்கள் பார்த்து வைத்திருப்பார்கள் என்றதை புரிந்து கொள்ள வேண்டும். காவாட்டில் துப்பல் வங்கிய படி பயணம் செய்த சுப்பிரமணிய சுவாமியால் மகிந்தா கொடுக்கும் பணத்துக்கு மகிந்தாவை காப்பாற்ற முடியும். இந்த தேவயானி தானும் யாருக்காவது பணம் கொடுத்து பார்க்க வேண்டியதுதானே.

எத்தனைதரம் இந்திய ராஸ்ரபதி அபுதுல் கலாமை சோதனை செய்தார்கள். அப்போது எதுவும் செய்யாமல் தட்டிகழித்த்தால்தான் இது வந்தது. 

 

அமெரிக்க ரேடியோ செய்திகளின் படி இந்தியா அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளுக்கு ஜெனிவா மகாநாட்டின் கடமைகளை மறுத்துவிட்டத்தாக குற்றம் சாட்டப்படுகிறது. குற்றவாளியை தண்டித்தற்காக குற்றம் இழைக்காத அதிகாரிகளை இந்தியா தண்டிக்கிறது. இது இஹ்தியாவில் முசோலினியின் ஆட்சி நடைபெறுவதாலாகும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

Link to comment
Share on other sites

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

 

என்னத்தை… விட்டு… என்னத்தை… பிடிச்சு…!!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ

இந்தியாவில் பெண்களை  ரொம்ப நன்றாக நடாத்துவது  போல்........... :(  :(

Link to comment
Share on other sites

இந்தியா இப்படி துள்ளுவது ஒரு விதத்தில் நல்லது...அப்போது தான் இந்த பிரச்னை இன்னும் பெரிதாக எல்லாராலும் பார்க்கப்படும்...பின்

எல்லா நாடும் அங்கு உள்ள இந்திய தூதரகங்களை கவனித்தால் அவர்கள் செய்யும் தில்லு முள்ளு எல்லாம் வெளியில் வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவாக, உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதி முறைகளுக்குள் அடங்கும் என நினைக்கிறேன்!

 

பொதுவாகப் புதிதாக ஒருவரை, மற்றவர்கள் இருக்கும் சிறைக்குள் அனுமதிக்கும் போது, ஏதாவது போதை வஸ்துக்கள், மற்றும் தடுக்கப்பட்ட பொருட்களை, உள்ளே எடுத்துச் செல்லாமல் தடுப்பதற்காக, (In the body cavity) பெண் காவலர்களாலேயே செய்யப்படும் சோதனையாகும்! 

 

இதில் 'இந்தியர்' என்பதற்காக, ஏன் விதிவிலக்குக் கொடுக்கப்படவேண்டும் எனத் தெரியவில்லை! :o

 

இந்தியர்கள் பொதுவாக, உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளுவது வழமை தானே!

 

லட்சுமியின் படத்தில் 'நீச்சலுடை'  அணிந்ததற்காக. சிட்னியில் அண்மையில் துள்ளினார்கள்! :wub:

 

267625-india-australia-fashion-protest.j

 

நான் இலட்சுமியை அவமதித்து சரியென்று சொல்ல வரவில்லை!

 

இந்தியாவில் சாராயத் தவறணையில், கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் 'லட்சுமி' படம் இருக்கிறது தானே?

 

அங்கு ஏன் இந்தியக்கொடியை இவர்கள் எரிப்பதில்லை? :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய போன்ற நாடுகளில் சிறைகளில் அரசியல்வாதிகள், நடிகர்கள், சாமிமார்கள் இருப்பதால் அவர்களோடு இவர் போன்ற குற்றவாளிகளை அடைக்கலாம். என்ன செய்வது அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களே பெரும்பான்மையாகக் குற்றவாளிகளாக உள்ளனர் போலுள்ளது. அதனால் தான் அவர்களோடு அடைக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

டெல்கி பாலியல் வழக்கை PBS ல் ஒருதடவை ஆராய்ந்தார்கள். இந்தியாவில் பாலியல் கடுப்பு நோய் தலைவிரித்து ஆடுவதாக முடிவுக்கு வந்தார்கள். தமிழ் படங்களை பற்றி பிரஸ்தாபித்தார்கள். அங்கு Rape காட்சி படங்கள் சக்கை போடு போடுமென்றார்கள். இந்துச் சாமிகள் தம்பாடு அதே நேரம் இந்த இந்திய சாமிகளும் தம் பாடு.

 

இந்தியாவை மதிக்க  வேண்டிய நாடுகளான சீனா, பாகிஸ்த்தான்,  இந்தியாவால் இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை காண்கிறார்கள். இதனால் எல்லையில் உபத்திரவம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் இந்தியாவுக்காக புலிகளை அழிக்க உதவிவிட்டு இந்தியாவால் இந்து சமுத்திரத்தில் ஏதாவது செய்ய முடியுமா எனக் காத்திருந்தார்கள். இந்தியாவால் சீனாவுடன் இந்து சமுத்திரத்தில் வாலாட்ட முடியவில்லை.

 

இனி அவர்கள் இந்து சமுத்திரத்தில் தாம் காலூண்ற இலங்கையை நேராக கையாள முயல்வார்கள். அது தமிழருக்கு இழப்பாகவும் இருக்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

இலங்கையை மேற்கு நேரடியாக கையாளாமல் இருக்க, இந்தியாவுக்கு இலங்கைத்தீவில் இப்போது ஒரு "பிரச்சினை" தேவைப்படுகிறது. ஒரேயடியாக மௌனிக்கப்பட்ட காரணம் இப்போது தெரியவருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.