Jump to content

மறுபக்கம் - சிறுகதை


Mayuran

Recommended Posts

மீண்டும் சிறுகதை எழுத ஆர்வம் வந்துள்ளது. இக் கதை எனது 20வது வயதில் எழுதப்பட்டது. கருத்தியல்ரீதியில் பிழைகள் இருக்கலாம். சரி பிழைகளை சுட்டிக்காட்டடினால் புதிதாக மீண்டும் எழுத முயற்சிக்கும் எனக்கு உந்துசக்தியாக இருக்கும். நன்றி உறவுகளே. மறுபக்கம்

 
காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை அதிகரித்து வைத்து விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள். நாம் வேகமாக இயங்குகிறோமோ இல்லையோ சுவிஸ் நாட்டுக் கடிகாரங்கள் வேகமாகத்தான் தமது கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன. அடுத்து 10 நிமிடமும் 10 வினாடிகளாகக் கரைய, துயிலெழுப்பி மீண்டும் அலறியது. காயத்திரிக்கு இன்றைக்கு வேலைக்குப் போகாமல் இழுத்து மூடிக் கொண்டு படுக்க வேண்டும் போல் இருந்தது. இது தினமும் வரும் எண்ணம்தான். வெளிக் குளிரை நினைத்தபோது உடலெல்லாம் விறைத்தது. என்ன செய்வது புலம் பெயர் வாழ்வில் வேலை தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்தாள். குளியலறை சென்று காலைக்கடன்களை முடித்துக் கொண்டு தொட்டிலை எட்டிப் பார்த்தாள். பிறந்து ஏழு மாதமேயான பிரணவன் தானும் தயார் என்பது போல் சிரித்துக் கொண்டுகிடந்தான்.
 
baby.jpg
உண்மையிலே புலம் பெயர்ந்த நாடுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் மிகவும் பாவம் செய்தவர்கள்.
அந்த அதிகாலைப் பொழுதில் அடுப்படி வேலைகளை முடித்துக் கொண்டு. குழந்தைக்குரிய பால், தேநீர் போன்றவற்றையும் போத்தலில் நிரப்பிக் கொண்டு, குழந்தைக்கும் குளிரிலிருந்து பாதுகாக்கக் கூடிய உடைகளை அணிவித்துக் கொண்டு புறப்படத் தயாரானாள். பேருந்தில் சென்றால் அரை மணிநேர தூரத் தொலைவிலுள்ள அவளது குடும்ப நண்பியான சாந்தியக்கா வீட்டில் பிள்ளையை விட்டு விட்டுத்தான் வேலைக்குச் செல்ல வேண்டும்.
 
"சரியப்பா நான் வேலைக்குப் போட்டு வாறன். நீங்களும் எழும்பி வெளிக்கிடுங்கோவன். இண்டைக்கு ஏழு மணிக்கெல்லே வேலை இப்பவே ஆறு மணி" என்று சுரேசையும் எழுப்பி விட்டாள். சுரேஸ் எழும்பிக் காலைக்கடன்களை முடிக்க மலசலகூடம் செல்ல காயத்திரி கதவைத்திறந்து வெளியே புறப்படச் சரியாய் இருந்தது. தூக்கு மேடைக்குச் செல்லும் கைதி போலப் படபடப்புடன் வாயிற் கதவைத் திறந்தாள். சில்லென்று அடித்த குளிர்காற்று முகத்திலடித்தது கன்னங்களையும் காதுகளையும் குளிர்வித்தது. எதிர்பார்த்த பழகிய குளிர்தான். இருந்தாலும் மெல்ல மெல்லக் குளிர்பட முகமெல்லாம் எரிந்தது. கைப்பையில் இருந்த தொப்பியை எடுத்து அணிந்து காது இரண்டையும் மறைத்துக் கொண்டாள். தலைக்கு மேல்ச் சென்ற வெள்ளம் கழுத்து வரை இறங்கியது போல் இருந்தது.
 
winter_im_dorf.jpgகுழந்தை வண்டிலைத் தள்ளிக் கொண்டு பேருந்து நிலையம் வருவதற்கிடையில் குளிர் அவளை வாட்டி எடுத்துவிட்டது. "கூழோ, கஞ்சியோ குடிச்சாலும் எங்கடை நாடு சொர்க்கம்தான்." என அவள் மனதுக்குள் எண்ணிக் கொண்டு. "அங்கை உள்ளவை நினைப்பினம் அவைக்கென்ன அவை வெளிநாட்டிலை ராஜ வாழ்க்கை வாழினமெண்டு. இஞ்சை நாங்கள் வாழிற வாழ்க்கை எப்பிடிப்பட்டது எண்டு ஆருக்குத் தெரியும்?" என எண்ணியவாறு நின்றவள் பேருந்து வர வண்டிலையும் ஏற்றி தானும் ஏறிக் கொண்டாள்.
 
வண்டிலை ஏற்றும் போதுதான் "காயத்திரி உனக்கென்ன? பிள்ளை வண்டில் ஏத்திறதுக்கு இப்ப பிரச்சனையே இல்லை. றாம், பஸ் எல்லாம் வண்டில் ஏத்தக் கூடி மாதிரி நல்ல வசதியாய் வந்திருக்கு, என்ரை ரண்டும் சின்னனா இருக்கேக்கை எல்லாத்துக்கும் படிதானே. ஆரன் உதவி செய்தால்த்தான் ஏத்தலாம். சுவிஸ்காரர் சாதாரணமாக உதவி செய்ய மாட்டினம். கேட்டால்த்தான் உதவி செய்வினம். அப்ப வந்த புதிசு எனக்கு டொச்சும் தெரியாது. அப்பப்பா வண்டில் ஏத்தி இறக்கிறதுக்கு மட்டும் நான் பட்டபாடு" எனச் சாந்தியக்கா அடிக்கடி சொல்வது ஞாபகத்துக்கு வந்தது.
பேருந்து புறப்பட மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள். பிள்ளை வண்டிலோடு வந்தபடியால் வண்டில் விடுமிடத்துக்குப் பக்கத்திலுள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தாள். அது ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பயணிகள் ஏறி இறங்கும் போது கதவைத் திறக்க காற்று அள்ளி வந்த குளிரை அவள் முகத்தில்த் தெளித்தது. அவளுக்கு ஏன் அங்கே இருந்தோம் என்றாகிவிட்டது. ஒருவாறு சாந்தியக்கா வீடு வந்து பிள்ளையை ஒப்படைத்து விட்டு, அடுத்த பேருந்தில் ஏறி வேலைத்தளம் நோக்கிப் புறப்பட்டாள். ஒருவாறு 7.15க்கு வேலைத்தளத்தை வந்தடைந்தாள்.
 
Zimmermaedchen_banner.jpgதன் வேலைக்குரிய உடைகளை அணிந்து கொண்டு வேலைக்குத் தயாரானாள்.வேலை வேறொன்றுமில்லை. உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதி ஒன்றின் துப்பரவுப் பணிப்பெண். ஓவ்வொரு நாளும் 15 முதல் 20 வரையிலான அறைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும். இலக்கத்தில்த்தான் குறைவே தவிர வேலைக்குக் குறைவேயில்லை. சுரேஸ் அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவான். "வரேக்கை என்ன மாதிரி இருந்தனீர். இப்ப உந்த வேலைக்குப் போய்ப் பல்லும் தலையுமாய்ப் போனீர். பேசாமல் உந்த வேலையை விடுமப்பா" "இன்னும் முடிக்கேல்லையே, கெதியாச் செய்" என்ற பிரெஞ்சுநாட்டு மேற்பார்வையாளரின் அதட்டல்க் குரல்கேட்டு சுயநினைவுக்கு வந்தவள். "இந்த நாய் எப்பவும் இப்பிடித்தான்" என மனதுக்குள் திட்டியவாறு வேலையைத் தொடர்ந்தாள்.
 
பாசல் நகரில் பெரும்பாலான வேலைத்தளங்களில் அதிகமாகப் பணி புரிவது பிரெஞ் நாட்டவர் தான். சுவிசின் எல்லைப் புறத்தில் வசிக்கும் இவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள். இவர்களால் பாசலில் வசிக்கும் சுவிஸ்நாட்டவரும் வெளிநாட்டவரும் படும் தொல்லைகள் ஏராளம். அவர்களது அதட்டலும் அதிகாரத் தோரணையும் எந்தவொரு மானமுள்ள மனிதனாலும் தாங்கிக்கொள்ள முடியாதவை. காயத்திரி மட்டுமென்ன விதிவிலக்கா? அவளும் மனதுக்குள் பொருமியவாறு தன் பணியைத் தொடர்ந்தாள்.
இன்று அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. ஏனெனில் சுரேசுக்கு இவளுக்கு முன்னதாகவே வேலை முடிந்துவிடும். அவன் பிரணவனை சாந்தியக்கா வீட்டிலிருந்து கூட்டிச் செல்வான். அதனால் இவள் வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்குச் செல்லலாம்.
 
ஒருவாறு வேலையும் முடிந்தது. வீட்டுக்குச் சென்று குழந்தை முகம் பார்த்ததும் பட்ட துன்பமெல்லாம் பறந்துபோல் இருந்தது. மேசையைப் பார்த்தாள் காலையில் பிரணவனுக்காகக் கொடுத்துவிட்ட சூப்பிப்போத்தல் அப்படியே இருந்தது. கணவனைக் கூப்பிட்டு விசாரித்தாள். "என்னப்பா குடுத்துவிட்ட பாலும் தேத்தண்ணியும் அப்பிடியே கிடக்கு இவனென்ன குடிக்கேல்லையாமே?" "ஒமப்பா சாந்தியக்கா குடுக்கக் குடுக்க குடிக்கமாட்டனெண்டு அடம்பிடிக்கத் தொடங்கீட்டானாம். அவவும் கனநேரமா முயற்சியெடுத்துக் கொஞ்சம் தானாம் குடிச்சான். அவையைச் சொல்லிப் பிழையில்லையப்பா. அவா தெண்டிச்சுப்போட்டு விட்டிடுவா. நாங்களெண்டா எப்பிடியாவது குடிக்க வைச்சிருப்பம். ஏனப்பா! நான் எந்தினையோ தரம் சொல்லீட்டன். வேலைக்குப் போகாதையும் பிள்ளையைப் பாத்துக் கொண்டிரும் எண்டு. நீர் கேக்கிறீர் இல்லை. என்ன இருந்தாலும் நாங்கள் நாங்கள் எங்கடை பிள்ளையைப் பார்க்கிற மாதிரி வராது." "என்னப்பா எனக்குமட்டுமென்ன பிள்ளையை விட்டிட்டு வேலைக்குபோக விருப்பமே? என்ன செய்யிறது. இந்த நாடுகளிலை ஒராள் உழைச்சுக் குடும்பத்தைக் கொண்டு செலுத்தேலாது. ரண்டு பேரும் வேலை செய்தால்த்தான் ஏதோ இழுபறி இல்லாமல் வாழலாம்." என்று தனது கருத்தை உதிர்த்தாள் காயத்திரி.
 
"என்னவோ நான் சொல்ல வேண்டியதச் சொல்லீட்டன். இனி முடிவெடுக்க வேண்டியது நீர்தான்." எனக் காயத்திரியிடம் பொறுப்பை விட்டு விட்டுத் தொலைக்காட்சியின் முன் போய் அமர்ந்தான்.
காயத்திரியும் இரவுச் சமையலை முடித்து விட்டுப் பிரணவனையும் உறங்க வைத்துவிட்டு, சுரேசுக்கும் தனக்கும் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு வந்து சோபாவில் சுரேசுக்கு அருகில் இருந்தாள். "இண்டைக்குக் கொஞ்ச நேரம் ரீவி பாக்கலாம்." என நினைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள். தொலைக்காட்சியில் தன்னைத் தொலைத்திருந்தவளுக்கு நித்திரை ஊஞ்சலாட்டியது. எழுந்து படுக்கைக்குச் சென்றாள். அவளுக்கிருந்த உடல் அலுப்புக்குப் படுத்தவுடனேயே உறங்கிவிடலாம் போல் இருந்தது. ஆனாலும் அவளுக்கிருந்த மன உளைச்சல் அவளை உறங்கவிடவில்லை. வேலையா? பிள்ளையா? எனப் பலமுறை மனதுக்குள்ப் பட்டிமன்றம் நடத்தி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவள் அசதியில் உறங்கிப்போனாள். துயிலெழுப்பியின் தொல்லையில்லாமல் மறுநாள்க்காலை புலர்ந்தது. உடல் அசதியில் மறுநாள்க் காலை 10.00 மணிவரை உறங்கிவிட்டாள். எழுந்தவள் ஒரு தீர்க்கமான முடிவோடு தெளிவாக இருந்தாள்.
 
பேனாவும் எழுதுதாளும் எடுத்துக்கொண்டு வந்து தன் வேலைத்தளத்துக்குப் பணிமுடிப்புக் கடிதமொன்றை எழுதினாள். எழுதிய கடிதத்தை மீள ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு உறையினுள்ப் போட்டு ஒட்டினாள். ஒட்டிய கடிதத்தை மேசையில் வைத்துவிட்டுத் திரும்பியவளின் கண்களில் அடுத்த மாதம் கட்டவேண்டிய காசுகளின் கூட்டுத்தொகையும் ஊரிலிருந்து காசனுப்பச் சொல்லி வந்திருந்த கடிதங்களும் கண்களில்த் தென்பட்டது. மீண்டும் திரும்பி வேலைத்தளத்துக்கு அனுப்ப வைத்திருந்த பணிமுடிப்புக் கடிதத்தைக் கிழித்துக் குப்பைக்கூடையில்ப் போட்டுவிட்டு, துயிலெழுப்பியை மறுநாள் 5.00 மணிக்கு அலறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வழமையான செயல்களைச் செய்யத் தொடங்கினாள்.
 
இணுவையூர் மயூரன்

நன்றி குருத்து மார்ச் 2003

 
 

 

Link to comment
Share on other sites

முதல் கதை என்று சொல்லியதை நம்பமுடியவில்லை . சம்பவங்களுக்கான கோர்வைகள் சரியாகவே வந்திருக்கின்றன . சம்பவங்களை சொல்லும் பொழுது உங்கள் சிந்தனை செப்படி வித்தைகளும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . ஆனால் அது தொடர் வாசிப்பின் மூலமே கைகூடும் . வாழ்த்துக்கள் மயூரன் ,தொடர்ந்தும் எழுதுங்கள்  :)  :)  .

Link to comment
Share on other sites

வரவுக்கும் கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி கோமகனாரே

Link to comment
Share on other sites

கதையின் நகர்வும் சம்பவ விவரமும் நன்றாக வருகிறது. வாழ்த்துக்கள். மீண்டும் எழுதுங்கள் மயூரன்.

Link to comment
Share on other sites

  • 3 months later...

வரவுக்கும் , கருத்துக்கும், உற்சாகமூட்டலுக்கும் நன்றி சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான் பார்க்கக்கிடைத்தது மயூரன்

 

கதையோடு உறவாடி

இன்றைய  எமது ஐரோப்பிய  வாழ்வியலை

அகதி  வாழ்வின் அவலங்களை

சேர்த்து கோர்த்த விதம் அருமை...... :icon_idea:

 

தொடர்ந்து எழுதுங்கள்

(பிரேஞ்சுக்காறரை குட்டியதற்கு தனியாக ஒருநாள் இருக்கு :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மயூரன். நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து யாழில் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது, மயூரன்!

 

கதையின் நகர்வில், எந்த விதமான தடங்களையும் நான் காணவில்லை!

 

தொடர்ந்து எழுதுங்கள்! :D

Link to comment
Share on other sites

  • 2 years later...
On 31. März 2014 at 7:43 PM, விசுகு said:

தற்பொழுது  தான் பார்க்கக்கிடைத்தது மயூரன்

 

கதையோடு உறவாடி

இன்றைய  எமது ஐரோப்பிய  வாழ்வியலை

அகதி  வாழ்வின் அவலங்களை

சேர்த்து கோர்த்த விதம் அருமை...... :icon_idea:

 

தொடர்ந்து எழுதுங்கள்

(பிரேஞ்சுக்காறரை குட்டியதற்கு தனியாக ஒருநாள் இருக்கு :D )

நன்றி விசுகர். மீளவும் வந்துள்ளேன். முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்தக் கதையை வாசித்தேன் , நன்றாக இருந்தது. என்ன செய்வது நாமெல்லாம் சூழ்நிலைக் கைதிகள்..., எமது பிள்ளைகளுக்கு இவ்வளவு கடினமான வாழ்க்கை இருக்காது என நினைக்கின்றேன்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.