Jump to content

ஐயாயிரம் மார்க் அம்மா!


Recommended Posts

"மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு..."

சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார்.

அந்தக் காரினுள் எல்லோரது முகத்திலும் ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது. இடையிடையே எழும் கோமதியின் விசும்பல் சத்தத்தைத் தவிர, அங்கே அமைதி குடிகொண்டிருந்தது. அதை விரட்டும் முயற்சியில் அந்தக் காரின் சிறிய "ரேப் றெக்கோட"ரில் இருந்து சௌந்தரராஜனின் குரலில் தத்துவப்பாடல்கள் ஈடுபட்டிருந்தன.

வீதியின் இருமருங்காலும் பெரியவர் சிறியவர் என்று வயது வித்தியாசமில்லாமல் மக்கள் தமது அன்றாட அலுவல்களுக்காக விரைந்துகொண்டிருந்தார்கள். "ட்ராம்" வண்டிகள் இரும்புப் பாதைகளின் மேலாக பாம்புகளாக நெளிந்துகொள்ள, அவற்றுடன் போட்டிபோட்டவாறு வாகனங்கள் நெரிசலாக ஊர்ந்துகொண்டிருந்தன.

மஞ்சள் சிவப்பு வெள்ளை வர்ண ஒளியைச் சிந்தியவாறு வலப்புறத்தே அமைந்துள்ள "மக் டொனால்ட்" உணவகம். அதன்முன்னே குறுந்தாடி இளைஞன் ஒருவன் கையில் கிற்றாருடன் ஏதோ பாடிக்கொண்டிருந்தான். அவனின் முன்னால் சிறிய தொப்பியொன்று. அதனுள் சில சில்லறைக் காசுகள்.

சற்றுத்தள்ளி அலங்கோலமாக வெட்டிய சிகை அலங்காரங்களுடன், உடலில் ஆங்காங்கே துளையிட்டு உலோச் செதில்களைக் குத்தியவாறு சில இளைஞர்களும் யுவதிகளும் "பியர்" போத்தல்களுடன் தள்ளாடியவாறு நிற்க, அவர்களைச் சுற்றி சில நாய்கள் கட்டிப் புரண்டு நுகர்ந்து முகர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்குத் தாம் ஒன்றும் சளைத்தவர்களல்ல என்பதுபோல், வஸ் நிலையம் ஒன்றில் ஒரு ஜோடி தம்மை மறந்து உதடுகளில் சுவை தேடிக்கொண்டிருக்க, இவை எல்லாவற்றையும் தாண்டி காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் வரதன்.

அருகே ரவீந்திரன் அமர்ந்திருந்தான். பின் இருக்கையில் ரவீந்திரனின் மனைவி கோமதியும் அவர்களது ஒரேயொரு மகனான சுதனும் இருந்தார்கள். கோமதியின் விசும்பல் ஓய்ந்தபாடில்லை. எதுவும் புரியாமல் தாயைப் பார்ப்பதும் வெளியே நோக்குவதுமாக இருந்தான் சுதன்.

சூரியன் தன் ஒளிக்கதிர்களினூடே வெப்பத்தை அதிகரிக்கத் தொடங்கிவிட்டான். பொழுது மதியத்தை நெருங்கிவிட்டது.

"என்னவாலும் வாங்கவேணும் எண்டால் இங்கை வாங்கிப் போடுங்கோ... மலிவாய் வாங்கலாம்... பேந்து "ஓட்டோ வான்" (Car Road) லை வாங்கேலாது... சரியான விலை..."

காரின் வேகத்தைக் குறைத்தவாறு கூறினான் வரதன்.

அது நகரத்தின் மையப்பகுதி. விதம்விதமான கடைகள் வகைவகையான பொருட்களைக் காட்சிப்படுத்தியவாறு வரிசையாக அமைந்திருந்தன.

"என்னப்பா... தண்ணி என்னவாலும் வாங்கவேணுமே..."

பின்புறம் திரும்பி மனைவியைக் கேட்டான் ரவீந்திரன்.

அவள் கண்களைக் கசக்கியவாறு விசும்பிக் கொண்டிருந்தாள்.

"நான் கேக்கிறனெல்லே.... உப்பிடிச் சிணுங்கினால்போலை எல்லாம் வந்தீடுமே..."

எரிச்சலுடன் கேட்டான் ரவீந்திரன்.

"வெடுக்"கென நிமிர்ந்து சிவந்த விழிகளை உருட்டி அவனை எரித்துவிடுவதைப்போலப் பார்த்தாள் கோமதி.

"உங்களுக்கென்ன... ஆருக்கு என்ன நடந்தால் உங்களுக்கென்ன... எதையாவது வாங்கி வாய்க்கை அடைஞ்சால் போதும்... உங்களுக்கு என்னவாலும் தேவையெண்டால் வாங்கிறதுதானே..."

"ம்... சுதன்கூட விடியவெள்ளண்ணவிலை இருந்து ஒண்டும் சாப்பிடேல்லை... எங்கடை தேவைக்கு கார் கொண்டுவந்த வரதன் கூட தண்ணிவென்னி ஒண்டும் குடிக்கேல்லை..."

"பரவாயில்லை ரவி..."

முந்திக்கொண்டு சொன்னான் வரதன்.

"உதிலை ஒரு "பார்க் பிளற்"சிலை நிப்பாட்டு வரதன்... முதல்லை சாப்பிடுவம்... சும்மா கண்டறியாத சின்னச் சின்னப் பிரச்சினையளுக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சு ஏன் பட்டினி கிடக்கவேணும்?"

வரதன் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

"கோமதி... இறங்கும்..."

"எனக்கொண்டும் வேண்டாம் எண்டெல்லே சொன்னனான்..."

சிடுசிடுத்தாள்.

"எத்தினை நாளைக்கு வேண்டாம்... உப்பிடியே பட்டினி கிடந்தால்போலை எல்லாம் சரி வந்தீடுமோ.."

ரவீந்திரனின் குரலில் சினம் எட்டிப்பார்த்து, அவள்மீது பாயத் தயாரானது.

"என்னை ஏன் கரைச்சல்படுத்திறியள்... உங்களுக்கு இப்பிடி ஒரு பிரச்சினை வந்தால்தான் தெரியும்.."

"எனக்கோ... இப்பிடியோ.... வந்தால் நடக்கிறது வேறை... எல்லாரையும் வெட்டிப்போட்டுத்தான் மற்றவேலை பார்ப்பன்..."

"ஓ.... உந்தக் கதைக்கொண்டும் குறைச்சலில்லை... உதை இப்பவே செய்திருக்கலாந்தானே...."

"நீங்கள் சகோதரங்கள்... இண்டைக்குப் பிரச்சினைப்படுவியள்... நாளைக்கு ஒண்டாய் நிப்பியள்... உந்தக் கிருசைகேட்டுக்கை நானும் வரவேணுமோ...?"

"ரவி... மெனக்கெடாமை வாங்கோ... கோப்பி குடிக்கிறதெண்டால் குடிச்சுப்போட்டு... கோலா வாங்கிறதெண்டால் வாங்கிக்கொண்டு வெளிக்கிடுவம்.... முந்நூறு கிலோமீற்றர் ஓட வேணுமெல்லே.... நேரவழிக்கு வீட்டைபோனால்தான் என்ரை அலுவலள் பார்க்கலாம்... இனிப் போய்த்தான் வேலை உடுப்புகள் தோய்க்கவேணும். நாளைக்கு விடிய வெள்ளண்ண வேலை..."

"ம்... தனிய இருந்தாலும் பிரச்சினை... குடும்பமாய் வாழ்ந்தாலும் இப்பிடிப் பிரச்சினையள்... கோமதி! நீ வராட்டி காருக்கையே இரு... நான் உனக்கு கோலா வாங்கிக்கொண்டு வாறன்..."

சுதனும் அவர்களுடன் போகப்போவதாக அடம்பிடித்து காரில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டான்.

கோமதி காரினுள் தனித்திருந்தாள்.

பாமினி இவ்வளவு கல் நெஞ்சுக்காரியாக நடந்துகொள்வாள் எனக் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. அவளால் எவ்வாறு இப்படி நடந்துகொள்ள முடிந்தது? மனதை எவ்வாறு கல்லாக்கிக் கொண்டாள்? பணம் வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பதுபோல், அந்தப் பத்துக்குள் பாசமும் ஒன்றாகிப் பறந்துவிட்டதா?

"பாமினி... இண்டைக்கு நான் அழுறமாதிரி நீயும் ஒருநாளைக்கு அழுதுகொண்டு திரியுற காலம் வராமலா போய்விடும்?"

தனக்குள் தங்கை பாமினியைச் சபித்துக் கொண்டாள் கோமதி.

"முந்நூறு கிலோமீற்றர் தூரம் கடந்து வந்தும் அம்மாவைப் பார்க்க முடியவில்லை..."

பத்து வருடங்களுக்கும் மேலாக நாட்டைவிட்டு வந்து தாயைப் பிரிந்திருந்த துயர் காணாதென்று, அம்மா ஜேர்மனிக்கு வந்த பின்பும் தொடரும் பிரிவுத்துயர் பொறுக்காமல் விம்மினாள் கோமதி.

"அம்மா... உன்னை எப்ப பார்ப்பன்... என்னை விட்டு நீ... உன்னைப் பிரிந்து நான்... தனித்தனித் தீவுகளாய் இவளவு காலமாய் வாழ்ந்த வாழ்க்கையை... கஸ்டங்களை... கவலையளை... அனுபவிச்சதுகளை எல்லாம் கதைகதையாய் சொல்லவேணும்... அந்த கதையளின்ரை அளவளாவலை உன்ரை மடியிலை படுத்திருந்து அனுபவிக்கவேணும் அம்மா... தோல் சுருங்கிப் போன கையளாலை என்னை தலையை நீ தடவுற சுகானுபவத்திலை நான் என்னை மறந்து உன்ரை மடியிலை பச்சைப் பிள்ளையாய் தூங்கவேணும் அம்மா... பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து பாலோடு பாசம் தந்து தாலாட்டிச் சீராட்டி என்னை ஆளாக்கின என் செல்ல அம்மாவின் கைகளுக்குள்ளை எப்பதான் முகம்புதைத்துக் கிடக்கப் போகிறேன்..."

தனிமை பலவித எண்ணங்களைத் தோற்றுவித்து துயரை அதிகமாக்கியது.

கோமதி ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. அவளது சகோதரன் குமாரும் தங்கை பாமினியும் ஜேர்மனியில்தான் வெவ்வேறு நகரங்களில் குடும்பமாக வாழ்கிறார்கள்.

பிள்ளைகளை, "தாயக அவலங்களுக்கால் ஓடித் தப்புங்கள்" என்று ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பிவிட்டு, பிள்ளைகளைப் பெற்றும் பெறாத மலடர்களாய் தன்னந்தனியாக கொழும்பு "லொட்ஜ்" ஒன்றில் வாழ்ந்தார்கள் கோமதியின் பெற்றோர்.

அம்பலவாணர்... அவர்தான் அவர்களின் அப்பா. வம்சம் வளமாக வாழவென ஓடியோடித் தேடிக் குவித்த சொத்துக்கள் சுகங்கள்... அதற்கும் மேலாகப் பிள்ளைச் செல்வங்களின் அரவணைப்பு... அத்தனையும் இரத்தவெறி பிடித்தலையும் இனவெறியுள் இழப்புக்களாகி, அதுவே ஈழத் தமிழனின் கையறுநிலை என்றான துயரில் நோயாளியாகிவிட்டார்.

அவருக்கு நல்லம்மா... நல்லம்மாவுக்கு அவர்... இப்படியே எத்தனை நாளைக்குத்தான் அந்த அறையில் முதுமை தரும் தள்ளாமையுடன் போட்டிபோட்டு வாழமுடியும்.

நல்லம்மாவை நினைக்கத்தான் கவலையாக இருந்தது.

கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடோடி வந்து சின்னச் சின்னத் தேவைகளையெல்லாம் அக்கறையாக நிறைவேற்றியவளாச்சே... அவரே உலகம் என்ற எண்ணத்துடன் வெளியுலகம் தெரியாமல் எல்லாவற்றுக்கும் அவர் இருக்கிறார் என்று அவரையே சார்ந்திருந்தவளாச்சே...

தற்செயலாய் கண்ணை மூடினால்... தனியாக இவள் எப்படி வாழப்போகிறாள்... அதுவும் இந்தக் கொழும்பு நகரத்தில்...

வாழ்க்கையில் முதல்தடவையாகப் பெரியதொரு பயம் அம்பலவாணரைப் கவ்விக்கொண்டது.

பிள்ளைகள் மூவருக்கும் கடிதம் எழுதினார்.

"என் காலம் முடிகிறதை என்னால் உணர முடிகிறது... உங்கள் அம்மாதான் பாவம்... என்னையும் உங்களையும் தவிர அவளுக்கு வேறு எவரையுமே தெரியாது... எனக்காகவும் உங்களுக்காகவும் பணிவிடை செய்து தன்னைத் தேய்த்ததே வாழ்க்கை என்று நினைப்பவள் அவள்... இப்பகூட எனக்கு முன்னால் தான் சந்தோசமாக இருப்பதாகவே காட்டிக் கொள்கிறாள்... அவளுக்கும் பல கவலைகள் இருக்கலாம்... ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டினால் நான் கவலைப்பட்டுவிடுவேனோ என்ற பெரிய மனம் அவளுக்கு. அந்தப் பெரிய மனது கஸ்டப்பட்டால் உங்களால் சந்தோசமாக வாழ இயலாது... அவளை எப்படியாவது உங்களோடு கூப்பிட்டு வைத்திருக்கப் பாருங்கோ..."

கடிதம் எழுதிய சில தினங்களுக்குள்ளேயே, முதுமையில் தனிமையின் கொடூரத்தை அனுபவித்தது போதும் என்பதுபோல் கண்களை மூடிவிட்டார் அம்பலவாணர்.

பாவம் நல்லம்மா.... கணவன் பிள்ளைகளே உலகமென்று யாழ்ப்பாணக் கிராமமொன்றில் கட்டுப்பெட்டியாக வாழ்ந்தவள். பின் சொற்ப காலமாகக் கொழும்பில் "லொட்ஜ்" ஒன்றில் வாழ நிர்ப்பந்தமானபோது, அந்த "லொட்ஜ்"ஜின் அறையே தஞ்சமென நாட்களைக் கழித்தவள். ஊருலகம் தெரியாதவள். வெளியுலகம் புரியாதவள். நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாதவள்.

இந்த நிலையில் கணவனை இழந்து தன்னந்தனியாக, அதுவும் கொழும்பில் எவ்வாறு நல்லம்மாவால் வாழ இயலும் என்ற கவலை பிள்ளைகளைத் தொற்றிக்கொள்ள, தாயாரை ஜேர்மனிக்குக் கூப்பிடும் முயற்சியில் இறங்கினார்கள்.

"எப்படிக் கூப்பிடுவது... எந்த "ஏஜென்சி"யைத் தொடர்புகொள்வது?"

ஆலோசித்தார்கள்.

"எனக்கு உதெல்லாம் தெரியாது... உங்களுக்கு ஆராலும் நல்ல "ஏஜென்சி"யைத் தெரியுமெண்டால் கூப்பிடுங்கோ... வாற செலவிலை மூண்டிலொரு பங்கை நான் தாறன்..."

குமார் திட்டவட்டமாகக் கூறினான்.

"கோமதி.. நீ என்ன சொல்லுறாய்..."

பாமினி கேட்டாள்.

"தருவன்தானே..."

"அதென்ன தருவன்தானே... தாறன் எண்டு சொல்லன்..."

பாமினியின் கணவன் ஆனந்தனின் மைத்துனன் ஒருவன் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் தரகர் வேலைதான் செய்கிறான். அதனால் தாயைக் கூப்பிடும் பொறுப்பை பாமினி முன்வந்து ஏற்றுக் கொண்டாள்.

"ஏன் உப்பிடி நம்பிக்கை இல்லாமைக் கேக்கிறாய்?"

கோபத்துடன் கேட்டாள் கோமதி.

"நம்பிக்கையோ... ஆருக்கு ஆரிலை... பழசுகளை இப்ப கிளறச் சொல்லுறியோ..."

தொலைபேசி ஊடாகப் பாமினியின் வார்த்தைகள் கோமதியை ஈட்டியாகத் தைத்தன.

"என்ரை கலியாணத்துக்கு சீதனமாய் நீ தாறன் எண்டு சொன்ன காசே இன்னும் வரேல்லை... தாறன் தாறன் எண்டாய்... பேந்து ரண்டு பிள்ளை பிறந்தாச்சு... இனி என்ன சீதனம் எண்டு கைகழுவி விட்டுட்டாய்... இதுக்குப் பிறகும் நம்பச் சொல்லுறியோ? தாயும் பிள்ளையளானாலும் வாயும் வயிறும் வேறை... இது என்ரை அனுபவம்..."

ஈட்டி இன்னும் ஆழமாகப் புகுந்துகொண்டது.

"ஓமடி... ஓ... கண்டறியாத அனுபவம்... நீ அம்மாவைக் கூப்பிடுற அலுவலைப் பார்... செலவைச் சொல்லு... என்ரை பங்கைத் தாறன்..." என்று கூறிவிட்டுத் தொலைபேசியை அடித்து வைத்தாள் கோமதி.

முகத்திலடித்தால்போல் வந்து விழுந்த வார்த்தைகளால் ஏற்பட்ட படபடப்பு அடங்க வெகுநேரமானது.

"அம்மா வரட்டும்... பிறகு செய்யிறன் வேலை.."

மனதிற்குள் கறுவிக்கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தன. தாயாரை ஜேர்மனிக்குக் கூப்பிடும் அலுவல்கள் துரித கதியில் நிகழ்ந்தன. அவ்வப்போது குமார் மூலமாக விசயங்களை அறிந்துகொண்டாள் கோமதி.

ஒருநாள் குமார்தான் தொலைபேசியில் பரபரத்தான்.

"அம்மா மலேசியாவிலை வந்து நிக்கிறா... இன்னும் நாலைஞ்சு நாளிலை "பிராங்பேர்ட்"டுக்கு வந்தீடுவா..."

"அம்மா வரப்போறா..."

எண்ணம் இனித்தது.

வருடக்கணக்கில் பாராத முகத்தைத் தரிக்கும் காலம் விரைந்து வருகிறது.

தொட்டிலின் சுகந்தமாய் தேனாகக் காதுகளில் ரீங்காரமிடும் பாசமெனும் அமுதநதி சுரக்கும் குரலைக் கேட்கும் நாள் நெருங்குகிறது.

நினைவு சங்கீதமாய் சந்தோசத்தை அள்ளிச் சொரிந்தது.

"எப்ப வந்தவ..."

"மலேசியாவுக்கோ... வந்து ஒரு கிழமையெண்டு பாமினிதான் சொன்னவள்..."

"ம்... கூப்பிடுற காசிலை பங்குவேணும்... உதுகளைமட்டும் எனக்குச் சொல்லக் கூடாதாக்கும். அவளுக்கு அவ்வளவு கொழுப்பு... களவாய் வேலைசெய்து நாலுபேரிட்டை வட்டிக்குக் கொடுத்து நாலு காசு சேர்த்து வைச்சிருக்கிற கொழுப்பு..."

சினந்தாள் கோமதி.

"ஏன் கோமதி உப்பிடி கீரியும் பாம்புமாய் இருக்கிறியளோ தெரியேலை.... ஒவ்வொரு சகோதரங்களைப் பாருங்கோ... என்னமாதிரி ஒற்றுமையாய் வாழுதுகள்... உங்களுக்குத்தான் கண்டநிண்ட சின்ன விசயங்களுக்கெல்லாம் தேவையில்லாத வாக்குவாதங்களும் சண்டையும்..."

ஆதங்கத்துடன் கூறினான் குமார்.

"ஆர் சண்டை பிடிக்கிறது... நானோ... அவளோ? அதுசரி, மலேசியா ரெலிபோன் நம்பர் ஏதாலும் தந்தவளே..."

"அங்கையெல்லாம் கதைக்க முடியாதாம்... இன்னும் என்ன... நாலைஞ்சு நாள்தானே... அம்மாவோடை நேரிலை கதைப்பம்..."

"அம்மா மலேசியாவுக்கு வந்ததைச் சொல்லாதவள், இனி அம்மா ஜேர்மனிக்கு வாறதைமட்டும் சொல்லுவளோ..."

"நான் உனக்கு சொல்லுவன்தானே... நீயும் அவளுக்கு சின்னப் பிழையொண்டு விட்டுட்டாய்... தாறன் எண்டு சொன்ன சீதனக் காசை குடுத்திருந்தியெண்டால் அவளேன் உன்னோடை மல்லுக்கு நிக்கப் போறாள்..."

"நான் ஏன் குடுக்கேல்லை தெரியுமே... என்ரை மனுசன் எங்கடை குடும்பத்திலை மூத்த மருமகன் எண்டு அவளின்ரை கலியாண வீட்டிலை என்ன மரியாதை குடுத்தவை? அவள் தன்ரை புருசன்ரை ஆக்களோடை சேர்ந்துகொண்டு இந்தாளை ஏன் நாயெண்டுகூட கணக்கெடுக்கேலை... கலியாண வீட்டிலை இந்தாளை சபை சந்திக்குக் கூப்பிடாமை அவமானப்படுத்திப்போட்டு, சீதனக் காசு வேணுமாமோ?" என்று பொரிந்துதள்ளினாள் கோமதி.

அற்ப விசயங்கள் சண்டைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முளையாகி விசுவரூபம் எடுப்பது தமிழ் சமுதாயத்திலே மலிந்து காணப்படும் நிகழ்வு.

ஒருவர் வைத்தியசாலையில் சுகயீனமாக இருந்தால் அறிவிக்கவில்லை என்ற பிரச்சினை.

ஒரு திருமணம் பொருந்தி வந்தால் தங்களின் சம்மதம் கேட்கவில்லை என்ற பிரச்சினை.

வெளிநாட்டுக்குச் சென்றால் தங்களுக்கு எதுவும் வாங்கி வரவில்லை என்ற பிரச்சினை.

இவ்வாறு நின்றால் பிரச்சினை, இருந்தால் பிரச்சினை என்று உறவுகளுக்குள் முளைவிட்டு விசுவரூபமெடுக்கும் பிரச்சினைகளுக்குத்தான் அளவேது?!

சிறுசிறு சம்பவங்கள்கூட பிரச்சினைகளாகி, பிரிவினைகளாகி, உறவுக்குள் எல்லை வகுத்து உதிரிகளாக விலத்தி நிற்கும்போக்குகளுக்கு "தாங்கள் உறவுகளுக்குள் உதவாதவர்களாகிப் போய்விடுவோமோ?" என்ற மனப்பயம் காரணமாக இருக்கலாம். அல்லது விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தின் பூச்சியத்தன்மையாகவும் இருக்கலாம்.

தாய் நல்லம்மா ஜேர்மனிக்கு வருவதற்கு முதல்நாள் இரவு...

குமாருடன் தொடர்புகொண்டாள் கோமதி.

"சொல்லிப்போட்டன்... நீதான் ஆம்பிளைப்பிள்ளை... அம்மா உன்னோடைதான் இருக்கவேணும்... உன்னாலை ஏலாதெண்டால் என்னோடைதான் இருக்கவேணும்... நான்தான் மூத்த பொம்பிளைப் பிள்ளை. அதோடை என்ரை மனுசன் சொந்த மருமகன். பாமினீன்ரை புருசன்காரன் ஆனந்தன் பிறத்தியான்... அவையோடை எல்லாம் அம்மாவை விடக்குடாது..."

கண்டிப்பாகக் கூறினாள் கோமதி.

"பிறத்தியானோ... ஆனந்தனும் எங்கடை குடும்பத்திலை ஒரு ஆள்தான். அந்தாள்தான் இப்ப ஓடியோடி அம்மாவின்ரை அலுவல் பார்க்கிறார். அதுசரி... அம்மா "பிராங்பேர்ட்"டுக்கு வந்து... அரசியல் தஞ்சம் கேட்டு... அவங்கள் எந்தக் "காம்ப்"பிலை விடுறாங்களோ... அதுக்குப் பிறகு யோசிப்பம்" என்றான் குமார்.

கோமதி நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது வேறு.

பாமினி ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவே காரியத்தைச் சாதித்துவிட்டாள்.

யாரையோ பிடித்து, உதவிபெற்று தாயாரை தன்னுடனேயே வைத்துக்கொண்டாள்.

தாயார் ஜேர்மனிக்கு வந்தும் அவரை பாமினியின் வீட்டில்போய் சந்திக்க கோமதியின் வறட்டுக் கௌரவம் தடைபோட்டது.

எனினும், பாசத்தின் முன்னே மான அவமானங்களைப் பார்க்க முடியுமா, என்ன?!

தொலைபேசி இலக்கங்களைச் சுழற்றினாள். பாமினிதான் எடுத்தாள்.

"அம்மாவைக் கதைக்கச் சொல்லு..."

"அம்மா வந்து ரண்டு மாதமாகப் போகுது... இப்பதான் கதைக்க வேணுமெண்ட யோசினை வந்ததாக்கும்..."

இடக்காகக் கேட்டாள் பாமினி.

"உன்னோடை எனக்குக் கதையில்லை. போனை அம்மாட்டைக் குடு."

"முதலிலை அம்மாவைக் கூப்பிட்ட காசை வைச்சுப்போட்டு, அம்மாவோடை கதை..."

"அம்மா கொழும்பிலை இருந்து வெளிக்கிடேக்கை எனக்கு சொல்லேலை... மலேசியாவிலை வந்து நிக்கேக்கை சொல்லேலை... "பிராங்பேர்ட்"டிலை வந்து இறங்கேக்கையும் சொல்லேலை... இப்ப காசுமட்டும் தேவையோ...?"

"கோமதி... உன்ரை குணம் எனக்குத் தெரியும்... காசு எண்டவுடனை உப்பிடியெல்லாம் கதைப்பியெண்டு எனக்கு தெரியும்... அம்மாவிலை உனக்கு அக்கறை எண்டால் நீயெல்லோ ரெலிபோன் அடிச்சுக் கேட்டிருக்கவேணும்... முதலிலை அம்மாவைக் கூப்பிட்ட செலவிலை உன்ரை பங்கு ஐயாயிரம் மார்க்கையும் வைச்சுப்போட்டு அம்மாவோடை கதை..."

"காசென்னடி பெரிய காசு? கழுதை தின்னாத காசு... ஆனால் கேக்கிறமாதிரி தாறத்துக்கு நானில்லை... முதலிலை அம்மாவோடை கதைக்கவேணும்... அதுக்குப் பிறகுதான் உன்ரை காசைத் தருவன்..."

"அப்ப நீ அம்மாவோடை கதைச்சமாதிரித்தான்... இப்ப அம்மா என்ரை பொறுப்பிலைதான் இருக்கிறா... நான் சம்மதிச்சால்தான் நீ அவவோடை கதைக்கலாம்... அவவைப் பார்க்கலாம்..."

பாமினி தொடர்பைத் துண்டித்துவிட்டாள்.

காசை முதலில் கொடுப்பதா? அம்மாவை முதலில் பார்ப்பதா?

பிடிவாதங்களின் முன்னால் தாய்ப்பாசம் தூரநின்று தவித்தது.

சகோதரிகளின் "நானா, நீயா" போட்டியின் அடித்தளமாக தாய்ப்பாசம் பணயமாகியது.

"அம்மாவின்ரை சோசல்(benefit) காசையும் அள்ளி எடுத்துக்கொண்டு ஐயாயிரம் மார்க் கேக்கிறாள்."

பணம் பல வழிகளில் கணக்கிட வைத்தது.

"என்னவாலும் பட்டுத் தெளியுங்கள்" என்பதுபோல குமார் விலகிநின்றான்.

"எதுக்கும் நேரிலைபோய் கதையுங்கோவன். ரெலிபோனிலை கதைச்சு ஏன் பிரச்சினைப்படூறியள்...?"

அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அதுவும் சரியாகத்தான் தென்பட்டது.

எனினும், "அடிபணிந்து போகக்கூடாது. நாலுபேர் மதிக்கமாட்டினம்" என்ற எண்ணம்மட்டும் விடாப்பிடியாக அங்கே முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது.

ஒருநாள்.... வரதனையும் கூட்டிக்கொண்டு கோமதியும் ரவியும் சுதனுமாக பாமினியின் வீட்டு "கோலிங் பெல்"லை அழுத்தினார்கள்.

"வாங்கோ" என்ற அழைப்பில்லை.

எவரோ அன்னியரைப் பார்ப்பதுபோன்ற பார்வை.

"அம்மா எங்கை..." என்று கோபத்துடன் கேட்டாள் கோமதி.

"காசை எண்ணி வைச்சுப்போட்டு அம்மா எங்கை எண்டு கேள்..."

"என்ரை அம்மாவைப் பார்க்கிறதுக்கு உனக்கென்னடி காசு..."

சீறியவாறு உள்ளே புக முயன்றவளைத் தள்ளி நிறுத்தினாள் பாமினி.

"உன்ரை "பாவ்லா" ஒண்டும் என்னட்டை வாயாது கோமதி... நான் சொன்னால்தான் அம்மா உன்னை வந்து பார்ப்பா... இப்ப அவ என்ரை பொறுப்பிலை... வீண் பிரச்சினை கிளப்பினி எண்டால் பேந்து பொலிஸ்தான் வரும்... மரியாதையாய் காசைத் தந்துபோட்டு அம்மாவைப் பார்..."

பாமினி தனது பிடியைத் தளர்த்தாமல் உறுதியாக நின்றாள்.

"எனக்குப் பிறகு பிறந்தவளுக்கே இவ்வளவு பிடிவாதமென்றால், எனக்கு எவ்வளவு இருக்கும்?"

முந்நூறு கிலோமீற்றர் வந்தும் அம்மாவைப் பார்க்க முடியவில்லை.

வீண் பிடிவாதமும் விட்டுக்கொடுப்பின்மையும் அம்மாவின் பாசத்தை ஓடோட விரட்டிவிட்டன.

வரதன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

தற்போதும் கோமதியின் விசும்பல் ஓய்ந்தவாறில்லை.

சுதன் மலங்க மலங்க தாயையே பார்த்துக்கொண்டிருந்தான்.

முன்னால் தொங்கிக்கொண்டிருந்த அந்தச் சிறிய கண்ணாடியினூடே சுதனைப் பார்த்தான் வரதன்.

எங்கோ படித்த கதையொன்று ஞாபகத்துக்கு வந்தது.

ஒருவன் தனது தந்தைக்கு பழைய கோப்பையொன்றில் தினமும் உணவளிப்பானாம். இதைக் கவனித்த அவனது மகன் ஒருநாள் அந்தக் கோப்பையை எடுத்து ஒளித்து வைத்தானாம். "ஏன்" என்று கேட்டதற்கு, "அப்பா, நான் பெரியவனானதும் உனக்கு சாப்பாடு தருவதற்காக இந்தக் கோப்பையை எடுத்து ஒளித்தேன்" என்றானாம்.

அதைப்போல.... இவர்களின் பிடிவாதங்களையும் பேரங்களையும் கவனிக்கும் சுதனும் எதிர்காலத்தில் இவர்களைக் குறித்து எத்தகைய பேரத்தில் ஈடுபடப் போகிறானோ?

இன்றைய அம்மாவுக்கு ஐயாயிரம் மார்க் இடையில் புகுந்து கொண்டதுபோல, இவர்களது விசயத்தில் என்ன வந்து புகுந்து கொள்ளப்போகிறதோ?

அப்போது, இன்று அந்தத் தாய் பிள்ளைகளின் சச்சரவுகளுக்குள் மனச்சுமைகளுடன் அவதிப்படுவதைப்போல் இவர்களும் காலங்கடந்து ஞானம் பெறுவார்களோ?!

கார் கோமதியின் வீட்டு வாசலில் வந்து நின்றது.

அவர்கள் இறங்கிவிட்டார்கள்.

காரின் பாரம் குறைந்துவிட்டது.

ஆனால்...

வரதனின் மனதில் முளைவிடும் எண்ணங்கள் புதுப்புதுப் பாரங்களைக் கூட்டிக்கொண்டிருந்தது.

அந்த ஐயாயிரம் மார்க் அம்மா பரிதாபமாக அவனது எண்ணத்தில் அடிக்கடி வந்துகொண்டிருந்தார்.

 

(ஜேர்மனி, ஹாட்ஸ் தமிழர் ஒன்றிய 7வது ஆண்டு நிறைவுவிழா சிறுகதைப் போட்டியில் முதலாவது பரிசு பெற்றது.)

(பிரசுரம்: ஹாட்ஸ் தமிழர் ஒன்றிய 7வது ஆண்டு நிறைவுவிழா மலர், 1999)

(இக் கதை எழுதியபோது ஜேர்மனி நாணயம் மார்க்கில் இருந்தது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சோழியன். புதிதாக ஒன்று எழுதுங்கோவன். தற்போது உங்கள் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க.

 


இது நிட்சயம் உண்மைச் சம்பவம் அல்லது அதைத் தழுவியதாகவே இருக்கும். கோமதி அம்மாவைப் பார்த்தாரா இல்லையா என்று அறிய ஆவலாக இருக்கு. அதையே பகுதி இரண்டாக எழுதி விடுங்கோவன் சோழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை

 

கதை

அதை கொண்டு சென்ற  விதம்

நாட்டு நடப்பு

சகோதரர்கிடையான புரிந்துணர்வு

விடாப்பிடியான சுயகௌரவபிரச்சினைகள்.............

 

அத்துடன்

வீதிப்போக்குவரத்து

அதன் அனுபவங்கள்......

 

எல்லாவற்றையும் சுமந்த ஒரு பதிவு

நன்றி  ஐயா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நம்முடைய சமூகத்திற்குள் ஊறிப்போன பழக்கவழங்கங்களில் இருந்து உருவாகியிருக்கும் சம்பவம் கதையாகத் தோன்றவில்லை இன்றும் பலருக்குள் நடந்து கொண்டிருக்கும் வறட்டுத்தனங்களின் போராட்டம். நாளாந்தம் கேட்கும் பலவகையாக விடயங்களில் இதுவும் ஒன்று. எழுத்தோட்டம் அருமை...ஒரு முதிர்ந்த சிந்தனைகளைக் கொண்ட எழுத்தாளர் நீங்கள்.பாராட்டுகள் என்று சொல்வதைக்காட்டிலும் உங்களிடம் பயிற்சி பெறுகிறேன் என்று சொல்வதே சாலப் பொருந்தும். நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

நல்ல கதை சோழியன். புதிதாக ஒன்று எழுதுங்கோவன். தற்போது உங்கள் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க.

 

இது நிட்சயம் உண்மைச் சம்பவம் அல்லது அதைத் தழுவியதாகவே இருக்கும். கோமதி அம்மாவைப் பார்த்தாரா இல்லையா என்று அறிய ஆவலாக இருக்கு. அதையே பகுதி இரண்டாக எழுதி விடுங்கோவன் சோழி

 

இது உண்மைச் சம்பவத்தை தழுவியதுதான். ஏதோ காரணத்தால் ஒரு மகள் தாயை சந்திக்க முடியாமல் தவித்தார். (அவர் எனது மனைவியின் சிநேகிதியும்கூட…) நான் அதற்கான காரணங்களை என்மட்டில் தீர்மானித்து கதையாக்கிவிட்டு அவரிடமே வாசிக்க கொடுத்தேன். :)  ஓரிரு வருடங்களின் பின்னர் அவர்கள் ஒற்றுமையாகிவிட்டார்கள். இப்போது அந்த அம்மா உயிரோடு இல்லை.

 

உங்களூடைய உற்சாகப்படுத்தலுக்கு மிக மிக நன்றி.. என்னைப் போன்றவர்களுக்கு புத்துணர்வளிப்பதே வாசிப்பவர்களது கருத்துகள்தான்.. தற்போது வேலைச் சுமை அதிகம்.. தை மாதம் அளவில் எல்லாளன் கைமுனு இறுதி யுத்தத்தைப் பற்றி ஒரு நெடுங்கதை யாழில் எழுதுவேன்.. அதற்கான தரவுகளையும் ஓரளவு  சேகரித்துள்ளேன். கதை எவ்வளவுதூரம் சிறப்பாக வருகிறதோ தெரியாது, ஆனால் உங்களது கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும். நன்றி.  :)

அருமை

 

கதை

அதை கொண்டு சென்ற  விதம்

நாட்டு நடப்பு

சகோதரர்கிடையான புரிந்துணர்வு

விடாப்பிடியான சுயகௌரவபிரச்சினைகள்.............

 

அத்துடன்

வீதிப்போக்குவரத்து

அதன் அனுபவங்கள்......

 

எல்லாவற்றையும் சுமந்த ஒரு பதிவு

நன்றி  ஐயா

 

நன்றி ஐயா! 

Link to comment
Share on other sites

 நம்முடைய சமூகத்திற்குள் ஊறிப்போன பழக்கவழங்கங்களில் இருந்து உருவாகியிருக்கும் சம்பவம் கதையாகத் தோன்றவில்லை இன்றும் பலருக்குள் நடந்து கொண்டிருக்கும் வறட்டுத்தனங்களின் போராட்டம். நாளாந்தம் கேட்கும் பலவகையாக விடயங்களில் இதுவும் ஒன்று. எழுத்தோட்டம் அருமை...ஒரு முதிர்ந்த சிந்தனைகளைக் கொண்ட எழுத்தாளர் நீங்கள்.பாராட்டுகள் என்று சொல்வதைக்காட்டிலும் உங்களிடம் பயிற்சி பெறுகிறேன் என்று சொல்வதே சாலப் பொருந்தும். நன்றி அண்ணா.

 

மிகவும் நன்றி வல்வை.. எம்மைப் பொறுத்தவரை எழுத்தால் எதையும் சம்பாதிக்கப் போவதில்லை அன்பான உறவுகளைத் தவிர… புகலிடங்களில் எமது அடையாளங்கள் மழுங்கிக்கொண்டு சென்றாலும்… ஒரு காலத்தில் ஜேர்மனியில் ஒரு தமிழனோ அல்லது ஐரோப்பாவில் ஒரு தமிழனோ தனது வேரை ஆராயத் தடவும்போது… எனது கதைகளும் அதற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி எழுதுபவையே பெரும்பாலானவை.

 

புகலிட நாடுகளில் தமிழ் சிறுகதைகளின் வரவு மிகவும் குறைவு எனும் போக்கை எழுத்தாற்றல் உள்ளவர்கள் களைய முற்பட வேண்டும்.   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு சமூகக் கதையிது. சோழியன்!

 

வெறுமே கதையென்று சொல்லிவிட்டு நகர்ந்து போக விரும்பவில்லை! 

 

இது ஒரு யதார்த்தமான சம்பவம் போலத்தான் உள்ளது!

 

வெறும் பகட்டுக்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் இடையில், உணர்வுகள் பந்தாடப்படுகின்றன!

 

இது பற்றி, இந்தக்கதையை வாசிக்கும் வாசகர்களுக்கும் நிச்சயம் அனுபவங்கள் இருக்கும் எனவே நம்புகின்றேன்!

 

எமது தெய்வங்களே கைகளில் ஆயுதங்களுடன் தானே திரிகின்றன! :o

 

சிவபெருமான் தக்கனுடன், பிரச்சனையைப் பேசித் தீர்த்திருக்கலாம்! வீர பத்திரருக்குத் தேவையே வந்திருக்காது!

 

சிவன் செய்ததைப் பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் சோழியன்? :icon_idea:

 

தக்கனுக்கு வந்தது ஆணவம் எனில், சிவனுக்கு வந்ததுக்கு என்ன பெயர் வைக்கலாம்? ^_^

Link to comment
Share on other sites

நல்ல ஒரு சமூகக் கதையிது. சோழியன்!

 

வெறுமே கதையென்று சொல்லிவிட்டு நகர்ந்து போக விரும்பவில்லை! 

 

இது ஒரு யதார்த்தமான சம்பவம் போலத்தான் உள்ளது!

 

வெறும் பகட்டுக்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் இடையில், உணர்வுகள் பந்தாடப்படுகின்றன!

 

இது பற்றி, இந்தக்கதையை வாசிக்கும் வாசகர்களுக்கும் நிச்சயம் அனுபவங்கள் இருக்கும் எனவே நம்புகின்றேன்!

 

நன்றி புங்கையூரன்! 

 

முன்பு அரசவையில் இந்து சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என கூறப்பட்டிருக்கும். அதனால் புலவர்கள் ஆளாளுக்கு சிவன், தக்கன் போன்ற பாத்திரங்கள்மூலம் தமக்கேற்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் எழுதிக் குவித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.