Jump to content

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்


Recommended Posts

600x428xmuru1.jpg.pagespeed.ic.0obArZn1h

 

 (காலையடி-ஞானவேலயுதன்)
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட

தீருவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி

குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்ப்பும் குன்றும்

துளைத்தவேல் உண்டே துணை

 -நக்கீரர்
.
கந்தசஷ்டி கவசம் - சூலமங்கலம் சகோதரிகள் பாடியது 
கந்தகுரு கவசம் - சூலமங்கலம் சகோதரிகள் பாடியது
”வேலுண்டு வினை தீர்க்க மயில் உண்டு எமைக் காக்க” 

 

600x671xmuru.jpg.pagespeed.ic.4vf16WcH7S
 
முருகன் துணை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

"அமரர் இடர் தீர அமரம் புரிந்த 

குமரன் அடி நெஞ்சே குறி"

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இலங்கையில் இவ்விரதம் இந்த வருடம் 04.11.2013 திங்கட்கிழமை ஆரம்பமாகி  ஐந்தாவது தினமான 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. ஆனால் கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளில் 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி ஆறாவது தினமான 08.11.2013 அன்று சூரன்போருடன் நிறைவு பெறுவதாக சோதிடம் கணிக்கின்றது.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

 

அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால்"ஒப்பரும் விரதம்" என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

jaana.jpg.pagespeed.ce.wHh1ceY83Q.jpgகந்தசஷ்டி விரதம்; சுழிபுரம் பறாளை-முருகன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம் உட்பட எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்தப்பெறுகின்றன.paralai.jpg.pagespeed.ce.46UTfwOT0l.jpg

முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனைசங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது. 

கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!. 

சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் ”அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும். 

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம். 

வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர். இவ்விரதம் தொடர்பான "புராணக் கதை" யை பார்ப்போம்.

பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து  தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில்  தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.

அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.

இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது. 

முருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.

பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார்.  அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை.   அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.

கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே ஸ்கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.

விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:

நாம் ஆறுமுகநாவலரின் "விரதம்" என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கின் "மனம்; பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்; மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு, கடவுளை விதிப்படி வழிபடல்" என்கிறார். அவ்வாறான கட்டுப்பாடுகளினூடாக ஐம்புலனடக்கி மன அடக்கத்தை கந்த சஷ்டி விரதம் நமக்கு உணர்த்துகிறது.

இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும். 

கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.  

ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக்கைக் கொள்ளவேண்டும்.

உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதி மையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்;வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூசைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.

ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.

விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.

ஆலயங்களில் ஆரம்பதினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் கர்ப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் ப+ஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.

இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.

விரதோயாபனத்தின் போது முருகன் ஆலயம் சென்று விரத பூர்த்தி சமயத்தில் விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விசேச பூஜையை செய்கின்றேன் என்று சங்கல்பித்து விஷேஷ அபிஷேகம் பூஜை, ஷண்முகார்ச்சனை அல்லது சஹஸ்ர நாமார்ச்சனை முதலியவற்றைச் செய்வித்து காப்பு தர்ப்பை இவற்றுடன் தாம்பூலம் தஷிணை, வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி முதலிய தானங்களையும் சேர்த்து அர்ச்சகரிடம் சமர்ப்பித்து மகிழ்ச்சியுடன் இந்தத் தானத்தை வழங்குகின்றேன். சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல இந்த விரதபலன்கள் எனக்கு உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். 

விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இங்கு குறிப்பிட்ட விதத்தில் வீட்டிலே பூசைகளைச் செய்வதும் பொன் பிரதிமைகளைச் செய்து தானம் கொடுப்பதும் யாவருக்கும் எளிதானதன்று இதனால் உத்தியாயனமே செய்யாது விடுவதும் முறையன்று எனவே உரிய காலத்தில் ஆலயம் சென்று விரத உத்தியாபனம் செய்யப் போகின்றேன் என்று குருமுகமாகச் சங்கல்பம் செய்து இயன்ற வகையில் விசேஷ அபிஷேகம் பூசை அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து குருவுக்கு தாம்பூல தட்சணைகளும், தானங்களும் இயன்றவரையும் வழங்கி விரதத்தை மனநிறைவோடு முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

500x342xmuru2.jpg.pagespeed.ic.Y8RIO8uIT

பழநீ முருகன்ஆலயம்

 

புராணம்:

மூவிரு முகங்கள் போற்றி

முகம்பொழி கருணைபோற்றி

ஏவருந் துதிக்க நின்ற

ஈராறுதோள் போற்றி காஞ்சி

மாவடி வைகுஞ் செவ்வேள்

மலரடி போற்றி அன்னான்

சேவலும் மயிலும் போற்றி

திருக் கைவேல் போற்றி போற்றி

சுப்பிரமண்ய காயத்ரி:

"ஓம் தத் புருஷாய வித் மஹே

மஹா ஸேநாய தீமஹி.

தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"

"கார்த்திகேயாய வித்மஹே

சக்திஹஸ்தாய தீமஹி

தன்னோ: ஸ்கந்த: பிரசோதாயாத்" 

திருப்புகழ்:

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே

குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறு படுசூரரை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

முருகனின் ஆறு படை வீடுகள்:

பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

திருச்செந்ததூர் : கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது

சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை

திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

பழமுதிர்ச்சோலை: நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

(பணிப்புலம்) காலையடியில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஞானவேலாயுதன்

jaana1.jpg.pagespeed.ce.jHfeV66gi7.jpg
"ஓம் ச ர வ ண ப வ"

"வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை"

கவசம் என்பது ஆபத்தான காலத்தில் எமது உடலை பாதுகாக்க

அணியும் ஒரு உடை, அல்லது பாதுகாப்புத்தரும் ஒரு கருவி என கூறலாம். 

ஆனால், இங்கு கந்த சஷ்டி கவசம் எம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள்,

தீமைகள், கஷ்டங்களிலிருந்தும், மும்மல தோஷங்களின் தாக்கங்களில்

இருந்தும் எம்மைக் காபாற்றுகின்றது.

கந்தசஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் தோத்திரம் செய்ய- இங்கே அழுத்துங்கள்

சூரசங்காரம்- சூரன்போர் கதைச் சுருக்கம் - இங்கே அழுத்துங்கள்

 

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=2203:2011-05-08-03-44-40&catid=59:cricket&Itemid=387

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனைசங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

 

 

இந்த "ஷ்" என்ற எழுத்து தமிழ் மொழியில் கிடையாதாமே. உண்மையாகவா?

 

அன்பை போதிக்கும் "அன்பே சிவம்" என்ற இந்து மதத்தில் இத்தனை வன்முறை சம்பவங்களா? இதை வன்மையாகக்கண்டிக்கின்றேன். மனிதஉரிமை மீறல் குற்றத்தில் முருகனை தண்டிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்  :D 

Link to comment
Share on other sites

இந்த "ஷ்" என்ற எழுத்து தமிழ் மொழியில் கிடையாதாமே. உண்மையாகவா?

 

அன்பை போதிக்கும் "அன்பே சிவம்" என்ற இந்து மதத்தில் இத்தனை வன்முறை சம்பவங்களா? இதை வன்மையாகக்கண்டிக்கின்றேன். மனிதஉரிமை மீறல் குற்றத்தில் முருகனை தண்டிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்  :D 

 

 

நன்றி செங்கொடி உங்கள் கருத்துக்கு. எங்கட தமிழ் வாத்தியாரிடம் கேட்ப்போம் "ஷ்" பற்றி!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.உதுக்கெல்லாமா எண்கள் வாத்தியாரைக் கூப்பிடுவீர்கள் அலை மாணாக்கர் பாஞ்சைக் கேட்டாலே பதில் கூறி இருப்பாரே அம்மாமணி

Link to comment
Share on other sites

.உதுக்கெல்லாமா எண்கள் வாத்தியாரைக் கூப்பிடுவீர்கள் அலை மாணாக்கர் பாஞ்சைக் கேட்டாலே பதில் கூறி இருப்பாரே அம்மாமணி

 

 

ம்கூம் ....  பாஞ்சைக் கேட்கவே மாட்டோம், பாஞ் பிழையாய் எங்களுக்குச் சொல்லித் தந்திடுவர், தான் கூட மாக்ஸ் எடுக்கிறதுக்காக :lol: எங்களுக்கு வாத்தியாரில் தான் அதீத நம்பிக்கை  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷ் என்பது வட இந்திய எழுத்து
இது தமிழ் எழுத்து அல்ல

 

உதாரணம்
 

இலஷ்மணன் வட இந்தியப்பெயர்
தமிழில் இலக்குவன் என்று மாற்றினர்.
 

விபீஷணன் வட இந்தியப் பெயர்
விபீடணன்  எனத் தமிழில் மாற்றினர்.
 

கந்த சஷ்டி வட இந்தியச் சொல்
கந்த சட்டி என மாற்றினர்

 

"வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"

 

என்று தொல்காப்பியம் கூறுகின்றது. 

Link to comment
Share on other sites

ஷ் என்பது வட இந்திய எழுத்து

இது தமிழ் எழுத்து அல்ல

 

உதாரணம்

 

இலஷ்மணன் வட இந்தியப்பெயர்

தமிழில் இலக்குவன் என்று மாற்றினர்.

 

விபீஷணன் வட இந்தியப் பெயர்

விபீடணன்  எனத் தமிழில் மாற்றினர்.

 

கந்த சஷ்டி வட இந்தியச் சொல்

கந்த சட்டி என மாற்றினர்

 

"வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"

 

என்று தொல்காப்பியம் கூறுகின்றது. 

 

 

மிக்க நன்றி வாத்தியார்!

செங்கொடி.....  டவுட்டு கிளியரா இப்ப? :D

Link to comment
Share on other sites

ச்சே.. சுழிபுரம் பறாளை முருகன்ரை சூரன் போரும் வரப் போகுது.. இதுகளை எல்லாம் இனி எப்பதான் காணப்போறனோ தெரியேலை!!  :(

 

09566552-7D06-43EF-8A59-F3CECA20EF7C.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது?

Link to comment
Share on other sites

அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது?

 

 

 

ம்.................. இனி ஒரு சமய வாத்தியாரைப் பிடிக்க வேணும் யாழுக்கு. பொறு பிள்ளை ஒரு சமய வாத்தியாரை பிடிப்பம் முதல் பிறகு டவுட்டைக் கிளியர் பண்ணுவம்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஷ்டி  என்றால் ஆறு.

கந்த சஷ்டி என்றால்  ஆறுமுகனுக்குரிய  ஆறுநாள் விரதம். அது சமஸ்கிருதத்துக்கு சரி. தமிழுக்கு "சட்டி"  சரியில்லை என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது?

கந்த சஷ்டி தமிழ்ச் சொல்லா இல்லையா என்பதை அறிந்துகொள்ள

வேண்டுமானால் முதலில் சஷ்டி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளவேண்டும்

 

சஷ்டி என்பது 15 திதிகளில் ஒன்று

திதி என்றால் என்ன அது எங்கிருந்து வருகின்றது.

திதி , நட்சத்திரம் ராசி என்பனவெல்லாம்

பஞ்சாங்கம் என்பதன் அம்சங்களாகும்.

 

பஞ்சாங்கம் என்றால் என்ன? யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

அதனால் மக்களுக்கு என்ன நன்மை ?என ஆராய்ந்தால்

பல பதில்கள் கிடைக்கும்.

 

பஞ்ச என்பது வட இந்தியச் சொல் ஐந்து எனப்பொருள்படும்.

ஐந்து முக்கிய அம்சங்களை அடக்கியது பஞ்சாங்கம்

 

இது வட இந்தியர்களால் தமிழிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

முற்காலத்தில் பிராமணர்களே அதிகம் பஞ்சாங்கத்தை அறிந்து வைத்திருந்தார்கள்.

 

இப்படிப்பார்த்தால் அது பிராமணர்களால் தங்கள் பிழைப்பிற்காக

உருவாக்கியது எனவும் கொள்ளலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொலிகண்டி கந்தவன கடவை ஆலயம்
 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த "ஷ்" என்ற எழுத்து தமிழ் மொழியில் கிடையாதாமே. உண்மையாகவா?

 

அன்பை போதிக்கும் "அன்பே சிவம்" என்ற இந்து மதத்தில் இத்தனை வன்முறை சம்பவங்களா? இதை வன்மையாகக்கண்டிக்கின்றேன். மனிதஉரிமை மீறல் குற்றத்தில் முருகனை தண்டிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்  :D 

 

 

செங்கொடி நீங்கள் இன்று திண்ணையில் கேட்ட கேள்விகள் இங்கு இருந்து     http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/20088-2011-10-23-09-55-09.html     எடுத்துள்ளீர்கள்.

 

இந்தத் திரி சமய நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும். சமயத்தை நம்புவது நம்பாமல் விடுவது உங்களது தனிப்பட்ட விடயம். தயவு செய்து இத் திரியினுள் நுளைந்து தேவையற்ற கேள்விகளைக்  கேட்க வேண்டம் என்று நட்புடன் கேட்டுக் கொள்கின்றேன்  :) 

அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது?

 

 

இவைக்கு நீங்கள் புதுத் திரி திறந்து உங்களது சந்தேகங்களைக் கேட்களாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா நான் கேள்வியை எங்க இருந்து எடுத்தனான் என்டு கண்டுபிடிச்சிட்டீங்கள. உண்மையில் உங்களுக்குள்ள ஏதோ ஒன்று இருக்கு தான். ஆனா நான் கேட்டுவிட்டன் என்டு நீங்கள் தேடினீங்க பாருங்கோ அங்க தான் உங்கட அறிவு வளர்ச்சி பெறுகிறது. தேடலே அறிவின் வளர்ச்சி.

ஆனா நான் நீங்க எழுதின இடத்தில இருந்து எடுக்கேலை. வாசித்த, பார்த்த, கேள்விப்பட்ட விடயங்கள் தான் இவை. மூட நம்பிக்கை எப்பவுமே கேள்வி கேட்க அனுமதிக்காது.

இனி திரியள் தொடங்கும் போது யார் எல்லாம் வந்து எழுதலாம் என்று ஒரு குறிப்பு போட்டால் நாங்க அந்த பக்கம் வர மாட்டம்.;-)

Link to comment
Share on other sites

பஞ்சாங்கம் கணிப்பீட்டின் அடிப்படையில் உருவானது. நட்சத்திரங்கள் இராசிகள்கூட அப்படித்தான்.

 

ஒரு குழந்தை பிறக்கும் நேரமானது துல்லியமாக குறிக்கப்பட்டு தேர்ந்த வல்லுனர்களால் எழுதப்படும் சாதகத்தில் இருந்து கணிக்கப்படும் பலன்கள் பொய்ப்பதில்லை என்று அறிவாளிகள் கூறுகிறார்கள். 

 

ஆக, உண்மையாகக் கணிக்கப்பட்ட சாதகத்தை பஞ்சாங்கத்துடன் கணித்துப் பார்க்கும்போது அங்கங்களின் தன்மையைக்கூட அறிய முடியும். முக்கியமாக திருமணப் பொருத்தத்தில் பஞ்சாங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தம்பாத்தியத்துக்கு தேவையான உறுப்புகளின் தன்மையைப்பற்றி அது மிகவும் அக்கறைப்படுகிறது.

 

ஆனால் ஒன்று.. சாதகம் உண்மையாக இருக்கும் பட்சத்திலேயே பஞ்சாங்கமும் உண்மையாக இருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு

தமிழருக்கு தெளிவு தரக்கூடிய  முயற்சிதொடருங்கள்.......

Link to comment
Share on other sites

சின்ன வயதில் பிள்ளைகளை பார்க்க ஐரோப்பாவில் குழந்தைகள் காப்பகம் (கிண்டக்காடின் )விடுவார்கள் ஆனால் இந்த முறையை அறிமுகம் செய்து வைத்தது சிவனும் பார்வதியும் தான் என்பதில் பெருமை எமக்கு முருகன் வளர்த்தது அங்கதான் கார்த்திகை பெண்களிடம் அவ் நாங்க அப்பவே அப்டி :D :D :D

Link to comment
Share on other sites

'இப்படி ஒவ்வொரு பண்டிகை நாளிலும், இதைக் கொண்டாடுவது அவசியம் தானா?' 'இது தமிழர் விழாவா?' என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். இப்படி பல ஆயிரம், ஏன் மில்லியன் ஆண்டுகள் கூடப் பின்னோக்கி ஆராய்ந்து கொண்டே போகலாம். என்ன ஒன்று, ஆபிரிக்கக் குரங்குகள் என்ன பண்டிகை கொண்டாடின என்று எல்லாம் ஆராய வேண்டி இருக்கும். நாம் கொண்டாடுவதற்கு ஒரு பண்டிகையும் இருக்காது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இப்படி ஒவ்வொரு பண்டிகை நாளிலும், இதைக் கொண்டாடுவது அவசியம் தானா?' 'இது தமிழர் விழாவா?' என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். இப்படி பல ஆயிரம், ஏன் மில்லியன் ஆண்டுகள் கூடப் பின்னோக்கி ஆராய்ந்து கொண்டே போகலாம். என்ன ஒன்று, ஆபிரிக்கக் குரங்குகள் என்ன பண்டிகை கொண்டாடின என்று எல்லாம் ஆராய வேண்டி இருக்கும். நாம் கொண்டாடுவதற்கு ஒரு பண்டிகையும் இருக்காது. :icon_mrgreen:

நியாயமான அங்கலாய்ப்புத் தான் , மல்லிகை!

 

இதில் என்ன உறுத்தல் என்றால், முருகன் உண்மையில் தமிழனின் கடவுளே!

 

தீபாவளியும் தமிழ்ப் பண்டிகையாக இருந்திருக்கலாம்! உழவர் திருநாள், சல்லிக்கட்டு, போன்ற தமிழர் பண்டிகையாக இருந்திருக்கவும் கூடும்!

 

ஆனால், காரண காரியங்கள் காலப்போக்கில் மாற்றப்பட்டு விட்டன! தன் காதல் மனைவியைக் கைவிட்ட முருகன், இந்திரனின் மருமகனான பின் தான், அசுரர் அழிப்பில் அவன் ஈடுபடுத்தப் படுகின்றான் என்பதையும் கவனிக்க வேண்டும்!

அசுரர் என்பதன் பொருளே, மது அருந்தாதவர்!

நாற்றம் என்னும் அழகிய தமிழ் சொல், இன்று நாத்தம் பிடித்துப்போய் இருப்பதும் இங்கு கவனிக்க்த் தக்கது!

 

எனக்கென்னவோ, இராமாயணம், சூரன் போர், எல்லாம் எம்மையே அழித்து விட்டு, எம்மையே அழித்தவர்களை வணங்கவும் வைப்பது, எமது தலையில் மிளகாய் அரைப்பது போல எரிகின்றது!

 

மற்றும்படிக்கு, நான் இப்படியான பண்டிகைகளை, 1990 களின் பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொண்டாடுவதில்லை! ஆனால், யாரும் வாழ்த்தினால், நானும் திருப்பி வாழ்த்தவும் பின்னிற்பதில்லை! அதாவது எனது கருத்தை, மற்றவர்களிடம் திணிப்பதில் எனக்கு நம்பிக்கையிருந்ததில்லை!

Link to comment
Share on other sites

ஒரே ஒரு சந்தேகம் முருகன் தமிழனா சூரன் தமிழனா சூரன் போர் சகோதர யுத்தமா எனக்கு ஒரு முடிவு தெரியனும் :D

 

Link to comment
Share on other sites

எங்களுக்கு இது முக்கியம் இல்லை பாறை சோறு தான் முகியம் முதலில்வயித்தை கவனிப்பம் அப்புறம் ஆராய்ச்சி

Link to comment
Share on other sites

ஒரே ஒரு சந்தேகம் முருகன் தமிழனா சூரன் தமிழனா சூரன் போர் சகோதர யுத்தமா எனக்கு ஒரு முடிவு தெரியனும் :D

 

ஆறு நாட்கள் மிளகு தண்ணியோடை ஆறு வருசம் விரதம் இருப்பவர்களுக்குத்தானாம் முடிவு தெரியும். ( ஐரோப்பா குளிரிலை உடம்புக்கு என்னவாலும் நடந்தால் முருகன் பொறுப்பில்லை. )  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.