Jump to content

பிரபல கவிஞர் வாலி காலமானார்.


Recommended Posts

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் வாலி சுயநினைவை இழந்தா நிலையில் சற்று முன்னர் காலமானார். நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிஞர் வாலி சிகிச்சை பலனின்றி   காலமானார்.

 

http://dinaithal.com/cinema/17332-wali-died-a-famous-poet.html

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

செந்தமிழ்க் கவிஞர் காவியக் கவிஞர் என் உயிரிலும் மேலான கவிஞர் வாலி அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள். அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்கள் 

Link to comment
Share on other sites

 

வாலிபக் கவிஞருக்கு இரங்கற்பா!

-----------------------------------------------------

தலை நரை கடந்தும் 

தலைமுறை கடந்தும்

நரைக்காத எழுத்துக்கு 

சொந்தக்காரரே!

எத்தகு பாடல் கேட்டாலும்

யார் கேட்டாலும்

அள்ளக்குறையா 

உன் மனக்கேணியில்

வாளி வாளியாய் இறைத்து

திரையுலகின் மனம் நிறைத்த

வாலியே!

இலக்கியத்தில் 

வண்ணத்தமிழ் குழந்தைக்கு 

பாலூட்டும் தாயாகவும் 

திரையுலகில் 

தாய் சொல்லைத் தட்டாத 

செல்லக் குழந்தையாகவும்

கூடு விட்டு கூடு பாய்ந்த 

வித்தகனே!

கூடு விட்டுப் போனதேன் இன்று? 

திரையுலகில் 

இளையோர் பெரியோர் 

அனைவருக்கும் 

இனியவர் வாலி! 

இனி எவர் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனந்தோய்ந்த கண்ணீர் வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் !

Link to comment
Share on other sites

ஆயிரக்கணக்கான பாடல் வரிகள் மூலம் கோடிக்கணக்கான தமிழர்களை மகிழ்வித்த கவிஞருக்கு நன்றியும் இறுதி வணக்கமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் 

Link to comment
Share on other sites

தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.

அவருக்கு வயது 82.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

 

18-vaali-poeter-600.jpg

 

எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார்.

திரையுலகில் அதிக பாடல்களை எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார்.

வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.

வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும் பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

www.thatstamil.com

 

Link to comment
Share on other sites

VaaliM.jpg

தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 82.
 

மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=23152

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எம்.ஜி.ஆர். முதல் தனுஷ் வரை!

உடல்நலக்குறைவால் காலமான கவிஞர் வாலி திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் 1931ல் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். எம்.ஜி.ஆர். தொடங்கி தற்போது உள்ள... தனுஷ் வரை பல்வேறு கதாநாயகர்களுக்கு திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார்

கவிஞர் வாலிக்கு 2007ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் கவிஞர் வாலி

சிறுகதை, கவிதை, உரைநடை நூல்களையும் வாலி எழுதியுள்ளார் கவிஞர் வாலி
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வாலி (82) என்ற ரங்கராஜன் அவர்கள் காலமானார்..

1958ல் தொடங்கி இதுவரை 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்...

ஆழந்த அனுதாபங்கள்.... 

 

கண்ணீர் அஞ்சலிகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கவிஞர் வாலி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

Top-Stories-Image27.png

 

பிரபல கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான கவிஞர் வாலி(வயது 82) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன், சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மிகவும் மோசமானது.

அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  வாழ்க்கை வரலாறு

திருச்சி மாவட்டத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.

எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த இவரது தத்துவ பாடல்கள் கொண்ட வார்த்தைகள், வரிகள் பெரிதும் உதவியாக இருந்தது.

See more at: http://vuin.com/news/tamil/vaali-famous-tamil-poet-and-lyricist-dies

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

brilliant-sympathy-wreath-funeral-flower

 

தமிழீழத்தையும், அம்மக்களையும்... நேசித்த ஒரு, மிகப் பெரிய தெய்வக் கவிஞன்.

அவரின் இழப்பு, எமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் துயரும்.. உற்றார், உறவினர், அவரின் ரசிகர்கள் ....... அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள் .

சந்தோசமாக போய்வாருங்கள் .நீங்கள் எமக்கு தந்த விட்டு போகும் சொத்துக்கள்  காலத்தால் அழியாதவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டு தமிழ் திரையுலகம் பல மூத்த மற்றும் சிறப்பான கலைஞர்களை இழந்திருக்கிறது. அதில் வாலியும் இணைந்து கொண்டுள்ளார்.

 

ஐயாவின் மரணத்தை இட்டு.. ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணீரஞ்சலியும்.

Link to comment
Share on other sites

தமிழர் சரித்திரத்தில் என்றும் அழிக்கமுடியாதபடி தனது கவிகளால் தமிழையும் ,கலையையும் வாழவைத்த தெய்வம் இன்று வானகம் சென்றதேனோ ......................உங்கள் ஆத்மா என்றும் இறைவனுள் நித்தியமாக இளைப்பாறக்கடவதாக ..............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.