Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01


Recommended Posts

அன்பர்களே,

 

யாழ் இணையத்தில் கடந்தவருடம் மாதாந்தம் பொற்கிளி(ழி) முயற்சியை எமது நிறுவனம் வழங்கியது. இவ்வருடம் நான்கு காலாண்டுகளிற்கு இம் முயற்சி மட்டுப்படுத்தப்படும் என நாம் அறிவித்தோம்.

 

முதல் காலாண்டிற்கான பொற்கிளி(ழி) முடிவை இங்கு, இப்போது உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம்.

 

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01

 

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆக்கங்கள் கடந்த மூன்று, நான்கு மாதங்களில் யாழ் இணையத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 

அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி [ ஆக்கம்: நிழலி ]

 

இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு [ ஆக்கம்: இன்னுமொருவன் ]

 

எங்கள் பாலனின் பாதத்தில் [ ஆக்கம்: வாத்தியார் ]

 

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் [ ஆக்கம்: யாழ் கருத்துக்கள உறவுகளின் கூட்டு முயற்சி ]

 

காமாட்சி [ ஆக்கம்: புங்கையூரன் ]

 

புலம் பெயர் அப்பனும் வெளிநாட்டு பிள்ளையும் [ ஆக்கம்: விசுகு ]

 

இவை தவிர, வெவ்வேறு கருப்பொருட்களில் பலவிதமான விடயங்கள் பற்றிய பலநூறு தலைப்புக்கள் வாசகர்களினதும், யாழ் உறுப்பினர்களினதும் கவனத்தை ஈர்த்தன.

 

யாழ் இணையத்தில் குறிப்பிட்ட ஆக்கங்களை படைத்த படைப்பாளிகள்/கருத்தாளர்களிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

 

மேற்கண்ட படைப்பாளிகள்/கருத்தாளர்களிற்கு பக்கபலமாக தமது பதில்கருத்துக்களை எழுதி, தமது எண்ணங்களையும் வெளிப்படுத்திய யாழ் கள உறவுகளுக்கும், விருப்பு வாக்குகளை வழங்கி ஊக்கம் நல்கிய யாழ் கள உறவுகளுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

 

யாழ் இணையத்தில் வரும் ஆக்கங்களை ஆவலுடன் வாசிக்கின்ற வாசகர்களிற்கு நன்றி உரித்தாகட்டும்.

 

******

 

கைத்தொலைபேசிகள், கையடக்க உலவு கருவிகளே எதிர்காலத்தில் வலையுலகை கோலோச்சும் என்று பல இணையத்துறை விற்பன்னர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கைத்தொலைபேசிகளூடாய், ஏனைய கையடக்க உலவு கருவிகள் ஊடாக இணையத்தில் உலவும் மக்களின் தொகை நாளாந்தம் மில்லியன்களாக அதிகரித்து வருகிறது. எனவே, கையடக்கமான கருவிகள் ஊடாய் வலைத்தளங்களை பார்ப்பதற்கு ஏற்றவகையில் ஒவ்வொரு தளங்களும் தமது செயற்பாட்டு அமைப்புக்களில் புதிய உத்திகளை கையாள வேண்டியதன் முக்கியத்துவம் தற்போது உணரப்பட்டு வருகிறது.

 

இந்தவகையில், பலருக்கும் பயன்பாட்டிற்காய் யாழ் இணையத்தையும் முன்னேற்றும் வகையில் நல்லதோர் முயற்சியை மேற்கொண்ட கருத்தாளரிற்கு 2013 - காலாண்டு 01 இற்கான நினைவு பரிசு வழங்கப்படுகிறது.

 

யாழுக்கு ஒரு ஆன்ரொயிட்/அப்பிள் அப்ஸ் யார் செய்வீங்க..?! [ ஆக்கம்: நெடுக்காலபோவான் ]

 

2013 - காலாண்டு 01 பொற்கிளி(ழி)யை பெறும் நெடுக்காலபோவானிற்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

"வரப்புயர நீர் உயரும்!

நீர் உயர நெல் உயரும்!

நெல் உயரக் குடி உயரும்!

குடி உயரக் கோல் உயரும்!

கோல் உயரக் கோன் உயர்வான்!"என்பதற்கிணங்க,

ஆக்கபூர்வமான முறைகளில் கருத்துக்களத்தை பயன்படுத்தி யாழ் இணையத்தின் உயர்ச்சி மூலம் நாம் அனைவரும் உயர்ந்துகொள்வோம்!

 

நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 - முதலாவது காலாண்டுக்கான... பொற்கிளி(ழி)யை பெற்ற‌ நெடுக்காலபோவானிற்கும்,
பாராட்டுகளைப் பெற்ற மற்றைய, உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,
பல வேலைப்பழுவிற்கு மத்தியிலும்.... யாழ் களத்திற்காக, தனது நேரத்தை ஒதுக்கி... பரிசில்களை வழங்கிய CarDriving.CA நிறுவனத்திற்கு இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் புதிய ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான பொற்கிழியைப் பெற்றுக்கொண்ட, கள உறவான நெடுக்கருக்கும், பாராட்டுக்கள் பெற்ற பதிவிட்டவர்களான, நிழலி, இன்னுமொருவன், வாத்தியார், விசுகு,மற்றும் பட்டிமன்றத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கடினமான பொருளாதாரச் சூழலிலும், யாழ் களப் பொற்கிழி நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும், எனது அபிமானத்துக்கும், பெருமதிப்புக்குமுரிய போக்குவரத்து நிறுவனத்துக்கும், எனது வாழ்த்துக்களும் நன்றிகளும், உரித்தாகட்டும்!

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற நெடுக்ஸ் அண்ணாக்கும் பாராட்டு பெற்ற ஏனைய கள உறவுகளுக்கும் வாழ்த்துகள். :)

பலவித பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இந்த நேரத்திலும் பொற்கிழி வழங்கி ஊக்குவிக்கும் போக்குவரத்து அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். :)

 

பச்சை முடிந்து விட்டது. பின்னர் வந்து போடுகிறேன். :)

Link to comment
Share on other sites

பொற்கிளியையும் மற்றும் பாராட்டுகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக!.

 

இன்றைய கணணித் தொழில்நுட்பத் துறையால் ஈர்க்கப்பட்டுள்ள இளைஞர்களை நெடுக்ஸ் அவர்களின் முயற்சியானது யாழ்களத்தை நோக்கித் திரும்பவைக்கும். இளைஞர்கள் வருகையால் யாழ் மேலும் வளர்ச்சியைப் பெறலாம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 - முதலாவது காலாண்டுக்கான... பொற்கிளி(ழி)யை பெற்ற‌ நெடுக்காலபோவானிற்கும்,

பாராட்டுகளைப் பெற்ற மற்றைய, உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,

எனது பதிவையும் பாராட்டுக்குரியதாக்கிய  கள உறவுகளுக்கும்

அதற்கான பாராட்டைத்தந்த    போக்குவரத்து அவர்களுக்கும் மற்றும்

பல வேலைப்பழுவிற்கு மத்தியிலும்.... யாழ் களத்திற்காக, தனது நேரத்தை ஒதுக்கி... பரிசில்களை வழங்கிய CarDriving.CA நிறுவனத்திற்கு இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி(ழி) ஊக்குவிப்புத் தந்த போக்குவரத்துக்கு (CarDriving.CA) நன்றிகளோடு.. இதர பாராட்டுப் பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துக்களும்.. உரித்தாகட்டும். போக்குவரத்து சிரமமான நிதி நிலையின் கீழும் இதனை முன்னெடுத்துச் சொல்ல முனைவதற்கு விசேட நன்றிகளும் பாராட்டுக்களும்..! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

சிரமங்கக்கிடையிலும் நிகழ்வைத் தொகுத்தளிக்கும் போக்குவரத்திற்கும் பரிசில் பெற்ற நெடுக்காலபோவானிற்கும் ஏனைய பாராட்டுக்களைப் பெற்ற ஆக்கங்களிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது சொந்த நிதி நெருக்கடியின் மத்தியிலும்.. நாம் பல தயக்கங்களை வெளிப்படுத்திய நிலையிலும் கூட.. நினைவுப் பரிசிலை தாமதங்கள் ஏதுமின்றி.. தந்துள்ள.. போக்குவரத்து..(CarDriving.CA).. க்கு எமது மனமார்ந்த நன்றிகள். யாழ் இணையக் களத்திற்கும் நன்றி.

 

Yarl_AWARD_CarDriving.CA.png

 

 

நட்புடன் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களை தெரிவித்த ராஜவன்னியன்,  தமிழ் சிறி, புங்கையூரன், துளசி, Paanch, விசுகு, nedukkalapoovan, Manivasahan விருப்ப தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி.

 

"வரப்புயர (நேர்த்தியான கட்டமைப்பு) நீர் (ஊக்கம்) உயரும்!

நீர் (ஊக்கம்) உயர நெல் (தரமான கருத்துக்கள்) உயரும்!

நெல் (தரமான கருத்துக்கள்) உயரக் குடி (யாழ் வாசகர் வட்டம்) உயரும்!

குடி (யாழ் வாசகர் வட்டம்) உயரக் கோல் (யாழ் இணையத்தின் மதிப்பு) உயரும்!

கோல் (யாழ் இணையத்தின் மதிப்பு) உயரக் கோன் (கருத்தாளர்கள்) உயர்வான்!"என்பதற்கிணங்க,

ஆக்கபூர்வமான முறைகளில் கருத்துக்களத்தை பயன்படுத்தி யாழ் இணையத்தின் உயர்ச்சி மூலம் நாம் அனைவரும் உயர்ந்துகொள்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி விருது 2013 இலும் தொட‌ர்வ‌து ப‌ற்றி போன‌ வார‌ம் தான் அறிந்தேன். பொற்கிளி பெற்ற‌ நெடுக்கிற்கு வாழ்த்துக‌ள். தொட‌ர்ந்து யாழோடு இணைந்திருக்கும் போக்குவ‌ர‌த்திற்கு ந‌ன்றிக‌ளும் பாராட்டுக‌ளும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி(ளி) பெற்ற நெடுக்கருக்கு என் வாழ்த்துக்கள். அத்துடன் பலசிரமங்களின் மத்தியிலும் இந்த நிகழ்வை முன்னெடுத்துச்செல்லும் போக்குவரத்திற்கு  உளமார்ந்த பாராட்டுக்கள்.

 

Link to comment
Share on other sites

பொற்கிளி பெற்ற நெடுக்குவிற்கும் பாராட்டு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் தனது சேவையை தொடரும் போக்குவரத்துக்கு பாராட்டுகளும் நன்றிகளும்

 

Link to comment
Share on other sites

கருத்துக்களை வழங்கிய Justin, அலைமகள், குமாரசாமி, நந்தன், வந்தியதேவன், விருப்ப தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி. கடந்த வருடம் மாதாமாதம் உங்கள் அமோக ஆதரவுடனும், பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்ட பொற்கிளி(ழி) முயற்சி இந்தவருடமும் சிறிய அளவிலாயினும் தொடர்ந்தும் திருவினையானதற்கு நீங்களே முக்கிய காரணம். பொற்கிளி முயற்சிக்கு பங்களிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு காலாண்டு 01 - 2013 யாழ் நினைவு பரிசை பெற்ற நெடுக்காலபோவானுக்கும், சிறந்த ஆக்கங்களை/கருத்துக்களை வழங்கிய ஏனைய கருத்தாளர்களுக்கும் மீண்டுமொருமுறை பாராட்டுக்களை கூறுகின்றோம்.    

 

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற நெடுக்ஸ் இற்கு வாழ்த்துக்கள், சிறந்த ஆக்கங்களை கொடுத்த ஏனையவருக்கும் பாராட்டுகள்.  இதை தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கு நன்றிகள் 

 

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற நெடுக்ஸ் அண்ணாக்கும் பாராட்டு பெற்ற ஏனைய கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

பலவித பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இந்த நேரத்திலும் பொற்கிழி வழங்கி ஊக்குவிக்கும் போக்குவரத்து அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற நெடுக்ஸ்சிற்கு வாழ்த்துக்கள்,

அதுசரி இவர் எப்ப ஒரு பொற்கிளியைக் கைப்பிடிக்கப்போறார்.

 

நெடுக்கரின் இன்னும் சில ஆக்கங்களும் பொற்கிழிக்குத் தகுதியானவையே. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்றுக்கொண்ட நெடுக்ஸ்  அவர்களுக்கும் 

பாராட்டுக்களைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் 

பல இடர்களுக்கு மத்தியிலும் சேவையாற்றும் போக்குவரத்திற்கு நன்றிகள்  

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விருப்ப தெரிவுகளை வழங்கியவர்களுக்கும், கருத்துக்களையும் வழங்கிய பகலவன், SUNDHAL, யாழ்வாலி, வாத்தியாருக்கும், பொற்கிளி(ழி) முயற்சிக்கு ஆதரவும் பங்களிப்பும் வழங்கும் அனைவருக்கும் நன்றி. உங்கள் அமோக ஆதரவே கடந்த ஆண்டு 12 மாதங்களும் பொற்கிளி முயற்சி ஊக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தது. உங்கள் தொடர்ந்த ஆதரவையும், பங்களிப்பையும் இந்த ஆண்டும் எதிர்பார்க்கிறோம். நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டின் முதற் பொற்கிழி பெற்ற நெடுக்சுக்கும் வழங்கிய போக்குவரத்துக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இண்டைக்கு தான் பார்த்தேன்.பொற்கிழியை வழங்கிய போக்குவரத்துக்கும் பெற்றுக்கொண்ட நெடுக்ஸ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

பொற்கிழியை வழங்கிய போக்குவரத்துக்கும் பெற்றுக்கொண்ட நெடுக்ஸ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.