Jump to content

தாலி கட்டிக் கொள்ளும் வயசுப் பையன்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏனுங்க மாமா... இன்னிக்கு என் தாலிய பிரிச்சுக் கட்டணும். சாயுங்காலம் மறக்காம வந்துடுங்க. இன்னிக்குப் போச்சுன்னா, அப்புறம் அடுத்த மாசம்தான் நல்ல நாள் வரும். ஓ.கே.வா? சரி, ஒரு உம்மா கொடுடா ப்ளீஸ்..." _ எதிர்முனையில் இச்சப்தம் இனிப்பாகக் கேட்டதும், செல்போனை கட் செய்து, பேண்ட்டுக்குள் செருகியபடி ஸ்கூலுக்குள் நுழைகிறான் அந்த மாணவன்.

முதல் பாராவைப் படித்ததும், 'ஏதோ... புது லவ் மேரேஜ் ஜோடியா இருக்கும்' என்ற முடிவுக்கு வந்த நீங்கள், 'அந்த மாணவன்' என்ற வார்த்தையைக் கடந்ததும் கொஞ்சம் அதிர்ந்துப் போயிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதிர்ச்சியைக் கொஞ்சம் மீதி வையுங்கள். ஏனெனில், 'ஏனுங்க மாமா' என்று அழைத்துக் காதல் பொங்கப் பேசியதும்கூட ஒரு மாணவன்தான்.

ஆண் உருவத்துக்குள் பெண் மனதோடு அலையும் 'அந்த' வட்டாரத்தை, 'ஹோமோ வெறியர்கள்' என்று அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களோ, படிப்படியாகத் தங்களைத் தயார் செய்து, பாரம்பரியம், கலாசாரம், மரபு என்று அத்தனை விஷயங்களுக்கும் இன்று சவால் விட ஆரம்பித்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான் படு ஸ்பீடாகப் பரவி வரும் 'துமாலி கட்டும்' வைபவம். தாலி கட்டிக் கொள்வதைத்தான் இப்படித் 'துமாலி கட்டுதல்' என்றழைக்கின்றனர். விஷயத்தைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா? (இங்கே நாம் சந்திக்கப் போகும் நபர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் உண்மையான பெயர்களை மாற்றியுள்ளோம்).

ஜோடி_1

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் வழியிலுள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவன் நித்யானந்தம். இயல்பிலேயே அவனுக்குள் பெண் தன்மை அதிகம். இதனால் அவனைச் சுற்றியுள்ள அனைவரும் அவனைத் தள்ளிவைத்துப் பார்க்க, அவனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது. தினமும் காலையில் ஸ்கூலுக்குப் போவதற்காக, இவன் நிற்கும் பஸ்_ஸ்டாப்பில் வந்து நிற்பவர்களில் விஷாலும் ஒருவன். விஷால், ஈரோட்டிலுள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்ஸி. மூன்றாமாண்டு படிக்கிறான். நண்பர்களின் புறக்கணிப்பு, ஹோம் ஒர்க் டென்ஷன் என்றெல்லாம் அசைபோட்டபடியே பஸ்_ஸ்டாப்பிற்கு வரும் நித்யானந்தம், விஷாலைக் கண்டதும், எல்லாவற்றையும் மறந்துவிடுவான். தன்னுடன் படிக்கும் எந்தப் பையனும் விஷால் அளவுக்கு அழகில்லை என்பது நித்யானந்தத்தின் அசைக்க முடியாத எண்ணம். இந்நிலையில் விஷாலும், அவன் பக்கம் திரும்பி, விழுங்கிவிடுவது போன்று அவ்வப்போது பார்ப்பான்.

கொஞ்சம் நாட்களில் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல நெருக்கமாகிப் போனது. விஷால் பஸ் சீட்டில் உட்கார்ந்ததும், அவன் மடியில் இவன் உட்கார்ந்துகொள்ள ஆரம்பித்தான். அந்தச் சமயங்களில் விஷாலின் கை தன் இடுப்பை வளைத்துப் பிடித்திருப்பதில் நித்யானந்தத்துக்கு உலகம் மறந்து போகும். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேரும் அவுட்டிங் போயிருந்த நேரத்தில், தன் காதலை விஷாலிடம் நித்யானந்தம் தெரிவிக்க, அப்போதே அதை ஏற்றுக்கொண்டான் விஷால். அன்றிலிருந்து அடிக்கடி வெளியூர் போவதும், லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்குவதும் தொடர்ந்தது.

இந்நிலையில்தான், கடந்த, திங்கட்கிழமையன்று இருவரும் திருச்செங்கோடு மலைக் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்கள். அதைப் பற்றி நம்மிடம் பேசிய விஷால், "எனக்கு என் காலேஜ்ல ரொம்ப நெருக்கமான கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க கூடவும் நான்அவுட்டிங் போவேன். ஆனா, நித்யா (நித்யானந்தம்) எனக்காகவே வாழுறா. அதனாலதான், நித்யா கேட்டதும் தாலி கட்ட சம்மதிச்சேன். மஞ்சள் கயிறுல எங்க முறைப்படி தாலி செஞ்சு, கோயிலுக்கு வெளியே நின்னு கட்டினேன். இதுல ரெண்டு பேருக்குமே சந்தோஷம்தான். இப்போ நாங்க ரெண்டு பேரும், முழுமையான கணவன், மனைவி" என்றான் சந்தோஷம் பொங்க. நித்யாவிடம்....ஸாரி... நித்யானந்தத்திடம் பேசினோம். "என்னையும் ஒரு பொண்ணா மதிச்சு அவர் தாலி கட்டுனதே பெரிய விஷயம். எனக்கு இந்தத் தாலியை எப்பவுமே கழுத்துல போட்டிருக்கணும்னு ஆசைதான். ஸ்கூல்ல எந்தப் பையனையும் என் பக்கம் வரவிடமாட்டேன். அவனுங்ககிட்டயிருந்து தப்பிடலாம். ஆனா, எங்க கிளாஸ் பொண்ணுங்ககிட்டயிருந்து தப்பிக்கிறதுதான் கஷ்டம். அவளுங்க தாலியப் பார்த்துட்டா சிக்கல்தான். அதே மாதிரி, வீட்ல அம்மாகிட்டயும் மாட்டிப்பேனோனு பயமாயிருக்கு" என்றா(ள்)ன் வெட்கம் விலகாமல்.

ஜோடி_2

ஈரோட்டில் செல்போன் விற்பனை மையம் நடத்திவரும் கணேஷ், இப்போது தன் பெயரை நயன்தாரா என்று மாற்றிக் கொண்டுள்ளார். முப்பது வயதை நெருங்கிவிட்ட இந்த நயன்தாரா திருமணம் செய்துகொண்டுள்ளது, கோவையைச் சேர்ந்த பாஷாவை. மொபைல் வாங்கும் கஸ்டமராக வந்த பாஷா, நயன்தாராவின் அழகில் மயங்கி, பிறகு அவருக்கே கஸ்டமராகிப் போனார். நயன்தாராவுக்குப் பல பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் கூட, தாலிகட்டிக் கொண்டது பாஷாவிடம் மட்டும்தான். கடந்த மே மாதம் பேரூர் கோயிலுக்கு வெளியே இரவு நேரத்தில் தாலி கட்டிக் கொண்டுள்ளனர். அப்படியே ஐந்து நாட்கள் ஊட்டிக்கு ஹனிமூனும் போய் வந்துள்ளனர். இப்போது நயன்தாராவுக்கு மட்டுமல்ல... அந்த மொபைல் கடைக்கே, திரைமறைவு ஓனர் பாஷாதான். பாஷாவிடம் 'உங்களுக்குப் பிடித்தது எது?' என்று நயன்தாராவிடம் கேட்டால், "அவரோட க்யூட்டான முன் வழுக்கையும், நீளமான விரல்களும்தான்" என்கிறா(ள்)ர் வெட்கம் கலந்த சிரிப்புடன்.

இப்படி ஈரோடு டீ மாஸ்டரிடம் தாலி கட்டிக் கொண்ட நாமக்கல் பாலிடெக்னிக் மாணவன், சேலம் மெடிக்கல் ரெப் ஒருவருக்குத் தாலி கட்டிய கோபிசெட்டிபாளையம் மினிபஸ் டிரைவர் என்று, பல ரக ஜோடிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கவனிக்க வேண்டும். இவர்கள் யாரும் முழுமையான அரவாணிகள் இல்லை. நிர்வாணம் (ஆண் உறுப்பை அறுத்துக் கொள்ளுதல்) செய்து கொண்டவர்கள்தான் முழுமையான அரவாணிகள். நாம் சந்தித்த இந்த நபர்கள், நிர்வாணம் செய்து கொள்ளாதவர்கள். அரவாணிகளுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் எனலாம். நடை, உடை, ஆண்கள் மீதான மோகம் போன்றவற்றில் பெண்களை இமிடேட் செய்து கொண்டிருக்கும் இவர்கள், 'கோத்தி' என்று அழைக்கப்படுகிறார்கள். ஹோமோ செக்ஸில் ஆர்வமுள்ள ஆண்கள், இவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அந்த ஆண்களை இவர்கள் 'பந்தி' என்று அழைக்கிறார்கள்.

ஈரோடு நகருக்குள் ஏகப்பட்ட கோத்திகள் இருந்தாலும், கிட்டத்தட்ட இருபது நபர்கள்தான் தாலியோடு அலைகிறார்கள். இதே போல் சேலம், கோவையிலும் துமாலி கட்டிக் கொண்ட கோத்திகள் இருக்கின்றனர். இவர்களின் தாலிகளில், இரண்டு மூன்று வகைகள் உண்டு. ஒரு சிலர், மஞ்சள் கயிற்றில் தாலியுடன் சேர்த்து மெட்டியையும் போட்டுக் கொள்கின்றனர்.

ஈரோட்டைப் பொறுத்தவரை, இப்படித் தாலிகட்டிக் கொண்டவர்கள் சந்தித்துக் கொள்ளும் முக்கியமான பாயிண்ட், பேருந்து நிலையம் அருகிலுள்ள வ.உ.சி. பார்க். வாரம் ஒருமுறை இவர்கள் இங்கே கூடி காதல், செக்ஸ், பாய் ஃப்ரெண்ட்ஸ் என்று அத்தனை விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதை முடித்துவிட்டு ஷாப்பிங் போவது, ப்யூட்டி பார்லர் போவது என்று இவர்கள் பொழுது கழிகிறது. ப்யூட்டி பார்லருக்குப் போய் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

ஈரோட்டில் M S M (Male Social Moment Society) என்ற பெயரில் இந்தக் கோத்திகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அசோக்கிடம் பேசினோம்.

"அரவாணிகளின் நல்வாழ்விற்காக, ஓர் அமைப்பை ஆரம்பித்து இயக்கி வருகிறோம். இதற்காக அரவாணிகளின் மத்தியிலிறங்கி ஆராயும்போதுதான் இந்த 'கோத்தி' என்ற பிரிவைப் பற்றித் தெரிய வந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களைக் கேவலமாக நினைக்கலாம். ஆனால், உண்மையில் இவர்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள்.

இந்த மாதிரி சிறுவர்களை ருசிப்பதற்கென்றே சமுதாயத்தில் ஒரு பெரும் கூட்டம் திரிகின்றது. நான் இதுவரை கவுன்சிலிங் செய்துள்ள பல 'கோத்தி' சிறுவர்கள், தங்கள் உறவினர்களாலும், அக்கம் பக்கத்துப் பையன்களாலும்தான் வலுக்கட்டாயமாக செக்ஸ§க்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்லமா காதுக்குள்ளை இருக்கட்டும் ....

.... இங்கு லண்டனிலை "உண்டியலான்" ஜெயதேவனும், "சப் உண்டியலான்" விவேகானந்தனும் தாலி கட்டப்போகினமாம்!!!! வேறை யாருக்குமல்ல! மாறித்தானாம்!! அவ்வளவு நெருக்கமாம்!!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஊஊஉ....

சத்தம்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் எதற்கும் நீர் சேட்டு போட்டு கொள்ளும்.....

Link to comment
Share on other sites

ஈழவன் எதற்கும் நீர் சேட்டு போட்டு கொள்ளும்.....

அவர் சேட்டை விட்டுட்டார்!! :P :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.