Jump to content

"....கண்டேன் என் க....."


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர் ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான் கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில் போய்சேரும்.

எங்களுக்கு என்ன வரும் ??????

"தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”,

"எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ "

"இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்"

நான் எம்.ஜி.ஆர் ,சிவாஜி , எல்லாம் அந்த காலத்தில

பார்த்தனான் இந்த புதுசா நடிக்கறவங்கள் ஒருத்தரையும் பார்க்க கிடைக்கவில்லை,இந்த சந்தர்ப்பத்தையும் விட்டால் இனி என்ட வாழ்க்கையில் எப்பகிடைக்குமோ? இல்லாட்டி கிடைக்காமலயே மண்டையை போட்டுவிடுவனோ தெரியாது"

ஆச்சி இப்படி சொன்னபடியால் எனது மனது கொஞ்சம் இலகி போய்விட்டது.

"ஆச்சி கோவிலுக்கு போய் சாமியை கும்பிடப்போறீங்கள் என்றால் சொல்லுங்கோ கூட்டிகொண்டு போரன்.உந்த சினிமா கதாநாயகனை தூக்கி பிடிக்க நான் வரமுடியாது,மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஆச்சி."

" நீ கூட்டிக் கொண்டு போகட்டி உன்ட மனிசியை கூட்டிகொண்டு போகசொல்லு"

"அவள் வந்தா கூட்டிகொண்டு போங்கோ"

கலியாணத்திற்க்கு பின்பு மனிசிக்கு நான் தான் கதாநாயன் என்று நினைத்திருந்தேன்.ஆனாபடியால் சினிமா கதாநாயகனிடம் அவ்வளவு மோகம் இருக்காது .ஆச்சியை அழைத்து செல்லமாட்டாள் என்றிருந்தேன்.ஆனால் அவளும் ஆச்சியும் சேர்ந்துதான் திட்டம் போட்டிருக்கிறார்கள் பின்பு தான் தெரியவந்தது.

"வயசு போன நேரத்தில் ஆச்சி கேட்கிறா,கூட்டிக் கொண்டு போயிட்டு வரட்டேயப்பா"

"சரி,அவர் எந்த ஹொட்டலில் நிற்கிறார் என்று தெரியுமோ?எங்க போய் பார்க்கப் போறீங்கள்."

"அவர் உங்க பராமட்டாவில் ஒரு ரெஸ்டோரன்டில் சூட்டிங்க்கு வந்திருக்கிறார் ஆச்சியுடன் போய் பார்த்துவிட்டு வாரன் "

என்று காலையில் வெளிக்கிட்டவையள் வரும் பொழுது பிற்பகல் 4 மணி ஆகியிருக்கும்.

"அடி பிள்ளை, இவன் தம்பியை ஒரு பக்கமாக பார்த்தால் விஜய் மாதிரி இருக்கு என்னடி" ஆச்சி லெட்டா வந்ததுக்கு கொஞ்சமாக ஐஸ் வைத்தார்.

"விஜயயை படத்தில் பார்த்ததிலும் பார்க்க நேரில் பார்க்கும் பொழுது கூட வடிவாக இருக்கிறார்."என ஆச்சி மனிசிக்கு கொமனட் அடிச்சுது.

வயசு போனதுகள் ஊரில் படம் பார்த்து பழகினதாலும்,வெளிநாட்டுக்கு வந்து டிவி யில் படம்பார்த்த பழக்கதோசத்தாலும் இந்த கதாநாயக வழிபாடு,மோகம் இருக்கும் என எண்ணிகொண்டிருக்கும் பொழுது என்னுடைய கை தொலைபேசி ஒரு ராகத்துடன் சினுங்கியது.

"கலோ "

"யார் சுரேஸோ"

"ஒம் சுரேஸ் தான்"

"நாளைக்கு விஜய்யின் சூட்டிங் எங்க நடக்குது என்று தெரியுமோ"

"நான் அவரின்ட பி.ஏ இல்லை"

"சும்மா பகிடி விடாமல் சொல்லுங்கோ,உங்கன்ட மனிசிதான் , ஆச்சி விஜயை பார்க்க கூட்டிக்கொண்டு போனவவாம்"

"எனக்கு தெரியாது ,எதற்கும் லைன்னில் இரும் மனிசியிட்டை கேட்டு சொல்லுறன்"

"இஞ்சாரும் இவன் விஜய் சிட்னியில எங்க நிற்கிறான் என்று கனகர் கேட்கிறார் உமக்கு தெரியுமோ "

" இன்றைக்கு டார்லிங் காபரில ,நாளைக்கு காலையில திருப்பியும் பரமட்டா பார்க்கில்,நாளைக்கு பின்னேரம் காபர் பிரிட்ஜ்,நாளன்டைக்கு ....."இப்படி மனிசி அடிக்கு கொண்டே போனாள்.

" கனகு இந்தா மனசியிட்டயே கேள்ளப்ப" எண்டு தொலை பேசியை கொடுத்துவிட்டேன். இவளுக்கு எப்படி விஜய்யின் செடுல் எல்லாம் தெரியும் என்று மில்லியன் டொலர் கேள்வி மனதில் எழும்பியது.சரி பொம்பிளைகள் தான் விஜய்யை பார்க்க அலையுதுகள் என்றால் இவன் கனகனும் அலையிறான் பரதேசி என மனதிற்குள் திட்டிப்போட்டு விட்டிட்டேன்.

மனிசியின் கைதொலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கு என சினுங்கிச்சு நான் கண்டுகொள்ளவில்லை.கைதொலைபேசி வழங்குனர் காசு கட்ட சொல்லி செய்தி அனுப்புறான் எண்டு போட்டு பேசாமல் இருந்திட்டேன்.

வீட்டு தொலைபேசி அலறியது .

"கலோ"

" அங்கிள் அண்டி இல்லையோ?"

"வீட்டு வேலையா இருக்கிறா "

"அண்டியிட்ட சொல்லுங்கோ நான் விஜய்யின் சூட்டிங்கில் நிற்கிறன் என்றும்,அவவின்ட மொபைலுக்கு நான் விஜயின் தோலில் கை போட்டுக் கொண்டு எடுத்த படம் அனுப்பியிருக்கிறன் எண்டும் சொல்லுங்கோ"

மனிசியிட்ட சொன்னதுதான் செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் அப்படியே விட்டிட்டு மொபைலில் வந்த விஜயின் படத்தை பார்த்து ரசித்தாள்.ஆச்சிக்கும் தகவல் பரவியது.வீட்டுக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன்.ஆச்சியுடன் அவரின் பேத்தி சுருதியும் நின்றாள்.சுருதியும் கணவனும் கணக்காளராக பணிபுரிகின்றனர். கணவன் விஜயை விடவும் அழகானவன் அவனே ஒரு கதநாயகன் போலத்தான் இருப்பான்.

"அண்டி விஜய்யின் சூட்டிங்பக்கத்திலதான் நடக்குது வெளிக்கிடுங்கோ போய் பார்ப்போம்,சுமி இப்பதான் எஸ். எம்.எஸ் அனுப்பினவள் "

சுமிதா பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டில் பயில்கின்றாள் அவளை எல்லோரும் செல்லமாக சுமி என அழைப்பார்கள்.

விஜயயின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற அவசரத்தில் எல்லொரும் வெளிக்கிட்டு ஒடினார்கள்.காலை 10 மணியளவில் புறப்பட்டவர்கள் மாலை 5 மணியளவில் வீடு திரும்பினார்கள்.

"அட தம்பி ஒரு தேத்தண்ணி போடடா குடிப்பம் சரியா கலைக்குது"

" ஆச்சி உந்த வயசில உங்களுக்கு உது தேவையா?"

"வேற என்னத்தை கண்டேன்"

"ஏன் அப்புவை கண்டனியள் தானே ...அதுசரி அப்பு விஜய் மாதிரி இருப்பாரோ?"

"சும்மா போடா ....அவர் ஜெமினி மாதிரி இருப்பார் ஆனால் கருப்பு"என்று சொல்லி வெட்கப்பட்டார்.மனிசி கொண்டு வந்த குளிர்பாணம்,சுடு பாணம் பருகியபடியே விஜய் புராணம் தொடங்கியது.

சுமி அங்கு எடுத்த படங்களை எல்லொருக்கும் காட்டினாள் ,அத்துடன் ஒட்டோகிராப்பில் சைன் வாங்கியதாகவும் அப்பொழுது விஜய்யின் கை தனது கையை தொட்டதாகவும் ஆனபடியால் இன்று தான் கை கழுவப்போரதில்லை என சொல்லி மகிழ்ந்தால்.

மனுசனுக்கு தெரியாமல் ஹொட்டலுக்கு பூச்செண்டு அனுப்பியதாகவும் .அதை அனுப்புவதற்கு தான் பட்ட கஸ்டங்களை சொல்லி பூரிப்படைந்தாள் சுருதி.

சிவாஜி கனேசன் பைலட் பிரேமநாத் படசூட்டிங்க்கு வந்த பொழுது சிவாஜியுடன் எடுத்த படத்தை 83 இனக்கலவரத்தில் சிங்களவன் எரித்துவிட்டான் என்று சொல்லி ஆச்சி துக்கப்பட்டாள்.

கலியாண கட்டின புதுசில இந்தியாவுக்கு போனபொழுது இந்த மனுசனை சூட்டிங் பார்க்க கேட்க கூட்டிகொண்டு போகமாட்டேன் எண்டிட்டார் .ஒரு நாள் எதிர்பாராத விதமாக மோகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த மனுசன் பிலிம் போடாமல் கமராவை தட்டியிருக்கு ,என்று என்ட மனுசி தன்னுடைய கவலையை தெரிவித்தாள்.

இதெல்லாம் கேட்ட எனக்கும் எதாவது சொல்ல வேணும் போல இருந்தது.எனக்கு மயிர் வெட்டுகிறவர்தான் சிட்னியில விஜய்க்கும் மயிர் வெட்டுகிறார்...கி..கி.....

(க)..... தாநாயகன்

ணவன்

டவுள்

யாவும் கற்பனைகலந்த உண்மைகள்(கற்பனை50%...உண்மை50%)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு காலத்திலை, சிலுக்குவோட காரில பக்கத்திலையிருந்து போயிருக்கிறன் எண்டா, நீங்கள் நம்பவே போறீங்கள், புத்தன்? :D

 

மீண்டுமொரு யதார்த்தமான அனுபவத்துடன், புத்தனைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

இடைக்கிடை நீங்கள் வந்து,எங்கட 'சிட்னி' நிலவரத்தை, அப்டேட் பண்ணவேண்டும் என்பது தான், அடியேனின் சிறிய வேண்டுகோள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் புத்தன் அண்ணா உங்களை உறுதிப்படுத்தியுள்ளீர்கள். புலத்தில் நடக்கும் சமகால நிகழ்வுகளை நகைச்சுவையோடு தருவதில் வல்லவர் நீங்கள் :) அதைவிட அதிகம் அலட்டல் இல்லாமல் அளவோடு உங்கள் ஆக்கங்கள் அமைந்திருக்கும். இதனால் இரண்டு மூன்று முறை உங்கள் கதைகளை வாசித்து அனுபவித்துக்கொள்ளலாம். நன்றி

 

Link to comment
Share on other sites

புத்தன் வந்தால் சிட்னி அதிருதோ இல்லையோ யாழ் களம் அதிரும்.விஜயை ஈழத்து மருமகன் என்று கொஞ்சப்பேர். சொல்லி வேலை இல்லை. :D  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நீங்கள் தான் விஜயைப் பார்க்க முன்னுக்கு நின்றதாக ஜமுனா சொன்னார் :lol: உண்மை தானே :D ...நீண்ட நாட்களின் பிறகு உங்கள் கதையை கண்டது மகிழ்ச்சி :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு காலத்திலை, சிலுக்குவோட காரில பக்கத்திலையிருந்து போயிருக்கிறன் எண்டா, நீங்கள் நம்பவே போறீங்கள், புத்தன்? :D

 

மீண்டுமொரு யதார்த்தமான அனுபவத்துடன், புத்தனைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

இடைக்கிடை நீங்கள் வந்து,எங்கட 'சிட்னி' நிலவரத்தை, அப்டேட் பண்ணவேண்டும் என்பது தான், அடியேனின் சிறிய வேண்டுகோள்! :D

 

நாங்கள் நம்புவமல்ல :D..வெகுவிரைவில் சிறிலங்கா நிலவரமும் எடுத்து வருவம்மல்ல... உங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்னை இன்னும் கிறுக்க வைக்கின்றது ,நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் புத்தன் அண்ணா உங்களை உறுதிப்படுத்தியுள்ளீர்கள். புலத்தில் நடக்கும் சமகால நிகழ்வுகளை நகைச்சுவையோடு தருவதில் வல்லவர் நீங்கள் :) அதைவிட அதிகம் அலட்டல் இல்லாமல் அளவோடு உங்கள் ஆக்கங்கள் அமைந்திருக்கும். இதனால் இரண்டு மூன்று முறை உங்கள் கதைகளை வாசித்து அனுபவித்துக்கொள்ளலாம். நன்றி

 

நன்றிகள் யாழ்வாலி ....உங்களை போன்றோரின் ஊக்கப்படுத்தல்தான் என்னைகிறுக்க வைக்கின்றது மீண்டும் நன்றிகள்

 

நன்றிகள் நூனா,,சிட்னியும் சும்மா அதிருது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் நீண்ட காலத்துக்கு பின்பு உங்களின் ஆக்கத்தை வாசித்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் :) .

 

 என்னஇருந்தாலும் வீட்டில் நாங்கள் தான் கதாநாயகர்கள்.

 

Link to comment
Share on other sites

காலத்துக்கேற்ற பதிவு புத்தன். நீண்ட நாட்களின் பின் உங்கள் கிறுக்கலை கண்டத்தில் சந்தோசம். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தன்

மீண்டம் ஒரு குட்டு

 

ஆயிரம் பேரை நாங்க  வைத்திருப்பம்

ஆனால் நம்ம ஆத்துக்காறி ஒருத்தரை பார்க்கக்கூடாது

ஆண்மையின் பலவீனம்????

 

தொடருங்கள்

Link to comment
Share on other sites

சிட்னி நிலைமைகளை எண்ணிச் சிரித்தேன்.. :D  அதுசரி.. இதில எதெல்லாம் உண்மை.. எது கற்பனை? :unsure:  சனங்களை அறியலாமெண்டு ஒரு ஆர்வம்தான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிறீர்கள் புத்தன்.

 

Link to comment
Share on other sites

நானும் ஒரு காலத்திலை, சிலுக்குவோட காரில பக்கத்திலையிருந்து போயிருக்கிறன் எண்டா, நீங்கள் நம்பவே போறீங்கள், புத்தன்? :D

தெரியுதில்ல நம்பமாட்டமெண்டு பிறகென்ன பில்டப் ? :lol:

புத்தன் வளமைபோல இன்னொரு உண்மைகலந்த சினிமா ஆசை சினிமா நாயகனைச் சந்திக்கும் ஆசையும் பற்றிய ஆச்சியின் கதையோடு பலரது மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறீங்கள். சிரித்து ரசித்து வாசித்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு காலத்திலை, சிலுக்குவோட காரில பக்கத்திலையிருந்து போயிருக்கிறன் எண்டா, நீங்கள் நம்பவே போறீங்கள், புத்தன்? :D

 

மீண்டுமொரு யதார்த்தமான அனுபவத்துடன், புத்தனைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

இடைக்கிடை நீங்கள் வந்து,எங்கட 'சிட்னி' நிலவரத்தை, அப்டேட் பண்ணவேண்டும் என்பது தான், அடியேனின் சிறிய வேண்டுகோள்! :D

 

இந்த‌க் க‌தையெல்லாம் வைச்சுக் கொண்டு க‌ம்மெண்டிருந்தால் எப்ப‌டி? எழுதுற‌து? உங்க‌ளைப் ப‌ற்றிக் கூட‌ எழுதாம‌ சிலுக்கைப் ப‌ற்றி எழுதுங்கோ! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நீங்கள் தான் விஜயைப் பார்க்க முன்னுக்கு நின்றதாக ஜமுனா சொன்னார் :lol: உண்மை தானே :D ...நீண்ட நாட்களின் பிறகு உங்கள் கதையை கண்டது மகிழ்ச்சி :)

 

ஜமுனா பிழையாக சொல்லிவிட்டார்....நான் அமலாபொல்லை பார்க்க தவமிருந்தேன் :D

புத்தன் நீண்ட காலத்துக்கு பின்பு உங்களின் ஆக்கத்தை வாசித்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் :) .

 

 என்னஇருந்தாலும் வீட்டில் நாங்கள் தான் கதாநாயகர்கள்.

 

வீட்டில் நாங்கள் கதாநாயகர் நோ டவுட் :D .....மீண்டும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

காலத்துக்கேற்ற பதிவு புத்தன். நீண்ட நாட்களின் பின் உங்கள் கிறுக்கலை கண்டத்தில் சந்தோசம். தொடர்ந்து எழுதுங்கள்.

 

நன்றிகள் பகலவன்...தாயகம் சென்றபடியால் கிறுக்கமுடியாமல் போய்விட்டது

வணக்கம் புத்தன்

மீண்டம் ஒரு குட்டு

 

ஆயிரம் பேரை நாங்க  வைத்திருப்பம்

ஆனால் நம்ம ஆத்துக்காறி ஒருத்தரை பார்க்கக்கூடாது

ஆண்மையின் பலவீனம்????

 

தொடருங்கள்

 

நன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்துக்கும்....ஆயிரம் பேரையா தாங்காது ஐயா :D

சிட்னி நிலைமைகளை எண்ணிச் சிரித்தேன்.. அதுசரி.. இதில எதெல்லாம் உண்மை.. எது கற்பனை? சனங்களை அறியலாமெண்டு ஒரு ஆர்வம்தான்.. :D

 

நன்றிகள் இசை ...இப்படி குறுக்கு கேள்வி கேட்டால் நான் அழுதிடுவேன்....:D

நன்றாக எழுதுகிறீர்கள் புத்தன்.

 

வருகைக்கு நன்றிகள் சுமேரியர்

தெரியுதில்ல நம்பமாட்டமெண்டு பிறகென்ன பில்டப் ? :lol:

புத்தன் வளமைபோல இன்னொரு உண்மைகலந்த சினிமா ஆசை சினிமா நாயகனைச் சந்திக்கும் ஆசையும் பற்றிய ஆச்சியின் கதையோடு பலரது மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறீங்கள். சிரித்து ரசித்து வாசித்தேன்.

 

நன்றிகள் சாந்தி ....ஆச்சியில் இருந்து பாடசாலை மாணவி வரை ஒரே மனநிலையிதான் உள்ளார்கள்

இந்த‌க் க‌தையெல்லாம் வைச்சுக் கொண்டு க‌ம்மெண்டிருந்தால் எப்ப‌டி? எழுதுற‌து? உங்க‌ளைப் ப‌ற்றிக் கூட‌ எழுதாம‌ சிலுக்கைப் ப‌ற்றி எழுதுங்கோ!

 

நன்றிகள் ஜஸ்டின் வருகைக்கு

Link to comment
Share on other sites

நல்ல கதை புத்தன், நன்றி.

 

நோக்கு ஒன்னு தெரியுமா? நடக்கும் விஐய வருடத்தில் விஜையை தரிசணம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும், தவற விட வேண்டாம்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

புத்தன் தாயகம் போனபோது  ஞானம்ஸ்' இல யா தங்கினீர்கள் ? ரசிகர் கூட்டம் அலை மோதியதாகக் கேள்விப்பட்டோம்..

 

Link to comment
Share on other sites

என்ட பெடியன் வந்து புத்தன் மாமா பிசியா இருக்கிறார் எண்டு சொல்லேக்கேயே நினைத்தனான் கதை ஏதோ வரப்போகுதென்று. புத்தன் கதை சுப்பர்... சிட்னி பட்ட பட்டை அழகாக வடித்திருக்கீறீங்கள். எனக்கென்றால் 100% உண்மை போலத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை புத்தன். ரசித்து வாசித்தேன். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை புத்தன், நன்றி.

 

நோக்கு ஒன்னு தெரியுமா? நடக்கும் விஐய வருடத்தில் விஜையை தரிசணம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும், தவற விட வேண்டாம்

 

நன்றி வந்தியதேவன்...எனக்கு என்னவோ அமலாபொல்லின் தரிசனம் கிடைச்சால் காணும்....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தாயகம் போனபோது  ஞானம்ஸ்' இல யா தங்கினீர்கள் ? ரசிகர் கூட்டம் அலை மோதியதாகக் கேள்விப்பட்டோம்..

 

அப்படி ஒரு ஆசை இருந்ததுதான் ஆனால் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை...சிட்னியிலயே கணக்கெடுக்கிறாங்கள் இல்லை :D ...நன்றிகள் கறுவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட பெடியன் வந்து புத்தன் மாமா பிசியா இருக்கிறார் எண்டு சொல்லேக்கேயே நினைத்தனான் கதை ஏதோ வரப்போகுதென்று. புத்தன் கதை சுப்பர்... சிட்னி பட்ட பட்டை அழகாக வடித்திருக்கீறீங்கள். எனக்கென்றால் 100% உண்மை போலத்தான் இருக்கு.

 

அது எனது அடுத்த கதைக்கான பிசி.....நன்றிகள் யாழ்கவி

நல்ல கதை புத்தன். ரசித்து வாசித்தேன். :)

 

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கு

ம்ம்................... என்னத்தைச் சொல்ல

 

வருகைக்கு நன்றிகள் அலைமகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே புத்தன்;

விசைக்கு பதிலாக நித்தி வந்தாலும் ?குறை பிடிக்கிறீகள்..அப்ப யார்தான் வரவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?

நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சினிமா மோகத்தை தத்ரூபமாகக் காட்டியிருக்கின்றீர்கள் புத்தன். நல்ல கதையோ இல்லையோ தமிழர்கள் சினிமாவுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கின்றார்கள். நானும் வேலாயுதம் பார்த்தேன், விஜயிற்காக இல்லை, ஹன்சிகாவை முழுத் திரையில் பார்க்கத்தான்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.