Jump to content

'இடியட்' ரெஜினா


Recommended Posts

'இடியட்' ரெஜினா

sruthika07145503ow.jpg

மறைந்த தேங்காய் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறது.

முதலில் அவரது பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். நெடு நெடுவென்ற உயரம், தேங்காயின் அதே பூனைக் கண்கள் மற்றும் இன்ன பிற அட்டகாச ஐயிட்டங்ளோடு இருந்த ஸ்ருத்திகா ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால், அடுத்து ஆல்பம் படத்தில் நடித்தோடு சரி, அத்தோடு ஆளைக் காணோம். அந்தப் படம் தெலுங்குக்கும் போனது.

ஜேப்பியார் காலேஜில் விசுவல் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்த ஸ்ருத்திகா அதை விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்தார். அது கை கொடுக்காததால் மீண்டும் படிக்கப் போனார்.

இடையில் விருமாண்டி படத்தில் ஸ்ருதிகாவை கமல் ஹீரோயினாக்கப் போவதாக சொன்னார்கள். ஆனால், அந்த சான்ஸ் அபிராமிக்குப் போய்விட்டது. ஸ்ருதிகாவும் சான்சுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. வீட்டோடு இருந்து வருகிறார்.

lailaregina07145506ml.jpg

இந் நிலையில் தேங்காயின் குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோ தமிழ் சினிமாவுக்கு வருகிறார். இவர் தேங்காய் சீனிவாசனின் மகள் வயிற்றுப் பேரன். பெயர் யோகி.

வீட்டில் படிக்கச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் தாத்தாவைப் போலவே சினிமாவுக்கு வந்திருக்கிறார் யோகி.

ஆர்.வி. உதயகுமார், தரணி ஆகியோரிடம் அஸிஸ்டெண்டாக இருந்த நாகு என்பவர் இயக்கப் போகும் இடியட் என்ற படத்தில் அறிமுகமாகிறார் யோகி.

யோகிக்கு ஜோடியாக ரெஜினா என்ற மலையாளத்து பிகர் ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறார். இவரும் சின்னப் புள்ளையில் இருந்தே சினிமாவுக்கே தன்னை அர்ப்பணித்தவராம்.

கண்டநாள் முதல் படத்தில் லைலாவுக்கு தங்கச்சியாக நடித்திருந்த ரெஜினாவுக்கு இதில் ஹீரோயின் புரமோஷன் கிடைத்திருக்கிறது. ஜகஜகவென இருக்கிறார் ரெஜி. விட்டுக் கொடுத்து நடிக்க ரெடியாக இருக்கிறாராம். ஒத்துழைப்புகள் மூலம் கோலிவுட்டில் நங்கூரம் பாய்ச்சிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

படத்துக்கு இடியட் என்று பெயர் வைத்த நாகுவை ஓரங்கட்டினோம். என்னங்க இது தலைப்பு என்று கேட்டால், படத்துக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார் என்று போட்டு உடைத்தார்.

reginayogi07145509nx.jpg

செல்லமான தோழி, மனதை வென்ற பெண் தனக்குப் பிடித்தவனை ராஸ்கல், லவ்லி பூல் என்றெல்லாம் திட்டுவதில்லையா? அது என்ன திட்டா? அது அன்பு சார்.

அது மாதிரி தான் இந்த இடியட்டும். ஹீரோவை காதலிக்கும் பெண், தன் காதலனை செல்லமாய் கூப்பிடும் வார்த்தை தான் இடியட். இது அன்பு சீண்டல் சார்.. அதான் அதையே தலைப்பாக வைத்துவிட்டோம் என்று வெளக்கம் சொன்னார்.

மேலும் நாம் கேட்காமலேயே, ரெஜினாவை பாராட்டோ பாராட்டு என்று பாராட்டினார் நாகு. பொண்ணு ரொம்ப நல்லா நடிக்குது. சொல்றபடி கேட்டு செய்யுது. ரெஜினாவுக்கு ரொம்ப நல்ல எதிர்காலம் இருக்கு என்றார்.

reginayogi07145004ux.jpg

இடியட் என்ற 'நல்ல' பெயரில் ஏற்கனவே தெலுங்கு, கன்னடத்தில் படங்களை எடுத்துவிட்டார்கள். தமிழில் அந்தக் குறையை நாகு போக்கிவிட்டார்.

ஆனால், அந்த இடியட்களுக்கும், இந்த 'இடியட்'டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.

http://thatstamil.oneindia.in/specials/cin...t/regina_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் வைக்கும் சில பெயர்கள் போல்தான் படங்களின் பெயர்களும் வருகிறது

Link to comment
Share on other sites

யாழ்களத்தில் வைக்கும் சில பெயர்கள் போல்தான் படங்களின் பெயர்களும் வருகிறது

என்னோருமுறை சொல்லுன்கோ :P :P :P

Link to comment
Share on other sites

அதென்ன வைகைப் புயல் நிக்கிற இடம் எல்லாம் கறுப்பியும் நிக்கிறா? :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன வைகைப் புயல் நிக்கிற இடம் எல்லாம் கறுப்பியும் நிக்கிறா? :wink: :lol:

அரசியலில் குதிக்கத்ததான்

Link to comment
Share on other sites

அதென்ன வைகைப் புயல் நிக்கிற இடம் எல்லாம் கறுப்பியும் நிக்கிறா? :wink: :lol:

இதையும் என்னோருமுறை சத்தமாக சொல்லுன்கோ :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.