Jump to content

வைரவரின் முதல் வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் வணக்கம்,

 

பல ஆண்டுகளாக யாழ் இணையத்தினை வாசித்துக் கொண்டு வந்தாலும் இன்று தான் இதில் இணைந்து கொள்கின்றேன். எங்கள் ஊர்களில் தெருவிலும் வீதியிலும் குடி கொண்டு முழிசிக் கொண்டு இருக்கும் வைரவரின் பெயரை கொண்டு இணைகின்றேன். பெரும் கோவிகளில் எல்லாம் திருவிழாக்கள் படு எடுப்பாக நடக்க சிவனே என்று இருக்கும் வைரவருக்கு எவரும் பெரிசா பூசை புனருத்தானம் செய்வது குறைவு. ஆனால் வைரவர் சனங்களின் சாமி. அவசரத்துக்கு வைரவர் தான் சில நேரங்களில் கிடைப்பார். அதனால் அவர் பெயரில் இணைகின்றேன் உங்களுடன். சனங்களின் குரலாக, வாழ்க்கையின் சாட்சியாக உங்களுடன்.

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் வைரவன்,

வாருங்கள், உங்கள் வரவால் இந்தக்களம் மேலும் சிறப்படையட்டும்.
தமிழ் உலகத்திற்கு உங்கள் கருத்துக்கள் ஆக்கங்கள் பலம் சேர்க்கட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் வைரவன். வாருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள், வைரவன்!

 

வைரவன் தெய்வமல்ல, சிவனின் ஆயுதம் மட்டுமே!

 

இதை நான் சொல்லவில்லை! எமதினத்தை, அழிக்கப் பின்வாங்கிய இந்திய சிப்பாய்களுக்கு,நாங்கள் இந்துக்களல்ல, ஏனெனில் வைரவரை வழிபடுகிறோம் என்று விளக்கம் சொன்னது வேறு யாருமல்ல!

 

செத்த பிறகும், தமிழனை அழிக்கும் ராஜீவ் காந்தியே தான்! :o

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vairavar%2B1.jpg

 

வணக்கம், வாங்கோ... வைரவன் தங்களை, அன்புடன் அழைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் வைரவரே. எங்கே உங்கள் வாகனத்தைக் காணவில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வரவேற்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்.

 

வைரவரின் படம் போட்டு துண்டும் சாத்தி செவ்வரத்தைப் பூவும் சூட்டி அழகு பார்க்கும் தமிழ்சிறிக்கு என் அன்பு நன்றிகள்.

 

வைரவர் தெய்வம் அல்ல சிவனின் ஆயுதம்  என்று சொன்ன புங்கையூரனுக்கும் நன்றிகள். சில நேரங்களில் ஆயுதங்கள் தான் நிம்மதியைத்தருவன என்றதையும் நினைவில் கொள்ளுங்கோ அண்ணாச்சி.

 

குல தெய்வமே என்று விளித்த சுண்டலுக்கும்,  முதல் முதலாக வாழ்த்திய செயல் வீரர் அகூதாவுக்கும், உச்சரிக்கும் போதே நாக்கு சுழலுக்குள் சிக்கி விடுவது போன்று பெயர் வைத்துஇருக்கும் மெசொபொத்தேமியா சுமேரியர் இற்கும், பெயரில் இசை வைத்து இருக்கும் இசைக்கும், இடுப்பில் சதங்கை கட்டியிருக்கும் உடையாருக்கும், என் அப்பன் சிவனின் பெயரைக் கொண்டு சுடலை பொடி பூசியோனாக இருக்கும் ஈசனுக்கும் என் நன்றி 

 

 

Link to comment
Share on other sites

வாங்கோ வைரவன், எனக்கு வைரவர் , ஜயனார் & காளி யென்ற சரியான பயம். 

Link to comment
Share on other sites

ஆகா எங்க குல தெய்வமே....... வாங்கையா வாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வைரவன், வாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தி வரவேற்ற யோக்கர், கறுப்பி, அலைமகள், தமிழரசு, தமிழ் சூரியன் ஆகியோருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நல் வரவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09.JPG

 

வணக்கம் வைரவா! வணக்கம்.....உங்களுக்கு வடைமாலை அணிவிற்று வரவேற்கின்றேன்

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நல் வரவு.

 

நன்றி நிலா.

 

09.JPG

 

வணக்கம் வைரவா! வணக்கம்.....உங்களுக்கு வடைமாலை அணிவிற்று வரவேற்கின்றேன்

.

 

 

வடை மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்ற குமாரசாமி அண்ணருக்கு என் நன்றி. உங்களுக்கு  தினமும் பருத்தித்துறை வடை, ஓட்டை வடை, ஓட்டையில்லா வடை என்று விதம் விதமாக வடை கிடைக்க என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவரை வரவேற்கிறோம்..ஆனால் கடாவெட்டி பொங்கள் பொங்க சாப்பிட விருப்பமின்னா..நம்ம களபொறுப்பாளர் நிழலியை தொடர்புகொள்ளவும்..அவர் வீட்டில்தான் அடிக்கடி ஆட்டுகறியுடன் விருந்து தடல்புடலாய் இருக்கும்...! :D

Link to comment
Share on other sites

வணக்கம் வைரவன், வாருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வைரவன், வாருங்கள் :D 

Link to comment
Share on other sites

அஹா,வைரவரே ......... 

 நம்ம ஆளுயா நீர். எனக்கும் வைரவருக்கும் நிறைய கதை பேச்சுக்கள் கொடுக்கல் வாங்கல்கள் இருக்கு,நான் சொன்னது எங்க ஊரில நாயோடு இருக்கிற பைரவரை. ம்ம் பாவன் அந்தாள் இப்ப என்ன செய்யுதோ நானும் இல்லாமல்............

ணீங்கலாவது வந்தீங்களே வைரவரே 

வாங்க வாங்க கலக்குங்க 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.