Jump to content

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்


Recommended Posts

நன்றிகள் லக்கி அண்ணா..

இந்து ராம் போன்றவர்லால் தான் இதை ஏற்று கொள்ள முடியாமல் இருக்கின்றது.. பட் பாப்பம்..ஒரு காலத்தில் இந்து வினுடைய மாலினி பார்த்தசாரதி போன்றவர்கள் எல்லாம அதரவா தானே இருந்தார்கள்... :lol:

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply

பத்திரிகையாளர் ராம் அவர்களின் கருத்தும்

சில காங்கிரஸ் அரசியல்வாதிகளின் கருத்தும்

ஒட்டு மொத்த இந்திய மக்களின் கருத்து அல்ல.

தவிரவும் இந்திய தமிழர்களது கருத்தல்ல.

திரு.அன்டன் பாலசிங்கம் அவர்களது கருத்து

அரசியல் ரீதியான ஒரு முன்னெடுப்புக்கு

வழி செய்யும் என்றே தோன்றுகிறது.

ஒரு விடயம்

சந்தேகமாய் தேங்கிக் கிடக்கும் வரைத்தான் பிரச்சனை.

அது

தெளிவாகி விட்டால்

அங்கே கலக்கத்துக்கு வேலையற்றுவிடுகிறது.

பலர் இனி நிமிர்ந்து பேசலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

நன்றிகள் லக்கி அண்ணா..

இந்து ராம் போன்றவர்லால் தான் இதை ஏற்று கொள்ள முடியாமல் இருக்கின்றது.. பட் பாப்பம்..ஒரு காலத்தில் இந்து வினுடைய மாலினி பார்த்தசாரதி போன்றவர்கள் எல்லாம அதரவா தானே இருந்தார்கள்... :lol:

ஒரு விஷயம் சுண்டல்.... பெரும்பான்மையான மக்கள் விரும்புவதை எதிர்த்து எழுதி எந்தப் பத்திரிகையாளனும் பத்திரிகை விற்க முடியாது என்பது பத்திரிகை உலக விதி.... சமீபகாலமாய் தினமலரின் விற்பனை சரிவுக்கும் அதுவே காரணம்....

ஹிந்து ராம் போன்றவர்கள் பத்திரிகை வியாபாரிகள்.... அவர்கள் பத்திரிகை நலனுக்காவது இன்னும் சில காலத்தில் தம் ஸ்ருதியை மாற்றிக் கொண்டே தீருவார்கள்....

Link to comment
Share on other sites

தமிழகத்தில் முக்கியமான

அரசியல் நண்பர்கள் சிலருடன்

தற்போது பேசினேன்.

திரு.பாலசிங்கம் அவர்களது செய்தி

இன்றைய தமிழகப் பத்திரிகைகளில்தான் வந்திருக்கிறது.

இது ஒரு பிளஸ் பொயின்டாகவே

தாங்கள் கருதுவதாக சொன்னார்கள்.

இந்த நேரத்தில் சிலர் சொல்வது போல

இந்திய இராணுவம் மன்னிப்புக் கேட்க வேண்டும்

என்ற வாதம் கேலிக்குரியது. :P

அதுவல்ல நமது தற்போதைய தேவை.

அதுக்கு மேலே பல கோடி தேவைகள் உண்டு.

அகதிகள் விடயத்தில் கூட

திருமாவளவன் போன்றோர்

இறங்கியுள்ளதாக குறிப்பிட்டார்கள்...............

விடுதலைப் புலிகள்

அகதிகள் என்ற போன்ற போர்வையில் வருவார்கள் என்று

முட்டாள்தனமாக எழுதுகிறார்கள்.

பாவம்

விடுதலைப் புலிகள் வெளிநாடுகள் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

அவர்கள் விமானத்தில் அல்லவா வந்து விட்டு போகிறார்கள் என்று சிரிக்கிறார்கள்.

நல்ல மகிழ்சிகரமான தாக்கங்களாக

இருப்பதாக சொன்னார்கள்.

பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அதற்கு மேல் 'இந்நிகழ்வை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தைத் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்" என்று சாரப்பட அவர் தெரிவித்த கருத்துகள் அப்படியே வெட்டப்பட்டு விட்டன.

அவற்றை ஒதுக்கிவிட்டு '15 ஆண்டுகளுக்குப்பின்னர் முதல் தடவையாக ராஜீவ் காந்தி கொலைக்கான பொறுப்பை புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கான மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள்" என்ற சாரப்பட பாலசிங்கம் கூறாதவிடயத்தை ஒரு முன்னறிவிப்பாகக் கொடுத்து பாலாசிங்கத்தின்; நீண்ட ஒரு மணிநேரப் பேட்டியில் ஓரிரு நிமிட வார்த்தைகளை ஒளிபரப்பி, ராஜீவ் கொலைக்குற்றத்தைப் புலிகள் அப்படியே ஏற்றுக்கொண்டனர் என்ற மாயையை உருவாக்கும் விதத்தில் 'திருகுதாளம" பண்ணி செய்தி வெளியிடப்பட்டதாகத் தெரியவருகின்றது.-

செய்தி எப்படி திரிவு படுத்தினாலும் பாலா அண்ணா சொல்லவந்த விடயம் சரியாக போய் சேர்ந்திருக்கிறது என்பதுதானே உண்மை....!

இந்திய மக்களின் மத்தியில் ஒரு புரிந்துணர்வை புலிகள் ஏற்படுத்த முனைந்தனர்.... கொலைக்கான காரணங்களை செல்ல முனைந்ததை அவர்கள் ஓளிபரப்ப முயலவில்லை எண்றால் அதுக்கான காரணம் இருக்கலாம்... இந்தியா செய்தது தவறு என்பது சுட்டிக்காட்டுவதால் இராஜீவ் கொல்லப்பட்டார் என்பதை செல்லவேண்டிய விடயம் தான் அதுக்கான நேரம் இதுவா..???

நேசக்கரத்தை நோக்கி நீட்டப்பட்ட தமிழீழத்தின் சார்பிலான கையை இறுதியாகவும் உறுதியாகவும் இந்தியா பற்றிகொள்ள விரும்புகிறதுபோல அதனால்த்தான் பாலா அண்ணாவினால் சொல்லப்பட்ட கொலைக்கான காரணம் தேவை இல்லாத விமர்சனங்களைக் கொண்டுவரலாம் எண்ற பார்வையில் நீக்கி இருகும் சாத்தியம் அதிகம்.... இந்தியாவின் நடவடிக்கை சம்பந்தமான புலிகளின் கருத்துக்களால் இந்தியாவில் தேவை இல்லாத சச்சரவுகளை அந்த வியாக்கியானம் தரும் எண்று எண்ணி கூட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அதனை நீக்கி இருக்கலாம்...! அவர்களால் ஒரு பிரபல ஊடகம்மூலம் (முதல்முறை) இந்திய மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் அந்த பேட்டி ஓளிபரப்ப பட்டு இருக்கிறது போலத்தான் இருக்கிறது..

இப்போது எல்லாம் இந்தியாவின் கைகளில்த்தான் இருக்கிறது பஞ்சாப் மக்களிடம் மன்னிப்பு கேட்ட இந்திய அரசு தமிழீழ மக்களிடம் வருத்தம் தெரிவித்தாலே போதும் இலங்கை அரசாங்கத்தின் வயிற்றில் புளியைகரைக்கும்....!

Link to comment
Share on other sites

15 வருடங்களிற்கு பின்னர் தமிழ் இனம் இன்று எதிர்பார்ப்பது அந்த வடுக்களை ஆறவிட்டு ஒரு புதிய உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்வதே அன்றி யார் பிழை விட்டது யார் மன்னிப்பு கேட்பது என்று ஊடகங்களில் சொற்களை திரித்து நாடகமாடுவதை அல்ல...

இந்திய மக்களின் மனதில் அப்படியான வசனங்கள்தான் அந்த வடுக்களை ஆற்றுமானால் அப்படி சொன்னதில் தவறில்லை எண்றுதான் எண்ணுகிறேன்.... இதே வசனத்தை பாலா அண்ணா சொல்லாமல் இருந்திருப்பாரானால்.. நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக்கொண்டு இருப்பேன்...!

இளைப்பாறிய அமைதிப்படை அதிகாரிகள் முதல் மறைந்த ஜே என் டிக்சிற் இன் கருத்துக்கள் பல தமது தவறான மதிப்பீடுகளை உணர்ந்தவர்களாக, புலிகளின் ஏகபிரதிநிதித்துவத்தை மக்களிடம் அவதானித்ததாக தமது புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவற்றை மேற்கோள் காட்டி இந்திய தரப்பில் பிழையை ஒத்துக் கொள்கிறார்கள், இந்தியா ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளிற்கும், பாலியல் வன்புணர்விற்கும் மன்னிப்பு கேருகிறது என்று தமிழர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும்..

இந்திய அரசியலுக்கும் அப்பால் பட்ட மக்களுக்கு எல்லாம் அந்தவிடயம் புரிய வேண்டும் என்பதில்லை....

உங்களுக்கு ஒருவிடயம் தெரியுமோ தெரியாது இணையத்தில் வந்துபோகும் தமிழர்களைவிட பலபேருக்கு தமிழீழம் என்பது யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும் உள்ளது என்பது தெரியாது....! யாழ்ப்பாணம் என்பது பெரிய பிரதேசமாய் எண்ணிக்கொண்டும் இருக்கிறார்கள்...

Link to comment
Share on other sites

இந்திய இராணுவத்திடமோ இந்தியாவிடமோ மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை. பழையவற்றை மறந்து ஒரு புதிய அத்தியாயத்தை மாத்திரம் தான் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள் தமிழர்கள். புலிகள் பல தடவைகள் நல்ல சமிக்கைகளை காட்டியிருந்தார்கள். 2002 யுத்தநிறுத்தம் உருவாகி பேச்சுக்கள் எங்கு நடைபெறவேண்டும் என்ற விடையத்தில் கூட இந்தியாவிற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். பிராந்தி நலன்களில் வேற்று சக்த்திகள் புகுவது இந்தியாவை கவைலை கொள்ள வைக்கும் என்று தாமாகவே முன்வந்து அதைப் பொறுப்புடன் செய்தார்கள். பதில் ஏமாற்றமாக தான் இருந்தது.

இந்த முறையாவது இந்திய ஒரு வரவேற்கத்தக்க நிலைப்பாட்டை சொல்லிலும் செயலிலும் எடுக்குமா என்று பார்ப்போம்.

அதைவிடுத்து கிளே உள்ளது மாதிரியான கருத்துக்கள் கண்ணோட்டங்கள் நம்பிக்கை கட்டியெழுப்ப உதவாது. பழயவற்றை கிளறி குளிர்காய முனைவதாகத்தான் இருக்கிறது. இவர்கள் யாருடை வழிநடத்தலிலோ தெரியாது.

http://www.dnaindia.com/report.asp?NewsID=1038152

http://www.dnaindia.com/report.asp?NewsID=1038055

Link to comment
Share on other sites

பலகாலமா பலமாதிரி கருத்து எழுதினவை உடனடியா மாறுவினமே....??? ஆனா மாறவேண்டிய தேவையை மக்கள் கொண்டு வருவார்கள்....

மக்கள் விரும்புவதை எழுதுவதுதானே பத்திரிகை வியாபாரமாக இருக்கிறது..! சில எதிர்மறையான எழுத்தாளர்கள் உடனடியாக இப்படி எழுதினாலும் பலர் வேறு மாதிரி எங்களுக்குசாதகமாகதானெ எழுதுகிறார்கள்...

பலரின் கோணம்தான் எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்கும்....! அந்த சிலரும் மாறாவிட்டாலும் எதிர்க்காத சூழ்நிலையை கொண்டுவரும்..! அது இந்திய அரசின் கைகளித்தான் இருக்கிறது..!

Link to comment
Share on other sites

ம்..ராம் பத்திரிகை எழுத்தாளரேயண்றி பேச்சாளர் கிடையாது..பத்திரிகை எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் கேட்கப்பட்டது எப்போதும்போல அவரது குரலில் பதிலளித்திருந்தர்.. இங்கு நடுங்குகுரலில் பேச்சாளர் நடுங்குவதை உங்களால் உணரமுடியவில்லையே.. திருட்டுத்தனம் யார் செய்தார்கள் என்பது ராம் மற்றும் இந்திய உத்தியோகபூர்வ பதில்களில் எதிராலிக்கின்றன. உங்கள் மற்றறைய சாடலுக்கு ஆனந்தசங்கரியின் உங்கள் கொலைகளை நிறுத்துங்கள் என்ற கட்டுரையை வாசியுங்கள்.. அது சரியான ஒரு வழிகாட்டலாக அமையும்..

ஏன் அண்ணா?

தமிழ்மக்கள் கொல்லப்படும் செய்தி கேட்கும் போது காது கேட்காதவன் மாதிரியும், சிங்கள இராணுவம் சாகும்போது பந்திபந்தியாக அறிக்கை விடும் பக்கசார்புச் செவிட்டுப் பயல் என்றா எம்மையும் நினைத்தீர்கள்! ஏற்கனவே கேட்டபடியால் தான் சொல்கின்றோம்!

பிபிசிக்காரன் கேட்கும்போது வார்த்தை தேடிக் குலையும் ராமின் குரல் விளங்கவில்லையோ! இப்படி ஒரு நடுக்கம் அவருக்கு முன்பே இருந்ததில்லையே!

முழுமையாக ஒளிபரப்பாமல் இந்திய அரசு திருட்டுத்தனம் செய்திருக்கலாம். இந்திய அரசு என்ன முடிவாவது எடுக்கட்டும். ஆனால் இது மக்கள் மனத்தில் புலிகள் மீதான வெறுப்பை குறைக்கும் என்பது உண்மை. பலருக்கு புலிகள் இது குறித்து ஆதங்கம் தெரிவிக்காதபடியால் தான் சிறிய ஊடல் இருந்தது. அது கடந்த தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு தொடர்பாக, தமிழக ஊடகங்களில் எதிரொலித்தது. எனவே இந்த கடடத்தால் றோவிற்கு ஒரு சாட்டை விளப்போகின்றது.

மக்கள் மனதில் ஏற்படும் மாற்றத்தை நடுங்கும் குரலால் ராமோ, சோ(மாரி) யாராலும் ஒண்டும் செய்யமுடியாது.

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் புலிகள் வருத்தம் தெரிவிப்பது இது முதற் தடவையல்லவே. எப்பவோ சொல்லிட்டினமே..அப்புறம் என்ன இது புதிசா பெரிசா பார்க்கப்படுகுது. புலிகளும் இந்திய சார்பை நாடுகினமோ..?! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ராம் பத்திரிகை எழுத்தாளரேயண்றி பேச்சாளர் கிடையாது..பத்திரிகை எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் கேட்கப்பட்டது எப்போதும்போல அவரது குரலில் பதிலளித்திருந்தர்.. இங்கு நடுங்குகுரலில் பேச்சாளர் நடுங்குவதை உங்களால் உணரமுடியவில்லையே.. திருட்டுத்தனம் யார் செய்தார்கள் என்பது ராம் மற்றும் இந்திய உத்தியோகபூர்வ பதில்களில் எதிராலிக்கின்றன. உங்கள் மற்றறைய சாடலுக்கு ஆனந்தசங்கரியின் உங்கள் கொலைகளை நிறுத்துங்கள் என்ற கட்டுரையை வாசியுங்கள்.. அது சரியான ஒரு வழிகாட்டலாக அமையும்..

வெறுமனே ராமைப் ஊடகவியலாளர் என்ற நிலைக்குள் கொண்டு சொல்லமுடியாது, புலிகளைப் பற்றியே தொடர்ந்து குறை கூறிவரும் மேலாதிக்க நிலையில் உள்ளவர் அவர். எங்கு புலிகள் பற்றிப் பிரச்சனையோ, அங்கு தலை காட்டும் இவரை எப்படி நடுநிலையான ஊடகவியலாளர் என்று சொல்லமுடியும். வேணுமென்றால் அவரின் பக்கச் சார்பு உம் "நடுநிலமையோடு: ஒத்துப் போகலாம். அவ்வளவே!

படுகொலைகளை நிறுத்துங்கள் என்று ஆனந்தசங்கரியாரின் அறிக்கையைப் படிப்பதில் பிரியோசமில்லை. அவர் ஒரு நொந்து போன மனிதர். அது மட்டுமல்ல, இன்று வடக்கு கிழக்கில் பொதுமக்கள் படுகொலைக்கு பொறுப்பான கறுணா கும்பல், தொடக்கம் சில அமைப்புக்களை இணைத்து ஒருமித்த புலியெதிர்ப்புக்காய் இந்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டவர். இவரின் புலம்பல்களை எவன் கண்டு கொள்வான்!

இதை விட, படித்து விட்டீர்களா!! தேவாவின் கேள்வி பதில்! அல்லது தேவாவின் வினா-விடை போன்றவையும் சமுதாயத்துக்கு முக்கியமாக மாணவர்களுக்கு பயன் தருமாமே உண்மையா?? :wink: :P

Link to comment
Share on other sites

தூயவன் நீங்கள் ராமின் நடு நிலை பற்றி விவாதிப்பதையிட்டு மகிழ்ச்சி.. நடுநிலைக்கான தளம் அங்கு நிச்சயமாக இருக்கின்றது.. இரண்டுபக்கங்களையும் ஆராய்ந்து எழுதக்கூடிய தளமும் அதற்கான நடைமுறையும் இருக்கின்றன.. அவர்களது ஆயுதம் எழுத்து.. நடுநிலையற்ற நிலை அங்கு காணப்படுமானால் உலகபிபிரசித்திபெற்ற சர்வதேசப்பத்திரிகை என்ற பெயரை எப்பொழுதோ இழந்திருக்கும்..

இங்கோ இந்து பத்திரிகை ஆசிரியரைப்பற்றி எழுதுவதற்கே இத்தனை தூற்றல்கள்.. நல்ல நடுநிலைதான் போங்கள்...

:P

வெறுமனே ராமைப் ஊடகவியலாளர் என்ற நிலைக்குள் கொண்டு சொல்லமுடியாது, புலிகளைப் பற்றியே தொடர்ந்து குறை கூறிவரும் மேலாதிக்க நிலையில் உள்ளவர் அவர். எங்கு புலிகள் பற்றிப் பிரச்சனையோ, அங்கு தலை காட்டும் இவரை எப்படி நடுநிலையான ஊடகவியலாளர் என்று சொல்லமுடியும். வேணுமென்றால் அவரின் பக்கச் சார்பு உம் "நடுநிலமையோடு: ஒத்துப் போகலாம். அவ்வளவே!

படுகொலைகளை நிறுத்துங்கள் என்று ஆனந்தசங்கரியாரின் அறிக்கையைப் படிப்பதில் பிரியோசமில்லை. அவர் ஒரு நொந்து போன மனிதர். அது மட்டுமல்ல, இன்று வடக்கு கிழக்கில் பொதுமக்கள் படுகொலைக்கு பொறுப்பான கறுணா கும்பல், தொடக்கம் சில அமைப்புக்களை இணைத்து ஒருமித்த புலியெதிர்ப்புக்காய் இந்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டவர். இவரின் புலம்பல்களை எவன் கண்டு கொள்வான்!

இதை விட, படித்து விட்டீர்களா!! தேவாவின் கேள்வி பதில்! அல்லது தேவாவின் வினா-விடை போன்றவையும் சமுதாயத்துக்கு முக்கியமாக மாணவர்களுக்கு பயன் தருமாமே உண்மையா??

படித்தவர்களுக்குத்தானே தெரியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்..ராம் பத்திரிகை எழுத்தாளரேயண்றி பேச்சாளர் கிடையாது..பத்திரிகை எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் கேட்கப்பட்டது எப்போதும்போல அவரது குரலில் பதிலளித்திருந்தர்.. இங்கு நடுங்குகுரலில் பேச்சாளர் நடுங்குவதை உங்களால் உணரமுடியவில்லையே.. திருட்டுத்தனம் யார் செய்தார்கள் என்பது ராம் மற்றும் இந்திய உத்தியோகபூர்வ பதில்களில் எதிராலிக்கின்றன. உங்கள் மற்றறைய சாடலுக்கு ஆனந்தசங்கரியின் உங்கள் கொலைகளை நிறுத்துங்கள் என்ற கட்டுரையை வாசியுங்கள்.. அது சரியான ஒரு வழிகாட்டலாக அமையும்..

யாருக்கையா வேண்டும் உந்தக் கோணங்கியுடைய வழிகாட்டல் நீரே அதைப்பின்பற்றும்!

Link to comment
Share on other sites

ராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு

இராஜீவ் படுகொலை ஒரு "துன்பியல்" சம்பவம் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பிறகு புலிகளின் தலைமையிடம் இருந்து வந்திருக்கும் முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு கேட்கும் நிகழ்வாக பாலசிங்கத்தின் பேட்டி இருக்கிறது. இந்த "மன்னிப்போ", இந்தியாவை நோக்கிய புலிகளின் நட்பு ரீதியான அணுகுமுறையோ இந்தியாவின் நிலையில் எந்த மாற்றத்தையும் தற்பொழுது ஏற்படுத்தப் போவதில்லை.

கடந்த காலங்களில் புலிகள் இந்தியாவிடம் நெருங்கி வர முயன்ற சூழ்நிலைகளில் இந்த "மன்னிப்பு" கேட்க வேண்டிய அவசியத்தை பல இந்தியப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் புலிகள் எதிர்ப்பாளர்கள் முன்வைத்து இருந்தனர். இராஜீவ் காந்தியின் படுகொலையை மன்னிப்பு கேட்பதன் மூலம் சரியாக்கி விட முடியுமா ? என்ற கேள்வி எனக்கு அப்பொழுதே எழுந்தது.

என்றாலும் பொதுவாக பலர் முன்வைத்து இருந்த இந்த மன்னிப்பு, தற்பொழுது கிடைத்து விட்டப் பின்னரும், எந்த மாற்றமும் இந்தியாவின் நிலையில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. ஆனாலும் புலிகளின் எதிர்கால உத்திகளை பாலசிங்கத்தின் பேட்டி படம் பிடித்து காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.

புலிகளின் இந்த முயற்சி உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. ஆனால் எதிர்காலத்தில் தங்களுக்கு இந்தியா மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை தவிர்த்துக் கொள்ள இதன் மூலம் புலிகள் முயன்றிருக்கிறார்கள்.

உலக நாடுகளின் தடை புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாட புலிகள் முயலுகிறார்கள் என்ற பல பத்திரிக்கைகளின் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.

இதற்கு காரணம் புலிகள் மீது தடை விதித்துள்ள நாடுகளில், இந்தியாவுடன் மட்டுமே புலிகளுக்கு "தனிப்பட்ட பகை" உள்ளது. இந்திய இராணுவம் - புலிகள் போர் மற்றும் இராஜீவ் காந்தியின் மரணம் போன்றவையே புலிகளை இந்தியாவுடன் நெருங்க முடியாமல் செய்யக்கூடியவை. இவை தவிர புலிகளை கடுமையாக எதிர்க்க கூடிய "செல்வாக்கு மிகுந்த ஒரு Lobby" இந்தியாவில் தான் உண்டு.

ஆனால் பிற நாடுகளுடன் புலிகளுக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. புலிகள் மீது தடை விதிக்க வேண்டிய எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமும் பிற நாடுகளுக்கு இருந்ததில்லை. இலங்கை அரசின் நிர்பந்தம் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளை தடை செய்ய முக்கிய காரணம் (இவை தவிர என்னுடைய முந்தையப் பதிவில் கூறியிருந்த பொருளாதார ரீதியான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணமாக கருத முடியும்). புலிகள் மீதான ஐரோப்பிய யூனியன் தடை, கனடாவின் தடை போன்றவை புலிகள் மீது ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.

புலிகள் மீதான தன்னுடைய தடை நிரந்தரமானது அல்ல என்றும் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டால் புலிகளுடன் தங்களால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா கடந்த மாதம் கூறியிருந்தது. இது சாத்தியமா என்பது ஒரு புறம் இருக்க, இத்தகைய எந்த வாய்ப்பும் இந்தியாவிடம் புலிகளுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதாவது தடை விதித்துள்ள நாடுகளில் புலிகளால் நெருங்க முடியாத நாடு இந்தியா மட்டுமே. ஆனால் பிற நாடுகளை புலிகளால் எதிர்காலத்தில் அணுக முடியும்.

இந்தியாவுடன் நெருங்கி வரத்தக்க ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் முதல் படியாகத் தான் பாலசிங்கம் இராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த மன்னிப்பு சில முக்கியமான பிண்ணனி காரணங்களைக் கொண்டது.

என்னுடைய முந்தையப் பதிவில் கூறியுள்ளது போல இலங்கையில் போர் துவங்கும் பட்சத்தில் திரிகோணமலை புலிகளின் முக்கியமான இலக்காக இருக்கும். திரிகோணமலை என்பது ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் இராணுவ கேந்திரம். இந்த இடம் புலிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஈழப் போரில் முதன் முறையாக ஒரு பொருளாதார கேந்திரம் புலிகளிடம் இருக்கும். ஒரு முக்கியமான பொருளாதார இடம் மூலம் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கும். இவை தவிர திரிகோணமலை துறைமுகம் குறித்தான சில ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கை அரசுக்கும் உள்ளது. புலிகள் இதனை கைப்பற்றும் பொழுது இந்தியாவின் நலன்கள் குறித்த கேள்வி எழும். அப்பொழுது இந்தியாவுடன் உறவை புதியதாக தொடங்க புலிகள் விரும்பினாலும், இராஜீவ் காந்தி படுகொலை, மன்னிப்பு போன்ற பிரச்சனைகள் அப்பொழுது எழும்.

இத்தகையப் பிரச்சனைகளை முன்கூட்டியே தவிர்க்க புலிகள் இந்த "மன்னிப்பு" மூலம் திட்டமிடுகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார நிர்பந்தங்களை புலிகள் exploit செய்ய நினைக்கிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது.

இதைத் தவிர தமிழீழம் என்ற தனி நாட்டை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு தான் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இன்னொரு நாடு உருவாவது தங்களின் பொருளாதார, இராணுவ நோக்கங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்ற வகையில் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழீழத்தை எதிர்க்கின்றன. ஆனால் தமிழீழம் என்பது உருவானால் இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாப், காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற தீவிராவாத குழுக்களுக்கு அது ஒரு முன் மாதிரியாக அமைந்து விடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உண்டு. இந்தியாவுடன் நட்பு கொள்வதன் மூலம் இந்த அச்சத்தை போக்க முடியும் என புலிகள் நினைக்கின்றனர்.

இவை தவிர பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் நெருங்கி வருவதன் மூலம், இந்தியா மூலம் தங்களுக்கு எதிர்ப்பு ஏற்படாதவண்ணம் பார்த்துக் கொள்ள முனைகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இப்படியான சில காரணங்களை எதிர்நோக்கி தான் புலிகள் தற்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இந்த மன்னிப்பு தற்பொழுது எந்த பலனையும் கொடுக்காது. என்றாலும் எதிர்காலம் நிச்சயமற்றது.

http://thamizhsasi.blogspot.com/2006/06/bl...og-post_27.html

Link to comment
Share on other sites

கிந்து ராமின் பக்கச் சார்பை அடயாளம் காட்ட என நடத்தப்படும் இணயத் தளம், ராம் வொட்ச்.

ராமின் ' நடுனிலமையை' அக்கு வேறு ஆணிவேறாகக் களற்றிக் காட்டுகிறது.

http://ramwatch.blogspot.com/

Link to comment
Share on other sites

ம்..ராம் பத்திரிகை எழுத்தாளரேயண்றி பேச்சாளர் கிடையாது..பத்திரிகை எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் கேட்கப்பட்டது எப்போதும்போல அவரது குரலில் பதிலளித்திருந்தர்.. இங்கு நடுங்குகுரலில் பேச்சாளர் நடுங்குவதை உங்களால் உணரமுடியவில்லையே.. திருட்டுத்தனம் யார் செய்தார்கள் என்பது ராம் மற்றும் இந்திய உத்தியோகபூர்வ பதில்களில் எதிராலிக்கின்றன. உங்கள் மற்றறைய சாடலுக்கு ஆனந்தசங்கரியின் உங்கள் கொலைகளை நிறுத்துங்கள் என்ற கட்டுரையை வாசியுங்கள்.. அது சரியான ஒரு வழிகாட்டலாக அமையும்..

அண்ணோய் வணக்கமுங்கோ, சங்கரியார் எப்பண்ணை உதாரணம் காட்டுற அளவுக்கு பெரிய மனுசர் ஆனாருங்கோ, மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட பிறகும், தான் இன்னமும் ஒரு கட்சி நடத்துவதாகவும், அதற்கு தலைவர் என்றும் கனவுலகிலேயே இருக்கிறார். அதுதான் அடிக்கடி ஒரு கடிதம், அறிக்கை என்று எழுதிக்கொண்டிருக்கிறார். அட அந்தாள் தான் அப்பிடி என்றால், நீங்கள் சிறீலங்கா அமைச்சர்கள் எல்லாப்பிரச்சினைக்கும் மகிந்தசிந்தனை தான் "சகலரோக நிவாராணி"(All in One) என்று உதாரணம் காட்டுமாப்போல, காட்டுறீங்கள். சரி மகிந்தவும் ஒரு நாட்டு ஜனாதிபதி சிங்கள மக்களின் பிரதிநிதி(உப்புச்சப்பில்லாட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசாங்கத்தின் பார்வையில் அன்டன் பாலசிங்கத்தின் பேட்டி

ராஜீவ் மரணத்துக்கு விடுதலைப் புலிகள் மன்னிப்பு கோரவில்லை: சிறிலங்கா அரசாங்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் மரணத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிப்பு கோரவில்லை- வருத்தமே தெரிவித்துள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளரான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அளித்த நேர்காணலைப் பார்த்தேன். அதில் விடுதலைப் புலிகள் மன்னிப்பு ஏதும் கோரவில்லை.

ராஜீவ் கொலைச் சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து இது விடயத்தில் ஒரே நிலைப்பாட்டைத்தான் விடுதலைப் புலிகள் கொண்டுள்ளனர்.

முதலில் ராஜீவ் கொலைக்கு அவர்கள் பொறுப்பேற்று இந்தியா அரசாங்கம் மற்றும் மக்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும்.

இத்தகைய ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பது அர்த்தமற்றது. 15 ஆண்டுகளுக்குப் பின்னராவது அவர்கள் அதைச் செய்தார்கள் என்று கூற வேண்டும்.

இனப்பிரச்சனைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவளித்துள்ளது என்றார் ரம்புக்வெல.

http://www.eelampage.com/?cn=27154

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் பத்திரிகையின் கருத்து இது

உறவு துளிர்ப்பதைக் கெடுக்க

முளையிலேயே திரிப்பு முயற்சி

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன் றுக்கு வழங்கிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.

""ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் ஒரு பெரிய வரலாற் றில் மறக்கமுடியாத துன்பியல் நிகழ்வு. அதற்காக நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.'' என்று அன்ரன் பாலசிங்கம் கூற, அதற்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்து, அவ ரது கூற்றைத் திரிபுபடுத்தி போட்டடித்திருக்கிறது சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம்.

பாலசிங்கம் கூறிய மேற்படி கருத்துக்களை வைத்துக்கொண்டு ராஜீவ் கொலைக்கான பொறுப்பை, இப்போது பதினைந்து ஆண்டு கள் கழித்து புலிகள் முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளனர், அதற்காகத் தங்களை மன்னிக்கும்படி இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் புலிகள் மன்றாடுகின்றார்கள் என்றெல்லாம் சாரப் பட தனது கருத்தை மதியுரைஞர் பாலாவின் கருத்தாகக் குறிப் பிட்டு பிரசாரம் செய்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்.

ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மதியுரைஞர் பாலா தெரி வித்த முக்கிய கருத்தை அந்த நிறுவனம் ஒளிபரப்பவில்லை.

""ராஜீவ் கொலையை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.'' என்று பாலா குறிப்பிட்டதை அமுக்கிவிட்ட அந்த நிறுவனம், பாலா தெரி விக்காத கூற்றுக்கு பதில் கருத்துக்களை புலிகளுக்கு எதிரான பிரமுகர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் மூலம் வெளிப்படுத் தித் தனது திருகுதாள வேலையை கனகச்சிதமாக முன்னெடுத் திருக்கின்றது.

""கடந்த கால சம்பவங்களை மறந்து, விடயங்களைத் தாராள மனப்பான்மையோடு புதிய போக்கில் அணுகுமாறு இந்திய அரசையும், இந்திய மக்களையும் நாம் வேண்டுகின்றோம்.'' என்று ஈழத்தில் அல்லல்படும் தமிழர்களின் சார்பில், ஈழத் தமி ழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக நின்று மதியுரைஞர் பாலசிங்கம் அழைப்பு விடுக்க

அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு புலிகள் மீது பகையுறவும், விரோதப் போக்கும் கொண்ட இந்தியப் பத்திரிகையாளர் ராம் மற்றும் புலனாய்வாளர் கார்த்திகேயன் போன்றோரைத் தேடிப் பிடித்து அந்த சமரச முயற்சிக்கு முளையிலேயே ஆப்பு வைக் கும் திருவிளையா டலை நிறைவேற்றியிருக்கிறது இந்தியத் தரப்பின் ஊதுகுழல் நிறுவனம். மதியுரைஞர் பாலா வழங்கிய சுமார் ஒரு மணி நேரப் பேட்டியில் சில நிமிடங்களை மட்டும் "முண்டத்தை' மட்டும் ஒளிபரப் பிய அந்த நிறுவனம் அதை முழுமையாக ஒளிபரப்புமானால் அது நிச்சயம் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் நெஞ்சை ஆழமாகச் சென்று தைக்கும் தொடும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்புக்கு உண்டு.

மதியுரைஞர் பாலாவின் கருத்தை எடுத்தெறியும் விதத்தில் அந்தச் செவ்வியை ஒட்டி கருத்து வெளியிட்ட இந்திய வெளி விவகார அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பதில்கள் குறித்து அழு வதா, சிரிப்பதா என்பது தெரியாமல் சஞ்சலப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள்.

""இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்புகின்றது.'' என்று வலியுறுத்திக் கோரிய இந்திய இணை அமைச்சரிடம் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டது.

""இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோசமான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித் தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றா

Link to comment
Share on other sites

ம்.. இந்தியர்கள் மப்பிலை தாளமும் போடுறாங்கள் பிபிஸி செய்தி மேலும் சொல்லுது.. 5 மணிமட்டும் கேக்கலாம் இந்தாங்கோ லிங்..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

நானும் சில வேளை யோசிப்பன் உந்தாள் தள்ளாத வயதிலையும், எதுக்கு அடிக்கடி 5 பக்கத்திலை அறிக்கை விடுகிறரெண்டு, இப்பதான் விளங்குது உங்களை மாதிரி சில ரசிகர்கள் அவருக்கிருக்கிறார்களென்று. என்னதான் கள்ளுக்கொட்டிலில் மப்பில பாடுபவனாக இருந்தாலும், அவனுக்கும் அங்கு கைதட்ட நாலு ரசிகர்கள் மப்பில இருப்பார்கள் தானே.
Link to comment
Share on other sites

Rationale for LTTE olive branch missed

[TamilNet, June 29, 2006 10:07 GMT]

The text of the Tamil Guardian's editorial follows:

The Liberation Tigers' call this week for India to put the past behind and to take a fresh approach to the Tamil question in Sri Lanka has understandably sparked a frenzy of media interest and not a little controversy in India and elsewhere. The LTTE's extending of an olive branch to Delhi comes at a crucial time for Sri Lanka and an anxious one for the region; there is little doubt that Sri Lanka is edging towards a resumption of its bloody decades-long war. There were several key messages in the comments by LTTE's theoretician and chief negotiator, Mr. Anton Balasingham aired on NDTV this week.

The first, which has drawn the most media focus, is his characterisation of the 1991 assassination of former Indian Premier Rajiv Gandhi as a great tragedy, a monumental historical tragedy. This has, perhaps understandably, dominated headlines and commentary, both in India and elsewhere. Although a reiteration and elaboration of comments made by the LTTE leader, Vellupillai Pirapaharan, in 2002 during his landmark press conference in Kilinochchi, it has been interpreted and misinterpreted by different observers. Some have characterised it as an admission of responsibility. Others have characterised it as an evasion of responsibility. Still others have said it is neither, but a clever ploy to deliberately confuse. A few astute observers have, however, seen it for what it plainly is: a considered and heartfelt expression of regret for a prominent and devastating moment in a long and traumatic period of Tamil-Indian relations, one characterised by thousands of deaths including Indian soldiers, LTTE fighters and, especially, large numbers of Tamil civilians.

These observers have also grasped the significance of the other messages in Mr. Balasingham's comments. One is the LTTE's pledge that under no circumstances will we act against the interests of the government of India. The implications of this statement must be considered against a prominent assumption that remains problematically unquestioned: that the LTTE and Tamil political aspirations are inevitably at cross-purposes with India and her national or geopolitical interests. This is not to say that these are identical, but to point out that a just and lasting solution to the Tamil question also equates to regional stability. Another notable LTTE message is for India to get actively involved in resolving the Tamil question. This call for diplomatic and political intervention is a deliberate and radical departure from the uncompromising rejection of Indian involvement that prevailed in the wake of the IPKF fiasco.

Some, observing the developments through the distorting prism of political orthodoxy misunderstood the LTTE's logic, characterising its olive branch as a desperate measure to curry favour in the wake of the European Union's ban. This not only unjustifiably gives primacy to a desire for international legitimacy over all other considerations; more importantly, it ignores the LTTE's own history, that the movement has almost always been internationally alienated. Even the limited contacts of the post-2002 era have more to do with realpolitik (the obvious unavoidability of the LTTE) than with any solidarity with it. The point here is, the LTTE has grown from a handful of fighters to the semi-state it is today despite not having a single international sponsor or ally.

Save one, briefly: India. But as Mr. Balasingham pointed out this week, India's preparedness in the early 1980s to train LTTE fighters, stemmed primarily from a desire to protect our people from [sri Lankan] state oppression. Now, twenty years later, India is again intervening (albeit diplomatically this time) to protect the Tamils from the Sri Lankan state. In the wake of the extra-judicial and indiscriminate killings of hundreds of civilians, especially in the past few months, a government in Delhi is again pressuring a government in Colombo to restrain its armed forces. Following the killing of a top Sri Lankan General by a suicide bomber this week, there can be no doubt that President Mahinda Rajapakse's cotorie of Sinhala ultra-nationalists are straining to lash out again with airstrikes and artillery. But they dare not, for fear of antagonising India, which only last week delivered a blunt warning against such violence. It is in this context, where India again has to increasingly intervene in Sri Lanka to restrain a Sinhala government from savaging the island's Tamils, that the LTTE, explicitly hailing Delhi's efforts in this regard, has called for a new beginning, one that can lead to a just and lasting solution and stability in the region. In short, securing the island's Tamils and ensuring their rights are restored and safeguarded is a goal behind which both the LTTE and India are separately, but simultaneously, once again aligned.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18663

Link to comment
Share on other sites

உந்த ஒலிவ் பிராஞ்.. நெல்லிக்கா பிறாஞ்சொண்டும் இஞ்சை ருகத்தந்து ஒரு பிரயோசனமுமில்லை குறுக்காலைபோறவர்.. அவங்கள் என்ன ருசிக்கிறாங்கள் அதுதான் இங்கை முக்கியம்..

:P

Link to comment
Share on other sites

என்ன முக்கியம், என்ன முக்கியம் இல்லை எண்டு சொல்ல உமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கு?

மதிவதனத்தார் வழக்கம் போல காச்சலில என்ன நடக்குது எண்டு ஒண்டும் விளங்காம இங்க முக்கி முனகிக்கொண்டு இருக்கிறீர்.

எது எப்ப ?ஏன்? சொல்ல வேண்டும் என்பதை இந்திய உபகண்டத்தில் புலிகள் தான் தீர்மானிகிறார்கள் என்பதையும் மற்றவர்கள் எல்லாம் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலயே தமது எதிர் வினைகளை வழங்கிக் கொண்டிருகிறார்கள் என்பதையும் பார்க்க உமது வருத்தம் உமக்கு இடங்கொடாது. .

இந்திய தேசிய நலங்களைப் பாதுகாக்க தமிழ் ஈழ அரசுடன் இந்தியா கை கோர்க்க வேண்டிய தருணம் வரும் போது ,இப்போது கூறப் படுபனவற்றின் தாற்பரியம் விளங்கும்.

சர்வதேச பூகோள அரசியலில் நிரந்தர எதிரிகள் கிடையாது, இருப்பவை நலங்கள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் நடுநிலமை பற்றி வாயாரப் புகழ்வது தானாம் இப்ப முக்கியம். யாராவது வளக்கமில்லாதவர்கள் இருந்தால் வாழ்த்தி விடுங்களேன்! :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.