Jump to content

கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20-nithyashree-mahadevan-300.jpg

 

சென்னை: பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

 

பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்..

 

இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர்.

 

நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை

 

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி

 

இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த

 

சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.oneindia.in/movies/news/2012/12/tamilnadu-nithyasri-mahadevan-s-husband-commits-suicide-166599.html

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நித்யஸ்ரீ . தற்கொலைதான் தீர்வு இல்லை , நீங்கள் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கு இசையுலகில் .

Link to comment
Share on other sites

கணவரின் செய்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எனது அபிமான பாடகர்களில் ஒருவர்.

 

http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4

Link to comment
Share on other sites

Nithyashree-Mahadevan1_eu20122012.jpg

 

மகாதேவன் ஒரு கடம் வாத்தியக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது . ஆரம்பகாலத்தில் நித்தியஸ்ரீயின் இசைக்கச்சேரிக்கும் பக்கவாத்தியக்கலைஞராக இருந்தார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் அஞ்சலியோ

மனச்சங்கடமோ எனக்கு வருகுதில்ல.

படிப்பு பணம் பதவி வசதி புகழ் இருந்தும்............

கொழுப்பு இது......................

நன்றி  வணக்கம் மட்டுமே.

Link to comment
Share on other sites

மிகவும் அதிர்ச்சியானதும் வேதனையானதுமான செய்தி. 

 

 
நித்யஸ்ரீ அவர்களின் பாடல்கள் கேட்டுத் தான் எனக்கும் கர்நாடக சங்கீதத்தில் முதன் முறையாக ஆர்வம் பிறந்தது. செவிக்கினிய, மனதுக்கு அமைதி தரும் அவரது பாடல்களை நான் கேட்காத நாட்கள் மிக அரிது. 
 
மிக விரைவில் நித்யஸ்ரீ அவர்கள் குணமடைய ஆண்டவனை வேண்டுவதைத்தவிர வேறென்ன என்னால் செய்ய முடியும்?
 
அவரது கணவரின் ஆன்மா சாந்தியடையட்டும். 
Link to comment
Share on other sites

இதுக்கெல்லாம் அஞ்சலியோ

மனச்சங்கடமோ எனக்கு வருகுதில்ல.

படிப்பு பணம் பதவி வசதி புகழ் இருந்தும்............

கொழுப்பு இது......................

நன்றி  வணக்கம் மட்டுமே.

 

 

கலோ விசுகர் இது செத்தவீடு . இதே சம்பவம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்தால் <_< <_< <_< ???????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

நித்தியசிறி மகாதேவன் விரைந்து குணம் பெற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கணவர் மகாதேவன் தற்கொலை; நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
Posted Date : 13:59 (20/12/2012)Last updated : 16:18 (20/12/2012)
 

 

சென்னை: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின்  கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ள்னர்.பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்த மகாதேவன், கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் வந்தபோதுடிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்லார்.

 

இதனையடுத்து காரைவிட்டு இறங்கிய அவர், திடீரென  ஆற்றில் குதித்துள்ளார்.

அந்த வழியாக சென்றவர்கலும், டிரைவரும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர்.

இன்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி

இதனிடையே கணவர் இறந்தது குறித்து தகவலறிந்த பாடகி நித்யஸ்ரீயும்,  தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நிலை குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை.

 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், இச்சம்பவம் கர்நாடக இசைக்கலைஞர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

குடும்பத்தினர் மறுப்பு

இதனிடையே மகாதேவன் தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமல்ல என்றும், அவரது தாயார் கடந்த ஏப்ரல் மாதத்தில் மரணமடைந்ததிலிருந்து, அந்த துயரம் காரணமாக அவர் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாகவும் நித்யஸ்ரீ குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நித்யஸ்ரீ தற்கொலை முயற்சிக்கவில்லை என்றும், கணவர் இறந்த அதிர்ச்சியில் மட்டுமே அவர் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டம்மாள் பேத்தி

பாடகி நித்யஸ்ரீ, மறைந்த பிரபல கர்நாடக பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி ஆவார்.

 

விகடன் செய்திகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதுக்கெல்லாம் அஞ்சலியோ

மனச்சங்கடமோ எனக்கு வருகுதில்ல.

படிப்பு பணம் பதவி வசதி புகழ் இருந்தும்............

கொழுப்பு இது......................

நன்றி  வணக்கம் மட்டுமே.

 

 

ஆம்,
 
கோபம் தான் வருகின்றது.  தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், அனுதாபத்துக்கு உரியவை அல்ல.
 
பிரபலங்கள், இவ்வாறு செய்தால், சாதாரண மனிதர்கள் , அதனை சரியானது என தொடரக் கூடும்.
 
டெல்லியில், ஆறு மனித மிருகங்களால், பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, உயிருக்கு போராடும் பெண், ஆறாவதுமுறை சத்திர சிகிச்சை க்கு போகும் முன், ஒரு பேப்பரில், 'நான் பிழைத்து எழுந்து வாழ வேண்டும்', அம்மா' என தனது தாய்க்கு எழுதி கொடுத்து தான் போனார்.
 
அது முழு அனுதாபத்துக்கு உரியது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைகள் எதற்கும் தீர்வாக அமையமுடியாது.

 

கர்நாடக சங்கீதப் பாடகி நித்தியஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  பாடகி நித்தியஸ்ரீ விரைவில் குணமடைந்து மனவுறுதியுடன் வாழ்வைத் தொடர்வார் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

என்னத்தை எழுதிறது.. அந்தக் கணவரை நினைத்தால் பாவமாக இருக்கு.. :(

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

மிகவும் துயரமான செய்தி.

 

என் வீட்டில் காலை வேளைகளில் கணீர் என்று ஒலித்து மகிழ்விக்கும் நித்யசிறீ அவர்களின் வாழ்வில் வந்துள்ள இந்த துயரம் வெகு விரைவில் நீங்கட்டும்.

 

மற்றவர்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் பொதுவாகவே எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக, மனத்தளவில் கொஞ்சம் குழந்தைத்தனாம  இருப்பது வழக்கம். அதனால் தான் உலகளவில் பல கலைஞர்கள் தற்கொலை செய்து தம்மை உலகில் இருந்து பிரித்துக் கொள்கின்றனர்.

 

செத்த வீட்டிலும் தத்துவம் பேசி அவமானப்படுத்துவது எம்மவர்களின் பழக்கம்.

 

 

Link to comment
Share on other sites

ஆம்,
 
கோபம் தான் வருகின்றது.  தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், அனுதாபத்துக்கு உரியவை அல்ல.
 
பிரபலங்கள், இவ்வாறு செய்தால், சாதாரண மனிதர்கள் , அதனை சரியானது என தொடரக் கூடும்.
 
டெல்லியில், ஆறு மனித மிருகங்களால், பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, உயிருக்கு போராடும் பெண், ஆறாவதுமுறை சத்திர சிகிச்சை க்கு போகும் முன், ஒரு பேப்பரில், 'நான் பிழைத்து எழுந்து வாழ வேண்டும்', அம்மா' என தனது தாய்க்கு எழுதி கொடுத்து தான் போனார்.
 
அது முழு அனுதாபத்துக்கு உரியது.

 

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். 191

 

இதை யாருமே மறுக்கவில்லை . அதேவேளையில் ஓர் இளம்பாடகியின் கணவரின் மரணநிகழ்வு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் , செத்தவீட்டில் என்ன எழுதுகின்றோம் என்று தெரியாத ஒருசிலருக்கு குவாட்பண்ணிய உங்கள் கருத்தாடல் முரண்நகை  <_<  <_< . மேலும் , உங்களது ஆலோசனைகளை கொட்டுவதற்குரிய இடம் இதுவல்ல . அதற்கு ஒரு தனித் திரி திறந்து எழுதுங்கள் . இது இரங்கலுக்குரிய இடம் என்பதனையும் சுட்டி காட்டுகின்றேன் .

Link to comment
Share on other sites

இறைவனுள் அமைதிகொள்ளட்டும் ...............துன்பங்கள்,துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி திரும்பட்டும் ............ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

மனித மனங்கள் மாண்பும்,இறைவனின் சாயலும் கொண்டவையாகவே பூவுலகில் வருகின்றன .............ஆனால் சாத்தான் உள்புகுந்து ஆட்டுவான் ,ஆட்டுவிப்பான் ........அவனை முழுமையாக அரவணைத்து அவன் பாதையில் நாம் சென்றால் .....கொலைகள் ,தற்கொலைகள் ........இவற்றிற்கு முகம் கொடுததே ஆகவேண்டும் .............இவர்களை தற்கொலைக்கு தூண்டிய அனைத்துக்காரணிகளையும் ,மனிதப்பண்போடு நோக்கி, அவற்றை மற்றவர்கள் வாழ்வில் வராமால் நாம் வாழப்பழகுவோம், அப்படி வாழும்போது ஒவ்வொருவரும் இந்த உலகில் நிம்மதியாய் வாழுவான் ...........அதுவே இறைவனின் சித்தமுமாகும் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
செத்த வீட்டிலும் தத்துவம் பேசி அவமானப்படுத்துவது எம்மவர்களின் பழக்கம்.

 

நியாயமான ஆதங்கம்.

 

ஆனால் இதே யாழ் பரிதி அண்ணாவின் மரணத்தின் போது.. எவ்வாறு நடந்து கொள்ள சிலருக்கு இடமளித்தது.. அந்த வகையில் யாழும் கூட அந்தப் பழக்கம் தொடர தூண்டுதலாக உள்ளதோ என்ற எண்ணத்தையும் என் மனதில் எழ வைக்கிறது. துயர் மிகு இவ்வேளையிலும் அத்தகைய வெட்கப்படக் கூடிய நடத்தைகளை சுட்டிக்காட்டவே வேண்டி உள்ளது. எதிர்காலத்திலாவது மனிதர்களாக மாறி.. திருந்துவார்கள் என்ற ஒரு சிறிய நம்பிக்கையோடு.

Link to comment
Share on other sites

நியாயமான ஆதங்கம்.

 

ஆனால் இதே யாழ் பரிதி அண்ணாவின் மரணத்தின் போது.. எவ்வாறு நடந்து கொள்ள சிலருக்கு இடமளித்தது.. அந்த வகையில் யாழும் கூட அந்தப் பழக்கம் தொடர தூண்டுதலாக உள்ளதோ என்ற எண்ணத்தையும் என் மனதில் எழ வைக்கிறது. துயர் மிகு இவ்வேளையிலும் அத்தகைய வெட்கப்படக் கூடிய நடத்தைகளை சுட்டிக்காட்டவே வேண்டி உள்ளது. எதிர்காலத்திலாவது மனிதர்களாக மாறி.. திருந்துவார்கள் என்ற ஒரு சிறிய நம்பிக்கையோடு.

 

பரிதி அண்ணையின் இரங்கல் திரியில் யாரும் இப்பிடி எழுத இஅடமளிக்கப் படவில்லை என்று நினைக்கிரன்.பரிதி அண்ணாவின் விவாதங்கள் வேறுதிரியில்தான் நிகழ்ந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்கும் எனக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருக்கு, ஏன் இப்படி?

 

ஆழ்ந்த இரங்கல்கள்

 

 

Link to comment
Share on other sites

என்னத்தை எழுதிறது.. அந்தக் கணவரை நினைத்தால் பாவமாக இருக்கு.. :(

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

இசைக்கலைஞன் ஏன் அந்தக் கணவரை நினைத்து பாவப்படுவான். அவரை யாரும் தள்ளி விடவில்லைதானே. அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்தான் பாவம் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தெரிவிக்கலாம்.

நித்யாசிறீ அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் ஏன் அந்தக் கணவரை நினைத்து பாவப்படுவான். அவரை யாரும் தள்ளி விடவில்லைதானே. அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்தான் பாவம் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தெரிவிக்கலாம்.

நித்யாசிறீ அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

மயூரன்.. உங்கள் கருத்தில் மிகுந்த நியாயம் உள்ளது. பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டார். :(

 

ஆனால் இந்த மனிதனை தற்கொலை வரை நகர்த்திய காரணிகள் குடும்பச் சூழலில் இருந்து வந்திருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கடம் வாசித்த கலைஞர் பாடகியைத் திருமணம் செய்வது அங்குள்ள சூழலில் சிக்கலுக்கு உரியதாக இருந்திருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே. இதன் அடிப்படையில்தான் எனது கருத்தும் அமைந்தது. :unsure:

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். 191

 

இதை யாருமே மறுக்கவில்லை . அதேவேளையில் ஓர் இளம்பாடகியின் கணவரின் மரணநிகழ்வு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் , செத்தவீட்டில் என்ன எழுதுகின்றோம் என்று தெரியாத ஒருசிலருக்கு குவாட்பண்ணிய உங்கள் கருத்தாடல் முரண்நகை  <_<  <_< . மேலும் , உங்களது ஆலோசனைகளை கொட்டுவதற்குரிய இடம் இதுவல்ல . அதற்கு ஒரு தனித் திரி திறந்து எழுதுங்கள் . இது இரங்கலுக்குரிய இடம் என்பதனையும் சுட்டி காட்டுகின்றேன் .

 

 

இல்லை ஐயா, இல்லை. உங்கள் ஆதங்கம் புரியாமல் இல்லை.
 
அந்த அற்புதமான, மிகச் சிறந்த வகையில் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு கலைஞருக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து மிகுந்த அனுதாபம் நிறைய இருப்பதனால் தான் விரக்தி, வேதனை, கோபம் வருகின்றது.
 
இருவருமே அற்புதமான கலைஞர்கள். இன்னும் சாதிக்க வேண்டியது நிறையவே உள்ளது.
 
சிறு பிரச்சனைக்காக, தமது உயிரை மாய்த்து கொள்வது ஏற்புடையது அல்ல.
 
எனது கவலை எல்லாம், இது போன்ற நிகழ்வுகள், தன் நம்பிக்கையினை இழக்கச் செய்து, மீண்டும் கலைச்சேவை செய்வதை தாமதமாக்குமே என்பதே.
 
பாடகி சித்திரா, குழந்தையை இழந்த போதும் விரைவாக மீண்டு வந்தார். அந்த வகையில் இவர் மீள முடியுமா என்பதே எனது ஆதங்கம். 
 
சில  அற்புதமான கலைஞர்களுக்கு, பொருந்தாத  துணை கிடைத்து அவர்களது கலைத்துறை பாதிக்கின்றதே என்பதே எனது கவலை. அந்த கோபம் பகிர்தல்  இந்த நேரத்தில் பிழையாக இருக்கலாம்.
 
தன் நம்பிக்கை இழந்து, தற்கொலை முயற்சி செய்பவரை,  சொந்தமோ, ரசிகர்களோ, எவ்வளவு நாள் தான் பாதுகாக்க முடியும். அது தான் எனது விரக்திக்கு காரணம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

நித்தியசிறி மகாதேவன் விரைந்து குணம் பெற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

தற்கொலைகள் எதற்கும் தீர்வாக அமையமுடியாது.

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது  3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
    • நான் ஆட்சிக்கு வந்தால்  ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற  தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா  இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை?  ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁
    • இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.