Jump to content

கும்கி: மிகவும் பிடித்து இருந்தது: நிழலி


Recommended Posts

துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த பின் இனி எப்ப ஓரளவுக்கேனும் நல்ல தமிழ் படம் பார்க்கலாம் என்று இருந்த எனக்கு கும்கி படம் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

 

இன்று TMT இணையம் மூலம் கும்கி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சினிமாத்தன காட்சிகள் தவிர்ந்த (கிளைமாக்ஸில் யானைக்கு கிடைக்கும் முடிவு) மிச்ச காட்சிகள் எல்லாம் அப்படியே மனசை அள்ளும் காட்சிகள்.

 

தமிழகத்தின் காடுகளுக்குள் இன்றும் மரணித்துப் போகாமல் இருக்கும் மனிதர்களின் இயற்கையுடனான பின்னிப் பிணைந்த வாழ்க்கையையும், அவர்களின் நம்பிக்கைகளையும் அதை அவர்கள் காப்பாற்ற முயலும் முரட்டுத்தனத்தையும் அழகாக காட்டியுள்ளார்கள்.

 

தமிழ் சினிமாவில் யானையை இந்தளவுக்கு பயன்படுத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை. யானை தான் படம். அதை கண் கொட்டாமல் பார்ப்பதே அழகு.

 

கதாநாயகி.....ஆயிரம் கவிதைகளிலும் விபரிக்க முடியா அழகு. கறுப்பு நிற தேகம், மருளும் பின் மிரட்டும்.பின் காதலில் கொஞ்சும் கண்கள்.

 

தம்பி ராமையா வும் அந்த யானையும் தான் படத்தின் உண்மையான கதாநாயகர்கள்.

 

மண் வாசனையை பரப்பும் சினிமாக்களின் வரிசையில் இதனையும் இணைக்கலாம். எமக்குத் தெரியாத ஒரு சமூகத்தின் வாழ்வும், அவர்களின் நம்பிக்கைகளும், அதனை காக்க காதலைக் கூட தியாகம் செய்ய முனையும் மனிதர்களும், இயற்கையும், அதனூடாக தம் இருப்பைப் பேண துடிக்கும் மனிதர்களுமாக நிறைந்த படம்.

 

சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருக்கால் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

தாநாயகி.....ஆயிரம் கவிதைகளிலும் விபரிக்க முடியா அழகு. கறுப்பு நிற தேகம், மருளும் பின் மிரட்டும்.பின் காதலில் கொஞ்சும் கண்கள்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" எண்டது உண்மைதான்.....இரண்டு பிள்ளை பெத்தாப்பிறகும் அலையிறாங்கள்.... :lol:  :D
 
Link to comment
Share on other sites

 

"சோழியன் குடுமி சும்மா ஆடாது" எண்டது உண்மைதான்.....இரண்டு பிள்ளை பெத்தாப்பிறகும் அலையிறாங்கள்.... :lol:  :D
 

 

இரண்டு பூட்டப்பிள்ளைகளைக் கண்டாலும் அழகை ரசிப்பதில் தவறில்லை தானே அண்ணை.

 

ஒரு பெண்ணின் அழகை ரசிக்கத் தெரிகின்றவர்களால் மட்டுமே அழகியல் கவிதைகளை ரசிக்க முடியும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி அண்ணா...பகிர்விற்கு..நாளை நானும் பார்க்கபோகிறேன்..இந்த படம் குறித்து இணையத்தில் கண்ட இன்னொரு பகிர்வு..

 

 

563844_476602595719123_1235447176_n.jpg

 

 

" கும்கி - அழகு குவியல் " இந்த வருடத்தில் வழக்கு எண் படத்திற்கு அடுத்து பெரிதும் பிரமிக்க வைத்த படம் கும்கி மட்டுமே.பண்டைய நாகரீகத்தை உலகிற்கு எடுத்துச் சொல்ல எச்சம் மிச்சமாக விளங்கும் மலைவாழ் மக்களையும்,இயற்கையின் பேரழகையும் பதிவு செய்ததற்காக பிரபு சாலமன் பாராட்டப்பட வேண்டியவர்!.விக்ரம் பிரபுவின் நடிப்பும்,கிறங்க பேசும் காதல் வசனங்களும் படம் பார்க்கற நம்மையும் லவ் பண்ண தூண்டுது.'வடு'வழகி லஷ்மிமேனனுக்கு தான் எத்தனை,எத்தனை முகப்பாவனைகள்.செம ஃக்யூட்...
 
* படத்துல தம்பி ராமையாவுக்கே அதிக காட்சியமைப்புகள் கொடுத்ததால நமக்கு எரிச்சல் உண்டாகி அவரு தலையில ஓங்கிக் கொட்டனும்னு ஃபீலிங் வர்றதை தவிர்க்க முடியாது.ஃக்ளைமேக்ஸ்ல காதலன் காதலியை பிரிச்சிட்டாலே படம் ஹிட் ஆகிடும்ங்கற நினைப்பு இன்னும் எத்தனை இயக்குனர்களுக்கு இருக்கோ!.மைனாவை போலவே இதுலயும் பிரிச்சி கடுப்பெத்துறார் பிரபு சாலமன்.சில குறைகள் மட்டுமே இருந்தாலும் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை வளைத்து வளைத்துப் படம் பிடித்து காட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமாரனின் பிரம்மாண்டத்தையும்,வெளியாவதற்கு முன்னரே பலரின் (நானும் உட்பட :-) ) மொபைல் காலர் டியூனாக மாறிய பாடல்களையும் கண்களுக்கு விருந்தளிக்க படத்தை நிச்சயம் தியேட்டரில் போய் பாருங்கள்.உலகின் ஒட்டு மொத்த அழகையும் குத்தகை எடுத்திருக்கும் இயற்கையுடன் வாழ்ந்துவிட்டு வருவீர்கள்.படத்தில் யானை மாணிக்கத்தின் நடிப்பும் நெகிழ வைக்கும்..!
 
* மூணாரின் சம்பகாடு,ஏற்காடு,நீலகிரி,பாலமலை,மார்த்தாண்டம் அருகேயுள்ள காடுகள்,இராமக்கல்,கல்வராயன் மலை போன்ற இடங்களில் வாழும் மலைவாழ் மக்களுடன் தங்கி பல கட்டுரைகள் எழுதியதாலும்,அவர்களின் வாழ்க்கை முறைகளை நன்கு அறிந்தவள் என்பதாலும் எதிர்பார்ப்புடன் இப்படத்தை முதல் நாளே சென்று பார்த்தேன்.படத்தில் பெண்களின் உடை மற்றும் உணவு முறைகளைத் தவிர பதிவு செய்திருந்த அனைத்து தகவல்களுமே மலைவாழ் மக்களின் வாழ்வியல் உண்மை!..காட்டுப் பன்றிகளும்,யானைகளும் அடிக்கடி அவர்களது பயிர்களை நாசம் செய்துவிட்டுப் போய்விடும் என்பதையும், வனத்துறை சமவெளிகளில் வாழச் சொல்லி ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறியும் இயற்கையின் மீதான நேசிப்பால் சமவெளிக்கு வர மறுக்கும் மலைவாழ் மக்களின் அன்பையும் நன்கு அறிவேன்..தற்போதைய மார்டன் உலகத்தை நம் மூதாதையர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ' 'பொறுமை' சாலமனுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.. !!! ஃகிரேட் ஃகிரேட் .....
 
Vini Sharpana

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவாக படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இல்லை,நேரம்  செலவளிப்பதிலும் தான்..இந்த விமர்சனங்களைப் படிக்கும் போது கும்கி பார்க்கனும்  என்ற ஆவல் பார்க்கலாம்...

Link to comment
Share on other sites

துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த.

துப்பாக்கி ஒரு தரப்பு ரசிகர் கூட்டத்துக்காக எடுக்கப்பட்டது. எடுத்தவர்களும் அதையே தான் சொல்கிறார்கள். நடித்தவரும் அவார்டு படங்களில் நடிக்க நட்டம் இல்லை நான் சாதாரண ரசிகனுக்காக நடிப்பவன் என்று சொல்பவரே. அப்படி இருக்கும்போது நீங்கள் அந்தப் படத்தில் வேற என்ன எதிர்பார்த்தீர்கள்?? திரைப்படம் என்பதே கேளிக்கை தானே? பிடிக்கவில்லையெனில் கடந்து செல்லலாமே காரித்துப்புவது தகுமா?

Link to comment
Share on other sites

அதுவும் துப்பாக்கி வசூலில் செம சாதனை :D

 

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

Link to comment
Share on other sites

இதனை ஆஸ்திரேலியா விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் வன்மையாக கண்டிகின்றோம்....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியே படத்தை பற்றி நல்லதாக எழுதியிருக்கிறீர்கள்.

பின்னர் கேட்கவா வேண்டும்.

படம் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.

எங்கே பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

இதை வாசிக்க பாதி மீசை பின்னூட்டம்தான் தான் நினைவு வந்தது .

Link to comment
Share on other sites

படங்கள் எடுப்பதே வசூலை அடிப்படையாக வைத்து தானே தமிழ் திரையுலகில் கதை அம்சத்தோடு சமூக சிந்தநியோடு எடுக்கப்பட்ட படங்கள் தோல்விய தானே தழுவி இஉக்கின்ட்ரன சில படங்களை தவிர

தயாரிப்பளருக்கு 10 கோடி போட்டால் இருபது கோடி லாபம் வரணும் அந்த கணக்கில தானே படம் எடுக்கிறாங்க சோ துப்பாக்கி படத்தோட விஜய் க்கு ஒரு 5 படம் கைல வந்திருக்கும் இன்னும் சொத்துக்கள வாங்கி குவிக்கலாம் முருகதாஸ் க்கும் அதே தான் தானுக்கு சொல்லி வேலை இல்லை :D

Link to comment
Share on other sites

'துங்க கரிமுகத்து தூமகனை' பக்தி படங்களுக்கும், பாப்பா படங்களுக்கும் மட்டுமே பயன்படுத்திய தமிழ்சினிமாவில் அந்த கருத்த பெருத்த உருவத்தை முதன்முறையாக வேறொரு லொக்கேஷனில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பிரபுசாலமன். இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கு ஆயிரம் தும்பிக்கைகளின் ஆசிர்வாதம் நிச்சயம்.

மலைகிராமத்து பயிர்களை மானாவாரியாக தின்று தொலைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், உயிர்களையும் பந்தாடிவிட்டு போகிறான் 'கொம்பன்' என்கிற காட்டு யானை. தமிழ்சினிமாவில் இன்றுவரை வந்த வில்லன்களையெல்லாம் தின்று செரித்துவிட்ட ஆக்ரோஷத்துடன் திரிகிற அவனை தீர்த்துக்கட்ட முடியாமல் கையை பிசைகிறது அந்த மலைகிராமம். யானைகளை விரட்டுவதற்காக பழக்கப்பட்ட கும்கி யானையை கூட்டிவரலாமே என்ற யோசனைக்கு செவிசாய்க்கும் ஊர் பெரிசுகள் அதற்காக மெனக்கெட, வந்து சேர்கிறான் மாணிக்கம். சரியான தும்பிக்கை நடுங்கி... இவனை சண்டைக்கு பழக்குவதற்காக ஒரு எருமையை கொண்டு வந்து நிறுத்தினால்கூட அதற்கே தடதடக்கும் அப்பாவி.

இந்த டூப்ளிகேட் கும்கி, கொம்பனை வென்றதா? இது மெயின் கதை. அப்படியே பாகனுக்கும் அந்த ஊர் தேவதை ஒருத்திக்கும் ஏற்படும் காதல் கிளைக் கதை. ஒரு கட்டத்தில் இந்த கிளைக்கதையே மெயின் கதையை ஃபுல் மீல்ஸ் ஆக்கி மென்று விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி, 'என்ட் கார்டு' போடுகிறார் பிரபுசாலமன்.

இப்படி ஒரு புதுமையான கதையில், காதல் தேவைதானா என்று ஒரு சாரரரும், கண்டிப்பாக தேவைதான் என்று இன்னொரு சாரரும் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு பட்டிமன்றம் நடத்துவது தனிக்கதை!

தொடை நடுங்கி ஹீரோக்கள் யாரும் தொடவே அஞ்சுகிற முரட்டுக் கேரக்டர் அறிமுக ஹீரோவான விக்ரம் பிரபுவுக்கு. இவர் யானையை படுக்கப் போட்டு குளிப்பாட்டுகிற காட்சிகளில் நமக்கு நெஞ்சுவலி வருகிறது. யானையின் காலில் ஏறி, அசால்டாக முதுகுக்கு தாவும் அவரது டெக்னிக், நிஜ பாகன்களையே கூட 'நீட்' சொல்ல வைக்கும். பல நேரங்களில் அதன் முதுகில் ஏறி உலாவரும் அந்த அழகு, விக்ரமுக்கு தனி கம்பீரத்தை கொடுக்கிறது. ஆனால் ஒரு அழகியை பார்த்த மாத்திரத்தில் இவர் காதல் படுகுழியில் விழுந்து தொலைப்பதுதான் ஜெனிட்டிக்காக ஊறிப்போன சினிமாட்டிக் நெருடல்.

முதல் படத்திலேயே அன்னை இல்லத்தின் பெருமையை காப்பாற்றியிருக்கும் விக்ரம் பிரபு செய்ய வேண்டிய முதல் வேலை, அந்தகால ஸ்ரீதேவி செய்து கொண்டாரே, அதே அழகு ஃபார்முலாவைதான்! நேரடியாகவே சொல்வதற்கென்ன? அந்த மூக்கில் கத்தி வைக்காமல் முன் செல்வது கஷ்டம் பிரதர்!

கிராமத்து பேரழகியாக லட்சுமிமேனன். ஓராயிரம் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியை ஒளித்து வைத்திருக்கிறது அவரது கண்கள். சட் சட்டென சிறகடித்து உணர்ச்சிகளை கொட்டுகிற வித்தையால் டயலாக்குகளுக்கு வேலை இல்லாமல் செய்கிறார். வந்திருப்பது நிஜ கும்கி அல்ல. அதை பராமரிப்பவன் தன் மீதுள்ள காதலால் உயிரையே கொடுக்க துணிந்தவன் என்பதெல்லாம் புரிந்தபின் லட்சுமி காட்டும் எக்ஸ்பிரஷன்களை பார்த்து ரசிக்க இன்னொரு முறை கூட தியேட்டருக்கு போகலாம்.

சில அறிமுகங்கள்தான் இன்னும் பல கி.மீ து£ர பயணத்திற்கு தகுதியாக இருப்பார்கள். ஹீரோயின் அப்பாவாக நடித்திருக்கும் ஜோ மல்லு£ரி அந்த ரகம். ஒரு கிராமத்து தலைவனுக்குரிய கம்பீரத்தையும், ஒரு பழங்குடி மனிதனுக்குரிய அன்பையும், கருணையையும் அசால்ட்டாக வெளிப்படுத்திவிடுகிறார் மனுஷன். தன் மகள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை அடுத்த காட்சியிலேயே யானை பாகன் மீதும் வைத்திருப்பதாக காட்டும் காட்சிகள் மிகச் சிறப்பானவை.

தான் பேசாமல் தன் மைண்ட் வாய்சை பேசவிட்டு வேடிக்கை காட்டுகிறார் தம்பி ராமய்யா. யதார்த்த வசனங்களில் அவ்வப்போது அரசியலையும் குழைத்து அடிக்கும் அவரது ஸ்டைல் செம ஷார்ப். (புரிஞ்சுருச்சு... வடிவேலுவுக்கு நீங்கதான் பேக் மற்றும் பிரண்ட் ரவுண்டா இருந்தீங்க என்பதும்)

அப்படியே மாணிக்கத்தை பற்றியும் சொல்லியாக வேண்டும். வெறும் மிருக ஜாதிதானே, அதற்கு ஏது உணர்ச்சி என்று யாரும் கேட்டுவிட முடியாதளவுக்கு இந்த யானையை பயன்படுத்தியிருக்கிறார்கள். 'அடுத்த பலி நீதாண்டியேய்...' என்கிற மாதிரி அப்பாவியாக நிற்கும் அதை பார்க்கும்போதே பரிதாபம் வருகிறது. அதற்கு மதம் பிடிக்கிற நேரத்தில் கொம்பன் வந்ததால்தான் கொஞ்சம் பதற்றம் குறைந்தது. இல்லையென்றால்...? அது மிதிபடுவதை சகித்திருக்கவே முடியாது. ஆனால் இந்த பச்சாதாபம் அது சாகும்போது ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா? இல்லையே! இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியது மோசமான சி.ஜி தொழில்நுட்ப வல்லுனர்களே ஒழிய டைரக்டர் அல்ல.

கொம்பன் ஊருக்குள் இறங்கப் போறான்... வரப்போறான் என்று இவர்கள் பில்டப் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்களே தவிர, கொம்பன் வந்தபாடில்லை. நடுவில் ஓரிரு முறை அவனை காட்டியிருந்தால் இன்னும் டென்ஷன் ஏறியிருக்குமே ஸார்.

இந்த படத்தையெல்லாம் 3டி யில் காட்ட மாட்டாங்களா என்ற ஏக்கத்தை தருகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. அடர்ந்த காட்டிலும் அருவிகளின் உச்சத்திலும் அசராமல் துள்ளித்திரிய விட்டிருக்கிறார் படம் பார்க்கிற அத்தனை பேரையும்.

அடிக்கடி வருகிற பாடல்களில் இரண்டை பாவம் பார்க்காமல் வெட்டியெறியலாம். (இது படத்தின் வேகத்தை குறைக்கிறது எனகிற காரணத்திற்காக மட்டுமே) என்றாலும், டி.இமானின் இசை காதுகளுக்குள் பனிச்சாரல் வீசிச் செல்கிறது.

இந்த கதையை வைத்துக் கொண்டு சுற்றுசூழல் பற்றி பேசியிருக்கலாம், வனவிலங்குகள் நலன் குறித்து அலசியிருக்கலாம். பழங்குடியினரின் முன்னேற்றம் பற்றி கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் தன் தும்பிக்கை தேங்காய் உடைப்பதற்கே என்கிற மாதிரி சும்மாவே இருந்துவிட்டார் பிரபுசாலமன்.

அதனாலென்ன...? யானை நடந்த பாதையெல்லாம் அதன் காலடி தடம் போல அழுத்தமாக பதிந்து கிடக்கும் பிரபுசாலமனின் இந்த முயற்சி!

-ஆர்.எஸ்.அந்தணன்

எனக்கு ஒரு படத்தின் விமர்சனம் எண்டா தமிழ்சினிமா.காம் அந்தணின் வினர்சனம் வாசிக்க தான் நிறைய பிடிக்கும் அவர் எழுதும் அழகே தனி ரகம்

Link to comment
Share on other sites

இதை வாசிக்க பாதி மீசை பின்னூட்டம்தான் தான் நினைவு வந்தது .

 

..அப்படி வராவிட்டால் தானே அதிசயம்.

 

பத்துப் பேரின் கவனைத்தை திருப்பப் போறோம் என்று விட்டு பாடையில் ஏறி பள்ளிக் கூடம் போகின்ற கூட்டத்தில் இருப்பவர்களுக்கு அப்படித்தான் நினைவுக்கு வரும்.

Link to comment
Share on other sites

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

 

பேச்சுக்காக வைத்துக் கொண்டாலும் கூட எனக்கு தெரிந்து சகீலா படம் எந்த திரையரங்கிலும் நூறு நாள் ஓடியது  கிடையாது.  ஆயிரம் திரையரங்குகளில் எதாவது ஒன்று ரெண்டிலே அந்த மாதிரி படம் போடுவார்கள்.  அதையும் சொற்ப நாட்களில் தூக்கி விடுவார்கள். காமம் கலவியை ஆர்வமாகக் கொண்ட நீங்கள் சகீலாவை விமர்சிக்கலாமா  !!?? 

 

தரத்தின் அளவுகோள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். உங்களது ரசனை உயர்ந்ததும் கிடையாது மற்றவர்களின் ரசனை தாழ்ந்ததும் கிடையாது. அது ஒவ்வொருவரின் அறிதலையும் புரிதலையும் பொருத்தது. எல்லாருக்கும் எல்லா  விடயமும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால்  பலபேருக்கு  பிடித்த  ஒன்றை  தனக்கு  பிடிக்காது  என்பதாலேயே  தூற்றுவது என்பது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.  மக்களால் ரசிக்கப்படாத எதுவும் இவ்வுலகத்தில் மதிக்கப் படுவதில்லை. மக்களால் மதிக்கப்படாத எதுவும் இங்கு மகுடத்தில் அமர முடியாது. சினிமா என்ற கற்பனையில் வாழ்வையும் வரலாறையும் தேடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.  

 

No Offence ...

Link to comment
Share on other sites

பேச்சுக்காக வைத்துக் கொண்டாலும் கூட எனக்கு தெரிந்து சகீலா படம் எந்த திரையரங்கிலும் நூறு நாள் ஓடியது  கிடையாது.  ஆயிரம் திரையரங்குகளில் எதாவது ஒன்று ரெண்டிலே அந்த மாதிரி படம் போடுவார்கள்.  அதையும் சொற்ப நாட்களில் தூக்கி விடுவார்கள். காமம் கலவியை ஆர்வமாகக் கொண்ட நீங்கள் சகீலாவை விமர்சிக்கலாமா  !!?? 

 

தரத்தின் அளவுகோள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். உங்களது ரசனை உயர்ந்ததும் கிடையாது மற்றவர்களின் ரசனை தாழ்ந்ததும் கிடையாது. அது ஒவ்வொருவரின் அறிதலையும் புரிதலையும் பொருத்தது. எல்லாருக்கும் எல்லா  விடயமும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால்  பலபேருக்கு  பிடித்த  ஒன்றை  தனக்கு  பிடிக்காது  என்பதாலேயே  தூற்றுவது என்பது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.  மக்களால் ரசிக்கப்படாத எதுவும் இவ்வுலகத்தில் மதிக்கப் படுவதில்லை. மக்களால் மதிக்கப்படாத எதுவும் இங்கு மகுடத்தில் அமர முடியாது. சினிமா என்ற கற்பனையில் வாழ்வையும் வரலாறையும் தேடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.  

 

No Offence ...

 நன்றி ,நான் எழுத நினைத்தை எழுதியதற்கு .அரசியலுக்கு ஒரு அளவுகோலும் சினிமாவிற்கு இன்னுமொன்றும் என்று தமக்கேற்ற தொப்பிதான் அணிகின்றார்கள் .

Link to comment
Share on other sites

பேச்சுக்காக வைத்துக் கொண்டாலும் கூட எனக்கு தெரிந்து சகீலா படம் எந்த திரையரங்கிலும் நூறு நாள் ஓடியது  கிடையாது.  ஆயிரம் திரையரங்குகளில் எதாவது ஒன்று ரெண்டிலே அந்த மாதிரி படம் போடுவார்கள்.  அதையும் சொற்ப நாட்களில் தூக்கி விடுவார்கள். காமம் கலவியை ஆர்வமாகக் கொண்ட நீங்கள் சகீலாவை விமர்சிக்கலாமா  !!?? 

 

தரத்தின் அளவுகோள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். உங்களது ரசனை உயர்ந்ததும் கிடையாது மற்றவர்களின் ரசனை தாழ்ந்ததும் கிடையாது. அது ஒவ்வொருவரின் அறிதலையும் புரிதலையும் பொருத்தது. எல்லாருக்கும் எல்லா  விடயமும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால்  பலபேருக்கு  பிடித்த  ஒன்றை  தனக்கு  பிடிக்காது  என்பதாலேயே  தூற்றுவது என்பது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.  மக்களால் ரசிக்கப்படாத எதுவும் இவ்வுலகத்தில் மதிக்கப் படுவதில்லை. மக்களால் மதிக்கப்படாத எதுவும் இங்கு மகுடத்தில் அமர முடியாது. சினிமா என்ற கற்பனையில் வாழ்வையும் வரலாறையும் தேடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.  

 

No Offence ...

 

 

சகீலாவின் படத்தை ஒரு எடுகோளுக்கு பயன்படுத்தி இருந்தேன். அதே நேரத்தில் காமம் கலவியை ஆர்வமாகக் கொண்டவர்களால் எக்காலத்திலும் சகீலா படம் போன்ற காமத்தை படு கேவலமாக வெளிப்படுத்தும் சினிமாவை எக்காலத்திலும் ஏற்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது. காமமும் கலவியும் அழகியல் நிரம்பிய பூரணத்துவமுடைய அம்சங்கள். இதனை அழகாக வெளிப்படுத்த முடியாத அரசியல் நிலை இருக்கின்றது என்பதால் தான் சகீலாவின் படம் போன்ற வக்கிர வெளிப்பாடுகள் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. 

 

தரத்தின் அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடும் என்பதை ஏற்கின்றேன். அதே நேரத்தில் வெற்றி பெற்ற கலை வெளிப்பாடுகள் எல்லாம் தரத்தில் உயர்ந்தவையாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை.

 

கண்டிப்பாக ரசனையில் உயர்ந்தது தாழ்ந்தது என்று இருக்கின்றது. பல இலட்சக்கணக்கானோர் ரசிக்கின்றார்கள் என்பதற்காக அது தரத்தில் உயர்ந்திட முடியாது. இன்று தமிழகத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களைக் கூட இலட்சக்கணக்கில் ரசிக்கின்றனர். உங்கள அளவு கோலின் படி, பலர் ரசிப்பதால் இவையும் தரமானதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ரசிப்பவர்களின் ரசிப்புத் திறனையும் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும்.

 

பல பேருக்கு ஒன்று பிடிக்கின்றது என்பதற்காக எனக்கு பிடிக்காத ஒன்றை பிடிக்கின்றது என்று நான் ஏன் கூற வேண்டும்? வெகுசன அபிப்பிராயத்துக்கு எதிரான என் அபிப்பிராயம் இருந்தால் ஏன் அதனை வெளிப்படுத்தக் கூடாது? என்னைப் பொறுத்தவரைக்கும் துப்பாக்கி ஒரு குப்பை. அது கோபுரமாக நீங்கள் போற்றுவதற்குரிய உரிமை உங்களுக்கு எப்படி இருக்கின்றதோ அதே போன்று தான் அதனை படு குப்பை என்று விமர்சிக்கவும் எனக்கு உரிமை இருக்கின்றது.

 

கலைகள் எல்லாம் மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பன. சினிமாவும் ஒரு கலைவடிவம். உலக சினிமாக்கள் எல்லாம் வாழ்வியலையும் வரலாற்றையும் வெளிப்படுத்தி ஏராளமாக வந்துள்ளன. எல்லா சினிமாவும் கலைப்படங்களாக இருக்கவும் தேவையில்லை. ஆனால் நல்ல சினிமாவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருப்பதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். ஏனெனில் நான் செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு பெறுமதியானவை. 

Link to comment
Share on other sites

கும்கி படத்திற்குள் துபகியை வைத்து கதைப்பதே அது அந்த படத்திற்கு கிடைத்த வெற்றி தானே படம் பாக்கதவர்கள் கூட அப்பிடி என்ன அந்த படத்தில் இருக்கு என்று பார்க்க போறார்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன்

தான் கொடுத்த பணத்துக்கு அந்தப்படம் பலனைத்தரவில்லை என்றரீதியில் நிழலியின் கருத்து உள்ளது என்று.  அந்தவரகயில் அவரது விமர்சனம் சரியானதே.

அத்துடன் நல்ல படங்களை ரசிக்கவேண்டும் ஊக்குவிக்கவேண்டும் என்றும் நினைக்கிறார் போலும்

அதனால் வந்த ஆவேசமாகவும் இருக்கலாம்

 

எனக்கும் சில படங்கள் பற்றி இப்படி ஆவேசம் வருவதுண்டு.

ஆனால்  எந்த புற்றில் எந்த பாம்போ என்ற நிலை.  பக்கத்தில் கிடப்பவன் எவன் ரசிகன் என்று எப்படி கணிப்பது??

இங்கு அது சுண்டலுக்கும்உறைத்துள்ளது போல்....??? :lol:

Link to comment
Share on other sites

 

கண்டிப்பாக ரசனையில் உயர்ந்தது தாழ்ந்தது என்று இருக்கின்றது. பல இலட்சக்கணக்கானோர் ரசிக்கின்றார்கள் என்பதற்காக அது தரத்தில் உயர்ந்திட முடியாது. இன்று தமிழகத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களைக் கூட இலட்சக்கணக்கில் ரசிக்கின்றனர். உங்கள அளவு கோலின் படி, பலர் ரசிப்பதால் இவையும் தரமானதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ரசிப்பவர்களின் ரசிப்புத் திறனையும் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும்.

 

 

தரம் என்பது பொருள்களுக்கு வேண்டுமானால் வரையறை செய்யலாம். ஆனால் கலை சார்ந்த விடயங்களுக்கு இது முடியாது. சர்க்கரை என்றால் இனிக்க வேண்டும், பாகற்க்காய் என்றால் கசக்க வேண்டும். இந்த இனிப்பு, கசப்பு சுவை உலகெங்கும் உள்ளவர்களால் ஒரே மாதிரியாக அறியப் படுகிறது. அதனால் இனிப்பு, கசப்பு என்பதை நாம் ஒரு வரையறைக்குள் உள்ளடக்கம் செய்ய இயலும். ஆனால் இதைப் பார்த்தவுடன் அழுகை வர வேண்டும், இதை பார்த்தவுடன் வியப்பு வர வேண்டும்,சிரிக்க வேண்டும்  என்பதை வரையறை செய்ய இயலாது. அதை அவரவர் உயித்து உணரவேண்டும். இந்த உணர்தல்அந்த மனிதர்களின் அறிதல் திறனையும், அனுபவத்தையும், அவர்களது சமூக சூழலும் தான் முடிவு செய்யும்.  தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் சமூக சூழல் சார்ந்த விடயமே. ஏனெனில் அதைப் பார்ப்பவர்கள் 95 விழுக்காடு பெண்களே. அது ஒரு உளவியல் ரீதியான பழக்கம். அதை வெறும் ரசனை என்ற கருத்துக்குள் அடக்க முடியாது. 

   

 

பல பேருக்கு ஒன்று பிடிக்கின்றது என்பதற்காக எனக்கு பிடிக்காத ஒன்றை பிடிக்கின்றது என்று நான் ஏன் கூற வேண்டும்? வெகுசன அபிப்பிராயத்துக்கு எதிரான என் அபிப்பிராயம் இருந்தால் ஏன் அதனை வெளிப்படுத்தக் கூடாது? என்னைப் பொறுத்தவரைக்கும் துப்பாக்கி ஒரு குப்பை. ....   நல்ல சினிமாவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு 

 

 
இது  வெறும்  அபிப்பிராயம் என்றளவில் இருந்தால் பிரச்னை இல்லை. இது நல்ல சினிமாவுக்குள் இல்லை என்று வரையறைக்குள் உட்படுத்த முயலுகிறீர்கள்.
 
நான் துப்பாக்கியை தூக்கி பிடிக்கவும் இல்லை விமர்சிக்கவும் இல்லை. ஒரு மூன்று மணி நேரம் பல மக்களின் கவலைகளை மறக்கச் செய்த படம் என்றளவில் ரசிக்கிறேன்.
 
இதுவரை உங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. 
Link to comment
Share on other sites

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

 

எனக்கு கிராமத்து கதைகள் அதிகம் பிடிக்கும் அதை முதலில் சொல்லி விடுகிறேன்.......

 

 

சரி  நிழலி எப்படி ஒரு படம் வசூலில் சாதனைபடைக்கிறது?

 

ஏன் சாதனை படைக்கிறது.

 

நீங்கள் உங்களுக்கு நல்ல ரசனை இருக்கு என்பதை பறை சாற்றவே நீங்கல்  அவசரப்பட்டு  துப்பாக்கி குப்பை படம் என்று கூறியுள்ளீர்கள் என நான்  நினைக்கிறேன்( மேல நான் சொன்னது போல்).

 

காத்தை  காசு கொடுத்து பெறலாம் என்று நீங்கள்  சொன்னது  கும்கியை  நீங்கள் உண்மையி ரசித்து பாத்தீர்களா என சந்தேகப்பட வைக்கிறது.

 

இருந்தாலும் ஒன்றை உயர்தி சொல்வதற்க்காக  என்னொன்றை தாழ்த்துவது  அழகல்ல.

நான் நினைக்கின்றேன்

தான் கொடுத்த பணத்துக்கு அந்தப்படம் பலனைத்தரவில்லை என்றரீதியில் நிழலியின் கருத்து உள்ளது என்று.  அந்தவரகயில் அவரது விமர்சனம் சரியானதே.

அத்துடன் நல்ல படங்களை ரசிக்கவேண்டும் ஊக்குவிக்கவேண்டும் என்றும் நினைக்கிறார் போலும்

அதனால் வந்த ஆவேசமாகவும் இருக்கலாம்

 

எனக்கும் சில படங்கள் பற்றி இப்படி ஆவேசம் வருவதுண்டு.

ஆனால்  எந்த புற்றில் எந்த பாம்போ என்ற நிலை.  பக்கத்தில் கிடப்பவன் எவன் ரசிகன் என்று எப்படி கணிப்பது??

இங்கு அது சுண்டலுக்கும்உறைத்துள்ளது போல்....??? :lol:

 

நீங்கள் ரஜனி ரசிகர் தானே அண்ணை?

 

உங்களுக்கு தெரியுமா ரஜனி ரசிகரை படிக்காதவர்கள் என்ற  கண்ணோட்டத்தில் தான் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்று??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எழுதியது படம் பார்க்கத் தூண்டுகிறது. நிழலி தேவையில்லாமல் நேரத்தை விவாதத்தில் கழிப்பதைவிட உங்கள் மிகுதிக் கதையை எழுதுவிடுங்கோ. அல்லது நீங்களே அதை மறந்து விடுவீர்கள். :D :D :D

Link to comment
Share on other sites

தரமான சினிமா என்பது வேறு. பல வருசங்கள் சென்றாலும் மனதில் பதிந்திருந்து உணர்வலைகளை உருவாக்கும்.

 

வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் நல்ல சினிமா என்று இலக்கணம் இல்லை. சம காலத்திற்கேற்ப கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களைச் சுற்றி கமெராவை சுழல வைத்தும்  , இசையைப்  பின்னணியாகவும் வைத்து எடுத்திருப்பார்கள். மெருகூட்ட இப்போ நிறைய கிராபிக்சும் வந்து விட்டது. அவைகள் குறிப்பிட்ட காலங்களில் வசூல் படங்களாகப் போற்றப்படும்.

Link to comment
Share on other sites

தரமான சினிமா என்பது வேறு. பல வருசங்கள் சென்றாலும் மனதில் பதிந்திருந்து உணர்வலைகளை உருவாக்கும்.

 

வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் நல்ல சினிமா என்று இலக்கணம் இல்லை. சம காலத்திற்கேற்ப கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களைச் சுற்றி கமெராவை சுழல வைத்தும்  , இசையைப்  பின்னணியாகவும் வைத்து எடுத்திருப்பார்கள். மெருகூட்ட இப்போ நிறைய கிராபிக்சும் வந்து விட்டது. அவைகள் குறிப்பிட்ட காலங்களில் வசூல் படங்களாகப் போற்றப்படும்.

 

நல்ல படங்கள் இளையராஜ  இசை போன்றது எப்பொழுது  திரும்ப திரும கேக்கலாம், வசூல் படங்கள் ஏ ஆர் ரகுமானின் இசை போன்ரது வந்த கொஞ்ச காலம்  அந்த மாதிரி இருக்கும் போக போக  கேக்க இனிமையாக இருக்காது.

 

 

அதுக்காக  உழைக்க வந்த இடத்தில்   உடனே உழைப்பு  அதன் பின் தான்  கலைச்சேவை......

 

ஆனால் எனது கருத்து  அது எப்படி நிழலி சொல்லலாம்  துப்பாக்கி குப்பை படம் என்று? :D

Link to comment
Share on other sites

 

ஆனால் எனது கருத்து  அது எப்படி நிழலி சொல்லலாம்  துப்பாக்கி குப்பை படம் என்று? :D

 

முடியல....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.