Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் இப் பதிவில் நான் வாசித்த,கேட்ட விடயங்களையும்,எம் மனதில் எழும் கேள்விகள்,சந்தேகங்கள் போன்றவற்றை எழுதப் போகிறேன்...அநேகமான விடயங்கள் புத்தகங்களில் வாசித்ததாவும்,என் மனதில் தோன்றும் சந்தேகங்களாகவும் இருக்கும்...வாசித்து விட்டு என்னைத் திட்டுக :lol:

வெகு நாட்களாக

நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட

என் எதிர் இருக்கை

பருகப்படாமல் வீணாகிறது

உன் வருகையை எதிர்பார்த்து

பகிர்ந்து வைக்கப்படும்

ஒரு கோப்பை தேனீர்

ஒரு கோப்பை மது

[நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது]

நீண்ட‌ என் அழைப்புகள்

ஒரு காத்திருப்பை முன்னிருத்தி

விசும்பலாகி

மெல்லக் கரைகின்றன.

கிழக்கிலிருந்து புறப்பட்டு

மேற்கில் சென்று ஒடுங்குகின்றன

பகல்கள்

ஒரு வயோதிபனைப் போல,

அனேக இர‌வுகளில்

பெரும் புயலென

உருக்கொள்கிறது

தனித்து விட‌ப்பட்டதன்

துக்கம்.

பிர‌ளயத்திற்கு

பிறகான ஓர் அந்தியில்

நீ வந்து அமர்கிறாய்

வசிய பூங்கொத்துட‌ன்

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

(பிரியத்திற்கு...)

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply

நேரத்தோடு எதையும் செய்யவேண்டும் என்பதை தெளிவாகச் சொல்கின்றன இந்த வரிகள்..! :rolleyes: ஆனால் ஆண்களால் இலகுவில் கடைப்பிடிக்க முடியாத தகுதிகளுள் இதுவும் ஒன்று..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]எளிய தமிழில் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது. நன்றாக இருக்கின்றது. நன்றி :)

[size=1]ஒரு சிறுகுறிப்பு:

"நாட்கள்" என்று எழுதுவது தவறாகும் மாறாக "நாள்கள்" என்பதே சரியான பதமாகும்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்காக நீண்ட காலம் காத்திருந்தால் காத்திருப்பே ஆளைக் கொல்லும். விரைவில் வரவழைக்க வழிவகைகளை ஆராய்திருந்தால் வசிய பூங்கொத்துடன் வந்தவருடன் சந்தோஷமாக இருந்திருக்கலாம்.

எல்லாம் சீராக இருக்கவேண்டும் என்றும் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்ற கொள்கையையுடையவர்கள் (Perfectionists) பல சந்தர்ப்பங்களைத் தவற விடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி;இது ஒரு நல்ல காரியம்.இந்தக் நல்ல காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்காது.ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்யாமல் போனால் பெரிய பாவம் வந்து சேரும்.அந்தப் பாவம் அவனுடைய வம்சத்தையே பாதிக்கும்.அந்த நல்ல காரியம் எது?

...................................................................................................................................................................................................

கூடவே

இருந்தும்

ஒருநாள் சொல்லாமல்

பிரிகிகின்றேன் என்று

கவலைப்படாதே!

நான்

பிரியும் நேர‌த்தை

சொல்லிவிட்டால்

நீ உன்னுடைய

சந்தோச‌த்தை

இழந்து இடுவாய்.

இப்படிக்கு உன் உயிர்

Link to comment
Share on other sites

முதலாவது கவிதை நெஞ்சை அழுத்தியது ரதி.

(ஒரு கவிதைக்காக ஒருத்தியை அயுளுக்கு வதைக்க வேண்டுமா ?)

**************************************************************************

தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என்னைவிட சற்று வயது குறைந்தவள் என்று நினைக்கிறேன். சில வருடங்களிற்கு முன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தாள். மத்தியான சாப்பாட்டு நேரம் எதையாவது பற்றிக் கதைப்போம். ஒரு நாள் மூட் அவுட்டாக்கும் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கதைக்கும் போது

"எந்தவிதமான காரணமுமின்றி நாம் சிலவேளைகளில் கவலையாக‌ இருப்போமல்லவா" என்றேன்.

அவள் இரக்கமாகப் பார்த்தபடியே சொன்னாள் "[size=4]You are feeling lonely[/size]"

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என்னைவிட சற்று வயது குறைந்தவள் என்று நினைக்கிறேன். சில வருடங்களிற்கு முன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தாள். மத்தியான சாப்பாட்டு நேரம் எதையாவது பற்றிக் கதைப்போம். ஒரு நாள் மூட் அவுட்டாக்கும் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கதைக்கும் போது

"எந்தவிதமான காரணமுமின்றி நாம் சிலவேளைகளில் கவலையாக‌ இருப்போமல்லவா" என்றேன்.

அவள் இரக்கமாகப் பார்த்தபடியே சொன்னாள் "[size=4]You are feeling lonely[/size]"

ஆ.. அப்புறம்? :D

Link to comment
Share on other sites

ஆ.. அப்புறம்? :D

சிரிப்புத் தாங்க முடியல்லை.

மேட்டருக்கு வராம இடையிலை நிற்பாட்டி ஆர்வத்தைத் தூண்டுகிறார் யுவர் ஆனர். :D

Link to comment
Share on other sites

ஆ.. அப்புறம்? :D

அப்புறம் என்ன ?

சினிமா டைரக்டர் சார் ரெண்டு கையையும் "[size=5]L"[/size] ஷேப்பில விரிச்சு சீன் ஓபனாகிற மாதிரி நினைச்சிட்டு உங்க உங்க கற்பனைய ஓபன் பண்ண வேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

அப்புறம் என்ன ?

சினிமா டைரக்டர் சார் ரெண்டு கையையும் "[size=5]L"[/size] ஷேப்பில விரிச்சு சீன் ஓபனாகிற மாதிரி நினைச்சிட்டு உங்க உங்க கற்பனைய ஓபன் பண்ண வேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி;இது ஒரு நல்ல காரியம்.இந்தக் நல்ல காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்காது.ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்யாமல் போனால் பெரிய பாவம் வந்து சேரும்.அந்தப் பாவம் அவனுடைய வம்சத்தையே பாதிக்கும்.அந்த நல்ல காரியம் எது?

...................................................................................................................................................................................................

பதில்;ஒரு மகன்/மகள் தன் வயதான் பெற்றோரைப் பேணிக் காப்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கும்,கீரிக்கும் சண்டை வந்தால்,கீரி மட்டும் வெற்றிக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போவதற்குக் காரணம்,பாம்பின் விசம் அதை பாதிக்காதது தான்.எந்த ஒரு விலங்கையும்,பாம்பு கடித்து விட்டால் ரத்த ஓட்டம் உறைந்து நரம்பு மண்டலம் செயலிழந்து போய் உடனே மரணம் தான்.ஆனால்,கீரிக்கு அந்த மரண பயம் கிடையாது.காரணம்,கீரியின் நாக்கில் உள்ள சொர சொரப்பான பகுதியில் "அன்டி ஸ்நேக் வெனம்" என்ற மருத்துவ குணம் கொண்ட எச்சில் சுரக்கிறது.இந்த எச்சில் வீரியம் கீரியின் ரத்த ஓட்டத்திலும் இருப்பதால் பாம்பின் விசம் ரத்தத்தை உறைய வைப்பதில்லை.இது தவிர கீரிகள் பொதுவாகவே புல் பூண்டுகளுக்கு மத்தியில் மறைந்து இருக்கும் ஒரு மூலிகைத் தாவரமான "மங்கூஸ் வேயில்" எனப்படும் சித்தர் காலத்து செடியைக் கண்டு பிடித்து,அதனுடைய வேரை ருசி பார்க்கிறது.அந்த வேரில் நஞ்சு முறிக்கும் வஸ்து இருப்பதே கீரியை பாம்பின் விசம் தாக்காமல் இருப்பதற்கு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எல்லா மதத்தவர்களும் விரதம் இருக்கிறார்கள்...விரதம் இருப்பது முக்கியமாக கடவுள் பக்திக்காகவும், மனக் கட்டுப்பாட்டுக்காகவும் ஆகும்...தொடர்ந்து விரதம் இருக்கும் போது பசிக்காது ஏனெனில் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் ஆனால் விரதம் முடிந்து அடுத்த நாளே பசிக்கும்...ஒரு விதத்தில் பார்த்தால் விரதம் மூலம் மனக் கட்டுப்பாடு வரும் என்டாலும் இன்னொரு விதத்தில் பார்த்தால் விரதம் இருப்பவர்கள் போன பிறப்பில் ஏதோ பெரிய பாவம் செய்தவர்களாக இருப்பார்கள் என்றும் நினைக்க தோன்றுகிறது...தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு இருப்பது அவர்கள் செய்த பாவமா அல்லது மனக் கட்டுப்பாடா?

Link to comment
Share on other sites

பொதுவாக எல்லா மதத்தவர்களும் விரதம் இருக்கிறார்கள்...விரதம் இருப்பது முக்கியமாக கடவுள் பக்திக்காகவும், மனக் கட்டுப்பாட்டுக்காகவும் ஆகும்...தொடர்ந்து விரதம் இருக்கும் போது பசிக்காது ஏனெனில் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் ஆனால் விரதம் முடிந்து அடுத்த நாளே பசிக்கும்...ஒரு விதத்தில் பார்த்தால் விரதம் மூலம் மனக் கட்டுப்பாடு வரும் என்டாலும் இன்னொரு விதத்தில் பார்த்தால் விரதம் இருப்பவர்கள் போன பிறப்பில் ஏதோ பெரிய பாவம் செய்தவர்களாக இருப்பார்கள் என்றும் நினைக்க தோன்றுகிறது...தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு இருப்பது அவர்கள் செய்த பாவமா அல்லது மனக் கட்டுப்பாடா?

போன பிறப்பு இருந்தால் தானே அதில் பாவ புண்ணியம் இருப்பதற்கு.

விரதம் உடலாரோக்கியத்துக்கு நல்லது. காரணமில்லாமல் சாப்பிடாமல் இருக்க மனம் இடம் கொடுக்காது. கடவுள் என்ற காரணத்தை முன்வைத்த அதன் பெயரில் பயத்தில் பட்டிணியாக இருந்து உடல் பருமனை குறைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன பிறப்பு இருந்தால் தானே அதில் பாவ புண்ணியம் இருப்பதற்கு.

கடவுளை நம்புவோருக்கு போன பிறப்பும் இருந்தது, மறு பிறப்பும் இருக்கும் பாவ,புண்ணியத்தைப் பொறுத்து

விரதம் உடலாரோக்கியத்துக்கு நல்லது. காரணமில்லாமல் சாப்பிடாமல் இருக்க மனம் இடம் கொடுக்காது. கடவுள் என்ற காரணத்தை முன்வைத்த அதன் பெயரில் பயத்தில் பட்டிணியாக இருந்து உடல் பருமனை குறைக்கலாம்.

இதுவும் உண்மை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்சத் தீவுகள் என்று அழைக்கப்படும் தீவில் லட்சம் தீவுகள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அந்தத் தீவில் 27 தீவுகள் மட்டுமே இருக்கின்றன.பிறகு ஏன் அது லட்ச‌த்தீவு என்று அழைக்கப்பட‌ வேண்டும்? 16ம் நூற்றாண்டில் இந்தத் தீவுகள் போர்த்துகீயேச‌ர் வச‌ம் இருந்தன.அதன் பின்னர் கொனார்க் மன்னன் அலிராஜனிட‌ம் இந்தத் தீவுகள் ஒப்படைக்கப்பட்டன.18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வியாபார‌ம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தத் தீவுகளை கைப்பற்றிக் கொண்டார்கள்.பின்னர் அலிராஜா கேட்டுக் கொண்ட‌தற்கு இணங்க ரூ 1 லட்சத்திற்கு அவருக்கே இந்தத் தீவுகளை விற்றார்கள்.அதிலிருந்து இத் தீவு லட்சத்தீவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

Link to comment
Share on other sites

லட்சத் தீவுகள் என்று அழைக்கப்படும் தீவில் லட்சம் தீவுகள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அந்தத் தீவில் 27 தீவுகள் மட்டுமே இருக்கின்றன.பிறகு ஏன் அது லட்ச‌த்தீவு என்று அழைக்கப்பட‌ வேண்டும்? 16ம் நூற்றாண்டில் இந்தத் தீவுகள் போர்த்துகீயேச‌ர் வச‌ம் இருந்தன.அதன் பின்னர் கொனார்க் மன்னன் அலிராஜனிட‌ம் இந்தத் தீவுகள் ஒப்படைக்கப்பட்டன.18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வியாபார‌ம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தத் தீவுகளை கைப்பற்றிக் கொண்டார்கள்.பின்னர் அலிராஜா கேட்டுக் கொண்ட‌தற்கு இணங்க ரூ 1 லட்சத்திற்கு அவருக்கே இந்தத் தீவுகளை விற்றார்கள்.அதிலிருந்து இத் தீவு லட்சத்தீவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

18 ஆம் நூற்றாண்டில ஒரு லட்சம் ருபாயின்னா எவ்வளவு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்குப் போனால் தான் மன அமைதி கிடைக்கும் என்று உங்களில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அது தவறு.நீங்கள் மன அமைதியோடு இருப்பதும்,இல்லாததும் உங்கள் கைகளில் இருக்கின்றது.நீங்கள் மன அமைதியோடு,சந்தோசமாக இருக்க வேண்டுமானால் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.எவரையும் குறை கூறாதீர்கள்.குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர்.எது நடந்தாலும் அது கடவுளின் விருப்பத்தால் நடக்கிறது.கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவும் நடப்பது இல்லை.ஏதாவது நடந்தது என்டால் அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்று பொருள்.நீங்கள் பொறுமையோடு இருப்பதை சிலர் கையாலாதவர்கள்,கோழை என்று பேசுவார்கள்.அப்படிப் பேசுபவர்கள் பேசி விட்டுப் போகட்டும்.உங்கள் பொறுமைக்கு உரிய பரிசைக் கடவுள் தரும் போது கேலி பேசியவர்கள் புரிந்து கொள்வார்கள் [வாசித்தது]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்யும் போது ஓக் மர‌த்திற்கு கீழ் நின்டால் இடி நம்மைத் தாக்காது என சொல்லப்படுவதற்கு கார‌ணம் ஓக் மர‌த்திற்கு ஒரே ஒரு ஆணி வேர் மட்டுமே உண்டு. அந்த வேர் ஒரு நேர் கோட்டைப் போல் செங்குத்தாய் பூமிக்குள் இறங்கி இருப்பதால் அந்த மர‌த்தை இடி தாக்கினாலும் அது வேர் மூலமாகப் பூமிக்குள் சென்று வலு இழந்து விடும்

ஓக் மர‌த்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

oaktree2.jpg

oaktree1.jpg

இதில் ஆணிவேர் மாதிரி தெரியவில்லையே?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

oaktree2.jpg

oaktree1.jpg

இதில் ஆணிவேர் மாதிரி தெரியவில்லையே?? :rolleyes:

இது தான் ஓக் மரமா நன்றி இசை :)

நாம் ஒரு நிமிடத்திற்கு 10 தடவை கண் சிமிட்டுகிறோம்.

நாம் ஒரு வார்த்தை பேசும் போது 72 தசைகள் அசைகின்றன.

நம் உடலில் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நம் நாக்கில் 3000 சுவை அரும்புகள் உள்ளன.

மனித மூளை 100 கோடி உயிரணுக்களால் உருவாக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :)...அதற்கு பிறகு திடிரென ஒரு அன்ரி சொன்னார் தான் அண்மையில் ஊருக்குப் போய் வந்ததாகவும் அங்கே போய் தன்னால அங்கத்தைய சாப்பாட்டை சாப்பிட‌ முடியவில்லை என்றும்,சாப்பாடு சுவையே இல்லை என்றும்,ஒன்றுமே தன்னால் பழங்கள் கூட‌ சாப்பிட‌ சுவையாக இல்லை என்றும் சொன்னார் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

Link to comment
Share on other sites

கொழும்பு போயிருக்கிறேன்.. ஊருக்கு இடையில் போனதில்லை.. :blink:

குத்தரிசி சோறு எனக்கு இப்ப பிடிக்கிறேல்ல.. மற்றபடி மீதி எல்லாம் நல்லாத்தான் இருந்தது.. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.