Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குத்தரிசி சோறு எனக்கும் பிடிக்கிறேல்ல...இசையும்,நானும் சேம் பிளட் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரு சிறிலங்காவிற்கு சென்றிருந்தபோதும் ஊருக்குப் போகவில்லை. அங்கு போனால் மரக்கறி சாப்பாடுதான் சாப்பிடுவேன். மச்சம் எல்லாம் முன்னர் அங்கு இருந்தபோது சாப்பிடவில்லை என்பதாலும், இறைச்சி மென்மையாக இல்லாததாலும் (ஓடித் திரியும் கோழிகளில் எங்கே தசை இருக்கின்றது, எல்லாமே எலும்புதானே!), தேங்காய்ப்பால் விட்ட மச்சக்கறிகள் பிடிக்காததாலும் மரக்கறிதான்!

குத்தரிசியையும் கண்ணில் காட்டக்கூடாது.. ஆனால் ஊரில் இருக்கும்போது தகரத்தில் புழுக்கிய அரிசியை சுறங்கை சுறங்கையாக சாப்பிட்டிருக்கின்றேன். அதுதானே அப்போது நொறுக்குத் தீனி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த கடவுள் பாட்டுக்களில் லிங்க புராணம் முதன்மையானது...வட மொழி எதிர்ப்பாளார்களும்,கடவுள் எதிர்ப்பாளர்களும் மன்னிக்க;

ப்ரம்ம முராரி ஸூ(சு)ரார்சித லிங்கம்

நிர்மல பாஹித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ முனி ப்ரவார்சித லிங்கம்

காமதகம் கருணாகர‌ லிங்கம்

ராவணதர்ப விநாச‌ன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வ ஸீ(சு)கந்தி ஸீ(சு)லேபித லிங்கம்

புத்து விவர்த்தன கார‌ண லிங்கம்

ஸீ(சி)த்த ஸீ(சு)ர‌ஸீ(சு)ர‌ வந்தித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஜித லிங்கம்

பணிபதி வேஸ்டித சோபித லிங்கம்

தகூஸ யஜ்ஞ விநாச‌ன லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார‌ ஸீ(சு)சோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாச‌ன லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ கணார்சித ஸேவித லிங்கம்

பாவையர் பக்தி பிரேவச‌ லிங்கம்

தினகர‌ கோடி ப்ர‌பாகர‌ லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

அஸ்ட‌ தலோபரி வேஸ்டித லிங்கம்

ஸர்வ ஸமுத் பவ கார‌ண லிங்கம்

அஸ்ட‌ தரித்ர‌ விநாச‌க லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸீ(சு)ர‌ குரு ஸீ(சு)ர‌வர‌ பூஜித லிங்கம்

ஸீ(சு)ர‌வன புஸ்ப ஸதார்ச்சித லிங்கம்

பர‌மபதம் பர‌மாத்மக லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஸ்ட‌கம் மிதம் புண்யம்

யஹ்படேத் சிவ ஸந்திதேள!

சிவலோக மவாப் நோதி

சிவேந ஸஹ மோததே!!

[இந்தப் பாட்டின் அர்த்தம் எனக்குப் பெரிதாய் புரியவில்லை ஆனால் இனம் புரியாத ஒன்று இந்தப் பாட்டில் இருக்குது என்பது தான் எனது கருத்து]

பாட்டை எதாவது பிழையாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

வெகு நாட்களாக

நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட

என் எதிர் இருக்கை

பருகப்படாமல் வீணாகிறது

உன் வருகையை எதிர்பார்த்து

பகிர்ந்து வைக்கப்படும்

ஒரு கோப்பை தேனீர்

ஒரு கோப்பை மது

[நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது]

நீண்ட‌ என் அழைப்புகள்

ஒரு காத்திருப்பை முன்னிருத்தி

விசும்பலாகி

மெல்லக் கரைகின்றன.

கிழக்கிலிருந்து புறப்பட்டு

மேற்கில் சென்று ஒடுங்குகின்றன

பகல்கள்

ஒரு வயோதிபனைப் போல,

அனேக இர‌வுகளில்

பெரும் புயலென

உருக்கொள்கிறது

தனித்து விட‌ப்பட்டதன்

துக்கம்.

பிர‌ளயத்திற்கு

பிறகான ஓர் அந்தியில்

நீ வந்து அமர்கிறாய்

வசிய பூங்கொத்துட‌ன்

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

(பிரியத்திற்கு...)

நல்லதொரு கவிதை, பகிர்வுக்கு நன்றி ரதி...

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

காலியாகிப் போன பின்பும் கூட நிரப்ப முடியாததுதான் தனித்து விடப்பட்டதால் வரும் மனநிலையும் அதனூடான வாழ்வும். மிகவும் அருமையான வரிகள்.

Link to comment
Share on other sites

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

எனக்கு ஊர்ச் சாப்பாடுதான் பிடித்துக் கொண்டது. நல்ல சுவை.

இங்கு சுப்பர் மார்கெட்டில் மலிவு விலையில் கிடைக்கும் இரசாயனங்கள் ஊட்டப்பட்டு வளர்ந்த கால்நடைகளின் (battery chickens...) இறைச்சி / மரக்கறி ஐ நீண்ட காலம் சாப்பிட்டவர்களுக்கு, அங்குள்ள இயற்கை உணவுகளை உண்ண சுவை தெரியாது. விலை அதிகம் காரணமாக இங்குள்ளவர்கள் அதிகம் இயற்கையாக வளர்க்கப்பட்ட உணவுகளை (Organic food ) உண்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :)...அதற்கு பிறகு திடிரென ஒரு அன்ரி சொன்னார் தான் அண்மையில் ஊருக்குப் போய் வந்ததாகவும் அங்கே போய் தன்னால அங்கத்தைய சாப்பாட்டை சாப்பிட‌ முடியவில்லை என்றும்,சாப்பாடு சுவையே இல்லை என்றும்,ஒன்றுமே தன்னால் பழங்கள் கூட‌ சாப்பிட‌ சுவையாக இல்லை என்றும் சொன்னார் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

வெண்டிக்காய், கத்தரிக்காய், பாகற்காய், முருங்கைக் காய், போன்றவை, அன்று போல இன்றும் நல்லாத்தான் இருக்கின்றன! இஞ்சத்தையான்கள் கிட்டவும் நிக்கேலாது!

மீன், கோழி, ஆடு எல்லாம் அங்கு நல்லாத் தானே இருக்குது!

பல்லு, ஆடத் துவங்கின, பொம்பிளையலா, இருக்கும், ரதி!

கருவாட்டுக் குழம்பும், அரிசிமாப் புட்டும்,......சொர்க்கம்! :D

Link to comment
Share on other sites

.

அன்றும் இன்றும் என்றும் நமக்குப் பிடிச்சது சிவத்தப் புட்டும் முறுங்கக்காய் குழம்பும் தான். முறுங்கக்காய்க் குழம்பு நல்ல திக்காக இருக்க வேண்டும்.

என்னுடைய சின்னம்மா சமைச்சால்.. சிவத்தப் புட்டும் வெந்தயக் குழம்பும். என்ன கைவண்ணமோ..

*****************************************************************

பலதும் பத்தும்..

ஸோ தி இஸ் ரதி ஸ்பெஷல் சாங்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் மருத்துவ குணம் கொண்ட‌ மகத்தான பழம். மனம் கவலையோடும்,உட‌ல் சோர்வோடும் இருந்தால் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உட‌ம்பும்,மனசும் அடுத்த 2 நிமிட‌த்தில் புத்துணர்ச்சி பெறும். ஒரு அளவான வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரையும் 105 கலோரிகளும் இருக்கும்.வாழைப்பழம் ர‌த்தத்தில் சர்க்கரையின் அளவை சிறிது மட்டுமே அதிகரிக்கின்றது.மேலும் உட‌ம்பின் ஒரு நாளுக்கான விற்றமின் 6 தேவையில் 30% அளிக்கிறது.இது மூளையில் செர‌டோனின் என்ற ஹர்மோனை சுர‌க்க செய்கிறது. நமது மனதை செர‌டோனின் ஹர்மோன் அமைதிப்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவி செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு போயிருக்கிறேன்.. ஊருக்கு இடையில் போனதில்லை.. :blink:

குத்தரிசி சோறு எனக்கு இப்ப பிடிக்கிறேல்ல.. மற்றபடி மீதி எல்லாம் நல்லாத்தான் இருந்தது.. :rolleyes:

குத்தரிசி சோறு எனக்கும் பிடிக்கிறேல்ல...இசையும்,நானும் சேம் பிளட் :lol:

இரு சிறிலங்காவிற்கு சென்றிருந்தபோதும் ஊருக்குப் போகவில்லை. அங்கு போனால் மரக்கறி சாப்பாடுதான் சாப்பிடுவேன். மச்சம் எல்லாம் முன்னர் அங்கு இருந்தபோது சாப்பிடவில்லை என்பதாலும், இறைச்சி மென்மையாக இல்லாததாலும் (ஓடித் திரியும் கோழிகளில் எங்கே தசை இருக்கின்றது, எல்லாமே எலும்புதானே!), தேங்காய்ப்பால் விட்ட மச்சக்கறிகள் பிடிக்காததாலும் மரக்கறிதான்!

குத்தரிசியையும் கண்ணில் காட்டக்கூடாது.. ஆனால் ஊரில் இருக்கும்போது தகரத்தில் புழுக்கிய அரிசியை சுறங்கை சுறங்கையாக சாப்பிட்டிருக்கின்றேன். அதுதானே அப்போது நொறுக்குத் தீனி!

காலம் செய்தகோலம் எல்லாம் :( ....பசுமதி கொம்பனிக்கு மாறீட்டாங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இல்லாதவர்களின் அளவற்ற கனவு[/size]

அவர்கள் பெருங்கனவுட‌னே

மர‌ணத்தை முத்தமிட்டனர்.

கடைசியில்

அவர்களின் ஞாபகம் நிர‌ப்பிவிட‌ப்பட்ட

கல்லறைகளும் இல்லை.

தாய்மார்கள் தீப்பந்தங்களையும்

தமது பிள்ளைகளுட‌ன் இழந்து விட்டனர்.

மனைவிமார்கள் தங்கள் புன்னகையுட‌ன்

கல்லறைமீதான

தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிட‌க்கிறது.

இம்முறை எந்த பூக்களும் இல்லை.

இலைகளில் குருதி ஒழுக

பூமர‌ங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின் கம்பத்தில் மோதி

இல்லாதவர்களைக் கூப்பிடுகிறது நம்பிக்கையற்ற மனம்.

அவர்களை என்றோ அழித்து விட்டனர்.

கனவை உறிஞ்சி

அவர்களை தின்று முடித்துவிட்டது காலம்.

அவர்கள் மீதெழுதப்பட்ட மர‌ணப்பாட‌ல்

நெருப்பில் கிட‌ந்து பொசுங்குகிறது.

அப்பாவுக்காகத் தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை

மண்ணைக் கிண்டி

கல்லறையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

ஞாபகத்தின் கடைசி சொத்தையும் அழித்தனர்.

அழுகையின் இருந்த

உரிமையையும் பறித்து எடுத்தனர்.

மனங்களில் கல்லறைகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து

கொண்டிருக்கிறது

யாருமற்ற தனித்த நிலத்தில்

வர‌லாற்றின் துயர‌ம் நிர‌ம்பிய எலும்புக்கூடுகள்

எழும்பிச் செல்லுகின்றன.

மண்ணைப் பிர‌ட்டி

சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.

கல்லறைகளின் போர் நட‌ந்து முடிந்துவிட்டது.

சனங்களுட‌ன் அவர்கள்

கல்லறைகளைத் துடைத்தெறிந்து விட்டார்கள்.

நம்பிக்கையின் உறைவிட‌த்தில்

சனங்களை இணைத்து வைத்திருந்த மண்ணில்

இப்பொழுதுதான் இனம் படுகொலை செய்யப்பட்ட

சுட‌லையின் வாச‌னை பெருமெடுப்பில் வீசுகிறது

இந்த கவிதையை யார் எழுதியவர் என்று வாசித்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.வாசிக்காதவர்கள் ஊகியூங்கள் பார்ப்போம்

Link to comment
Share on other sites

யார் எழுதினார்களோ தெரியாது. கண்ணீர்க் கவிதை

Link to comment
Share on other sites

இல்லாதவர்களின் அளவற்ற கனவு

அவர்கள் பெருங்கனவுட‌னே

மர‌ணத்தை முத்தமிட்டனர்.

கடைசியில்

அவர்களின் ஞாபகம் நிர‌ப்பிவிட‌ப்பட்ட

கல்லறைகளும் இல்லை.

தாய்மார்கள் தீப்பந்தங்களையும்

தமது பிள்ளைகளுட‌ன் இழந்து விட்டனர்.

மனைவிமார்கள் தங்கள் புன்னகையுட‌ன்

கல்லறைமீதான

தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிட‌க்கிறது.

இம்முறை எந்த பூக்களும் இல்லை.

இலைகளில் குருதி ஒழுக

பூமர‌ங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின் கம்பத்தில் மோதி

இல்லாதவர்களைக் கூப்பிடுகிறது நம்பிக்கையற்ற மனம்.

அவர்களை என்றோ அழித்து விட்டனர்.

கனவை உறிஞ்சி

அவர்களை தின்று முடித்துவிட்டது காலம்.

அவர்கள் மீதெழுதப்பட்ட மர‌ணப்பாட‌ல்

நெருப்பில் கிட‌ந்து பொசுங்குகிறது.

அப்பாவுக்காகத் தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை

மண்ணைக் கிண்டி

கல்லறையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

ஞாபகத்தின் கடைசி சொத்தையும் அழித்தனர்.

அழுகையின் இருந்த

உரிமையையும் பறித்து எடுத்தனர்.

மனங்களில் கல்லறைகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து

கொண்டிருக்கிறது

யாருமற்ற தனித்த நிலத்தில்

வர‌லாற்றின் துயர‌ம் நிர‌ம்பிய எலும்புக்கூடுகள்

எழும்பிச் செல்லுகின்றன.

மண்ணைப் பிர‌ட்டி

சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.

கல்லறைகளின் போர் நட‌ந்து முடிந்துவிட்டது.

சனங்களுட‌ன் அவர்கள்

கல்லறைகளைத் துடைத்தெறிந்து விட்டார்கள்.

நம்பிக்கையின் உறைவிட‌த்தில்

சனங்களை இணைத்து வைத்திருந்த மண்ணில்

இப்பொழுதுதான் இனம் படுகொலை செய்யப்பட்ட

சுட‌லையின் வாச‌னை பெருமெடுப்பில் வீசுகிறது

இந்த கவிதையை யார் எழுதியவர் என்று வாசித்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.வாசிக்காதவர்கள் ஊகியூங்கள் பார்ப்போம்

இதனை எழுதியவர் தீபச்செல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை எழுதியவர் தீபச்செல்வன்.

ஆம் தீபச்செல்வனால் 22/6/2009 எழுதப்பட்டது...முள்ளி வாய்க்கால் ஞாபகார்த்தமாக எழுதியிருப்பார் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

Link to comment
Share on other sites

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

You are sadly mistaken! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

ட்ரிங்ஸ் எடுக்கிறதற்கு முத்தாய்ப்பு மாதிரி இருக்கு. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qLSICRYOJyo&feature=related

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் பழகி கிட்டால் அது காதலாகுமா?

அது ஆயுள் முழுக்க தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நட‌க்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண்,பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து பூமியைக் கட்டி நீ இருத்து

நட்பு நட்பு தான்,காதல் காதல் தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை

காதலின்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லியதில்லை

நீயும்,நானும் பழகுறமே காதலாகுமா?

இது ஆயுள் முழுக்க தொட‌ர்ந்தாலும் நட்பு மாறுமா?

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நீயும்,நானும் வெகு நேர‌ம் மனம் விட்டு பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுது சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?

புரிதலில் காதல் இல்லையடி,பிரிதலில் காதலை சொல்லி முடி

காதல் காதல் தான்...நட்பு நட்பு தான்

நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதையினை சொல்லும்

பிரியமான காதல் கூட‌ பிரிந்த பின் கணமாய் கொல்லும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவுத் தோழா

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

உண்மையிலேயே ஆணும்,பெண்ணும் வயசு வித்தியாச‌ம் இல்லாமல் ஆயுள் பூரா நட்பாக இருக்கலாமா?...அந்த நட்பு அவர்கள்,அவர்களது திருமணத்திற்கு முன் உருவானதாக இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் வெவ்வேறு இட‌த்தில் திருமணம் முடித்தாலும் அந்த நட்புத் தொட‌ர‌ வேண்டும் இது சாத்தியமா?

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்காக வாழப் பழகிவிட்டவர்கள் நாங்கள்.. :rolleyes: அதனால் நட்பைத் தொடர வேண்டுமானால் தூரத்தையும் தக்கவைக்க வேண்டும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

எங்களுடைய காதல் கதையே சுவாரசியமானது, பிரியா யாழில் அறிமுகமான போது பிரியா என்ற பேரில் எனக்கு யாரும் நண்பி இல்லை என்று சொல்லி அறிமுகமாகி பேசி நட்பாகி,காதலாகி,இப்போது என் மனைவி. :)

பழகுங்கள் நல்ல நட்புக்கள் கிடைக்கலாம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

எங்களுடைய காதல் கதையே சுவாரசியமானது, பிரியா யாழில் அறிமுகமான போது பிரியா என்ற பேரில் எனக்கு யாரும் நண்பி இல்லை என்று சொல்லி அறிமுகமாகி பேசி நட்பாகி,காதலாகி,இப்போது என் மனைவி. :)

பழகுங்கள் நல்ல நட்புக்கள் கிடைக்கலாம். :):icon_idea:

ரூட்டுப் போட்டுக் குடுக்கிரியல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரூட்டுப் போட்டுக் குடுக்கிரியல்

ஏதோ என்னாலை முடிஞ்சது நந்து அங்கிள்.. :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன செய்தாலும் இறுதியில் என்னை மட்டும் குற்றவாளி ஆக்கிப் போட்டு தாங்கள் தப்பித்து கொள்கிறார்கள்...இதற்கு என்ன கார‌ணம் நான் ஏமாளியா?...உலகம் என்னை புரிந்து கொள்ளவில்லை என்பதை விட‌ உலகத்தை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லையாக்கும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மூன்றெழுத்தில் வாழ்க்கை[/size]

உலகில் உள்ள உயிர் மூன்றெழுத்து

உயிரை இயக்கும் சக்தி மூன்றெழுத்து

சக்தியின் வடிவம் அன்னை மூன்றெழுத்து

அன்னை காட்டும் அன்பு மூன்றெழுத்து

அறிவை வளர்க்கும் பள்ளி மூன்றெழுத்து

பள்ளியிற் கற்கும் கல்வி மூன்றெழுத்து

கல்வியால் கிடைக்கும் பதவி மூன்றெழுத்து

பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்றெழுத்து

இளமை தரும் மணம் மூன்றெழுத்து

மணத்தால் இணையும் மனைவி மூன்றெழுத்து

மனைவியால் உறவாகும் மழலை மூன்றெழுத்து

மழலைக்கு செலவாகும் பணம் மூன்றெழுத்து

பணத்தினை தேடும் உட‌ல் மூன்றெழுத்து

உட‌ல் சோரும் முதுமை மூன்றெழுத்து

முதுமையின் பின் முடிவு மூன்றெழுத்து

முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்றெழுத்து

பெட்டியில் அட‌ங்கும் பிணம் மூன்றெழுத்து

பிணம் எடுத்துச் செல்லும் ஊர்தி மூன்றெழுத்து

ஊர்தி செல்லும் இட‌ம் சுட‌லை மூன்றெழுத்து

சுட‌லையில் வைக்கும் கொள்ளி மூன்றெழுத்து

கொள்ளியில் எரித்த அஸ்தி மூன்றெழுத்து

அஸ்தி கரையும் கட‌ல் மூன்றெழுத்து

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில் வாழ்க்கை

உலகில் உள்ள உயிர் மூன்றெழுத்து

உயிரை இயக்கும் சக்தி மூன்றெழுத்து

சக்தியின் வடிவம் அன்னை மூன்றெழுத்து

அன்னை காட்டும் அன்பு மூன்றெழுத்து

அறிவை வளர்க்கும் பள்ளி மூன்றெழுத்து

பள்ளியிற் கற்கும் கல்வி மூன்றெழுத்து

கல்வியால் கிடைக்கும் பதவி மூன்றெழுத்து

பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்றெழுத்து

இளமை தரும் மணம் மூன்றெழுத்து

மணத்தால் இணையும் மனைவி மூன்றெழுத்து

மனைவியால் உறவாகும் மழலை மூன்றெழுத்து

மழலைக்கு செலவாகும் பணம் மூன்றெழுத்து

பணத்தினை தேடும் உட‌ல் மூன்றெழுத்து

உட‌ல் சோரும் முதுமை மூன்றெழுத்து

முதுமையின் பின் முடிவு மூன்றெழுத்து

முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்றெழுத்து

பெட்டியில் அட‌ங்கும் பிணம் மூன்றெழுத்து

பிணம் எடுத்துச் செல்லும் ஊர்தி மூன்றெழுத்து

ஊர்தி செல்லும் இட‌ம் சுட‌லை மூன்றெழுத்து

சுட‌லையில் வைக்கும் கொள்ளி மூன்றெழுத்து

கொள்ளியில் எரித்த அஸ்தி மூன்றெழுத்து

அஸ்தி கரையும் கட‌ல் மூன்றெழுத்து

உடல்கள் கலக்கும் கலவி மூன்றெழுத்து

அதனை தூண்டும் காமம் மூன்றெழுத்து

இவற்றை உருவாக்கும் காதல் மூன்றெழுத்து

உயிரைக் காவும் விந்து மூன்றெழுத்து

அதை தாங்கும் பெண்மை மூன்றெழுத்து

இன்னும் எழுதலாம் ஆனால் ரதியிடம் அடிவாங்கத் தயார் இல்லை.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.