Jump to content

விடை கொடு விடை கொடு மண்ணே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடை கொடு விடை கொடு மண்ணே...

வாகனம் ஓடும் சத்தம், காற்று வீசும் ஓசை, வண்டிக்குள் எம் மூச்சுக்காற்று இவை தவிர அந்தச் சூனியப் பிரதேசத்தில் வேறு சத்தமில்லை. சாம்பல் பூத்த வானம் சலனம் தீர்ந்து சயனித்திருந்தது. வெந்து கிடந்தது மண்; வேகம் இழந்து வீசியது காற்று. கருகிக் கிடந்தன மரங்கள். குவிந்து கிடந்தன எரியூட்டப்பட்ட வாகனங்கள். மூச்சடங்கிக் கிடந்தது முல்லை நிலப்பரப்பு. மொட்டையாய் நின்றன கற்பகத்தருக்கள். கோலமிழந்து கிடந்தன வாழ்வின் எச்சங்கள். கூரை இழந்து நின்றன குடியிருந்த கோயில்கள். விதவைக் கோலம் பூண்டிருந்தன தெருக்கள். இறுதிக்கட்ட போரின் பின் தொலைக்காட்சிகளிலும் கணனிகளிலும் பார்த்து மனம் கனத்த கொடுமையான நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மனக்கண்ணில் ஒருகணம் நிழற்படமாய் விரிய மனதை சோகம் பிராண்டிக் கொண்டிருந்தது.

29612805.jpg

இது எம் மறவர் நடந்த மண் வீரம் விளைந்த நிலம் விழவிழ எழுந்து வீர வரலாறு படைத்த பூமி எம் தலைவன் தரிசித்த எல்லைகள் கொண்ட காடுகள். மகுடம் தொலைத்த மன்னன் போல் இன்று வெறுமையாய்.. தூரத்தில்..வெகு தூரத்தில் முகவரி இழந்த கிராமங்கள். எல்லைகளில்லாப் பெருவெளியாய் குருதியில் குளித்த நிலப்பரப்புகள். மரணித்த மாவீரரின் பூவுடல் சுமந்து மௌனித்துக் கிடக்கும் மணல் வெளிகள். வாகனம் ஓடிக்கொண்டிருந்த பொட்டல் வெளிக் காடுகளில் மனித நடமாட்டமற்று பாம்புகள் குடிகொண்ட பற்றை மூடிய குடிசைகள்.

இதுதானே அப்பாவி மக்களை அவலமாய் ஓலமிடவைத்த சூனியப் பிரதேசம். கண்முன்னே கதறக் கதற குண்டு வீச்சில் உடல் சிதறும் காட்சிகளைக் கண்டு வேதனை விளிம்பில் வேகவைத்த கந்தக பூமி. மனசுக்குள் சொல்ல முடியாத சோக ராகம். ஆற்றுவார் யாருமின்றி அத்தனை தெய்வங்களையும் கூவியழைத்தும் குரல் கேட்டு ஓடிவர முடியாமல் ஏமாந்து ஏதிலிகளாய் எம்மினம் அலைந்த அந்த இடர்மிகு நிலப்பரப்பு. கடலேரி எங்கும் காட்சிப் பொருளாய்க் கிடக்கும் எம் மக்களின் உடமைகள். வர்ணமிழந்து வடிவிழந்து 'நாங்கள் என்ன பாவம் செய்தோம்' என எம்மைப் பார்த்து குரலெழுப்பும் குழந்தைகளின் துவிச்சக்கர வண்டிகள்.

43912306.jpg

சமையல் பாத்திரங்கள் முதல் சாக்கு மூடைகளில் கட்டப்பட்டு கட்டவிழ்ந்து சிதறிக்கிடக்கும் தட்டுமுட்டுச் சாமான்கள் வரை ஆண்டுகள் பல கடந்தும் அடையாளம் காட்டும் அவலங்களாய் பார்க்குமிடம் எங்கும் பரந்து கிடந்தன. போராளிகள் தயாரித்த கவச வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டு எம் மறவர்களின் வீரத்திற்குச் சான்று பகர்ந்தது.

மனித அவலங்கள் அத்தனையும் தனிமையில் கண்ட ஆயாசத்துடன் அமைதியாய்க் கிடந்தன மண்அணைகள். வீதியின் இருமருங்கிலும் வெட்டப்பட்டு தூர்ந்து கிடந்த பதுங்கு குழிகள் எம்மிடம் பல துயரக் கதைகள் பேசின.

அத்தனை வீரமும் தியாகமும் துணிவும் அந்த மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மாபெரும் சோகம் மனதை பிராண்டிக் கொண்டிருக்க அடிக்கொரு இராணுவம் எம்மை அவதானித்துக் கொண்டிருக்க அந்த ஆளரவமற்று சிவந்து கிடந்த செம்மண் பாதையில் எம் வாகனம் மட்டும் ஒலிஎழுப்பியபடி ஓடிக்கொண்டிருந்தது. நாயாறு ஒதியமலை நந்திக்கடல் என்று ஒவ்வொரு இடங்களையும் வாகனம் தாண்டும்போது எம் ஒவ்வொரு அணுவும் வேதனையில் வெந்து தணிந்தது.

தலைவருடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட மூன்றடுக்கு கொண்ட (மூன்றடுக்கும் நிலக்கீழ் அறைகளாய்) வீடு. அதன் வாயிலில் காவல் காக்கும் இராணுவம்.

38284151.jpg

51639753.jpg

45681553p.jpg

39424692.jpg

55986837.jpg

89839102.jpg

கண்காட்சியாய் இவ் வீட்டைப் பார்ப்பதற்கும் படங்களாய் பதிவு செய்வதற்கும் கூட்டம் கூட்டமாய் வந்திறங்கும் தென் இலங்கை மக்கள் அவர்களுடன் எம்மைப்போல் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து ஆலய தரிசனம்போல் ஆன்மீக தரிசனம் பெறும் பக்தர்களாய் சிலர். இதில் அவலம் என்னவென்றால் எம் மண்ணில் வாழும் மக்களுக்கு இவ் இடங்களைப் பார்வையிட சந்தர்ப்பமுமில்லை இப்படியான இடங்களைப் பார்க்க வாய்ப்புமில்லை.

65541442.jpg

இவ் வீட்டின் முன் நிலக்கீழ் வாகனத்தரிப்பிடம் பக்கத்தில் மரணித்த மாவீரரை வைத்து இறுதி மரியாதை செலுத்தும் தமிழீழ வேலைப்பாடமைந்த கதவுடன் சிறிய மண்டபம்.

44308922.jpg

வீட்டிற்குள் காயம் பட்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறம் பிரத்தியேக அறை. திட்டமிடல் நடைபெறும் சிறப்பு மணடபம். பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான வலை அமைப்பு. இவ் வீட்டைச் சுற்றி நான்கு சுற்றுக்களாக முட்கம்பி வேலி அமைப்பு. இத்தனை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு எப்படி உடைக்கப்பட்டது என்ற ஏக்கம் உள்ளத்தில் உடைப்பெடுத்தது.

38403197.jpg

41671314.jpg

வரலாற்றின் பல பக்கங்களில் இரத்தக்கறை இருக்கிறது. துரோகம் அன்று தொட்டு இன்றுவரை மானிடத்தை மரணிக்க வைத்திருக்கின்றன. நேரமாகிவிட்டதால் கடற்புலிகள் பயிற்சிபெற அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நீச்சல் தடாகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. இருந்தும் அதன் அமைப்பு பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் எம்முடன் வந்திருந்த நண்பர்மூலம் கேட்டறிந்தோம்.

56524769.jpg

அந்திமாலைப்பொழுது அடிவானில் செம்மையைப் பூசிக்கொள்ள தொடுவானில் கதிரவன் தன் கடமையை முடித்து மறையத் தொடங்கியது. குண்டும் குழியுமான வீதிகளையும் மின் விளக்குகள் ஏதுமற்ற ஏகாந்கப் பெருவெளிகளையும் காட்டுப்பாதைகளையும் கடந்து வாகன ஓட்டுனர் லாவகமாக எமது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தார். மனதுக்குள் அழுத்திய பாரத்தால் வாகனத்துள் அமர்ந்திருந்த எமக்கு வார்த்தைகளுக்கு பஞ்சம். சில இடங்களில் இராணுவத்தினர் வாகனத்தை மறித்து விசாரித்து வழியனுப்பி வைத்தனர்.

வாகனம் வற்றாப்பளையை அண்மித்திருந்தது. வளமிழந்து வாய்மூடி மௌனமாய் தவமிருக்கும் வற்றாப்பளை அம்மன் கோவில் கோபுரம். இரவின் நிலவு வெளிச்சத்தில் பளபளப்பாய் விரிந்து கிடக்கும் வெண்மணல் பரப்பு. பக்கத்தே கண்ணாடியாய் மின்னும் கடலேரி. ஏப்பொழுதாவது வரும் பக்தர்களை எதிhகொள்ளும் கோயிற் குருக்கள். கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வாகனத்திலேறி முல்லைத்தீவை நோக்கி முன்னேறினோம்.

ஆழ்கடலின் அகலவிரித்த கொடும்கரங்களுக்குள் சிக்கி வாழ்விழந்த பல்லாயிரக்கணக்கானவாகளின் பெயர்களை தன் சுவரில் நிரந்தரமாக்கியபடி நிர்மலமாய் நிமிர்ந்து நிற்கும் அந்த சுனாமி நினைவாலயம்.

99231592.jpg

பெயர்களை வாசிக்கும்பொழுதே உள்ளுக்குள் உயிரெல்லாம் நசுங்குவதுபோல உணர்வு. பலர் குடுமபம் குடும்பமாக ஒரே இறுதிப் பெயருடன் அந்த அனர்த்தத்தில் முழுவதுமாகப் பலியாகி அங்கு பெயராகப் பொறிக்கப்பட்டிருந்தனர். பக்கத்தே முல்லைப் பெருங்கடல் மூச்சடங்கியபடி ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியான அலைவீச்சுடன் வெண்மணலை முத்தமிட்டுக்கொண்டிருந்தது. அலைகளில் கால் நனைத்தபடி கடலை நோட்டமிட்டோம். கடலினுள் விரைவுப் படகிலுருந்து கரையை நோட்டமிடும் கடற்படையினரைக் கண்டதும் எம்முடன் கூட வந்தவர்கள் அதற்கு மேல் எம்மை அங்கு நிற்க அனுமதிக்கவில்லை.

37261655.jpg

சுனாமி நினைவு மண்டபத்தினுள் பித்தளையால் செய்யப்பட்ட ஒரு செப்புச்சிலை வைக்கப்பட்டிருந்தது. ஒரு பெண் பேரலையை எதிர்கொள்வதுபோல வடிவமைக்கப்பட்ட அந்தச்சிலை அத்தனை பேரின் ஆத்மீக அஞ்சலிக்காக உருவாக்கப்பட்டிருந்தது. கனத்த மனத்துடன் கனவாகிப் போனவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் மாங்குளம் நோக்கி எம் பயணத்தை ஆரம்பித்தோம். கனத்த மனங்களும் கடிகார நேர மாற்றமும் எம்மை நிம்மதியாக நித்திரை கொள்ளவிடாது அலைக்கழித்தது.

பொழுது விடிந்ததும் அனைவரும் ஆயத்தமாகி நல்லாயன் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்படும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைச் சென்று சந்தித்தோம்.

86209088.jpg

அனைத்துக் குழந்தைகளும் போரினாலும் சுனாமியினாலும் பெற்றவர்களை இழந்து அநாதைகளாக்கப்பட்டவர்கள். அங்குள்ள சகோதரிகள் அக்குழந்தைகளைப் பராமரிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. காரணம் அக் குழந்தைகள் உடலால் மட்டுமல்ல மனதாலும் பாதிக்கப்பட்டவர்கள். நாம் சென்று அவர்களுடன் உரையாடியது அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதைத்தொடர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்து

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்விற்கென அமைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு நிலையத்திறப்புவிழாவில் கலந்து கொள்வதற்காக கணேசபுரம் சென்றோம்.திறப்பு விழாவிற்கு அநேக கன்னியர்களும் குருக்களும் பொதுநிலையினரும் வந்திருந்தனர். அவர்களில் பலர் பெற்றவர்களினாலும் குடும்ப உறுப்பினர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களின் புன்னகையின்பின் ஆழ்ந்த சோகம் இழையோடிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் அவர்களுக்கு தொழிற்கல்வி கற்கவும் அங்கு தங்கி இருக்கவும் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டிருந்தது.

83090214.jpg

தையல்; பின்னல் சுவர்ஓவியங்கள் சுவர் அலங்காரங்கள் தலையணைஉறை படுக்கைவிரிப்புகளில் அலங்கார வேலை சிறுவர்உடைகள் முதலிய பலவகையான கை வேலைகள் அங்கு பயிற்றுவிக்கப்படுவதற்காக தையல் இயந்திரங்களும் பலவித உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்தன. புலவித வேலைகளும் பயிற்றுவிக்கத்கூடிய ஆசிரியர்களும் நியமிக்கப்படடிருந்தனர். அங்குள்ள பெண்களால் உருவாக்கப்பட்ட பல பொருட்கள் அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அநேகமானோர் அப் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அக் கைப்பணிப் பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கினர்.

எமக்கு அங்கு ஆச்சரியம் தரும் விடயம் என்னவென்றால் பாக்கிஸ்தான் இந்தியா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் எம்இன மாணவிகள் சிலரும் தலைநகரில் வாழும் இளம் பெண்கள் சிலரும் விடுமுறை நாட்களில் அங்குவந்து அப் பெண்களை வழிநடத்துபவர்களாக செயற்பட்ட நிலையை அறிந்து எம் இனம் இன்னும் எம் வலிமையை இழந்து விடவில்லை என்று எண்ணத்தோன்றியது. அத்தனை இடர்களையும் தாண்டி வந்தபோதும் மனம் தளராது வாழ்க்கையை ஆரம்பித்த அந்த இளம் பெண்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய வாழ்த்தினோம்.

இவை தவிர இன்னும் இரண்டு மூன்று ஆதரவற்ற குழந்கைகளின் இல்லங்கள் இளம் தாய்மாரின் இருப்பிடங்கள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களையும் பார்வையிடவும் அவர்களுடன் உரையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

17878683.jpg

வலி சுமந்து நிற்கும் அந்த சிறுவர்களுடன் உரையாடி ஆறுதல் கூறி விடைபெற்றாலும் பல நாட்களாகியும் அவர்களது ஏக்கம் ததும்பும் விழிகள் எம் நினைவை விட்டு அகல மறுக்கின்றன.

காலமிட்ட தீர்ப்பினால் பெற்றவரை இழந்து பிரியமானவர்களைப் பிரிந்து பெண்மையைப் பறி கொடுத்து. மலர்ந்து சிலநாட்களிலேயே மடியில் மழலைகளைச் சுமந்து. மனநிலை பாதிக்கப்பட்டு. வெவ்வேறு கூட்டிலடைக்கப்பட்ட பறவைகளாய் சொந்த சோதரரைப் பிரிந்து. விதவைகளாய். உடல் ஊனமுற்றவர்களாய். உளநலம் குன்றியவர்களாய் ஓர் ஆறுதல் வார்த்தைக்காக ஏங்கும் எம் மண்ணின் மைந்தர்களைத் தேற்றுவது எப்படி என்று எமக்குப் புரியவில்லை.

அங்கிருந்து மன்னார் நோக்கி எம் பயணம் ஆரம்பமாகியது. எனது சகோதரியின் சிநேகிதி விடத்தல் தீவைச் சேர்ந்தவர். அவர்களும் அங்கிருந்து இடம்பெயர்ந்து அயற்கிராமம் ஒன்றில் புதிதாக வீடுகள் அமைத்து தங்கி இருந்தனர். அந்த இடங்களிலும் யாரும் கடற்தொழிலுக்குச் செல்ல முடியாமல் தடை விதிக்கப்பட்டிருந்ததால் பல குடும்பங்கள் பசி பட்டினியால் வாடுவதாகவும் பேசிக்கொண்டார்கள். வரலாற்றுப் புகழ்மிக்க கேதீஸ்வரம் மாந்தை மற்றும் புனித சவேரியார் கல்லூரி வேதசாட்சிகள் ஆலயம் முதலியவற்றை தரிசித்தபின் மடு நோக்கி எம் பயணம் தொடர்ந்தது.

80003179.jpg

மடு போகும் வழியில் கட்டுக்கரைக்குளம் பெரிய நீண்ட மண் அணைகளுடன் காணப்பட்டது. வழியெங்கும் தமிழ் பேசும் மக்களைவிட சிங்களம் பேசும் மக்களே பெருமளவில் காணப்பட்டனர். அடுத்து அருவியாறு அமைந்துள்ள இடத்திற்குச் சென்றோம். பேராதனை பூங்காவில் அமைந்திருப்பதுபோல் தொங்குபாலம் அமைக்கப்பட்டிருந்தது.

67249498.jpg

இத்தனை இயற்கை அழகுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள எம் மண் இன்று கோலமிழந்து கிடப்பதை எண்ணி மனம் ஏங்கியது.

மடு அன்னையின் திருவிழா அன்று மடு அன்னையின் ஆலயத்தைச் சென்றடைந்தோம். கானகக் கன்னியாம் மடு அன்னை ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளித்தது. நாடு முழுவதிலுமிருந்து அங்கு வந்திருந்த பக்தர்களினால் ஆலய வளவு நிறைந்து காணப்பட்டது. திருவிழாத் திருப்பலி முடிந்ததும் எமது பயணத்தை வவுனியா நோக்கி ஆரம்பித்தோம்.

வவுனியாவில் கொழும்பு செல்லும் சொகுசு பஸ் ஆயத்தமாக ஆரவாரமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு நின்றது. பஸ்சில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் எம் பிறந்த மண்ணைப் பிரியப்போகும் துயரம் மனதை அழுத்தியது. முதற்தடவையாக தொண்ணூறுகளில் தாண்டிக்குளம் தாண்டி நாம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக விரட்டப்பட்டது நினைவில் நிழலாடியது. இது இரண்டாவது தடைவையாக எம் புலப்பெயர்வு. மீண்டும் எம் தாயகத்தை தரிசிக்கும் நாளை எண்ணி ஏக்கமுடன் தலை நகரை நோக்கி பயணிக்கத் தொடங்கிய பஸ்சினுள் கண்முடி மௌனமாய் மனதுக்குள் எம் தாய் மண்ணிற்குத் தலை வணங்கி விடை கொடுத்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு......

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மிக நீண்ட நாட்களின் பின் தாயகம் நோக்கிய [/size][size=4]அருமையான [/size][size=4]பதிவுடன் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி ..........பகிர்வுக்கு நன்றி ..[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவை என்னால் யாழில் மறக்கமுடியாது..யாழுக்கு வந்த ஆரம்பகாலங்களில் கண்மணி அக்காவின் எழுத்துக்களையும் விரும்பிப் படிப்பேன்..அக்துடன் என்னை அப்பொழுது எழுத ஊக்கப்படுத்திய அக்கா...மீண்டும் ஒரு பதிவுடன் காண்பதில் மகிழ்ச்சியாக இருக்கிரது..அருமையான பதிவு..தொடருங்கள் அக்கா...

Link to comment
Share on other sites

[size=5]சொல்வாயா கிளியே ?? [/size]

பச்சை கிளியே பச்சை கிளியே!

சுதந்தரமாய் பறக்குங் கிளியே !!

சொல்வாயா எனக்கொரு சேதி

சொல்வாயா...........எனக்கொரு சேதி ??

ஏறுமுகம் கண்ட வேளை

ஏற்றத்துடன் இருந்த தலைவனுடன்

படம் எடுத்து மகிழ்ந்திருந்தார்

புலத்து மக்கள்

இறங்கு முகம் கண்டவேளையிலும்,

ஏற்றத்தலைவன் ஏறுமுகங் காட்டியதலைவன்

சீறித் திரிந்த இடங்களை

சிங்காரமாய்படம் எடுத்து மகிழுகின்றார்

புலத்து மக்கள் !!!!!!!!!!

இவர்கள் சொல்லவரும் செய்தியென்ன

சொல்வாயா பச்சைக்கிளியே ???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறங்கு முகம் கண்டவேளையிலும்,

ஏற்றத்தலைவன் ஏறுமுகங் காட்டியதலைவன்

சீறித் திரிந்த இடங்களை

சிங்காரமாய்படம் எடுத்து மகிழுகின்றார்

புலத்து மக்கள் !!!!!!!!!!

இவர்கள் சொல்லவரும் செய்தியென்ன

சொல்வாயா பச்சைக்கிளியே ???????????

படங்களை மட்டும்தான் பார்த்தீர்கள் போலுள்ளது.. எழுத்தில் பின்வருமாறு உள்ளது.

கண்காட்சியாய் இவ் வீட்டைப் பார்ப்பதற்கும் படங்களாய் பதிவு செய்வதற்கும் கூட்டம் கூட்டமாய் வந்திறங்கும் தென் இலங்கை மக்கள் அவர்களுடன் எம்மைப்போல் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து ஆலய தரிசனம்போல் ஆன்மீக தரிசனம் பெறும் பக்தர்களாய் சிலர். இதில் அவலம் என்னவென்றால் எம் மண்ணில் வாழும் மக்களுக்கு இவ் இடங்களைப் பார்வையிட சந்தர்ப்பமுமில்லை இப்படியான இடங்களைப் பார்க்க வாய்ப்புமில்லை.

Link to comment
Share on other sites

படங்களை மட்டும்தான் பார்த்தீர்கள் போலுள்ளது.. எழுத்தில் பின்வருமாறு உள்ளது.

Quote

கண்காட்சியாய் இவ் வீட்டைப் பார்ப்பதற்கும் படங்களாய் பதிவு செய்வதற்கும் கூட்டம் கூட்டமாய் வந்திறங்கும் தென் இலங்கை மக்கள் அவர்களுடன் எம்மைப்போல் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து ஆலய தரிசனம்போல் ஆன்மீக தரிசனம் பெறும் பக்தர்களாய் சிலர். இதில் அவலம் என்னவென்றால் எம் மண்ணில் வாழும் மக்களுக்கு இவ் இடங்களைப் பார்வையிட சந்தர்ப்பமுமில்லை இப்படியான இடங்களைப் பார்க்க வாய்ப்புமில்லை.

முக நூலில் யாழ் பரியோவான் கல்லூரி உயர்தர மணவர்கள் அடங்கிய மாணவர்கள் குழு பரியோவான் கல்லூரியால் புதுமாத்தளன் மற்றும் போரினால்பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற படங்கள் அண்மையில் வெளியாகி இருந்தன . என்னால் அவைகளை இங்கு ஆதாரமாக இணைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் . காரணம் எனது அண்ணையின் மகனும் அதில் பங்குபற்றியிருந்தான் . ஆக உள்நாட்டு மக்கள் இப்படியான இடங்களை பார்க்க சந்தர்ப்பமும் வாய்ப்பும் இல்லை என்கின்ற வாதம் அடிபட்டுப் போகின்றது கிருபன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு மக்கள் இப்படியான இடங்களை பார்க்க சந்தர்ப்பமும் வாய்ப்பும் இல்லை என்கின்ற வாதம் அடிபட்டுப் போகின்றது கிருபன் .

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி காவலூர் கண்மணி! இன்னும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

சாதாரணமாக தன்னிச்சையாக யாரும் இந்த பகுதிகளிற்கு சென்றால் இராணுவத்தின் பயங்கர கெடுபிடி சோதனைகள் உண்டு ஆனால் தெற்கு சிங்கள வர்களிற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் எவ்வித சோதனைகளோ கெடுபிடிகளோ இராணுவம் கொடுப்பதில்லையாம் இன்முகத்துடன் வரவேற்கிறார்களாம். சுற்றுலா பயணிகள் இளைப்பாறி உணவருந்தி செல்வதற்கு வசதியாக அங்கேயெ இராணுவத்தினரின் சிற்றுண்டு சாலையும் உண்டு . அதே நேரம் வட கிழக்கு பாடசாலை மாணவர்களை தங்கள் வெற்றி சின்னங்களை பார்வையிட இலங்கை கல்வி அமைச்சே வழிவகைகள் செய்து ஆலோசனைகளும் வழங்குகிறது. அடுத்ததாக புதிய நிலக்கீழ் வீடுகளும் கண்டு பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவையும் சுற்றுலா தலங்களாக மாறும். போய் படமெடுக்கலாம். அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து முல்லைத்தீவு பகுதிகளிற்கு பயணிப்பவர்களது எண்ணிக்கை பதியப்படுகின்து காரணம் தங்காளால் வெற்றி கொள்ளப்பட்ட பயங்கர வாதத்தின் சுவடுகள் தங்கள் வெற்றி சின்னமாக்கப்பட்டுள்ளது அதனை மகிழ்ச்சியோடு புலம் பெயர் தமிழர்கள் வந்து பார்வையிட்டு படமெடுத்து செல்கின்றனர் என்கிற கணக்கு உலகத்திற்கு இலங்கையரசு காட்டி தனது படுகொலைகளை நியாயப்படுத்தும். நாங்கள் யாராவது தென்னிந்திய பாடகர் விசயம் தெரியாமல் போய் பாட்டு படிச்சால் அவனை திட்டி தீர்க்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் பல பக்கங்களில் இரத்தக்கறை இருக்கிறது. துரோகம் அன்று தொட்டு இன்றுவரை மானிடத்தை மரணிக்க வைத்திருக்கின்றன. நேரமாகிவிட்டதால் கடற்புலிகள் பயிற்சிபெற அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நீச்சல் தடாகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. இருந்தும் அதன் அமைப்பு பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் எம்முடன் வந்திருந்த நண்பர்மூலம் கேட்டறிந்தோம்.

உங்களுக்கே தனித்துவமான, கவிதை மொழியில், உண்மைகள் அப்படியே, புட்டுப் புட்டு, வைக்கப் பட்டிருக்கின்றன!

இழப்பின் ஏக்கங்களே, வருங்காலத்தைக் கட்டியமைக்க வேண்டிய தேவையையும், வைராக்கியத்தையும் உருவாகின்றன, என்பது வரலாறு கூறும் உண்மை!

தொடர்ந்து இவை போன்ற ஆக்கங்களைத் தாருங்கள்!!!.

Link to comment
Share on other sites

இங்கிருந்து செல்வபவர்ள் திரும்பி வரும்போது அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் வழங்குபவர்களாகவே திரும்பி வருகிறர்கள். இப்ப அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... றோட்டுக்களெல்லாம் அந்தமாதிரிப் போட்டிருக்குது. எங்களுக்கு அவங்கள் எந்தக் கஸ்டமும் கொடுக்கவில்லை. பாக்குகள்கூடத் திற்கவில்லை... என்று கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? இவர்களின் கூற்றுடன் அங்குள்ள மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திம் அவர்களுக்கு வழங்கப்படுகிறதா,? சண்டை நடைபெற்ற காலத்தின் பின் என் நண்பர் ஒருவர் இலங்கை சென்றுவந்தார். அவர் பட்ட அவமானம் சொல்லும் தரமில்லை. அப்படி இராணுவம் செய்தது. இப்போது... தாங்கள் செய்த தமிழினப் படுகொலைகளை மறைப்பதற்கும் மறக்கச் செய்வதற்கும் பாடுபடுகிறார்கள். அதுமட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் ; தமிழ்மக்களை அங்கு வரவழைத்து தங்களின்; வெற்றியை பறைசாற்றி . அதனால் வருமானம் தேடப்பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவின் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டைமைக்கு மிக்க நன்றி...

சொந்த நாட்டில் உள்ளவர்களையே அடிச்சு துரத்தி முகாம்,முகாமாக இருக்க வைச்சு சித்திரவதைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள்..எதற்காக வெளி நாடுகளில் இருந்து போறவர்களை செங்கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்கிறது..அவர்கள் திரும்பி வந்து தங்களைப் பற்றி நல்ல விதமாக சொல்லட்டும் என்பதற்காக தானே...நாடு நல்லா இருக்கு,நல்லா வந்துட்டு என்று சொல்பவர்களாலும் தான் அனேகமானவர்களுடைய நிரந்தரவதிவிட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது..இப்படி நிறைய விடையங்களை சொல்லலாம்...கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்பமாக ஊர் போய் வந்த ஒரு பெண் வேலைக்கு போகிறா...காரணம் அடுத்த வருடமும் டூர் அடிக்கத் தான்..இப்படியான அறிவு ஜீவிகள் இருக்கும் மட்டும் யாரும் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

இன்னும் சில காலத்தில்

புலிகள் என்று சொன்னால்

போராளிகள் அல்லது மாவீரர்கள் என்று சொன்னால்

தலைவர் என்று சொன்னால்

தமிழருக்கு உதவி செய்கின்றேன் என்று சொன்னால்

தேசியம் தாயகம் என்று சொன்னால்

கலைத்துக்கலைத்து அடிப்பது நடக்கும்.

இது யாழிலும் வரும்.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயிற்றைப்பற்றி எரியுது ....... தாங்க முடியாமல் இருக்கு

ஒரு நல்ல செய்திக்காக காத்து கிடக்கிறான் அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டால் நான் உயிர்வாளுவேனா என்று தெரியவில்லை

Link to comment
Share on other sites

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

ஆம்.............. மகிழ்கின்றார்கள் தான் . எப்படியென்றால் , வெளிநாட்டுக்காசில் வாழும் யாழ்ப்பாணத்தவர்களும், கொழும்பில் சொகுசுவீடு வாங்கி சிங்களவனுடன் அப்பவும் சரி இப்பவும் சரி எப்பவும் ஒட்டி இருக்கும் தமிழர்களும், இப்பிடி போராடாமல் ஒளித்து களவாய் ஓடிவந்து இங்கிருந்து கள்ளவீரம் பேசும் இவர்களைப்போல இலங்கை போய்வந்து படம்போடும் தமிழர்களும் மகிழ்கிறார்கள்................ அதேவேளையில் , சிங்களத்தின் சர்வதேச பரப்புரைகளுக்கு இவர்களைப் போன்றவர்களது செயற்பாடுகள் வரலாற்று சாட்சிகளாக அமைகின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன் மைலார்ட் :D :D :D.

Link to comment
Share on other sites

//அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து முல்லைத்தீவு பகுதிகளிற்கு பயணிப்பவர்களது எண்ணிக்கை பதியப்படுகின்து காரணம் தங்காளால் வெற்றி கொள்ளப்பட்ட பயங்கர வாதத்தின் சுவடுகள் தங்கள் வெற்றி சின்னமாக்கப்பட்டுள்ளது அதனை மகிழ்ச்சியோடு புலம் பெயர் தமிழர்கள் வந்து பார்வையிட்டு படமெடுத்து செல்கின்றனர் என்கிற கணக்கு உலகத்திற்கு இலங்கையரசு காட்டி தனது படுகொலைகளை நியாயப்படுத்தும். நாங்கள் யாராவது தென்னிந்திய பாடகர் விசயம் தெரியாமல் போய் பாட்டு படிச்சால் அவனை திட்டி தீர்க்கலாம் :)//

சர்வதேசமே ஏகோபித்து கண்டித்த தமிழினப் படுகொலைகளை ..ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் போய்ப்பார்ப்பதால் ..சிரிப்பதால்..இல்லையென்று ஆக்கிவிட முடியாது..

தமிழர்கள் யாராயிருந்தாலும் அங்கே போய்ப்பார்க்கவே விரும்புவார்கள்.அது ஒரு சரித்திர நினைவுச் சின்னமாக இருப்பதால்....

அதே போல சிங்களவர்களும் விரும்புவார்கள். அது ஒரு -நடக்காது என்பது நடந்து விட்ட-மலைப்புக்குரிய ஞாபகச் சின்னமாக இருப்பதால்...

அதே போல உலகத்தவரும் போய்ப்பார்க்க விரும்புவார்கள் ஏனெனில் குறைந்த வலுவோடு பெறுதற்கரிய இராணுவ வெற்றிகளைக் குவித்த வியப்புச்சின்னமாக இருப்பதால்...

இனி வரும் காலங்களில் அது உண்மையிலேயே ஒரு சுற்றுலாத் தலமாக மாறி விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

நன்றி அக்கா பதிவிற்கு. நீண்ட காலத்தின் பின் களத்தில் காண்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

இனி வரும் காலங்களில் அது உண்மையிலேயே ஒரு சுற்றுலாத் தலமாக மாறி விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

இவர்கள்தான் தமிழர்கள் முன்பொருகாலம் இவர்களைத்தான் ஆதிக்குடிகள் என்றார்கள் என்று ஒரு பெர்பலகையும் இருக்கும்.

Link to comment
Share on other sites

//அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து முல்லைத்தீவு பகுதிகளிற்கு பயணிப்பவர்களது எண்ணிக்கை பதியப்படுகின்து காரணம் தங்காளால் வெற்றி கொள்ளப்பட்ட பயங்கர வாதத்தின் சுவடுகள் தங்கள் வெற்றி சின்னமாக்கப்பட்டுள்ளது அதனை மகிழ்ச்சியோடு புலம் பெயர் தமிழர்கள் வந்து பார்வையிட்டு படமெடுத்து செல்கின்றனர் என்கிற கணக்கு உலகத்திற்கு இலங்கையரசு காட்டி தனது படுகொலைகளை நியாயப்படுத்தும். நாங்கள் யாராவது தென்னிந்திய பாடகர் விசயம் தெரியாமல் போய் பாட்டு படிச்சால் அவனை திட்டி தீர்க்கலாம் :)//

சர்வதேசமே ஏகோபித்து கண்டித்த தமிழினப் படுகொலைகளை ..ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் போய்ப்பார்ப்பதால் ..சிரிப்பதால்..இல்லையென்று ஆக்கிவிட முடியாது..

தமிழர்கள் யாராயிருந்தாலும் அங்கே போய்ப்பார்க்கவே விரும்புவார்கள்.அது ஒரு சரித்திர நினைவுச் சின்னமாக இருப்பதால்....

அதே போல சிங்களவர்களும் விரும்புவார்கள். அது ஒரு -நடக்காது என்பது நடந்து விட்ட-மலைப்புக்குரிய ஞாபகச் சின்னமாக இருப்பதால்...

அதே போல உலகத்தவரும் போய்ப்பார்க்க விரும்புவார்கள் ஏனெனில் குறைந்த வலுவோடு பெறுதற்கரிய இராணுவ வெற்றிகளைக் குவித்த வியப்புச்சின்னமாக இருப்பதால்...

இனி வரும் காலங்களில் அது உண்மையிலேயே ஒரு சுற்றுலாத் தலமாக மாறி விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

மகாராசா கேக்கிறன் எண்டு கோப்பட்டு உறையில கிடக்கிற வாளைத் தூக்கப்படாது :unsure: . அதுசரி உலகமே ஏகோபிச்சு கண்டித்த தமிழின படுகொலையள் எண்டு சொல்லுறியள் . அப்ப இந்த மூண்டு வரியத்தில ஏதாவது தீர்வு அங்கை வந்திருக்கவேணுமே :lol: ?? அதோடை காதை குடுங்கோ சொல்லிறன் இந்த தமிழின படுகொலையளை செய்ததே இதே உலகம்தான் :lol::icon_idea: . எப்பிடி கூட்டி கழிச்சு பாத்தாலும் கணக்கு பிழைக்குதே மகாராசா :D :D ??

அதோடை கதையோடை கதையா , இங்கை றோட்டு முழுக்க வெட்டிறான் கொத்துறான் எண்டு சன்னதமாடிப் போட்டு , தோத்த போர்களத்தில போய்நிண்டு படங்களை எடுத்து தூக்கி கொண்டுவந்து போடிறது சிங்களத்துக்கு ஐஞ்சு சதம் சிலவில்லாத பிரச்சார உத்தி கண்டியளோ :icon_idea: கிட்டமுட்ட அறப்படிச்ச பல்லி களுநீர்பானைக்குள்ளை விழுந்த கதைதான் :( .

Link to comment
Share on other sites

:unsure: . அதுசரி உலகமே ஏகோபிச்சு கண்டித்த தமிழின படுகொலையள் எண்டு சொல்லுறியள் . அப்ப இந்த மூண்டு வரியத்தில ஏதாவது தீர்வு அங்கை வந்திருக்கவேணுமே :lol: ??

இது தான் உலகம்... மொள்ள மொள்ளமாய்த் தான் செய்வினம்... எங்கட அவசரத்திற்கு கவனமெடுக்க எங்களிட்ட என்ன பெற்றோல் கிணறா கிடக்கு..

இதுக்கு மேல சிங்களவன் அடக்கி வாசிக்கிறான் எண்டா ..அதுக்குக் காரணமும் அவை தான் ..அவையும் அக்கறைப் பட இல்லையெண்டால் எப்பவோ பிரிச்சு மேய்ஞ்சு போட்டுப் போயிருப்பான்..

அதோடை காதை குடுங்கோ சொல்லிறன் இந்த தமிழின படுகொலையளை செய்ததே இதே உலகம்தான் :lol::icon_idea: .

இதுவும் வாஸ்தவம் தான்.. அவை தான் செய்தவை இதில சில கூட்டல் கழித்தல்கள் கிடந்தது... {அவர்கள் கணக்குப்படி} அதைச் செய்து விட்டினம் ..தட்டிக்கேட்கத்தான் ஆசை ..என்ன செய்யிறது?

எப்பிடி கூட்டி கழிச்சு பாத்தாலும் கணக்கு பிழைக்குதே மகாராசா :D :D ??

இது தான் ஒரு கயிறு தொங்குது... உதையும் விட்டா தண்ணியிக்க கிடந்து சாகத்தான் வேணும்.. எப்படி வசதி? அப்ப தப்பிவர ஏதாவது மார்க்கம் வைச்சிருக்கிறியளோ?

தோத்த போர்களத்தில போய்நிண்டு படங்களை எடுத்து தூக்கி கொண்டுவந்து போடிறது சிங்களத்துக்கு ஐஞ்சு சதம் சிலவில்லாத பிரச்சார உத்தி கண்டியளோ :icon_idea:

நான் அப்படியெண்டு நினைக்கயில்ல ..உலக மகாயுத்தங்களில தோத்த வெண்ட இடங்களை அங்க செத்தவையின்ர நினைவுச் சின்னமாக வைச்சிருக்கினமே தவிர வெற்றி தோல்வியின் நினைவுச் சின்னமாயில்லை

எப்படியிருந்தாலும் தாய் பிள்ளையளா இருந்தவையின்ர ஆத்மாக்களோடு பேச அங்கை போகத்தானே வேண்டியிருக்கு..

ஏன் அதை நெக்கடிவ் கோணத்தில பாக்க வேணும்?

கிட்டமுட்ட அறப்படிச்ச பல்லி களுநீர்பானைக்குள்ளை விழுந்த கதைதான் :( .

களுநீர்ப்பானைக்கை காரியமாய் விழுகிற பல்லியள் தான் இப்ப கூட சம்பந்தர் மகிந்த வோட கதைச்சால் சம்பந்தம் பேசுறார் எண்டு நினைக்கிறது சரியில்ல தான.. சுண்டலும் சொல்லிக் கொண்டிருக்கு மகிந்தவோட கதைக்கவேணுமெண்டு.. எனக்குப் பாத்தால் சுண்டலும் மகிந்தாவோட ஏஜண்டு மாதிரித்தான் படுகுது.. ஆனாலும் நீங்கள் சொல்ல மாட்டியளோ அது வீண் சந்தேகம் எண்டு

Link to comment
Share on other sites

இது தான் ஒரு கயிறு தொங்குது... உதையும் விட்டா தண்ணியிக்க கிடந்து சாகத்தான் வேணும்.. எப்படி வசதி? அப்ப தப்பிவர ஏதாவது மார்க்கம் வைச்சிருக்கிறியளோ?

மார்க்கங்கள் இருக்குத்தான் சொன்னால் துரோகியெண்டு சொல்லப்படாது :lol: . இப்பவே சொல்லிப்போட்டன் :) . றோட்டலை போறவன் வந்து வடக்கையும் கிழக்கையும் இணைச்சு மாநிலசுயாட்சியோடை ஒரு இணக்க அரசியலை செய்யுங்கோடாப்பா எண்டு ஒரு மார்க்கத்தையெல்லாம் சொல்லேக்கை எங்கடை கெப்பர் தனங்கள் விடேல :( . இப்ப வடக்கும் இல்லை கிழக்கும் இல்லை ,ஒரு சென்ரிமீற்றர் நிலமும் இலை . இதைதான் மகாராசா நான் சொன்ன சொலவடையுஞ் சொல்லுது :( :( .

Link to comment
Share on other sites

இது தான் ஒரு கயிறு தொங்குது... உதையும் விட்டா தண்ணியிக்க கிடந்து சாகத்தான் வேணும்.. எப்படி வசதி? அப்ப தப்பிவர ஏதாவது மார்க்கம் வைச்சிருக்கிறியளோ?

மார்க்கங்கள் இருக்குத்தான் சொன்னால் துரோகியெண்டு சொல்லப்படாது :lol: . இப்பவே சொல்லிப்போட்டன் :) . றோட்டலை போறவன் வந்து வடக்கையும் கிழக்கையும் இணைச்சு மாநிலசுயாட்சியோடை ஒரு இணக்க அரசியலை செய்யுங்கோடாப்பா எண்டு ஒரு மார்க்கத்தையெல்லாம் சொல்லேக்கை எங்கடை கெப்பர் தனங்கள் விடேல :( . இப்ப வடக்கும் இல்லை கிழக்கும் இல்லை ,ஒரு சென்ரிமீற்றர் நிலமும் இலை . இதைதான் மகாராசா நான் சொன்ன சொலவடையுஞ் சொல்லுது :( :( .

எல்லாருக்குந்தான் விளங்கின விஷயம். முன்னால துவக்கோட நிக்கயிக்க மூச்சும் விடேலாமல் முழுசிக் கொண்டு நிண்டம்..

அதைக் கதைச்சு என்ன? நடந்து முடிஞ்ச கதை. அவையும் போய்ச் சேந்திட்டினம்..

இப்ப என்ன செய்யிறது?அதுதான் கேட்கிறன்... சர்வதேசம் எண்ட துரும்புக்கயிறும் இல்லையெண்டால் நாங்கள் வாழ்ந்ததுக்கே சாட்சியம் அழிஞ்சு போடும்... இது நான் நினைப்பது..குந்து மணியளவு எண்டாலும் நம்புவது.. வேறு ஏதாவது மார்க்கம்?

Link to comment
Share on other sites

புலி, புலி,புலி என்று தானே

* அகதியடிச்சது

* காசு சேர்த்தது

அங்கை போய் புலம் பெயர் மக்கள் பார்த்தால் என்ன??????

நன்றி சொல்லத் தானே வேணும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.