Jump to content

"மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”


Recommended Posts

[size=4]"மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” [/size]

[size=4]

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கொடை பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்கள்.[/size]

[size=4]சொந்த வீடுகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களும், தங்களுக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

ஐ.டி.எச் பகுதிக்கு அண்மித்ததாக அங்கொடையில் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது அந்த வீடு.

பெண்கள் சிலரும் ஆணொருவரும் அலி ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் சுமார் 25 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

ஆரம்பத்தில் எம்மோடு பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. எதற்காக வந்திருக்கிறோம் என்றும் கேட்கவில்லை.

சற்றுநேர அமைதிக்குப் பின்னர்தான் பேசினார்கள்.

எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

ஊடகங்களில் பெயரோ, படமோ வெளியிடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆதலால் எம்மோடு அவர்கள் பற்றிய விபரங்களைக் கூறுவதற்கும் தயங்கினார்கள்.

நீண்டநேர முயற்சிக்குப் பின்னர் இனோகா தன்னைப்பற்றிக் கூறுவதற்கு முன்வந்தார்.

hiv-600.jpg

“சொந்த இடம் பற்றிக் கேட்காதீர்கள். சொன்னால் அங்குள்ள எல்லாருக்கும் எயிட்ஸ் இருக்கிறது என்று எங்களுடைய மக்கள் நினைப்பார்கள்” - இது அவர் பேச ஆரம்பித்த முதல் வசனம்.

“எனக்கு மூன்று பிள்ளைகள். இருவர் பெண்கள். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

மகனுக்குத் திருமணமாகவில்லை.

“நான் செய்த தவறுக்காக காலம் முழுவதும் வேதனைப்பட வேண்டியதாயிற்று. அதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.

எனக்கு இப்போது வயது 41 ஆகிறது. முப்பது வயதாக இருக்கும்போது குடும்ப வறுமையில் நாம் தவித்தோம். மூன்று பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டிய தேவை. நாளாந்த செலவுகள் என செலவுகள் மாதாந்தம் அதிகரிக்கத் தொடங்கின.

அப்போது, சிங்கப்பூரில் துணிக் கடையொன்றில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் நல்ல சம்பளம் தருவதாகவும் தோழி ஒருத்தி எனக்குக் கூறினாள்.

குடும்பச் சுமையிலிருந்து மீள்வதற்கு நான் அங்கு செல்வதென தீர்மானித்தேன்.

சிங்கப்பூர் அழகிய நகரம். அதேபோல் என்னுடைய வாழ்க்கையும் அருமையாக அமையப்போகிறது என்ற நம்பிக்கை என்னுள் துளிர்த்தது.

ஆயினும் அன்று மாலையானதும் எதிர்பார்ப்புகள் அனைத்துமே சிதைந்துபோயின.

துணிக்கடையில் வேலை என்று சொல்லித்தான் இங்கிருந்து அனுப்பினார்கள். அங்கு விமான நிலையத்திலிருந்த குழுவினர் வேறு இடமொன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த இடம்பற்றி விரிவாகச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை.

அது பாலியல் தொழில் நடக்கும் இடம்.

ஒருகணம் எனக்கு வந்த அழுகையை அடக்க முடியாமல் போனது. என்னை இந்த இடத்துக்கு விற்றுவிட்டார்கள் பாவிகள்.

குடும்பச் சுமையை தீர்க்க இந்த வழியைப் பயன்படுத்தினால் தவறில்லை என அங்குள்ள பெண்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் படித்தவள் அல்ல. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

கடவுளை நினைத்துக்கொண்டு என் உடலை விற்கத் தீமானித்தேன்.

கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் வறுமை என் அறிவுக் கண்களை மறைத்தது.

மனம் இடம்கொடாமல் தொழில் செய்தேன். ஆயினும் ஒரு வருடத்துக்கு மேல் அதனைத் தொடர விரும்பவில்லை.

மீண்டும் சொந்த நாட்டுக்கே வந்துவிட்டேன். எனது கணவரை, பிள்ளைகளை மீண்டும் பார்த்தபோது கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன். அவர்களை நீண்டநாட்கள் பிரிந்திருந்ததால் அழுகிறேன் என நினைத்துக்கொண்டார்கள்.

மாதங்கள் சில கழிந்தன. அப்போதும் வறுமை ஒரு நோயாய் எம்மைப் பீடித்திருந்தது.

நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் அதே இடத்திலிருந்து (சிங்கப்பூர்) எனக்கு அழைப்பு. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தூக்கம் விழித்துச் சிந்தித்து நான் மீண்டும் செல்வதற்குத் தீர்மானித்தேன்.

இருவாரங்களுக்குப் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சென்றேன். அங்கே காத்திருந்தது அதிர்ச்சி.[/size]

[size=4]ஆம்..! நான் எச்.ஐ.வி. க்கு ஆளாகியிருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இடிவிழுந்ததாய் அதிர்ந்துபோனேன். தலைகால் புரியவில்லை. என்ன செய்வது? கணவனுக்கு, பிள்ளைகளுக்கு, சமூகத்துக்கு எப்படி முகம்கொடுப்பது?

அந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியாது (கதறி அழுதார்). ஏன் நான் சிங்கப்பூருக்குப் போனேன்? ஏன் பாலியல் தொழில் செய்தேன்? ஐயோ கடவுளே…

அறிக்கையை வாசித்துக்காட்டிய வைத்தியர் எனது கணவரையும் அழைத்து வருமாறு கூறினார்.

கணவரை அழைத்துவந்தபோது அவருக்கும் தொற்றியிருந்தது இந்தக் கொடிய நோய்.

ஆனால் இந்த விடயம் பிள்ளைகளுக்குத் தெரியாது. மன வேதனையால் துடித்துப்போனார் அவர். நான் செய்த தவறு அவரை நீண்ட நாட்கள் வாழ விடவில்லை. குறுகிய காலத்தில் அவருடைய உயிர் பிரிந்தது.

நான் தனிமைபடுத்தப்பட்டேன்.

அதன்பிறகு வைத்தியர்களின் ஆலோசனையின்பேரில் இங்கு வந்து அதிக காலத்தைத் தனிமையில் கழிக்கிறேன். இது வீடு மட்டுமல்ல. எயிட்ஸ் நோயாளிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனமும் கூட.

இங்கு என்னைப்போன்ற சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதைகளும் வித்தியாசமானவை.

மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”.

-இராமானுஜம் நிர்ஷன்[/size]

[size=4]http://www.virakesari.lk/article/feature.php?vid=35[/size]

Link to comment
Share on other sites

:( :( :(

வெளிநாட்டு வேலையை நம்பி தனியே செல்லும் பெண்கள் பலருக்கு இவ்வாறான பிரச்சினை நடப்பதை அறிந்துள்ளேன். கூடுதலாக அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு அல்லது வேறு வேலைக்கென செல்லும் பெண்கள் பலரை இப்படி தான் இடையில் விற்று விடுவோர் உள்ளனர். அல்லது வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலருக்கு வீட்டு உரிமையாளர்களால் இப்படியான தொல்லைகள் வருவதுண்டு.

எந்த நாட்டுக்கு சென்றாலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு பிரச்சினை இல்லை என்பதற்காக இன்னொருவருக்கும் பிரச்சினை வராது என்று கூற முடியாது. எனவே பெண்கள் வெளிநாட்டுக்கு வருவதென்றால் குடும்ப உறுப்பினர்கள் யாருடனும் வர வேண்டும். அலது tourist விசா எடுத்து வருவது பாதுகாப்பு.

அல்ஜீரியா மக்களுடன் பழகுவதும் ஆபத்தானது. அவர்கள் பெண்களை நாடு விட்டு நாடு கடத்தி சென்று விற்று விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் எம்மக்களிடையே இல்லை. பாடசாலைகளில் அல்லது பொதுக்கூட்டங்கள் கூட்டி மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

[size=4]எனக்கு தெரிந்தவர் ஒருவர் டொராண்டோ நகரின் மத்தியில் எயிட்ஸ் விழிப்புணர்வு / சிகிச்சை நிலையத்தில் சிறிது காலம் வேலை செய்தார்.[/size]

[size=4]காலையில் எட்டு மணிக்கு இந்த நிலையம் திறக்கப்படும் என்றார்.[/size]

[size=4]முதலில் வருபவர்கள், உயர் பதவியில் உள்ளோர்கள். நிறுவனங்களில் மிக உயர் பதவிகளில் உள்ளோர்.[/size]

[size=4]பதினோரு மணியளவில் வருபவர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் அதிகம்.[/size]

[size=4]ஒரு மணிக்கு பிறகு வருபவர்கள் வீடுகள் இல்லாதோர், சிறப்பு வீடுகளில் வசிப்போர்.[/size]

[size=4]ஆக, சமுதாயத்தில் எல்லாவித மக்கள் மத்தியிலும் உள்ளது இந்த நோய்.[/size]

Link to comment
Share on other sites

ஆம்.

ஆனால் எயிட்ஸ் நோய் பரவுவது,

  • பாதுகாப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படும் உடலுறவு மூலம்...
  • காயங்களின் ஊடாக....
  • ஒருவருக்கு செலுத்தப்பட்ட ஊசி மூலம் இன்னொருவருக்கு மருந்து செலுத்துதல்...

போன்றவற்றால் ஆகும்.

இதில் முதலாவதே அதிகளவு மக்களிடம் எயிட்ஸ் நோய் பரவ காரணமாகிறது. (ஆண், பெண்ணாக இருக்கலாம், எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்)

வெளிநாட்டிலுள்ள பலர் விழிப்புணர்வு இருந்தும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தவறு விடுகிறார்கள். பின் யோசிக்கிறார்கள்.

எம் நாட்டில் விழிப்புணர்வு இல்லாததால் பெருமளவில் தவறு விடுகிறார்கள்.

சிலவேளை அந்த பெண்ணுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் தனக்கு பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இந்த தொழில் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பார்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டிலுள்ள பலர் விழிப்புணர்வு இருந்தும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தவறு விடுகிறார்கள். பின் யோசிக்கிறார்கள்.

ரென்சனில் எச்சரிக்கை உணர்வை கைவிட்டிடுவார்களோ??!! :icon_idea:

Link to comment
Share on other sites

ரென்சனில் எச்சரிக்கை உணர்வை கைவிட்டிடுவார்களோ??!! :icon_idea:

அதை அவர்களிடம் கேட்டா நான் சொல்ல முடியும்... :lol: (வர வர நீங்கள் ஓவரா எழுதிறீங்கள். :icon_idea:)

நான் அப்படி அர்த்தத்தில் சொல்லவில்லை.

மற்றவர்களுக்கு எயிட்ஸ் வந்தாலும் தனக்கு வராது என்று நினைப்பார்கள், அல்லது சம்பந்தப்படும் பெண் அல்லது ஆணுக்கு எயிட்ஸ் இருக்காது என்று உதாசீனமாக இருப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன். :)

ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையில் வாழ்ந்தால் இந்த நோய் லேசில் அணுகாது...

Link to comment
Share on other sites

இல்லை.. வருங்கால யாழ்கள தொழிலதிபர்களுக்கு உதவுமே என்று கேட்டன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் கூட அறிந்திருப்பீர்கள் வேறை நாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடி வீட்டுப் பணிப் பெண்ணாக சென்றவர்கள் உடலில் ஆணி ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஊர் திரும்பி சம்பவங்களும் நடந்து இருக்கின்றன......இது மிகவும் கவலையான செய்தி..தனிமை என்றாலே மிகவும் கொடுமை அதிலும் உடல் நலக் குறைவோடு தனிமையில் வாடுவது அதை விடக் கொடுமை...ஆனால் இந்தப் பெண் ஒரு முறை பிழை விட்டதும் அல்லாமல் மறு முறையும் அந்த தொழிலுக்கு போக வெளிக்கிட்டதை நினைக்கும் போது அருவருக்கிறது...அதை விட ஊரிலயே கூலி வேலைக்கு போயாவது குடும்பத்தை காப்பாற்றி இருக்கலாம்..அப்படி வாழ்ந்திருந்தால் இப்போ இந்த நிலை வந்திருக்காது..ஆரம்பத்திலயே தங்களுக்கு வளங்கப்பட இருக்கும் வேலை விடையங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அந்த முயற்சியில் இருந்து விடு பட்டுக் கொள்வதே சிறந்தது...அதை விடுத்து தங்கள் வாழ்வை பாளாக்குவதோடு மற்றவர்களையும் அதற்கு பலியாக்கக் கூடாது....

இப்படியான விடையங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு எல்லாராலும் முடியாது...நிறையவே பொறுமை வேணும்.....எங்களுக்கு தெரிந்த பிள்ளை ஒருவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பு டவுண்ரவுண் பகுதியில் யுத் கவுன்சிலராக இருந்த அனுபவத்தை சொல்லும் போது இப்படி நிறைய விடையங்கள் பற்றி அறிந்து இருக்கிறன்...எல்லாம் எழுதவும் முடியாது தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நோயை பற்றி

நிறைய படிச்சு இருக்கிறேன்....

உலகத்தில் முதலாவது கொடிய நோய் எயிட்ச் மற்றது புற்றுநோய்.........உந்த எயிட்ச் நோயை குன படுத்த இந்த விஞ்ஞான உலகத்தில் மருந்து இல்லை....ஆனால் எயிட்ச் நோய்க்கு மருந்து போட்டு போட்டு கூட நாட்கள் உயிர் வாழலாம் ஆனால் அதை உடம்பில் இருந்து சுத்தம் செய்யிறது கஸ்ரம்....இந்தையன் கொக்கி வீரர் ஒருதர் எயிட்ச் நோயில் இருந்து மீண்டு வந்தவர்...அவர் எப்படி மீண்டு வந்தாரோ தெரியல..ஆனால் உந்த நோய் கூட அபிரிக்கா நாட்டவர்களுக்கு தான் கூட இருக்கு..அவர்கள் தான் மிருகங்களோட உடல் உறவு வைக்கிறவை...

அந்த உறவை வேலை வேண்டி தாரோம் என்று கூட்டிட்டுப் போய் இப்படி செய்ததை நினைக்க மனம் கனக்குது............. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்ட‌னிலும் இந்த நோயால் எங்கட‌ தமிழாட்கள் சிலர் பாதிக்கப்பட்டார்கள் என கேள்விப் பட்டேன் உண்மையோ தெரியவில்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்ட‌னிலும் இந்த நோயால் எங்கட‌ தமிழாட்கள் சிலர் பாதிக்கப்பட்டார்கள் என கேள்விப் பட்டேன் உண்மையோ தெரியவில்லை :(

எங்கட ஏரியா கிளீயரா இருக்கு ஓவர் ..........உங்கட ஏரியா ?????????? :lol::icon_idea:

Link to comment
Share on other sites

எங்கட ஏரியா கிளீயரா இருக்கு ஓவர் ..........உங்கட ஏரியா ?????????? :lol::icon_idea:

நன்றி அவுட் அண்ணே .. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

இது சமுக பிறழ்வான பாலியல் நடத்தை உடையவர்களுக்கு தான் வரும் என்றாலும். பிழையே செய்யாதாவர்கள் கூட இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளாவது கொடுமையிலும் கொடுமை.

கழுவாத ஊசிஏற்றல் , பழைய ப்ளேட்டின் மூலம் சவரம் செய்தல் (சிகை அலங்கரிப்பு நிலையங்களில் - கவனம் கொள்ளவும்), மேலே குறிபிட்ட பெண்ணின் கணவர் போன்றோர் கூட பாதிக்க படுவது துன்பகரமானது.

எய்ட்ஸ் தொற்று உள்ள நாடுக்கு சென்று வருபவர்கள், விபச்சாரியிடம் போய்விட்டு வருபவர்கள், தங்கள் வாழ்க்கை துணையுடன் சேரும் முன்பே, ஒரு மருத்துவ பரிசோதனை எடுத்தல் நல்லது. உங்கள் அலட்சியம் மற்றவர்களை பாதிக்க கூடாது.

இதை விட முக்கியமான ஒன்று, எய்ட்ஸ் தாய்க்கு பிறக்கும் குழந்தை. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது :(

இப்படியான குழந்தைகள் இந்தியாவில் மிக அதிகம். :(

ஆனாலும் இந்த நோய் தொற்று உள்ளவர்களை சமுதாயத்தால் புறம் தள்ளாது, அவர்களையும் உள்வாங்கி, அவர்களுடனும் அன்பாக பழகி ஆறுதலாக இருக்கவேண்டும். என்றோ ஒரு நாள் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க தான் செய்வார்கள்.

அமெரிக்க உளவு நிறுவனம், ஆப்ரிக்க வாழ் மக்களை அடிமையாக்கவும், அழிக்கவும் பரிசோதனை கூடத்தில் கண்டுபிடித்த நோய்தான் இது என்று ஒரு சாரார் இப்பவும் சொல்லுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குடும்பச் சுமையை தீர்க்க இந்த வழியைப் பயன்படுத்தினால் தவறில்லை என அங்குள்ள பெண்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் படித்தவள் அல்ல. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

கடவுளை நினைத்துக்கொண்டு என் உடலை விற்கத் [size=5]தீமானித்தேன்[/size].

கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் வறுமை என் அறிவுக் கண்களை மறைத்தது.

மனம் இடம்கொடாமல் தொழில் செய்தேன். ஆயினும் ஒரு வருடத்துக்கு மேல் [size=5]அதனைத் தொடர விரும்பவில்லை."[/size]

[size=5] [/size]

[size=3]ஒரு வருடம் கழித்து வீடு திரும்பியவர் [size=5][size=3] கணவனுடன் உடலுறவு கொள்ள முன்பு [/size][/size][/size]

[size=3][size=5][size=3] ஒரு கணம் யோசித்திருக்கலாம் [/size][/size][/size]

[size=3][size=5][size=3] [/size][/size][/size]

[size=3][size=5]தவறுக்கு மன்னிக்கவும் [/size][/size]

[size=3][size=5]நன்றி இசை [/size][/size]

[size=5][size=3] [/size][/size]

Link to comment
Share on other sites

:( :( :(
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.