Jump to content

புலம் பெயர் வாழ்க்கையும்,மன அழுத்தமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தமும் மண்ணாங்கட்டியும்.......ஒரு சின்னப்பிரச்சனையையும் பெரிசாய் தூக்கிப்பிடிக்கிறது....மற்ரவன்ரை போலிஆடம்பர வாழ்க்கையை பெரிசாய் தூக்கி பிடிக்கிறது...மற்ரவன்ரை சட்டையை பாக்கிறது......ஆசைப்படுறது....குறுகியமனப்பான்மை....அளவுக்கு மிஞ்சின செலவு...ஆடம்பரம்...உரிமை உள்ளவையோடையே போட்டி பொறாண்மை......யாரோடையும் மனம் விட்டு கதைக்கிற மனபக்குவம் இல்லை...ஏனெண்டால் அது கௌரவபிரச்சனையாம்.......மனுசி,பிள்ளையள் புருசன் எல்லாம் கைத்தொலைபேசியிலைதான் கூட்டுக்குடும்பம்....ரயில் ஸ்ரேசன்லை ரயில் வந்து போற மாதிரி.....

மூத்தபிள்ளை..படிப்பாலை வரும் அப்பா நிக்க மாட்டார்.......அம்மா சாப்பாட்டை ரெடி பண்ணி வைச்சுட்டு வேலைக்கு போட்டா........இரண்டாவது படிச்சு..பலது விளங்காமல் வீட்டை வரும்.....கேக்க ஆக்களில்லை....கிடக்கிறதை சூடு காட்டி சாப்பிட்டு........சாப்பிட்டது செமிக்க கொம்பியூட்டர் கேம் விளையாடும்.....அந்த இடை நேரம் பாத்து அப்பா வருவார்....போவார் அடுத்த வேலைக்கு.......இந்த இடைவெளியிலையும் வெங்காயம் உப்பு வாங்கோணுமெண்டாலும் முகம்பாக்காமல் கதைச்சு குடும்பம் நடத்த இருக்கவே இருக்கு கைத்தொலைபேசி.....அம்மா வேலையாலை......வருவா பிள்ளையளோ அப்ப நித்திரையிலை.......தபால்பெட்டியை அம்மா திறந்து பாத்து......கட்ட வேண்டிய பில் எல்லாத்தையும் கிச்சின் மேசையிலை பரப்பி வைச்சுட்டு....ரெஞ்சன் தாங்கேலாமல் ......பிறசர் குளிசையை போட்டுட்டு அம்மா நித்திரை.....அப்பா வருவார்......கிச்சின் மேசையை பாப்பார்....ஒரு கோழித்தூக்கத்தோடை அடுத்த வேலைக்கு ஓடுவார்....ஓடிக்கொண்டேயிருக்கிறார்......ஓடிக்கொண்டேயிருக்கினம்.........

எதையும் முகம் பார்த்து மனம் விட்டு கதையுங்கள். மன அழுத்தம் என்பது நோயே அல்ல...

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

வீட்டு பிரச்சனையை வேலைக்கு கொண்டு வராமல், வேலை பிரச்சனையை வீட்டுக்கு கொண்டு போகாமல், அளவுக்கு அதிகமாக ஆசைப்படாமல், சொந்த பந்தங்களுடன் அளவுடன் கதைத்தால்(இது முக்கியம்) மன அழுத்தம் வராது. இது நான் கடைப்பிடிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தம் என்பது இப்போ சர்வ சாதரணம் போல் ஆகி விட்டது..நாங்கள் ஒவ்வொன்றையும் கையாளும் விதத்தில் தான் எல்லாமே அடங்கி உள்ளது..இதற்று கண்டிப்பாக வைத்தியரைத் தான் நாட வேண்டும் என்று இல்லை..ஆனால் விபரீதமான முடிகளை நோக்கப் போகிறார்கள் என்று அறிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்கள் குடும்ப வைத்தியரையோ இல்லை மன நல வைத்தியரையோ சந்தித்தித்து அதற்கு ஏற்ற தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம்..ஆனால் மருந்து எடுப்பது என்பது என்னைப் பொறுத்த மட்டில் வேண்டாத ஒரு விடையம் என்று தான் சொல்வேன்...இயற்கையாக எங்களால் என்ன,என்ன நல்ல விடையங்களை செய்ய முடியுமோ அவற்றை செய்து இந்த நிலையில் இருந்து வெளியே கண்டிப்பாக வரலாம்..

எவ்வாறன விடையங்களினால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை எனக்கு முன்னர் பலரும் சொல்லி சென்று இருக்கிறார்கள்...நான் புதிதாக சொல்ல வேணும் என்று இல்லை...முற்றிலும் உண்மையான கருத்துக்கள் ஆனால் நானாக இருக்கலாம் நீங்களாக இருக்கலாம் செய்யும் தவறுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.அப்போ மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது போன்ற பிரமை தான் ஏற்படும். ...மன அழுத்தம் எந்த நேரத்திலும் ஏற்படக் கூடிய ஒரு விடையம் ஆனால் அது நிரந்தர நோய் அல்ல....அதை நிரந்தமானது போல் ஆக்கிக் கொள்வது நாங்களே தான்......எல்லாவற்றுக்கும் மனசு தான் காரணம்...ஒத்துக் கொள்ள மாட்டார்கள்,மாட்டோம்..

Link to comment
Share on other sites

எல்லாத்தையும் டேக் இட் ஈஸி பாலிசி ஆ எடுத்திட்டா பிரச்சனை இல்லை..... இணைக்கு செத்தா நாளைக்கு பால் that is life :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் டேக் இட் இசியாக எடுக்க சொல்ல இல்லை...தேவை அற்றவைக்கு எல்லாம் ரென்சன் ஆகவேணாமே என்று சொல்ல வாறன்.. தாங்களும் ரென்சனாகி சும்மா இருக்கிற சீவனுகளையும் ஏன் ரென்சன் ஆக்குவான்......யாரை முறிச்சு எண்டாலும் மெசிடஸ் ஓடனும்,வீட்டு பேஸ்மன்ற் வாடகை;கு குடுத்தால் என்ன 600,700 தேறும், அதிலும் பார்க்க வயது போன பெற்றோர் மற்றும் தங்கை இருந்தால் பேஸ்மன்றுக்கை கொண்டு போய் வச்சால் வீட்டுக்கு காவலும் ஆகுது,பிள்ளை பிள்ளை பராமரிப்பும் பணத்துக்கு பணமும் ஆகுது..இப்படி நிறைய மன உளைச்சல்களை சொல்லலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நன்றி ரதி அக்காவிற்கு.நான் இதைப்பற்றி ஒரு திரி தொடங்க வேண்டும் என்று இருந்தேன்.எனது நண்பன் இந்த மன அழுத்தத்தினால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார்.இவ்வளவு நாளும் ஒருநாளும் தனிய இருந்தது கிடையாது .இப்போது அவருக்கு வேலை தூர இடத்துக்கு 2013 ஜனவரியில் இருந்து மாற்றப்படுகிறது.வேறை வேலைக்கும் முயற்சி செய்ய முடியாது ஏனென்றால் அவருக்கு விசா அனுமதி நீட்டிக்க வேண்டி இருக்கிறது.இவர் முதலே எந்த ஒரு சின்ன விடயத்திற்கும் தேவையே இல்லாமல் வருத்தப்படுபவர்.இப்போது இரவு நித்திரை கொள்ளுவதில்லை.எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை.எந்த நேரமும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்ற புலம்பல் தான்.தான் நடுத்தெருவிலை நிற்கிறன் .ஒருத்தரும் தனக்கு உதவி செய்கிறார்கள் இல்லை என்று அடிக்கடி கூறுவார்.முக்கியமாக இப்போது தன்னுடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்று இப்போது நான் என்ன சொன்னாலும் உடனடியாக என்னைத்தான் குறை சொல்லுவார்.

நானும் என்னுடைய நிறுவனத்தில் அவருக்கு வேலைக்கு முயற்சி செய்தும் பார்த்தாயிற்று.ஆனாலும் நான் முயற்சி செய்தேன் என்று கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை.நான் என்ன ஆறுதல் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை.எது என்றாலும் என்னுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்.இதை விட அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதுவும் சரி வருகுதில்லை என்பதும் பிரச்சினையாக இருக்கிறது.

நண்பனைப் பற்றி இங்கே கூறுவது சரியில்லை தான் என்றாலும் அவரை எப்படி இவற்றில் இருந்து விடுபட செய்வது என்று புரியவில்லை.நான் என்ன சொன்னாலும் உனக்கு இது விளங்காது என்றும் தன்னை பாவிச்சு போட்டு கை எல்லாரும் கை விட்டிட்டினம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்.

இப்படியே போனால் தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவாரோ என்று பயமாக உள்ளது.இதற்கு என்ன செய்யலாம் என்று யாராவது ஆலோசனை கூறினால் நன்றாக இருக்கும் .

நன்றி வாதவூரான் உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்...எதற்காக உங்கள் நண்பருக்கு மனவழுத்தம் வந்தது?...ஏன் உங்களை மட்டும் அவர் எதிரியாக பார்க்கிறார்? ...நீங்கள் அவருக்கு எதாவது பிழை செய்தனீங்களா?

வேறு பலர் உங்கள் நண்பர்களோடு அவரை பழக விடுங்கள்...அவரிலும் கஸ்ட‌ப்படுபவர்களை உங்கள் நண்பருக்கு காட்டுங்கள்...உங்களை அவருக்கு புரிய வையுங்கள்...விரைவில் நல்ல பெண்ணாப் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யுங்கள்...புங்கையூரான் சொன்ன மாதிரி மன நல மருத்துவரிட‌ம் காட்டுங்கள் இப்படியே விட்டால் அவருடைய உயிருக்கே ஆபத்தாய் கூட‌ முடியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி அக்கா. நான் அவருக்கு எந்த பிழையும் செய்யவில்லை.அவருக்கு என்னுடைய நிறுவனத்தில் வேலை எடுத்து தரவில்லையாம் அதுதான் பிரச்சினை.நானும் முயற்சி செய்து பார்த்திட்டன்.உங்களுக்கு தெரியும் தானே இங்கே சிபாரிசிலை வேலை எடுத்து கொடுப்பது கஸ்ரம் எண்டு.ஆனால் அவருக்கு அது விளங்குது இல்லை.அவர் தனிய போய் இருப்பதையிட்டு தான் இவ்வளவு யோசனையும் மன அழுத்தமும் அவருக்கு.

Link to comment
Share on other sites

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது positive thoughts/ thinking உள்ளவர்களாக இருக்கவேண்டும்.. (சும்மா தொண தொணத்துக் கொண்டு இருப்பவர்களைக் காய் வெட்டிவிடுவது நல்லது..)

மிக முக்கியமானது. கண்டது நிண்டதுக்கெல்லாம் கவலைப் பட்டு, காலப் போக்கில் எங்களையும் மாற்றி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு ரதி.

தொடர் தோல்விகளை / கவலையான நிகழ்வுகளை சந்திப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதைக் கண்டிருக்கிறேன். இதைவிட மற்றவர்களுடன் தனது நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறது, எதிர்மறை எண்ணம், ஆக்களோட சேராம ஒதுங்கியிருத்தல், திருப்தியின்மை, சுயபரிதாபம், சோம்பேறித்தனம், நகைச்சுவை உணர்வு இல்லாமை, போன்ற குண இயல்பு உள்ளவர்களுக்கும் வருகிறது. வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் அதிகம் வருவதைப் பார்த்திருக்கிறேன்.

'சும்மா இருப்பவனின் மனது சாத்தானின் விளையாட்டு மைதானம்' கண்டதையும் யோசிக்கும்.

வரும் முன் காப்பதுதான் நல்லது.

ஒவ்வொருவருக்கும் நல்ல உழைப்பு, நல்ல நண்பர்களின் கூட்டு, விருப்பமான பொழுது போக்கு (குந்தி இருந்து தொலைக்காட்சி பாப்பது அல்ல), கூடியளவு இயற்கையுடன் ஒத்து வாழுதல், உடற்பயிற்சி (உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இது தேவையில்லை) அவசியம். ஆகலும் முடியாத விசயங்களோட கிடந்து மல்லுக் கட்டுறத விட, முடிந்ததைச் செய்து சந்தோசமாக இருக்கலாம்.

என்னைப் பொறுத்த அளவில, வீட்டில ஒரு இரண்டு மாதம் சும்மா இருந்தனெண்டா பயித்தியம் பிடித்து விடும். தொடர்ச்சியாக ஒரே விதமான செயல்படுவதைத் (routine)தவிர்த்து வருகிறேன் வேலை நேரம் போக ஏதாவது வீட்டு வேலை, தோட்டம், பிடித்தமான சமையல் செய்வது, மெல்லிசை கேட்பது, உடற்பயிற்சி நிலையம் போவது என்றிருப்பேன். மனதுக்கு உற்சாகமாக இருக்கும். இயற்கையோடு ஒத்து வாழ்ந்தாலே பெரிய மாற்றம் தெரியும். சிற்றோடை நீரின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு பசும் புல்தரையில் வெறும் காலோடு நடந்து பாருங்கள் மனது இலகுவாகும்.

வேக உடற்பயிற்சி செய்தால் அன்று முழுக்க மனது புத்துணர்வாக இருக்கும். Depression கொடுக்கும் குளிசையில் உள்ள இரசாயனம், வேக உடற்பயிற்சி செய்யும் பொழுது சுரப்பதாக எங்கோ வாசித்தேன்.

நன்றி தப்பிலி உங்கள் வருகைக்கு...இங்கு சிற்றோடை இருக்கிறதா :D எனக்கு தெரியவில்லை...அநேகமாக வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்போருக்குத் தான் அதிக மன அழுத்தம் வருகின்றது என்பது உண்மை தான்.

நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் ரதி. புலம்பெயர் நாடுகளில் மனஅழுத்தங்களால் பாதிப்புக்குள்ளாபவர்கள் பலர். ஆரம்பத்தில் இது தான் மனஅழுத்தம் என்று கண்டுபிடிக்கமுடியாமையால் பலர் அதை கவனத்தில் எடுப்பதில்லை. மனஅழுத்தம் மிகவும் கொடியநோய் போன்றது......ஆரம்பத்தில் தகுந்த மாற்றுவழி செய்யாவிட்டால் அது மரணத்தின் பிடியில் கொண்டுபோய் விட்டுவிடும்.

தனிமையை விடுத்து நண்பர்களுடனாவது மனவலிகளை சொல்லி மனஆறுதல் தேடவேண்டும் மாறாக வடுக்களையும் வலிகளையும் எம்முள்ளே வைத்து அதைப்பற்றி யோசிப்பது இன்னும் மனஅழுத்தத்தை கூட்டி நிரந்தர நோயாளியாக்கிவிடும். இங்கு மனஅழுத்தம் இருப்பது கண்டுபிடித்தால் முதலில் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

நன்றி தமிழினி...மனஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் என்பதையே ஒத்துக் கொள்வதில்லை...எனது நண்பர் ஜிபியிட‌ம் [gp]செல்லும் போது அவர் இவவுக்கு மன அழுத்தம் இருக்குது எனபதை கண்டு பிடித்திருக்கிறார் ஆனால் எனது நண்பர் வைத்தியரைப் பேசிப் போட்டு வீட்டை வந்திட்டார்...தனக்கு மன அழுத்தம் இருக்குது என்பதை அவரால் ஏற்க முடியுதில்லை.

மன அழுத்தமும்,பிளட் பிர‌ச‌ரும் ஒன்றா யாராவது தெரிந்தவர்கள் சொல்லவும்

நன்றி

நல்லதொரு பதிவு

தொடருங்கள்

நன்றி விசுகு அண்ணா உங்கள் வருகைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தம் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தேன்.

எனக்கு படுத்தவுடன் நித்திரை வந்துவிடும். அது வரவில்லை என்றால் அதைமென அழுத்தமாக எடுக்கலாமா?

அப்படி நடப்பது மிகமிகக்குறைவு.

அப்படி ஓரிரு தடவை வந்தபோது

உடனே இரை மீட்பதை நிறுத்திவிடுவேன்.

என்ன நடந்தாலும் நாளை பார்க்கலாம் என்ற முடிவுடன் கண்ணை மூடிக்கொள்வேன். நித்திரை வந்துவிடும்.

தீர்க்கமுடியாத சிக்கல்கள் வந்தபோதும் இதுவே முடிவு.

என் வாழ்வில் பெரிதாக ஏதும் அப்படி வந்ததில்லை.

அப்படி வந்தவர்களுக்கு நாம் கூறும் ஆறிவுரைகள் எடுபடுமா என்பதும் சந்தேகமே.

என்னைப்பொறுத்தவரை

எவருக்கும் அது வரலாம் என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் அதன் அளவுகள் பிரச்சினைகளைப்பொறுத்து மாறுபடலாம்.

இதற்கு மருந்து நாமே.

குமாரசாமியண்ணா கொன்னதுபோல்

விரலுக்கேற்ற வீக்கத்துடன் வாழ்தல் நலம்.

Link to comment
Share on other sites

இசையில் ஆர்வமுள்ளவர்கள் மன அழுத்தம் ஏற்பட்டால் பாடல்கள் கேட்கலாம். :)

ஏனையோர் வேறு பொழுது போக்குகளில் புலனை செலுத்தலாம்.

எந்த பொழுதுபோக்கும் இல்லாதவர்களை தான் மன அழுத்தம் அதிகளவில் பாதிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை மாமோய்..

ஒரு பெரியவிடையத்தை மிகவும் இலகுவாய் சொல்லியுள்ளீர்கள். அதிக எதிர்பார்ப்புக்கள்,ஆசைகள் தான் இவற்றுக்கெல்லாம் முக்கியகாரணம். என்னைப்பொறுத்தவரைக்கும் இது தான் எனக்கு எல்லாம் என்று எதுவுமே இல்லை. இது இல்லையென்றால் இன்னொன்று இல்லையென்றால் வேறொன்று அதனால் எதிர்பார்ப்புக்களும் இல்லை,விரக்தியும் இல்லை. :rolleyes::icon_idea:

இப்பத் தானே ஜீவா கல்யாணம் கட்டினீங்கள் இனி மேலும் எல்லாத்தையும் வந்தால் வா,வராட்டில் போன்று எடுப்பீர்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் :)

எனக்கு யாழில் பல நண்பர்கள் இருந்தாலும் சில உண்மையான சுயநலமற்ற தூய்மையான நண்பர்கள் உள்ளார்கள். இந்த யாழுக்கு வந்ததிலேயே எனக்கு கிடைத்த மிக பெரும் பாக்கியம் அது என்று தான் கூறுவேன். அவர்களை இனம்காண எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் யாழில் நான் விட்ட தவறுகள்.

அவர்கள் இந்த திரியை பார்த்தால் அவர்களுக்கு இந்நேரம் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். :)

நீங்கள் சரியான சின்னப் பிள்ளை துளசி யாரோடும் அளவுக்கதிகமாய் பழகாமல் அளவோடு பழகுங்கள்

மன அழுத்தம் யாருக்கு இல்லை ரதி? முடிந்தளவு நாங்களே தான் எங்களை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...

உறவினர்/ நண்பர்களிலிருந்து இருந்து உங்களை நன்கு புரிந்து கொண்டவர்களை/ நம்பிக்கையுள்ளவர்களை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.. (வேற்று இனத்தவரையும் நட்புப் பட்டியலில் சேர்ப்பது நல்லது) இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது positive thoughts/ thinking உள்ளவர்களாக இருக்கவேண்டும்.. (சும்மா தொண தொணத்துக் கொண்டு இருப்பவர்களைக் காய் வெட்டிவிடுவது நல்லது..)

வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்காமல், வெளியே போய் வாருங்கள். நண்பர்களுக்கு நேரம் வசதி இல்லையா.. நீங்கள் எடுத்த முயற்சியை பின்போடாதீர்கள்.. உங்கள் மேல் நீங்களே அதிக சுமையைக் அழுத்தாதீர்கள்..

குறைந்தது 7 மணிநேர நித்திரை தேவை

இங்கே குளிர் தொடங்கினாலும், தினமும் கொஞ்ச நேரம் என்றாலும் வெளியில் போய் நடந்து வரவேண்டும்..

தினமும் உடற்ப்பயிற்சி செய்யுங்கள் (தினமும் 10 நிமிடங்கள் நடப்பதால் 2 மணிநேரம் உங்கள் மனநிலை சீராகும் என்கிறார்கள்..) உங்களால் அது முடியும் என்னும் போது தூரத்தை அதிகரிக்கலாம்.

சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.. விற்றமின் B குறைந்தால், உதாரணமாக folic acid and B-12 குறைந்தால் மன அழுத்தத்தை உருவாக்கும்.. அதனால், புளிப்புள்ள பழங்கள், பச்சை இலைவகையான மரக்கறிகள், பீன்ஸ், கோழி, முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். omega 3 மீன் எண்ணெய்/ குளிசை போன்றவையும் நல்லது.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், பின்னேரத்தில் கோப்பியைத் தவிர்த்து, horlicks, camomile tea போன்றவர்டைக் குடிக்கலாம்.. அதோடு பின்னேரத்தில் 1km தூரம் நடத்தால் உடல் களைப்பில் நித்திரை தானாக வரும்..

(வீட்டில் குழந்தைகள் உள்ளவர்களும் குழந்தைகளை சாட்டுச் சொல்லியும், வேலைக்குப் போவோர் வேலைப் பளுவைக் குறைசொல்லி இருக்கும் நிலையை இன்னும் மோசப்படுத்தாமல், அவர்களாகவே தான் தமது முன்னேற்றத்திற்கு நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் அதனால் வீட்டில் உள்ள மற்றவர்களையும் முக்கியம் குழந்தைகளையும் பாதிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!)

மேலும் சில இணைப்புகள் இணையத்தில் தேடியபோது கிடைத்தவை..

http://www.helpguide...ession_tips.htm

http://www.dumblittl...depression.html

http://www.mind.org....CFUXHtAod9CcA_w

நன்றி குட்டி உங்கள் பதிவிற்கும்,வருகைக்கும் என்ன இன்னும் நீங்கள் இத் திரியில் வந்து எழுதவில்லை என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் வந்து எழுதி விட்டீர்கள்...நான் இப்ப எல்லாம் நண்பர்களைப் எதிர் பார்த்து திட்டத்தை பின் போடுவதில்லை நான் தனியே என்டாலும் செய்கிறது,செய்கிறது தான்...தனியத் தானே பிறந்தோம்,சாக்கும் போதும் தனியத் தானே சாகப் போறோம்.

ஒத்த கருத்து உள்ளவர்கர்களே சேர்ந்து பழகினால் அவர்களுக்குள் நல்லது,கெட்டதை யார் சொல்வது?...அவர்கள் சிந்திப்பது எல்லாம் ஒரே மாதிரியாக அல்லவா இருக்கும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் மன அழுத்தத்திற்குட்பட்டால் பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல

அவரைச் சுற்றி இருக்கும் குடும்பமும் பிள்ளைகளும் உறவுகளும் தான்.

பக்கத்துவீட்டுக்காரனுடைய சமையலறை படுக்கையறை போன்றவற்றை

எட்டிப்பார்ப்பதைத் தவிர்த்தாலே மன அழுத்தத்தில் இருந்து தப்பிவிடலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத் தானே ஜீவா கல்யாணம் கட்டினீங்கள் இனி மேலும் எல்லாத்தையும் வந்தால் வா,வராட்டில் போன்று எடுப்பீர்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் :)

அதுக்கு தான் விவாகரத்து இருக்கே அக்கா. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

நீங்கள் சரியான சின்னப் பிள்ளை துளசி யாரோடும் அளவுக்கதிகமாய் பழகாமல் அளவோடு பழகுங்கள்

என் மேல் கொண்ட அக்கறைக்கு நன்றி. என்னுடன் சிரித்து பழகும் அனைவரும் நல்லவர்கள் என்று நான் நம்புவது கிடையாது. நல்லவர்களையும் கெட்டவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் தன்மை என்னிடம் ஓரளவுக்கு உள்ளது. :)

நான் யாழில் பம்பலடிக்கிறது வேறை. நான் கூறிய நண்பர்கள் வேறை. இரண்டையும் ஒன்றாக்கி பார்க்காதீர்கள். நான் அளவுக்கதிகமாக கதைத்தாலும் அவர்கள் அளவுக்கதிகமாக என்னுடன் கதைக்க மாட்டார்கள். தேவைப்படும் நேரங்களில் ஆலோசனையும் ஆறுதல் வார்த்தைகளும் கூறுவார்கள். அவர்கள் பெயர் ஏனையோருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனையோரால் ஊகிக்கவும் முடியாது. :)

எனக்கு மன அழுத்தம் வராமல் இருக்க உறுதுணையாக நின்றவர்கள் என்றும் சொல்லலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தமும் மண்ணாங்கட்டியும்.......ஒரு சின்னப்பிரச்சனையையும் பெரிசாய் தூக்கிப்பிடிக்கிறது....மற்ரவன்ரை போலிஆடம்பர வாழ்க்கையை பெரிசாய் தூக்கி பிடிக்கிறது...மற்ரவன்ரை சட்டையை பாக்கிறது......ஆசைப்படுறது....குறுகியமனப்பான்மை....அளவுக்கு மிஞ்சின செலவு...ஆடம்பரம்...உரிமை உள்ளவையோடையே போட்டி பொறாண்மை......யாரோடையும் மனம் விட்டு கதைக்கிற மனபக்குவம் இல்லை...ஏனெண்டால் அது கௌரவபிரச்சனையாம்.......மனுசி,பிள்ளையள் புருசன் எல்லாம் கைத்தொலைபேசியிலைதான் கூட்டுக்குடும்பம்....ரயில் ஸ்ரேசன்லை ரயில் வந்து போற மாதிரி.....

மூத்தபிள்ளை..படிப்பாலை வரும் அப்பா நிக்க மாட்டார்.......அம்மா சாப்பாட்டை ரெடி பண்ணி வைச்சுட்டு வேலைக்கு போட்டா........இரண்டாவது படிச்சு..பலது விளங்காமல் வீட்டை வரும்.....கேக்க ஆக்களில்லை....கிடக்கிறதை சூடு காட்டி சாப்பிட்டு........சாப்பிட்டது செமிக்க கொம்பியூட்டர் கேம் விளையாடும்.....அந்த இடை நேரம் பாத்து அப்பா வருவார்....போவார் அடுத்த வேலைக்கு.......இந்த இடைவெளியிலையும் வெங்காயம் உப்பு வாங்கோணுமெண்டாலும் முகம்பாக்காமல் கதைச்சு குடும்பம் நடத்த இருக்கவே இருக்கு கைத்தொலைபேசி.....அம்மா வேலையாலை......வருவா பிள்ளையளோ அப்ப நித்திரையிலை.......தபால்பெட்டியை அம்மா திறந்து பாத்து......கட்ட வேண்டிய பில் எல்லாத்தையும் கிச்சின் மேசையிலை பரப்பி வைச்சுட்டு....ரெஞ்சன் தாங்கேலாமல் ......பிறசர் குளிசையை போட்டுட்டு அம்மா நித்திரை.....அப்பா வருவார்......கிச்சின் மேசையை பாப்பார்....ஒரு கோழித்தூக்கத்தோடை அடுத்த வேலைக்கு ஓடுவார்....ஓடிக்கொண்டேயிருக்கிறார்......ஓடிக்கொண்டேயிருக்கினம்.........

எதையும் முகம் பார்த்து மனம் விட்டு கதையுங்கள். மன அழுத்தம் என்பது நோயே அல்ல...

நீங்கள் சொன்னது உண்மை தான் அண்ணா அது தான் எங்கள் சமுதாயத்தில் பெரும்பான்மையாக நடக்குது...ஆனால் மனம் விட்டு கதைக்கிறதிற்கும் நம்பிக்கையான ஆட்கள் வேணுமே அண்ணா...வருகைகும்,கருத்திற்கும் நன்றி அண்ணா.

வீட்டு பிரச்சனையை வேலைக்கு கொண்டு வராமல், வேலை பிரச்சனையை வீட்டுக்கு கொண்டு போகாமல், அளவுக்கு அதிகமாக ஆசைப்படாமல், சொந்த பந்தங்களுடன் அளவுடன் கதைத்தால்(இது முக்கியம்) மன அழுத்தம் வராது. இது நான் கடைப்பிடிக்கிறது.

உண்மை தான் யாழ்கவி நன்றி உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

எல்லாவற்றையும் டேக் இட் இசியாக எடுக்க சொல்ல இல்லை...தேவை அற்றவைக்கு எல்லாம் ரென்சன் ஆகவேணாமே என்று சொல்ல வாறன்.. தாங்களும் ரென்சனாகி சும்மா இருக்கிற சீவனுகளையும் ஏன் ரென்சன் ஆக்குவான்......யாரை முறிச்சு எண்டாலும் மெசிடஸ் ஓடனும்,வீட்டு பேஸ்மன்ற் வாடகை;கு குடுத்தால் என்ன 600,700 தேறும், அதிலும் பார்க்க வயது போன பெற்றோர் மற்றும் தங்கை இருந்தால் பேஸ்மன்றுக்கை கொண்டு போய் வச்சால் வீட்டுக்கு காவலும் ஆகுது,பிள்ளை பிள்ளை பராமரிப்பும் பணத்துக்கு பணமும் ஆகுது..இப்படி நிறைய மன உளைச்சல்களை சொல்லலாம்....

நன்றி யாயினி உங்கள் கருத்திற்கு...மன அழுத்ததிற்கு வைத்தியரிட‌ம் போவதை விட‌ மன அழுத்ததிற்கு ஆளானவர்களது நண்பர்கள்,நெருங்கிய உற்றார்,உறவினர் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தால் அவர்கள் சீக்கிர‌ம் அதில் இருந்து தேறுவார்கள் என்பதே எனது கருத்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..ஆனால் மனம் விட்டு கதைக்கிறதிற்கும் நம்பிக்கையான ஆட்கள் வேணுமே அண்ணா...

அக்கா என்ன இப்பிடிச்சொல்லீட்டீங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா என்ன இப்பிடிச்சொல்லீட்டீங்கள்...

என்ன? கதை ஒரு மாதிரிப்போகுது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன? கதை ஒரு மாதிரிப்போகுது :rolleyes:

இப்படி கனக்க நடக்குதண்ணா இங்கு தற்போது.... :lol::D :D

ஆண்பிள்ளைகளை வாழ்விப்பது தான் பெரும் பாடு இன்று.

ஏதோ நல்லது நடந்தால் வாழ்த்திவிட்டுப்போய்க்கொண்டு இருக்கவேண்டியதுதான்........ :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கனக்க நடக்குதண்ணா இங்கு தற்போது.... :lol::D :D

ஆண்பிள்ளைகளை வாழ்விப்பது தான் பெரும் பாடு இன்று.

ஏதோ நல்லது நடந்தால் வாழ்த்திவிட்டுப்போய்க்கொண்டு இருக்கவேண்டியதுதான்........ :wub:

அப்ப சாப்பாடு :rolleyes::lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சாப்பாடு :rolleyes::lol: :lol:

ஏன் ராசா இந்தஆசை?

விசயம் முடிந்தவுடன் ஈமெயில், தனிமடல்,...................?? அனைத்தும் தானாக அணைந்துவிடும்.

இதில் சாப்பாடு.......................??? :lol::D :D

Link to comment
Share on other sites

மன அழுத்தமும் மண்ணாங்கட்டியும்.......ஒரு சின்னப்பிரச்சனையையும் பெரிசாய் தூக்கிப்பிடிக்கிறது....மற்ரவன்ரை போலிஆடம்பர வாழ்க்கையை பெரிசாய் தூக்கி பிடிக்கிறது...மற்ரவன்ரை சட்டையை பாக்கிறது......ஆசைப்படுறது....குறுகியமனப்பான்மை....அளவுக்கு மிஞ்சின செலவு...ஆடம்பரம்...உரிமை உள்ளவையோடையே போட்டி பொறாண்மை......யாரோடையும் மனம் விட்டு கதைக்கிற மனபக்குவம் இல்லை...ஏனெண்டால் அது கௌரவபிரச்சனையாம்.......மனுசி,பிள்ளையள் புருசன் எல்லாம் கைத்தொலைபேசியிலைதான் கூட்டுக்குடும்பம்....ரயில் ஸ்ரேசன்லை ரயில் வந்து போற மாதிரி.....

மூத்தபிள்ளை..படிப்பாலை வரும் அப்பா நிக்க மாட்டார்.......அம்மா சாப்பாட்டை ரெடி பண்ணி வைச்சுட்டு வேலைக்கு போட்டா........இரண்டாவது படிச்சு..பலது விளங்காமல் வீட்டை வரும்.....கேக்க ஆக்களில்லை....கிடக்கிறதை சூடு காட்டி சாப்பிட்டு........சாப்பிட்டது செமிக்க கொம்பியூட்டர் கேம் விளையாடும்.....அந்த இடை நேரம் பாத்து அப்பா வருவார்....போவார் அடுத்த வேலைக்கு.......இந்த இடைவெளியிலையும் வெங்காயம் உப்பு வாங்கோணுமெண்டாலும் முகம்பாக்காமல் கதைச்சு குடும்பம் நடத்த இருக்கவே இருக்கு கைத்தொலைபேசி.....அம்மா வேலையாலை......வருவா பிள்ளையளோ அப்ப நித்திரையிலை.......தபால்பெட்டியை அம்மா திறந்து பாத்து......கட்ட வேண்டிய பில் எல்லாத்தையும் கிச்சின் மேசையிலை பரப்பி வைச்சுட்டு....ரெஞ்சன் தாங்கேலாமல் ......பிறசர் குளிசையை போட்டுட்டு அம்மா நித்திரை.....அப்பா வருவார்......கிச்சின் மேசையை பாப்பார்....ஒரு கோழித்தூக்கத்தோடை அடுத்த வேலைக்கு ஓடுவார்....ஓடிக்கொண்டேயிருக்கிறார்......ஓடிக்கொண்டேயிருக்கினம்.........

எதையும் முகம் பார்த்து மனம் விட்டு கதையுங்கள். மன அழுத்தம் என்பது நோயே அல்ல...

90% உண்மை. ஒரு 10% முதலாளித்துவ வாழ்கையில் சந்தர்ப சூழ்நிலையால் ஏவப்பட்டு சறுக்கி விழும் அப்பாவிகள் இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் கடனோடு வெளி வந்து கடமையை மனத்தில் வரித்துகொண்ட நல்ல மனங்கள் தோல்வியை மட்டும் தொடர்ந்து சந்திக்கும் போது........

தேடி முடிந்தால் அன்ரன் செக்கோவ் எழுதிய "சலிப்பு" என்ற கதையை இணைத்துவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன? கதை ஒரு மாதிரிப்போகுது :rolleyes:

அக்காவுக்கு ஒரு பிரச்சினைய் எண்டா தம்பி கவலைப்படுவது வழமை தானை அண்ணா... :)

இப்படி கனக்க நடக்குதண்ணா இங்கு தற்போது.... :lol:

ஆண்பிள்ளைகளை வாழ்விப்பது தான் பெரும் பாடு இன்று.

ஏதோ நல்லது நடந்தால் வாழ்த்திவிட்டுப்போய்க்கொண்டு இருக்கவேண்டியதுதான்........ :wub:

ஏன் ராசா இந்தஆசை?

விசயம் முடிந்தவுடன் ஈமெயில், தனிமடல்,...................?? அனைத்தும் தானாக அணைந்துவிடும்.

இதில் சாப்பாடு.......................??? :lol:

எங்கையோ உதைக்கிறமாதிரி எனக்குப் படுகிது... :) எங்கையாவது உதைக்குதோ விசுகண்ணா...? :D

Link to comment
Share on other sites

"யாரிடம் சொல்லி அழுவேன் என் சோகக் கதையை" . இது ஆங்கில மொழி பெயர்ப்பு. ஆனல் நேராகாவே இதையும் விட நன்றாக தமிழில் சலிப்பு என்று மொழிப் பெயர்த்திருக்கிறார்கள். இணையத்தில் காணவில்லை. முதாலித்துவத்தால் தனித்து விடப்பட்டுவிட்ட ஏழை தொழிலாளி ஒருவரின் கதை. ஏழை கிழவனுக்கு வாழ்க்கையின் சுமை ஒரு புறம். வாழக்கிடையாமல் இறந்துவிட்ட பிள்ளையின் பாசச்சுமை ஒருபுறம். இரண்டையும் சேர்த்து ஒருவண்டிலில் இழுப்பதற்கு கிழவன் தனது நொண்டிக்குதிரையிடம் தஞ்சம் அடைகிறான்.........

மேற்கு நாடுகளால் தனித்து விடப்பட்டுவிட்ட ரூசியா மாக்சின் நொண்டிக்குதிரையான சோசலிசத்தில் போய் தஞ்சம் அடைய நேர்ந்த, இரவு பகல் தொடர்ந்து வீசிய பனிபுயலின் தடையங்கள் இவை. மழை விட்டும் தூவாணத்தை உணர முடிகிறது கதையில்.

"To whom shall I tell my grief?"

Title: Misery .

Author: Anton Chekhov

THE twilight of evening. Big flakes of wet snow are whirling lazily about the street lamps, which have just been lighted, and lying in a thin soft layer on roofs, horses' backs, shoulders, caps. Iona Potapov, the sledge-driver, is all white like a ghost. He sits on the box without stirring, bent as double as the living body can be bent. If a regular snowdrift fell on him it seems as though even then he would not think it necessary to shake it off. . . . His little mare is white and motionless too. Her stillness, the angularity of her lines, and the stick-like straightness of her legs make her look like a halfpenny gingerbread horse. She is probably lost in thought. Anyone who has been torn away from the plough, from the familiar gray landscapes, and cast into this slough, full of monstrous lights, of unceasing uproar and hurrying people, is bound to think.

It is a long time since Iona and his nag have budged. They came out of the yard before dinnertime and not a single fare yet. But now the shades of evening are falling on the town. The pale light of the street lamps changes to a vivid color, and the bustle of the street grows noisier.

"Sledge to Vyborgskaya!" Iona hears. "Sledge!"

Iona starts, and through his snow-plastered eyelashes sees an officer in a military overcoat with a hood over his head.

"To Vyborgskaya," repeats the officer. "Are you asleep? To Vyborgskaya!"

In token of assent Iona gives a tug at the reins which sends cakes of snow flying from the horse's back and shoulders. The officer gets into the sledge. The sledge-driver clicks to the horse, cranes his neck like a swan, rises in his seat, and more from habit than necessity brandishes his whip. The mare cranes her neck, too, crooks her stick-like legs, and hesitatingly sets of. . . .

"Where are you shoving, you devil?" Iona immediately hears shouts from the dark mass shifting to and fro before him. "Where the devil are you going? Keep to the r-right!"

"You don't know how to drive! Keep to the right," says the officer angrily.

A coachman driving a carriage swears at him; a pedestrian crossing the road and brushing the horse's nose with his shoulder looks at him angrily and shakes the snow off his sleeve. Iona fidgets on the box as though he were sitting on thorns, jerks his elbows, and turns his eyes about like one possessed as though he did not know where he was or why he was there.

"What rascals they all are!" says the officer jocosely. "They are simply doing their best to run up against you or fall under the horse's feet. They must be doing it on purpose."

Iona looks as his fare and moves his lips. . . . Apparently he means to say something, but nothing comes but a sniff.

"What?" inquires the officer.

Iona gives a wry smile, and straining his throat, brings out huskily: "My son . . . er . . . my son died this week, sir."

"H'm! What did he die of?"

Iona turns his whole body round to his fare, and says:

"Who can tell! It must have been from fever. . . . He lay three days in the hospital and then he died. . . . God's will."

"Turn round, you devil!" comes out of the darkness. "Have you gone cracked, you old dog? Look where you are going!"

"Drive on! drive on! . . ." says the officer. "We shan't get there till to-morrow going on like this. Hurry up!"

The sledge-driver cranes his neck again, rises in his seat, and with heavy grace swings his whip. Several times he looks round at the officer, but the latter keeps his eyes shut and is apparently disinclined to listen. Putting his fare down at Vyborgskaya, Iona stops by a restaurant, and again sits huddled up on the box. . . . Again the wet snow paints him and his horse white. One hour passes, and then another. . . .

Three young men, two tall and thin, one short and hunchbacked, come up, railing at each other and loudly stamping on the pavement with their goloshes.

"Cabby, to the Police Bridge!" the hunchback cries in a cracked voice. "The three of us, . . . twenty kopecks!"

Iona tugs at the reins and clicks to his horse. Twenty kopecks is not a fair price, but he has no thoughts for that. Whether it is a rouble or whether it is five kopecks does not matter to him now so long as he has a fare. . . . The three young men, shoving each other and using bad language, go up to the sledge, and all three try to sit down at once. The question remains to be settled: Which are to sit down and which one is to stand? After a long altercation, ill-temper, and abuse, they come to the conclusion that the hunchback must stand because he is the shortest.

"Well, drive on," says the hunchback in his cracked voice, settling himself and breathing down Iona's neck. "Cut along! What a cap you've got, my friend! You wouldn't find a worse one in all Petersburg. . . ."

"He-he! . . . he-he! . . ." laughs Iona. "It's nothing to boast of!"

"Well, then, nothing to boast of, drive on! Are you going to drive like this all the way? Eh? Shall I give you one in the neck?"

"My head aches," says one of the tall ones. "At the Dukmasovs' yesterday Vaska and I drank four bottles of brandy between us."

"I can't make out why you talk such stuff," says the other tall one angrily. "You lie like a brute."

"Strike me dead, it's the truth! . . ."

"It's about as true as that a louse coughs."

"He-he!" grins Iona. "Me-er-ry gentlemen!"

"Tfoo! the devil take you!" cries the hunchback indignantly. "Will you get on, you old plague, or won't you? Is that the way to drive? Give her one with the whip. Hang it all, give it her well."

Iona feels behind his back the jolting person and quivering voice of the hunchback. He hears abuse addressed to him, he sees people, and the feeling of loneliness begins little by little to be less heavy on his heart. The hunchback swears at him, till he chokes over some elaborately whimsical string of epithets and is overpowered by his cough. His tall companions begin talking of a certain Nadyezhda Petrovna. Iona looks round at them. Waiting till there is a brief pause, he looks round once more and says:

"This week . . . er. . . my. . . er. . . son died!"

"We shall all die, . . ." says the hunchback with a sigh, wiping his lips after coughing. "Come, drive on! drive on! My friends, I simply cannot stand crawling like this! When will he get us there?"

"Well, you give him a little encouragement . . . one in the neck!"

"Do you hear, you old plague? I'll make you smart. If one stands on ceremony with fellows like you one may as well walk. Do you hear, you old dragon? Or don't you care a hang what we say? "

And Iona hears rather than feels a slap on the back of his neck.

"He-he! . . . " he laughs. "Merry gentlemen . . . . God give you health!"

"Cabman, are you married?" asks one of the tall ones.

"I? He he! Me-er-ry gentlemen. The only wife for me now is the damp earth. . . . He-ho-ho!. . . .The grave that is! . . . Here my son's dead and I am alive. . . . It's a strange thing, death has come in at the wrong door. . . . Instead of coming for me it went for my son. . . ."

And Iona turns round to tell them how his son died, but at that point the hunchback gives a faint sigh and announces that, thank God! they have arrived at last. After taking his twenty kopecks, Iona gazes for a long while after the revelers, who disappear into a dark entry. Again he is alone and again there is silence for him. . . . The misery which has been for a brief space eased comes back again and tears his heart more cruelly than ever. With a look of anxiety and suffering Iona's eyes stray restlessly among the crowds moving to and fro on both sides of the street: can he not find among those thousands someone who will listen to him? But the crowds flit by heedless of him and his misery. . . . His misery is immense, beyond all bounds. If Iona's heart were to burst and his misery to flow out, it would flood the whole world, it seems, but yet it is not seen. It has found a hiding-place in such an insignificant shell that one would not have found it with a candle by daylight. . . .

Iona sees a house-porter with a parcel and makes up his mind to address him.

"What time will it be, friend?" he asks.

"Going on for ten. . . . Why have you stopped here? Drive on!"

Iona drives a few paces away, bends himself double, and gives himself up to his misery. He feels it is no good to appeal to people. But before five minutes have passed he draws himself up, shakes his head as though he feels a sharp pain, and tugs at the reins. . . . He can bear it no longer.

"Back to the yard!" he thinks. "To the yard!"

And his little mare, as though she knew his thoughts, falls to trotting. An hour and a half later Iona is sitting by a big dirty stove. On the stove, on the floor, and on the benches are people snoring. The air is full of smells and stuffiness. Iona looks at the sleeping figures, scratches himself, and regrets that he has come home so early. . . .

"I have not earned enough to pay for the oats, even," he thinks. "That's why I am so miserable. A man who knows how to do his work, . . . who has had enough to eat, and whose horse has had enough to eat, is always at ease. . . ."

In one of the corners a young cabman gets up, clears his throat sleepily, and makes for the water-bucket.

"Want a drink?" Iona asks him.

"Seems so."

"May it do you good. . . . But my son is dead, mate. . . . Do you hear? This week in the hospital. . . . It's a queer business. . . ."

Iona looks to see the effect produced by his words, but he sees nothing. The young man has covered his head over and is already asleep. The old man sighs and scratches himself. . . . Just as the young man had been thirsty for water, he thirsts for speech. His son will soon have been dead a week, and he has not really talked to anybody yet . . . . He wants to talk of it properly, with deliberation. . . . He wants to tell how his son was taken ill, how he suffered, what he said before he died, how he died. . . . He wants to describe the funeral, and how he went to the hospital to get his son's clothes. He still has his daughter Anisya in the country. . . . And he wants to talk about her too. . . . Yes, he has plenty to talk about now. His listener ought to sigh and exclaim and lament. . . . It would be even better to talk to women. Though they are silly creatures, they blubber at the first word.

"Let's go out and have a look at the mare," Iona thinks. "There is always time for sleep. . . . You'll have sleep enough, no fear. . . ."

He puts on his coat and goes into the stables where his mare is standing. He thinks about oats, about hay, about the weather. . . . He cannot think about his son when he is alone. . . . To talk about him with someone is possible, but to think of him and picture him is insufferable anguish. . . .

"Are you munching?" Iona asks his mare, seeing her shining eyes. "There, munch away, munch away. . . . Since we have not earned enough for oats, we will eat hay. . . . Yes, . . . I have grown too old to drive. . . . My son ought to be driving, not I. . . . He was a real cabman. . . . He ought to have lived. . . ."

Iona is silent for a while, and then he goes on:

"That's how it is, old girl. . . . Kuzma Ionitch is gone. . . . He said good-by to me. . . . He went and died for no reason. . . . Now, suppose you had a little colt, and you were own mother to that little colt. . . . And all at once that same little colt went and died. . . . You'd be sorry, wouldn't you? . . ."

The little mare munches, listens, and breathes on her master's hands. Iona is carried away and tells her all about it.

-THE END-

Anton Chekhov's short story: Misery

Link to comment
Share on other sites

மனஅழுத்தம் வராமல் இருப்பதற்கு உங்களை நீங்களே ஒருமுறை அலசி ஆராய்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது தேவை என்று படுகிறதோ அதை மட்டும் முதலில் அடைய முயற்சியுங்கள். அதற்குப் போதிய அவகாசங்கள் கொடுங்கள். உதாரணமாக, ஒரு புதிய கார் வாங்க உத்தேசித்தால், அதற்கு உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப ஒரு வருடமோ இரு வருடமோ அவகாசம் கொடுங்கள்.

எதனையும் மற்றவர்களிடம் தங்கியிராது நீங்களே செய்து கொள்ளப் பழகுங்கள். நண்பர்களை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒருவரிடமும் தங்கியிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் உண்மையான நட்பு என்பதும் ஒரு மாயையே. ஆகவே, உண்மையான நட்பு என்றோ நெருங்கிய நண்பன் என்றோ ஒருவரிடம் மட்டும் தங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், மற்ற இனத்தவர்களோடும் நட்புப் பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள். குடும்பத்தைப் பிரிந்து இருப்பவர்களுக்கு இது மிகவும் தேவையானதொன்று.

நீங்கள் குடும்பச் சுமையோடு தனியாக இருப்பவர்களாயின் உங்களுக்கான நேரத்தையும் பொழுதுபோக்கையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். இது முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நாளடைவில் பழகிவிடும். ஏனெனில் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆகவே, உங்களை நீங்களே பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். உங்களின் சின்னச் சின்ன ஆசைகளை கட்டாயம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சியுங்கள்.

நேரம் கிடைக்கும் போது, பார்க், பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று நடவுங்கள். அங்கு சென்று உட்கார்ந்திருப்பதைவிட நடப்பது அதிக பலனைத் தரும். இதனை வேலையை விட்டு வரும்போதோ அல்லது இடைவேளையின்போதோகூடச் செய்யலாம். ஆறு, குளத்தோடு சேர்ந்திருக்கும் பூங்கா மனஅமைதியைக் குறுகிய காலத்திலேயே தந்துவிடும். பஸ்சிலோ ரெயினிலோ நீண்ட தூரம் பயணம் செய்வதும் சிலருக்குப் பலனைத் தரும். குளிர்காலங்களில், இந்த முறையைப் பின்பற்றலாம். நிச்சயம் பலன் கிடைக்கும். பக்கத்தில் இருக்கும் ஊருக்கு ஓரிரண்டு நாட்கள் சுற்றுலா சென்று வருவதும் பலனைத் தரும். அல்லது காலை போய் மாலை வருவதும்கூட பலனைத் தரும்.

கோயிலுக்குச் செல்பவர்கள் மக்கள் குறைவாக வரும் நேரம் செல்லுங்கள். அங்கு சென்றால், ஒரு அரை மணி நேரமாவது ஒரு மூலையில் கண்மூடி அமர்ந்து தியானித்து விட்டு வாருங்கள். தியானம் செய்கிறீர்களோ இல்லையோ அரை மணிநேரம் கண்மூடி அமர்ந்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். இதுவும் முதலில் கஷ்டமாக இருக்கும். நாளடைவில் பழகிவிடும். கோயில் தியானம் செய்யும் இடமாகத்தான் எம் முன்னோரால் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது வேடிக்கை பார்க்கும் இடமாகப் போய்விட்டது.

பாடல்கள், இசைகள் கேட்பவர்களாயின் கட்டாயம் தத்துவ, சோகப் பாடல்களை முற்றாகத் தவிருங்கள். தொழில்நுட்பம் கூடிய இந்தக் காலத்தில் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது கடினம் இல்லை. ஆகவே துள்ளல் இசையுள்ள, மகிழ்வான பாடல்களை மட்டும் சேகரித்து அவற்றைக் கேளுங்கள்.

இந்த நேரங்களில் நல்ல சுவையுள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். இதற்கு நல்ல சுவையுள்ள உணவகங்களுக்குச் சென்று சாப்பிட்டால் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துப் பழங்கள் போன்ற சத்தான உணவுகளைச் சாப்பிடப் பழகிக் கொள்ளலாம். இதற்கும் வேறுநாட்டு உணவகங்களுக்குச் செல்வது அதிக பலனைத் தரும். நீங்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவுகளுக்காக மட்டும் தமிழ் உணவகங்களுக்குச் செல்லுங்கள். மனஅழுத்தம் உள்ள நேரங்களில் உணவை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். உணவகத்திலேயே தனியாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்குத் தெரிந்தவரை வாசிப்பு நாளடைவில் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிரக் குறைக்காது. ஆகவே, வாசிப்புப் பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல், கடைகளுக்குச் செல்வதும் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். கடைகளுக்குச் செல்வதாயின் செலவு செய்யக்கூடியளவு பணத்தோடு சென்றால் ஒருவேளை மனஅழுத்தம் குறையலாம். ஆனால், பணப்பற்றாக்குறையில் இருப்பவர்கள் கடைகளுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களோடு செல்வதையும் முற்றாகத் தவிர்க்கவும்.

மனம் இறுக்கமாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் மேலே கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். ஆனால் ஒவ்வொரு நாளுமோ அல்லது தொடர்ந்தோ ஒரு விதத்தைப் பயன்படுத்தாதீர்கள். அப்படிப் பயன்படுத்தும்போது, அதுவே மனஅழுத்தத்தைத் தந்துவிடும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள், கஷ்டங்கள் வரத்தான் செய்யும். பிரச்சனை இருக்கிறது என்பதற்காக எம்மை நாமே கவனிக்காவிடில் அவற்றை மேலும் கடினமாக்குவதாகவே முடியும். எமது பிரச்சனைகளை நாம்தான் தீர்க்க முடியும். மற்றவர்களால் நிச்சயம் முடியாது. ஏனெனில் அவர்களின் பார்வை வேறாக இருக்கும். ஆகவே, எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படிதான் நான் மேலே குறிப்பிட்டிருப்பவை. அத்திவாரமின்றிக் கட்டிடம் எழுப்ப முடியாது. ஆகவே, எம்மை நாமே முதலில் கவனித்துக் கொள்வோம். உங்களுக்கிருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்க முயற்சியுங்கள். அதற்கான காலஅவகாசத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், உங்களது ஆசைகளையும் ஒவ்வொன்றாக காலஅவகாசம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்ளப் பழகுங்கள். உங்களின் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளுங்கள். அதேபோல் உங்களை நீங்களே அலசி ஆராய்ந்து கொள்ளவும் பழகிக் கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் போதிய அவகாசமும் முயற்சியும் இருந்தால் எதுவுமே சாத்தியம். ஆகவே, நீங்கள் விரும்பியவற்றை அடைந்து கொள்ளத் திட்டமிட்டு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நிறைவேறும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.