Jump to content

தன் பிள்ளை என்றால்..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன்.

திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதேநிலை ஒரு நாள் எனது மகளுக்கு வந்தபோது...........

வயிற்றுக்குள் நோகுது அம்மா என்று அவள் சொன்னபோது......

துடித்துப்போனேன். கண்களில் ரத்தக்கோடுகள்.

லா சப்பலுக்கு ஓடினேன்.

சின்ன வெங்காயம் அதிலும் நல்ல கொழு கொழு என்று சிவந்ததாகப்பார்த்து

(வாழ்நாளில் இப்படி நான் பார்த்து வாங்கியதே இல்லை)

சிறிய கத்தரிக்காய்

திறமான நல்லெண்ணெய்

வயிற்றில் பூச மஞ்சல்

தடவிவிட வேப்பிலை

குடிக்காத நான் வாங்கியது திறமான பிரண்டி...........

எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.

ஆனால் கண்ணில் கலக்கம்.

என்ப்பா எனக்கேட்டேன்.

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

பதில் சொல்ல ஏதுமில்லை.

உண்மை எப்போதும் சுணைக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

Link to comment
Share on other sites

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

எம்மை நாம் தீட்டவேண்டும்

அதுவே இப்பதிவின் நோக்கம்

அதைப்புரிந்து எழுதியுள்ளீர்

நன்றி ஐயா

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

நன்றி துளசி

பெண்கள் இதற்குள் வரமாட்டார்கள் என்று நினைத்தேன்.

முதலிலேயே வந்து ஆறுதலும் தந்துள்ளீர்.

இது ஆண்களைத்தொடவேண்டும் என்பதால் திறந்த திரி.

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயுமானவன்

உண்மைதான் நந்தன்.

அதுவும் அடக்கம்.

நன்றிகள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...பெண்கள் என்றால் மெசின் போன்று வேலை செய்பவர்கள் என்ற உணர்வுகளே அனேகரின் மனங்களில் உண்டு...ஆனால் அவற்றையும் கடந்து பெண் என்பளுக்குள்ளும் பல வித சொல்லிக் கொள்ள முடியாது ஏக்கங்கள் இருக்கிறது என்பதை இனிமேல் காலத்திலவாது ஆண்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிறன்..இந்த கருத்தை எனக்காக மட்டும் சொல்ல இல்லை...நான் பெற்றோருடன் இருக்கும் பிள்ளை..என் உணர்வுகள் வேறு பட்டதாக இருக்கும்..சில பிள்ளைகள் வளர்ந்து தன் அறிவு என்று வந்த பின் வெளியில் எல்லா விடையங்களையும் சொல்ல விரும்ப மாட்டார்கள்...ஆனால் ஒரு திருமணம் செய்த பெண்ணின் உணர்வுகள் விச்சு அண்ணா பகிர்ந்து கொண்டது போல் வேறு பட்டதாக இருக்கும்....நான் நிறைய,நிறைய எழுதிக் கொள்ள விரும்ப இல்லை...அனைத்து ஆண்களும் உங்கள் வீடுகளில் உள்ள பெண்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்பிறன்..

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

யாழ்போதனா வைத்தியசாலையில் இதற்கு மருத்துவ உதவியை நாடினால் பனடோல் தான் கொடுப்பார்கள். தனியார் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் வழங்குவது சாதாரணமாக அனைத்து வலிகளுக்கும் வலி நிவாரணியாக இருக்கும் ponstan. (இது ஒரு antibiotic). இதனை பயன்படுத்துவதால் வலி குறைவடையாது.

இஞ்சி தேநீர் குடித்தோ அல்லது சுட்ட உள்ளி சாப்பிட்டோ எதுவும் ஆகாது.

வெளிநாடுகளில் பல மருந்துகள் உள்ளன. இல்லை என்று கூறவில்லை. ponstan ஐ விட சிறந்தவை. ஆனால் அவை கூட போட்டவுடன் வலியை குறைக்காது. சிறிது நேரத்தில் வலி குறைவது போல் இருக்கும். பின்னர் குறிப்பிட்ட மணித்தியாலத்தின் பின் மீண்டும் வலிக்கும். மருந்தை பயன்படுத்தாமல் விட்டால் ஒரு நாளில் வலி போய்விடுமாக இருப்பவர்களுக்கு மருந்தை பயன்படுத்தினால் விட்டு விட்டு 3 நாளுக்கு கூட தொடரலாம். அது கூட பல மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். (சிலருக்கு இப்படி நடப்பதில்லை...)

மருந்து எடுப்பதால் நிச்சயம் பக்க விளைவுகள் உருவாகும். எடுப்பவர்களுக்கு குறைவாக பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு பக்க விளைவுகள் அதிகளவில் உருவாகும்.

உடற்பயிற்சி தொடர்ச்சியாக எடுத்து வருபவர்களுக்கு வலிக்காது என்பது பற்றி தெரியாது.

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

இதை எழுதும் போது நான் என்ன நினைத்தேனோ அது தங்கள் கருத்தில் இருக்கு இசை.

இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.

உங்களுக்கு விழுந்து கொண்டிருக்கும் விருப்பு வாக்குகளும் அதைத்தான் சொல்கின்றன.

கண்ணுக்குத்தெரியாத உறவுகளுக்காகவே பரிதவிப்போர் நாம்.

எம்மில் பாதியாகிய துணையை விட்டுவிடுவோமா?

ஆனாலும் எம்மை அறியாது விட்டுள்ளது உறைத்தது.

அதை என் தம்பிகளும் உறவுகளும் கவனிக்கணும் என்பதற்காகவே இந்தப்பதிவு.

உங்கள் கருத்து இனி இந்தக்கேள்வி எம்மை நோக்கி வராது என்ற உறுதி தருகிறது.

அதுவே இந்தத்திரியின் நோக்கம்.

நன்றி சகோதரா.

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்.

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

உங்களுக்குமா?

நன்றி

நேரத்திற்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

உண்மைதான் தம்பி தமிழ் சூரியன்

உப்பை எவரும் கணக்கெடுப்பதில்லை.

அது இல்லாதபோது...............???

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும்..........

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

இது தான் வேண்டும்.

நன்றி தம்பி

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்....

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்திற்கும் ஆலோசனைக்கும்.

எவருக்காவது பிரயோசனப்பட்டால் மிக மிகச்சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...

சாதாரணமாக எழுதினாலும்

இந்த திரியில் நான் எதிர் பார்த்ததை பதிந்துள்ளீர்கள்.

அதற்காகத்தான் நான்(ஆண்) இதை இங்கு கொண்டு வந்தேன்.

வெளியில் சொல்லும் செய்தியா இது என நீங்கள் பகிடியாக எழுதினாலும்..........

அதை என் போன்றவர்களால்தான் சொல்ல முடியும் என்பதும்

யாழ் கள உறவுகளுடன் கன நாட்களாக பழகுபவன் என்ற முறையில் அவர்கள் எதில் விளையாடுவார்கள் எதில் விளையாட மாடட்டார்கள் என்பதை அறிவேன். இந்த திரி அதற்கு சான்றாக அமையும். அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

இல்லை. வலி ஏற்படுவோரை பற்றி தான் கருத்து எழுதியிருக்கிறேன். :D

அத்துடன் வைன் குடிக்கும் வெள்ளைக்காரிகளை பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறேன். எம்மவர்களை எழுதவில்லை. :D

இப்பவும் குழந்தைப்பிள்ளை மாதிரி இருக்கா.... :D:):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

கிட்டத்தட்ட

உங்கள் நிலையே எனதும்.

ஆனால் அவர் சொன்னது உண்மை. அதுவே சுட்டது.

அது எனக்கு என் மாமனாரை ஞாபகப்படுத்தியது. இன்னொருவரின் பிள்ளையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற பரிதவிப்பு எனக்கு. என் பிள்ளை என் பிள்ளை என்பது இன்னொருவரை காயப்படுத்துவது புரிந்தது.

நீங்கள் அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு இனிப்புக்கொடுத்தநிலைதான் இதுவும்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

உங்களைப்போன்றோர் இருக்கும் பொதுத்தளத்தில் எழுத எனக்கென்ன அச்சம்?

தங்களது நன்றியும் பாராட்டும் பெரும் வெகுமதி எனக்கும் இந்த திரிக்கும்.

நன்றி சகோதரி.

எதைச்செய்தாலும் நாலு பேர் நன்மையடையக்கடவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

வெள்ளை காரிகளுக்கு வலியில்லாததன் காரணம் வைன் இல்லை.

அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்பத்தடை மருந்துகளை பாவிக்கிறார்கள்.

வாயிற்று வலி என்று இவர்கள் மருத்துவரை நாடியதும் அவர்கள் கருத்தடை மாத்திரைகளையே பரிந்துரைக்கிறார்கள். அவை பின்பு பக்க விளைவுகளை கொடுக்கலாம். கருத்தடை மாத்திரைகளை பாவித்தால் வயிற்றுவலி இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

நன்றி தம்பி பகலவன்

இதை எழுதியதன் வெற்றி இந்த வரிகள்.

நாங்கள் எவரும் கெட்டவர்கள் கிடையாது. ரொம்ப நல்லவர்கள்.

சந்தோசமாக

அன்பாக

பண்பாக

ஆசையாக

குடும்பம் நடாத்தும் ......

எம்மைப்போன்று கணவன்மார் கூட அறியாமல் செய்யும் பிழையையே இங்கு கொண்டு வந்தேன்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் உறுதிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.