Jump to content

தென்கிழக்கு சீமையிலே


Recommended Posts

வணக்கம் கோம்ஸ் அண்ணா. நன்றாகத் தொடங்கியிருக்கிறீர்கள். இணைத்திருக்கும் படங்களும் அருமை.

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply

[size="3"]வணக்கம் கோப்பாய் கோமகன், [/size]

[size="3"]பயணகட்டுரை நன்றாக போகின்றது. நான் 20 வருடங்களுக்கு முன் மொனோக்கோவில் ஒருமாதம் தங்கியிருந்தேன் அப்பொழுது நீஸ்நகரை சுற்றி பார்த்திருந்தேன், ஆனாலும் இப்பொழுது உங்கள் கட்டுரையை வாசிக்கும் பொழுது மீண்டும் நீஸில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. [/size]

[size="3"]தொடருங்கள்[/size]

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் தர்மறாஜ் உங்களுக்கு நேரம் பிரச்சனை இல்லையென்றால் ரயில் பயணமே சிறந்தது இந்த லிங்கில் http://www.eurail.com/ நீங்கள் நுளைந்தால் நீங்கள் விரும்பிய இடங்களுக்கு முற்பதிவு செய்யலாம் .

தகவலுக்கு நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் கோம்ஸ் அண்ணா. நன்றாகத் தொடங்கியிருக்கிறீர்கள். இணைத்திருக்கும் படங்களும் அருமை.

தும்ஸ்சின் நேரத்திற்கு மிக்க நன்றிகள் .

வணக்கம் கோப்பாய் கோமகன்,

பயணகட்டுரை நன்றாக போகின்றது. நான் 20 வருடங்களுக்கு முன் மொனோக்கோவில் ஒருமாதம் தங்கியிருந்தேன் அப்பொழுது நீஸ்நகரை சுற்றி பார்த்திருந்தேன், ஆனாலும் இப்பொழுது உங்கள் கட்டுரையை வாசிக்கும் பொழுது மீண்டும் நீஸில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

தொடருங்கள்

மிக்க நன்றிகள் சுந்தரம் தொடர்ந்து இருங்கள் மொனாக்கோவும் வரும் .

தொடருங்கள் கோமகன் வாசிப்பதற்கு ஆவலாக உள்ளோம்

உங்கள் நேரத்திற்கு நன்றி வாத்தியார் தொடரில் தொடர்ந்து இருங்கோ .

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் கோ அண்ணா, எனக்கு உங்கள் கவிதையை விட கதை அல்லது பயணக்கட்டுரை ரொம்ப பிடிக்கும். :) தொடர்ந்து எழுதுங்கள். நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.... :) மற்றவர்கள் கேட்பதற்காக அவசரப்பட்டு எழுதாமல் நிதானமாக சுவாரஸ்யமாக எழுதுங்கள்.

பச்சை முடிந்து விட்டது. பின்னர் வந்து போடுறன்.... :)

நான் யாழ் இணையத்தில் இணைந்து வாசகர்கள் மத்தியில் பிரபல்யமானதே " நெருடிய நெருஞ்சியினால் " தான் .

http://www.yarl.com/...showtopic=86211

நெருடிய நெருஞ்சி நல்ல கதை என்று பலர் வேறு திரிகளில் உங்களை பாராட்டியிருப்பதையும் பார்த்தேன். நான் இன்னும் வாசிக்கவில்லை.. பின்னர் வாசிக்கிறேன். :) இந்த திரியில் இணைப்பை தந்திருந்தமைக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் கல கலப்பாக்கும் கோ மகனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . வரிகள் மிகவும் அழகாய் இருக்கிறது .[/size]

Link to comment
Share on other sites

[size=5]இந்தப் பூனை சாத்திவின் பூனையா அல்லது சாத்துவின் முன் வீட்டுக்காரி பூனையா??[/size]

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய்//

கவனிப்பை பூனையோடு மட்டும் நிறுத்திக்கணு <_< ம்..

Link to comment
Share on other sites

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

.

கவனம் சாத்திரியார் உங்களது கவனிப்பு பிடித்துபோய் முன் வீட்டுகாரியும் உங்கள் வீட்டில் தங்கபோறாள். ^_^

Link to comment
Share on other sites

கோ அண்ணா இன்றுதான் இந்த பக்கத்தை பார்த்தேன் ..........அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள் .............உங்கள் கதைகளின் எழுத்துக்களை ரசிக்கும் வாசகன் நான்..................கருத்துக்களத்தில் சில கருத்து வேறுபாடுகள் எமக்குள் இருக்கலாம் .அதனால் உங்கள் திறமையை பார்த்து என்னால் சும்மாய் இருக்க முடியாது ...என்றும் நான் உங்கள் வாசகன் தான் ............தொடருங்கள் இடைவெளியை குறைத்து.................. காத்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

[size=5]கோ, நன்றிகளைப் பிறகு சொல்லலாம் கெதியாய் எழுதுங்கோ![/size]

அமைதி......... அமைதி........... வேலையள் நடந்து கொண்டுதான் இருக்கு .

[size=4]மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் கல கலப்பாக்கும் கோ மகனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . வரிகள் மிகவும் அழகாய் இருக்கிறது .[/size]

என்னை தனிப்பட்டமுறையில் பாராட்டி சரி பிழைகளை உரிமையுடன் எடுத்துக்கூறும் உங்களை என்றுமே நான் மறவேன் . வருகைக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

எனக்கு இது நல்லதாப் பாடலே பூனை மட்டும்தானே :(

Link to comment
Share on other sites

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

இந்த பூனை தானே உங்கள் motorbike இல் படுத்திருந்து விட்டு காலையில் நீங்கள் வேலைக்கு போக வெளிக்கிடேக்க குறுக்காலை ஓடுறது.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பூனை தானே உங்கள் motorbike இல் படுத்திருந்து விட்டு காலையில் நீங்கள் வேலைக்கு போக வெளிக்கிடேக்க குறுக்காலை ஓடுறது.... :lol:

அது நல்ல சகுனப்பூனை

Link to comment
Share on other sites

இந்த பூனை தானே உங்கள் motorbike இல் படுத்திருந்து விட்டு காலையில் நீங்கள் வேலைக்கு போக வெளிக்கிடேக்க குறுக்காலை ஓடுறது.... :lol:

ஓம் துளசி, அதே தான்!! :lol:

எங்களுக்குக் கண் மங்கலில்லை! :lol:

Link to comment
Share on other sites

ஓம் துளசி, அதே தான்!! :lol:

எங்களுக்குக் கண் மங்கலில்லை! :lol:

:D :D மங்கல் விளக்கை பற்றி வாசித்ததிலிருந்து மச்சிக்கு கண் மங்கலோ என்று டவுட் வந்திடிச்சு..... எங்களுக்கு கண் மங்கலில்லை மச்சி... don't worry... :D

Link to comment
Share on other sites

ஆங்கிலேயர்கள் தங்கள் குளிர்காலத்தை அனுபவிக்க நீஸ் நகரிற்கு படையெடுத்தனர் . நீஸ் கடற்கரையின் அழகில் சொக்கிப்போய் தாங்கள் நடந்து காற்று வாங்குவதற்காக 18ம் நூற்றாண்டளவில் மாபெரும் வீதியைக் கட்டினார்கள் . இந்த வீதி வேய் டேய்ஸ் ஏன்ஜ் (Baie des Anges ) வளை குடாவை உள்வாங்கி பழைய துறைமுகம் வரை நீண்டு செல்கின்றது .

பழய பொறமனாட் ஆங்கிலேஸ்

nicevisit2012190.jpg

இந்த வீதி ஆரம்ப காலத்தில் ச்சிமின் து பொறமனாட் ( Chemin De Promenade ) என்றும் , அதற்கு முன்னைய காலத்தில் நீசுவாஸ் நாட்டினரின் தாய்மொழியாம் நீசுவா மொழியில் கமின் டெய்ஸ் ஆங்கிலேய்ஸ் ( Camin Dais Anglés , The English Way ) என்றும் அழைக்கப்பட்டது . பின்பு 1860 அளவில் பிரான்ஸ் ஓர் மொழிமாற்றுத் திருத்தச்சட்டம் மூலம் லா பொறமனாட் டேஸ் ஆங்கிலேஸ் (La Promenade Des L’Anglais ( The Walk way of the English ) என்று தனி பிரென்ஜ் மொழியில் மாற்றம் பெற்றது .

இரவில் பொறமனாட் டெய்ஸ ஆங்கிலேஸ்

800px-Nice-night-view-with-blurred-cars_1200x900.jpg

நாங்கள் மூவரும் பொறமனாட் ஆங்கிலேய்ஸ் வழியாக நீஸ்சின் துறைமுகம் நோக்கி நடந்து கொண்டிருந்தோம் . எனது கண்களோ சுண்டல் கூறிய மச்ச கன்னிகைகளை தேடி அலைந்தது . நானும் சாத்திரியும் வெய்யிலுக்கு சூரியக்கண்ணாடி அணிந்திருந்தோம் .

மாலை வெய்யில் மேகம் செம்மையாக ஆழ்கடலில் படரத்தொடங்கியிருந்தது . ஒரு இடத்தில் சாத்திரி நின்றார் . அங்கே நான் பார்வையைத் திருப்பியபொழுது பல வண்ணங்களில் அளவுகளில் மச்சகன்னிகள் அந்த மாலைநேரத்திலும் சூரியக்குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

நான் கண்ட மச்சகன்னிகை

nicevisit2012192.jpg

மாலைச்சூரியன் அவர்கள் உடலில் வர்ணஜாலம் காட்டியது . நான் அவர்கள் அசந்த வேளையில் எனது கமறாவால் சுட்டுக்கொண்டேன் . நாங்கள் துறைமுகத்தை அண்மித்தபொழுது மலையின் கீழ் ஓர் நினைவு தூண் ஒன்று காணப்பட்டது . நான் சாத்திரியை என்ன இது என்பது போலப் பார்த்தேன் என்னை அருகில் போய் பார்கும்படி ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார் . நான் அருகே சென்ற பொழுது அந்த நினைனைவுத் தூண் முதலாம் இரண்டாம் உலகப்போரில் மாண்ட நீஸ் இரணுவப் படைகளின் பெயர்களை நினைவு கூர்ந்து நின்றது .

nicevisit2012213.jpg

நாங்கள் துறைமுகப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தோம் . நீஸ் துறைமுகம் பழையது புதியது என்று இரண்டு இறங்கு துறைகளைக் கொண்டிருந்து . என் முன்னே அகண்டு நீண்டு பரந்திருந்தது . இந்த துறைமுகமே பிரான்ஸ்சின் முதலாவது சீமெந்தினால் அமைக்கப்பட்ட துறைமுகமாகும் . 16ம் நூற்றாண்டில் நீசியா நாட்டில் துறைமுகம் அபிவிருத்தி அடையாது இருந்தது . அது லிம்பியா துறைமுகம் ( port Lympia ) என்ற பெயருடனேயே காணப்பட்டது . நீசியா நாட்டின் துறைமுகத்தை ரோமப் பேர் அரசின் சர்க்கரவர்த்தி ஜூலியஸ் சீசார் கட்டிவித்தார் . இதன் பின்பு பல கட்ட வடிவமைப்புகளின்பின்னர் பதினாறாம் லூயி மன்னர் இந்த இறங்கு துறைமுகத்தை பூரணமாகக் கட்டுவித்தார்.

பழைய லிம்பியா துறைமுகம்

551px-Vue_du_port_de_Nice.jpg

இன்றய துறைமுகம்

800px-Nice_-_Le_port_Lympia.jpg

நான் துறைமுகத்தைப் பார்த்தபொழுது தனியார்கப்பல்களை நிறுத்துவதற்கு ஒரு இறங்கு துறையும் பொதுப்பாவனைக்கு என்று ஒரு இறங்கு துறையும் அங்கே காணப்பட்டது . இங்கு இருந்தே பிரான்சின் தென் கிழக்குக் கோடியில் இருக்கும் பாஸ்ரியா கோஸ்ற் தீவுகளுக்கு கோஸ்ற்றா குவாசியர் ( costa croisiere ) என்ற பயணிகள் கப்பல் தனது சேவையைச் செய்கின்றது . தனியார் இறங்குதுறையில் பலநாட்டுச் செல்வந்தர்களது விதம் விதமான உல்லாச ஆடம்பரக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்கள் நினைவுக்காக அவைகள் அருகே நின்று கமறாவால் சுட்டுக்கொண்டோம். இங்கும் சதாம்கூசேய்ன்னின் சொந்த ஆடம்பரக்கப்பல் நிறுத்தப்பட்டு பட்டு இருந்ததாகவும் பின்னர் போர் முடிவடைந்தபின் அந்தகப்பலை நீஸ் மாநகரசபை கையகப்படுத்தி ஏலத்தில் விட்டதாக சாத்திரி கூறினார் . நாங்கள் துறைமுகத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு புராதன நீஸ் நகரைப் பார்க்கப் போனோம் அப்போது இருட்டி இரவு எட்டுமணியாகி இருந்தது.

பாஸ்ரியாவுக்கு புறப்படத் தயாராகும் கோஸ்ரா குவாசியர்

640px-Gare_Maritime_de_Nice.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சக்கன்னிகையில் இன்னும் எதிர்பார்த்தோம் :icon_mrgreen: வாழ்த்துக்கள் கோ

Link to comment
Share on other sites

கோமகன் மச்ச கன்னிகளோடு நிற்கும் படம் ஒண்டு நானும் எடுத்தனான் போட்டு விடவோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.